Jump to content

கனிமொழி விஷம் அருந்திய செய்தி உண்மை?


Recommended Posts

கனிமொழி நலம் பெற வேண்டும்.
---------------------------------------------
விஷம் அருந்திய செய்தி உண்மைதான். ஆழ்வார் பேட்டையில் இருக்கும் தனியார் இருத்துவமனையில் இருக்கிறார். அண்ணன் தம்பிகள் அனைவரும் சென்று வந்தபடி உள்ளார்கள். அழகிரி நீலாங்கரையில்தான் இருக்கிறார். அவரும் வந்து பார்க்க இருக்கிறார்...இப்போது பரவாயில்லை.செய்தி வந்தபோது வதந்தியோ என்ற குழப்பம். அவருடைய செல்பேசி தொடர்புக்கே சென்றேன். பதிலில்லை.....

எப்படியிருந்தாலும் பத்திரிகையாள நண்பர்களிடம் நன்றாக பேசக்கூடியவர். நா...ன் எப்போது தொலைபேசி எடுத்தாலும் பதிலை தருவார். பேட்டி என்றால் அப்பாவை கேட்டு சொல்லட்டுமா என்பார். சொன்னபடி பதிலையும் தருவார். மற்றவர்களை போல் இருக்கவில்லை.....

எந்த பிரச்சனை என்றாலும் அது ஒரு புறமிருக்கட்டும்.
அவர் நலம்பெற வேண்டும்.......
 
 
Kanimozhi, DMK chief's daughter, admitted to hospital

South | Edited by Surabhi Malik | Updated: February 02, 2014 15:42 IST

 
{C}
reddit-btn.png
newmail.png?version1

T-Mobile Free SIMFree Pay As You Go Sim Cards On T-Mobile. Order Online Now!

www.t-mobile.co.uk/free-sim

kanimozhi-360x270_33.jpg
 
Chennai DMK chief M Karunanidhi's daughter Kanimozhi was today admitted to a hospital in Chennai.

Sources in her family said "she was feeling giddy" after long hours of work on a speech.  

More details are awaited.

http://www.ndtv.com/article/south/kanimozhi-dmk-chief-s-daughter-admitted-to-hospital-478407


திடீர் உடல் நலக்குறைவு: திமுக எம்.பி. கனிமொழி மருத்துவமனையில் அனுமதி
 
Posted by: Siva Updated: Sunday, February 2, 2014, 16:13 [iST] 
 
சென்னை: திமுக எம்.பி. கனிமொழி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழிக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேச பல மணிநேரமாக ஓய்வின்றி பேச வேண்டியதை தயார் செய்தார். பல மணிநேரமாக வேலை பார்த்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.இதையடுத்து தான் கனிமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்த

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/kanimozhi-dmk-chief-s-daughter-admitted-hospital-192662.html
Link to comment
Share on other sites

கனிமொழி இறுதி நாட்களில் தமிழருக்காக பேசியதால் சுதர்சனநாச்சியப்பன் போன்ற கேடிகளின் மேர்பார்வைக்கு கீழ்  இலங்கை சென்று ராஜபக்ஷாகளின் கால்களை கழுவும்படி காங்கிரசால் பணிக்கப்படார். அலைக்கற்றை வழக்கில் குறைந்த தொடர்பு இருந்த அவர் மட்டும் இலக்கு வைக்கப்பட்டார்.

 

