Jump to content

குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய டி ராஜேந்தர்


Recommended Posts

http://tamil.oneindia.in/movies/news/t-rajendar-family-converts-christian-193437.html

 

அதில் ஒரு கமெண்ட்  :)

 

1980 ல நான்தாண்டா மாஸு
இப்போ எனக்கு புடிச்சது ஏசு
எப்பவுமே புடிச்சது காசு...
சிம்பு மேல போடுவாங்க அடிக்கடி கேசு
இனிமே என் கிட்ட பாத்து பேசு

நான் இப்போ திமூகாவில ஊறிட்டேன்
லதிமுகா ஆரம்பிச்சி நாறிட்டேன்
பெருமை கிடைக்க பலபேர் காலை வாரிட்டேன்
கடைசியா கிறிஸ்துவத்துக்கு மாறிட்டேன்
மக்களே இதை நான் தெளிவா உங்களுக்கு கூறிட்டேன்

ஏ டண்டணக்கா இல்ல இல்ல
ஏ அல்லேலூயா அல்லேலூயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டீ ஆர் குடும்பம் மதம் மாறினது இருக்கட்டும் சிம்பு மாறிட்டாரோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் ராமராஜனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஓக்கூர். தந்தை ராமையா. நாடக நடிகர். தாயார் வெள்ளையம்மாள். - தினமும் ஒரு நற்செய்தி 

ராமராஜனின் சகோதரர்கள் கருப்பையா, பாண்டி, சகோதரிகள் புஷ்ப வல்லி, வைராத்தாள். ராமராஜனுக்கு பெற்றோர் வைத்த பெயர் குமரேசன். ராமராஜன் பிறந்த ஒரு ஆண்டிலேயே சொந்த ஊரில் இருந்து மேலூருக்கு வந்து விட்டனர். இதனால், நடிகர் ராமராஜன் மேலூர் அரசு பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் மேலூர் அரசு கலை கல்லூரியில் பி.யூ.சி படித்தார்.

சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால், சென்னைக்குப் போக வேண்டும். சென்னையில் யாருடைய ஆதரவை நாடிச் செல்வது என்ற கேள்வி எழுந்து, தயக்கத்தை உண்டாக்கியது. அந்த நேரத்தில், தங்கராஜ் என்ற நண்பர் மூலம் மேலூரில் 'ராஜா டூரிங் டாக்கீஸ்' என்ற திரையரங்கில் ராமராஜனுக்கு வேலை கிடைத்தது. அங்கு டிக்கெட் கிழித்து கொடுப்பது, கேஷியர் வேலை, மானேஜர் வேலை, படத்தை ஆப்பரேட் செய்வது என அனைத்து வேலைகளையும் செய்தார்.

இப்படி டிக்கெட் கிழிக்கும் வேளையில் இருந்து நடிகராகி, பின்பு நாடாளுமன்ற உறுப்பினரான திரு ராமராஜன் அவர்கள் சமீபத்தில் கோவையில் பகிர்ந்து கொண்ட சாட்சியை உங்கள் முன் வைக்கிறேன்..

சாட்சி: 

நான் பல நாட்களாக சாட்சி சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் சூழ்நிலைகள் சரியாக அமையாத காரணத்தினால் வர முடியவில்லை. நான் இங்கே இன்று வந்து நிற்கிறேன் என்றால் அது இயேசுவின் மிகபெரிய கிருபை. 

உலகம் முழுவதும் இருக்கும் ஒரே இறைவன் இயேசு கிறிஸ்து மாத்திரமே... நான் பல முறை தொலைகாட்சியிலும், மற்ற இடங்களிலும் பார்த்திருக்கிறேன்.. MBBS போன்று பல துறைகளில் சிறந்து விளங்குகிற மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத பல வியாதிகளை இயேசுவின் கிருபையால் குணப்படுத்துவதை பார்த்து வியந்திருக்கிறேன்.. என்னடா... கரகாட்டகாரன் படத்தில் மாங்குயிலே பூங்குயிலே என்று ஆடிகொண்டிருந்தவன் இங்கே கோவையில் சாட்சி சொல்லுகிறார் என்று.. வாழ்க்கையில் நடந்த ஓர் சம்பவத்தை பகிர்ந்து கொள்வது மிகப்பெரிய பாக்கியம். 

