Jump to content

இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்


Recommended Posts

யாழ்ப்பாண மேட்டுக்குடிகள் வலிந்திழுத்த இந்து மதம் தமிழீழத்துக்கு பிரதான தடைக்கல் எனில்...??? உந்த டக்ள்ஸ், கருணா, பிள்ளையான் கோஷ்டிகள் எல்லாம் மேட்டுக்குடிகளா?

 

சமயத்தை சமயமாக பார்ப்பதற்கு கொஞ்சமாலும் சமய நூல்களைப்பற்றிய அறிவு தேவை... சுலபமாகக் கிடைக்கும் அரசியல் அறிவைக்கொண்டு சமயம் உட்பட எல்லாவற்றையும் அளக்க முற்படாதீர்கள்!

 

:icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ்சூரியன்

கிறிஸ்தவன் [கத்தோலிக்கன்  ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன்

சண்டமாருதன்

நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.   தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.   ஒரு இந்தியப் பார்ப்பனனு

சண்டமாருதன்

சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூற

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியத் தமிழருக்கும், எமக்கும் பிரச்சனை என்பது இந்தியப் பார்ப்பானிகள் தானாம் பிரச்சனை எங்கே போய்த் தலையை முட்ட? ஏதாவது வைத்தியசாலையில் இருந்து தப்பிய மாதிரி செய்தி யாராச்சும் படித்தீர்களா?

சிவசேனை என்பது, சிவனுடைய சேனையல்ல, மராட்டிய அரசன் வீரசிவாஜி சேனை என்பதே அர்த்தமாகும்.

விளலுக்கு நீர் இறைக்க நேரமில்லை... எனக்கு காலையில் வடிவாகப் போகாததற்கும், இந்து பார்ப்பான, ஆதிக்க, மதவெறி.....க்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்கா என  ஆராய வேண்டும்.

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

ஈழத்தில் இந்துத்துவம் என்பது யாழ்பாண மேட்டுக்குடிகள் வலிந்திழுத்த சாக்கடை.

 

இந்துத்துவம் பற்றி பேச வந்த கோமாளிகளுக்கு அதை விட்டுவிட்டு  "ஈழத்தில் இந்துதுவம்" என்றதை வரவிலக்ணப்படுத்த வேண்டி நேர்ந்துவிட்டது. வவுனியா மந்திரிகளுக்கு நோட்டீசை அடிக்கும் போது  இந்த சிக்கல் ஏற்படவில்லை. விவாதத்தில் தோற்ற போது வந்த கோபத்தால் சம்பந்தருக்கு கழுதைப்பால் பருக்கி முடிய "ஈழத்தில் இந்துத்துவம்" பற்றி புதிய கோட்பாடு எழுத வேண்டிய தேவை வந்திருக்கு.

 

யாழ்ப்பாணத்தில் காணப்படும் சாதிகள் யாவும் இந்துத்துவ முறையில் இறைவனின் காலில் பிறந்த சூத்திரர்ர்களே. அதாவது இவர்களில் யர்ரும் (பிள்ளையோ தகப்பனோ எந்த அடிதொடியில் வந்தாலும்) தீண்டப்படாத சூத்திரகள் மட்டுமே யாழ்ப்பாணத்தில் வாழ்கிறார்கள். எனவே வவுனியா நோட்டீசுக்கு இங்கே ஒரு திருத்தம் பதியப்படுகிறது. அதாவது "ஈழத்தில் இந்துத்துவம்.". (இந்து வல்லாத சண்டமாருதனுக்கு விளங்கியிருக்கும் இந்த புதிய சிக்கல் இங்கே சாதித்துவம் பற்றி விவாதிக்கும் பலருக்கு இன்னும் புரிய வரவில்லை. அதனால் அவர் இவர்கள் கண்டுபிடிக்க முதல் திருத்தமும் போட்டுவிட்டார்) .

 

இந்துத்துவத்துக்கு எதிரான காங்கிரசுக்காக உழைக்கும் மளையாளிகளின் வரவிலக்கணத்தில் ஈழத்தவர் என்றால் தீண்டத்தகாதவர்கள். இந்த சிக்கல் வுவுனியா நோட்டிசு நேரம் அதை வரைந்தவர்களுக்கு தெரிந்திருக்க வில்லை. இப்போது திருத்தி விட்டார்கள்.

 

அதாவது மாற்ற வேண்டியது இந்தியா எங்கும் பரந்து விரிந்திருக்கும் இந்துமதம் அல்ல். பார்ப்பணியம் அல்ல. வர்ணாசரியம் கொள்கைகள் அல்ல. இந்து மதத்தில் இருக்கும் சாதியம் அல்ல. சூதிர குடிகள் வாழும் யாழ்பாணத்தில் ஏழை பணக்காறன் என்ற பிரிவால் வரும் மேட்டுக்குடித்தனம்தானாம் திருத்தப்படவேண்டியது.

 

அப்பாடா, இதில் ஒருவர் மட்டும் இந்த அரச எழுத்தாளர்களுக்கு நன்றி சொல்வார். அவர் செயலாளர் நாயகம். அவர் இந்துவாக இல்லாதால் அவர் நடத்தும் ஆட்சிக்கு இந்த மேட்டுக்குடி வரைவிலக்கணம் பொருந்தது. ஆனால் இராமநாதன் ஐங்கரன் என்ன சொல்வாரோ தெரிய்வில்லை.  

 

சுத்த முட்டாள் தனமான கோமளிகள் ஐயா இந்த அரச எழுத்தாளர்கள் . "மலை வயிறு நொந்து சுண்டெலியைப் பெற்ற " கதையாகியிருக்கிறார்களே இந்தப் பேதைகள்.

 

இரண்டே தெரிவுகள் தான்; ஒன்று இந்துவாய் இருத்தல் இல்லையேல் தமிழனாய் இருத்தல். இந்துவாயும் தமிழனாயும் கடசிவரை இருக்கமுடியாது. இந்துதுவ வாதியாய் இருந்துகொண்டு தமிழனாய் இருப்பதென்பது சுத்த கோமாளித்தனம். இந்துத்துவ வததியாய் இருந்த தமிழ்த்தேசீயம் பற்றி கற்பனையும் பண்ண முடியாத. தமிழ்த்தேசீயத்திற்கு முதல் விரோதியே இந்துத்துவம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இங்கே பலரது தேசீய முகங்கள் கிழிந்து தொங்குகின்றது.

 

நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை நோட்டிசு அடித்து போட்ட மெக்காவின் சிவசேனையை வவுனியாவில் சந்தித்து சொல்லிவிடுவ்துதானே. அது சரி யாழ்ப்பாண மேட்டுக்குடி எப்போது வவுனியா சென்றது.  அல்லது இப்போது வவுனியாவிலா இந்துத்துவ பிராமணர் இருக்கிறார்கள்?  இல்லை, நோட்டிசை வவுனியாவில் வைத்து எழுதி முடிய விநியோகிக்கும் ஒற்றர் கூட்டம் யாழ்ப்பாணம் போக மறுத்துவிட்டதா. அப்படியாயின் இது பிரபல காணிபறிக்கும் வவுனியா மந்திரிக்கு பயங்கர தோல்வி. இன்னொருமுறை இவர் இப்படி தோற்றால் செயலாளர் நாயகம் மாதிரியே அரச குடும்பத்தால் ஒதுக்குப்பப்பட போகிறகிறர். அவருக்கு இரண்டேதான் தெரிவுகள். அவர் வவுனியாவில் நோட்டிசை தனது கம்பனிகளில் மலிவாக அடிக்கலாம் ஆனால் கஸ்டம், செல்வை பாராமல் யாழ்ப்பாணம் கொண்டு சென்று சூத்திர பிள்ளை மேட்டுக்குடிகளிடம் விநியோகிக்க வேண்டும். இல்லையேல் ஒதுக்கப்படுவார். 

 

நோட்டிசை யாழ்ப்பாணத்தில் பிள்ளைகள் வீடுகளில் வினியோகிக்க முடியவில்லையாயின்,  "ஈழத்து இந்துத்துவம்" என்றதை நோட்டிசை விநியோகப்படுத்திய இடமான "வவுனியா மேட்டுக்குடிகள் " என்றல்லவா இங்கே வரவிலக்கணபடுத்தப்பட்டிருக்க வேண்டும். இடண்டும் இல்லாத கோமாளிதனமான சாம்பாராக யாழ்ப்பாணத்து  சூத்திர பிள்ளைகள் குடும்பங்களை ஆதரித்து மெக்கா சிவசேனை  வவினியாவில் இந்துத்துவ நோட்டிசுகளை வினியோகிப்பது வழமையான சிங்கள இராஜதந்திரத்தின் முத்திரை. இள்வரசர் தம்பி பாணி மோடையா அலுவல். 

 

முகமே இல்லாத சிலருக்கு கிழிய கோவணும் இல்லை. வட்டுக்கோட்டை தீர்மானத்தை நடத்தி ஈழத்தேசியத்தில் அடிக்கல்லை போட்டவர் கிறிஸ்தவனான SJV. அவரின் பின்னால் நின்றவர்களில் எல்லோரும் இந்துக்கள்.   SJV யின் தேசியத்தை எதிர்த்தவர் மிகப்பெரிய இந்துத்துவ எதிர்ப்பாளி V.பொன்னம் பலம். டன் கணக்காக பொன்னம் பலத்திற்கு பின்னால் பணத்தை இறைத்த சிறிமா, SJVயிடம் பொன்னம்பலம் தோற்றவுடன் திடீரென கையை விட்டா.   மிகப்பெரிய இந்துத்துவ எதிர்ப்பாளி பொன்னம் பலம், தன்னை ஈழத்து அண்ணத்துரையாக தேர்தல் கூட்டங்களில் உருவகப்படுத்திய பின்னர், சிறிய வெற்றியைத்தன்னும் பிள்ளைகள் குடும்பங்கள் அல்லாதவர்களிடமிருந்து அடைய முடியாமல் போனவுடன் சிறிமா கைவிட, அகதியாக தமிழரோடு தமிழராக கனடா வந்தார். இதுதான் இல்லாத "ஈழத்து இந்துத்துவ " எதிர்ப்பாளியின் ஈழதேசிய எதிர்ப்பு சரித்திரம். அந்த V.P. யின் தோல்வியை சிறிமா எற்க மறுத்து, பதியுதினை வைத்து யாழ்ப்பாண இளைஞர்களை புலிகளாக மாற்றினார். அதையேதான் இந்த வுவுனியா ஒற்றர் படையை வைத்து கைமுணு குடும்பம் செய்ய பார்த்து தோல்வி காண்கிறதும்.

 

தோழர்கள்  வல்கம்பாகு, சண்முகதாசன், காராள சிங்கம், வி. பொன்னம்பலம் யாருமே இந்துத்துவத எதிர்ப்பு பேசி  யாழில் எந்த தொகுதியும் வென்றது கிடையாது.  யாழில் மாவிட்டபுரம் கந்த சாமி கோவில் ஒரு வித்தியாசமான அமைப்பு. அதை பயன் படுத்தி, ஐயர்மாரின் விருபத்திற்கு எதிராக நடந்து,  உண்மையான இந்துத்துவவாதி வவுனியா எம்.பி சுந்தர்லிங்கம் அங்கே புகுந்து சாதியப் பிரிவுகளை வைத்தார். அவரும் V.Pயை விட எதையும் சாதிக்க வில்லை. தமிழ் மக்கள் எந்த கதையும் கேளாமல் ஈழதேசியத்தையும், சுதந்திரத்தையும் மட்டும் வேண்டி நின்று SJVயை மட்டும் தெரிந்தார்கள். 

 

தான் கிறிஸ்த்தவன் என்ற முறையில் தேவை இல்லாமல் இந்துத்துவ கதைகளில் இறங்காமல் தேசியம் பேசிய SJVவின் கட்சி இன்று பலமடங்கு பலம் வாய்ந்ததாக கூட்டமைப்பாக மாறியிருக்கு. இது சரித்திரம். இதில் எங்கே இந்துத்துவ எதிர்ப்பு தேசியத்தை காப்பாற்றியது? இந்துத்துவ எதிர்ப்பு என்ற பெயரில் தேசியத்தை சிதைக்க முயன்ற்வர்களுக்கு கிழிய கோமணமும்,  முகமும் இல்லை, முகவரி கூட இல்லாமல் போய்விட்டார்கள்.

 

மேலும் உண்மையான சரித்திர ஆசிரியர்கள் புலிகள் தமிழருக்காக ஒரு அரசுவைத்திருந்த போது சாதிய பேதங்களுகு இடம் கொடுக்கவில்லை.என்பதை தெரிந்து வைத்திருக்கிறாகள்.  இருந்த்தும் அவர்கள் தோற்றார்கள். அவர்களின் தோல்விக்கான காட்டிக்கொடுப்பு ந்டந்தது கோத்தாவல் தெரியப்பட்ட தமிழ் ஒற்றர்களால்.  இவர்கள் தங்களையும் கெடுத்து தமிழரையும் கெடுத்தார்கள். 

 

இந்துத்துவத்தின் அடிப்படையே தேசீய இனங்களை சாதீயம் ஏற்றதாழ்வுகள் ஊடாக சிதைப்பதே ஆகும். இந்தியாவில் அதுவே காலாகாலமாக நடந்துவருகின்றது. இந்துத்துவம் இருக்கும் வரை ஒன்றுபட்ட சமூகம் ஒன்றுபட்ட தேசீய இனம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

 

மதம் இல்லாத தேவதைகளை வணங்கும் ஆரியரினதுதான் வர்ணப்பிரிவு. பிரதானமாக 2500 ஆண்டுகளாகத்தான் இது இருக்கு. காலம் காலம் என்பது கதை அடிப்பு. இதில்தான் இந்துதுவம், பார்பணியம் எல்லாம்ற் இருக்கு. இந்திய சரித்திரத்தை படியாமல் மெக்க சரித்திரத்தை படித்தவர்களுக்கு இதில் இருக்கும் பாகுபாடு விளங்க போவதில்லை. வர்ணப்பிரிவில் பிள்ளைகள் குடும்பங்கள் சூதிரர்களே. அவர்களும் கோவில் உள்ளே செல்வதில்லை என்பது இந்து கோவில் ஒன்றுக்கு போக உரிமை மறுக்கப்படிருக்கும் மெக்கா மதத்தினருக்கு அறிய வாய்ப்பில்லை. உண்மையை தெரியாமல் கொழும்பில் வாங்கி மட்டும் பதியத்தான் முடியும். அவர்களின் மரமண்டைக்குள் இது இறங்காது. 

 

இந்துமதத்துக்குள் ஒரு தேசீய இனம் உருவாவதை இந்துத்துவம் எக்காலத்திலும் அனுமதிக்காது அதற்கான அடிப்படையும் இல்லை. ஈழத்தில் ஒரு தேசீய இனம் உருவாவது என்பதுக்கு இந்திய இந்துத்துவம் தலைகீழாய் நின்றாலும் அனுமதிக்காது.

