Jump to content

2014 க.பொ.த.சாதாரணதரம் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான உதவி.


Recommended Posts

2014 க.பொ.த.சாதாரணதரம் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான உதவி.

 

2014 க.பொ.த.சாதாரணதரம் தோற்றும் போரால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களிற்கான நேசக்கரம் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் 6மாத பயிற்சி வகுப்புகளை நடாத்தவுள்ளோம்.

விஞ்ஞானம், இயந்திரவியல் துறைகளுக்கான மாணவர்களை அதிகரிக்கும் வகையில் எம்மால் நடத்தப்பட்டு வரும் பயிற்சி வகுப்புகளில் கடந்த வருடமும் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வருடம் அனைத்துப் பாடங்களுக்குமான பயிற்சிகளை வழங்கவுள்ளோம்.

இம்மாணவர்களுக்கான இலவச கற்றல் பயிற்சி வகுப்புகளை எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தினர் கிராமங்கள் தோறும் செயற்படுத்தி வருகின்றனர்.

இவ்வருடம் முதல் குறைந்தது ஆறுமாத காலம் பயிற்சி வகுப்புகளை நடாத்துவதென தீர்மானித்துள்ளோம். நீண்ட கால பயிற்சி வகுப்புகள்மூலம் மாணவர்களின் அடைவுமட்டத்தினை அதிகரிக்க முடியும்.

இவ்வருடம் எம்மால் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தின் பிரதேசங்களான கதிரவெளி , வாகரை , இலுப்பட்டிச்சேனை , கரடியனாறு , உன்னிச்சை , முனைக்காடு , வெல்லாவெளி , மண்டுர் ,செட்டிபாளையம், வவுணதீவு , தன்னாமுனை , மூதூர் , கோரகல்லிமடு , பொத்துவில் ஆகிய இடங்களில் 01.06.2014 பயிற்சி வகுப்பகளை ஆரம்பிக்க ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளோம். இத்திட்டத்திற்கான உதவிகளைப் பொறுத்தே எம்மால் வகுப்புகளை நடாத்த முடியும்.

ஒரு நிலையத்திற்கு மாதம் 7ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது. ஆறுமாதங்களுக்கும் ஒரு நிலையத்திற்கான செலவு 42ஆயிரம் ரூபாய்கள் (அண்ணளவாக 250€) மாதம் 12 வகுப்புகள் நடாத்தப்படும். ஒரு நிலையத்தில் 5பாடசாலைகளை உள்ளக்கிய கற்பித்தல் நடைபெறும்.

10 நிலையங்களை ஒரு மாதம் நடாத்தவதற்கு 70ஆயிரம் ரூபா(அண்ணளவாக 410€)தேவைப்படுகிறது. இதுவரைகாலமும் எமது ஆதரவில் பயனடையும் பல்கலைக்கழக மாணவர்களே இத்திட்டத்தை செயற்படுத்துவார்கள். இப்பணியில் எவ்வித கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்ளாமல் தங்களது ஆற்றலை அடுத்து வரும் ஆற்றலாளர்களுக்கு வழங்கும் எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களுக்கு உங்கள் ஆதரவினைத் தந்துதவுங்கள்.

பரீட்சைகள் நெருங்கும் நேரத்தில் மட்டும் நடாத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் பெருமளவு வெற்றியை அடைய முடியாதுள்ளது. இதனால் நீண்டகால கற்பித்தல் முறைமையை அறிமுகம் செய்கிறோம்.

உங்கள் உதவிகள் மூலம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மாணவர்களின் முன்னேற்றமும் அவர்களது எதிர்காலமும் சிறப்படையும். எனவே உங்கள் உதவிகளைத் தந்துதவி எங்கள் மாணவர்களின் கல்வியை முன்னேற்ற முன்வாருங்கள்.

உதவுதற்கான தொடர்புகளுக்கு :-

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

Paypal Account – nesakkaram@gmail.com

Telephone: Shanthy – +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

http://nesakkaram.org/ta/2014-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A-%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதவி செய்ய முன்வருபோர், தெரிவு செய்யப்பட்ட இந்தத் திட்டத்திற்குதான் (2014 க.பொ.த திட்டம்) தங்கள் அன்பளிப்பு என்று எவ்வாறு வகைப்படுத்துவது?

நேசக்கரத்தின் வங்கிக்கணக்கில் இவ்வாறு வேறுபடுத்த வழிவகை உண்டா?

Link to comment
Share on other sites

உதவி செய்ய முன்வருபோர், தெரிவு செய்யப்பட்ட இந்தத் திட்டத்திற்குதான் (2014 க.பொ.த திட்டம்) தங்கள் அன்பளிப்பு என்று எவ்வாறு வகைப்படுத்துவது?

நேசக்கரத்தின் வங்கிக்கணக்கில் இவ்வாறு வேறுபடுத்த வழிவகை உண்டா?

 

Vani வகைப்படுத்தல் என எதனைக் குறிக்கிறீங்கள்  ? 

Link to comment
Share on other sites

மூதூர் பிரதேசத்துக்கான ஒரு நிலையத்திற்கான ஆறுமாதங்களுக்கு உரிய 250€க்களை தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத உறவு ஒருவர் முன்வந்து வழங்கியுள்ளார். பலமுறை பெயரை மறைத்து உங்கள் உதவியை தந்து வரும் உறவே உங்கள் உதவிக்கு மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

க.பொ.த.சாதாரணதரம் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான உதவிகளை எதிர்பார்க்கிறோம் உறவுகளே. மூதூர் பகுதிக்கு மட்டுமே உதவி கிடைத்துள்ளது. 

Link to comment
Share on other sites

நீங்கள் கிழக்கில தொடர்ந்து சுத்தினால் இது தான் நிலை. வன்னி என்டால் எல்லோரும் உடன பாய்வினம்.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது போல வன்னியிலும் செய்யலாம் Donkey. ஆனால் நீங்கள் ஒரு சென்ரருக்கான உதவியை தந்தால் நீங்கள் சொல்லும் இடத்தில் எங்களால் செயற்படுத்தலாம். 

 

ஏற்கனவே மூதூருக்கு உதவியவர் தானேதான் மூதூரை தெரிவு செய்து தனது உதவியை தந்தார். நீங்களும் அதுபோல உங்களுக்கு பிடித்த இடத்தை தெரிவு செய்து உதவுவீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

மேமாதம் முதல்வாரம் பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.