Jump to content

நான் என் குழந்தைகளுக்குச் சொல்லும் சிறுவர் கதைகள்: நிழலி


Recommended Posts

இரவில் படுக்கும் போது என் இரண்டு குழந்தைகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு கதைகள் சொல்வது வழக்கம். கதை கேட்பதற்காகவே இரண்டு பேரும் என்னுடன் படுக்க விரும்பி வருவினம். நான் கதை சொல்வதுடன் அவர்களையும் கதை சொல்ல வைப்பதுண்டு. மகனுக்கு 9 வயதாகுது என்பதால் அவன் தான் வாசித்த கதைகளை ஓரளவுக்கு நேர்த்தியாக சொல்வான். மகளுக்கு 4 வயது என்பதால் தனக்கு நடக்கும் சம்பவங்களை கோர்வையின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லி மெருகேற்றப் பார்ப்பாள். அவள் கதைகளில் அநேகமாக ஒரு Naughty boy வருவான். அது அவளது அண்ணனாகத் தான் இருப்பான்.

 

இப்படி, அவர்கள் என்னிடம் கதை கேட்கும் போது என்னால் நான் சின்ன வயதில் வாசித்த கதைகளை நினைவு வைத்து சொல்ல முடிவது இல்லை. என் ஞாபகத்தில் இருந்த சிறுவர் கதைகள்  எல்லாம் மறந்து விட்டன. அதுக்காக அப்பப்ப புதுக்கதைகளை இயற்றியோ அல்லது ஏற்கனவே கேட்ட கதைகளுக்கு புது விடயங்களை புகுத்தியோ கதை சொல்வது வழக்கம்.

 

அப்படிச் சொல்லும் சில கதைகளை இங்கு பகிரலாம் என்று நினைக்கின்றேன். இவை just சிறுவர் கதைகள் - இதில் எல்லாம் லொஜிக் பார்க்கக் கூடாது.  'அப்பாதான் பெரியவர்' என்ற அரசியலும் அங்கங்க இருக்கும் - பெண்ணிலைவாதிகள் கோபிக்க கூடாது. அத்துடன் நிறைய ஆங்கிலச் சொற்களும் வரலாம் - தனித் தமிழ் அபிமானிகள் மூஞ்சியை சுளிக்கக் கூடாது. இப்பவே சொல்லிட்டன்.

 

இனிக் கதைகள்:

 

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

 

1. நாய்க்குட்டியும் சீகல் பறவையும்:

 

ஒரு ஊரில ஒரு வீட்டில இரண்டு பிள்ளைகள் இருந்திச்சினம். ஒரு அண்ணண், ஒரு தங்கச்சி. . அவர்கள் இரண்டு பேரும் ஒரு நல்ல வடியான குட்டி நாய்க்குட்டியை வளர்த்திச்சினம். எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கின்ற  குட்டி நாய்க்குட்டியை விட வடிவான நாய்க்குட்டி அது.

 

அந்த ஊரில இல் ஒரு Thief வும் இருந்தார். இந்த நாய்க்குட்டியை எப்படியாவது களவெடுத்து ஆருக்காவது வித்துப் போட்டு நல்ல pepperoni pizza வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று plan போட்டு இருந்தார்.

 

ஒரு நாள் இந்தப் பிள்ளைகள் இரண்டு பேரும் அப்பாவுக்கு பக்கத்தில அப்பாவை கட்டிப் பிடிச்சுக் கொண்டு நல்லா இரவு நித்தா கொள்ளும் போது இந்த thief சத்தம் போடாமல் வந்து ஒரு பெரிய bag ஒன்றால நாய்க்குட்டியை சுத்திக் கொண்டு ஓடிப் போயிற்றார். நாய்க்குட்டியும் நல்லா நித்திரை கொண்டு கொண்டு இருந்ததால கத்தேல..

 

அடுத்த நாள் காலம தான் நாய்க் குட்டி எழும்பிப் பார்த்தது. ஐயோ என் Friends வீடு இது இல்ல, அவர்களையும் காணவில்லை....என்று அழத் தொடங்கி விட்டது. அதே மாதிரி விடிய எழும்பி நாய்க்குட்டியைத் தேடிப் பார்த்து விட்டு  அண்ணணும் தங்கச்சியும் காணவில்லை என்று அழுதிச்சினம்.