நான் மதுரை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து சினிமா வாய்ப்பை தேடி சென்னை வந்தேன். அங்கே உதவி டைரக்டர், டைரக்டர் பின் நடிகர் என்று வளர்ந்து பல திரைப்படங்களில் நடித்தேன். அனைத்து படங்களும் மிகபெரிய வெற்றியை கண்டது. எல்லோருக்கும் ராமராஜன் யார் என்று தெரிந்தது. பின்பு அரசியலில் அறிமுகமாகி மாண்புமிகு அம்மா புரட்சிதலைவி ஜெயலலிதா மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனேன்.. இந்த பாதையில் வந்து கொண்டு இருந்த பொது எல்லோருக்கும் வரும் சோதனை போல எனக்கும் சோதனை வர ஆரம்பித்தது. 

2010 ம் ஆண்டு ஓர் இடத்திற்கு என் காரில் சென்று கொண்டிருந்தேன். அந்நேரத்தில் மிகப்பெரிய கார் விபத்தில் மாட்டி கொண்டேன். அந்த கார் விபத்தில் என் நண்பர் அந்த இடத்திலேயே மரித்து விட்டார். என்னுடன் இருந்த இன்னொரு நண்பர் பால்தங்கராஜன் என்பவரும் இருந்தார். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 15 நாட்களாக சுய நினைவை இழந்து படுத்த படுக்கையாக இருந்தேன். 

அங்கு வந்த பலரும் என்னை பார்த்து இவர் பிழைப்பாரா, பேசுவாரா, பழைய நினைவுகள் வருமா என்று வருத்தப்பட்டனர். பால்தங்கராஜ் இயேசுவை வழிபட்டு கொண்டிருப்பவர். அவர் என்னை மருத்தவமனையில் முழுவதுமாக கவனித்து கொண்டார். சுயநினைவு திரும்பினவுடன் நான் புலம்ப ஆரம்பித்தேன். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை..

இதை கவனித்த தங்கராஜ் அவர்கள் "தைரியமாக இருங்கள், ஒன்றும் ஆகாது. நான் ஓர் போதகரை அழைத்து வருகிறேன்" என்று கூறிவிட்டு ஓர் போதகரை அழைத்து வந்தார். அந்த போதகர் என் தலையில் கை வைத்து ஜெபம் செய்தார். எனக்கு ஏசுவே நேராக வந்து என் தலையில் கைவைத்தது போல உணர்ந்தேன். 

நான் இன்று உங்கள் முன் நின்று பேசுகிறேன். பல இடங்களுக்கு போகிறேன் என்றால் அதற்கு இயேசு கிறிஸ்துவே காரணம். முன்பெல்லாம் ஓர் பிரச்சினை என்றால் பல கோவில்களுக்கு சென்று வருவோம். ஆனால் மனதார இயேசுவை நினைத்தால் குணமாகும் என்பதை நன்றாக புரிந்து கொண்டேன். வாழ்க்கையில் நமக்கு பிரச்சினை அதிகமாக வருவதுண்டு. அந்த நேரத்தில் நம்மோடு இருப்பவர் கர்த்தர் மாத்திரமே... 

கர்த்தரை நம்பினோர் கைவிடப்படமாட்டார். பிரட்சினைகள் வரும்போது பல யோசனைகள் நம் மனதில் தோன்றி சஞ்சலப்படும். அந்நேரத்தில் ஆலயத்திற்குள் சென்று இயேசுவை உண்மையாய் வணங்குவோம் என்றால் தேவன் பதில் கொடுப்பார். நான் கதை சொல்லவில்லை. என் கண்முன் பார்த்த சம்பவங்கள் அது.

நான் நடிகர் செந்திலையும் அழைத்தேன். அவரும் பல நிலைகளில் கஷ்டப்பட்டு பல இடங்களுக்கு சென்று பிறகு இயேசுவை வணங்க ஆரம்பித்தார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று சாட்சி சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். ஆனால் அவர் வேறு வேலைகள் இருப்பதால் வர முடியவில்லை. 

கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தால் நிச்சயமாக கர்த்தர் உனக்கு துணை நிர்ப்பார் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. இந்த சாட்சியை பகிர்ந்து கொள்ள செய்த ஏசுவிற்கு ஆல்லேலூயா ஸ்தோத்திரம் என்று கூறி முடிக்கிறேன்...

ஆமென்...