கனிமொழி நலம் பெறவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரமற்று கற்பனையில் எழுந்தமாணத்திற்க்கு செய்திகளை உருவாக்கி அதில் சுகம் காணும் மனநிலை ஒருவகை மனவியாதி சும்மா கனிமொழியை பெரிதாக உருவகபடுத்தல் வேண்டாம் இங்கு சரி அப்பதான் அப்பிடி இப்பவாவது ஈழத்தமிழருக்கு ஏதாவது பரிகாரம் செய்துள்ளதா திமுக இனிமேலும் செய்யாது செய்யப்போவதும் கிடையாது ஜேஅம்மாவும் தாத்தாவும் ஓரே வண்டிலில் பூட்டிய மாடுகளே இவர்களிடம் இருந்து அதிகபட்சமாக எங்களுக்காக அறிக்கைகளும் தீர்மானங்களுமே போடமுடியும் இனியும் கனவில் புன்னைசொறிஞ்சு இன்பம் காண்பதை விட்டு நிகழ்காலத்திற்க்கு வாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தகுடும்பத்தின் நலன்கருதி தன்னினம்அழியும்போது திருட்டுதனமாய் தமிழ்மக்களை ஏமாற்றி நாடகம் போட்டு தன் சுயநலகுடும்பத்தை காப்பாற்றினாரோ அக்குடும்பம் உடைஞ்சு அழியும் நேரம் நெருங்கிவிட்டது தமிழ் தமிழ் என்று பேய்காட்டல் எல்லாம் இனி எடுபடாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரது இளமைக்காலங்கள் மிகவும் அழகானவை, அடேங்கப்பா பணச்செழிப்பு, அப்போது எம்ஜிஆர் அவர்களது ஆட்சிக்காலம், சாராய உடையாரது வருவாய்த்துறைக்கு வராது சாராயத்தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் சரக்குகளில் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்படும் கணிசமான மாமூலுக்கு நிகராக கருனாநிதியும் பெற்றுக்கொள்வார். தவிர இதர வருமானகள் வேறு,  கருனாநிதி, பதவியில் இல்லதுவிட்டாலும் தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்த வேளை, கனிமொழியது இளமைக்காலங்கள் இருந்தன, அதன்பின்பு சிவகாசி பட்டாசுத்தொழிர்சாலை அதிபரும் பெரும்பண்க்காரருமான அதிபன்போஸ் அவர்களுடனான திருமணம் சென்னையே வியக்கும்வண்ணம் நடந்தது அதன்பின்பு கனிமொழிக்கு சரிவுகளே. உச்சத்தில் இருக்கவேண்டிய பெண் பங்காளிச் சண்டையால் இந்தநிலைக்கு வந்துவிட்டார். நான் சென்னையில் வாழ்ந்தகாலங்களில் என்போன்ற இளைஞர்களில் கனவுக்கன்னி ஆனால் கிட்டவே நெருங்கமுடியாத அளவுக்குக் காவல்கள் அச்சுறுத்தல்கள்.

 

கனிமொழி நலம்பெற இயற்கையை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

விஜய் டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன். Coffee with Anu - வின் பழைய நிகழ்ச்சிகளை டிட்பிட்ஸ் மாதிரி காட்டிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு செலவளித்தும் மீதமாகிப் போன உற்சாகம் குறையாமல் பேசும் அனுஹாசன் ஆச்சரியமாகத் தெரிந்தார். வந்து போய்க் கொண்டிருந்த பிரபல முகங்களின் மத்தியில் சட்டென்று வந்தது கனிமொழியின் முகம். சாந்தம்நிதானம்அன்பு பொங்கிய பழைய முகம்! அதற்குக் கொஞ்ச நேரத்திற்கு முன் ஃபேஸ்புக்கில் பார்த்த, - கூட்டத்திற்கு நடுவில் சிக்கித் தவிக்கும் - கனிமொழியின் முகம்Kani-2.jpgஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. சில நொடிகள்சில நிமிடங்கள்,சில மணி நேரங்கள்சில நாட்களில் நம்மை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டுவிடும் வலிமை மிகுந்ததாக உள்ளன வாழ்க்கையின் இரும்புக் கரங்கள்.

