Jump to content

நீங்கள் எல்லாம் எழுத்தாளராய்யா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் எழுத்தாளராய்யா?
வா. மணிகண்டன்

கே.என்.செந்திலைப் பற்றிய கட்டுரையை பதிவேற்றிவிட்டு நேற்று மதியத்துக்கு மேல் தபாலில் வந்திருந்த காலச்சுவடு இதழைப் புரட்டினால் அதில் கே.என்.செந்தில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்டுரையின் ஒரு பத்தியில் எனது பெயரும் வந்திருக்கிறது. திட்டியிருக்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால் கிட்டத்தட்ட அப்படித்தான். நேற்று பாராட்டி எழுதிய அதே விரல்களால் இன்று சண்டைக்காக தட்டச்சு வேண்டியதாகிவிட்டது


கட்டுரையில் அந்தப் பத்தி இப்படி இருக்கிறது-


முகநூல் மற்றும் வலைப்பக்கம் வைத்திருப்பவர்களின் தாக்கத்தை இந்தப் புத்தகச் சந்தையில் அதிகமாகவே உணர முடிந்தது. படைப்பாளிகள் பல ஆண்டுகள் எழுதி அதன் வழி உருவான வாசக எண்ணிக்கையை விளம்பரங்களால் இவர்கள் அனாயசமாக கடந்து போகிறார்கள். தற்காலிக வெற்றியை நோக்கி ஓடுகிறார்களோ? அடுத்த ஆண்டு இந்த நூல்களைப் பற்றி யாரேனும் பேசுவார்களா? சில பாடல்கள் ஒன்றிரண்டு மாதங்கள் மாநிலத்தையே உலுக்கிய பின் இருந்த சுவடு தெரியாமல் போய்விடுமே அதே கதிதான் இந்த நூல்களுக்கும் நேருமோ என்று தோன்றியது. பதிவர், எழுத்தாளர், படைப்பாளி, கலைஞன், மேதை என்ற வரிசையில் பதிவர்கள் எழுத்தாளர்களின் இடத்தையும், எழுத்தாளர்கள் படைப்பாளியின் இடத்தையும்- அதற்குரிய உழைப்பும் அர்பணிப்புமின்றி- பிடிக்க முண்டுகிறார்கள். முகநூலிலும் வலைப்பூவிலும் எழுதும் பெரும்பாலானோர் தங்களை எழுத்தாளர்களாக நினைத்துக் கொள்வது அதனால்தான். இவர்களின் முதல் இலக்கு அனைத்திலும் சுவாரசியம். சுவாரசியம் ஒன்றை மட்டுமே கொண்ட சுஜாதாவை பின் தொடர்கிறார்களோ? சுஜாதாவின் எழுத்து மேலோட்டமானது. ஆனால் வாசிப்பு பரந்துபட்டது. இவர்களோ நுனிப்புல் வாசிப்பையும், மேலோட்டமான எழுத்தையும் கொண்டவர்கள். அராத்து, விநாயகமுருகன், வா.மணிகண்டன் போன்றோரின் நூல்கள் ஒரே வாரத்தில் சுமார் ஐநூறு பிரதிகளாவது விற்றிருக்கும். அராத்து, விநாயகமுருகன் ஆகியோரிடம் சொல்ல என்னிடம் எதுவும் இல்லை. ஆனால் மணிகண்டனிடம் இந்த புகழ், வெளிச்சம், விற்பனையின் எண்ணிக்கை போன்றவற்றின் பின்னே சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ள முடியும்.


கடைசி வரியை அறிவுரை என்று எடுத்துக் கொள்ளலாம். அறிவுரைதானே? இருக்கட்டும், தப்பில்லை.


ஆனால் பாருங்கள்- ‘இணையத்தில் எழுதுவதற்கு எந்த உழைப்பும் தேவையில்லை, இங்கு எழுதுபவர்கள் வாசிப்பே இல்லாதவர்கள்’ என்றெல்லாம் எழுதியிருப்பதுதான் வருத்தமடையச் செய்கிறது. இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து பெரும்பாலான இலக்கியவாதிகளும் இதையேதான் சொல்கிறார்கள். இணையத்தில் எழுதுபவர்களுக்கு தங்களைப் போன்ற வாசிப்பு இல்லை; இங்கு எழுதுபவர்களுக்கு பெரிய அளவில் பயிற்சி இல்லை என்றெல்லாம் அடித்து விடுகிறார்கள். எப்படி இந்த முடிவுக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை.