 

சோவியத் சார்பு  இந்திராகாந்தி  புலிகளைச்சாட்டி பாகிஸ்தானுக்கு செய்ததை இலங்கையில்  செய்ய போகிறார் என்றதை அறிந்த அமெரிக்கா புலிகளை தடை செய்தது. ஆனால் ரஜீவ் ஆயுத கமிசன் அடிக்க போய் JRஇடமும் விஜித முனியிடமும் வாங்கினார். இதை  அரச அடிவருடிகள் முசோலினியின் இத்தாலிய பாதுகாப்புக் கொள்ளையாக வர்ணித்தார்கள். ஆனால் வாஜ்பய் காலத்தில் இத்தாலிய பாதுகாப்பு கொள்ளை என்று ஒன்று இருக்கவில்லை. இன்று இந்துத்துவ எதிர்ப்புக் கொள்கை காங்கிரஸ் பயங்கர தோல்வியை சந்திக்க போகிறார்கள்.  இதனால் அரசின் இத்தலிய பாதுகப்புக்கொள்ளை தத்துவஞானிகள் முகமூடி கிழிந்த்து தலைமாறைவாகிவிட்டார்கள். சிவ சேனையின் கூட்டாளி இந்துத்துவ BJP,  தான் பதவிக்கு வந்தவுடன் சிங்கள அரசுக்கு ஆயுத உதவி நிறுத்தப்படும் என்றும் அறிக்கைவிட்டுவிட்டது.  மேலும் தமிழ் நாட்டு BJP கள் தாங்கள் இராணுவத்தை அனுப்பி த்மிழ் ஈழம் பிரிப்பார்கள் என்று பிரச்சாரம் செய்யவா என்று ஈழக்கட்சிகளை கேட்டும் இருக்கிறார்கள். எனவே பழைய இத்தாலிய பாது கொள்ளை மூலம் தனி ஈழம் கிடைக்காது என்ற பிலாத்தலை விட்டுவிட்டு இந்துத்துவத்தால்தான் தனி ஈழம் கிடைக்காது என்ற புதிய பிலாத்தல் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த பிலாத்தால் காங்கிரசின் இத்தாலிய பாதுகாப்பு கொள்ளை காலத்தில் தலை எடுக்கவில்லை.  எதை இந்த வவுனிய மந்திரிகள் எழுதினாலும், யந்த நாளில் இந்திராகந்தி தமிழருடன்தான் இருந்தார். வாய்ஜ்பாய் தமிழருடந்தான் இருந்தார். மோடியின் நிலையும் அதுவே. தனிய இந்துத்துவ எதிப்புக்கொளகை காங்கிரசின் இத்தாலிய சோனியாமட்டும்தான யாழ்ப்பாண மேட்டுக்குடிகளுக்கு எதிராக இந்துத்துவ கொள்ளையில் இறங்கினார்.

 

இலங்கை அரசின்  இந்த புதிய பயத்தை பார்த்தால் "BJP இலங்கைக்கு திரும்ப இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழ் ஈழம் ஏற்படுத்த முயல்கின்றது" என்ற கதை உண்மையாக இருக்க வேண்டுவும். 

 

 

சிங்களம் ஒரு தேசீய இனம் என்பது அது பௌத்தம் சர்ந்து இருப்பதால். நாளை இஸ்லாமியத் தமிழர்கள் ஒரு தேசீய அலகாக மாறக்கூடும் அதற்கும் அவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பது காரணமாகும். ஆனால் இந்துக்கள் என்பவர்கள் கடசவரை ஒரு தேசீய இனமாக முடியவே முடியாது. ஏனெனில் தேசீய இனக் கட்டமைப்புகளை சிதைக்க ஏற்பாடு செய்யப்பட்டதே இந்துத்துவம்.

 

"சிங்களம் ஒரு தேசீய இனம் என்பது அது பௌத்தம் சர்ந்து இருப்பதால்." இது எழுதி எழுதியும் இலங்கை சரித்திரத்தை வாசிக்க மறுப்பதால் வருவது. இலங்கைக்கு வங்காளிகள் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தார்கள்(மகாநாமத்தின் படி). புத்தம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. சிங்கள தேசிய அடையாளம் மாகாநாம புத்தத்தால் பிற்காலம் 1400 ஆண்டுகளுக்கு முன்னர்(6ம் நூறாண்டு) ஏற்படுத்தப்பட்டது. அதாவது சிங்கள அடையாளம் இல்லாமல் வங்காளிகள் 1300 ஆண்டுகள் இருந்த பின்னர் மகாநாம சிங்கள பௌத்த அடையாளம் அவர்களுக்கு வந்தது. அதன் பின்னர் அவர்கள் தங்களை இழந்தார்கள். ஆனால் 500 ஆண்டுகள் கூட மகாநாம அடையாளம்  நிலைக்கவில்லை. உலகின் மிக நீண்ட கால  சாம்பிராஜ்யதை கட்டி வைத்திருந்த இந்துத்துவ தமிழ சோழர் இலங்கையில் புகுந்து வடக்கு கிழக்கு அரசுகளை ஏற்படுத்திவிட்டார்கள்.  அதில் இருந்து 500 ஆண்டுகள் கழிய முன்னர் கோட்டை ராஜதானியை போத்துகீசரை அரண்மனைக்கு அழைத்துவந்து டொனாகதிரானாவை (இவள் ஒரு அரசகுமாரி அல்ல. அன்றைய மேசை துடைத்த முசோலினி அம்மா,  போதுக்கீசர் சிங்கள அரசில் பங்கு கேட்க  சிங்கள இராஜாவை முடித்தாள்) திருமணம் செய்து , சிங்களவர்கள் போத்துக்கீசரிடம் கொடுத்துவிட்டார்கள். இந்துத்துவ ராஜசிங்கன் 1800 வரை கேட்டுகெட்ட மோடையாக்களுக்காக ஒரு சிங்கள் ராஜதானியை ந்டத்திவந்தான். சிங்கள் எகிலப்பொலவும், பிலிமாதலவும் தம்முள் சண்டை இட்டுக்கொண்டு கண்டியையும் வெள்ளைக்காரகளை அழைத்துவந்து கொடுத்துவிட்டார்கள்.  இது தனி சிங்கள பௌத்தம் செய்த பெரிய கைங்கரியங்கள். எங்களுக்கு இலங்கை சரித்திரமும் தெரியும் சிங்கள் அடையாளமும் தெரியும் மெக்கா சரித்திரமும் தெரியும். இஸ்லாமியரின்  இலங்கைத் தனி அலகு பற்றி நான் இங்கு எழுதவில்லை. அப்படி எழுதினால் வவுனியா மந்திரியின் நோட்டிசால் நானும் இழுப்பட்டு போனதாகும். ஆனால ஈரான், ஈராக், பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்த்தான், சிரியா, பலஸ்தீனம், மற்றும் எல்லா முஸ்லீம் நாடுகளும் தங்களுள் வைத்திருக்கும் முஸ்லீம் அடையாளத்தால் தமக்குத்தான் குண்டு வெடிப்ப்தை விட இந்தியாவின் இந்த்துத்துவ அடையாளம் மேல். அங்கே ஒருநாளில் இந்துகள் மற்றய இந்துவை 200,300 என்று கொல்வதில்லை.

பேரருசுகள் அழிந்தது. எழுச்சிகள் அத்தனையும் தோல்விகண்டது. வரலாறு முழுக்க தமிழன் வாழ்வு அடிமைத் தடத்திலேயே உள்ளது. இதற்கு இந்துத்துவமே அடிப்படைக் காரணம்.

 

தமிழரின் சித்திரம் 10,000 ஆண்டுகள். மதிய கிழக்கை அழித்த சமையத்தின் சரித்திரம் 1500 ஆண்டுகள். ரூசியா, சீனா, மேற்குநாடுகள் என்று சகலரின் மேர்வையின் கீழ் இன்றும் வைத்திருக்கபடும் சமயம் உள்ள நாடுகள் இவை. ஐ.நாவால் இந்த ஒரு மதம் கட்டுப்படுத்தப்படுவது போல வேறு எந்த நாடோ இனமோ மதமோ கட்டுப்படுத்த படவில்லை.   இவர்கள் தங்களைத்தாங்கள் அழிப்பது மட்டும் அல்ல கேடிகளுக்கு குற்றேவல் சேர்ந்தாரயும் அழிப்பார்கள். இனிமேல் சிங்களமும் ஐ.நாவால் மேற்பார்வை செய்யப்படும்.

இந்துத்துவம் விரும்கின்றவன் தமிழீழம் என்ற கனவுக்கும் தகுதியற்றவன்.

 

இந்துத்தவம் என்றது ஈழத்தில் இல்லை என்றும்  என்றும் ஈழத்தில் இருப்பது சூத்திர குல பிள்ளைகளின் மேட்டுக் குடி ஆட்சி என்றதும் தானே இந்த கருத்தின் ஆரம்ப வரைவில்க்கணம். அதன் பின்னர் ஏன் இந்த கவலை?

 

சீனாவே 40,000 வேலைக்காரகளை திருப்பி அழைத்து பிரான்சையும், பிருத்தானியாவையும் லிபியாவுக்கு அடிக்க இடம் கொடுத்தது. அதன் பின்னரும் தங்களின் கேவலம் இந்த வவுனியா மந்திரிக்கு விளங்கவில்லையா. முஸ்லீம் மதத்தை வைத்து அஷ்சிரப் ஆக்கிய மு.கா அரசிடம் தனியலகில் வாங்கியத்தால் அடிமையாக்கப்பட்டு, சிறுபான்மையினருக்கு எதிராக ஏவல் பேய் வேலை செய்ய அமர்த்தப்பட்டிருகிறது. மேலும்  கூட்டமைப்பு கொடுத்த கிழக்கை கூட கோட்டை விட்டுவிட்டது. இதுவா தனி அலகு ஆழும் ஒற்றுமை படைத்த கோமாளிகளின் கட்சி? இந்துத்துவ -SJV ஆரம்பித்த FP தமிழ் தேசியத்தில் இறங்கி, ஒரு போரை கண்டு, இன்று அரசுக்கு சரியாக வடக்கில் அரசு அமைத்திருக்கிறது. அதை தன்னும் பார்த்த்து விளங்கிகொள்ள முடியவில்லையா?  

இந்துத்துவம் என்பது தேசீய இனங்கள் தற்கொலை செய்வதற்கான தூக்குக் கயிறு அதற்குள் தலையை கொடுப்பதும் விடுவதும் அவனவன் அறிவைப் பொறுத்தது.

 

இந்துத்துவம் என்றது சாதி வெறி அல்ல. அது பாகிஸ்தானிய மிருகங்களுக்கு எதிராக ஏற்படுத்தபட்ட கொள்கை. சீக்கியமும் அப்படி ஒன்றே. பாகிஸ்தானி கொங்கோலருக்கு எதிராக ஆரம்பிக்கப்படது. புத்தம், சமணம் ஆப்கானிய கொடுங்கோலருக்கு எதிராக ஏற்படுத்தபட்ட மதங்கள் ஆனல் இவை எல்லாம் பிற்காலம் பாதை தவறி ஆப்பகானியரின் வெறிகளை தாங்களும் பினபறினார்கள். பாகிஸதானிய, ஆப்கானிஸ்தானிய, ஈரானிய மிருகங்கள் பக்கத்தில் இருக்கும் வரை இந்துத்துவ கொள்கை இந்தியாவைல் எழுந்தேதான் ஆகும். ஆனல் இந்துக்கள் ஜனநாயகம் விருப்பிகள் என்றபடியால் சிந்து வெளி மதம் இன்றும் சிவனின் அடையாளம் மாறாமல் பாதுகாக்ப்பட்டுவருகிறது. 

 

Link to comment
Share on other sites

 

  • கத்தோலிக்க கிறீஸ்தவ மதங்களும் இசுலாமிய மதமும் ஆதிக்க வணிக நோக்கங்களுக்காக உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
  • இந்து மதம் இந்தியா போன்ற நாடுகளின் உள்ளூர் அரசியல்வாதிகளால் அரசியல் பலம்பெற பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்து மதம் ஆதிக்க வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படாத காரணத்தால் தீவிர மதமாற்றத்தை இந்து மதம் செய்யவில்லை.

இந்து தீவிரவாதத்தை முன்வைத்து பதவிக்கு வந்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராவது மிக அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் இன்றைய நிலையில், சிவ் சேனா இலங்கையில் உருவாக்கபடுவது, இலங்கையில் மனித உரிமை விடயங்களில் அமெரிக்க-ஐரோப்பிய ஆதரவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்யும் கத்தோலிக்க கிறீஸ்தவ மதத் தலைவர்கள் அஞ்சி ஒதுங்க வழிவகுக்கும்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்துக்களை முதன்மைபடுத்தும் தீர்வை தீவிரமாக அமுல்படுத்த முயலலாம். இவ்வாறான நிலை உருவானால் தமிழ் கத்தோலிக்கர் மற்றும் கிறீஸ்தவர்கள் முஸ்லிம்கள் போல இலங்கை அரசை ஆதரித்து அதன் ஆட்சி அமைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகலாம். போர் முடிந்த ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயர் இலங்கை அரசை தீவிரமாக ஆதரித்து வந்ததை இவ்விடத்தில் நினைவு கூரூவது பொருத்தமானதாகும்.

 

 

உண்மையில் இந்த பிரசுரம் காலம் காலமாக வாழும் கத்தொலிக்கரையொ புரட்டஷான் மக்களையோ சைவர்களில் இருந்து பிரிக்கும் நோக்கில் வெளியிடவில்லை. இது முற்று முழுதாக ஜொகொவா,பிலதெல்லியா, பெந்துக்கொஸ் போன்ற மதம் மாற்றும் பிரிவினரையே  குறி வைத்து எழுதப்பட்டது. 

 

இதை வைத்து இங்கு ஒரு மதப் போறோ இல்லை என்றால் சில விசமிகள் விரும்பும் சாதிப் போரையோ யாரும் நடாத்தவேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இந்துத்துவம் என்பது யாழ்பாண மேட்டுக்குடிகள் வலிந்திழுத்த சாக்கடை.

இரண்டே தெரிவுகள் தான்; ஒன்று இந்துவாய் இருத்தல் இல்லையேல் தமிழனாய் இருத்தல். இந்துவாயும் தமிழனாயும் கடசிவரை இருக்கமுடியாது. இந்துதுவ வாதியாய் இருந்துகொண்டு தமிழனாய் இருப்பதென்பது சுத்த கோமாளித்தனம். இந்துத்துவ வததியாய் இருந்த தமிழ்த்தேசீயம் பற்றி கற்பனையும் பண்ண முடியாத. தமிழ்த்தேசீயத்திற்கு முதல் விரோதியே இந்துத்துவம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இங்கே பலரது தேசீய முகங்கள் கிழிந்து தொங்குகின்றது.

இந்துத்துவத்தின் அடிப்படையே தேசீய இனங்களை சாதீயம் ஏற்றதாழ்வுகள் ஊடாக சிதைப்பதே ஆகும். இந்தியாவில் அதுவே காலாகாலமாக நடந்துவருகின்றது. இந்துத்துவம் இருக்கும் வரை ஒன்றுபட்ட சமூகம் ஒன்றுபட்ட தேசீய இனம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்துமதத்துக்குள் ஒரு தேசீய இனம் உருவாவதை இந்துத்துவம் எக்காலத்திலும் அனுமதிக்காது அதற்கான அடிப்படையும் இல்லை. ஈழத்தில் ஒரு தேசீய இனம் உருவாவது என்பதுக்கு இந்திய இந்துத்துவம் தலைகீழாய் நின்றாலும் அனுமதிக்காது.

சிங்களம் ஒரு தேசீய இனம் என்பது அது பௌத்தம் சர்ந்து இருப்பதால். நாளை இஸ்லாமியத் தமிழர்கள் ஒரு தேசீய அலகாக மாறக்கூடும் அதற்கும் அவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பது காரணமாகும். ஆனால் இந்துக்கள் என்பவர்கள் கடசவரை ஒரு தேசீய இனமாக முடியவே முடியாது. ஏனெனில் தேசீய இனக் கட்டமைப்புகளை சிதைக்க ஏற்பாடு செய்யப்பட்டதே இந்துத்துவம்.

பேரருசுகள் அழிந்தது. எழுச்சிகள் அத்தனையும் தோல்விகண்டது. வரலாறு முழுக்க தமிழன் வாழ்வு அடிமைத் தடத்திலேயே உள்ளது. இதற்கு இந்துத்துவமே அடிப்படைக் காரணம்.

இந்துத்துவம் விரும்கின்றவன் தமிழீழம் என்ற கனவுக்கும் தகுதியற்றவன்.

இந்துத்துவம் என்பது தேசீய இனங்கள் தற்கொலை செய்வதற்கான தூக்குக் கயிறு அதற்குள் தலையை கொடுப்பதும் விடுவதும் அவனவன் அறிவைப் பொறுத்தது.

 

இந்துத்துவம் என்டால் என்ன? தெளிவான விளக்கம் தேவை சுகன்
 
சிங்களவன் பெளத்தவனாக[மதம்] இருந்து கொண்டு ஆட்சியில் இருக்கலாம்
தமிழ்/சிங்களம் பேசும் முஸ்லீம்[மதம்] ஆட்சியில் இருக்கலாம்
ஏன் தமிழன் இந்துவாக இருந்து கொண்டு ஆட்சியில் இருக்க இயலாது?
 
இந்துத்துவ அடிப்படையில் தான் தமிழ்ர் அரசாள வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை ஆனால் ஏன் அப்படி ஆட்சியமைக்க முடியாது என்று சொல்கிறீர்கள்? மத ரீதியான பாகுபாடுகள் இல்லாமல் எல்லா இனத்தவரையும் சமமாக பாவித்தால் போச்சு.அங்கே பாகுபாட்டுக்கே இடமில்லைத் தானே!
 
