Jump to content

'விவாகரத்து' எனும் 'Divorce' !!!


Recommended Posts

tblfpnnews_3103274107.jpg

ஆணைப் படைத்தான்...!
பெண்ணையும் படைத்தான்...!!
இயற்கையை படைத்து...
அவர்களை இயங்கவும் வைத்தான் !!
அந்த வித்தைகாரன்  பெயர்தான்  - கடவுள் !!!

ஆணுக்கு பெயர் வைத்தான்,
அது   'கணவன்' !
பெண்ணுக்கு பெயரிட்டான்,
அது   'மனைவி' !
இருவரையும்....
சேர்த்து வைக்க திட்டமிட்டான்
அது  'திருமணம்'  !!

 

அத்தோடு விட்டானா....?!!
'காமம்' என்றும்...
'காதல்' என்றும்...
எதிரும் புதிருமாய்,
எதையெதையோ வைத்தான் ...
அதன்  இடையில்!!!

'ஆசை அறுபதுநாள்
மோகம் முப்பதுநாள்'

அப்படியொரு பழமொழியை...
எவன் வைத்தான்... தெரியவில்லை!?
தொண்ணூறு நாளின் பின்தான்,
பெரும்பாலும்...
தொல்லைகள் ஆரம்பிக்கும்..!!!

எல்லையில்லா அன்பென்றார்...!?
தொல்லையில்லாமல் பிரிவோம் என்பார்...!!
பிரியமாக இருந்தோரெல்லாம்...
பிரிவோமென்றே பிரியப்படுவார்..!!
புரிதல் இல்லை!
பரிவும் இல்லை!
'காதல்' என்றால் என்னவென்று...
போதுமான விளக்கம் இல்லை!

 

குடும்பமென்றும்... குழந்தையென்றும்...
ஆனபின்னும் ஆணவத்தில்,
ஆளுக்காள் அடம்பிடித்தால்...
ஆகுமினி இப்படித்தான்...!

திருமணங்கள் மட்டும்

அங்கு முறிவதில்லை,

இரு மனங்களுந்தான் எரிகிறது!

கடவுள் சேர்த்து வைக்க...
மனிதன் பிரித்தானா? - இல்லை,
மனிதன் சேர்ந்து வாழ...
கடவுள் பிரித்தாரா? -தெரியவில்லை!

ஆனால்,
ஒன்றுமட்டும் உண்மை...
'விவாகரத்து' என்று ஒன்றை,
மனிதன்தான் கண்டு பிடித்தான் !!!

 

# 99% ஆன விவாகரத்துக்கள் தவிர்க்கப்படக் கூடியனவாகவே  இருந்திருக்கிறது.... இருக்கிறது. ஆனால், மனிதர்கள் அதனை அமுல்படுத்த விரும்புவதில்லை #  :(






 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி. தற்போது போது பாஷன் ஆகி விட்டது

Link to comment
Share on other sites

இணைந்து வாழ்வது கடினம் என்றால் பிரிந்து விடுவதே மிகவும் சிறப்பு. 

 

99 வீதமான மிருகங்கள் பறவைகளிடம் கூட சோடியை பிரிகின்ற குணம் இருக்கும் போது விவாகரத்தினை மனிதன் தான் கண்டு பிடித்தான் என்று நிறுவ முயல்வது தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

99 வீதமான மிருகங்கள் பறவைகளிடம் கூட சோடியை பிரிகின்ற குணம் இருக்கும் போது விவாகரத்தினை மனிதன் தான் கண்டு பிடித்தான் என்று நிறுவ முயல்வது தவறு.