இவர்கள் சொல்லும் உழைப்பு, அர்பணிப்பு, வாசிப்பு இத்யாதியெல்லாம் இல்லையென்றால் இங்கு வெகு நாளைக்கு ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதுதான் உண்மை.


நம்பிக்கையில்லாதவர்கள் இணையத்தில் எழுதிப் பார்க்கலாம். அதிகமாக வேண்டாம்- ஒரு வருடம் போதும். உங்களின் அத்தனை உழைப்பையும், அர்பணிப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு சாதாரணமாக ஜல்லியடியுங்கள். சுஜாதாவின் அதே மேலோட்டமான எழுத்திலேயே எழுதுங்கள். உங்களின் அதிக நாட்களைக் கோரவில்லை. ஒரு வருடம். ஒரே ஒரு வருடம்தான். பதிவுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது வரும்படி ஒரு தளத்தை உருவாக்கிக் காட்டுங்கள். பிறகு சொல்லுங்கள். இங்கே எழுதுவதற்கு எந்த இழவும் தேவையில்லை என்று. சலாம் அடித்து ஏற்றுக் கொள்கிறேன்.


இன்னொரு விஷயம்- எழுத்தாளர், பதிவர், படைப்பாளி குழப்பம். வலைப்பூவில், முகநூலில் என எழுதுபவர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்றும் படைப்பாளிகள் என்று நினைத்துக் கொள்ளட்டுமே. அதில் என்ன தவறு? எங்குதான் இதை நினைத்துக் கொள்ளவில்லை. ஒண்ணேகால் கவிதை பிரசுரமானவர்கள் தங்களைக் கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லையா? வாழ்நாள் முழுமைக்கும் சேர்த்து ஒற்றைத் தொகுப்பை வெளியிட்டவர்கள் ‘இந்த உலகம் எங்களை கண்டுகொள்ளவே இல்லை’ என்று கதறுவதில்லையா? எனக்கு விளம்பரமே பிடிக்காது என்று சொல்லிக் கொண்டு சேனல்களில் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்குவதில்லையா? இணையத்தில் மட்டும் இல்லை- எல்லா இடத்திலுமே இப்படியானவர்கள் உண்டு.


மூன்று வரிகளை சேர்ந்தாற்போல தட்டச்சு செய்யத் தெரிந்தவர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்றும் படைப்பாளிகள் என்றும் நினைத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அது அவர்களின் திருப்தியென்றால் தாராளமாக நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் அதைப் பற்றி வேறு யாரும் வருத்தம் கொள்ளத் தேவையில்லை. இங்கு புழங்கும் வாசகர்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்களில்லை. நிறைய வாசிக்கக் கூடிய நுட்பமான வாசகர்கள் ஏகப்பட்ட பேரை இங்கு கைநீட்டிக் காட்ட முடியும். சாவதானமாக நிராகரித்துவிடுவார்கள்.


செந்தில் குறிப்பிட்டிருக்கும் இன்னொரு விஷயம் புத்தகத்தின் ஆயுட்காலம். வெளியிலேயே தெரியாமல் செத்துப் போகும் புத்தகங்களை விடவும், குறைந்தபட்சம் வெளியில் தெரிந்து அடுத்த வருடம் அந்தப் புத்தகத்தைப் பற்றி யாருமே பேசாமல் மறந்து போவது நல்ல விஷயம் என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு வருடங்களும் எத்தனை ஆயிரம் புத்தகங்கள் வெளிவருகின்றன? அவற்றில் எத்தனை புத்தகங்களை புரட்டிப் பார்க்கிறோம்?


