Jump to content

இஸ்லாமீயராக மாறினார் யுவன் சங்கர்ராஜா


Recommended Posts

மதம் மாறுவதற்காக தூற்றுவது எல்லாம் பண்பற்ற செயல். 
 
இறை தேடலின் காரணமாக மதம் மாறினார் என்றால்... நல்லது. எல்லாரும் வாழ்த்தலாம். 
 
ஆனால் அவர் சாதிய பாகுபாடு காரணமாக மாறினார் என்றால் தமிழ்ச் சமூகத்தில் இன்னும் சாதி பாகுபாடு உள்ளது, அதுவும் நாம் வாழும் கால கட்டத்தில் இருக்கிறது என்பதற்க்காக எல்லோரும் வெட்கப்படவேண்டிய விடயம். இது இன்னும் நம்மை கூறு போட உதவும்.
 
சமீப காலங்களாக தமிழகத்தில் சாதிய அடையாளத்தை தூக்கி பிடிக்கும் நிகழ்வுகள் அதிகமாக நடக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உதாரணமாக சமீபத்தில் நடந்த சாதிக் கலவரங்கள். தற்பொழுதெல்லாம் திரை உலகில் ஜனனி ஐயர், நரேஷ் ஐயர்.... இன்னும் பல சாதிய அடையாளங்களை கொண்ட பெயர்களை காணலாம். முன்னால் இதுமாதிரி கிராமப் புறங்களில் தான் சாதியை நெத்தியில் எழுதிக் கொண்டு திரியும் பழக்கம் இருந்தது. இப்பொழுது படித்த, நன்றாக உலக அறிவுள்ள பலரும் நெத்தியில் எழுதிக் கொண்டு திரிகின்றனர். அதுவும் "ஜனனி" யிடம் பலபேர் எடுத்துக் கூறியும் கூட அவர் நான் இப்படித்தான் இருப்பேன் என்று கூறி விட்டார். 
 
நமது இனம் இழந்த்தது ஏராளம் ! அதுவும் இந்து மதம் செய்த சாதிக் கொடுமைகளால் இழந்தது  ஏராளம் ! ஒருவன் மதம் மாறுகிறான் என்றால் அவன் தன் தலைமுறையின் அடையாளத்தை அழிக்க/மாற்ற  விரும்புகிறான் என்றே எண்ணுகிறேன். அதன் காரணம் அறிந்து களையப்பட வேண்டும். நாம் இழந்து கொண்டிருப்பது வரலாற்றை !! வரலாற்றை எந்த இனம் இழந்து விட்டதோ அந்த இனம் மீண்டு எழவே முடியாது !!!
Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply
 
இந்து சமயத்தில் இருக்கும் சாதீயம் கொடுமையானது.
 
அதேசமயம் இன்று உலகில் இருக்கும் எந்த மதமும் மனிதத்திற்கு எதிரான கொடுமைகளைச் செய்யாத மதமாக இல்லை.
 
பாக்கிஸ்தானியர்கள் 40 லட்சத்திற்கு மேற்பட்ட வங்காளிகளை கொன்றார்கள், அவர்கள் முஸ்லீம்களாக் இருந்துமே.
 
இன்றும் சூடானில் பல்ஃபோரில் பலத்த இனப்படுகொலை நடந்திருக்கிறது. இதுவும் முஸ்லீம்களால் முஸ்லீம்கள் மேல் நடத்தப்படும் இனப்படுகொலை.  
 
அஃப்கானிஸ்தானில் டலிபான்கள் இனப்படுகொலை செய்தார்கள். மாற்று இன முஸ்லீம்கள் மேல்.
 
ஈராக்கில் சுன்னிமுஸ்லீம்கள் ஷியா முஸ்லீம்களை  குண்டு வைத்துக் கொல்கிறார்கள்.
 
சிரியாவில் ஷியா முஸ்லீம்கள் சுன்னி முஸ்லீம்களை ரசாயன ஆயுதங்களைப் பாவித்துக் கொல்கிறார்கள்.
 
இஸ்லாமிய மத்தில் இருக்கும் பெண் அடிமைத்தனம் இந்து சமய சாதீயக் கொடுமைகளுக்கு குறைவானதா ?
 
இந்தியா பிரியும் போது பாக்கிஸ்தானில் இருந்த இந்துக்கள் மேல் நடத்தப் பட்ட கொடுமைகள் எத்தனை ?
 
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
அமெரிக்க வெள்ளை இன கிறீஸ்தவர்கள் ஆபிரிக்கர் மேல் நடாத்திய கொடுமைகள் மனித வரையறைகளுக்கு அப்பாற்பட்டது. அடிமை என்பவன் மிருகத்தை விடக் கேவலாமனவன். அண்மையில் வந்த படம் 12 Years a Slave.
 
ஸ்பானிய கிறீஸ்தவ ஆக்கிரமிப்பாளர்கள் அமெரிக்காவில் கரை இறங்கி நாகரீகத்தில் திளைத்த ஒரு இனத்தையே பூண்டோடு அழித்தார்கள். அவர்கள் தரை இறங்கிய கப்பல்களில் கிறீஸ்தவ கப்பல் சப்ளின்களும்  (பாதிரிகளும்) கூடவே தரை இறங்கினார்கள். கிறீஸ்தவ பாதிரிகளின் கண் முன்னாலேயே தலை வெட்டும் படலம் அரங்கேறியது.
 
அவுஸ்திரேலியாவில் கிறீஸ்தவ மதம் பூர்வீகக் குடிகளை அடக்கி அழிப்பதற்கு வசதிகள் செய்திருப்பது ஆவனப்படுத்தப்பட்டுள்ளது.
 