 

இப்படி இருக்கேக்கு, அந்த நாய்க் குட்டி ஒரு மரத்துக்கு கீழ படுத்து அழு அழு என்று அழுதுகொண்டு இருந்தது. அப்ப அந்த மரத்துக்கு மேல ஒரு seagull இருந்தது. அது ஏன் இந்த நாய்க்குட்டி அழுகுது என்று கீழ வந்து பார்த்து  'ஏன் பப்பி அழுகிறாய்' என்று கேட்டிச்சு. அதுக்கு அந்த நாய்க் குட்டி 'என்னை யாரோ இங்க வந்து போட்டிட்டினம்...எனக்கு திரும்பி வீட்ட போகத் தெரியாது..எனக்கு என் Friends வீட்ட போகவேண்டும்' என்று சொல்லி இன்னும் கூட அழுதுச்சு.

 

Seagull லுக்கு என்றால் நாயைப் பார்க்க பார்க்க பாவமாக இருந்தது. அது அச்சா சீகல். 'சரி அழாத பப்பி உனக்கு நான் ஹெல்ப் பண்றன்' என்று சொல்லி, "உன்னை மாதிரி உன் Friends சும் அழுதுகொண்டு இருப்பினம்... நான் போய் ஒவ்வொரு வீட்டாப் பார்த்து விட்டு வந்து கண்டு பிடிச்சு உன்னையும் கூட்டிக் கொண்டு போறன்'  என்று பறந்து ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போய் எட்டிப் பார்துச்சு.

 

ஆனால் ஒரு வீட்டிலும் அதால கண்டு பிடிக்க ஏலாமல் இருந்துச்சுது.

 

கடைசியாக tired ஆகி, ஒரு வீட்டு வாசலில போய் நிற்கேக்க அங்க இரண்டு சின்னப் பிள்ளைகள் நாய்க்குட்டியைக் காணேல என்று lot of அழுது கொண்டு இருந்திச்சினம். அவர்களைப் பார்த்து 'ஓ இவையள் தான் பப்பியின் Friends என்று கண்டு பிடிச்சு வீட்டு address சை வாசிச்சுக் கொண்டு எழும்பி பறந்து நாய்குட்டியிடம் போனது.

 

'பப்பி நான் உன் ப்ரெண்ட்ஸ் வீட்டை கண்டு பிடிச்சுட்டன் இரவைக்கு யாருக்கும் தெரியாமல் local road டால கூட்டிக் கொண்டு போறன் என்று சொன்னது, பப்பியும் ஓகே என்று சொல்லி அழுறதை நிப்பாட்டிச்சுது.

 

இரவு வந்ததும், Seagull தன் ஒரு செட்டையை பப்பியை பிடிக்கச் சொல்லிப் போட்டு, Slow ஆக நடந்து நடந்து அதன் Friends ட வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் விட்டிச்சு. நாய்க்குட்டியும் Thanks சொல்லிச்சுது.

 

பிறகு, விடிய அண்ணாவும் தங்கச்சியும் எழும்பி பல்லுத் தீட்ட போகும் போது  அவையள்ட நாய்க்குட்டியின் சத்தம் கேட்க.. ஹையா நாய்க்குட்டி வந்துட்டுது என்று துள்ளிக் கொண்டு போய் பார்த்திச்சினம். அங்க அவர்களின் நாய்க்குட்டி வாலை ஆட்டிக் கொண்டு சிரிச்சுக் கொண்டு நின்றிச்சு. இரண்டு பேருக்கும் நல்ல சந்தோசம். அதுக்கு பிறகு நாய்க்குட்டியோட சந்தோசமாக life ல இருந்திச்சினம்.