 

மனிதனை தவிர வேறு எந்தப் பிராணி கலியாணம் என்று கட்டுது..??! அது இஸ்டத்துக்கு பழகுது.. அப்புறம் தன் பாட்டுக்கு போய்க்கிட்டு இருக்குது. கலியாணம் என்று ஒன்றைக் கட்டிற படியால் தான் விவாகரத்து என்ற ஒன்றும் வருகுது. கலியாணத்தை யார் உருவாக்கினா..???! :lol::D

 

Link to comment
Share on other sites

மனிதனை தவிர வேறு எந்தப் பிராணி கலியாணம் என்று கட்டுது..??! அது இஸ்டத்துக்கு பழகுது.. அப்புறம் தன் பாட்டுக்கு போய்க்கிட்டு இருக்குது. கலியாணம் என்று ஒன்றைக் கட்டிற படியால் தான் விவாகரத்து என்ற ஒன்றும் வருகுது. கலியாணத்தை யார் உருவாக்கினா..???! :lol::D

 

 

கலியாணம் எல்லாம் பொருள்முதல்வாதம் தந்த பரிசு. என் பொருள், நான் தேடிச் சேர்த்த செல்வம் எனக்கும் என் சந்ததிக்கும் மட்டுமே போய் சேர வேண்டும் என்ற மனுசக் குணத்தால வந்தது... :)

Link to comment
Share on other sites

இணைந்து வாழ்வது கடினம் என்றால் பிரிந்து விடுவதே மிகவும் சிறப்பு. 

 

99 வீதமான மிருகங்கள் பறவைகளிடம் கூட சோடியை பிரிகின்ற குணம் இருக்கும் போது விவாகரத்தினை மனிதன் தான் கண்டு பிடித்தான் என்று நிறுவ முயல்வது தவறு.

 

 

நிழலி....!

பிரிவின் வலிகளை முழுமையாக உணரும் தன்மையும், அதனாலான விளைவுகளை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைகளும்.... நீங்கள் சொன்ன ஆறறிவில்லாத உயிரினங்களிடத்தில் இருப்பதாக தெரியவில்லை.

அவை ஜோடி பிரிவதும்... மனிதர்கள் ஜோடி பிடிவதும் ஒன்றாகாது.

 

நாய் நடுவீதியில் செய்கிறது என்பதற்காக நீங்களும் அதனை செய்ய முடியுமா என்ன? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் எல்லாம் பொருள்முதல்வாதம் தந்த பரிசு. என் பொருள், நான் தேடிச் சேர்த்த செல்வம் எனக்கும் என் சந்ததிக்கும் மட்டுமே போய் சேர வேண்டும் என்ற மனுசக் குணத்தால வந்தது... :)

 

சிலருக்கு இந்த பொருள்முதல்வாதத்தில் நடக்கும் வியாபாரம் நட்டமென்றால்.. விவாகரத்து தான் முடிவு..! மனித வாழ்க்கையே வியாபாரமாகிக் கிடக்குது.! :lol:

 

ஆக்கப் பகிர்விற்கு நன்றி கவிதை. :)

Link to comment
Share on other sites

 

நாய் நடுவீதியில் செய்கிறது என்பதற்காக நீங்களும் அதனை செய்ய முடியுமா என்ன? :)

 

நாய் நடுவீதியில் செய்வதன் காரணம், அதனை சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஒரு நாயும் அலையாது என்பதால் தான். அதன் கலாச்சாரம் அதன் வாழ்க்கை முறையில் இருந்து வந்தது, மனுசப் பயல் நடு ரோட்டில் நின்று செய்தால் அதைப் பார்க்க ஒரு பெரும் கூட்டமே நிற்குமே...

Link to comment
Share on other sites

நாய் நடுவீதியில் செய்வதன் காரணம், அதனை சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஒரு நாயும் அலையாது என்பதால் தான். அதன் கலாச்சாரம் அதன் வாழ்க்கை முறையில் இருந்து வந்தது, மனுசப் பயல் நடு ரோட்டில் நின்று செய்தால் அதைப் பார்க்க ஒரு பெரும் கூட்டமே நிற்குமே...