ஆபிரிக்க பாடல் வரி ஒன்று இப்படிச் சொல்கிறது..
 
வெள்ளையன் வருமுன்,
என்னிடம் நாடு இருந்தது.
அவன் கையில் பைபிள் இருந்தது.
இன்று அவன் கையின் என் நாடு,
என் கையில் அவன் பைபிள்.
 
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
ஆரியர்கள் தங்கள் நலனுக்காக சாதியத்தை கொண்டுவந்தார்கள். இந்து சமயம் என்ன ஆரியர்கள் கொண்டுவந்த மதமா ? இந்திய பெரும் நிலப்பரப்பின் பூர்வீக மதம். ஆரியர் வருகைக்கு முற்பட்ட மதம். எங்கள் ஆயிரம் முப்பாட்டர்களின் மதம். எம்முடைய அடையாளமும் அதுவே.
 
ஆரியர்கள் எம்மேல் திணித்த அசிங்கத்தை களையுங்கள். எம் அடையாளத்தை அல்ல !!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
இந்து சமயத்தில் இருக்கும் சாதீயம் கொடுமையானது.
 
அதேசமயம் இன்று உலகில் இருக்கும் எந்த மதமும் மனிதத்திற்கு எதிரான கொடுமைகளைச் செய்யாத மதமாக இல்லை.
 
பாக்கிஸ்தானியர்கள் 40 லட்சத்திற்கு மேற்பட்ட வங்காளிகளை கொன்றார்கள், அவர்கள் முஸ்லீம்களாக் இருந்துமே.
 
இன்றும் சூடானில் பல்ஃபோரில் பலத்த இனப்படுகொலை நடந்திருக்கிறது. இதுவும் முஸ்லீம்களால் முஸ்லீம்கள் மேல் நடத்தப்படும் இனப்படுகொலை.  
 
அஃப்கானிஸ்தானில் டலிபான்கள் இனப்படுகொலை செய்தார்கள். மாற்று இன முஸ்லீம்கள் மேல்.
 
ஈராக்கில் சுன்னிமுஸ்லீம்கள் ஷியா முஸ்லீம்களை  குண்டு வைத்துக் கொல்கிறார்கள்.
 
சிரியாவில் ஷியா முஸ்லீம்கள் சுன்னி முஸ்லீம்களை ரசாயன ஆயுதங்களைப் பாவித்துக் கொல்கிறார்கள்.
 
இஸ்லாமிய மத்தில் இருக்கும் பெண் அடிமைத்தனம் இந்து சமய சாதீயக் கொடுமைகளுக்கு குறைவானதா ?
 
இந்தியா பிரியும் போது பாக்கிஸ்தானில் இருந்த இந்துக்கள் மேல் நடத்தப் பட்ட கொடுமைகள் எத்தனை ?
 
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
அமெரிக்க வெள்ளை இன கிறீஸ்தவர்கள் ஆபிரிக்கர் மேல் நடாத்திய கொடுமைகள் மனித வரையறைகளுக்கு அப்பாற்பட்டது. அடிமை என்பவன் மிருகத்தை விடக் கேவலாமனவன். அண்மையில் வந்த படம் 12 Years a Slave.
 
ஸ்பானிய கிறீஸ்தவ ஆக்கிரமிப்பாளர்கள் அமெரிக்காவில் கரை இறங்கி நாகரீகத்தில் திளைத்த ஒரு இனத்தையே பூண்டோடு அழித்தார்கள். அவர்கள் தரை இறங்கிய கப்பல்களில் கிறீஸ்தவ கப்பல் சப்ளின்களும்  (பாதிரிகளும்) கூடவே தரை இறங்கினார்கள். கிறீஸ்தவ பாதிரிகளின் கண் முன்னாலேயே தலை வெட்டும் படலம் அரங்கேறியது.
 
அவுஸ்திரேலியாவில் கிறீஸ்தவ மதம் பூர்வீகக் குடிகளை அடக்கி அழிப்பதற்கு வசதிகள் செய்திருப்பது ஆவனப்படுத்தப்பட்டுள்ளது.
 
ஆபிரிக்க பாடல் வரி ஒன்று இப்படிச் சொல்கிறது..
 
வெள்ளையன் வருமுன்,
என்னிடம் நாடு இருந்தது.
அவன் கையில் பைபிள் இருந்தது.
இன்று அவன் கையின் என் நாடு,
என் கையில் அவன் பைபிள்.
 
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
ஆரியர்கள் தங்கள் நலனுக்காக சாதியத்தை கொண்டுவந்தார்கள். இந்து சமயம் என்ன ஆரியர்கள் கொண்டுவந்த மதமா ? இந்திய பெரும் நிலப்பரப்பின் பூர்வீக மதம். ஆரியர் வருகைக்கு முற்பட்ட மதம். எங்கள் ஆயிரம் முப்பாட்டர்களின் மதம். எம்முடைய அடையாளமும் அதுவே.
 
ஆரியர்கள் எம்மேல் திணித்த அசிங்கத்தை களையுங்கள். எம் அடையாளத்தை அல்ல !!

 

 

 

நல்ல ஒரு கருத்து, ஈசன்!

 

இப்போதெல்லாம், சமயம் என்பது ஒரு மனிதனது, மனச்சாட்சியைச் சாந்தப்படுத்த மட்டுமே பயன்படுகின்றது!

 

திருப்பதியானதும், சபரிமலையானதும், தில்லை நடராஜனதும் வருமானத்தைப் பார்த்தாலே உண்மை புரியும்!