 

----------------------------------------------------------

Link to comment
Share on other sites

நல்ல விடயம்.. இதை அப்பிடியே தொடருங்கள்.. மற்றவர்களும் படித்து வீட்டில் ஒப்பேற்றலாம்.. :icon_idea:

Link to comment
Share on other sites

நிழலி அண்ணா கொப்பி றைட்ஸ் உரிமையை கெததியா எடுத்திடுங்கோ :lol: ......இன்று பலர் வீட்டில் இந்த கதைதான் பறக்கப்போகிறது - ஹாஹாஹா :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சுட்டுட்டன். எனக்கு அடுத்த வருடம் உபயோகப்படும்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீன  சிறுவர் கதை நல்லாயிருக்கு ... கொடுத்து வைச்ச குழந்தைகள் .எனக்கு.  tired..........அம் மா வோடு போய் படு என்று சொல்லாத  அப்பா ..... :D

Link to comment
Share on other sites

வரவேற்கப்பட வேண்டிய முயற்சி . பிள்ளைகளுடன் தொடர்பாடல் என்பது முக்கியம் . எங்களுக்கு சிறுவயதில் அம்மாச்சி அப்பாச்சி இருந்ததால் நாங்கள் இன்று எமது வாழ்வில் நேர்மையாக நடக்கின்றோம் . வருங்காலத்தையும் அவர்களுக்கு புரிந்த மொழியில் இப்படியான கதைகளால் செம்மையாக முடியும் .பொதுவாக அப்பாதான் குடும்பங்களில் கதைசொல்லியாக இருப்பார் . எனக்கு அப்பாச்சி தான் கதைசொல்லி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள். இக்கதையினைதான் நேற்று இரவு என்னுடைய பிள்ளைக்கு சொன்னேன்.

Link to comment
Share on other sites

சிறுவர்கள் கதைகள் அவர்களது எண்ணங்ளையும் ஆற்றலையும் வளப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. நிழலி உங்களைப்போல நானும் பிள்ளைகள் பாலர்பாடசாலை போகத் தொடங்கும் போது இப்படி கதைகள் சொல்ல ஆரம்பித்தேன். இதுபோன்ற கதைகள் இல்லை. நீதிக்கதைகள் 200வரையில் பிரதியெடுத்து வைத்து சொல்லுவேன்.

 

9வயதில் மகள் தானாக டொச்மொழிப்பாடத்திற்கான 4கதைகள் எழுதியிருந்தாள். டொச் ஆசிரியை பெற்றோர் சந்திப்பில் அதுபற்றி சொல்லி மற்றைய பெற்றோரையும் கதைகள் சொல்லுமாறும் பிள்ளைகளின் மொழியாற்றலையும் மேம்படுத்தும் எனக்கூறி மகளுக்கு தனது சார்பில் பரிசிலும் வழங்கியிருந்தா. அந்தக்கதைகளை வெப்சைற்றிலும் போட்டிருந்தேன். சேவர் அழிந்த போது அதுவும் இல்லாது போய்விட்டது.பழைய சீடிகளில் தேடுகிறேன். கிடைத்தால் இங்கு பதிவிடுகிறேன்.

 

இயன்றவரை பிள்ளைகளுக்கு சிறுவயதில் கதைகள் சொல்லிக்கொடுத்தல்  குழந்தைப்பாடல்கள் சொல்லிக்கொடுத்தல் அவர்களது ஆற்றல்களை மேம்படுத்தும் வல்லமையை கொடுக்கும். 12வயதின் பின்னர் எங்களுடைய கதைகளைக் கேட்கும் அளவு பிள்ளைகளுக்கு நேரம் வராது. படிப்புகள் அதிகரிக்க எங்களோடு மினக்கெடும் நேரமே குறைந்துவிடும். 
 
