Jump to content

நான் என் குழந்தைகளுக்குச் சொல்லும் சிறுவர் கதைகள்: நிழலி


Recommended Posts

இரவில் படுக்கும் போது என் இரண்டு குழந்தைகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு கதைகள் சொல்வது வழக்கம். கதை கேட்பதற்காகவே இரண்டு பேரும் என்னுடன் படுக்க விரும்பி வருவினம். நான் கதை சொல்வதுடன் அவர்களையும் கதை சொல்ல வைப்பதுண்டு. மகனுக்கு 9 வயதாகுது என்பதால் அவன் தான் வாசித்த கதைகளை ஓரளவுக்கு நேர்த்தியாக சொல்வான். மகளுக்கு 4 வயது என்பதால் தனக்கு நடக்கும் சம்பவங்களை கோர்வையின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லி மெருகேற்றப் பார்ப்பாள். அவள் கதைகளில் அநேகமாக ஒரு Naughty boy வருவான். அது அவளது அண்ணனாகத் தான் இருப்பான்.

 

இப்படி, அவர்கள் என்னிடம் கதை கேட்கும் போது என்னால் நான் சின்ன வயதில் வாசித்த கதைகளை நினைவு வைத்து சொல்ல முடிவது இல்லை. என் ஞாபகத்தில் இருந்த சிறுவர் கதைகள்  எல்லாம் மறந்து விட்டன. அதுக்காக அப்பப்ப புதுக்கதைகளை இயற்றியோ அல்லது ஏற்கனவே கேட்ட கதைகளுக்கு புது விடயங்களை புகுத்தியோ கதை சொல்வது வழக்கம்.

 

அப்படிச் சொல்லும் சில கதைகளை இங்கு பகிரலாம் என்று நினைக்கின்றேன். இவை just சிறுவர் கதைகள் - இதில் எல்லாம் லொஜிக் பார்க்கக் கூடாது.  'அப்பாதான் பெரியவர்' என்ற அரசியலும் அங்கங்க இருக்கும் - பெண்ணிலைவாதிகள் கோபிக்க கூடாது. அத்துடன் நிறைய ஆங்கிலச் சொற்களும் வரலாம் - தனித் தமிழ் அபிமானிகள் மூஞ்சியை சுளிக்கக் கூடாது. இப்பவே சொல்லிட்டன்.

 

இனிக் கதைகள்:

 

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

 

1. நாய்க்குட்டியும் சீகல் பறவையும்:

 

ஒரு ஊரில ஒரு வீட்டில இரண்டு பிள்ளைகள் இருந்திச்சினம். ஒரு அண்ணண், ஒரு தங்கச்சி. . அவர்கள் இரண்டு பேரும் ஒரு நல்ல வடியான குட்டி நாய்க்குட்டியை வளர்த்திச்சினம். எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கின்ற  குட்டி நாய்க்குட்டியை விட வடிவான நாய்க்குட்டி அது.

 

அந்த ஊரில இல் ஒரு Thief வும் இருந்தார். இந்த நாய்க்குட்டியை எப்படியாவது களவெடுத்து ஆருக்காவது வித்துப் போட்டு நல்ல pepperoni pizza வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று plan போட்டு இருந்தார்.

 

ஒரு நாள் இந்தப் பிள்ளைகள் இரண்டு பேரும் அப்பாவுக்கு பக்கத்தில அப்பாவை கட்டிப் பிடிச்சுக் கொண்டு நல்லா இரவு நித்தா கொள்ளும் போது இந்த thief சத்தம் போடாமல் வந்து ஒரு பெரிய bag ஒன்றால நாய்க்குட்டியை சுத்திக் கொண்டு ஓடிப் போயிற்றார். நாய்க்குட்டியும் நல்லா நித்திரை கொண்டு கொண்டு இருந்ததால கத்தேல..

 

அடுத்த நாள் காலம தான் நாய்க் குட்டி எழும்பிப் பார்த்தது. ஐயோ என் Friends வீடு இது இல்ல, அவர்களையும் காணவில்லை....என்று அழத் தொடங்கி விட்டது. அதே மாதிரி விடிய எழும்பி நாய்க்குட்டியைத் தேடிப் பார்த்து விட்டு  அண்ணணும் தங்கச்சியும் காணவில்லை என்று அழுதிச்சினம்.