 

ஒரு இனப்படுகொலையையே, நடத்தியவர்களின் மனச்சாட்சிக்கு நியாயம் கற்பிக்கின்றது புத்த மதம்!

 

ஈராக்கில் பாலை வனத்தின் மண்ணுக்குள் மறைந்திருந்த 'ஐம்பதினாயிரம்' பேரையும் மண்ணுக்குள்ளேயே வைத்துப் புதைத்துவிட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு, அது பாவமில்லை என்று ஆசீர்வாதம் வழங்கியதும் வத்திக்கானே தான்!

 

இரட்டைக் கோபுரங்களின் அழிவுக்கு வழி கோலியதும் 'இஸ்லாம்' மதம் தான்!

 

வருணாச்சிரம தர்மத்தின் அக்கிரமங்களுக்கு நியாயம் கற்பிப்பதும் நமது இந்து மதம் தான்!

Link to comment
Share on other sites

சாதிபிரச்சனையால் மதம் மாறியிருந்தாலும் அவரின் நிலை மாறபோவதில்லை...எந்த உயர்ஜாதி முஸ்லீமும் ( :) ) அவருக்கு பெண் கொடுக்கபோவதில்லை.... ஊருக்குள் அவரை பறையன் என்று அழைத்தவர்கள் அப்படியே தான் அழைப்பார்கள் (அல்லது இனி அவருடன் பழக மாட்டார்கள்...இதோடு அவரின் கலை பயணமும் ஒரு முடிவுக்கு வரும்....)

அவுசிலிருந்து இவரை நிகழ்ச்சி நடத்த அழைத்தவர்கள் இவரால் நொந்ததே மிச்சம்...இவரின் குணத்திற்கு இவரால் முஸ்லீம்களுக்கும் கெட்டபெயர் தான் ஏற்படும்....நான் நினைக்கிறன் இவர் யாரும் மலேசிய பெண்ணுக்கு நூல் விடுகிறாராக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இறையாகிய சிவனை வணங்கியவர்  இப்ப கொஞ்சம் முன் ஏறி முடியின் பிறையை மட்டும் தொழப் போறார்... தொழட்டும் வாழ்த்துக்கள்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அவரவர் சுதந்திரம். சுய உரிமை. இதில கருத்துச் சொல்லுறதே தப்பு. வாழ்த்துக்கள் யுவன். :icon_idea::)

Link to comment
Share on other sites

இது அவரவர் சுதந்திரம். சுய உரிமை. இதில கருத்துச் சொல்லுறதே தப்பு. வாழ்த்துக்கள் யுவன். :icon_idea::)

உண்மையிலும் உண்மை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அவரவர் சுதந்திரம். சுய உரிமை. இதில கருத்துச் சொல்லுறதே தப்பு. வாழ்த்துக்கள் யுவன். :icon_idea::)

 

உங்கள் நிலைதான் எனதும்

ஆனால்

இதற்குள்

தமிழனும்

சாதியும்

அவனின் மதமும் இழுத்து வைத்து அறுக்கப்படுவதையும் கண்டிக்கின்றேன்............. :(

Link to comment
Share on other sites

யுவன் சங்கர் ராஜா என்ன விஷிட்டாத்வைதம் செய்த ஸ்ரீ ஸ்ரீமத் ராமானுஜர் வழி வந்த மடத்தை சேர்ந்த ஆச்சாரியரா? அத்வைதம் மடத்தை சேர்ந்த அடுத்த வாரிசா அல்லது சம்பந்தர் ஆரம்பித்த மதுரை ஆதீன மடத்தின் செல்ல பிள்ளையா?
அவன் இஸ்லாத்தில் சேர்ந்தால் நம் சனாதன தர்மம் அழிந்தா போக போகிறது? 

ஆயிரம் வருட காலங்களாக கஜினி, பாபர், அவுரங்கசீப் ஜகாங்கீர் போன்ற பலர் செய்த மதம் மாற்றம் மூலம் அழியாத நம் சனாதனம், இந்த ஒரு மனிதன் மாதம் மாறியதால் அழிந்து விடவா போகிறது? எதுவும் நடக்க போவதில்லை.. இன்று மதம் மாறிய அவன், என்றாவது ஒருநாள், அதற்காக வருத்த படுவான்.. ஆனாலும், மதம் மாறியது அவன் விருப்பம்,. அதை கேள்வி கேட்கவும் விமர்சிக்கவும் நம்மில் எவருக்கும் உரிமை இல்லை. காரணம் இது கட்டாய மதமாற்றம் அல்ல.. தானே விரும்பி ஏற்று கொண்ட மதமாற்றம்.. 

சரி, காலை ஏழு மணிக்கு முகநூல் திறந்து பார்த்தேன்.. மதியம் மீண்டும் பார்த்தேன்.. பலர் நூற்று கணக்கான கருத்துக்கள் மூலம், யுவனை, சகட்டு மேனிக்கு திட்டி உள்ளனர் கூடவே இஸ்லாத்தையும் கடுமையாக கேவலமாக, ஆபாசமாக விமர்சித்தும் உள்ளனர்.. 

அதை பற்றி சிறிது யோசித்து பார்த்தேன்..இஸ்லாமிய மதம் இவ்வளவு கேவலமாக விமர்சிக்க படும் அளவுக்கு என்ன காரணம்? யார் காரணம்? 