 

நிழலி.... ! கார்த்திகை மாத காலைப்பொழுதுகளில் நீங்கள்  நாய்களைப் பார்த்ததில்லைப் போல..... :wub::lol:

 

ஆனால், மனிதர்களைப் பற்றி நீங்கள் சொன்னதையும் மறுக்க முடியாதுதான்! :lol::D

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி. தற்போது போது பாஷன் ஆகி விட்டது

 

உண்மைதான் நிலாக்கா! விவாகரத்து என்பது எம் தமிழ் சமுதாயத்திலும் இப்பொழுது சர்வ சாதாரணமாகி வருகின்றது என்பது வருத்தத்துக்குரியது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

tblfpnnews_3103274107.jpg

ஆணைப் படைத்தான்...!

பெண்ணையும் படைத்தான்...!!

இயற்கையை படைத்து...

அவர்களை இயங்கவும் வைத்தான் !!

அந்த வித்தைகாரன்  பெயர்தான்  - கடவுள் !!!

ஆணுக்கு பெயர் வைத்தான்,

அது   'கணவன்' !

பெண்ணுக்கு பெயரிட்டான்,

அது   'மனைவி' !

இருவரையும்....

சேர்த்து வைக்க திட்டமிட்டான்

அது  'திருமணம்'  !!

 

அத்தோடு விட்டானா....?!!

'காமம்' என்றும்...

'காதல்' என்றும்...

எதிரும் புதிருமாய்,

எதையெதையோ வைத்தான் ...

அதன்  இடையில்!!!

'ஆசை அறுபதுநாள்

மோகம் முப்பதுநாள்'

அப்படியொரு பழமொழியை...

எவன் வைத்தான்... தெரியவில்லை!?

தொண்ணூறு நாளின் பின்தான்,

பெரும்பாலும்...

தொல்லைகள் ஆரம்பிக்கும்..!!!

எல்லையில்லா அன்பென்றார்...!?

தொல்லையில்லாமல் பிரிவோம் என்பார்...!!

பிரியமாக இருந்தோரெல்லாம்...

பிரிவோமென்றே பிரியப்படுவார்..!!

புரிதல் இல்லை!

பரிவும் இல்லை!

'காதல்' என்றால் என்னவென்று...

போதுமான விளக்கம் இல்லை!

 

குடும்பமென்றும்... குழந்தையென்றும்...

ஆனபின்னும் ஆணவத்தில்,

ஆளுக்காள் அடம்பிடித்தால்...

ஆகுமினி இப்படித்தான்...!

திருமணங்கள் மட்டும்

அங்கு முறிவதில்லை,

இரு மனங்களுந்தான் எரிகிறது!

கடவுள் சேர்த்து வைக்க...

மனிதன் பிரித்தானா? - இல்லை,

மனிதன் சேர்ந்து வாழ...

கடவுள் பிரித்தாரா? -தெரியவில்லை!

ஆனால்,

ஒன்றுமட்டும் உண்மை...

'விவாகரத்து' என்று ஒன்றை,

மனிதன்தான் கண்டு பிடித்தான் !!!

 

# 99% ஆன விவாகரத்துக்கள் தவிர்க்கப்படக் கூடியனவாகவே  இருந்திருக்கிறது.... இருக்கிறது. ஆனால், மனிதர்கள் அதனை அமுல்படுத்த விரும்புவதில்லை #  :(

 

 

திருமணங்களையும் மனிதன்தான் கண்டுபிடித்தான். அநேக திருமணங்கள் பொருத்தமற்றவையாகவே அமைந்திருக்கின்றன.  முக்கியமாகப் பேசித் திருமணம் செய்தவர்களில் பலர் சமூகத்திற்குப் பயந்து கட்டாயத்தின் பேரிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.  உங்களுக்குத் தெரிந்த தம்பதிகளிலேயே எத்தனைபேர் உன்மையான அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்து வருகிறார்கள்?  இதனை உண்மையான உணர்வோடு அணுகிப் பாருங்கள். 

 

உங்களை நீங்கனே கேட்டுப் பாருங்கள்.  நீங்கள் உண்மையிலேயே உங்கள் துணையை நேசித்து வாழ்கிறீர்களா அல்லது சமூகத்திற்குப் பயந்து வாழ்கிறீர்களா என்று?

