Jump to content

காலத்தால் அழியா கனவுக் கலைஞர்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.வி.சகஸ்ரநாமம்.

 

இவரும்  கிட்டத்தட்ட  ரங்கராவ் போல

ஆனால் கொஞ்சம் முரட்டு முகம் இருக்கும்..

அற்புதமான நடிகர்

தொடருங்கள்......

உணமைதான் விசு..

 

தமிழ் படங்களில், தந்தை கதாபாத்திரத்திற்கு ஒரு கெளரவமான தகுதியை ஏற்படுத்தி, அன்றைய காலகட்டத்தின் கூட்டுக் குடும்ப முறையினை பாசப்பிணைப்போடு திரையில் காட்டிய மிக முக்கியமானவர்களில் ரங்காராவ், சக்ஸ்ரநாமம், நாகையா, மற்றும் எஸ்.வி.சுப்பையா போன்றோர். ஒவ்வொருவராக பார்ப்போமே?

இணையத்தில் அவர்கள் நடித்த பல படங்களின் புகைப்படங்களை தேடியெடுப்பதில் சற்று நேரம் கூடிய கடினமான வேலை. அதனால் தாமதமாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி(1955) படத்தில் எஸ்.வி.சகஸ்ரநாமம்

 

nqobva.jpg

 

16awuue.jpg

 

2la8qb6.jpg

 

2wr2c6e.jpg

 

 

சுவரொட்டி

f8a0d774-a5cf-4404-882a-9c4febc084a1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கலைஞர், இவர் யாரென்று தெரிகிறதா?

 

KR_Ramasamy.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1954ல் வெளியான "சுகம் எங்கே?" என்ற படத்தில் வரும் இந்த அருமையான பாடலை சொந்தக் குரலில் ஜிக்கியுடன் பாடி சாவித்திரியுடன் தோன்றியுள்ளார்..

 

பாடலை ரசியுங்கள்..! One of the best golden song!

 

இலங்கை வானொலியில், மதியம் 2.30 மணிக்கு ஒலிபரப்பாகும் "மகளிர் கேட்டவை" நிகழ்ச்சியில் இந்தப் பாடலை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

 

http://youtu.be/4xgvAsM2U-0

 

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே..
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே!
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே !


தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே அடிமை வாழ்வில்!...
தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே ? அடிமை வாழ்வில்..

இல்லை என்பார் இல்லையென்னும் இன்ப நாளைக் காண்போமா?
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே !


உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே
உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே !


மனிதர் வாழ்வை, மனிதர் பறித்து வாழும் காலம் மாறுமா?
மனிதர் வாழ்வை மனிதர் பறித்து வாழும் காலம் மாறுமா ?
இனியும் நாட்டில் ஏழை, செல்வன் பேதம் யாவும் வாடுமா?

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே !


கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே !

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2qaoj7p.jpg

 

கே.ஆர்.ராமசாமி

 

கே.ஆர்.ராமசாமி, தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகரும், பாடகரும் ஆவார். நடிப்பிசைப் புலவர் என்றழைக்கப்பட்டவர். 1935 முதல் 1969 வரை திரைப்படங்களில் நடித்தவர். கதாநாயகனாகப் பல படங்களில் நடித்திருக்கிறார். அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி" திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914ம் ஆண்டு ஏப்ரல் 14ந்தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தார்.

 

பெற்றோர்கள் ராமபத்ர செட்டியார் , குப்பம்மாள். சிறு வயதிலேயே படிப்பை விட நடிப்பே அவரை அதிகம் கவர்ந்தது. 7 வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தார். அங்கு 6 ஆண்டுகள் நடித்தார். பின்னர் அங்கிருந்து விலகி, டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்தார். டி.கே.எஸ். சகோதரர்களின் "குமாஸ்தாவின் பெண்" என்ற நாடகம், 1935ல் திரைப்படமாகியது.

 

அதில் கே.ஆர். ராமசாமி சிறு வேடத்தில் நடித்தார். அவருடைய முதல் படம் இதுதான்.   "குமாஸ்தாவின் பெண்" படத்தின் துணை இயக்குனர்களாகவும், எடிட்டர்களாகவும் இருந்த கிருஷ்ணன், பஞ்சு இரட்டையர்கள், "பூம்பாவை" என்ற படத்தை டைரக்ட் செய்தனர்.