பதிலை எப்படி தேடினாலும், எவ்வளவு ஆராய்ந்தாலும், எனக்கு கிடைத்த விடை ஒன்றுதான்.. இஸ்லாம் சம்பாதித்த அனைத்து கெட்ட பெயர்களுக்கும் காரணம் இஸ்லாத்தின் வழிமுறைகளும், இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளும் தான்.. 

உன் மதம் உனக்கு என் மதம் எனக்கு என்ற அழகிய வசனம் உள்ளது. ஆனால், அதன் படி அவர்கள் வாழ்ந்தார்களா? மற்றவர் மதங்களை மதித்தார்களா? இல்லையே.! தன மார்க்கம், ஐந்து வேலை தொழுகை, நோன்பு புனித பயணம் என்று இருந்திருந்தால், இங்கு எவர் இஸ்லாத்தை வெறுக்க போகிறார்கள்? மதித்து அல்லவா இருந்திருப்பார்கள். ஆனால், நடந்தது என்ன? 

உலகில் எங்கு சென்று வாழ்ந்தாலும் அங்கு ஏற்கனவே வேர் விட்ட மதங்களை நம்பிக்கைகளை அழித்தார்கள். மற்றவர் வழிபாட்டு தளங்களை தகர்த்தார்கள். செல்வங்களை கொள்ளை அடித்தார்கள்.. தன நம்பிக்கைகளை ஏற்காத பட்சத்தில் கொலைகள் செய்தார்கள்.. படை பலம் அல்லது பெரும்பான்மை மக்கள் பலம் இருந்தால்,வழுக்கட்டாயமாக தங்கள் மதத்தை திணித்தார்கள்.. இது உலகம் முழுதும் நடந்து முடிந்த சரித்திரம்.. பாரதம் உட்பட.ஒருகாலும் மறுக்க முடியாது.. 

ஆனால், இவ்வளவும் நடந்த பிறகும், இன்று வரை , அப்படிபட்ட சம்பவங்கள் நடக்கவே இல்லை என்று பொய்கள் சொல்கிறார்கள் .அன்று பெரும் அக்கிரமங்கள் செய்த தன மத முன்னோடிகளை பெரிதும் பாராட்டுகிரரகள் . இன்று சிறுபான்மை மக்களாக இருந்தாலும், என்றாவது ஒருநாள், நம் மதம் இந்த நாட்டில் பெரும்பான்மை மதமாக ஆகும் என்ற பேராசையில் உள்ளார்கள். இந்திய இஸ்லாமிய நாடாக ஆகும் என்று நினைக்கிறார்கள். அதனால், எந்த விலை கொடுத்தாவது, இந்த நாட்டின் ஆதி தர்மத்தை எப்படியாவது அழிக்க எண்ணுகிறார்கள்..திராவிட நாத்திக, கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கும் இவர்கள் மத கொள்கைகளுக்கும் பெரும் வேறுபாடு இருந்தாலும், ஹிந்து தர்மத்தை அழிக்க வேண்டும் கேவலபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் அவர்களுடன் கை கோர்த்து உள்ளனர்.. அவர்கள் பேசும் எழுதும் அனைத்து பொய்களுக்கும் ஆபாசங்களுக்கும் துணை போகின்றனர்.. 

தன மதத்தவன் செய்த தவறுகளை, கொலைகளை, பயங்கரவாதங்களை கண்டிப்பதில்லை. அவர்கள் மார்கத்துகாக செய்கிறார்கள் என்று மேலும் மேலும் அவர்களுக்கு துணை போகின்றனர். அந்த பயங்கரவாத செயல்கள் எல்லாம் மற்று மதத்தவர் செய்தார்கள் என்று பழியை மற்றவர் மீது சுமத்தி விட்டு, நல்லவர் வேஷம் போடுகின்றனர்.. 

இஸ்லாம் அல்லாதவர் மதம், நம்பிக்கை, கலாச்சாரம், இனம் மொழி, போன்ற எதையும் நம்புவதில்லை. மதிப்பதில்லை அவைகளில் ஏளான பார்வை. இஸ்லாம் தவிர வேறு எதுவும் இருக்கவே கூடாது. ஆனைத்தும் அழிய வேண்டும்..வேரோடு பிடுங்கி எரிய வேண்டும்.. சுவடே இருக்க கூடாது.. நமக்கு மட்டும் சொர்க்கம்.. மற்றவர்களுக்கு மீளா நரகம்.. நம் இறைவன் மட்டுமே இறைவன்.. மற்றவர்கள் எல்லாம் சாத்தான்கள்.. தங்கள் வேதம் மட்டுமே உண்மை.. மற்றவர்கள் வேதங்கள், பொய்கள்.. அல்லது திருத்த பட்டது.. அல்லது இறைவன் அளித்தது அல்ல. அரேபியாவில் நடந்து, தங்கள் வேதத்தில் சொல்ல பட்டது மட்டும் உண்மை.. மற்ற நாடுகளில், முக்கியமாக பாரதத்தில் நடந்த சம்பவங்கள்..அவைகளை சொல்லும், வேதபுராண இதிகாசங்கள் அனைத்தும் கட்டு கதைகள். இருக்க கூடாது .. இருக்கவே கூடாது.... அனைத்தையும் அழிக்க வேண்டும்... ஒரே வழி புனித போர். ஜிஹாத்... இறைவனின் பெயரால், ஜிஹாத்.. அவன் பெயரால், கொலைகள் செய்தாவது, அவன் மார்கத்தை பரப்ப வேண்டும் .இப்படியாக அனைத்து மதம், நம்பிக்கை கலாசாரம் அழித்துவிட்டு.. உலகம் முழுவதும் ஒரே மார்க்கம்.. அதன் பிறகு.. அழிப்பதற்கு வேறு எதுவும் இல்லையெனில்.. தங்களுக்குள் ஒருத்தரை ஒருத்தர் அழித்து கொண்டு., அல்லாவின் சொர்கத்தில் கன்னிகைகளை அனுபவக்க வேண்டியதுதான்.. இதுதான் மும்மீனின் பிறவி கடமை.. 