அது 2000-களின் துவக்க ஆண்டுகளாக இருக்க வேண்டும். கனிமொழி தன் கணவர் அரவிந்தனோடுசிங்கப்பூரில் வசித்து வந்தார். சிங்கப்பூர் நிரந்தரவாசம் பெற்றுவிட்டதாகச் சொன்னார்கள். சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளேடான தமிழ்முரசில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்முரசில் வெளியாகும் கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அவர் வசம்தான் இருந்தது. அவ்வப்போது நானும் கவிதைகளை அனுப்பிக் கொண்டிருந்தேன். சில கவிதைகள் வெளிவந்தன. ஒரு முறை தனது தந்தையார் கலைஞரைக் கனிமொழியே பேட்டி எடுக்கஅது தமிழ் முரசில் ஒருபக்க அளவில் வெளிவந்தது. அதைப் பற்றி ஒருவாசகர் கடிதம் எழுதினேன். அதை முரசில் வெளியிட்டார்கள். அந்த அளவில்தான் எனக்குக் கனிமொழியைத் தெரியும். சிங்கப்பூரில் நடந்த சில தமிழ் நிகழ்வுகளில் அவரைத் தொலைவில் இருந்து பார்த்ததோடு சரி. அதற்கு மேல் அவரை அணுக வேண்டிய அவசியம் இல்லாத நிலை. 

இப்படியாக வாழ்க்கைப் போய்க் கொண்டிருந்தபோது ஒருநாள்கனிமொழியின் கணவர் அரவிந்தன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். "நாங்கள் 'சுவடி'என்றொரு நிகழ்ச்சியைச் சிங்கப்பூர்த் தொலைக்காட்சிக்காகத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். அதில் ஒவ்வொரு வாரமும் ஓர் உள்ளூர்க் கவிஞரை அறிமுகப்படுத்துகிறோம். ஒருவாரம் உங்களை அறிமுகப்படுத்தலாம் என்று கனிமொழி சொன்னார். நீங்கள் எழுதிய கவிதைகளை எனக்கு அனுப்ப முடியுமா"என்று கேட்டார். நான் தயங்கினேன். அதுவரை ஒரு 10 - 20கவிதைகள்தான் எழுதி இருப்பேன். "பரவாயில்லை எழுதியதை அனுப்புங்கள்"என்றார் அரவிந்தன். அப்போது UTV-யில் இருந்த சுமிரத்னம் என்னைச் சைனீஸ் கார்டனுக்குக் கூட்டிக் கொண்டு போய் நடக்க, நிற்க, உட்காரபேசச் சொல்லி வீடியோ ஷூட் செய்தார். அந்த நிகழ்ச்சி, "அப்பாவிச் சோழன் என்ற புனை பெயரில் எழுதிக் கொண்டிருக்கும் பாலு மணிமாறனின் கவிதைகள் சற்று வித்தியாசமானவை" என்ற கனிமொழியின் அறிமுகவுரையோடு ஒளிபரப்பானது. இப்படியாகச்சிங்கப்பூரில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் எனது தமிழ்ப் பணிக்குத் தெரிந்தோ, தெரியாமலோ அவரும் ஒரு தூண்டுதலாகிப் போனார். 

Kani-1.jpgஅதற்குப் பின் கனிமொழி தமிழ்முரசுப் பணியை விட்டு விட்டதாகவும்சிங்கப்பூருக்கும்,தமிழகத்திற்கும் இடையில் போய் வந்து கொண்டிருப்பதாகவும் சிலர் சொல்லக் கேட்டேன். அவர் சிங்கப்பூரில் மிக எளிமையாகவே இருந்ததாகப் பலரும் சொன்னார்கள். ஒரு பெரிய தலைவரின் பெண் என்ற எந்த ஒளிவட்டமும் இல்லாத இனிமையான பெண் என்றும் சொன்னார்கள். 2004-ம் ஆண்டு எனது திருமணத்திற்கு ஊருக்குப் போனபோதுகனிமொழி சென்னையில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். சென்னையில் சிலருக்குத் திருமண அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தபோதுகனிமொழிக்கும் அழைப்பிதழ் கொடுக்கலாம் என்று தோன்றியது. கைத்தொலைபேசிக்கு அழைத்தேன். "இன்னைக்குக் கொஞ்சம் மீட்டிங்ஸ் இருக்கு. நாளைக்குக் கட்டாயம் பத்திரிகையோடு வீட்டுக்கு வாங்க"என்று மிகப் பணிவான குரலில் சொன்னார். அதில் மிகஅழுத்தமான மன்னிப்புக் கேட்கும் தொனி இருந்தது. அவர் சொன்ன அந்த 'நாளை', பாராளுமன்றத் தேர்தலில் - தி.மு.க கூட்டணி 40 - 0 என்று கிளீன் ஸ்வீப் அடித்த நாள். அந்த சந்தடியில் கனிமொழியைச் சந்திக்க முடியுமா என்ற சந்தேகத்தோடு ஃபோன் செய்தேன். அவர் பேசும்போது பின்புலத்தில் வேட்டுச் சத்தம் காதைக் கிழித்தது. "மிகவும் மன்னிக்கணும். இன்னைக்கு ஒரே கூட்டமா இருக்கு. இன்னும் இரண்டு நாள் கழித்து வரமுடியுமா" என்று கேட்டார். நான் அன்றே திருமணவேலைகளுக்காகக் கம்பம் செல்ல வேண்டிய நிலை இருப்பதைச் சொல்லிஎன் தம்பியிடம் அழைப்பிதழைக் கொடுத்து விட்டுச் சென்றேன். 40-0 என்ற வெற்றிச் சூழலில் அவனும் அழைப்பிதழைக் கொடுக்க முடியாமல் போனது. 