 

அவர்களுடைய சிபாரிசின் பேரில் இந்தப் படத்தின் கதாநாயகன் வேடம் கே.ஆர்.ராமசாமிக்குக் கிடைத்தது. கதாநாயகியாக நடித்தவர் யூ.ஆர்.ஜீவரத்தினம். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து, "தெய்வநீதி", "கிருஷ்ண பக்தி", "கங்கணம்" ஆகிய படங்களில் நடித்தார்.

 

"கிருஷ்ணன் நாடக சபா" என்ற பெயரில் சொந்தத்தில் நாடக குழுவை தொடங்கினார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது பேரன்பு கொண்டவர் கே.ஆர்.ராமசாமி. அதனால், தன் நாடகக் குழுவுக்கு அவர் பெயரை வைத்தார். திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், கே.ஆர். ராமசாமி. அதனால் அண்ணாவிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப்பெற்றார்.

 

கே.ஆர்.ராமசாமி நடிப்பதற்காகவே, "வேலைக்காரி", "ஓர் இரவு" ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்தார், அண்ணா. இந்த இரண்டு நாடகங்களும் பெரிய வெற்றி பெற்றன. புராணப் படங்களில் நடிக்க வந்த அழைப்புகளை, தி.மு.க. கொள்கையின் காரணமாக கே.ஆர்.ராமசாமி ஏற்க மறுத்து விட்டார்.   நாடகமாக வெற்றி பெற்ற "வேலைக்காரி"யை, ஜுபிடர் பிக்சர்சார் படமாகத் தயாரிக்க முடிவு செய்தனர்.

 

திரைக்கதை, வசனத்தை அண்ணா எழுதினார். படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார். படத்தின் கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி. கதாநாயகி வி.என்.ஜானகி. மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.வி.ராஜம்மா, எம்.என்.நம்பியார், டி.பாலசுப்பிரமணியம், பி.கே.சரஸ்வதி ஆகியோர் நடித்தனர்.   

வேதாசல முதலியார் (டி.பாலசுப்பிரமணியம்) பெரிய பணக்காரர். அவர் செய்த கொடுமையால் ஆனந்தனின் (கே.ஆர். ராமசாமி) தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதற்குப் பழி வாங்க, ஆனந்தன் ஆள் மாறாட்டம் செய்து, வேதாசலத்தின் மகள் சரசாவை (வி.என்.ஜானகி) மணக்கிறான். அவளை கொடுமை செய்கிறான்.

 

பல திருப்பங்களுடன் கதை செல்கிறது. வேலைக்காரியை (எம்.வி.ராஜம்மா) காதலிக்கும் மூர்த்தி (எம்.என்.நம்பியார்) ஒரு போலிச்சாமியாரின் சுயரூபத்தை அம்பலப்படுத்துகிறான். போலிச்சாமியார் கொலை செய்யப்படுகிறார். கொலைக் குற்றம் சாட்டப்படும் மூர்த்தியை, வக்கீலாக வாதாடி விடுவிக்கிறான், ஆனந்தன். வேதாசல முதலியாரின் ஆணவம் அழிகிறது.  

 

25-02-1949ல் வெளியான "வேலைக்காரி" பெரிய வெற்றி பெற்றது. கே.ஆர்.ராமசாமியின் நடிப்பும் பாடல்களும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. குறிப்பாக, கோர்ட்டில் வக்கீலாக ஆஜராகி, "சட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு" என்று வாதாடும் காட்சியில் கைதட்டல் பெற்றார்.

 

பட்சிராஜா ஸ்டூடியோ தயாரித்த "காஞ்சனா"வில் (எழுத்தாளர் லட்சுமியின் நாவல்) கதாநாயகனாக நடித்தார். அவருடைய மனைவியாக லலிதாவும், காதலியாக பத்மினியும் நடித்தனர். 1954ல் வெளிவந்த "சொர்க்கவாசல்" படத்தின் கதை, வசனத்தை அண்ணா எழுதினார். கதாநாயகனாக கே.ஆர்.ராமசாமியும், வில்லனாக சிவாஜிகணேசனும் நடித்தனர்.