இப்படி பட்ட ஒரு மார்கத்தை , அதை பின்பற்றுபவர்களை எவனாவது மதிப்பானா? தன மதத்தில் ஒருவன் இந்த மதத்தில் இணைந்தால், காரி துப்பாமல் வேறு என்ன செய்வான்? 

நன்கு சிந்தித்து பாருங்கள். இஸ்லாம் படுகேவலமாக விமர்சிக்க படுவதற்கு யார் காரணம்? இஸ்லாத்தின் வழிமுறைகளும், இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளும் காரணம்.. வேறு எவரும் எதுவும் அல்லவே அல்ல..!

https://www.facebook.com/kambathasan/posts/721518537866698:0

Link to comment
Share on other sites

பெற்ற தாய்க்கு மதத்தை ஒப்பிடுவதுதான் தற்போதைய புலித்தேசீயமோ?

எந்த மதத்தில் இருப்பது என்பது அவனவனது தனிப்பட்ட விருப்பம், அதில் மூக்கை நுளைக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

தாய்நாட்டை விட்டு ஓடிவந்த நிலையே தாயை வித்த நிலை தவிர மதம் மாறுவதில்லை. வாயைத் துறக்க முதல் உங்கள் நிலை என்னவென்று புரிந்துகொள்ளுங்கள்.

தற்போது உங்கள் நிலை ஒன்றும் ஆயுதங்களை கையில் வைத்து அதிகாரம் பண்ணி ஒரே நாளில் முஸ்லீம்களை அகதியாக்கிய சூழலில் இல்லை மாறாக நலமடிக்கப்பட்ட நாம்பன்களில் நிலை. தாயகத்தில் அடிமையும் பரதேசத்தில் இரண்டாம் தரப் பிரசைகளுமாகும். கனவுலகத்தில் அரசனாக வாழ் இல்லையேல் ரவுடியாக வாழ் எப்படிவேண்டமானாலும் வாழ் ஆனால் யதார்த்தத்தில் உனது நிலையை அறிந்து கருத்தைச் முன்வையுங்கள்.

புலி எங்கேயும் சொல்லவில்லை மதம் மாறு என்று. (சில வேலை டகளஸ் சொல்லி இருப்பான் இனத்தை காட்டிக் கொடு. சமயத்தை வில் .மொழியை மிதி.என்று)கிறிஸ்தவன் கிரிச்தவனாகவெ இருக்கட்டும் சிவன் சிவனாகவே இருக்கட்டும் முஸ்லிம் முளிமாகவே இருக்கட்டும் எதுவே என் கொள்கை. எனக்கு என் சமயம் தாய் போன்றது. நீரும் மதம் மாறிய அறிவாளி போல் உள்ளது அதுதான் கோபம் ரோம கொப்பளிக்கிறது.  சோத மதத்தில் பிழைகள் இருந்தால் அதை திருத்த வேண்டும் அதை விடுத்து என்னொரு மதத்தை நல்லது என்று கோடி பிடிப்பவன் சொந்த தாயை விற்பவனே . இதகுல் புளிய இழுக்கும் உம்மை போன்றவர்களை என்ன பண்ணுவது தெரியவில்லை.  உமது அறிவு அவ்வளவு தான் போய் அடுத்த வேலைய பாரும்.

நான் மதம் மாறும்  யாரையும் மனிதனாக மதிப்பதில்லை. யாராக இருந்தாலும். சைவமும் தமிழும் இரு கண்கள் என்று வாழ்பவன் நான் அதுவே என் மார்க்கம் பிற மதத்தை மதிப்பேன் ஆனால் மதம் மாருபவர்களையும் மாற்றுபவர்களையும் நான் ஒரு பொது மதிப்பதில்லை. அவர்களால் தான் இந்த உலகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் .

Link to comment
Share on other sites

பெற்ற தாய்க்கு மதத்தை ஒப்பிடுவதுதான் தற்போதைய புலித்தேசீயமோ?

 மதம் மாறுபவர்கள் பெற்ற தாயை விற்பவர்கள் தான். இந்த நாய பெறும் போது பிரசவ வலியால் அந்த தாய் அல்லா என்று கூப்பிடவில்லை.இதற்குள் புலி எங்கு வந்தது? வேணும் என்றால் டக்ளசை துணைக்கு கொண்டு வாரும்

எந்த மதத்தில் இருப்பது என்பது அவனவனது தனிப்பட்ட விருப்பம், அதில் மூக்கை நுளைக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

அப்பிடி என்றால் ஆவன் ஆணாக பிறந்தவன் பெண்ணாக மாறி இருந்தால் அதைப் பற்றி நான் கவலை கொள்ள மாட்டேன் . எமது சமயத்தை இன்னொரு கேடு கேட்ட சமயத்திடம் விற்ற படியால் அது பற்றி கருத்து சொல்ல எனக்கு சுதந்திரம் இருக்கு(அப்பிடி பார்த்தால் எனது கருதிட்குல் மூக்கு நுழைக்கும் உமக்கும் அந்த அருகதை இல்லை)

தாய்நாட்டை விட்டு ஓடிவந்த நிலையே தாயை வித்த நிலை தவிர மதம் மாறுவதில்லை. வாயைத் துறக்க முதல் உங்கள் நிலை என்னவென்று புரிந்துகொள்ளுங்கள்.