நீங்கள் முதலில் இந்துக்கள் மட்டும் தான் ஏதோ சாதி பார்ப்பதாக எழுதுனீர்கள்.இப்ப அதைப் பற்றி கதைக்காமல் இந்துத்துவம் அது,இது என்று எழுதுகிறீர்கள்.
 
ஒரு கதைக்கு இந்தியாவை தற்போது முஸ்லீம்கள் ஆண்டு கொண்டு இருந்தால் எமக்கு நாட்டை தூக்கி தந்து விடுவினமா? எமது பிரச்சனைக்கும் இந்தியா இந்துத்துவத்திற்கும் என்ன சம்மந்தம்?....இராமன் ஆண்டாலும்,இராவணன் ஆண்டாலும் இந்தியா அப்படித் தான் இருக்கப் போகுது.அதற்கும் இந்துத்துவத்திற்கு ஒரு சம்மந்தமும் இல்லை என்பது என் கருத்து.
 
தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை.தலைவரால் கூட அனைத்து மக்களையும் ஒன்றினைக்க முடியாமல் போய் விட்டது.அதற்குள் சாதி,இந்துத்துவம் எங்கே வந்தது? எமது தோல்விக்கு காரணம் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட சுயநலம்.அது தான் மு.வாய்க்கால் தோல்விக்கும்,ஈழம் எடுப்பதற்கும் தடையாக இருந்தது/இருக்குமே வழிய வேறு காரணம் இல்லை
 
உங்களைத் தவிர ஒருத்தரும் இங்கு மதவாதத்தை தூக்கி பிடிக்கவில்லை.நாங்கள் எங்கட மதத்தில் இருக்கிறோம் பகிரங்கமாக மற்றவரை மதம் மாத்த வேண்டாம் என்றே கேட்கிறார்கள்.அப்படி கேட்பது தப்பா?...அதில் எங்கே இந்துத்துவம் இருக்கிறது ^_^
 
முதலில் சாதியை தூக்கிப் பிடித்தீர்கள்.தற்போது இந்துத்துவம் கதைக்கிறீர்கள்.இனி மேல் என்ன கதைக்கப் போறீர்களோ :unsure:
 
நான் சிவசேனாவை பின்பற்ற சொல்லி சொல்லவில்லை.அதற்கான தேவையும் இல்லை.யாழில் இருப்போர் பிற மதங்களை தாக்குகிறார்கள் என சொல்லும் நீங்கள் இந்துக்களை தாக்குவது எவ் விதத்தில் நியாயம்?
 
இது உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன் இந்து மதத்துள் ஒரு தேசிய இனம் உருவானால் அது இந்துத்துவத்திற்கு பெருமை தானே! அது ஏன் இந்துத்துவம் அமைய விடாது என சொல்லி உள்ளீர்கள் :unsure:
Link to comment
Share on other sites

இந்திய ஒரு தேசமாக மாற்றம் பெற்றது குறித்த அறிவில் குழறுபடி வருவதற்கு எதுவும் இல்லை. அதே இந்தியா பார்ப்பன இந்துத்துவா அதிகாரவர்க்கத்திடம் கைமறியதும் அது ஈழத்தமிழர்களை என்னும் பதம் பார்த்துக்கொண்டிருப்பதும் தான் உங்களுக்குப் புரியவில்லை.

 

இந்தியா காங்கிரசின் கையில் இருப்பதும், காங்கிரஸ் இந்துத்துவத்ற்கு எதிரானதென்பதும், இத்தாலிய முசோலினியும், சீக்கிய மன்மோகன் சிங்கினதும் தான் இன்றை மலையள தமிழ் எதிர்ப்பு வேளையாட்கள் என்பதும் உங்களுக்கு புரியாதது. 

இந்துத்தவ அடிப்படையயே சூழ்ச்சிகள் ஊடாக கட்டமைப்புகள் இனங்கள் சமூகங்களை சிதைத்து தமது அதிகாரத்தை தக்கவைப்பது. இது ஒன்றும் புதிதில்லை. சமண பௌத்தங்களை அழித்ததில் தொடங்கி சோழ சேர பாண்டிய அரசுகளை அழித்தது ஈடாக பின்னர் ஈழத்தை பொறுத்தவரை இயக்க மோதல்களை பின்னணியில் நின்று தூண்டிவிட்டு சுடுகாடாக்கியதுவரை சாதீய சமூகங்கள் தீண்டாமை வருணாசிரமதர்மம் என இந்திய இனங்களை சிதைத்து தனது புத்திசாலித்தனத்தால் இன்றும் அதிகாரவரக்கமாக இருப்பதின் நீட்சியே இந்துத்துவம்.

 

இந்துத்துவம் பார்பணியம் என்றது புரியாதவ்ர்கள் பேசுவது இது. தமிழ் நாட்டாருக்கு இருக்கும் பிரச்சனை இந்துத்துவத்தால் அல்ல. கிந்தியால் மட்டுமே.  தமிழ் நாட்டில் ஆட்சியில் இருப்பது திராவிட கட்சிகள்.  மலையாளத்தில் பிரதானமாக கம்யூனிஸ்டுக்கள். இங்கு BJP இல்லை. மலையாளிகள் தமிழரின் பிரதான எதிர்ப்பாளிகள்.  மேற்கு வங்காளம் கம்யூனிச மாநிலங்கள். பஞ்சாப்பில் சீக்கியர்.  இன்று மோடி அரசுக்கு வர இருக்கும் சிக்கள் இவருக்கு BJP சிவசேனயின் தொடர்பு, இவரின் குஜராத் கலக தொடர்பு என்பனவே. எனவே இந்த்தியாவில் இந்துத்துவம ஆட்சிக்கதிரையில் இருக்கு என்றது மாயை. தென் ஆபிரிக்காவில் வெள்ளைகள் இன்னும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகிறார்கள். ஆனல் வலிந்து வலிந்து வெள்ளைகள் ஆட்சியில் இருக்கிறார்கள் என்றால் அது திரிப்பு. எனவே பலம் கொண்ட பிராமண குடும்பங்கள் இந்தியாவில் பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்கிறார்க்ள்.  வட மாநிலங்களில் தென் மானிலங்களை விடஊழல் அதிகம்.  இது அந்த மாநிலங்களில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட முஸ்லீம் ஆட்சியால் நெறிப்படுத்தப்பட்ட  பண்பு.  தொடர்ந்து இந்துக்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் 1000 ஆண்டுகள் கழிந்த்தால் ஊழல் இன்று நியமமாக இருக்கிறது. அதாவது சொத்துபத்து உள்ள பிராமணர் சுயநலமிகளாக இருக்கிறார்கள். 

இந்துத்தவம் ஒரு விசம்.

 

இஸ்லாம் அளவுக்கு விசமானதல்ல.

 

மேல டாஸ் என்பவரின் கருத்தில் இஸ்லாமியர்களை வெளியேற்றுவோம் என்ற மதவெறி இருக்கின்றது. இதை விட தமிழன் ஒரு இனமாக முடியாது என்பதற்கு என்ன சான்று வேணும்?

 

 ஒருவரின் கருத்து அரச சட்டம் அல்ல. மேலும் இஸ்லாமியர் இலங்கையிலும் தாங்கள் தமிழர் இல்லை என்கிறார்கள். அப்போ எப்படி இஸ்லாமியரை வெளியேற்றுவோம் என்றது இஸ்லாமியர் மனத்தில் சந்தேகம் இல்லாமல் தமிழரை வெளியேற்றுவோம் என்றதானது?

 

 

இந்த மதவாத சமுதாயப் பின்னணிதான் இஸ்லாமியத் தமிழருக்கும் எமக்குமான பிரச்சனை. இந்தப்பிரச்சனையோடு உலக அரங்கில் இது இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாம் என ஆரம்பிக்கப்பட்ட அணுகுமுறை முள்ளிவாய்க்காலில் வந்து முடிந்தது. இந்துத்துவா பின்னணி எமது போராட்டத்திலேயே தராளாமாக தனது விசத்தை கக்கியுள்ளது என்பதற்கு வெளிப்படையான சான்று இது.

 

இலங்கை இஸ்லாமியருக்கு 1915 ல் தொடக்கம் சிங்கள்வருடன் பிரச்சனை. இது எகிப்திய சித்திலெப்பையின் நடவடிக்கைகள் தூண்டியவை. இன்று அவர்களுக்கெதிராகவே என்று சிங்கள இயகங்கள் ஆரம்பிக்கப்பட்டிருகின்றன. தமிழர் சிங்கள் அரசுடன் போராடிய பின்னர் கூட தமிழருக்கு மட்டும் எதிரான சிங்கள இயக்கம் தோன்றவில்லை. இஸ்லாமியரின் மந்திரித் தலைமகள்  சிங்கள் தலைமைகள் உதைக்க உதைக்க பினவழத்தை பொத்திக்கொண்டு கப்பல் மந்திரி பதவிக்கு அலைகிறார்கள். இதற்கு தமிழரை காட்டிகொடுக்கிறார்கள்.

 

ஆனால் அதற்கு , உங்களுக்கும் இஸ்லாமியதமிழருக்கும்  எதோ பிச்சனை வந்த்தாக நாடகம் எழுதாதீர்கள். 

 

இன்று ஆரம்பிக்கப்படும் இந்துத்துவா என்பதும் சிவசேனா என்பதும் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான விரிசலின் ஆரம்பம். தமிழினம் என்பதில் இருந்து இஸ்லாமியர்களை பிரித்தாயிற்று இனி கிறிஸ்தவர்களை ஆரம்ப்பின்கின்றனர். இறுதியில் மிஞ்சப்போவது நல்லூரை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் நாலுபேர்தான். அவர்களுக்கு ஒரு தமிழீழத்தை இந்த உலகின் எந்த மடயன் அங்கீகரிப்பான்?

 

சிவசேனா வவுனியாவில் ஆரம்பிக்க அவர்களுக்கு காணிபறிக்கும் வவுனியா மந்திரியா பணம் கொடுக்கிறார். இஸ்லாமியரை பிரித்தவர்கள் கிழக்கு மாகாணத்தில் பிரிந்து போன மு.கா. அவர்கள் தனி அலகில் கேடக தமிழரிடம் திரும்பி வருவார்கள் என்று தானே முதல் ஒருகருத்தில் எழுதினீர்கள்.  தனி அலகில் கேட்க திரும்பி வரும்போது ஏன் பிரிந்து போனார்கள் என்று கேட்டு சொல்கிறோமே. அதுவரை பொறுங்கள்

தமிழீழம் என்ற தேசீய இனம் உருவாவதற்கு பிரதான தடைக்கல் இந்துத்துவம் என்பதற்கு எத்தனையோ அழிவுகள் காரணங்கள் சான்றாக உள்ளது.அதை ஆதரிப்பவன் எப்படி ஒரு தேசீயவாதியாக இருக்கமுடியும்? நாளுக்கு நாள் ஈழத்தமிழர்களின் இன ஒற்றுமை என்பது கற்பனைக்கு எட்டாத தூரத்துக்கு தள்ளப்படுகின்றது. மதவாதமாக பிரதேசவாதமா அது என்னும் விரைவுபடுத்தப்படுகின்றது.

 

கதை அளந்து என்ன தமிழரின் ஒற்றுமையால் வடக்கில் 100% தமிழ் வாக்குகளையும் கூட்டமைப்பு கைப்பற்றியது மட்டுமல்ல, 6ம் திருத்தம் காரணமாக  புலம் பெயர் அமைப்புக்களுடனும் சேர மறுத்த கூட்டமைப்பு 6 திருத்ததை பற்றிக்கவலைப்படாமல் புலம் பெயர் அமைப்புக்களுடன் பகிரங்க தொடர்பு வைத்திருக்கிறார்கள். சட்டம் போட்டு கூட தமிழரை பிரிக்க சிங்களத்துக்கும் அதன் எடுபிடிகளுக்கும் முடியாமல் போவிட்டது.  இதற்குள் புதிய மோடையாக கதையாக எந்த யாழ்ப்பாணத்து தமிழனும் இதுவரை கேள்வியே படாத இந்துத்துவா கோமாளித்தனதுடன் வந்து இறங்குகிறார்கள். 

பிரதேசவாதத்தை தூக்கிப்பிடித்த கருணா துரோகி என்றால் மதவாதத்தை தூக்கிப்பிடிப்பவன் தியாகியா?  

 

கருணா எதை துக்கிபிடித்தாலும் துரோகியே. தேர்தலில் நின்ற போது மட்டக்களப்பில் ஒரு தொகுதி வெல்ல முடியாதவனை , புலிகளின் தலைமையில் இருக்கவிட்டது புலிகளுக்கே அவமானம். இவ்வளவுக்கு மட்டக்களபில் இடம் இல்லாத பாவி.

 

 எந்த சட்டத்திலும் நீ அது செய் நான் இது செய்கிறேன் என்று குற்ற ஒப்பந்தம் செய்ய முடியாது. தனியே, கருணா, கக்கீம், இராச குடும்பம் மட்டும்தான் இப்படி குற்றங்கள் செய்கிறார்கள் ஆனால் இதனால் கருணா நியாயவாதியாக முடியாது. 

 

 

ஏற்கனவே இந்தக் களத்தில் பதிவு செய்துள்ளேன் கருணாவை விட மோசமான துரோகிகிள் இருக்கின்றார்கள் என்று.

 

அவர்களை நாங்களும் பார்க்கிறோம் என்று நாங்களும் பலதவைகள் எழுதிவிட்டோம். இவர்கள் கருணாவை ஒருதடவை மோசமான துரோகிகளுடன் இணைக்கிறார்கள். மறுதடவை இந்துத்துவத்தின் பலிக்கடாவக காட்ட முயல்கிறார்கள். 

 

ஏனெனில் எனக்கு மையவாதத்தின் குணம் நன்கு தெரியும். மையவாதம் சாதீய மதவெறியுடன் சம்மந்மப்பட்டது அது இனத்தை பிழந்துதள்ளும். அதையே தான் இங்கு பலர் செய்கின்றனர்.

 

அது தெரிந்த்தால்தால்தான் அதை வைத்து பிளந்து தள்ள முடியும் என்று முயற்சிக்கிறார்கள். இதனால் அவர்கள் ஓட்டியது தங்கள் சங்கீதத்திற்க்கு ஆடும் முஸ்லீம் மந்திரிகளை மட்டுமே. இன்று அவர்கள் போக இடமில்லாமல் மகிந்தா காலில் விழுகிறார்கள் ஆங்கில ஊடமொன்றில் கசான் அலி புலிகள் 20,000 முஸ்லீம்களை கொன்றார்கள் என்று தங்களை காப்ப்பறும்படி அரசருக்கு விட்ட அறிக்கையை பார்த்தேனே. 

 

அரசியலில் அநாமதேய பேர்வழி, சரித்திரம் என்றால் என்னது என்று தெரியாத சூனியக்கர்ரர் எப்படி மையவாதம் பற்றி அனுபவப்பட்டார்கள் எனபது பகிடியானதொரு கதை. இளவரசர் சிங்கம் கொடுத்த காசுக்கு வேலைவாங்க நன்றாக காலில் போட்டு உதைக்க அவஸ்ததை படுகிறார்கள் போலிருக்கு.

இங்கே பல கருத்துக்களின் முன்னால் கருணாவின் துரோகம் கூட சிறுத்துக்கொண்டு போகின்றது காரணம் பிரதேசவாதப் பிழவுகள் முனைந்தால் சரிசெய்யக் கூடியது ஆனால் மதவாதப்பிழவுகளை சரிசெய்வதென்பது அவ்வளவு எளிதல்ல.

 

இந்த கருத்துக்களை எழுதுபவர்கள் கருணா செய்தை விட கூடத்தான் செய்கிறார்கள். அது வேறு

 

ஆனால் எனோ இதுவரை கருணா மையவாதத்தின் பலி என்றார்களோ. ஒருவேளை அன்று எழுதிக் கொடுத்தவர்களுக்கும், இன்று எழுதிக் கொடுப்பவர்களுக்குமிடையில் வித்தியாசமோ? அல்லது அந்த கதை அவியாததால் இப்போது கருணா என்றவர் சிறிய துரோகியாக மாறுகிறாரோ? இல்லை கருணாவை முதல் முதலில் ஐ.நா விசாரணையில் நிறுத்தி பார்த்து ஆழம் பார்க்கும் முயற்சி ஆரம்பமாகிறது. எதற்கும் கருணா செஞ்சோற்றுக்கடன் தீர்க்காமல் தப்ப முடியாது என்பது புரிகிறது. இனி எந்த கோவிலில் வைத்து அறுத்தால் என்ன ?