 

www.facebook.com/GoodNewsDailytamil

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர்களும் நடிகைகளும் சாதாரண மனிதர்களே. தாங்கள் விரும்பிய சமயத்துக்கு மாறுவது அல்லது அதைப் பின்பற்றுவது அவரவர் சொந்த விடயம். ஆனால் அவர்களைத் தூக்கிப் பிடித்து தலையில் ஆடுவதும் அவர்களை வைத்து விளம்பரம் செய்வதும் கேவலமானது. இப்படியான விசிலடிச்சான் குஞ்சுகளாக தமிழர்கள் இருப்பது துன்பகரமான நிகழ்வுகள். ஒருவனின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைப்பதும் அதனைப் பகிரங்கப் படுத்தத் தூண்டுவதும் அருவருப்பான செயல்கள்.

 

எவரும் எதையும் பின்பற்றி விட்டுப் போகட்டும். ராமராசனுக்கு இயேசு அற்புதம் நிகழ்த்தினாரா இல்லையா என்பது அவருக்கே வெளிச்சம்.

 

தொடர்பான காணொளி

///http://www.youtube.com/watch?v=98Lck6x30EQ///

Link to comment
Share on other sites

நடிகர் செந்திலும் ....

 

இந்துமதத்திற்கு வந்த சோதனை....

 

மேற்கு நாடுகளில் தேவாலயங்கள் விற்கப்படுவது போல்...இந்தியாவில் கோவில்களும் விற்கப்படும் நாள் தொலைவில் இல்லை போலும்...

Link to comment
Share on other sites

இந்த மதம் மாறுவது எல்லாம் demand போன நடிகர்கள்.....

இந்தியாவை சுற்றி இஸ்லாமிய மதம் பரப்பப்பட்டும் இன்றும் இந்தியாவில் எத்தனையோ முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்கு பிறகும் இந்துமதம் நீடித்து நிலைத்து நிக்குது ஆகவே ஒரு சிலர் மாறுகின்றார்கள் என்றதுக்காக கோவில்கள் விற்பனை செய்யப்படும் என்பதெல்லாம் கற்பனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மதம் மாறுவது எல்லாம் demand போன நடிகர்கள்.....

இந்தியாவை சுற்றி இஸ்லாமிய மதம் பரப்பப்பட்டும் இன்றும் இந்தியாவில் எத்தனையோ முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்கு பிறகும் இந்துமதம் நீடித்து நிலைத்து நிக்குது ஆகவே ஒரு சிலர் மாறுகின்றார்கள் என்றதுக்காக கோவில்கள் விற்பனை செய்யப்படும் என்பதெல்லாம் கற்பனை

 

 

அவர் அப்படித்தான் எழுதுவார்

தமிழர்கள்  துடித்தால் மகிழ்ச்சி  அவருக்கு.. :(  :(

வேற எதை அவரிடம் எதிர்பார்க்கின்றீர்கள்??

இதுக்கெல்லாம் நீங்கள் உணர்ச்சி  வசப்படுவது அநாவசியம்..... :(

Link to comment
Share on other sites

மதம் பரப்பும் சாத்தான்களை விரட்டி அடிப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் நினைக்கிறேன் இந்து மத மக்கள் மதம் மாறுவதை தடுக்கவே.
ராஜேந்தர் அவர்கள் மதம் மாறி இருப்பார் என்று.
அவர் மேடையில் ஏறி ........... ஜேசுவை பற்றி பேச தொடங்கினால் ..........
அனேக அல்லலுயா கூட்டம் ...........
இதிலும்விட நரகம் மேல் என்று ஓடவே சாத்தியம் உண்டு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தினர் தான் சமயம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தினர் தான் சமயம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் :(

 

அவர்களுடைய மதத்தின் புனிதங்கள் வர்களுக்கு புரியவில்லை.
நீ இன்ன தொழில் செய்பவன் .... கோவிலுக்குள் வாராதே என்று எமது சமய 
முதியோர்கள் தடுப்பதை அவர்கள் துன்பமாக பார்கிறார்கள் போல்.
அது எவளு இன்பம் என்பதை தடுப்பவர்கள்தான் அறிவார்கள்.
இவர்களுக்கு இடுக்கண் வரும்கால் நக தெரியவில்லை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


கர்த்தர் நடிகர்கள் மூலமாக வருகின்றார் என்பது என் கண்டுபிடிப்பு.. அதனால் குதிரைவித்த பிசாசினைப் பின்பற்றுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


பிசாசு இல்லை என்று சொல்பவர்களுக்காக...