(இதற்கு நீரே உதாரணம். தாய் நாட்டை விட்டு வந்ததில் உமக்கும் பங்குண்டு. அதற்க்காக நாம் எம் இனத்தை காடி கொடுக்கவில்லை. யாரிடமும் விலை பேசவில்லை. உம்முடன் ஒப்பிடும் போது நான் இன்னும் என் இனம் சார்ந்தே வேலை செய்கிறேன் .)

தற்போது உங்கள் நிலை ஒன்றும் ஆயுதங்களை கையில் வைத்து அதிகாரம் பண்ணி ஒரே நாளில் முஸ்லீம்களை அகதியாக்கிய சூழலில் இல்லை மாறாக நலமடிக்கப்பட்ட நாம்பன்களில் நிலை. தாயகத்தில் அடிமையும் பரதேசத்தில் இரண்டாம் தரப் பிரசைகளுமாகும். கனவுலகத்தில் அரசனாக வாழ் இல்லையேல் ரவுடியாக வாழ் எப்படிவேண்டமானாலும் வாழ் ஆனால் யதார்த்தத்தில் உனது நிலையை அறிந்து கருத்தைச் முன்வையுங்கள்.

கண்ணாடி முன் நின்று உங்கள் முகத்தை பார்த்து சொல்லு

 

Link to comment
Share on other sites

புலி எங்கேயும் சொல்லவில்லை மதம் மாறு என்று. (சில வேலை டகளஸ் சொல்லி இருப்பான் இனத்தை காட்டிக் கொடு. சமயத்தை வில் .மொழியை மிதி.என்று)கிறிஸ்தவன் கிரிச்தவனாகவெ இருக்கட்டும் சிவன் சிவனாகவே இருக்கட்டும் முஸ்லிம் முளிமாகவே இருக்கட்டும் எதுவே என் கொள்கை. எனக்கு என் சமயம் தாய் போன்றது. நீரும் மதம் மாறிய அறிவாளி போல் உள்ளது அதுதான் கோபம் ரோம கொப்பளிக்கிறது.  சோத மதத்தில் பிழைகள் இருந்தால் அதை திருத்த வேண்டும் அதை விடுத்து என்னொரு மதத்தை நல்லது என்று கோடி பிடிப்பவன் சொந்த தாயை விற்பவனே . இதகுல் புளிய இழுக்கும் உம்மை போன்றவர்களை என்ன பண்ணுவது தெரியவில்லை.  உமது அறிவு அவ்வளவு தான் போய் அடுத்த வேலைய பாரும்.

நான் மதம் மாறும்  யாரையும் மனிதனாக மதிப்பதில்லை. யாராக இருந்தாலும். சைவமும் தமிழும் இரு கண்கள் என்று வாழ்பவன் நான் அதுவே என் மார்க்கம் பிற மதத்தை மதிப்பேன் ஆனால் மதம் மாருபவர்களையும் மாற்றுபவர்களையும் நான் ஒரு பொது மதிப்பதில்லை. அவர்களால் தான் இந்த உலகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் .

//மதம் மாறுபவர்கள் பெற்ற தாயை விற்பவர்கள் தான். இந்த நாய பெறும் போது பிரசவ வலியால் அந்த தாய் அல்லா என்று கூப்பிடவில்லை.இதற்குள் புலி எங்கு வந்தது? வேணும் என்றால் டக்ளசை துணைக்கு கொண்டு வாரும்

அப்பிடி என்றால் ஆவன் ஆணாக பிறந்தவன் பெண்ணாக மாறி இருந்தால் அதைப் பற்றி நான் கவலை கொள்ள மாட்டேன் . எமது சமயத்தை இன்னொரு கேடு கேட்ட சமயத்திடம் விற்ற படியால் அது பற்றி கருத்து சொல்ல எனக்கு சுதந்திரம் இருக்கு(அப்பிடி பார்த்தால் எனது கருதிட்குல் மூக்கு நுழைக்கும் உமக்கும் அந்த அருகதை இல்லை)

(இதற்கு நீரே உதாரணம். தாய் நாட்டை விட்டு வந்ததில் உமக்கும் பங்குண்டு. அதற்க்காக நாம் எம் இனத்தை காடி கொடுக்கவில்லை. யாரிடமும் விலை பேசவில்லை. உம்முடன் ஒப்பிடும் போது நான் இன்னும் என் இனம் சார்ந்தே வேலை செய்கிறேன் .)

கண்ணாடி முன் நின்று உங்கள் முகத்தை பார்த்து சொல்லு//

உங்கள் கருத்துக்களிலேயே உங்கள் புலிவால் ரவுடித்தனம் தெரியுது..

-புலி எங்கேயும் சொல்லவில்லை மதம் மாறு என்று சரி புலி. எங்கயாவது மாறவேண்டாம் எண்டு சொல்லியிருக்கின்றதா?

மதத்தை தாய்நாட்டுக்கு ஒப்பிடுவது உங்கள் மடமைத்தனம். அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று என்ன அவசியம் உள்ளது? உங்களைப்போல் மதவெறி உள்ளவர்களாலேயே ஒரு தாய்நாடு அமைவது தடைப்பட்டது.

மதம் தாய்நாடு போன்றது என்றால் இந்து தமிழனுக்கு ஒரு தமிழீழம் கிறிஸ்த்தவத் தமிழனுக்கு ஒரு தமிழீழம் இஸ்லாமியத் தமிழனுக்கு ஒரு தமிழீழம் சாத்தியமா?