Link to comment
Share on other sites

முன்னோரது வாழ்வு கூட்டுக் குடும்பமாக இருந்தது. தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான அளவளாவல் என்பது அருமையாக இருந்தது. அதனால் பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்னும் முதுமொழிக்கு ஏற்புடைய வெறுப்பு அல்லது சலிப்பு ஏற்படுவதற்குப் பதிலாக... மூத்த மகவு குழந்தை பெறும்போது தாமும் குழந்தை பெறும் அளவுக்கு உடலாலும் உளத்தாலும் ஆரோக்கியமாகவும் அன்பாகவும் இருந்தார்கள்.

 

இப்போ தேவைக்கு அதிகமான நெருக்கம்.. உடல் உழைப்பின்மை... நவீன பொழுதுபோக்குச் சாதனங்களால் உண்டாகும் மனக்கிளர்வும் அதிக ஆசையும்... இதனால் கூடல் விரைவில் களைத்துக் கசந்து.. சின்னச் சின்னக் குறைகள் எல்லாம் பெரிய விரிசல்களாய் விவாகரத்துகளை மலினப்படுத்துகின்றன என நினைக்கிறேன்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கவிதைக்கு தம்பி....

மனித மனம் ஒரு குரங்கு..

இதுவே

அனைத்துக்கும் காரணம்

பொறுப்பும்

பொறுமையும்

கிடைத்ததை எடுத்துக்கொண்டு வாழும்

போதும் என்ற  மனமும் வேண்டும்..

அது இல்லாதவர்

செய்யும் கூத்துக்களே இவை

 

 

0b7n.jpg

 

இதைப்பாருங்கள்

06/07/1750 இல்  ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதற்காக  இருவர் உயிருடன் கொழுத்தப்பட்ட  இடம் PARIS.

இன்று................???

Link to comment
Share on other sites

இப்ப டிவேஸ் எடுக்கவா வேணாமா சட்டு புட்டேண்டு முடிவ சொல்லுங்க வேற சோழி கிடக்கு . :D

 

அருமையான கவி நவீனம் அழிக்குது அம்புட்டுதான் .!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் இலகுவில் தொடக்கூடத் துணியாத, ஆனால் வாழ்க்கையில் வெளிப்படையாக ஆராயப்படவேண்டிய முக்கியமான ஒரு கருப்பொருளைத் துணிந்து தொட்டதற்கு உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது!

 

குடும்பங்களில் சொந்தங்கள், குழந்தைகளின் எண்ணிக்கைகள் என்பன, பலவேறு சமூகப் பொருளாதாரக் காரணங்களால், குறைந்து கொண்டு போகின்றன! அதே வேளையில், கோவில்கள், மதங்கள் என்பவையும், வெறும் பொருளாதார மையங்களாகவும், களியாட்டப் பொருட்களாகவும் மாறிக்கொண்டு வருகின்றன! மறைபொருளாகவும், தெய்வீகமாகவும் இருந்த காமம் கூட, வெளிப்படையாகப் பேசக்கூடிய பொருளாகவும், சந்தையில் விலைக்கு வாங்கக்கூடிய பொருளாகவும் மாறி விட்டது!

 

ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்க வேண்டிய தேவை, உடல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் குறைந்துகொண்டே போகின்றது! அதனால், விட்டுக்கொடுப்புகளுக்கான தேவை இல்லாமல் போகின்றது!

 

நாம், நமது என்று இல்லாமல், நான், எனது என்றே மனிதன் தனது வாழ்வை முடித்துவிட நினைக்கிறான்! அதனால் தான் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன!

 

உண்மையில், நிழலி சொன்னது போல, நான், எனது என்று ஆணவ நிலையில் மனமுள்ளவர்கள், நிச்சயமாகத் திருமண பந்தத்தில் இணையக்கூடாது! இதுவே விவாகரத்துக்களை இல்லாமல் செய்ய ஒரு வழியாகும் என நினைக்கிறேன்!

 

கவிதைக்கு மீண்டும் பாராட்டுக்கள், கவிதை!