கனிமொழி அரசியலுக்கு வருவாராவரமாட்டாரா என்ற பேச்சு, தீவிரமாக இருந்த இன்னொரு சமயம். அவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்று 10புள்ளிகளைப் பட்டியலிட்டு எனது வலைப்பூவில் எழுதினேன். சிங்கப்பூரில் அதைப்படித்து விட்டுக்கனிமொழிக்குக் கொஞ்சம் நெருக்கமான ஒருவர் என்னிடம், "ஏன் வீணா எழுதிட்டு இருக்கீங்க. அவர் வரமாட்டார்" என்றார். "இந்தக் கட்டுரை என்ன கனிமொழிக்கு வைக்கப்பட்ட ஐஸா?" என்று சிரித்துக் கொண்டே சீரியஸாகக் கேட்டார். எதன் மீதுமான தனது கருத்தைச் சொல்கிற ஒரு சாமானியனின் உரிமைதான் அது என்று அவரிடம் விளக்கவில்லை. அமைதியாக இருந்து விட்டேன். ஆனால்-கனிமொழி அரசியலுக்கு வந்தார்.

அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று எழுதி விட்டாலும்முதலைகளும்,பாம்புகளும் நிறைந்த தமிழக அரசியலில், அடிப்படையில் மென்மையான் கனிமொழி தாக்குப் பிடிக்க முடியுமா என்று பலரையும் போல் எனக்குள்ளும் ஒரு சின்னச் சந்தேகம் எப்போதும் இருந்தது. தமிழகப் பத்திரிகைகள் அவர் அரசியலில் தேறிவிட்டார் என்றன. குழு அல்லது குடும்ப அரசியலில் கூட கனிமொKani-3.jpgழி கைத் தேர்ந்தவராகி விட்டார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால்வெறுப்பு,விருப்பின்றி வேடிக்கை பார்த்த என்னைப் போன்ற சாதாரண பார்வையாளர்களுக்கு அவர்,மென்மையான அரசியல் மற்றும் வன்மையான அரசியலுக்கும் இடையில் அல்லாடும் ஒருவராகத் தோற்றமளித்தார். பல மாற்றங்கள்ஏமாற்றங்களுக்குப் பிறகுஇன்று சி.பி.ஐ-யின் பிடியில் கனிமொழி!

தமிழக மக்களில் பலரும் கனிமொழிக்கு அலைக்கற்றைப் பிரச்சனையில் சம்பந்தமில்லை என்பதே உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த விருப்பத்தை, அரசியல் என்ற எல்லையைக் கடந்த அனுதாபம் எனச் கொள்ளலாம். விடுபட முடியாது என்பதைப் போன்ற தோற்றமளிக்கிற இந்த இடியாப்பச் சிக்கலில் இருந்து கனிமொழி விடுபடலாம் அல்லது விடுபட முடியாமல் போகலாம். ஆனால், சில நொடிகள்சில நிமிடங்கள்சில மணி நேரங்கள்சில நாட்களில் நம்மை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டுவிடும் வலிமை மிகுந்ததாக உள்ளன வாழ்க்கையின் இரும்புக் கரங்கள் என்பதை மறுபடிமறுபடி நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன கனிமொழியின் இந்த நிமிடங்கள்!