இவ்வாறு மத வெறி பிடித்த உங்களுக்கு இஸ்லாமியத் தமிழரை குறை சொல்ல என்ன தகுதி உள்ளது?

உங்களுக்கு இன்றைக்கு மதம் தாய் போன்றது அதே போல் பிரதேசவாதம் தாய் போன்றது அதற்கடுத்து உங்களுக்கு உங்கட சாதி தாய்போன்றது. இந்த அடிப்படையில் ஒரு ஐம்பது அறுபது தாய்நாடு அமைக்கலாமோ?

போராட்டம் ஏன் சிதைந்த சின்னபின்னமானது என்பதற்கு உங்கள் கருத்துக்களே பெரிய சாட்சி. ஆனால் புலி கூட இவ்வாறு மோசமான கருத்தை கொண்டிருக்கவில்லை.

நீங்கள் புதுசா என்ன காட்டிக்கொடுக்க விலைபேசவேண்டியுள்ளது? உங்கள் மத வெறியே இனத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி சிங்களவனின் கனவை நனவாக்கிவிட்டதே புதுசா என்னத்தை காட்டிக் கொடுக்கின்றது? மதவாதமாகவும் பிரதேசவாதமாகவும் தமிழரை சிதைத்ததை விடவா ஒரு இனத் துரோம் உள்ளது?

என்னுமொரு சமயத்தை கேடுகெட்ட மதம் என்பதற்கு தாங்கள் கொண்டுள்ள தகுதி யாது? மனுதர்மத்தை கட்டிக் காக்கும் தகுதியா அல்லது மதம் ஊடாக சாதீயத்தை தக்கவைக்கும் தகுதியா இல்லை பல மில்லியன் மக்களை தீண்டத்தகாதவர்களாக நிலுவையில் வைத்திருக்கும் திறமையா இல்லை இந்தியாவின் மதம் சார் அறிவு பற்றி அற்ப அறிவேனும் உள்ளதா?

உங்கள் மதம் சாதீயம் பிரதேசவாதம் கலந்த வெறிதான் சொந்தத்தாயை சிங்களவனுக்கு விற்றது. அதையே நீங்கள் உங்கள் வாயால் சொல்லியுள்ளீர்கள். அந்தவகையில் உங்களுக்கு நன்றிதான் சொல்லவேண்டும். புலிக்குச் சேறடிக்க எதிரிகள் தேவையில்லை. நீங்களே போதும். தொடரட்டும் உங்கள் சேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அவரவர் சுதந்திரம். சுய உரிமை. இதில கருத்துச் சொல்லுறதே தப்பு. வாழ்த்துக்கள் யுவன். :icon_idea::)

 

மதம் மாறுவது அவரவர் சுதந்திரம் சுய உரிமை? 
 
இது மரம்விட்டு மரம் தாவுவது போல் இயக்கம் மாறுபவர்களுக்கும் பொருந்துமா?  :rolleyes:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைக்கோடியிலிருக்கும் சுப்பனோ, குப்பனோ மதம் மாறினால் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை.

மனம் பிறழ்ந்து மாறி நடந்தால் அது அவர்களின் விருப்பம். யாரும் மதம் மாற வற்புறுத்தவில்லையே?

பிரபலங்களாயிருந்தாலும், 'விட்டொழிந்தது கழுதை' என கண்டுகொள்ளாமலிருந்தால், இந்த கூச்சலுக்கு அவசியமிருக்காது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை,

யுவன்சங்கர் ராஜா, சுஜயா என்ற பெண்ணை முதலில் காதல் திருமணம் செய்தார். கருத்துவேறுபாடு காரணமாக இரண்டுபேரும் பிரிந்துவிட்டார்கள். சுஜயா, யுவன்சங்கர் ராஜாவிடமிருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு வெளிநாடு போய்விட்டார்.

 

 

http://www.dailythanthi.com/2014-02-09-Film-composer-Yuvan-Shankar-Raja%252C

 

யுவன்சங்கர் இராஜாவின் முதல் மனைவி இலண்டனில் வசித்த இலங்கைப் பெண்மணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மதம் மாறினபடியால் இந்துமதம் உலகில் அழியப்போகுதே.....ஐயோ காப்பற்றுங்கள் ...யுவனை தடுத்துநிறுத்துங்கள்.....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மதம் மாறுவது மனிதனது  சுய உரிமை? 
மதம் பிடிக்காமல் இருந்தால் சரி.
 
சில வாரங்களுக்கு முன் இதனால்தான் இளையராஜாவுக்கு உடல்நலக் குறை ஏற்பட்டதோ!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எந்த மதத்தை கடைப் பிடிப்பது என்பது அவரவர் விருப்பம்.ஆனால் இங்கே சிலர் யுவன் சாதியத்தால் மதம் மாறுகின்றார் என்று சொல்வது தான் வேடிக்கை.
 
தகப்பன் இதே சாதியத்திற்குள் இருந்து  கொண்டு சாதிக்கவில்லையா?...என்னவோ கிரிஸ்தவத்திலேயோ,முஸ்லீம் மதத்திலேயே சாதிப் பிரிவுகளே இல்லை என்ட மாதிரி இங்கே சிலர் எழுதுகின்றனர்.
 