 

இப்படி இருக்கேக்கு, அந்த நாய்க் குட்டி ஒரு மரத்துக்கு கீழ படுத்து அழு அழு என்று அழுதுகொண்டு இருந்தது. அப்ப அந்த மரத்துக்கு மேல ஒரு seagull இருந்தது. அது ஏன் இந்த நாய்க்குட்டி அழுகுது என்று கீழ வந்து பார்த்து  'ஏன் பப்பி அழுகிறாய்' என்று கேட்டிச்சு. அதுக்கு அந்த நாய்க் குட்டி 'என்னை யாரோ இங்க வந்து போட்டிட்டினம்...எனக்கு திரும்பி வீட்ட போகத் தெரியாது..எனக்கு என் Friends வீட்ட போகவேண்டும்' என்று சொல்லி இன்னும் கூட அழுதுச்சு.

 

Seagull லுக்கு என்றால் நாயைப் பார்க்க பார்க்க பாவமாக இருந்தது. அது அச்சா சீகல். 'சரி அழாத பப்பி உனக்கு நான் ஹெல்ப் பண்றன்' என்று சொல்லி, "உன்னை மாதிரி உன் Friends சும் அழுதுகொண்டு இருப்பினம்... நான் போய் ஒவ்வொரு வீட்டாப் பார்த்து விட்டு வந்து கண்டு பிடிச்சு உன்னையும் கூட்டிக் கொண்டு போறன்'  என்று பறந்து ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போய் எட்டிப் பார்துச்சு.

 

ஆனால் ஒரு வீட்டிலும் அதால கண்டு பிடிக்க ஏலாமல் இருந்துச்சுது.

 

கடைசியாக tired ஆகி, ஒரு வீட்டு வாசலில போய் நிற்கேக்க அங்க இரண்டு சின்னப் பிள்ளைகள் நாய்க்குட்டியைக் காணேல என்று lot of அழுது கொண்டு இருந்திச்சினம். அவர்களைப் பார்த்து 'ஓ இவையள் தான் பப்பியின் Friends என்று கண்டு பிடிச்சு வீட்டு address சை வாசிச்சுக் கொண்டு எழும்பி பறந்து நாய்குட்டியிடம் போனது.

 

'பப்பி நான் உன் ப்ரெண்ட்ஸ் வீட்டை கண்டு பிடிச்சுட்டன் இரவைக்கு யாருக்கும் தெரியாமல் local road டால கூட்டிக் கொண்டு போறன் என்று சொன்னது, பப்பியும் ஓகே என்று சொல்லி அழுறதை நிப்பாட்டிச்சுது.

 

இரவு வந்ததும், Seagull தன் ஒரு செட்டையை பப்பியை பிடிக்கச் சொல்லிப் போட்டு, Slow ஆக நடந்து நடந்து அதன் Friends ட வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் விட்டிச்சு. நாய்க்குட்டியும் Thanks சொல்லிச்சுது.

 

பிறகு, விடிய அண்ணாவும் தங்கச்சியும் எழும்பி பல்லுத் தீட்ட போகும் போது  அவையள்ட நாய்க்குட்டியின் சத்தம் கேட்க.. ஹையா நாய்க்குட்டி வந்துட்டுது என்று துள்ளிக் கொண்டு போய் பார்த்திச்சினம். அங்க அவர்களின் நாய்க்குட்டி வாலை ஆட்டிக் கொண்டு சிரிச்சுக் கொண்டு நின்றிச்சு. இரண்டு பேருக்கும் நல்ல சந்தோசம். அதுக்கு பிறகு நாய்க்குட்டியோட சந்தோசமாக life ல இருந்திச்சினம்.