 

http://thangameen.com/Archieves/ContentDetails.aspx?tid=380&iid=38

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரது இளமைக்காலங்கள் மிகவும் அழகானவை, அடேங்கப்பா பணச்செழிப்பு, அப்போது எம்ஜிஆர் அவர்களது ஆட்சிக்காலம், சாராய உடையாரது வருவாய்த்துறைக்கு வராது சாராயத்தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் சரக்குகளில் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்படும் கணிசமான மாமூலுக்கு நிகராக கருனாநிதியும் பெற்றுக்கொள்வார். தவிர இதர வருமானகள் வேறு,  கருனாநிதி, பதவியில் இல்லதுவிட்டாலும் தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்த வேளை, கனிமொழியது இளமைக்காலங்கள் இருந்தன, அதன்பின்பு சிவகாசி பட்டாசுத்தொழிர்சாலை அதிபரும் பெரும்பண்க்காரருமான அதிபன்போஸ் அவர்களுடனான திருமணம் சென்னையே வியக்கும்வண்ணம் நடந்தது அதன்பின்பு கனிமொழிக்கு சரிவுகளே. உச்சத்தில் இருக்கவேண்டிய பெண் பங்காளிச் சண்டையால் இந்தநிலைக்கு வந்துவிட்டார். நான் சென்னையில் வாழ்ந்தகாலங்களில் என்போன்ற இளைஞர்களில் கனவுக்கன்னி ஆனால் கிட்டவே நெருங்கமுடியாத அளவுக்குக் காவல்கள் அச்சுறுத்தல்கள்.

 

கனிமொழி நலம்பெற இயற்கையை வேண்டுகிறேன்.

 

 

அவாவுக்கு  ஒன்றுமில்லை

நீங்கள் அமைதியாக இருங்கள் :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை பார்த்ததில் இருந்து எனக்கு தெரியும் இது ஒரு தொடர் நாடகத்தில் அங்கமென அதனால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, அப்படி உண்மையில் ஏதாவது நடந்தாலும் கவலைப்பட என் நெஞ்சில் இப்போது ஈரம் இல்லை காரணம் முள்ளிவாக்கால் இது எனது கருத்து மட்டுமல்ல அநேகமான ஈழ தமிழர்களின் கருத்துமாக இருக்கலாம் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

ஆதாரமற்று கற்பனையில் எழுந்தமாணத்திற்க்கு செய்திகளை உருவாக்கி அதில் சுகம் காணும் மனநிலை ஒருவகை மனவியாதி சும்மா கனிமொழியை பெரிதாக உருவகபடுத்தல் வேண்டாம் இங்கு சரி அப்பதான் அப்பிடி இப்பவாவது ஈழத்தமிழருக்கு ஏதாவது பரிகாரம் செய்துள்ளதா திமுக இனிமேலும் செய்யாது செய்யப்போவதும் கிடையாது ஜேஅம்மாவும் தாத்தாவும் ஓரே வண்டிலில் பூட்டிய மாடுகளே இவர்களிடம் இருந்து அதிகபட்சமாக எங்களுக்காக அறிக்கைகளும் தீர்மானங்களுமே போடமுடியும் இனியும் கனவில் புன்னைசொறிஞ்சு இன்பம் காண்பதை விட்டு நிகழ்காலத்திற்க்கு வாருங்கள். 

 

கற்பனை இல்லாததால் தொடர்புகளை கண்டறியாது மோப்பத்தின் பின் போகும் ஜீவன்ங்கள். 