12வயது வரையும் இயன்றவரை பெற்றோர்கள் உணவூட்டுவது வரை இத்தகைய கதைகள் சொல்லுவதை வரை பிள்ளைகளுடன் அதிகம் மினக்கெடுவது நல்லம். ஆனால் இப்போது 6வயதிலேயே ரியூசனுக்கு அனுப்பியே தாய்மொழியைக்கூட கற்பிக்க தொடங்கியுள்ள அவசரமான உலகமாகீட்டுது. பிள்ளைகளுடனான நெருக்கத்தையும் இத்தகைய கதை சொல்லல் ஏற்படுத்தும்.
Link to comment
Share on other sites

2. பனிமனிதனும் பிள்ளைகளும்

 

ஒரு ஊரில அண்ணாவும் தங்கச்சியும் இருந்திச்சினமாம். அவர்கள் ஒரு நாள் நல்லா பனி கொட்டி முடிஞ்சு நல்லா வெளிச்சம் வந்த பிறகு வெளியில முற்றத்தில போய் ஒரு பெரிய snow man  செய்திச்சினம். அண்ணாவுக்கு நல்லா Craft செய்யத் தெரியும் என்றபடியால வடிவான ஒரு snow man மனிதனைச் செய்திச்சினம். அவர்ட தங்கச்சியும் நல்லா உதவி செய்தவா.  அவா அச்சாப் பிள்ளைதானே...அதான் குழப்படி செய்யாமல் உதவி செய்தவா.

 

கொஞ்ச நேரத்தால snow man பக்கத்தில் நின்று, அந்த தங்கச்சி குதிச்சு குதிச்ச் விளையாடத் தொடங்கினார். அப்ப 'கவனம்  careful லா விளையாட வேண்டும்' என்று ஒரு குரல் கேட்டிச்சாம். அந்த தங்கச்சியும், அண்ணாவா தன்னை careful ஆக விளையாடச் சொன்னவர் என்று பார்த்துட்டு "ok அண்ணா "  என்று சொல்லிப் போட்டு திருப்பியும் குதிச்சு குதிச்சு விளையாடேக்கு திருப்பியும் "கவனம்  careful லா விளையாட வேண்டும்" என்ற குரல் கேட்டிச்சாம். இது அண்ணாவோட குரல் இல்லையே என்று அந்த தங்கச்சி சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டு இருக்கேக்கு அண்ணாவும் தனக்கும் ஒரு குரல் கேட்டது என்று யார்ட குரல் என்று தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டு அவரும் தேடிப் பார்த்தார்.

 

அப்ப, 'நான் தான் உங்களை கவனமாக விளையாடச் சொன்னனான்' என்று திருப்பியும் குரல் கேட்டிச்சாம்.

 

"யாராது" என்று பார்க்கேக்கு அந்த snow man தான் ஸ்மைல் பண்ணிக் கொண்டு இருந்தாராம்.

 

"ஓ நீங்களா அது...நீங்கள் எப்படி talk பண்ணீறீங்க" என்று இரண்டு பேரும் கேட்டிச்சினம்.

 

"நான் அச்சா பிள்ளைகளோட கதைக்கிறனான்.." என்று snow man சொன்னாராம். அதோட, "உங்களோட எனக்கும் விளையாட விருப்பமாக இருக்கு" என்று சொல்லி அவரும் lot of பாட்டெல்லாம் படிச்சுக் காட்டினாராம். ஆனால் தான் இப்படி கதைச்சு விளையாடுறதை யாருக்கும் சொல்லக் கூடாது என்று சொன்னவராம்.

 

இரண்டு பிள்ளைகளும் யாருக்கும் சொல்லாம ஒவ்வொரு நாளும் ஸ்கூலால வந்து home work எல்லாம் செய்து முடிச்சுட்டு நல்ல பிள்ளைகளாக வெளியில வந்து Snow man னோட விளையாடுவினமாம். அவரும் நல்லா பாடி பாடி விளையாடுவாராம். தங்கச்சிக்கு என்றால் தன்ர ப்ரண்ட்ஸ்சுக்கு சொல்ல வேண்டும் என்று ஒரே ஆசை. ஆனால் அவர் சொல்ல வேண்டாம் என்று சொன்ன படியால குட் கேர்ள் ஆக ஒருத்தருக்கும் சொல்லாம இருந்தாவாம்.

 

இப்படி இருக்கேக்க.. கொஞ்சம் கொஞ்சமாக வின்ரர் முடிஞ்சு கொண்டு வந்ததாம்.