(அவரவர் கற்பனையில் என்னை கிறிஸ்தவன் முஸ்லீம் அல்லது எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் எனக்கு அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை. நான் யார் என்று எனக்குத் தெரியும். எனது நோக்கம் அதிக எண்ண ஓட்டங்கள் கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது அவ்வளவுதான்)

 

சரியான பாவம். கேட்ட அழுகையாக இருக்கு. நல்லாய் கெட்டு நொந்து போய்விட்டது. சிலருக்கு தாங்கள் யார் என்று தெரியாமல் இருக்கும். நாங்கள் என்ன எழுதுகிறோம், ஏன் அப்படி எழுதுகிறோம்  என்றது தெரிந்துதான் எழுதுகிறோம்.

 

 

Link to comment
Share on other sites

நன்றி மல்லையூரன்.....நீங்கள் எழுதியதை வாசிக்காமல் (விளங்காமல்)..திருப்பியும் முதலில் இருந்தே சாதி..என்று தொடங்குவாங்கள்....

 

 (நீ மதம் மாறிவிட்டு கீழ்சாதியிலிருந்து கல்யாணம் கட்டினாயா என்று கேட்டால் ஒன்றுமே தெரியாது போல எங்களிடம் தான் சாதியில்லையே என்று சொல்லி கொண்டு ...முன்னால் நல்லசாதியாக இருந்தவன் வீட்டில் கல்யாணம் செய்ய பார்த்து அது நடக்காமல் தன்னோட சாதியிலேயே கல்யாணம் பண்ணிட்டு ....சவுண்ட் விடுவாங்க...)

 

அவ்வ்வ்வவ்

Link to comment
Share on other sites

ஈழத்தில் இந்துத்துவம் என்பது யாழ்பாண மேட்டுக்குடிகள் வலிந்திழுத்த சாக்கடை.

இரண்டே தெரிவுகள் தான்; ஒன்று இந்துவாய் இருத்தல் இல்லையேல் தமிழனாய் இருத்தல். இந்துவாயும் தமிழனாயும் கடசிவரை இருக்கமுடியாது. இந்துதுவ வாதியாய் இருந்துகொண்டு தமிழனாய் இருப்பதென்பது சுத்த கோமாளித்தனம். இந்துத்துவ வததியாய் இருந்த தமிழ்த்தேசீயம் பற்றி கற்பனையும் பண்ண முடியாத. தமிழ்த்தேசீயத்திற்கு முதல் விரோதியே இந்துத்துவம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இங்கே பலரது தேசீய முகங்கள் கிழிந்து தொங்குகின்றது.

இந்துத்துவத்தின் அடிப்படையே தேசீய இனங்களை சாதீயம் ஏற்றதாழ்வுகள் ஊடாக சிதைப்பதே ஆகும். இந்தியாவில் அதுவே காலாகாலமாக நடந்துவருகின்றது. இந்துத்துவம் இருக்கும் வரை ஒன்றுபட்ட சமூகம் ஒன்றுபட்ட தேசீய இனம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்துமதத்துக்குள் ஒரு தேசீய இனம் உருவாவதை இந்துத்துவம் எக்காலத்திலும் அனுமதிக்காது அதற்கான அடிப்படையும் இல்லை. ஈழத்தில் ஒரு தேசீய இனம் உருவாவது என்பதுக்கு இந்திய இந்துத்துவம் தலைகீழாய் நின்றாலும் அனுமதிக்காது.

சிங்களம் ஒரு தேசீய இனம் என்பது அது பௌத்தம் சர்ந்து இருப்பதால். நாளை இஸ்லாமியத் தமிழர்கள் ஒரு தேசீய அலகாக மாறக்கூடும் அதற்கும் அவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பது காரணமாகும். ஆனால் இந்துக்கள் என்பவர்கள் கடசவரை ஒரு தேசீய இனமாக முடியவே முடியாது. ஏனெனில் தேசீய இனக் கட்டமைப்புகளை சிதைக்க ஏற்பாடு செய்யப்பட்டதே இந்துத்துவம்.

பேரருசுகள் அழிந்தது. எழுச்சிகள் அத்தனையும் தோல்விகண்டது. வரலாறு முழுக்க தமிழன் வாழ்வு அடிமைத் தடத்திலேயே உள்ளது. இதற்கு இந்துத்துவமே அடிப்படைக் காரணம்.

இந்துத்துவம் விரும்கின்றவன் தமிழீழம் என்ற கனவுக்கும் தகுதியற்றவன்.

இந்துத்துவம் என்பது தேசீய இனங்கள் தற்கொலை செய்வதற்கான தூக்குக் கயிறு அதற்குள் தலையை கொடுப்பதும் விடுவதும் அவனவன் அறிவைப் பொறுத்தது.

 

:lol: :lol: :lol:

 

உங்களால் நியாயமாக பதில் சொல்ல முடியாததால் சாதீயத்தை இழுத்தீர்கள். இப்பொழுது இந்துத்துவம் என கூறுகிறீர்கள். :D

மற்றவர்கள் மதம் மாற்றுவது பிழை என வாதிடுகிறோம். அது பிழை என தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் அது தொடர்பான கருத்து வைப்பதை தவிர்ப்பதற்காகவும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவும் சாதீயம், இந்துத்துவம் என திரியை திசை திருப்புகிறீர்கள். :)

மற்றவர்கள் மதம் மாறும்படி கேட்கிறார்கள் என்பதற்குள் சாதீயமும் இந்துத்துவமும் எங்கே உள்ளது? :D

 

இந்திய இந்துத்துவவாதத்தை காட்டி ஈழத்தில் சைவ சமயத்தை பின்பற்றுபவர்களை எதிரி போல் காட்டுவதானது இலங்கையில் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களை காட்டிக்கொடுத்தார்கள் (போராட்டத்தில் பங்கெடுத்த சில முஸ்லிம்கள் விதிவிலக்கு) என்பதற்காக தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாக செயற்படும் இஸ்லாமியர்களையும் எமக்கு எதிரானவர்களாக காட்டுவது போன்றது. :)

 

உங்களை பொறுத்தவரை இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட முஸ்லிம்களை தமிழீழ மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் விடுதலைப்போராட்டத்தில் கிறிஸ்தவர்களுடன் இணைந்து பங்குபற்றிய சைவ சமயத்தவர்கள் தம்மை தமிழர்கள் என கூற முடியாது. தமிழீழம் கேட்பதற்கு அவர்களுக்கு உரிமையும் இல்லை.

 

சைவ சமயத்தவர்கள் தமிழனாக இருக்க முடியாது என்றால் எப்படி போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டான்? போராட்டத்துக்கு ஆதரவாக உள்ளான்? சைவ சமயத்தில் இருந்த பலர் தம்மை தமிழர்களாகவே நினைத்து கிறிஸ்தவர்களுடன் இணைந்து நாட்டுக்காக போராட சென்றார்கள். உயிரிழந்தும் உள்ளார்கள்.

 

தமிழீழம் தொடர்பில் சைவ சமயத்தவர்களும் கிறிஸ்தவ சமயத்தவரும் ஒற்றுமையாக தான் உள்ளார்கள்.

 

உங்களுக்கு விளங்கியும் விளங்காதமாதிரி நடிக்கிறீர்கள். :)

Link to comment
Share on other sites

இந்துத்துவம் என்டால் என்ன? தெளிவான விளக்கம் தேவை சுகன்

 

சிங்களவன் பெளத்தவனாக[மதம்] இருந்து கொண்டு ஆட்சியில் இருக்கலாம்

தமிழ்/சிங்களம் பேசும் முஸ்லீம்[மதம்] ஆட்சியில் இருக்கலாம்

ஏன் தமிழன் இந்துவாக இருந்து கொண்டு ஆட்சியில் இருக்க இயலாது?

 

இந்துத்துவ அடிப்படையில் தான் தமிழ்ர் அரசாள வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை ஆனால் ஏன் அப்படி ஆட்சியமைக்க முடியாது என்று சொல்கிறீர்கள்? மத ரீதியான பாகுபாடுகள் இல்லாமல் எல்லா இனத்தவரையும் சமமாக பாவித்தால் போச்சு.அங்கே பாகுபாட்டுக்கே இடமில்லைத் தானே!

 

நீங்கள் முதலில் இந்துக்கள் மட்டும் தான் ஏதோ சாதி பார்ப்பதாக எழுதுனீர்கள்.இப்ப அதைப் பற்றி கதைக்காமல் இந்துத்துவம் அது,இது என்று எழுதுகிறீர்கள்.

 

ஒரு கதைக்கு இந்தியாவை தற்போது முஸ்லீம்கள் ஆண்டு கொண்டு இருந்தால் எமக்கு நாட்டை தூக்கி தந்து விடுவினமா? எமது பிரச்சனைக்கும் இந்தியா இந்துத்துவத்திற்கும் என்ன சம்மந்தம்?....இராமன் ஆண்டாலும்,இராவணன் ஆண்டாலும் இந்தியா அப்படித் தான் இருக்கப் போகுது.அதற்கும் இந்துத்துவத்திற்கு ஒரு சம்மந்தமும் இல்லை என்பது என் கருத்து.

 

தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை.தலைவரால் கூட அனைத்து மக்களையும் ஒன்றினைக்க முடியாமல் போய் விட்டது.அதற்குள் சாதி,இந்துத்துவம் எங்கே வந்தது? எமது தோல்விக்கு காரணம் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட சுயநலம்.அது தான் மு.வாய்க்கால் தோல்விக்கும்,ஈழம் எடுப்பதற்கும் தடையாக இருந்தது/இருக்குமே வழிய வேறு காரணம் இல்லை

 

உங்களைத் தவிர ஒருத்தரும் இங்கு மதவாதத்தை தூக்கி பிடிக்கவில்லை.நாங்கள் எங்கட மதத்தில் இருக்கிறோம் பகிரங்கமாக மற்றவரை மதம் மாத்த வேண்டாம் என்றே கேட்கிறார்கள்.அப்படி கேட்பது தப்பா?...அதில் எங்கே இந்துத்துவம் இருக்கிறது ^_^

 

முதலில் சாதியை தூக்கிப் பிடித்தீர்கள்.தற்போது இந்துத்துவம் கதைக்கிறீர்கள்.இனி மேல் என்ன கதைக்கப் போறீர்களோ :unsure:

 

நான் சிவசேனாவை பின்பற்ற சொல்லி சொல்லவில்லை.அதற்கான தேவையும் இல்லை.யாழில் இருப்போர் பிற மதங்களை தாக்குகிறார்கள் என சொல்லும் நீங்கள் இந்துக்களை தாக்குவது எவ் விதத்தில் நியாயம்?

 

இது உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன் இந்து மதத்துள் ஒரு தேசிய இனம் உருவானால் அது இந்துத்துவத்திற்கு பெருமை தானே! அது ஏன் இந்துத்துவம் அமைய விடாது என சொல்லி உள்ளீர்கள் :unsure:

இந்துத்துவத்துக்கு இன்னுமொரு பெயர் பார்ப்பனப் பயங்கரவாதம்.

ஈழத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்தப் பயங்கரவாதத்தை உணர்பவர்கள் இல்லை. அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு கோயிலுக்குப் போன்றார்கள் தமது ஆத்ம சாந்திக்கு வழிபடுகின்றார்கள். இது ஆன்மீகம் அல்லது இறை நம்பிக்கை. அதில் நம்பிக்கை உடையவராக நீங்கள் இருக்கலாம்.

இந்துத்துவம் என்பது மதம் மற்றும் அதுசார்ந்த அரசியல். அங்கே ஆன்மீகத்துக்கு இடமில்லை.

இந்துத்துவம் மனு தர்மத்தைப் போதிக்கின்றது. வருணாசிரமதர்மத்தைப் போதிக்கினறது. சதீயத்தை வரையறை செய்கின்றது. ஏற்றதாழ்வை சட்டமாக்குகின்றது. இதனடிப்படையில் இந்தியாவில் இன்னும் 17 இல் இருந்து 20 மில்லியன் மக்கள் தீண்டத்தகாத மக்களாக தலித்துக்களாக அவர்களது வாழ்வு நரகமாக்கப்பட்டுள்ளது.

இந்துத்துவத்தின் பிரதான இயங்குசக்தியானது இனங்கள் உருவாவதை தடுத்தல் சமூகம் சமநிலைப்படுவதை தடுத்தல். ஏற்றதாழ்வு சமநிலைப்படுவதை தடுத்தல். இனத்துக்கான தேசீயம் உருவாவதை தடுத்தல். - இது எவ்வாறு நிகழ்கின்றது என்றால் சாதி இருக்கும் சமுதாயம் ஒன்றுபட முடியாது. சமூக உறவுக்குள் நெருக்கம் வராது. நீயும் நானும் தமிழன் ஆனால் நான் உன்னைத் தொடமாட்டேன் நீ திண்டத்தகாதவன் குறைந்த சாதி உன்னிடம் சம்மந்தம் வைத்துக்கொள்ள மாட்டேன என்னும் நிலையில் இந்த தமிழன் என்பதை எவன் ஏற்கப்போகின்றான்? அதற்கு என்ன அவசியம் இருக்கின்றது? இததான் இந்தியாவில் நடக்கின்றது. எந்த இனமும் விடுதலை பெறமுடியாது. ஒவ்வொரு வரும் பல தட்டுகளாக சாதிவாரியாக பிரிந்து இனத்தை இரண்டாம் நிலையில் வைத்துள்ளனர். இதுவே பிரித்தாளும் அரசியில். இந்தியாவை இந்துதுவம் ஆழ்கின்றது. யாரொருவன் இந்துவாக இருக்க முடியுமோ அவன் இனத்தை துறந்தாகவேண்டும். இனத்தேசீயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அவன் இந்துத்துவத்தை துறந்தாகவேண்டும். இது வெளிப்படையான யதார்த்தம்.

இந்தியாவில் குறிப்பாக பார்ப்பனர்கள் இந்திய அதிகார வர்க்கம் ஈழம் அமைவதை ஒரு தேசீய இனம் உருவாவதை என்றைக்கும் விரும்பியது இல்லை. இனிமேலும் அது விரும்பாது. பிரித்தாளும் தனது பாரம்பரிய குணத்திற்கேற்ப ஈழத்தமிழ் இயக்கங்களை பிரித்து சூழ்ச்சிகளுக்கு உட்படுத்தி ஈழத்தை சுடுகாடாக்கியது. பிரித்தாழ்வதும் மனித குலத்தை சர்வ நாசம் செய்வதும் இந்துதுவத்தின் அடிப்படைக் குணம்.

இந்துத்துவம் தமிழ்மொழியை நீச பாசை என்கின்றது. அதாவது தீண்டத்தகாத பாசை என்கின்றது. கடவுளுக்கு கேட்கும் மொழி சமஸ்கிருதம் என்கின்றது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பிரசங்கம் செய்த மேடைகளை கழுவி தீட்டுக்களித்த சம்பவங்கள் எல்லாம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

ஈழத்தில் இந்த நிலை இந்தியா அளவுக்கு மோசமாக இருந்ததில்லை. சைவம் அதிகாரத்துடன் இருந்தது.ஆனாலும் சைவத்தை வைத்து பிழைப்புவாதம் நடத்தியவர்கள் தம்மையும் இந்துவாக தாமாக அந்தச் சகதிக்குள் தலையை கொடுத்தனர். சமஸ்கிருதத்தில் தான் மந்திரம் சொல்லவேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றனர் (இத்திரியில் ஒரு புத்தகத்தின் இணைப்புள்ளது அதைப் படித்தால் அதுசார்ந்து நிறைய விசயங்களை அறிந்துகொள்ளலாம்)அதாவது தமது தாய்மொழியை தாமே தீண்டத்தகாகத மொழி என்று ஏற்றுக்கொண்டனர்.இந்தியாவின் இந்துத்துவம் கட்டமைத்த சாதீகளை யாழ்பாணத்தில் சைவம் என்ற போர்வையில் ஏற்படுத்தினார்கள். இந்தியாவில் இந்துத்துவத்துக்கு பார்ப்பான் தலமையாக இருப்பதுபோல் யாழ்ப்பாணத்தில் வெள்ளார் தலமையாக இருக்க முற்பட்டனர். ஏழை எளிய மக்கள் சாதியில் தாழ்ந்த மக்கள் கல்வி கற்பதை தடுத்தனர். அரச உத்தியோகத்தில் இணைவதை தடுத்தனர். இதுதான் நாவலர் காலம். இதன் வரலாறு மிக நீளமானது.