 

கே.ஆர். ராமசாமிக்கு ஜோடி பத்மினி. இந்தப் படத்தில் கே.ஆர்.ராமசாமி பாடிய "எங்கே சொர்க்கம்", "ஆகும் நெறி எது ஆகா நெறி எது", "கன்னித் தமிழ்ச் சாலை ஓரம்" முதலிய பாடல்கள் "ஹிட்"டாக அமைந்தன. ஆனால் படம் பெரிய வெற்றி பெறவில்லை. இதே ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "சுகம் எங்கே?" படத்தில் கே.ஆர்.ராமசாமியும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர்.

 

fa3e548a-b8d1-47e1-ac0b-66228d4e7ab2_S_s

 

இது வெற்றிப்படம். "தென்றல் அடிக்குது, என்னை மயக்குது" என்று கே.ஆர்.ராமசாமி பாடிய பாடலில் தென்றல் வீசியது. ஏ.வி.எம். தயாரித்த "ஓர் இரவு", "செல்லப்பிள்ளை" ஆகிய படங்களில் ராமசாமி கதாநாயகனாக நடித்தார். "ஓர் இரவு" கதை,வசனத்தை அண்ணா எழுதினார். நாடகம் அடைந்த வெற்றியை திரைப்படம் அடையவில்லை.

 

"செல்லப்பிள்ளை" சுமார் ரகம். இதில் கே.ஆர்.ராமசாமிக்கு ஜோடி சாவித்திரி. "நீதிபதி" என்ற படத்தில் கே.ஆர். ராமசாமியுடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்தார். பின்னர் எஸ்.பாலசந்தர் டைரக்ஷனில் உருவான "அவன் அமரன்" என்ற படத்தில் கே.ஆர்.ராமசாமி நடித்தார். அவர் குரல் வளம் பாதிக்கப்பட்டதால், சீர்காழி கோவிந்தராஜன் பின்னணியில் பாடினார். இந்தப் படத்தில் கே.ஆர்.ராமசாமிக்கு ஜோடி ராஜசுலோசனா.

 

கே.ஆர்.ராமசாமி கடைசியாக நடித்த படம் "நம் நாடு". எம்.ஜி.ஆர். நடித்த இப்படத்தில் கவுரவ வேடத்தில் கே.ஆர். ராமசாமி நடித்தார்.   1960ல் தமிழ்நாடு மேல் சபை உறுப்பினராக சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், கே.ஆர். ராமசாமி. நாடகத் துறையில் ஆற்றிய பணிக்காக, சங்கீத நாடக சங்கத்தின் (இயல்,இசை, நாடக மன்றம்) விருது பெற்றார்.    

 

57வது வயதில் கே.ஆர்.ராமசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உணவுக்குழாயில் சதை வளர்ச்சி ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்த அவர், வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சில காலம் சிகிச்சை பெற்றார். பிறகு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கே.ஜே. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 1 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.

 

05-08-1971 அன்று அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. நள்ளிரவு 12 மணிக்கு மரணம் அடைந்தார்.   கே.ஆர்.ராமசாமியின் மனைவி பெயர் கே.ஆர்.கல்யாணி. இவர் பிற்காலத்தில் வாரிய தலைவராக இருந்தவர். இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள்.

 

Thanks: Malaimalar.

 

 

இனி அவரின் திரைப்படங்களிலிருந்து பாடல்களும், படங்களும் இணைக்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/VBI1Ijd_DF8

"உள்ளம் தேடாதே என்று சொல்லுதே"

Link to comment
Share on other sites

நல்ல பாடல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1955ல் வெளியான "செல்லப் பிள்ளை" படத்தில் சுதர்சனம் இசையில் வெளியான இப்பாடல், அக்காலத்தில் மிகப் பிரபலம்.. கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாகவும், சாவித்திரி வில்லியாகவும் நடித்திருப்பார்கள், டி.எஸ் பாலையா பாடலுக்கு டான்ஸ் ஆடி பார்த்ததுண்டா? :o

 

துப்பாக்கி முனையில், "ஆடு..ஆடு" என்று சாவித்திரியை மிரட்டி, கே.ஆர்.ராமசாமி வசனம் பேசி  ஆடவைப்பதை அக்கால இளசுகள் மிகவும் ரசித்துப் பார்த்தனர்.