அவர் எந்த சுயநலத்திற்காக மதம் மாறினாரோ அல்லாவுக்குத் தான் வெளிச்சம்.தங்கட சுயநலத்திற்காக மதத்தை கையில் எடுப்பவர்களை சுட்டுத் தள்ளனும்.தங்கள் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இப்படிச் செய்வார்கள்.மதம் மாறினால் ரகுமானாகலாம் என்று நினைத்தாரோ என்னவோ ^_^
Link to comment
Share on other sites

அநேகமாக அவருக்கு புது காதலி கிடைச்சிருப்பா.. அதுக்கு மதம் மாறியிருப்பார்.. :rolleyes:

Link to comment
Share on other sites

35 வயதிற்குள் இரண்டு பெண்டாட்டி. எப்படியான பரதேசியாக இருந்தாலும் தனது மத மாற்றத்திற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லி, இந்து மதம் இழிவு படுத்தப்படுவதை தவிர்த்திருந்திருக்கலாம். மேலே ஒரு உறவு "மதம் மாறுவது தனது தாயை தள்ளிவைப்பது" என்று சொன்ன கருத்து இந்த மனிதர் நடந்து கொண்டமைக்கு முழுவதும் பொருத்தம். 

 

இவனைவிட சாதிவெறி பார்ப்பணியர்கள் உயர்ந்த மனநிலையில் உள்ளவர்கள். 

 

இதில் எங்கே சாதி?

 

https://www.youtube.com/watch?v=CIQTlvvd5CY#t=64

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

35 வயதிற்குள் இரண்டு பெண்டாட்டி. எப்படியான பரதேசியாக இருந்தாலும் தனது மத மாற்றத்திற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லி, இந்து மதம் இழிவு படுத்தப்படுவதை தவிர்த்திருந்திருக்கலாம். மேலே ஒரு உறவு "மதம் மாறுவது தனது தாயை தள்ளிவைப்பது" என்று சொன்ன கருத்து இந்த மனிதர் நடந்து கொண்டமைக்கு முழுவதும் பொருத்தம். 

 

இவனைவிட சாதிவெறி பார்ப்பணியர்கள் உயர்ந்த மனநிலையில் உள்ளவர்கள். 

 

இதில் எங்கே சாதி?

 

https://www.youtube.com/watch?v=CIQTlvvd5CY#t=64

 

உண்மைதான் மல்லையார்

ரதியின் கருத்துக்கு பச்சை  முடிந்தது

அதனால் உங்களது கருத்துக்கு எழுதுகின்றேன்

 

சாதியால் பாதிக்கப்பட்டார் என்பது ஏமாற்று

காரணம்

இளையராசாவின் மகனுக்கு அந்தப்பிரச்சினை  இருக்க  வாய்ப்பே இல்லை 

அத்துடன்

அப்படி  இருப்பின் தன் மதத்துடன் இருந்தவாறு

இந்தியாவின்  எந்தப்பகுதியிலும்

ஏன் விரும்பினால்உலகின் எந்தப்பகுதியிலும்

உயர்நிலையில் இவரால்  வாழமுடியும்

அதற்கான சகல  வசதிகளும் அவரிடமும் அவரது குடும்பத்திடமும் உண்டு.

 

அப்புறம்

இந்துவாக  எல்லாவற்றையும் தெரிந்து அறிந்து புரிந்து கொண்டார்  என்றால்

அதுவுமில்லை

 

பாவம்

இளையராசா....

இரவு பகலாக உழைத்த காசும்

பெயரும் போச்சு

அழிப்பதற்க்கென்றே  வெளிக்கிட்டிருக்குது....... :(  :(  :(

Link to comment
Share on other sites

பாவம்

இளையராசா....

இரவு பகலாக உழைத்த காசும்

பெயரும் போச்சு

அழிப்பதற்க்கென்றே  வெளிக்கிட்டிருக்குது....... :(  :(  :(

இளையராஜாவின் பெயர் எப்படி கெட்டுப்போகும்? அவருக்குள்ள ஒரே பெருமை அவரது இசை வல்லமை. மகன் மதம் மாறுவதால் அதற்கென்ன ஆகிவிடப்போகுது? :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் பெயர் எப்படி கெட்டுப்போகும்? அவருக்குள்ள ஒரே பெருமை அவரது இசை வல்லமை. மகன் மதம் மாறுவதால் அதற்கென்ன ஆகிவிடப்போகுது? :huh:

 

இளையராஜாவுக்கு மாரடைப்பு  வந்ததாக  ஒரு தகவல்...??? :(  :(  :( 

 

தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட..............??? :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறப்பினால் வரும் மதத்தையும் சாதியையும் காவிக்கொண்டு திரியவேண்டிய அவசியமில்லை. பிடிக்காவிட்டால் மதம் மாறவும் சாதி அடையாளத்தைத் துறக்கவும் அப்படியானவர்களை ஏற்றுக்கொள்ளவும் கூடிய சமூகம் இருக்கவேண்டும். இதை மறுப்பவர்கள் ஏதோ ஒன்றின் மீது வெறிபிடித்துத்தான் இருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறப்பினால் வரும் மதத்தையும் சாதியையும் காவிக்கொண்டு திரியவேண்டிய அவசியமில்லை. பிடிக்காவிட்டால் மதம் மாறவும் சாதி அடையாளத்தைத் துறக்கவும் அப்படியானவர்களை ஏற்றுக்கொள்ளவும் கூடிய சமூகம் இருக்கவேண்டும். இதை மறுப்பவர்கள் ஏதோ ஒன்றின் மீது வெறிபிடித்துத்தான் இருக்கின்றனர்.

 

 

இங்கே  பேசப்படுவது

அவர் போனதல்ல...

அவர் போனதற்கு நாம் காரணம் என்பது...... :(  :(  :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.