 

வின்ரர் முடிஞ்சா என்ன வரும்? ஸப்ரிங் வரும். கொஞ்சம் கொஞ்சமாக hot டும் வரத் தொடங்கிச்சாம். அப்ப, அடுத்த நாள் பின்னேரம் வெளியில போய் Snow man னைப் பார்க்கேக்க, அது கொஞ்சம் கொஞ்சமாக melt ஆகத் தொடங்கிட்டாம்.

 

இரண்டு பேருக்கு ஒரே கவலை. இனி அவர் கரைஞ்சு போய்விடுவாரே என்று சொல்லி அழத் தொடங்கிட்டினமாம்.

 

அப்ப melt ஆகத் தொடங்கிக் கொண்டு இருந்த Snow man "இரண்டு பேரும் அழக் கூடாது. Hot வந்தால் நான் அப்படியே water ஆகி போய்விடுவன். பிறகு அடுத்த வின்ரரில் தான் திரும்பி வருவன். நீங்கள் இரண்டு பேரும் இப்ப இருக்கின்ற மாதிரி very good kids ஆக இருந்தால் அடுத்த வின்ரருக்கு திரும்பி வந்து உங்களோட விளையாடுவன்" என்று சொல்லி full ஆக கரைஞ்சு போயிட்டாராம்.

 

அந்தப் பிள்ளைகளும் naughty வேலையெல்லாம் செய்யாமல், home work எல்லாம் செய்து, bad words ஒன்றும் சொல்லாம நல்ல பிள்ளைகளாக இருந்து அடுத்த வின்ரருக்காக wait பண்ணினமாம்.

 

--------------------

Link to comment
Share on other sites

இது பிள்ளைகளை ஏமாத்தி வீட்டுப்பாடங்கள் செய்ய வைக்கிற கதை.. :D

Link to comment
Share on other sites

நல்ல விடயம்.. இதை அப்பிடியே தொடருங்கள்.. மற்றவர்களும் படித்து வீட்டில் ஒப்பேற்றலாம்.. :icon_idea:

 

 

உங்கள் வீட்டு குட்டி தேவதைக்கு சொன்னீர்களா...

 

நிழலி அண்ணா கொப்பி றைட்ஸ் உரிமையை கெததியா எடுத்திடுங்கோ :lol: ......இன்று பலர் வீட்டில் இந்த கதைதான் பறக்கப்போகிறது - ஹாஹாஹா

 

யாழ் உறுப்பினர்களுக்கு இலவசம்..

 

நான் சுட்டுட்டன். எனக்கு அடுத்த வருடம் உபயோகப்படும்..!

 

பிள்ளைக்கா அல்லது பேரன் பேத்திக்கா? :D

 

நவீன  சிறுவர் கதை நல்லாயிருக்கு ... கொடுத்து வைச்ச குழந்தைகள் .எனக்கு.  tired..........அம் மா வோடு போய் படு என்று சொல்லாத  அப்பா ..... :D

 

எனக்கு இரண்டு பேரில் ஒருவராவது வந்து என்னுடன் படுக்க வேண்டும். கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டு படுக்காமல் விட்டால் வெறுமையாக இருக்கும்.

 

வரவேற்கப்பட வேண்டிய முயற்சி . பிள்ளைகளுடன் தொடர்பாடல் என்பது முக்கியம் . எங்களுக்கு சிறுவயதில் அம்மாச்சி அப்பாச்சி இருந்ததால் நாங்கள் இன்று எமது வாழ்வில் நேர்மையாக நடக்கின்றோம் . வருங்காலத்தையும் அவர்களுக்கு புரிந்த மொழியில் இப்படியான கதைகளால் செம்மையாக முடியும் .பொதுவாக அப்பாதான் குடும்பங்களில் கதைசொல்லியாக இருப்பார் . எனக்கு அப்பாச்சி தான் கதைசொல்லி .