 

----------------------------------------------------------

Link to comment
Share on other sites

நல்ல விடயம்.. இதை அப்பிடியே தொடருங்கள்.. மற்றவர்களும் படித்து வீட்டில் ஒப்பேற்றலாம்.. :icon_idea:

Link to comment
Share on other sites

நிழலி அண்ணா கொப்பி றைட்ஸ் உரிமையை கெததியா எடுத்திடுங்கோ :lol: ......இன்று பலர் வீட்டில் இந்த கதைதான் பறக்கப்போகிறது - ஹாஹாஹா :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சுட்டுட்டன். எனக்கு அடுத்த வருடம் உபயோகப்படும்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீன  சிறுவர் கதை நல்லாயிருக்கு ... கொடுத்து வைச்ச குழந்தைகள் .எனக்கு.  tired..........அம் மா வோடு போய் படு என்று சொல்லாத  அப்பா ..... :D

Link to comment
Share on other sites

வரவேற்கப்பட வேண்டிய முயற்சி . பிள்ளைகளுடன் தொடர்பாடல் என்பது முக்கியம் . எங்களுக்கு சிறுவயதில் அம்மாச்சி அப்பாச்சி இருந்ததால் நாங்கள் இன்று எமது வாழ்வில் நேர்மையாக நடக்கின்றோம் . வருங்காலத்தையும் அவர்களுக்கு புரிந்த மொழியில் இப்படியான கதைகளால் செம்மையாக முடியும் .பொதுவாக அப்பாதான் குடும்பங்களில் கதைசொல்லியாக இருப்பார் . எனக்கு அப்பாச்சி தான் கதைசொல்லி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள். இக்கதையினைதான் நேற்று இரவு என்னுடைய பிள்ளைக்கு சொன்னேன்.

Link to comment
Share on other sites

சிறுவர்கள் கதைகள் அவர்களது எண்ணங்ளையும் ஆற்றலையும் வளப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. நிழலி உங்களைப்போல நானும் பிள்ளைகள் பாலர்பாடசாலை போகத் தொடங்கும் போது இப்படி கதைகள் சொல்ல ஆரம்பித்தேன். இதுபோன்ற கதைகள் இல்லை. நீதிக்கதைகள் 200வரையில் பிரதியெடுத்து வைத்து சொல்லுவேன்.

 

9வயதில் மகள் தானாக டொச்மொழிப்பாடத்திற்கான 4கதைகள் எழுதியிருந்தாள். டொச் ஆசிரியை பெற்றோர் சந்திப்பில் அதுபற்றி சொல்லி மற்றைய பெற்றோரையும் கதைகள் சொல்லுமாறும் பிள்ளைகளின் மொழியாற்றலையும் மேம்படுத்தும் எனக்கூறி மகளுக்கு தனது சார்பில் பரிசிலும் வழங்கியிருந்தா. அந்தக்கதைகளை வெப்சைற்றிலும் போட்டிருந்தேன். சேவர் அழிந்த போது அதுவும் இல்லாது போய்விட்டது.பழைய சீடிகளில் தேடுகிறேன். கிடைத்தால் இங்கு பதிவிடுகிறேன்.

 

இயன்றவரை பிள்ளைகளுக்கு சிறுவயதில் கதைகள் சொல்லிக்கொடுத்தல்  குழந்தைப்பாடல்கள் சொல்லிக்கொடுத்தல் அவர்களது ஆற்றல்களை மேம்படுத்தும் வல்லமையை கொடுக்கும். 12வயதின் பின்னர் எங்களுடைய கதைகளைக் கேட்கும் அளவு பிள்ளைகளுக்கு நேரம் வராது. படிப்புகள் அதிகரிக்க எங்களோடு மினக்கெடும் நேரமே குறைந்துவிடும். 
 
