Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உடலை அழகாக வைத்துக்கொள்ள யாருக்குத்தான் ஆசை இல்லை. ஆனால் இந்தப் பாழாய்ப்போன மனம் இருக்கிறதே அதுதான் எல்லோருக்கும் பெரிய பிரச்சனை. பல இடங்களில் இந்த எழு நாள் டயட் ஓடித் திரிய சரி எல்லாம் செய்து பாத்தாச்சு இதை மட்டும் ஏன் விடுவான் என எண்ணி செய்வதென முடிவெடுத்தேன்.

 

முதல் நாள் தனியப் பழங்கள். பழங்கள் உண்பது என்பது எனக்கு பிடிக்கவே பிடிக்காத விடயம். அதுவும் குளிர் காலத்தில. சரி தொடங்கியாச்சு என்று முதல் நாள் காலையில வெறும் வயிற்றில் உண்டது வாழைப்பழம். காலையில் எழு மணிக்கு காலை  உணவை தொடர்ந்து உண்டுவந்த எனக்கு வாழைப்பழம் ஒரு மணிநேரம் கூடத் தாங்கவில்லை. அடுத்தது எதை உண்ணலாம் என்று எண்ணிவிட்டு தோடம்பழத்தை எடுத்து உரித்தால் அது கொஞ்சம் புளி. வேறு வழியில்லை என அதை மருந்து உண்பதாக எண்ணி மிண்டி விழுங்கியாயிற்று.

 

வீட்டில் அன்று மீன்குழம்பு, பொரியல் என எனக்குப் பிடித்த உணவு. மதியம் கணவர் உண்ணும்போது வாசம் மூக்கைத் துளைக்க கண்டறியாத டயட். பேசாமல் சாப்பிடுவோமா என எண்ணி ஐயோ சரியா பசிக்குதப்பா எந்தன். மனிசன் கொஞ்சம்கூட இறக்கம் காட்டாமல் தொடங்கிவிடாய். மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இரு இன்னும் ஆறரை நாள்த்தானே என்று சொல்ல அதை மீறிச் சாப்பிட ரோசம் இடம் குடுக்கேல்ல. நான் என்ன இருக்கமாட்டன் எண்டு நினைச்சியளோ எண்டு வீறாப்பாச் சொல்லிவிட்டு வேறு பழங்கள் வாங்கி வரலாம் என்று எம்மூர்காரரின் கடைக்குப் போனால் பக்கத்தில சாப்பாட்டுக் கடை. சாப்பாட்டுமணம் முக்கியமா வடை, ரோல்ஸ். ஏன் கடைக்கு வந்தான் என்று ஆகிவிட்டது. எதுக்கும் ஒரேயொரு வடை அல்லது ரோல்ஸ்சை வாங்கிச் சாப்பிடுவமோ என்றும் மனம் அலைபாய இதுக்கு மிஞ்சியும் அங்கே நிண்டால் ஆபத்து என்று பப்பாப்பழம், மாம்பழம், கப்பல் வாழை, பேரீச்சம்பழம். விளாம்பழம் எண்டு எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தால் சரஸ்வதிபூசையோ இண்டைக்கு எண்டு கேட்கிறாள் மகள்.

 

அவ்வளவு பழங்களையும் பாத்திட்டு உதிலும்பாக்க நீ சாப்பாடே சாப்பிட்டிருக்கலாம் என்ற கணவரின் நக்கலைப் புறம்தள்ளிவிட்டு பலன்களை எல்லாம் வெட்டி பலச் சலாது செய்து உன்ன வெளிக்கிட வெறுமனையாக் கிடந்த வயிறு கொஞ்சம் சாப்பிடவே வயிற்றைப் புரட்டியது. இடைக்கிடை கிரீன் டீ, தேநீர் என்று குடித்தாலும் தண்ணீர் மட்டும் குடிக்கவே மனம் வரவில்லை. இரவு அவர்கள் பால் குடிக்கும்படி கூறவில்லை. ஆனால் எனக்கு அது குடித்தால்த்தான் நித்திரை வரும் போல் இருந்ததால் ஒரு கப் பாலைக் காச்சிக் குடித்துவிட்டுப் படுத்துவிட்டேன். அப்பாடா ஒருவாறு ஒருநாள் முடிந்துவிட்டது என்று பெரிய நின்மதியுடன் உடனே தூங்கியும் விட்டேன்.

Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிகுதி ஆறு நாட்களும் வெற்றிகரமாக முடிய என் வாழ்த்துக்கள். அடுத்து நான் தொடங்கலாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசஷ்டி, கெளரி காப்பு விரதம், பிள்ளையார் கதை என்று பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிடித்தால் ஏனிந்த பொல்லாலை அடிச்சவேலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசஷ்டி, கெளரி காப்பு விரதம், பிள்ளையார் கதை என்று பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிடித்தால் ஏனிந்த பொல்லாலை அடிச்சவேலை?

 

அதெல்லாம் அந்தக்காலம். எனக்கு ஒரு நேரம் பட்டினி இருந்தாலே தலை சுற்றும். வேளையில் மயக்கம் வந்தால் என்ன செய்வது என்ற பயத்தில் ஏழுமணிக்கே சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவேன்.

 

வருகைக்கு நன்றி நிலா அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் எட்டாம் நாள் கல்லறை டொட் கொம்மை பாத்திட்டு இறங்குவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மெலிவதற்கான வழியாத் தெரியேல்லை    :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உந்த பால் பழங்களை விட ஏழுமிளகும் ஒருமுறடு தண்ணியும் இன்னும் நல்லாய் வேலை செய்யும்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் சாப்பாட்டுக்கு அலைபாய அலைபாய.... டயற்!

7 நாட்களின் பின் வெயிற் போட்டிருக்கா அல்லது வெயிற் குறைஞ்சிருக்கா எண்டு எழுதிவிடுங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவம் கடந்து போகும், சுமே! :D

 

நான் எண்டால் தலைமயிர், அருந்தப்பில தப்பினதுடனேயே எல்லாத்தையும் விட்டிருப்பன்! :icon_mrgreen:

 

 ம்ம்ம்.............................விதியானப்பட்டது வலியது........அதை யாரும் வெல்ல முடியாது........!!! :icon_idea: 

 

இந்த ஏழு நாள் டயட்டில சொன்னதெல்லாம் பொய்யில்லே ........!!!

 

ஏழாவது நாள், என்ன நடக்கும் என்று அறிய ஆவல்....!

Link to comment
Share on other sites

லண்டனில் இப்ப விடிஞ்சிருக்கும்.. ஆளின்ர சத்தத்தை இன்னும் காணேலல.. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இப்ப விடிஞ்சிருக்கும்.. ஆளின்ர சத்தத்தை இன்னும் காணேலல.. :wub:

ரண்டாம் நாளேயா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//எனது ழு நாள் டயட்//  தலைப்பு இப்படி இருக்க நான் பயந்து போனன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த  நந்தன், தமிழினி,சகாரா, குமாரசாமி, கறுப்பி,புங்கை, இசை,நெடுக்ஸ் ஆகிய உறவுகளே நன்றி.

Link to comment
Share on other sites

இந்த 7 நாள் உணவுக் குறைப்பு முறையினை 7 day cleansing என்று அழைப்பர். இது உடல் மெலிவதற்காக மட்டுமன்றி, சமிபாட்டு உறுப்புகளை ஒருக்கால் service செய்வதற்கும் இதனை கடைப்பிடிப்பர். இதில் முக்கியமானது மாச்சத்து உள்ள பொருட்களையும் கொழுப்பு பொருட்களையும் முற்றாகத் தவிர்ப்பது.  அதிலும் பழங்கள் சாப்பிடும் போது வாழைப்பழத்தினை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

 

சுமே, முதல் நாளே வாழைப்பழத்தினை வெட்டி விட்டு பிறகு என்ன டயட் வேண்டிக் கிடக்கு? :icon_mrgreen:

 

 

Link to comment
Share on other sites

பட்டினி கிடப்பது ஒரு விடயம்.. ஆனால் அது உடலில் சுரப்பிகளின் வேலைகளை குழப்பிவிடாமல் இருக்கக்கடவது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா  மிச்சத்தை காணவில்லை

 

மரண  அறிவித்தல்  பக்கம் :lol:

சி

காணவில்லை பகுதியில்  தேடுவமா?? :lol:  :D  :D


இங்கு 

என்னிடம் வரும் வாடிக்கையாளர் ஒருத்தி

ஆபிரிக்க  பெண்

நல்ல  வடிவாக  இருப்பார்

பொதுநிறம்

நல்ல  உயரம்

அளவான உடம்பு

கொஞ்சம் வயிறு  பெருத்து இருக்கும்

 

போன  மாதம்

வயிற்றிலுள்ள  கொழுப்பை வெட்டி எடுக்கப்போனார்

திரும்பி  வரவே  இல்லை........... :(  :(  :(

நேற்று அவரது மரண  அறிவித்தல் பிரசுரத்தைக்காட்டி ஒருவர்  ஓலமிட்டு அழுதார் என்னிடம்  இது தேவையா என. :(  :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 7 நாள் உணவுக் குறைப்பு முறையினை 7 day cleansing என்று அழைப்பர். இது உடல் மெலிவதற்காக மட்டுமன்றி, சமிபாட்டு உறுப்புகளை ஒருக்கால் service செய்வதற்கும் இதனை கடைப்பிடிப்பர். இதில் முக்கியமானது மாச்சத்து உள்ள பொருட்களையும் கொழுப்பு பொருட்களையும் முற்றாகத் தவிர்ப்பது.  அதிலும் பழங்கள் சாப்பிடும் போது வாழைப்பழத்தினை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

 

சுமே, முதல் நாளே வாழைப்பழத்தினை வெட்டி விட்டு பிறகு என்ன டயட் வேண்டிக் கிடக்கு? :icon_mrgreen:

 

அதில் வாழைப்பழத்தை உண்ணக்கூடாது என்று கூறவில்லையே

சரஸ்வதி பூசை வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள். :icon_mrgreen:

 

சரஸ்வதி பூசை எண்டால் இரவுமட்டும்தானே சாப்பிடலாம். ஆனால் இது எப்பவும் சாப்பிடலாமே.

வரவுக்கு நன்றி நிழலி, எழுமலை,விசுகு அண்ணா 

என்னப்பா  மிச்சத்தை காணவில்லை

 

மரண  அறிவித்தல்  பக்கம் :lol:

சி

காணவில்லை பகுதியில்  தேடுவமா?? :lol:  :D  :D

 

 

எப்பிடி எல்லாம் ஆசை சனத்துக்கு :lol:

 

 உந்த பால் பழங்களை விட ஏழுமிளகும் ஒருமுறடு தண்ணியும் இன்னும் நல்லாய் வேலை செய்யும்.  :D

 

ஏளென்ன பத்து மிளகு சாப்பிட்டே ஒண்டும் நடக்கேல்ல. :D

 

லண்டனில் இப்ப விடிஞ்சிருக்கும்.. ஆளின்ர சத்தத்தை இன்னும் காணேலல.. :wub:

 

அந்தளவு சீக்கிரம் போமாட்டம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கலை எழும்பியதும் பசிப்பதுபோல இருந்தது. ஆனால் வெற்றிகரமா ஒரு நாளைக் கடத்தியாச்சே என்று மகிழ்வும் கூட. பல்லுக்கூடத் தீட்டாமல் போய் நிறுத்தால் ஐம்பது கிராம் கூடக் குறையவில்லை. இவ்வளவு பழங்களையும் சாப்பிட்டா எப்பிடிக் குறையும் எண்டு மனட்சாட்சி கேட்க, பேசாமல் போய் காலைக் கடன்களை முடித்து குசினுக்குள்ள வந்தால், வழமைபோல தனிப்பாலில மூண்டு கரண்டி சீனி போட்டு ஒரு கோப்பி குடிச்சா எப்பிடி இருக்கும் என்று மனம் உந்த அதை அடக்கிவிட்டு இஞ்சி போட்டு பால் காச்சிக் குடிச்ச உடன கொஞ்சம் சந்தோசமா இருந்துது.

 

பால் குடிக்கச் சொல்லி டயட் பிளானில இல்லைத்தான். எண்டாலும் பால் நிறையுணவுதானே ஒண்டும் செய்யாது எண்டு மனதைத் தேத்திக் கொண்டன்.