 

நாயும் நரியும் ஒன்று மாதிரி தோன்றும். ஆனால் நரி தான் நாய் இல்லை தன் அழுக்கேறிய மனத்தால் காட்டிக்கொடுத்துவிடும். அது நாய் மாதிரி தெரிந்தாலும் நரி. நாலாயிர திவ்விய பிரபந்தகங்களை தெரிந்த நடிக்கிறார்கள் சில பெரியாள்வார்கள். நன்றியறிவுள்ள விலங்கை நாயாக கண்டு கொள்வதுண்டு. ஆனால் கணனிக்கு முன்னால் குந்தியிருக்கும் சில செக்கென்ன சிவலிங்கம் என்ன நடந்து தாம் யார் என காட்டிக்கொள்கின்றன.

 

கனிமொழியை பற்றி எழுத இல்லாதால் அங்கொடையிருந்து வெளிக்கிட்டு ஓடியவர்கள் மாதிரி தொடர்பில்லாத தி.மு.க.வை இங்கே இழுக்கிறார்கள். இந்த திரிக்கும் தி.மு.க.வுக்கும் என்ன தொடர்பு?

 

 

http://www.yarl.com/forum3/?showtopic=47810

இது பிரச்சனை இனி திசை மாறாது எனக்கண்ட போது  யாழுக்கு பையன் தேடிக்கொணர்ந்து இணைத்த செய்தி.

 

கனி மொழியை சிறையில் அடைக்க காலாக இருந்த நிகழ்வுகள்.

 

http://gtmn.brandx.eu/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/23947/categoryId/3/language/ta-IN/--------.aspx

Link to comment
Share on other sites

இதுவும் தி.மு.க வின் நாடகமாக இருக்கலாம். :unsure:

Link to comment
Share on other sites

அது உண்மை. ஆனால் கலுகல்லை இரண்டு முறை நஞ்சருந்து சாவின் விழிம்புக்கு சென்று வந்த பின்னர் வைத்திய சாலைகள் உறவினரின் விருப்படி மறைத்தது போல இதை மறைக்க உதவிக்கு போகின்றன. 


ஏன் இந்த முயற்சி என்ற காரணம் புரியவில்லை. பா.ஜா.வந்தால் வழக்கு தொடரும். அது தொடர்பா அல்லது அழகிரி கருணாநிதிக்கு அடித்த சம்பவம் தொடர்பா..? அங்கே நிறைய இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அழகிரி.. ஸ்ராலின்.. கலைஞர் மோதலின் வலுவை திசை திருப்ப.. கனிமொழிக்கு கலைஞர் அளித்த புரஜெக்டே.. கொஸ்பிற்றல் நாடகம். கலைஞருக்கு நாடகம் கை வந்த கலை. சரிந்து கிடக்கும் தி மு கவின் செல்வாக்கை நிமிர்த்த கலைஞர் தூக்கில் தொங்காததது தான் குறை. எதற்கும் சந்திரமுகி பார்த்து பழகினார் என்றால் நல்லது. எப்படி சாகாமல் தூக்கில் தொங்குவது என்று கற்றுக் கொள்ளலாம். :D :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியா கொக்கா???? நேரமறிந்து வேடம் போடுவதில் வல்லவர்.

 

lat-rajini.jpg anniyan026gq.jpg kani-karu-rasa.jpg

Link to comment
Share on other sites

தண்ணி , மலசல வசதியில்லாமல், மயிற பொசுக்கும் வெப்பத்தில் 12 மணித்தியாலம் கையப்புடித்து நிக்கும் மனிதச்சங்கிலி போராட்டத்தின் திட்டமிடலின் இவவின் பங்கு அளப்பெரியது..

அப்போதுசொல்லிக்கொண்டார்களாம்.... இனிமேல் ஆர்ப்பாட்டம், கூட்டம் எண்டால் சனம் தலை தெறிக்க ஓடும் எண்டு ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழி நிஜமாகவே மனக் கஸ்டப்பட்டு விசம் குடித்திருந்தால் ...அவ நலம்பெற்று வீடு வரட்டும்...!

 

எனது கவலையெல்லாம் மில்லியனர்,பில்லியனாராய் இருக்கும் கனிமொழியாலேயெ   கேவலம்  ஒரு  சுத்தமான  விசத்தைக் கூட வாங்க முடியாமல் இருக்கும்போது , பாவப்பட்ட ஏழைச் சனங்களின் நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் மக்களே...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.