 

எனக்கு சின்ன வயதில் அம்மா கதைகள் சொல்லி ஆரம்பித்தார். 4 வயதில் குருநாகல் என்ற ஊரிற்கு அப்பாவுக்கு மாற்றலாகியதால் நாமும் போனோம். எமக்குத் தந்த quarters இருந்த அதே வளவுக்குள் தான் குருநாகல் பொது நூலகமும். அங்கு நிறைய தமிழ் சிறுவர் கதைப் புத்தகங்கள் அப்ப இருந்திச்சு. பாலமித்திரா, அம்புலிமாமா, ரத்னபாலா என்று நிறைய. அதோட மாஸ்ரர் சிவலிங்கம் சிந்தாமணிப் பேப்பரி சிறுவர் பக்கத்தில் எழுதிக் கொண்டு வந்த கதைகள் வேறு.  கதைகள் கதைகள் கதைகள் என்று ஒரே கதைகள்.

 

எப்பவும் பிள்ளைகளுக்கு கதை சொல்லும் போது அவர்களின் மொழியை அல்லது அவர்களுக்கான மொழியில் தான் கதை சொல்ல வேண்டும். அடிக்கடி இந்த விடயத்தில் தடுமாறிப் போய்விடுவேன்.

 

தொடர்ந்து எழுதுங்கள். இக்கதையினைதான் நேற்று இரவு என்னுடைய பிள்ளைக்கு சொன்னேன்.

 

அவுஸ் வந்தால் ஒரு நேரச் சாப்பாடு கூப்பிட்டுத் தர வேண்டும்...

 

 

சிறுவர்கள் கதைகள் அவர்களது எண்ணங்ளையும் ஆற்றலையும் வளப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. நிழலி உங்களைப்போல நானும் பிள்ளைகள் பாலர்பாடசாலை போகத் தொடங்கும் போது இப்படி கதைகள் சொல்ல ஆரம்பித்தேன். இதுபோன்ற கதைகள் இல்லை. நீதிக்கதைகள் 200வரையில் பிரதியெடுத்து வைத்து சொல்லுவேன்.

 

9வயதில் மகள் தானாக டொச்மொழிப்பாடத்திற்கான 4கதைகள் எழுதியிருந்தாள். டொச் ஆசிரியை பெற்றோர் சந்திப்பில் அதுபற்றி சொல்லி மற்றைய பெற்றோரையும் கதைகள் சொல்லுமாறும் பிள்ளைகளின் மொழியாற்றலையும் மேம்படுத்தும் எனக்கூறி மகளுக்கு தனது சார்பில் பரிசிலும் வழங்கியிருந்தா. அந்தக்கதைகளை வெப்சைற்றிலும் போட்டிருந்தேன். சேவர் அழிந்த போது அதுவும் இல்லாது போய்விட்டது.பழைய சீடிகளில் தேடுகிறேன். கிடைத்தால் இங்கு பதிவிடுகிறேன்.

 

இயன்றவரை பிள்ளைகளுக்கு சிறுவயதில் கதைகள் சொல்லிக்கொடுத்தல்  குழந்தைப்பாடல்கள் சொல்லிக்கொடுத்தல் அவர்களது ஆற்றல்களை மேம்படுத்தும் வல்லமையை கொடுக்கும். 12வயதின் பின்னர் எங்களுடைய கதைகளைக் கேட்கும் அளவு பிள்ளைகளுக்கு நேரம் வராது. படிப்புகள் அதிகரிக்க எங்களோடு மினக்கெடும் நேரமே குறைந்துவிடும். 
 
12வயது வரையும் இயன்றவரை பெற்றோர்கள் உணவூட்டுவது வரை இத்தகைய கதைகள் சொல்லுவதை வரை பிள்ளைகளுடன் அதிகம் மினக்கெடுவது நல்லம். ஆனால் இப்போது 6வயதிலேயே ரியூசனுக்கு அனுப்பியே தாய்மொழியைக்கூட கற்பிக்க தொடங்கியுள்ள அவசரமான உலகமாகீட்டுது. பிள்ளைகளுடனான நெருக்கத்தையும் இத்தகைய கதை சொல்லல் ஏற்படுத்தும்.

 

 

பொதுவாக நான் நீதிக் கதைகள் என்று அச்சாகி வரும் கதைகளைச் சொல்ல விரும்புவதில்லை. பிள்ளைகள் நாளை பார்க்கப் போகும் யதார்த்ததுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமிருக்காது என்பதால் கூடியவரைக்கும் தவிர்த்து விடுவேன். அத்துடன் நான் சொல்லும் கதைகளிலும் தியாகம், விட்டுக் கொடுத்து விட்டு வெறுமையாக நிற்பது போன்ற விடயங்களை தவிர்த்து விடுவேன்.