ஒரு இனம் உருவாவதை தடுக்கும் மிகப்பெரிய சக்தியாக இந்துமதம் அதன் இயங்கு சக்தி உள்ளது. சமூகங்கள் சிதைந்து சீரளிந்து பேவதற்கு இந்துமதம் பிரதான சக்தியாக உள்ளது. அதை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு இன விடுதலை என்பத எவ்வளவு வேடிக்கையானது?

நீங்கள் பற்றுக்கொண்டுள்ளது இறைநம்பிக்கையிலா இல்லை அது சார்ந்த ஆன்மீகத்திலா இல்லை சைவத்திலா இல்லை இந்துத்துவத்திலா? இந்துத்துவத்தில் என்றால் இனத்தை மறந்தவிடுவது உங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட விதி.

சிங்கள இனம் பௌத்தத்தை அடிப்படையாக வைத்து இனத்தின் பலத்தை கட்டியெழுப்புகின்றது. தமிழினத்தில் இந்துத்துவம் என்பது சதீய வர்கக் ஏற்றதாழ்வுகைள ஆழமாக்கி பிளவுகளை ஏற்படுத்தி இனத்தை சிதைக்கின்றது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நேரெதிரானது. சிங்கள இனம் அதன் இன உருவாக்கம் குறித்து மதத்தை எப்படிக் கையாழ்கின்றது என்பது வெளிப்படையானது.

அதே போல் இஸ்லாம் மதத்தின் பெயரால ஒன்றுபடுகின்றது. சமூக உறவுகள் நெருக்கமாகின்றது. எதிர்காலத்தில் அதன் பலம் அதிகரிக்கும். இந்துத்துவம் இதற்கு நேர் எதிர்த்திசையில் பயணிப்பது. அதன் விழைவில் இயக்க மோதல்கள் உட்பட இஸ்லாமியப் பிழவுகள் பிரதேசவாதப்பிழவுகள் அதற்கான உளவியல் அனைத்தும் இணைந்திருக்கின்றது.

நீங்கள் விரும்பினால் இந்துவாக இருங்கள் இல்லையேல் சைவனாக இருந்து அதை திருத்திக்கொள்ளுங்கள் இல்லை சாதராண இறை நம்பிக்கையுள்ளவர்களாக இருங்கள் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை. ஒரு தேசீயவாதியாக இன அடயாளத்தை முன்நிறுத்தும் போத கருத்துக்கள் முரண்படுகின்றது அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

நான் குளித்துச் சுத்தமாகவில்லை என்றால், அடுத்த வீட்டுக்காரனும் குளிக்காமல் அசுத்தமாகத்தானே இருக்கிறான்!

 

இல்லை. இதை இவ்வாறு எழுதினால் நன்றாக இருக்கும்.

 

நான் குளித்து சுத்தமாக இல்லை. அதற்காக அடுத்த வீட்டுக்கு போனால் குளிப்பேன் என மற்றவர்களுக்கு கூறுதல். ஆனால் அடுத்த வீட்டிலும் தண்ணி இல்லை, குளிக்க முடியாது. அங்குள்ளவர்களும் குளிக்காமல் அசுத்தமாக தான் உள்ளார்கள். அங்கும் இங்குள்ள அதே பிரச்சினை.

 

எனவே எதற்காக போக வேண்டும்? அடுத்த வீட்டுக்கு போனால் குளிக்கலாம் என்பது பொய் தானே? :D

 

Link to comment
Share on other sites

இந்திய ஒரு தேசமாக மாற்றம் பெற்றது குறித்த அறிவில் குழறுபடி வருவதற்கு எதுவும் இல்லை. அதே இந்தியா பார்ப்பன இந்துத்துவா அதிகாரவர்க்கத்திடம் கைமறியதும் அது ஈழத்தமிழர்களை என்னும் பதம் பார்த்துக்கொண்டிருப்பதும் தான் உங்களுக்குப் புரியவில்லை.

இந்துத்தவ அடிப்படையயே சூழ்ச்சிகள் ஊடாக கட்டமைப்புகள் இனங்கள் சமூகங்களை சிதைத்து தமது அதிகாரத்தை தக்கவைப்பது. இது ஒன்றும் புதிதில்லை. சமண பௌத்தங்களை அழித்ததில் தொடங்கி சோழ சேர பாண்டிய அரசுகளை அழித்தது ஈடாக பின்னர் ஈழத்தை பொறுத்தவரை இயக்க மோதல்களை பின்னணியில் நின்று தூண்டிவிட்டு சுடுகாடாக்கியதுவரை சாதீய சமூகங்கள் தீண்டாமை வருணாசிரமதர்மம் என இந்திய இனங்களை சிதைத்து தனது புத்திசாலித்தனத்தால் இன்றும் அதிகாரவரக்கமாக இருப்பதின் நீட்சியே இந்துத்தவம்.

இந்துத்தவம் ஒரு விசம். மேல டாஸ் என்பவரின் கருத்தில் இஸ்லாமியர்களை வெளியேற்றுவோம் என்ற மதவெறி இருக்கின்றது. இதை விட தமிழன் ஒரு இனமாக முடியாது என்பதற்கு என்ன சான்று வேணும்? இந்த மதவாத சமுதாயப் பின்னணிதான் இஸ்லாமியத் தமிழருக்கும் எமக்குமான பிரச்சனை. இந்தப்பிரச்சனையோடு உலக அரங்கில் இது இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாம் என ஆரம்பிக்கப்பட்ட அணுகுமுறை முள்ளிவாய்க்காலில் வந்து முடிந்தது. இந்துத்துவா பின்னணி எமது போராட்டத்திலேயே தராளாமாக தனது விசத்தை கக்கியுள்ளது என்பதற்கு வெளிப்படையான சான்று இது.

இன்று ஆரம்பிக்கப்படும் இந்துத்துவா என்பதும் சிவசேனா என்பதும் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான விரிசலின் ஆரம்பம். தமிழினம் என்பதில் இருந்து இஸ்லாமியர்களை பிரித்தாயிற்று இனி கிறிஸ்தவர்களை ஆரம்ப்பின்கின்றனர். இறுதியில் மிஞ்சப்போவது நல்லூரை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் நாலுபேர்தான். அவர்களுக்கு ஒரு தமிழீழத்தை இந்த உலகின் எந்த மடயன் அங்கீகரிப்பான்?

தமிழீழம் என்ற தேசீய இனம் உருவாவதற்கு பிரதான தடைக்கல் இந்துத்துவம் என்பதற்கு எத்தனையோ அழிவுகள் காரணங்கள் சான்றாக உள்ளது.அதை ஆதரிப்பவன் எப்படி ஒரு தேசீயவாதியாக இருக்கமுடியும்? நாளுக்கு நாள் ஈழத்தமிழர்களின் இன ஒற்றுமை என்பது கற்பனைக்கு எட்டாத தூரத்துக்கு தள்ளப்படுகின்றது. மதவாதமாக பிரதேசவாதமா அது என்னும் விரைவுபடுத்தப்படுகின்றது.

பிரதேசவாதத்தை தூக்கிப்பிடித்த கருணா துரோகி என்றால் மதவாதத்தை தூக்கிப்பிடிப்பவன் தியாகியா? ஏற்கனவே இந்தக் களத்தில் பதிவு செய்துள்ளேன் கருணாவை விட மோசமான துரோகிகிள் இருக்கின்றார்கள் என்று. ஏனெனில் எனக்கு மையவாதத்தின் குணம் நன்கு தெரியும். மையவாதம் சாதீய மதவெறியுடன் சம்மந்மப்பட்டது அது இனத்தை பிழந்துதள்ளும். அதையே தான் இங்கு பலர் செய்கின்றனர்.

இங்கே பல கருத்துக்களின் முன்னால் கருணாவின் துரோகம் கூட சிறுத்துக்கொண்டு போகின்றது காரணம் பிரதேசவாதப் பிழவுகள் முனைந்தால் சரிசெய்யக் கூடியது ஆனால் மதவாதப்பிழவுகளை சரிசெய்வதென்பது அவ்வளவு எளிதல்ல.

(அவரவர் கற்பனையில் என்னை கிறிஸ்தவன் முஸ்லீம் அல்லது எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் எனக்கு அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை. நான் யார் என்று எனக்குத் தெரியும். எனது நோக்கம் அதிக எண்ண ஓட்டங்கள் கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது அவ்வளவுதான்)

 

இந்த திரியில் மதவாதம் பற்றி கதைப்பது யார்? நீங்கள் உட்பட இந்து சமயத்தை தூற்றுபவர்கள் தான் மதவாதம் பேசுகிறீர்கள். (நீங்கள் உங்களை இந்து என கூறிக்கொண்டாலும் அது உண்மையா பொய்யா என தெரியாததால் இந்து சமயத்தை தூற்றி மதவாதத்தை திணிக்கும் உங்களையும் மதவாதியாக உள்ளடக்கியுள்ளேன்.)

நான் மதவாதம் பற்றி கதைக்கவில்லை. மதம் மாற்றுவது சரியா பிழையா என மட்டும் தான் கதைத்துள்ளேன். அப்படி தான் "மதம் மாற்றுவது பிழை" என இங்கு கருத்திட்ட ஏனையோரும்.  :)  மதவாதத்துக்கும் இதற்குமான அடிப்படை வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள். :huh:

ஆக மொத்தத்தில் மதவாதம் பற்றி பேசும் நீங்களே உங்களை கருணாவை விட மோசமான துரோகி என கூறுகிறீர்கள். :D

 

நீங்கள் தானே சட்டை கதையை கூறியது. :D சட்டை அழகாக இருந்தால் அதை யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்று. :D அதே நீங்கள் தான் "சைவ சமயம்" என்ற சட்டை போட்டவர்கள் பற்றி தூற்றி எழுதுகிறீர்கள். :D

Link to comment
Share on other sites

சாதி, வர்ணம் என்று இரண்டி வேறு வேறு பாகுபாடுகள் உண்டு. அவை தோந்றிய சரித்திரம் 3000 ஆண்டுக்கால இடை வேளையின் பின்னர். மேலும் பிராமணன், அந்தணன் என்பது சிந்து வெளியிலும் தமிழ் நாட்டிலும் பலகாலமாக இருந்துவருவது. அந்தணன் என்பவன் உயிர்களிடம் கருணை காட்டும் ஒருவன் என்று வள்ளுவர் கூறுகிறார்.

 

கமில் சேபிலுபில் சங்க காலத்தில் தமிழ் நாட்டில் சான்றோன் என்பதுதான் முக்கியமானது என்கிறார். தமிழ்க் கலாச்சாரமே சான்றோனை சுற்றி அமைகஸ்ப்பட்டது என்கிறார். அதாவது இந்த அந்தணர்களே மக்களின் கண்கண்ட தெய்வங்கள். சிந்துவெளியில் பிராமணன் சிவனின் வழியை பின்பற்றுபவர்கள். ஆனால் இது படித்து அடையும் ஒரு பதவி. அதை அடைந்தவர்கள் வழமையில் குடும்பமாக படிப்புக்கு தங்களை அர்ப்பணித்துவிடுவார்கள். அதிலிருந்து வெளியேருவது அருந்தல். இவர்கள் மட்டும் பெண்களை காதலிக்காமல் தேடி சென்று மணம் முடிப்பவர்களாக இருக்க வேண்டும்.  பிராமணர்க்கு சாதியில் பங்கு இல்லை.  ஆனால் சிந்துவெளி(அதுவும் தமிழ் தான்) தமிழ் நாடு இரண்டிலும் இருந்தது சாதியே. இவர்களுக்குள் பெண் எடுப்பது காதலால். (நிச்சயமாக தமிழ் நாட்டில் பிராமணர் வரைக்கும் காதலால் பெண் எடுப்பது இருந்தது). ஆனல் ஆண்கள் தங்கள் தொழிலை அடிக்கடி மாற்றுவதில்லை. தந்தையிடம் கற்ற தொழிலை மகன் செய்து தன் குடும்பத்தை காத்தான். அந்தஸ்து பிராம்ணனுக்கு அல்லது சான்றோனுக்கு அல்லது அந்தணனுக்குத்தான் இருந்தது.

 

தமிழில் வண்ணம் இருக்கு. 5000 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டிலுமிருந்து துணி ஏற்றுமதி இருக்கு. துணிக்கு வண்ணம் போடும், வெள்ளையாக்கும், வெள்ளாவி வைக்கும் வண்ணார் இருந்தார்கள். ஆப்கானிய ஆரியர் சிந்து வெளியை கைப்பற்றிய போது  மொழி அறிவு இருக்கவில்லை. சிந்து பாசையை தமதாக்கினர். இதில் பிறந்ததுதான் சமஸ்கிருதம். தாங்கள் வெள்ளையாக இருந்ததையும் கிருஸ்ண குலம் கறுப்பாக இருந்ததையும் வைத்து தங்களையும் சிந்துவெளியாரையும் த்ரம் பிரித்தார்கள். இது வண்ணம் என்ற சொல்லிலிருந்து வந்த வர்ணம் ஆனது. த்ங்களை பெரியவர்களாக்கி(பாரிய, பிரம) பிராமணர்கள் ஆக்கினார்கள். பாரிய பெரிய என்ற சொல்லில் இருந்து பிறந்ததே பிரமம். ஆக வர்ணம், பிராமணன் இரண்டும் சிந்து அல்லது தமிழ் சொற்கள். சான்றோர்கள், பிராமணர்கள்  அல்லது பெரியவர்கள் என்பவர்கள் இப்போது  வெள்ளைதோல் ஆப்கானிய படிக்காத காடை, பாபேரிகலே. இவர்கள் படித்த பிராமணர்களின் இடத்தை பிடித்துகொண்டார்கள். ஒரு அம்ரிக்கர் எழுதியிருந்தார் இங்கிலாந்தின் பொற்காலத்திற்கு கொல்லரும் தச்சரும் காரண்ம் மாதிரியே சிந்து வெளியின் பொற்காலத்திற்கு குயவர்களே காரணம் என்று. சகல அளவை முறைகளும், எழுதுக்களும் செய்திகள் கோடிங்களும் இவர்களால் கையாளப்பட்டது. ஏற்றுமதி இறக்குமதி கணக்கு இவர்கள் கைக்களினால் ந்டந்தது. இதனால் பல பிராமணர் குயவர்களே என்றது அறியப்படலாம்.

 

பிற்காலம் அதிகார வர்க்க மனு போன்ற்வர்கள் பிரம்மாவை படைத்து, பிரமாவின் சந்ததிகள் பிராமணர் என்றார். வலிந்து நுளைக்கபட்ட பிரமா அதே போக்கில் விடுபட்டும் போனார். ஆனால் தமிழ் நாட்டின் சான்றோன் என்ற சொல் தெளிவாக சொல்கிறது பிராமாணன், சிந்துவெளியில் பெரியவன், படித்தவன் என்பதை. மேலும் சிந்துவெளியில் அரசர்கள் இருக்கவில்லை. போர் ஆயுதங்கள் இருக்கவில்லை. பலத்தால் மக்களைக் கட்டுப்படுதும் முறை இருக்கவில்லை. மக்கள் நல்லவர்களின் சொல்லை நீதித் தீர்ப்பாக எடுத்தார்கள் என்பதும் உணமை. 

 

இதைகைய சரித்திரத்தில் இனி என்றும் காணபோவதல்லாத சிறந்த பண்புகளை ஆப்கானிய காடைகள்  வந்து குழப்பி அடிததுதான் சிந்துவெளி அழிவு. இதுதான் முளைத்ததுதான் வர்ணம். இதில் சாதி இல்லை. சண்டமாருதனுக்கு உண்மையான சைவத்தொடர்பு இல்லாததால் எல்லா சொற்களையும் குழப்பி அடித்து பாவிக்கிறார்.