Link to comment
Share on other sites

திருமணங்களையும் மனிதன்தான் கண்டுபிடித்தான். அநேக திருமணங்கள் பொருத்தமற்றவையாகவே அமைந்திருக்கின்றன.  முக்கியமாகப் பேசித் திருமணம் செய்தவர்களில் பலர் சமூகத்திற்குப் பயந்து கட்டாயத்தின் பேரிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.  உங்களுக்குத் தெரிந்த தம்பதிகளிலேயே எத்தனைபேர் உன்மையான அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்து வருகிறார்கள்?  இதனை உண்மையான உணர்வோடு அணுகிப் பாருங்கள். 

 

உங்களை நீங்கனே கேட்டுப் பாருங்கள்.  நீங்கள் உண்மையிலேயே உங்கள் துணையை நேசித்து வாழ்கிறீர்களா அல்லது சமூகத்திற்குப் பயந்து வாழ்கிறீர்களா என்று?

 

உங்களின் கருத்துக்களும் ஒரு வகையில் நிதர்சனமானவைதான். சமுதாயத்துக்காக வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அப்படி இருபதனாலாவது குழந்தைகளின்  வாழ்க்கை, எதிர்காலம் பாதிக்கப்படாமல் ஓரளவுக்கு காக்கப்படுகிறது.

 

புரிந்துணர்வுடன் வாழப் பழகிக்கொண்டால்... வாழ்க்கை இனிமையானதாக அமையும்.

கருத்துக்கு மிக்க நன்றி போக்கிரி! :)

Link to comment
Share on other sites

முன்னோரது வாழ்வு கூட்டுக் குடும்பமாக இருந்தது. தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான அளவளாவல் என்பது அருமையாக இருந்தது. அதனால் பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்னும் முதுமொழிக்கு ஏற்புடைய வெறுப்பு அல்லது சலிப்பு ஏற்படுவதற்குப் பதிலாக... மூத்த மகவு குழந்தை பெறும்போது தாமும் குழந்தை பெறும் அளவுக்கு உடலாலும் உளத்தாலும் ஆரோக்கியமாகவும் அன்பாகவும் இருந்தார்கள்.

 

இப்போ தேவைக்கு அதிகமான நெருக்கம்.. உடல் உழைப்பின்மை... நவீன பொழுதுபோக்குச் சாதனங்களால் உண்டாகும் மனக்கிளர்வும் அதிக ஆசையும்... இதனால் கூடல் விரைவில் களைத்துக் கசந்து.. சின்னச் சின்னக் குறைகள் எல்லாம் பெரிய விரிசல்களாய் விவாகரத்துகளை மலினப்படுத்துகின்றன என நினைக்கிறேன்.  :D

 

நீஙகள் சொல்வது உண்மைதான்  சோழியன். ஆரம்பத்தில் மிக மிக நெருக்கமாக இருக்கிறார்கள். பின்னர் கொஞ்சங் கொஞ்சமாக விலகி விலகி... ஒரு கட்டத்தில் வெறுக்கும் நிலைக்கு செல்கின்றார்கள்.

 விவாக ரத்துக்களுக்கு இதுவும் முக்கியமான ஒரு காரணமாக அமைகின்றது.

 

கருத்துக்கு மிக்க நன்றி சோழியன்! :)

Link to comment
Share on other sites

நன்றி  கவிதைக்கு தம்பி....

மனித மனம் ஒரு குரங்கு..

இதுவே

அனைத்துக்கும் காரணம்

பொறுப்பும்

பொறுமையும்

கிடைத்ததை எடுத்துக்கொண்டு வாழும்

போதும் என்ற  மனமும் வேண்டும்..

அது இல்லாதவர்

செய்யும் கூத்துக்களே இவை

 

 

 

 

போதுமென்ற மனமும் போதாது, பொறுமை, புரிந்துணர்வு, மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் பண்பு என்பனவும் போதாது.

இவைகள் இருந்தால்..... பல திருமணங்கள் முறியும் அவல நிலை வராது.