இன்று முழுவதும் மரக்கறிவகை. அவிக்கலாம், சலாட் போடலாம், சூப் வைக்கலாம். ஆனால் எண்ணெய் ஒண்டும் சேர்க்கக் கூடாது. மரக்கறிதானே பிரச்சனை இல்லை என்று எண்ணியபடி பூக்கோவா, காளான், புறோகோழி, இவற்றை முக்காப் பதத்துக்கு அவித்து உப்பு மிளகுதூள் போட்டு காலை எட்டு மணிக்கு சாப்பிட்டன். பிறகு இடையில் இருதடவை கிரீன் டீ . பச்சைத்தண்ணீர் குடிக்க மனம் வரவே இல்லை. வில்லங்கத்துக்கு இரண்டு கப் சாடையாச் சூடாக்கிக் குடித்ததோட சரி. அதன்பின் அதை நினைத்தாலே வயிற்றைப் புரட்டியது.

 

மதியம் வீட்டில் சமைக்கவில்லை. ஆதலால் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் சைனீஸ் கடையில் உடோங் எடுத்தது. மனிசன் சாப்பிடும்போது மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு என்பாட்டில் திரும்பிப் பாராமலும் எதுவும் சொல்லாமலும் கணனியில் மனதைச் செலுத்தியபடி இருந்திட்டன். மனிசன் பாவம் எண்டு நினைச்சுதோ அல்லது சீண்டிப் பாக்க நினைச்சுதோ கொஞ்சமா சாப்பிடன் எண்டார். கனக்கக் கதைக்காமல் வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டு இருந்திட்டன்.

 

மதியம் பன்னிரண்டுக்கு சலாட் ஒரு கோப்பை உண்ண நினைத்து அரைக் கோப்பைதான் உண்ண முடிந்தது. அதன்பின் ஒரு தேநீர் சீனி போட்டு. சாடையாத் தலை சுற்றுவதுபோல் இருந்தது. என் மனப்பிரமையா என்று புரியவில்லை. ஒரு இரண்டு மணிநேரம் தூங்கி எழுந்ததும் வசிறு மீண்டும் காலியானது. ஏதாவது வாய்க்குச் சுவையைக் குடிக்கவே வேண்டும் என மனம் அடம்பிடிக்க இரண்டு கரண்டி சீனி போட்டு நல்ல ஒரு கப்போசீனோ. ம் இப்பதான் திருப்தியாய் இருக்கு. இரவு புட்டு அவித்து கோழி இறைச்சி காச்சினது. பெரிய கொடுமைதான் காச்சிப்போட்டு சாப்பிடாமல் இருக்கிறது. சரி இன்னும் அஞ்சு நாள்த்தானே எண்டு மனதை சமாதானப் படுத்திக் கொண்டன். 

 

Link to comment
Share on other sites

தலை சுற்று வருமளவிற்கு டயட் பண்ணுவது நல்லது இல்லை. எதுக்கும் டாக்டரிடம் கேட்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே

உது உங்களுக்கு சரிவராது

பேசாமல் விட்டுட்டு

மனம் போல  சாப்பிட்டு  

அருமையான கணவன் :wub:

மனம்   போல  வாழுங்கள்.... :icon_idea:

மற்றவர்களுக்காக எதையும் செய்யாதீர்கள்.. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தான் தவறாக விளங்கியுள்ளீர்களோ என சந்தேகமாயுள்ளது சுமோ  நிழலி சொல்வது சரிதான் நாலாம் நாள்தான் வாழைப்பழம்.General Motors Weight Loss Diet Program இதையா பின்பற்றுகிறீர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுமோ,டயட் இருக்க வேண்டும்.உடம்பைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தது பாராட்டுக்குரியது தான்.ஆனாலும் இப்படி டயட் இருப்பதிலும் பார்க்க பேசாமல் இருக்கலாம் :D வழமையாக சாப்பிடுகின்ற சாப்பாட்டை குறைத்து,சாப்பாட்டோடு சேர்த்து நிறைய பழங்கள்,சலாட் சாப்பிடுங்கள்.ம்னதை அலைய விட்டு உடம்பை குறைக்க வேண்டும் என்டால் முடியாது என்பது என் கருத்து.
 
காலையில் வெறும் வயிற்றில் கிறீன் டீயில் தேசிக்காய் புளி சேர்த்து கடைசி 3 மாதமாவது குடியுங்கள்[உபயம் குட்டி] உடம்பு குறைந்தாலும் வயித்தை குறைக்க உடற்பயிற்சி செய்யுங்கோ :)  :icon_idea:
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.