 

இந்துத்துவம் மதம் சம்பந்தமானது. BJP இப்போது தன்னை மதக் கட்சியாக காட்டிக் கொள்வதில்லை. அது கிறிஸ்தவ, முஸ்லீம் கட்சிகளின் வாக்குகளையும் பெற முயலும் கட்சி. வாஜ்பாய் மாதிரி ஒருகனவான் அந்த கட்சிக்குவராவிட்டிருந்தால் நான் அந்த கட்சியை ஒருபோதும் ஆதரித்து இருக்க மாட்டேன். சாஸ்த்திரி மாதிரியாவர்கள் காங்கிரசில் இருந்திருந்தால் காங்கிரசுடன் நானும் இருந்திருபேன். முசோலினி மாதிரி ஒரு மாபியா காங்கிரசை கையாக் பண்ணவிட்டால் காங்கிரசை வெறுத்திருக்க மாட்டேன். 

 

பார்ப்பணன் என்பது தமிழில் இல்லை. ஒருவேளை பார்பணர்கள் ஆப்கனிய காடைகள் அல்லாமல் பார்சிய காடைகளா எனற்து ஆராசிக்குரியது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவ சமயத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எனக்கு மத நம்பிக்கை என்பது துளியளவும் இல்லை. மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வை தக்க வைத்துக் கொள்ள இந்து மதக் கொள்கைகள் உதவவில்லை என்று எத்தனை பக்கங்கள் வேண்டும் என்றாலும் எழுதிக்கொண்டு போகலாம். ஆனால் அதையும் தாண்டி யதார்த்தத்தில் என்ன நடக்கின்றது என்பது பொதுப்புத்தி உள்ளவர்களுக்குப் புரியும்.

எனவே சுயமாகச் சிந்தித்து தனது ஆன்மீகத் தேடலுக்குத் தகுதியான மதத்தைத் தேர்ந்துகொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பூரண உரிமை உண்டு. அதேவேளை மதப்பிரச்சாரம் செய்பவர்கள் பிற மதங்களைத் தூற்றி தமது மதத்தைத் தூக்கிப் பிடிப்பது தவறானது. இதனால்தான் யெகோவாவின் சாட்சிகள் போன்ற அமைப்புக்களில் இருந்து வருபவர்களை துளியும் மதிப்பதில்லை.

Link to comment
Share on other sites

 

 

சமயத்தை சமயமாக பார்ப்பதற்கு கொஞ்சமாலும் சமய நூல்களைப்பற்றிய அறிவு தேவை... சுலபமாகக் கிடைக்கும் அரசியல் அறிவைக்கொண்டு சமயம் உட்பட எல்லாவற்றையும் அளக்க முற்படாதீர்கள்!

 

:icon_idea:

 

Link to comment
Share on other sites

இந்த திரியில் மதவாதம் பற்றி கதைப்பது யார்? நீங்கள் உட்பட இந்து சமயத்தை தூற்றுபவர்கள் தான் மதவாதம் பேசுகிறீர்கள். (நீங்கள் உங்களை இந்து என கூறிக்கொண்டாலும் அது உண்மையா பொய்யா என தெரியாததால் இந்து சமயத்தை தூற்றி மதவாதத்தை திணிக்கும் உங்களையும் மதவாதியாக உள்ளடக்கியுள்ளேன்.)

நான் மதவாதம் பற்றி கதைக்கவில்லை. மதம் மாற்றுவது சரியா பிழையா என மட்டும் தான் கதைத்துள்ளேன். அப்படி தான் "மதம் மாற்றுவது பிழை" என இங்கு கருத்திட்ட ஏனையோரும்.  :)  மதவாதத்துக்கும் இதற்குமான அடிப்படை வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள். :huh:

ஆக மொத்தத்தில் மதவாதம் பற்றி பேசும் நீங்களே உங்களை கருணாவை விட மோசமான துரோகி என கூறுகிறீர்கள். :D

 

நீங்கள் தானே சட்டை கதையை கூறியது. :D சட்டை அழகாக இருந்தால் அதை யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்று. :D அதே நீங்கள் தான் "சைவ சமயம்" என்ற சட்டை போட்டவர்கள் பற்றி தூற்றி எழுதுகிறீர்கள். :D

உங்களுக்கு என்னதான் பிரச்சனை என்று புரியவில்லை.

இந்துமதமோ சைவமோ அவ்மததில் உள்ளவர்கள் அம்மதத்தல் எவருக்கும் சமமானதில்லை. இதே மதங்கள் தான் இன்ன சாதிதான் கோயிலுக்குள் வரலாம் பூசை செய்யலாம் இன்மொழியில் தான் பூசை செய்யலாம் அதற்கும் மேலாக தீண்டத்தகாத கடவுள்கள் என்று கோயிலுக்கு வெளியே மனிதர்களை மட்டுமல்ல கடவுள்களையும் வைத்துள்ளது. இந் நிலையில் யாருக்காக மதம் மற்றுவது சரி அல்லது பிழை என்று கருத்துச் சொல்லவேண்டும்? இந்து என்றாலே அதன் கீழ் யாரும் சமமாக இருக்கமுடியாது இந்நிலையில் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டுபோய் மதம் மாற்றுவது சரி பிழை என்று சொல்வது? சுத்த கூறுகெட்ட தனமா இருக்கு உங்கள் கேள்விகள்.

நீங்களும் நானும் ஒரு மொழிபேசுவதால் தமிழர் எனலாம் இல்லை ஒரு பிரதேசத்தில் வாழ்வதால் ஒரு இடத்துக்குரியவர் எனலாம் ஆனால் நீங்களும் நானும் அல்லது எவரும் நாங்கள் இந்த அல்லது சைவம் என்ற பொதுப்படைக்கு கீழே வரமுடியாது அதை புரிந்துகொள்ளுங்கள். அங்கே சாதிகள் எற்றதாழ்வுகள் வந்து தடுத்துக்கொள்ளும். இந்நிலையில் மதம் மாற்றுவது பிழை என்று யாருக்காக சொல்லவேண்டும் உங்களுக்காகவா இல்லை வேறு யாருக்காகவுமா?

மானுட நேயத்தை சமத்துவத்தை விரும்பும் எவனும் இந்துமதத்தில் இருந்து என்னுமாரு மதத்துக்கு ஒருவன் செல்வதை தடுக்கமாட்டான்.

இந்து மதமே எம்மை அழித்து சிதைத்து சின்னாபின்னமாக்கும் நிலையில் அடுத்தவனைப்போய் நீ செய்வது பிழை என்பதற்கு என்ன அடிப்படை யோக்கியம் இருக்கு?

மதம் மாற்றுபவராகட்டும் இல்லை மாறுபவராகட்டும் அது அவர்கள் பிரச்சனை. அதில் கருத்துச்சொல்லும் அடிப்படைத்தகுதி எனக்கிலல்லை ஏனெனில் நான் பிறப்பால் சைவசமயம் சார்ந்தவன். தூரதிஸ்டவசமாக மானுட விரோத மததில் பிறந்துவிட்டதால் எந்தவிதத்திலும் என்னுமொருவர் மீது குற்றம் காணும் தகுதி எனக்கில்லை. நீங்கள் வேண்டுமானால் மதம் மாற்றுவது பிழை என்று ஆரம்பித்த சண்டையை இழுத்து இரண்டு தரப்பும் அங்கு அடிபட்டு சாக இங்க இருந்து புலிக்கு முதல் விசில் அடித்தது போல் விசிலடியுங்கள்.

Link to comment
Share on other sites

என்ன இழவுக்கு இதற்குள் புலியை இழுக்குறீர்கள்? உங்களுக்கு சாதி பிரச்னை புலிப் பிரச்சனை இழுக்காட்டி நித்திரை வராதோ£?

 

நாங்கள் சாதிய மறந்தாலும் நீங்கள் அடிக்கடி நினவு படுத்துவீர்கள்.நாங்கள் எந்த விட்டுக் கொடுப்பை செய்தாலும் நீகள் வியாக்கியானமே பேசுவீர்கள் அப்புறம் எப்படி சாதி ஒழியும்???

Link to comment
Share on other sites

உங்களுக்கு என்னதான் பிரச்சனை என்று புரியவில்லை.

இந்துமதமோ சைவமோ அவ்மததில் உள்ளவர்கள் அம்மதத்தல் எவருக்கும் சமமானதில்லை. இதே மதங்கள் தான் இன்ன சாதிதான் கோயிலுக்குள் வரலாம் பூசை செய்யலாம் இன்மொழியில் தான் பூசை செய்யலாம் அதற்கும் மேலாக தீண்டத்தகாத கடவுள்கள் என்று கோயிலுக்கு வெளியே மனிதர்களை மட்டுமல்ல கடவுள்களையும் வைத்துள்ளது. இந் நிலையில் யாருக்காக மதம் மற்றுவது சரி அல்லது பிழை என்று கருத்துச் சொல்லவேண்டும்? இந்து என்றாலே அதன் கீழ் யாரும் சமமாக இருக்கமுடியாது இந்நிலையில் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டுபோய் மதம் மாற்றுவது சரி பிழை என்று சொல்வது? சுத்த கூறுகெட்ட தனமா இருக்கு உங்கள் கேள்விகள்.

நீங்களும் நானும் ஒரு மொழிபேசுவதால் தமிழர் எனலாம் இல்லை ஒரு பிரதேசத்தில் வாழ்வதால் ஒரு இடத்துக்குரியவர் எனலாம் ஆனால் நீங்களும் நானும் அல்லது எவரும் நாங்கள் இந்த அல்லது சைவம் என்ற பொதுப்படைக்கு கீழே வரமுடியாது அதை புரிந்துகொள்ளுங்கள். அங்கே சாதிகள் எற்றதாழ்வுகள் வந்து தடுத்துக்கொள்ளும். இந்நிலையில் மதம் மாற்றுவது பிழை என்று யாருக்காக சொல்லவேண்டும் உங்களுக்காகவா இல்லை வேறு யாருக்காகவுமா?

மானுட நேயத்தை சமத்துவத்தை விரும்பும் எவனும் இந்துமதத்தில் இருந்து என்னுமாரு மதத்துக்கு ஒருவன் செல்வதை தடுக்கமாட்டான்.

இந்து மதமே எம்மை அழித்து சிதைத்து சின்னாபின்னமாக்கும் நிலையில் அடுத்தவனைப்போய் நீ செய்வது பிழை என்பதற்கு என்ன அடிப்படை யோக்கியம் இருக்கு?

மதம் மாற்றுபவராகட்டும் இல்லை மாறுபவராகட்டும் அது அவர்கள் பிரச்சனை. அதில் கருத்துச்சொல்லும் அடிப்படைத்தகுதி எனக்கிலல்லை. ஏனெனில் நான் பிறப்பால் சைவசமயம் சார்ந்தவன். தூரதிஸ்டவசமாக மானுட விரோத மததில் பிறந்துவிட்டதால் எந்தவிதத்திலும் என்னுமொருவர் மீது குற்றம் காணும் தகுதி எனக்கில்லை. நீங்கள் வேண்டுமானால் மதம் மாற்றுவது பிழை என்று ஆரம்பித்த சண்டையை இழுத்து இரண்டு தரப்பும் அங்கு அடிபட்டு சாக இங்க இருந்து புலிக்கு முதல் விசில் அடித்தது போல் விசிலடியுங்கள்.

 

உங்களுக்கு தான் என்ன பிரச்சினை என எமக்கு புரியவில்லை.

 

மற்றவர்கள் மதம் மாற்றுகிறார்கள் என்ற கருப்பொருளை தான் இந்த திரி கொண்டுள்ளதே தவிர இந்து சமயம் நல்லதா கெட்டதா என்ற கருப்பொருளில் ஆரம்பிக்கப்படவில்லை. உங்களுக்கு இந்து சமயம் நல்லதா கெட்டதா என விவாதிக்க வேண்டுமானால் அதற்கு வேறு திரி ஆரம்பித்து அங்கு விவாதியுங்கள்.

 

உங்களுக்கு இந்து மதம் பிடிக்காவிட்டால் (நீங்கள் எந்த சமயத்தவராக இருந்தாலும்) விலகியிருங்கள். அதற்காக இந்து மதத்தை பின்பற்றும் மற்றவர்களை வேறு சமயத்தினர் மதம் மாற்றி அவர்கள் வாழ்வில் தலையிடும் நடவடிக்கையை பிழை என நாம் வாதாடுவதை எதிர்த்து எழுதாதீர்கள்.

 

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனாலும் சைவ சமயத்திலேயே இருக்க விரும்புகிறேன். காரணம் கடவுளை வணங்காமல் இருப்பதற்கு பூரண சுதந்திரம் எனக்கு இந்த சமயத்தில் கிடைக்கிறது. ஆனால் எனக்கு மதம் மாறுவது விருப்பமில்லை என தெரிந்த பின்னரும் என்னை மதம் மாறு மாறு என வேறு சமயத்தவர்கள் கேட்பது எனக்கு தொல்லையாக உள்ளது. அதே போல் பலர் சில சூழ்நிலைகளை காட்டி மதம் மாற்றப்பட்ட பின்னர் அவர்கள் அனுபவித்த பிரச்சினைகள் பற்றியும் தெரிந்ததால் இத்திரியில் எழுதுகிறேன்.

 

 

மதம் மாற்றுபவராகட்டும் இல்லை மாறுபவராகட்டும் அது அவர்கள் பிரச்சனை. அதில் கருத்துச்சொல்லும் அடிப்படைத்தகுதி எனக்கிலல்லை.

 

இவ்வாறு நீங்கள் நினைத்தால் இந்த திரியில் நீங்கள் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இந்த திரியில் பேசப்படுவதே மதம் மாறுவது, மாற்றுவது பற்றி தான்.

பி.கு: சண்டை முடியும் வரை நான் நாட்டில் தான் இருந்தேன். எனவே இங்கிருந்து நான் விசிலடிக்கவில்லை. (ஆனால் அங்கும் போராடியிருக்கவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இழவுக்கு இதற்குள் புலியை இழுக்குறீர்கள்? உங்களுக்கு சாதி பிரச்னை புலிப் பிரச்சனை இழுக்காட்டி நித்திரை வராதோ£?

 

நாங்கள் சாதிய மறந்தாலும் நீங்கள் அடிக்கடி நினவு படுத்துவீர்கள்.நாங்கள் எந்த விட்டுக் கொடுப்பை செய்தாலும் நீகள் வியாக்கியானமே பேசுவீர்கள் அப்புறம் எப்படி சாதி ஒழியும்???

 

கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சமதர்ம நிலைக்கு வர எண்ணும் போது ஒருசிலரின் வியாக்கியானங்கள் மீண்டும் பழைய பாதைக்கே தள்ளுகின்றது.
 
நன்றி அன்பர்.உங்கள் கருத்தை ஆதரிக்கின்றேன்.
Link to comment
Share on other sites

இந்துத்துவத்துக்கு இன்னுமொரு பெயர் பார்ப்பனப் பயங்கரவாதம்.

 

மத்திய கிழக்கு மதவெறியர்களை சுட்ட வந்ததுதான் பயங்கரவாதம் என்ற சொல்.  பயங்கரவாதம் என்றால் முஸ்லீம் தீவிரவாதிகள்பயங்கர ஆயுதங்களை கொண்டு பொது மக்களை கொலைசெய்வதை குறிக்கும். இன்று இந்தியாவில் கஸ்மீரிகள் மீதும் பாவிக்கப்படுகிறது. ஓரவு சீன கம்யூனிஸ்டுகளின் மீதும் பாவிக்கபடுகிறது.  மிருகபலிபோன்ற சிறு கொலைகளை கூட இந்துமத்தில் புத்குத்தியது ஆப்கனிய, பாரிய காடைகள். இந்த்துகள் கொலை மிருகங்களியே கொலைசெய்யாத சைவர்கள்.