12வயது வரையும் இயன்றவரை பெற்றோர்கள் உணவூட்டுவது வரை இத்தகைய கதைகள் சொல்லுவதை வரை பிள்ளைகளுடன் அதிகம் மினக்கெடுவது நல்லம். ஆனால் இப்போது 6வயதிலேயே ரியூசனுக்கு அனுப்பியே தாய்மொழியைக்கூட கற்பிக்க தொடங்கியுள்ள அவசரமான உலகமாகீட்டுது. பிள்ளைகளுடனான நெருக்கத்தையும் இத்தகைய கதை சொல்லல் ஏற்படுத்தும்.
Link to comment
Share on other sites

2. பனிமனிதனும் பிள்ளைகளும்

 

ஒரு ஊரில அண்ணாவும் தங்கச்சியும் இருந்திச்சினமாம். அவர்கள் ஒரு நாள் நல்லா பனி கொட்டி முடிஞ்சு நல்லா வெளிச்சம் வந்த பிறகு வெளியில முற்றத்தில போய் ஒரு பெரிய snow man  செய்திச்சினம். அண்ணாவுக்கு நல்லா Craft செய்யத் தெரியும் என்றபடியால வடிவான ஒரு snow man மனிதனைச் செய்திச்சினம். அவர்ட தங்கச்சியும் நல்லா உதவி செய்தவா.  அவா அச்சாப் பிள்ளைதானே...அதான் குழப்படி செய்யாமல் உதவி செய்தவா.

 

கொஞ்ச நேரத்தால snow man பக்கத்தில் நின்று, அந்த தங்கச்சி குதிச்சு குதிச்ச் விளையாடத் தொடங்கினார். அப்ப 'கவனம்  careful லா விளையாட வேண்டும்' என்று ஒரு குரல் கேட்டிச்சாம். அந்த தங்கச்சியும், அண்ணாவா தன்னை careful ஆக விளையாடச் சொன்னவர் என்று பார்த்துட்டு "ok அண்ணா "  என்று சொல்லிப் போட்டு திருப்பியும் குதிச்சு குதிச்சு விளையாடேக்கு திருப்பியும் "கவனம்  careful லா விளையாட வேண்டும்" என்ற குரல் கேட்டிச்சாம். இது அண்ணாவோட குரல் இல்லையே என்று அந்த தங்கச்சி சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டு இருக்கேக்கு அண்ணாவும் தனக்கும் ஒரு குரல் கேட்டது என்று யார்ட குரல் என்று தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டு அவரும் தேடிப் பார்த்தார்.

 

அப்ப, 'நான் தான் உங்களை கவனமாக விளையாடச் சொன்னனான்' என்று திருப்பியும் குரல் கேட்டிச்சாம்.

 

"யாராது" என்று பார்க்கேக்கு அந்த snow man தான் ஸ்மைல் பண்ணிக் கொண்டு இருந்தாராம்.

 

"ஓ நீங்களா அது...நீங்கள் எப்படி talk பண்ணீறீங்க" என்று இரண்டு பேரும் கேட்டிச்சினம்.

 

"நான் அச்சா பிள்ளைகளோட கதைக்கிறனான்.." என்று snow man சொன்னாராம். அதோட, "உங்களோட எனக்கும் விளையாட விருப்பமாக இருக்கு" என்று சொல்லி அவரும் lot of பாட்டெல்லாம் படிச்சுக் காட்டினாராம். ஆனால் தான் இப்படி கதைச்சு விளையாடுறதை யாருக்கும் சொல்லக் கூடாது என்று சொன்னவராம்.

 

இரண்டு பிள்ளைகளும் யாருக்கும் சொல்லாம ஒவ்வொரு நாளும் ஸ்கூலால வந்து home work எல்லாம் செய்து முடிச்சுட்டு நல்ல பிள்ளைகளாக வெளியில வந்து Snow man னோட விளையாடுவினமாம். அவரும் நல்லா பாடி பாடி விளையாடுவாராம். தங்கச்சிக்கு என்றால் தன்ர ப்ரண்ட்ஸ்சுக்கு சொல்ல வேண்டும் என்று ஒரே ஆசை. ஆனால் அவர் சொல்ல வேண்டாம் என்று சொன்ன படியால குட் கேர்ள் ஆக ஒருத்தருக்கும் சொல்லாம இருந்தாவாம்.

 

இப்படி இருக்கேக்க.. கொஞ்சம் கொஞ்சமாக வின்ரர் முடிஞ்சு கொண்டு வந்ததாம்.