பிசாசுகள் மீது நம்பிக்கை வருகின்றது... பிசாசினை ஆவியாக மாற்றலாம் வாருங்கள்!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


பிசாசுகளை விரட்டி அடிக்க பல வழிகள்  இருக்கிறது.
இந்தியாவில் பிறந்து இந்து பாலை குடித்து வளந்தவர்களை எளிதாக .........
பேய் பிசாசிடம் இருந்து பிரிக்க முடியாது.
உலக மகா பேயோடு வாழ்ந்த அதிர்வு பரம்பரைக்கும் இருக்கும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எங்கள் மதத்தில் இருக்கும் அழுக்கை மறைக்க அடுத்த மதத்தை நாடும்.
அயோக்கியத்தனங்களை இனியாவது கைவிட்டு.
கேடு கெட்டு போய்  கொண்டிருக்கும் இந்துமத்ததை ............பற்றி கொஞ்சமாவது சிந்திக்க தொடங்கவேண்டும்.
 
எங்களிடம் இந்துமதம் வரும்போது கேள்விகள் இருக்கவில்லை .....
பயத்தினால்தான் கடவுளை நம்பினோம்.
 
உண்மையில் கேள்விகள் வந்தபோது ....
விடைகள் இருக்கவில்லை.
 
அடுத்த தலைமுறை .... குறிப்பாக புலம்பெயர்ந்தவர்கள் .. கேள்விகள் கேட்கிறார்கள்.
பெறோரிடம் விடைகள் இல்லை.
ஒரு வேதாந்தத்தை நெடு நாளுக்கு வாழவைக்க முடியாது.
 
விசர் கூத்தாடுவதை நிறுத்திவிட்டு.
தனது மதத்தை ஏற்று ...... அதை புனிதமாக்குபவனே உண்மையான மதவாதி.
அடுத்த மதத்தின் கேவலங்களோடு ... இந்துமதத்தை வாழ வைக்க நினைப்பது மிகவும் அருவெறுப்பானது.
 
ஆயுள்வேதம் ...
யோகா ...
சித்தம் .....
என்று பல அருமைகள் இந்து மதத்துடன் ஒட்டி இருக்கிறது.
அவை இந்தியாவில் இலங்கையில் இலாது போவதற்கு விசர் கூத்தாடும் கூத்தாடிகளே முதல் காரணம்.
 
அருமைகள் மறைந்து .....
வெறும் பித்தலாட்டங்கள் இன்று மதமாக இருக்கிறது. 
அதனால்தான் பலர் மதம் பிடித்து அலைகிறார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிகளான சாமிகள் பற்றிய தகவல்கள் வரும்போதோ, தண்டிக்கும்போது அதை இந்துக்கள் ஏற்கின்றார்கள். குற்றவாளிச் சாமிகள் பற்றிய நீதிமன்றத் தீர்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.  இதில் இந்து என்ற  வரையறை இல்லை. அதில் தெளிவாகத் தான் இருக்கின்றார்கள்.

தவிர, இடையிடையே நீங்கள் ஏதோ ஞானி மாிதரி எழுதிக் கொண்டிருப்பது கொஞ்சம் சகிக்க முடியாமல் இருக்கின்றது. முற்றுப்புள்ளிகளுக்கு முற்றுப்புள்ளி  இல்லையா?

 

மதவெறி பற்றிக் கதைப்பதே, இப்படியான பிள்ளைபிடிகாரர்களால் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் 

உங்களுக்கு கிறிஸ்தவம் மீது என்ன கோபமோ யாமறியோம் பராபரமே 

 

 

குற்றவாளிகளான சாமிகள் பற்றிய தகவல்கள் வரும்போதோ, தண்டிக்கும்போது அதை இந்துக்கள் ஏற்கின்றார்கள். குற்றவாளிச் சாமிகள் பற்றிய நீதிமன்றத் தீர்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.  இதில் இந்து என்ற  வரையறை இல்லை. அதில் தெளிவாகத் தான் இருக்கின்றார்கள்.

அன்ன இன்னும் அம்மா அப்பா சாமிகள் இந்தியாவில் அருள் பாலித்துகொண்டு தான் இருக்கிறார்கள்
அதை நம்பி அங்க ஒரு கூட்டமும் இங்கிருந்து ஒரு கூட்டமும் பின்னுக்கு திரிஞ்சு கொண்டு தான் இருக்கு 

நித்தியானந்தா இன்னும் குண்டலினியை எழுப்பிக்கொண்டு தான் இருக்கிறார் 

HomoSex சாய்பாபாவை இன்னும் ஒரு கூட்டம் கும்பிட்டு கொண்டு தான் திரியுது நிறைய Duplicate சாய் பாபாக்களும் வந்து கொண்டிருக்கிறார்கள் 

 

பாவம் பிரேமானந்தா இவர்களை போல் பிரபல்யம் அடைய முன் மாட்டியதால் கம்பி எண்ணுகிறார்

 

இவையனைத்தையும் இந்து மதத்தை கேவலப்படுத்த நான் சொல்லவில்லை குற்றம் எங்கும்  உள்ளது  அது மதத்தில் அல்ல

பின்பற்றுபவர் மனத்தில்  

 

எந்த மதத்தை பின்பற்றுபவர்களானாலும் அதனை உண்மையாக பின்பற்றினால் இப்படி உங்களை போல் மதம் பிடித்து திரிய மாட்டார்கள் .....