 

கருத்துக்கு மிக்க நன்றி விசுகண்ணை! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் கருத்துக்களும் ஒரு வகையில் நிதர்சனமானவைதான். சமுதாயத்துக்காக வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அப்படி இருபதனாலாவது குழந்தைகளின்  வாழ்க்கை, எதிர்காலம் பாதிக்கப்படாமல் ஓரளவுக்கு காக்கப்படுகிறது.

 

புரிந்துணர்வுடன் வாழப் பழகிக்கொண்டால்... வாழ்க்கை இனிமையானதாக அமையும்.

கருத்துக்கு மிக்க நன்றி போக்கிரி! :)

 

சேர்ந்து வாழ்வதால் மட்டும் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கிறதா?  கணவன் மனைவி ஒற்றுமையின்றி, ஒட்டுறவின்றி வாழ்வது பிள்ளைகளுக்கு நல்வழியைக் காட்டுமா?  அப்படி இருக்கும் குடும்பங்களில் வளரும் பிள்ளைகளும் வாழ்க்கையில் பிடிப்பின்றித் தானே வாழப் போகிறார்கள்.  ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து கொண்டு பிள்ளைகளுக்குக் கவலையான வாழ்வைக் கொடுப்பதிலும் பார்க்க, பிரிந்திருந்து அவர்களுக்குச் சந்தோசமான வாழ்வைக் காட்டலாமே? 

 

புரிந்துணர்வு என்ற ஒன்று இருந்தால் அவர்கள் ஏன் பிரியப் போகிறார்கள்?  புரிந்துணர்வு என்பது எல்லோருக்கும் எல்லோருடனும் வராது என்பதை எமது சமூகம் விளங்கிக் கொள்வதில்லை.  இரு நல்லவர்கள், படித்தவர்கள்கூட, அவர்களுக்குள் ஒத்து வராதாதால் பிரிந்த சம்பவங்களும் அதிகம் இருக்கின்றனதானே?

Link to comment
Share on other sites

இப்ப டிவேஸ் எடுக்கவா வேணாமா சட்டு புட்டேண்டு முடிவ சொல்லுங்க வேற சோழி கிடக்கு . :D

 

அருமையான கவி நவீனம் அழிக்குது அம்புட்டுதான் .!

 

ஏனப்பு... இந்த அவசரம்??? :rolleyes:  எடுத்துடுங்க... என்று சொன்னால் எடுத்துடுவீங்களா அஞ்சரன்!? :rolleyes:  :lol:   சிலவேளைகளில் ஒருவழிப்பதைகள் அப்படித்தான்..... "றிவேஸ்" எடுத்தாலும் எடுக்காட்டிலும் ஒன்றுதான்! :icon_idea:

 

மாட்டிக்கிட்டு முழியுங்கள்.....!!!! :rolleyes::blink::D

Link to comment
Share on other sites

யாரும் இலகுவில் தொடக்கூடத் துணியாத, ஆனால் வாழ்க்கையில் வெளிப்படையாக ஆராயப்படவேண்டிய முக்கியமான ஒரு கருப்பொருளைத் துணிந்து தொட்டதற்கு உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது!

 

குடும்பங்களில் சொந்தங்கள், குழந்தைகளின் எண்ணிக்கைகள் என்பன, பலவேறு சமூகப் பொருளாதாரக் காரணங்களால், குறைந்து கொண்டு போகின்றன! அதே வேளையில், கோவில்கள், மதங்கள் என்பவையும், வெறும் பொருளாதார மையங்களாகவும், களியாட்டப் பொருட்களாகவும் மாறிக்கொண்டு வருகின்றன! மறைபொருளாகவும், தெய்வீகமாகவும் இருந்த காமம் கூட, வெளிப்படையாகப் பேசக்கூடிய பொருளாகவும், சந்தையில் விலைக்கு வாங்கக்கூடிய பொருளாகவும் மாறி விட்டது!