 

வின்ரர் முடிஞ்சா என்ன வரும்? ஸப்ரிங் வரும். கொஞ்சம் கொஞ்சமாக hot டும் வரத் தொடங்கிச்சாம். அப்ப, அடுத்த நாள் பின்னேரம் வெளியில போய் Snow man னைப் பார்க்கேக்க, அது கொஞ்சம் கொஞ்சமாக melt ஆகத் தொடங்கிட்டாம்.

 

இரண்டு பேருக்கு ஒரே கவலை. இனி அவர் கரைஞ்சு போய்விடுவாரே என்று சொல்லி அழத் தொடங்கிட்டினமாம்.

 

அப்ப melt ஆகத் தொடங்கிக் கொண்டு இருந்த Snow man "இரண்டு பேரும் அழக் கூடாது. Hot வந்தால் நான் அப்படியே water ஆகி போய்விடுவன். பிறகு அடுத்த வின்ரரில் தான் திரும்பி வருவன். நீங்கள் இரண்டு பேரும் இப்ப இருக்கின்ற மாதிரி very good kids ஆக இருந்தால் அடுத்த வின்ரருக்கு திரும்பி வந்து உங்களோட விளையாடுவன்" என்று சொல்லி full ஆக கரைஞ்சு போயிட்டாராம்.

 

அந்தப் பிள்ளைகளும் naughty வேலையெல்லாம் செய்யாமல், home work எல்லாம் செய்து, bad words ஒன்றும் சொல்லாம நல்ல பிள்ளைகளாக இருந்து அடுத்த வின்ரருக்காக wait பண்ணினமாம்.

 

--------------------

Link to comment
Share on other sites

இது பிள்ளைகளை ஏமாத்தி வீட்டுப்பாடங்கள் செய்ய வைக்கிற கதை.. :D

Link to comment
Share on other sites

நல்ல விடயம்.. இதை அப்பிடியே தொடருங்கள்.. மற்றவர்களும் படித்து வீட்டில் ஒப்பேற்றலாம்.. :icon_idea:

 

 

உங்கள் வீட்டு குட்டி தேவதைக்கு சொன்னீர்களா...

 

நிழலி அண்ணா கொப்பி றைட்ஸ் உரிமையை கெததியா எடுத்திடுங்கோ :lol: ......இன்று பலர் வீட்டில் இந்த கதைதான் பறக்கப்போகிறது - ஹாஹாஹா

 

யாழ் உறுப்பினர்களுக்கு இலவசம்..

 

நான் சுட்டுட்டன். எனக்கு அடுத்த வருடம் உபயோகப்படும்..!

 

பிள்ளைக்கா அல்லது பேரன் பேத்திக்கா? :D

 

நவீன  சிறுவர் கதை நல்லாயிருக்கு ... கொடுத்து வைச்ச குழந்தைகள் .எனக்கு.  tired..........அம் மா வோடு போய் படு என்று சொல்லாத  அப்பா ..... :D

 

எனக்கு இரண்டு பேரில் ஒருவராவது வந்து என்னுடன் படுக்க வேண்டும். கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டு படுக்காமல் விட்டால் வெறுமையாக இருக்கும்.

 

வரவேற்கப்பட வேண்டிய முயற்சி . பிள்ளைகளுடன் தொடர்பாடல் என்பது முக்கியம் . எங்களுக்கு சிறுவயதில் அம்மாச்சி அப்பாச்சி இருந்ததால் நாங்கள் இன்று எமது வாழ்வில் நேர்மையாக நடக்கின்றோம் . வருங்காலத்தையும் அவர்களுக்கு புரிந்த மொழியில் இப்படியான கதைகளால் செம்மையாக முடியும் .பொதுவாக அப்பாதான் குடும்பங்களில் கதைசொல்லியாக இருப்பார் . எனக்கு அப்பாச்சி தான் கதைசொல்லி .