 

நான் ஒரு கிறிஸ்தவன் ஆனாலும் எல்லா மதத்தையும் மதிக்கிறேன் ,பௌத்தத்தையும் தான் காரணம் பௌத்தம் இங்கே கொலைகளை செய்யவில்லை பௌத்த மதம் பிடித்தவர்கள் தான் அதனை செய்தார்கள் 

 

என்னுடைய இந்து நண்பர்களை விட எனக்கு புராணங்களிலும் இதிஹாசங்களிலும் அறிவு அதிகம் அதனை பெருமையாக கூட நான் சில நேரம் நண்பர்களிடம் சொல்வதுண்டு 

 

இறுதியாக ஒன்றை கூறுகிறேன் உடனே மதம் பரப்புகிறேன் என்று தூக்கிக் கொண்டு வந்துவிடாதீர்கள் 

இது கிறீஸ்தவனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும் என்று எதிர் பார்க்கிறேன்

இயேசு இரண்டு வசனங்கள் கூறியிருக்கிறார்

1. உங்களுள் ஒரு பாவமும் அறியாதவர்கள் அவள் மீது முதற்கல்லை எறியுங்கள்

2. நீ உண் கண்ணிலிருக்கும் உத்திரத்தை உணராமல் உண் சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பை பார்க்கிறதென்ன

உன் கண்ணில் இருக்கும் விட்டத்தை எடுத்து ஏறி பின் உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க நன்றாக கண் தெரியும்

 

விளக்கம் அவசியமில்லை என்று நினைக்கிறேன் தொப்பி அளவானவர்கள் எடுத்து போட்டு கொள்ளுங்கள் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பிறப்பில் இந்து மதமாக இருந்தாலும், எனக்குக் கிறிஸ்தவத்தையும் மிகவும் பிடிக்கும்.  சேர்ச்சில் அவர்கள் பூசை செய்யும் விதம், பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் விதம் மற்றும் பைபளில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள்  மிகவும் பிடிக்கும்.  எமது ஐயர்களைவிடச் சேர்ச்சைச் சேர்ந்தவர்கள் எமக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள்.  எமது பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வைச் சொல்வார்கள் அல்லது மிகவும் ஆறுதலாக இருப்பார்கள்.  இதனை எமது ஐயர்மார் செய்து நான் கேள்விப்பட்டதுகூட இல்லை.  அதேபோல, இந்து மதத்தில் மூலம் எமக்குச் சொல்லப்பட்ட பல விடயங்கள் மூடநம்பிக்கைகளாகவே எமக்குத் தென்பட்டது.  நாம் அவற்றை வெளிநாட்டிற்கு வந்து பின்பு பிரித்தறிந்த பின்னரே அவற்றின் உண்மையான விபரங்கள் தெரிய வந்தன.

 

 

மதங்கள் என்பறை மனிதனால் உருவாக்கப்பட்டவை.  தூயவன் குறிப்பிடும் மதங்கள் 21ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் சில சுயநல மனிதர்களால் வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவை.  அதனை வைத்து முழுக் கிறிஸ்தவத்தையும் குறை கூறுவது பொருத்தமற்றது என்பதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை.  கத்தோலிக்கம், கிறிஸ்தவம் வேறு.  இவர் குறிப்பிடும் மதங்கள் வேறு.  இவற்றின் வேறுபாடுகளை அறிந்துவிட்டு இங்கு எழுதட்டும்.  மேலதிகமாக விவாதிக்கலாம்.  ஆனால், அரைகுறையாக தெரிந்து கொண்டு எழுதுபவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாது.

 

முடிந்தால் ஆங்கிலத்திலுள்ள பைபிளை வாசியுங்கள்.  ஏனெனில், தமிழில் பைபிளை மொழிபெயர்த்திருக்கும் விதம் புதியவர்களுக்கு தவறான கண்ணோட்டத்தையே ஏற்படுத்தும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.