தனது புத்தகம் பற்றி வாயே திறப்பதில்லை என்று பேசும் படைப்பாளிகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இங்கு இலக்கியவாதி என்பதற்கான சில இமேஜ்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வாழ்நாள் முழுமைக்கும் கஷ்டப்பட வேண்டும்; எழுத்துக்காக உருக வேண்டும்; துன்பத்தோடு பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் எக்ஸெட்ரா; எக்ஸெட்ரா. உண்மையில் அப்படி இருக்கிறார்களோ இல்லையோ- ஆனால் அப்படியிருப்பதாகக் காட்டிக் கொள்ளும் ஆட்கள் இங்கு அதிகம்.


இந்தத் தியாகம் எல்லாம் தேவையே இல்லை.


எழுத்தாளர்கள் புத்தகத்தைப் பற்றி வெளியில் பேச வேண்டும். நமது குழந்தைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதில்லையா? அப்படித்தான். இந்தியாவில் வெளியாகும் ஆங்கில நூல்களை மிகச் சிறந்த வகையில் ப்ரோமோட் செய்கிறார்கள். ஆனால் நாம்தான் பெரிய வியாக்கியானங்களை பேசிக் கொண்டு ‘பதிப்பகத்தார் பாடு’ என்று விட்டுவிடுகிறோம். ஒரு புத்தகம் பரவலான வாசக பரப்பை அடைவதற்கான நேர்மையான செயல்பாடுகளை எழுத்தாளர்கள் செய்ய வேண்டும். தமது புத்தகம் பற்றிய நேர்மையான உரையாடல்களை தயக்கமே இல்லாமல் உருவாக்கலாம். இப்படியான உரையாடல்களை உருவாக்குவதற்கான மிகச்சிறந்த தளமாக இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.


இதைச் சொல்வது பீற்றிக் கொள்வது போலத்தான் இருக்கும் ஆனாலும் சொல்லிவிடுகிறேன். ஒரே வாரத்தில் ஐந்நூறு பிரதிகள்- சரியாகச் சொன்னால் பத்து நாட்களில் எந்நூற்று சொச்சம் பிரதிகள் விற்றதற்கு- வலைப்பதிவிலும், முகநூலிலும் எழுதியதைத் தவிர எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. புத்தக விளம்பரத்திற்கெனச் செய்த அதிகபட்ச செலவு வெறும் தொண்ணூற்று நான்கு ரூபாய். அவ்வளவுதான். டிஸ்கவரி அரங்கில் புத்தக அட்டையின் கலர் பிரிண்ட் அவுட்களை ஒட்டி வைத்திருந்தார்கள். அதைத் தவிர வேறு எந்தச் செலவும் இல்லை. புத்தகம் குறித்தான சச்சரவு எதையும் உருவாக்கவில்லை, வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யவில்லை, புத்தக வெளியீட்டுக்கு எந்தப் பிரபலத்தையும் அழைக்கவில்லை. ஆனால் இந்தப் புத்தகம் பற்றி திரும்பத் திரும்ப எழுதினேன். நண்பர்கள் பேசினார்கள். இவை அத்தனையும் இணையத்திலேயேதான் நடந்தது. ஆனால் நமது புத்தகத்திற்காக இதைக் கூடச் செய்யவில்லை என்றால் எப்படி?


இணையத்தில் எழுதுபவர்கள் வெறும் சுவாரசியத்தை மட்டுமே மையமாக எழுதுகிறார்கள் என்பதிலும் கூட மாற்றுக் கருத்து உண்டு. அநேகமாக செந்தில் அப்படியான எழுத்துக்களை மட்டுமே இங்கு வாசிக்கிறார் என்று நினைக்கிறேன். தமிழில் மிக ஆழமான கட்டுரைகளை சர்வசாதாரணமாக கூகிளில் தேடி எடுத்துவிடலாம். ஏகப்பட்ட பேர்கள் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வளவு கவனம் கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை.


ஆனால் காலம் இருக்கிறது.