 

எனக்கு சின்ன வயதில் அம்மா கதைகள் சொல்லி ஆரம்பித்தார். 4 வயதில் குருநாகல் என்ற ஊரிற்கு அப்பாவுக்கு மாற்றலாகியதால் நாமும் போனோம். எமக்குத் தந்த quarters இருந்த அதே வளவுக்குள் தான் குருநாகல் பொது நூலகமும். அங்கு நிறைய தமிழ் சிறுவர் கதைப் புத்தகங்கள் அப்ப இருந்திச்சு. பாலமித்திரா, அம்புலிமாமா, ரத்னபாலா என்று நிறைய. அதோட மாஸ்ரர் சிவலிங்கம் சிந்தாமணிப் பேப்பரி சிறுவர் பக்கத்தில் எழுதிக் கொண்டு வந்த கதைகள் வேறு.  கதைகள் கதைகள் கதைகள் என்று ஒரே கதைகள்.

 

எப்பவும் பிள்ளைகளுக்கு கதை சொல்லும் போது அவர்களின் மொழியை அல்லது அவர்களுக்கான மொழியில் தான் கதை சொல்ல வேண்டும். அடிக்கடி இந்த விடயத்தில் தடுமாறிப் போய்விடுவேன்.

 

தொடர்ந்து எழுதுங்கள். இக்கதையினைதான் நேற்று இரவு என்னுடைய பிள்ளைக்கு சொன்னேன்.

 

அவுஸ் வந்தால் ஒரு நேரச் சாப்பாடு கூப்பிட்டுத் தர வேண்டும்...

 

 

சிறுவர்கள் கதைகள் அவர்களது எண்ணங்ளையும் ஆற்றலையும் வளப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. நிழலி உங்களைப்போல நானும் பிள்ளைகள் பாலர்பாடசாலை போகத் தொடங்கும் போது இப்படி கதைகள் சொல்ல ஆரம்பித்தேன். இதுபோன்ற கதைகள் இல்லை. நீதிக்கதைகள் 200வரையில் பிரதியெடுத்து வைத்து சொல்லுவேன்.

 

9வயதில் மகள் தானாக டொச்மொழிப்பாடத்திற்கான 4கதைகள் எழுதியிருந்தாள். டொச் ஆசிரியை பெற்றோர் சந்திப்பில் அதுபற்றி சொல்லி மற்றைய பெற்றோரையும் கதைகள் சொல்லுமாறும் பிள்ளைகளின் மொழியாற்றலையும் மேம்படுத்தும் எனக்கூறி மகளுக்கு தனது சார்பில் பரிசிலும் வழங்கியிருந்தா. அந்தக்கதைகளை வெப்சைற்றிலும் போட்டிருந்தேன். சேவர் அழிந்த போது அதுவும் இல்லாது போய்விட்டது.பழைய சீடிகளில் தேடுகிறேன். கிடைத்தால் இங்கு பதிவிடுகிறேன்.

 

இயன்றவரை பிள்ளைகளுக்கு சிறுவயதில் கதைகள் சொல்லிக்கொடுத்தல்  குழந்தைப்பாடல்கள் சொல்லிக்கொடுத்தல் அவர்களது ஆற்றல்களை மேம்படுத்தும் வல்லமையை கொடுக்கும். 12வயதின் பின்னர் எங்களுடைய கதைகளைக் கேட்கும் அளவு பிள்ளைகளுக்கு நேரம் வராது. படிப்புகள் அதிகரிக்க எங்களோடு மினக்கெடும் நேரமே குறைந்துவிடும். 
 
12வயது வரையும் இயன்றவரை பெற்றோர்கள் உணவூட்டுவது வரை இத்தகைய கதைகள் சொல்லுவதை வரை பிள்ளைகளுடன் அதிகம் மினக்கெடுவது நல்லம். ஆனால் இப்போது 6வயதிலேயே ரியூசனுக்கு அனுப்பியே தாய்மொழியைக்கூட கற்பிக்க தொடங்கியுள்ள அவசரமான உலகமாகீட்டுது. பிள்ளைகளுடனான நெருக்கத்தையும் இத்தகைய கதை சொல்லல் ஏற்படுத்தும்.

 

 

பொதுவாக நான் நீதிக் கதைகள் என்று அச்சாகி வரும் கதைகளைச் சொல்ல விரும்புவதில்லை. பிள்ளைகள் நாளை பார்க்கப் போகும் யதார்த்ததுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமிருக்காது என்பதால் கூடியவரைக்கும் தவிர்த்து விடுவேன். அத்துடன் நான் சொல்லும் கதைகளிலும் தியாகம், விட்டுக் கொடுத்து விட்டு வெறுமையாக நிற்பது போன்ற விடயங்களை தவிர்த்து விடுவேன்.