Link to comment
Share on other sites

 

பொதுவாக நான் நீதிக் கதைகள் என்று அச்சாகி வரும் கதைகளைச் சொல்ல விரும்புவதில்லை. பிள்ளைகள் நாளை பார்க்கப் போகும் யதார்த்ததுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமிருக்காது என்பதால் கூடியவரைக்கும் தவிர்த்து விடுவேன். அத்துடன் நான் சொல்லும் கதைகளிலும் தியாகம், விட்டுக் கொடுத்து விட்டு வெறுமையாக நிற்பது போன்ற விடயங்களை தவிர்த்து விடுவேன்.

உங்கள் கதைசொல்லும் விதமானது நல்ல உத்தி. எனினும் இவை எழுத்து மூலமும் பிரதிகளாக வருவது எதிர்காலத்தில் இத்தகைய கதைகளை பிள்ளைகளுக்கு கொடுக்க ஆதரவாக அமையும். 

 

சிறுவயதில் பிள்ளைகளுக்கு மிருகங்களை வைத்தே கதைகள் புனையப்படுகிறது. அந்த வகையில் பிள்ளைகள் மிருகங்களை பெரியவர்கள் நாங்கள் அன்பு செலுத்தாமைபோல பிள்ளைகள் தவிர்க்கமாட்டார்கள். எல்லா மொழிகளிலும் வரும் சிறுவர் கதைகள் பெரும்பாலும் நாங்கள் தமிழில் கொண்டுள்ள கதைகளை ஒத்தவையே. இவற்றிலும் தன்னம்பிக்கையை வளர்க்கும் கதைகள் இருக்கிறது. அத்தகைய கதைகளை சில மாற்றங்களோடு பிள்ளைகளை சென்றடைய வைக்கலாம். 

 

மகன் 4வயதாக இருக்கும் போது முருகன் பிள்ளையார் மாம்பழ கதையை சொல்லிக் கொண்டிருந்தேன். முருகனுக்கு பழம் கிடைக்காதது ஏன் என சொல்லிக் கொண்டு வரும் போது மகன் சொன்னான். தனக்குத் தெரியும் ஏன் முருகனுக்கு பழம் கிடைக்கவில்லையென. காரணம் கேட்ட எனக்கு சொன்னான். முருகன் பாக்கிங் கிடைக்காமல் தான் தாமதமாகியிருப்பார் அதாலைதான் பழம் கிடைக்கேல்லயென.
 
இப்படி பல கதைகள் சொல்லிய போத பல்வேறுபட்ட சுவாரசியமான விடயங்களை பிள்ளைகள் தங்கள் கற்பனையில் சொல்லியிருக்கிறார்கள். இப்போது பெரியவர்கள் கற்பனைகளைக்கூட விஞ்ஞான ரீதியாக சிந்திக்கிறார்கள். சிறுவயதில் சொல்லப்பட்ட காரணமற்ற தடைகளைக்கூட இப்போது தாங்கள் தெளிவடைந்து விளக்கும் நிலமையில் உள்ளார்கள். 
 
பெற்றோர்கள் பிள்ளைகளின் சிந்தனையை வளர்க்க சிறுவயது முதலே நேரத்தை ஒதுக்கி பிள்ளைகளுடன் மினகெட வேணும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதைகள், நிழலி!

 

எப்ப பாத்தாலும், இந்தத் திரியுக்குள்ளை, நான் வாற நேரம் பாத்துப், 'பச்சை' கையை விரிக்குது! :lol:

Link to comment
Share on other sites

நல்ல கதைகள், நிழலி!

 

எப்ப பாத்தாலும், இந்தத் திரியுக்குள்ளை, நான் வாற நேரம் பாத்துப், 'பச்சை' கையை விரிக்குது! :lol:

நீங்கள் லேட்டா வாறபடியா பச்சை காலாவதியாகிவிடுகிறதே !!!! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.