இப்பொழுதுதான் இணையத்தில் தமிழை வாசிக்கும் ஒரு பெரிய வாசகப்பரப்பு உருவாகியிருக்கிறது. இது ஒரு வகையில் Transition period. இந்த வாசகர்களில் கணிசமானவர்கள் தங்களின் தேடுதலை விரிவுபடுத்தும் போது பிற எழுத்தாளர்களும் கவனம் பெறுவார்கள். கொஞ்சம் பொறுத்திருப்போம். அது கூடிய சீக்கிரம் நடந்துவிடும். இணையத்திற்கான வக்கீலாக நான் இருக்க விரும்பவில்லை. ஆனால் இணையத்தின் வீச்சையும் அதன் ஆழத்தையும் புரிந்து கொள்ளாமல் நிறைய பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வருத்தம். பேசுங்கள். ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் உள்ளே வந்து இங்கே கொஞ்சம் புழங்கி விட்டு பிறகு பேசுங்கள். நான்கு வலைப்பதிவுகளைத் திறந்து பார்த்துவிட்டு, சக இலக்கியவாதியோடு பேசியவற்றிலிருந்து ஒரு கருத்தை உருவாக்கி கொண்டு ஒரு கவளம் மண்ணை எடுத்து வீச வேண்டாம் என்பது மட்டுமே எனது வேண்டுகோள்.


http://www.nisaptham.com/2014/02/blog-post_9.html

Link to comment
Share on other sites

வடிவேலு ஒரு படத்திலை நான் ஜெயிலுக்கு போறன் ..நான் ஜெயிலுக்கு போறன் என்று சத்தம் போடறமாதிரி ...நானும் எழுத்தாளன் நானும் எழுத்தாளன் என்று சத்தம் போட்டு பார்ப்பம் என்று பார்க்கிறன் 

.முகநூலில் சற்று முன்பு பார்த்தேன் இணையத்து அல்லது வலைபதிவுஎழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல என்ற பொருள்பட. நம்ம ஊரிலை கிராமத்து வழக்கத்தின்படி திருமண எழுத்து எழுதும் அதிகாரியை கூட எழுத்தாளன் என்று அழைப்பாங்கள் . இணையத்திலை எழுதுபவங்களை எழுத்தாளன் என்று அழைக்க கூடாது என்று நீங்க எல்லாம் சட்டம் போட்டால் என்னங்க நியாயம் .

முந்தி எல்லாம் ஒரு பத்திரிகைக்கு எழுதவேணும் பிரசுரிக்க வேணும் என்றால் அவன் மனசு வைத்தால் தான் அதுவும் எத்தனை வெட்டு குத்து வோடை . இந்த இணைய வசதி வந்தா பிறகு என்னை போலை உள்ள கந்தன் சுப்பன் எல்லாம் கிறுக்க கூடியதாக இருக்கு . நீங்க எங்களை எழுத்தாளன் என்று சொல்லாட்டி விடுங்க ..முதலில் வலை பதிவு வந்த பொழுது எழுதிய பொழுது எங்களுக்காக தான் எழுதினோம் ..இப்பவும் எங்களுக்காக தான் எழுதுகிறோம் . விரும்பினால் கை தட்டுங்க அல்லாட்டி விடுங்க... நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டிலும் நாம எங்களை எழுத்தாளர் என்று நினைச்சுக்குவோம் ...உங்களுக்கே மட்டுமே கொண்டாடிய எழுத்தாளர் என்ற பிரேத்தியேக கதிரை பறி போகிறதே என்ற பொறாமையின் காரணமாக உங்கள் காதிலை புகை வாறதுக்காக விட்டு விட முடியாது.

 

அண்மையில் சென்னையில் நடந்த புத்தக கண்காட்சிக்கு சென்று அல்லது அங்கு வெற்றி வாகை சூடின இணைய அல்லது வலைபதிவை தாயகமாக கொண்ட எழுத்தாளர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்... தொடர்ந்து அவர்களின் காதில் புகையை வர வையுங்கள்

 

1888599_702059389833876_1008984131_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. விரும்பினால் கை தட்டுங்க அல்லாட்டி விடுங்க... நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டிலும் நாம எங்களை எழுத்தாளர் என்று நினைச்சுக்குவோம் ..
. அதே ....ஆமோதிக்கிறேன்
Link to comment
Share on other sites

  • 1 month later...

அடிக்கடி போகும் பக்கங்களில் வா.மனிகண்டனுடையதும் ஒன்று, அறிமுகபடுத்தியதுக்கு நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.