Link to comment
Share on other sites

 

பொதுவாக நான் நீதிக் கதைகள் என்று அச்சாகி வரும் கதைகளைச் சொல்ல விரும்புவதில்லை. பிள்ளைகள் நாளை பார்க்கப் போகும் யதார்த்ததுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமிருக்காது என்பதால் கூடியவரைக்கும் தவிர்த்து விடுவேன். அத்துடன் நான் சொல்லும் கதைகளிலும் தியாகம், விட்டுக் கொடுத்து விட்டு வெறுமையாக நிற்பது போன்ற விடயங்களை தவிர்த்து விடுவேன்.

உங்கள் கதைசொல்லும் விதமானது நல்ல உத்தி. எனினும் இவை எழுத்து மூலமும் பிரதிகளாக வருவது எதிர்காலத்தில் இத்தகைய கதைகளை பிள்ளைகளுக்கு கொடுக்க ஆதரவாக அமையும். 

 

சிறுவயதில் பிள்ளைகளுக்கு மிருகங்களை வைத்தே கதைகள் புனையப்படுகிறது. அந்த வகையில் பிள்ளைகள் மிருகங்களை பெரியவர்கள் நாங்கள் அன்பு செலுத்தாமைபோல பிள்ளைகள் தவிர்க்கமாட்டார்கள். எல்லா மொழிகளிலும் வரும் சிறுவர் கதைகள் பெரும்பாலும் நாங்கள் தமிழில் கொண்டுள்ள கதைகளை ஒத்தவையே. இவற்றிலும் தன்னம்பிக்கையை வளர்க்கும் கதைகள் இருக்கிறது. அத்தகைய கதைகளை சில மாற்றங்களோடு பிள்ளைகளை சென்றடைய வைக்கலாம். 

 

மகன் 4வயதாக இருக்கும் போது முருகன் பிள்ளையார் மாம்பழ கதையை சொல்லிக் கொண்டிருந்தேன். முருகனுக்கு பழம் கிடைக்காதது ஏன் என சொல்லிக் கொண்டு வரும் போது மகன் சொன்னான். தனக்குத் தெரியும் ஏன் முருகனுக்கு பழம் கிடைக்கவில்லையென. காரணம் கேட்ட எனக்கு சொன்னான். முருகன் பாக்கிங் கிடைக்காமல் தான் தாமதமாகியிருப்பார் அதாலைதான் பழம் கிடைக்கேல்லயென.
 
இப்படி பல கதைகள் சொல்லிய போத பல்வேறுபட்ட சுவாரசியமான விடயங்களை பிள்ளைகள் தங்கள் கற்பனையில் சொல்லியிருக்கிறார்கள். இப்போது பெரியவர்கள் கற்பனைகளைக்கூட விஞ்ஞான ரீதியாக சிந்திக்கிறார்கள். சிறுவயதில் சொல்லப்பட்ட காரணமற்ற தடைகளைக்கூட இப்போது தாங்கள் தெளிவடைந்து விளக்கும் நிலமையில் உள்ளார்கள். 
 
பெற்றோர்கள் பிள்ளைகளின் சிந்தனையை வளர்க்க சிறுவயது முதலே நேரத்தை ஒதுக்கி பிள்ளைகளுடன் மினகெட வேணும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதைகள், நிழலி!

 

எப்ப பாத்தாலும், இந்தத் திரியுக்குள்ளை, நான் வாற நேரம் பாத்துப், 'பச்சை' கையை விரிக்குது! :lol:

Link to comment
Share on other sites

நல்ல கதைகள், நிழலி!

 

எப்ப பாத்தாலும், இந்தத் திரியுக்குள்ளை, நான் வாற நேரம் பாத்துப், 'பச்சை' கையை விரிக்குது! :lol:

நீங்கள் லேட்டா வாறபடியா பச்சை காலாவதியாகிவிடுகிறதே !!!! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.