 

ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்க வேண்டிய தேவை, உடல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் குறைந்துகொண்டே போகின்றது! அதனால், விட்டுக்கொடுப்புகளுக்கான தேவை இல்லாமல் போகின்றது!

 

நாம், நமது என்று இல்லாமல், நான், எனது என்றே மனிதன் தனது வாழ்வை முடித்துவிட நினைக்கிறான்! அதனால் தான் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன!

 

உண்மையில், நிழலி சொன்னது போல, நான், எனது என்று ஆணவ நிலையில் மனமுள்ளவர்கள், நிச்சயமாகத் திருமண பந்தத்தில் இணையக்கூடாது! இதுவே விவாகரத்துக்களை இல்லாமல் செய்ய ஒரு வழியாகும் என நினைக்கிறேன்!

 

கவிதைக்கு மீண்டும் பாராட்டுக்கள், கவிதை!

 

புங்கை... நீங்கள் சொன்னதுபோல  விவாகரத்துக்கான பல காரணங்கள் இப்போதைய வாழ்க்கைமுறையிலும், சமூக மாற்றங்களிலும் தோன்றி வருகின்றன. நாம், நமது என்றில்லாமல் நான் , எனது என தனிமைபடுத்துவதும் மிக முக்கிய காரணம்.

 

'விவாகரத்து' என்பது வாழ்ந்து கசந்து அதன்பின் வந்தால்... ஓரளவு பரவாயில்லை. மனதளவால் கொஞ்சமேனும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால் ஒன்றாக சேர்ந்து  வாழ ஆரம்பிக்கும் முன்பே எனக்கு 'காதல் பரிசாகக்' கிடைத்தது அது. அதை விதி என்பதா...? சதியென்பதா?? இன்றுவரைக்கும் தெரியவில்லை...!?!?  :(

 

கருத்துக்கு மிக்க நன்றி... புங்கை! :)

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சேர்ந்து வாழ்வதால் மட்டும் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கிறதா?  கணவன் மனைவி ஒற்றுமையின்றி, ஒட்டுறவின்றி வாழ்வது பிள்ளைகளுக்கு நல்வழியைக் காட்டுமா?  அப்படி இருக்கும் குடும்பங்களில் வளரும் பிள்ளைகளும் வாழ்க்கையில் பிடிப்பின்றித் தானே வாழப் போகிறார்கள்.  ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து கொண்டு பிள்ளைகளுக்குக் கவலையான வாழ்வைக் கொடுப்பதிலும் பார்க்க, பிரிந்திருந்து அவர்களுக்குச் சந்தோசமான வாழ்வைக் காட்டலாமே? 

 

புரிந்துணர்வு என்ற ஒன்று இருந்தால் அவர்கள் ஏன் பிரியப் போகிறார்கள்?  புரிந்துணர்வு என்பது எல்லோருக்கும் எல்லோருடனும் வராது என்பதை எமது சமூகம் விளங்கிக் கொள்வதில்லை.  இரு நல்லவர்கள், படித்தவர்கள்கூட, அவர்களுக்குள் ஒத்து வராதாதால் பிரிந்த சம்பவங்களும் அதிகம் இருக்கின்றனதானே?

 

போக்கிரி... சில சமயங்களில் நீங்கள் சொல்லும் பிரிதல் சிறந்ததாக இருப்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால் தாயோ, தந்தையோ பக்கத்தில் இல்லையென்பது நிச்சயம் ஒரு குழந்தையின்  மனதினைப் பாதிக்கும் என்பது உறுதி.

பெயருக்கு சேர்ந்து வாழ்வதை நான் சேர்ந்துவாழ்தல் என்று குறிப்பிடவில்லை. புரிந்துணர்வோடும் சகிப்புத்தன்மையோடும் பிள்ளைகளின் எதிர்காலத்தினைக் கருத்தில்கொண்டு தமக்கிடையிலான மனக்கசப்புக்களை ஓரங்கட்டிவிட்டு அவர்களுக்காக வாழ்தலையே குறிப்பிட்டேன்

 

கருத்துக்கு மிக்க நன்றி போக்ஸ்! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.