 

நடித்திருக்கும் நடிகர்களின் இளமையான முகத்தை இதில் பார்க்கலாம்.

 

http://youtu.be/UHe09uIZJtI

 

மதனா எழில் ராஜா நீ வாராயோ..
பருவமிதே.. பயனிதுவே.. இன்பம் தாராயோ
என்னை போல ஒரு பெண்ணை
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை பேரழகும் இனி என்றும் வாய்ப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ
தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ
தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ

 

பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ
மதனா எழில் ராஜா நீ வாராயோ
பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ

 

மின்னல் இடை அழகும்
அன்ன நடை அழகும் கண்டும் மறப்பதேனோ
உனையே நான் நினைந்தே மனம் உருகுதல் சரிதானோ
மனமும் உருகுதல் சரிதானோ
தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ
தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ
பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ

என்னை போல ஒரு பெண்ணை
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை பேரழுகும் இனி என்றும் வாய்ப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ
மதனா எழில் ராஜா...

Link to comment
Share on other sites

இப்போதுதான் பார்த்தேன் .எனக்கு மிகவும் பிடித்த கறுப்பு வெள்ளை காலம் படங்களுடன் பார்க்க சந்தோசமாக இருக்கு ,முழுவதையும் வாசித்துவிட்டு கருத்து எழுதுகின்றேன் .

நீங்கள் தொடருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் பார்த்தேன் .எனக்கு மிகவும் பிடித்த கறுப்பு வெள்ளை காலம் படங்களுடன் பார்க்க சந்தோசமாக இருக்கு..

 

நன்றி அர்ஜூன்.

 

கே.ஆர்.ராமசாமி பெண் வேடமிட்டு நடித்துள்ள "நீதிபதி" (1955) படத்தில் இப்பாடல்..

 

http://youtu.be/oTv8GKZ1ZPg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

s-17-3.jpg

 

குடும்பம்

:

டி.எஸ்.பாலையாவின் குடும்பம் மிகவும் பெரியது. இவருக்கு 3 மனைவிகள்.

 

முதல் மனைவி பெயர் பத்மாவதி. இவருக்கு சாய்பாபா, அரவிந்தன், சோனையா, ரகுராம், கணேஷ் ஆகிய 5 மகன்கள். துர்க்கா, தேவி என்ற 2 மகள்கள்.

 

2-வது மனைவி பெயர் லீலா (இவர் டி.எஸ்.பாலையா மரணம் அடைவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.) அம்புஜம், பொன்னி, சிவகாமி, ரமா என்ற 4 மகள்கள். நாகராஜன், முனிபாலன் என்ற 2 மகன்கள்.

 

3-வது மனைவி பெயர் நவநீதம். இவர் நடிகை சந்திரகாந்தாவின் அக்காள். இவருக்கு மனோகரி என்ற மகள்.

 

61 வயதில் மரணம்:

 

சென்னை தி.நகரில் வசித்து வந்த டி.எஸ்.பாலையாவுக்கு, 61 வயது நிரம்பியபோது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவற்றால் அவதிப்பட்டார். 20-12-1972 அன்று டி.எஸ்.பாலையாவுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை வீடு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். என்றபோதிலும் மறுநாள் (21-ந்தேதி) அதிகாலை அவர் மரணம் அடைந்தார்.

 

மகனும் நடிகர்:

 

அவருக்கு பிறகு அவரது மகன் ஜுனியர் பாலையா என்ற பெயரில் சினிமா படங்களில் நடித்து வருகிறார். இவரது குரலும் பாலையா குரலாக எதிரொலிக்கிறது.

 

 

என்னெண்டப்பா எல்லாத்தையும் சமாளிச்சாங்கள்??  :lol:

Link to comment
Share on other sites

என்னெண்டப்பா எல்லாத்தையும் சமாளிச்சாங்கள்??  :lol:

தசரத மகாராசாவிற்கு அறுபதினாயிரம் பெண்டாட்டிகள் என்று சொல்லும்போது பாவம் பாலையாவுக்கு மூன்றுதானே. ஆனாலும் உங்கள் ஏக்கம் புரிகிறது. எதற்கும் ஒரு கொடுப்பனவு வேண்டும் ஐயா.!!! :blink::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.