 

இந்துத்துவம் என்பது திராவிட கட்சிகள் தொகுத்த சொல. சண்டமாருதனுக்கு திராவிட கட்சிகளைத்தெரியாது.  பெரியார் காலத்தில் மறைமலை அடிகளார் போன்ற்வர்களால் திராவிடம் பற்றிய பல் பிழையான கருத்துக்கள் வைக்கப்பட்டன. பெரியார் தவறாக திராவிடர்கள் நாத்திகர்கள் என்றார்ததனால் தம்ழியர் இந்து மத்தை கவிட வேண்டும் என்றார். பிற்கான புராணக்கதைகளை தவறாக இந்துமதமாக் வர்ணித்தார். மறைமைஅடிகள் தவறாக சமஸ்கிருதம் தமிழுக்கு எதிரான பாசை என்று கருத்தி தனது வேதாசலம் என்ற பெயரை மறைமலை என மாற்றிவார். பிற்காலம் தமிழிலிருந்து தோன்றிய இன்னொரு பாசையே சமஸ்கிருதம் என்றது ாஅதார பூர்வமாக கண்டறிப்பட்ட பினர் பெரியார், மறைமை அடிகளாரின் ஆதரம் இல்லாத கண்டுபிடிப்புகள் செயலிழக்கின்றன. திராவிடர்கள் சாதியை உருவாக்கிய இந்துவெளி தமிழர். இவை பெரியாரின் தத்துவத்தில் இருந்த பிழை. இந்தியாவில் திராவிடை தவிர வந்தேறிய ஆரியர் (15-20%) மட்டுமே ஆரியர். இவர்கள்தான் தங்களை தாங்கல் பார்பணர்கள் ஆக்கினார்கள். பயங்கரவாதம் தனிய முஸ்லீம் தீவிரவாதிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சொல். இதில் வேறு எந்த மத்திற்கும் தொடர்பு கிடையாது. பொதுவிலிந்தியர் ஆயுதம் தாங்கி போராடுவது குறவு. இதானல் ஆரம்பத்தில் ஆப்கானிய ஆரியக்கடைகள், பின்னர் கண்ஸ், கிரேக்கர், சுலதான்கள் முகலாயர்கள், ஆங்கிலேயர் வரை எல்லோராலும் பயங்கரவாதம் செய்யப்ப்டார்கள்.

ஈழத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்தப் பயங்கரவாதத்தை உணர்பவர்கள் இல்லை.

 

ஈழத்து இந்துத்துவம் இராமநாதனால் ஏற்படுத்திய மையவாதம் என்ற கதை பிசுபிசுத்துவிட்டது. இது புதிய தோப்புக் க்றணமகல்லது அதற்கு முதல் எழுதிக்கொடுத்தவர் Lunch Break ல்.  பெருமாபலனவர்கள் உண்ராத சாயிபாவிம் திறு எடுக்கும் சண்டாமிருதனின் ஜனநாயகம் இது. சரியான கோமள்ளி எழுத்து.  

 

 

இந்துத்துவம் என்பது மதம் மற்றும் அதுசார்ந்த அரசியல். அங்கே ஆன்மீகத்துக்கு இடமில்லை.  

 

அப்படி ஒன்றே எங்கே இருந்து வருகிறது என்று கூறமுடியுமா? அதுதான் ரதியின் கேள்வி என்றது புரிகிறதா?இனி இப்படு ஆதரமில்லாத விசம் கக்கல்களை எழுதினால் நிர்வாகம் நீக்க வேண்டும்.

 

இன்றைய இந்துமதம் ஒரு சமூக வாழ்வு. அது பண்பாடு.அதில் அரசியல், கலை, மதம், ஆமீகம் எல்லாம் இணைந்திருக்கு அதில் ஆமிகத்தை பிரிக்க முடியாது. சக இந்துமத இலக்கியங்களும் ஆட்சியை கட்டுப்படுத்திகின்றன. இது திருகுறள் சாணக்கிய நீது வரையிலும் அரசியலுக்கு எழுந்த இந்துமத நூல்கள்.

இந்துத்துவம் மனு தர்மத்தைப் போதிக்கின்றது.

இந்துதுவம் புதிய கோட்பாடு. மனுதர்மம் இதனுடனுடன் தொடர்பில்லாதது. இந்துத்துவம் இந்து மத்தை எதிர்ப்பவர்களின் சொற்தொகுப்பு. மனு இந்து மதத்தை பிழையான முறையில் ஒழுங்கமைக்க முயன்றவர்.  இரண்டையும் அறியாதார் இந்த கருத்தை வைக்கும் ஒருவர்.

 

வருணாசிரமதர்மத்தைப் போதிக்கினறது. சதீயத்தை வரையறை செய்கின்றது. ஏற்றதாழ்வை சட்டமாக்குகின்றது. இதனடிப்படையில் இந்தியாவில் இன்னும் 17 இல் இருந்து 20 மில்லியன் மக்கள் தீண்டத்தகாத மக்களாக தலித்துக்களாக அவர்களது வாழ்வு நரகமாக்கப்பட்டுள்ளது.

 

இதில் எதுவும் இந்துத்துவம் அல்ல. சில இந்து மதத்தில் இருந்த அல்லது இருக்கிற குறைபாடுகள். இவை ஆப்கானிய பாசிய பாபேறிகளால் இந்துமதத்தில் திணிக்கபட்டவை.  அதாவது மத்திய கிழக்குக்கு தொழ்லிற்க்கு போகும் மற்றவர்களுக்கு  இன்று அவர்கள் என்ன செய்தார்களோ அதையே இந்திய திராவிடர்களுக்கு பாகினிஸ்தானிய பார்சிய பாபேறிகள் அன்று செய்தார்கள் அதன் தொடர்ச்சிதான் இந்து மத்தில் இருக்கும் இன்றைய குறைபாடுகள். மத்திய கிழக்கு அட்டூளியங்களை ஐ.நா கட்டுப்படுத்தமுடியாமல் தவிக்கிறது. ஆனால் இந்தியாவில் இவை சட்டப்படி தடுக்கப்பட்டவை. இதை பார்சி, இத்தாலியய ஆழும் குடும்பங்கள் சட்டங்களை பாவித்துதடுக்காமல் தங்களின் பாகிஸ்த்தானிய ஆப்கானிஸ்தானிய் மருத்து கடத்தல், ஆயுதம் கடதல்களுக்கு பாவிக்கிற்கள். மோடி பிரதமரானவுடன் பல கடத்தல் மன்னர்கள் சிக்கும் போது இதில் பல வழக்கொழியும். இந்த குறைப்படுகள் போக BJP அதிகாரதுக்கு வரவேண்டும். 

 

ஆனால் பெணகளை கல்லால் அடிப்படி, ஆண் பெண் குழந்தைகளின் பிறப்புறுக்களை சிதைப்பது, பெண்களை ஏழைத் தாய் தந்தையரிடம் இருந்து விலைக்கு வாங்கி பால் அடிமைகளாகுவது சரியா போன்ற மிருத்தனமானவற்றை சட்டமாகுவது, விடுமுறைக்கு போகும் இடத்தில் கன்னி பெண்களை வாங்கி பால் உறவு வைத்துவிட்டு, வீட்டுக்கு திரும்ப்போது தொலை பேசியில் விவாகரத்து செய்து அவர்களை பின்னர் வாழ்நாள் முழுவதும் அநாதைகளாக்கு போன்ற ஈனத்தங்கள் இந்துக்களிடம் இல்லை.

 

இந்துத்துவத்தின் பிரதான இயங்குசக்தியானது இனங்கள் உருவாவதை தடுத்தல் சமூகம் சமநிலைப்படுவதை தடுத்தல். ஏற்றதாழ்வு சமநிலைப்படுவதை தடுத்தல். இனத்துக்கான தேசீயம் உருவாவதை தடுத்தல்.

 

உண்மைகளுக்கு எதிரான கற்பனைக்கதைகள் மட்டுமல்ல அரசியல் அறிவில் சூனியம் என்பதால் கட்டப்படும் பொய்கள். இவர்கள் எப்படி த்மிழ் தேசியத்தை உருவாக்கி திழீழத்தை மகாநாம புத்த வெறியால் சாத்தியமாகினார்கள் என்பதி எதிமறையாக சொல்கிறார்கள். 

 

அரசியலில் எது யதார்த்தம் என்பதை புரியாத இவர்கள்தான் இன்றைய இலங்கை என்ற நாட்டை அழித்து அரசிலை சிதைதார்கள் என்பதை தாங்களே வெளிக்காட்டுகிறார்கள்.  மகாநாம புத்த வெறியால் இலனகையில் இவையெல்லாம் ஏற்பட்டதை எல்லோரும் காண்கிறார்கள். 

 

- இது எவ்வாறு நிகழ்கின்றது என்றால் சாதி இருக்கும் சமுதாயம் ஒன்றுபட முடியாது. சமூக உறவுக்குள் நெருக்கம் வராது. நீயும் நானும் தமிழன் ஆனால் நான் உன்னைத் தொடமாட்டேன் நீ திண்டத்தகாதவன் குறைந்த சாதி உன்னிடம் சம்மந்தம் வைத்துக்கொள்ள மாட்டேன என்னும் நிலையில் இந்த தமிழன் என்பதை எவன் ஏற்கப்போகின்றான்? அதற்கு என்ன அவசியம் இருக்கின்றது? இததான் இந்தியாவில் நடக்கின்றது.

 

சாதியம் என்பதில் இலங்கை இந்தியா என்ற இரண்ட்லும் சரியான சட்டங்கள் இருக்கு. இந்தியாவில் ஆழும் இத்தாலியமொசோலினி மாபியாகளும், இலங்கையில் அரசகுடுபமும் பிரித்தாளும் தந்திரத்தை தொடர்ந்த்து பாவிக்கிறார்கள். இலங்கை கடத்தல்காற குடும்பம் மக்கள் உண்மைகளை தெரிந்துவிடாமல் இருக்க பத்திரிகை சுதந்திரங்களை முடக்கிவிட்டு பொய் துண்டுபிரசுரங்கள் போட்டு கைக்குளிகளை வைத்து மத சண்ட்டைகளை உருவாக் முயல்கிறாகள்.  

 

இந்தியா அடிமட்டத்தில் இருந்து முசோலினி அம்மை வரும் வரையில் பல முன்னேற்றங்கள் நடந்த நாடு. காங்கிரசும் முசோலினியும் போனவுடன் மோடியினால் திரும்ப இந்திய பொருளாதாரம் கட்டப்படும்.

 

ஆனால் இலங்கை முன்னேறிய நாடாக இருந்து பின்னால் போகிறது. புதத வெறிபிடித்த இலங்கைக்கு சோதனை இன்னும் பல ஆண்டுகள் போக இருக்கு.  முதலில் ஐ.நா பிரேரணை வர வேண்டும் (அது நிச்சயம் என்றாலும் நடந்து முடிய நாட்கள் வேண்டும்). பல ஆண்டுகள் சர்வ்தேச விசாரணை நடக்கும் குற்ற்வாளி அரச குடுப்பம் ஒவ்வொருவராக விசாரிக்கப்படுவார்கள். தம்பி அண்ணைப்  பற்றி எடுத்து வைத்திருக்கு ஆபாச வீடடியோக்களை போட்டுக்காட்டி ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்க வேண்டும். அவர்கள் மின்சார கதிரை நாடகம் நடிக்க வேண்டும். அதன் பின்னர் ஐ.நா  இலங்கையின் அரசியல் அமைப்பில் சீர்திருதம் செய்ய வேண்டு. இது நீண்ட பட்டியல். 1956 ல் தென் கொறியாவை விட நல்ல நிலையில் இருந்த நாடு மகாநாம புத்த வெறியால் உலகின் கடனாளி, உலகின் அரச பயங்கர்வாத நாடாகி, மக்கள் ஊடக சுதந்துரம் இல்லாத நாடாகி அரசு பொய் துண்டு பிரசுரங்களை போட்டு சமயச் சணைகளை தூண்டி அரசியல் நடத்தும் காட்டுத்தர்பார் நாடாகிவிட்டது.  2009 பின்னர் அரசு புலிகளின் கிலி காட்டித்தான் அரசியல் செய்து வந்தது. இப்போ  சிங்கள மோடையாக்கள் கூட புலிகளின் கிலி கேட்க மறுக்கிறார்கள். இதன்னல் கொழுப்பில் தேர்தல் வெல்ல இந்துதுவ கண்டு பிடித்ஹ்டிருக்கிறது. இந்த தேர்தலோடு அதுவும் போய் விடும்.  

 

எந்த இனமும் விடுதலை பெறமுடியாது. ஒவ்வொரு வரும் பல தட்டுகளாக சாதிவாரியாக பிரிந்து இனத்தை இரண்டாம் நிலையில் வைத்துள்ளனர். இதுவே பிரித்தாளும் அரசியில். இந்தியாவை இந்துதுவம் ஆழ்கின்றது. யாரொருவன் இந்துவாக இருக்க முடியுமோ அவன் இனத்தை துறந்தாகவேண்டும். இனத்தேசீயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அவன் இந்துத்துவத்தை துறந்தாகவேண்டும். இது வெளிப்படையான யதார்த்தம்.

 

ஆரொருவர் முஸ்லீமாக இருக்க வேண்டுமோ அவர்தான் இனத்தை துறக்க வேண்டும்.இதையேதான் இன்னொரு  கருத்தில் இவர்கள் வைத்தவர்கள். அப்படித்தான் யதாங்கள் தமிழீழத்தில் தனி அலகு பெறபோவத்தாக் கூறியவர்கள். இப்போ இன்னொரு தோப்பு க்றணம் போடுகிறார்கள்.  காகிம் நச்சு விஷத்தில் தாங்கல் சொல்வதே நினைவில் இல்லை. 

 

 

 இந்தியா சமஸ்டி அரசியல் அமைப்பில் உள்தை இலங்கையில் இருந்து சம்பளம் வாங்குபவர்கள் அறியவில்லை. அங்கு மொழிவாரி மானில அரசியல் அமைப்புத்தான் சட்டம். இந்துமதம் அரசியல் அமைப்பில் இருக்கறது எனபது இந்திய அரசியல் அமைப்பை அறியாத முட்டாள்களின் கருத்து. 21 மானிலமாக மொழிவாரி மானிலங்கள் ஆரப்பித்து 29 ஆகி இன்னும் பிரிந்து போகிறது.  இதில் இந்துத்துவா என்ற கற்பனையில் இந்தியா இணைவதாக கூறுபவர்கள் பள்ளிக்கு சென்று படிக்காத முட்டாள்கள். 

இந்தியாவில் குறிப்பாக பார்ப்பனர்கள் இந்திய அதிகார வர்க்கம் ஈழம் அமைவதை ஒரு தேசீய இனம் உருவாவதை என்றைக்கும் விரும்பியது இல்லை. இனிமேலும் அது விரும்பாது. பிரித்தாளும் தனது பாரம்பரிய குணத்திற்கேற்ப ஈழத்தமிழ் இயக்கங்களை பிரித்து சூழ்ச்சிகளுக்கு உட்படுத்தி ஈழத்தை சுடுகாடாக்கியது. பிரித்தாழ்வதும் மனித குலத்தை சர்வ நாசம் செய்வதும் இந்துதுவத்தின் அடிப்படைக் குணம்.

 

இந்தியாவின் இந்திரா காந்தி எம்.ஜி.ஆர் போன்றவர்கள் தான ஈழப்போராட்ட்தை வளர்த்தவர்கள்.  அதை கெடுத்தவர்கள் யாழ்பாணத்தில் இருந்த ஒற்றர்கள். அவர்களை துரத்திய பின்னர் போராட்டம் முன்னல் சென்றது.  முசோலினி வரும் வரை இந்தியா ஒருவழியில் சிங்களத்துக்கு எதிராகத்தான் நடந்தது. ரஜீவ் கூட சிங்களத்தையும் சேர்த்து மடக்கி பிடிக்கத்தான் கனவு கண்டார். ஆனால் முசோலினி மட்டும் மலையாளிகளின் சொல்படி தமிழருக்கு எதிராக போர்குற்றத்தில் ஈடுபட்டார்.இந்தியாவின்  BJP தமிழருக்கு உதவித்தான் ஆகும். அதன் பின்னர் இந்தியா பாகிஸ்த்தானை தாக்க தமிழர் BJP க்கு உதவ வேண்டியவார்களாக இருப்பார்கள். இதை செய்ய்த்தான் அமெரிக்க இந்தியாவுடன் பலகாலமாக விட்டிகொடுத்த அரசியலில் இறங்கியிருக்கிறது.  முசோலினியின் பிரியாவை விடை வருகிறது. அதை கைமுணுவுக்கு மிசாரம் போல இருக்கப் போகிறது. அதாவது ஐ.நாவல்ல இனி இலங்கையில் தமிழ் ஈழம் அம்மைக்க போவது. அமேரிக்கவின் உதவியுடம் BJPதான் அமைக்க போகிறது.  சல்மான் குதிர்சே கக்கிமின் சுத்துமாதுக்களுக்கு மசியவில்லை. இனி இலங்கைக்கு பிரச்சனை. இதனால் மு.காவும் தொண்டர்களும் போக இடமில்லாமல் அவஸ்தைபடுவது தெரிகிறது. 

இந்துத்துவம் தமிழ்மொழியை நீச பாசை என்கின்றது. அதாவது தீண்டத்தகாத பாசை என்கின்றது. கடவுளுக்கு கேட்கும் மொழி சமஸ்கிருதம் என்கின்றது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பிரசங்கம் செய்த மேடைகளை கழுவி தீட்டுக்களித்த சம்பவங்கள் எல்லாம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

 

இது திராவிட கட்சிகள் கண்டு பிடித்த ஆரோ ஒரு மத வெறியர் எழுதிவைத்த மூலை முடுக்குள் இருக்கும் வாகடம். இந்து தர்மத்தின் படி தமிழ் சிவனின் உடுக்கின் இடக்கரையிலும், சமஸ்கிருதம் வலக்கரையிலும் தோன்றிய சகோதர மொழிகள் அதைவிட கூடிய சரித்திர வரலாற்று உண்மை, சமஸ்கிருதம் தமிழிலிருந்து தோன்றிய மொழி. அதன் பின்னர் அந்த உணமை தெரிந்த பின்னர் ஐ.நா மிசாரக்கதிரையை கண்டு பயந்து துடிப்பவர்கள் தாங்கள் அதிலிருந்து தப்பலாம் என்று நினத்து போடும் மிண்டிகளுக்கு யாரும் எழுந்து ஆடமாட்டர்கள்.  சமஸ்கிருதமும் தமிழும் தமிழ் நாடு, இலங்கை இரண்டிலும் ஆலய மொழிகள்.  மிண்டிகள் மிசாரக்கதிரை வந்த பின்னர் ஓய்ந்துவிடுவார்கள். அதைபற்றி யாரும் கவலைப்பட மாட்டர்கள்

ஈழத்தில் இந்த நிலை இந்தியா அளவுக்கு மோசமாக இருந்ததில்லை. சைவம் அதிகாரத்துடன் இருந்தது.

 

மறுபடியும் கனவு வந்து தூக்கத்தை கெடுக்கிறது. ஆறுமுக நாவலரை மறந்தாயிற்றா. அவர் அல்லவா அமைதியாக இருந்த த்மிழ் நாட்டில் சென்று  இந்துத்துவ விவாததிற்கு வலிய அழைத்தவர். யாழ்ப்பாணத்தில்தான்  இந்துத்துவம் கொடிகட்டி பறந்தது என்றல்லாவ எழுதியிருக்க வேண்டு, (துண்டு பிரசுரம் அடித்த போது, இராமநாதனும்ம் சூத்திரர், ஆறுமுகநாவல்ரும் சூத்திரர்,  வவுனியா எம்.பி க்சுந்தர லிங்கம் கூட சூத்திரர் என்றதை தெரிந்திருக்கவிலை வவுனியா மந்திரிக்கு) 

 

 

ஆனாலும் சைவத்தை வைத்து பிழைப்புவாதம் நடத்தியவர்கள் தம்மையும் இந்துவாக தாமாக அந்தச் சகதிக்குள் தலையை கொடுத்தனர். சமஸ்கிருதத்தில் தான் மந்திரம் சொல்லவேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றனர் (இத்திரியில் ஒரு புத்தகத்தின் இணைப்புள்ளது அதைப் படித்தால் அதுசார்ந்து நிறைய விசயங்களை அறிந்துகொள்ளலாம்)அதாவது தமது தாய்மொழியை தாமே தீண்டத்தகாகத மொழி என்று ஏற்றுக்கொண்டனர்.இந்தியாவின் இந்துத்துவம் கட்டமைத்த சாதீகளை யாழ்பாணத்தில் சைவம் என்ற போர்வையில் ஏற்படுத்தினார்கள்.

பிழைப்பு வாததிற்க்கா புத்த்கங்களை எழுதியும் படித்தும் யாழ்ப்பாண ம்க்களின் சத்திரத்தை மாற்ற முடியாது. விக்கினேஸ்வரன் அறிஞஞர்கள் இலங்கை சரித்திரத்தை எழுத வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அது நடந்த பின்னர் அரசின் அடியார்களின் புத்தகங்கள் கழிவு கூடைக்கு போகும். மேலும் பெரியார், ராஜாஜி, மறைமலை அடிகள் போன்ற படிதவர்களெ விபரம் தெரியா நேரத்தில் வரலாற்றை பிழையாக தெரிந்திருந்தார்கள் எனபதும் உண்மை.  

 

யாழ்ப்பாண தமிழ் ராசியம் அமைய முன்னரே கோவில்கள் எங்கும் (தமிழ் நாட்டிலும், யாழ்ப்பாணத்திலும்) பூசைகள் வடமொழியில்த்தான் நடந்தது. மேலும் சிங்கள மகாநாமம் இன்னமும் பாளியில்தான் எழுதப்படிருக்கு. இவை மெக்க சரித்திரம் அல்ல. இலங்கை இந்திய சரித்திரம்.

 

2500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாடு போன்ற சிறு பிராந்தியத்தை தவிர சகல இடங்களிலும் பள்ளி மொழியாக இருந்தது வடமொழி. 1500 ஆண்டுகள் முன்னர் வரை இந்திய என்ற பெரிய தேசத்தில் இலக்கியங்கள் வட மொழி தவிர தம்ழில் மட்டும்தான் தோன்றியது என்றை மெக்கா சரித்திர விற்பனர்களுக்கு தெரியாது. கேட்டுக்கேள்வி இல்லாமல் சகல இந்திய மொழிகளும் கன்னடம், தெலுங்கு மகாராடிரம், வங்காளம் எல்லோருமே சமஸ்கிருதத்தின் ஆளுமையை தலை வணகி ஏற்றார்கள் என்பது சரித்திரம்.  இன்று தமிழ் நாட்டை தவிர மொழி வாரி மாநிலங்கள் இந்தியை எதிர்ப்பத்தில்லை. அவர்கள் பெரிய மொழியை படிப்பத்தால் தாங்கள் பயன் அடையலாம் என்று நினக்கிறார்கள். இதில் 

 

இன்று ஆங்கிலத்தை வடமாகாண மக்கள், தமிழ் நாட்டு மக்கள் விரும்பிப் படிப்பது போல அன்று அவர்கள் பொது அறிவு மொழியாக, பள்ளி மொழியாக வடமொழியை கண்டார்கள். அதனால் வடமொழி எங்கும் சென்றது என்பது உண்மை. இதில் யாரோ ஒரு யாழ்ப்பாணத்தவர் கருணா மாதிரி அரசுடன் சேர்ந்த்து சதி செய்தார் என்பது கட்டுக்கதை. (கிட்டத்தட்ட எல்லா கோவில்களினதும் ஸ்தல புராணம் வடமொழியில் எழுதப்படுத்தான் அங்கு வடமொழி பூழை மொழியாக மாறியது)  புததம் கூட புத்தர் சொல்லியும் கேளாமல் வட மொழியியையே மத மொழியாக்கினார்கள். சமணமும் அதே கதைதான். அவர்களேதான் தமிழ் நாட்டுகு வடமொழியையும் பாழியையும் கொண்டும்வந்தர்கள். சமண புத்த எத்ர்ப்போது தமிழ் நாடில் வட மொழி எதிருப்பும் இருந்தும் தான் வந்தது. சோழருடன் தொழர்பில் இருந்த யாழ்பாணம் அவர்களையேதான் பின்பற்றியது. 

 

 

 

 

இந்தியாவில் இந்துத்துவத்துக்கு பார்ப்பான் தலமையாக இருப்பதுபோல் யாழ்ப்பாணத்தில் வெள்ளார் தலமையாக இருக்க முற்பட்டனர். ஏழை எளிய மக்கள் சாதியில் தாழ்ந்த மக்கள் கல்வி கற்பதை தடுத்தனர். அரச உத்தியோகத்தில் இணைவதை தடுத்தனர். இதுதான் நாவலர் காலம். இதன் வரலாறு மிக நீளமானது.

 

யாழ்ப்பானத்தில் ஆங்கில பாணி கல்வி பாடசாலைகள ஆறுமுக நாவலர் கொண்டுவந்தார் என்பது அடிமட்ட அறிவே இல்லாத முட்டள்க்கதை. யாழ்ப்பாணத்தில் அமெரிக்கன் மிசன் மதம் மாற்றி கல்வி சொல்லிக்கொடுததது. இதில்தான் கரோல் விஸ்வந்தான், தாமோதரம் பிள்ளை, ஆறுகநாவலர், சுவாமி ஞாப்பிரகாசர்  எல்லோருமே கிரீஸ்தவம் படித்தார்கள்  பிருத்தானியர் கொழும்பில் அமெரிக்க மிசன் உளவு பார்தாலும் என்று பயந்து அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் தொடர்ந்து மிண்டி போட போனால் போகுது என்று யாழ்ப்பாண ஒதுக்கு புறமாக சாய்த்துவிட்டர்கள். அது மட்டுமல்ல ஆறுமுகநாவர் தான் முதல் முதல் ஒரு குடிசையில் மூன்று நாங்கு பிள்ளைகளுடன் முதல் இந்து பாடசாலையை திறந்தார். யாழ்ப்பாணம் பதியுதின் வந்து கெடுக்கும் வரை இலங்கையின் அதி உயர் கல்வி நிலையில் இருந்தற்கு காரணம் அமேரிக்கன் மிசன் எல்லா ஏழைகளுக்கும் மதம் மாறியவுடன் இலவக் கல்வி அளித்தார்கள் என்பதாலேயே. பணக்கர இந்துக்கள் இதனால் பாதிக்கப்பட்டார்கள். இதை நிவிர்த முயன்ற்தால்தான் ஆறுமுக நாவலர் குடிசைக்குள் சைவப்பிரகாச வித்தியாசாலை ஆரம்பித்தார்.   

ஒரு இனம் உருவாவதை தடுக்கும் மிகப்பெரிய சக்தியாக இந்துமதம் அதன் இயங்கு சக்தி உள்ளது. சமூகங்கள் சிதைந்து சீரளிந்து பேவதற்கு இந்துமதம் பிரதான சக்தியாக உள்ளது. அதை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு இன விடுதலை என்பத எவ்வளவு வேடிக்கையானது?

 

இந்துமதம் இந்தியாவின் தோல்விகளுக்கு காரணம். திராவிடர் தூய சைவர்கள். போர் ஆயுதங்கள் செய்யாதவர்கள். இந்த ப்ண்பு சரித்திர காலம் முழுவதும் இந்தியாவை கைபர் பள்ளத்தாக்கிலிருந்து ஆபத்தை கொண்டு வந்தது. இந்தியா சரித்திரம் முழுவதும் படை எடுப்பை கண்டாலும் பிற்காலம் சோழர் வெளிநாடுகள் மீது படை எடுக்கும் வரை இந்தியா எந்த போரிலும் தானாக இறங்கியதில்லை. இந்து மதம், அதிலிருந்து தோன்றிய புத்தமதம், சமணம் மூன்றும் கொள்கை அளவில் தன்னும் போருக்கு எதிராவை. என்வே சமூகங்கள் சீரளிந்தது, திரும்ப திரும்ப கொள்ளைக்கார ஆப்கானிகள் வந்த போது இந்தியா தாக்கிய போது சரியான ஊனுக்கு ஊன்கேட்கும் போராளிகளை தயார் செய்ய முடியாமையே. இதனால் இந்தியரை அடிமை படுத்திய ஆப்கானிகள் சாதியத்தை ஆரம்பித்தார்கள் இது இன்று அவர்கள் நடை முறையில் வைத்திருக்கும் சரியா சட்டம் போன்ற அடக்கு முறை சட்டம் . இந்தியாவின் சாக்கடை எல்லாம் ஆப்கானிகள், மத்திய கிழக்கார் இந்தியாவுக்குள் வந்து கழித்த மலங்களே. 5000 ஆண்டுகளுக்குமுன்னர் சாக்கடை வடிய குழாய்களை கண்டு பிடித்து 5 மாடி வீடிகளில் வசித்தவர்கள் இந்து மத திராவிடர்கள். 

நீங்கள் பற்றுக்கொண்டுள்ளது இறைநம்பிக்கையிலா இல்லை அது சார்ந்த ஆன்மீகத்திலா இல்லை சைவத்திலா இல்லை இந்துத்துவத்திலா? இந்துத்துவத்தில் என்றால் இனத்தை மறந்தவிடுவது உங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட விதி.

 

எங்களின் பற்று முதலில் எம்மீது இருக்கும் அடக்குமுறையை துக்கி எறிய வேண்டும் என்பதே. இதற்கு நாம் ஐ.நாவில் பிரச்சாரம் செய்தோம். கக்கீம் தனது திருக்குதாளங்களை ம்றைக்க தமிழருக்கு எதிராக பிரசாரம் செய்தார். ஆனால் இன்று வெற்றி நமக்கு எதை எப்படி செய்ய வேண்டும் என்றதை தெரியாத கக்கிம் கூட்டம், தமிழர் பிரிந்து போன பின்னர் சிங்களவர்கள் மிஞ்சியிருக்கும் அவர்களின் பள்ளி வாசல்களை இடிக்கும் போது அவர்களுக்கு இந்த உபதேசம். தேவைப்படும் அப்போது கக்கீம், அஸ்வார், பதியுதின், கசன் அலி எல்லோருக்கும் சொல்லிக்கொடுக்கவும். இந்துத்துவத்தை பற்று அழிந்து போக போகும் கக்கீம், பதியுதின் சற்று கவலைப் படட்டும். நாங்கள் இனி என்ன செய்ய வேண்டும், யாரிடம் எங்களுக்கு  கக்கீமும், அரசகுடுபமும் செய்யும் அநியாயங்களுக்கு முறையிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டு விட்டொம். 

சிங்கள இனம் பௌத்தத்தை அடிப்படையாக வைத்து இனத்தின் பலத்தை கட்டியெழுப்புகின்றது. தமிழினத்தில் இந்துத்துவம் என்பது சதீய வர்கக் ஏற்றதாழ்வுகைள ஆழமாக்கி பிளவுகளை ஏற்படுத்தி இனத்தை சிதைக்கின்றது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நேரெதிரானது. சிங்கள இனம் அதன் இன உருவாக்கம் குறித்து மதத்தை எப்படிக் கையாழ்கின்றது என்பது வெளிப்படையானது.

 

அதே போல் இஸ்லாம் மதத்தின் பெயரால ஒன்றுபடுகின்றது. சமூக உறவுகள் நெருக்கமாகின்றது. எதிர்காலத்தில் அதன் பலம் அதிகரிக்கும். இந்துத்துவம் இதற்கு நேர் எதிர்த்திசையில் பயணிப்பது. அதன் விழைவில் இயக்க மோதல்கள் உட்பட இஸ்லாமியப் பிழவுகள் பிரதேசவாதப்பிழவுகள் அதற்கான உளவியல் அனைத்தும் இணைந்திருக்கின்றது.

 

சிங்கள இனம் மகாநாம பௌத்ததால் அழிந்து போய்விட்டது. இனி மீள முடியாது. உலகின் மிகப்பரிய கடனாளி நாடு. நீங்களும் பக்கத்தில் இருந்து சீனாவுக்கு உழைத்து கொடுங்கோ. உங்கள் பள்ளிவாசல்களுக்குள் விரைவில் புத்தர் வருவார் அப்போது இலங்கை முழுவதும் புத்தமாக வேண்டும் என்று வேண்டியது உங்களுக்ககாவது நிறை வேறும்.

 

நாகள் தனியாக போயே தீருவோம். அப்போது  மதம் இல்லா ஆட்சி அங்கு நடை பெறும். இதுவே வட்டுக்கோடை தீர்மானம். இதுவே TGTE ந் அரசிய சாசன முரசறிவிப்பும். நாங்கள் சைவமத இராசியம் அமைக்க போவதாக என்றும் சொன்னதில்லை. செய்ய போவதுமில்லை.  அமெரிக்கா, இந்திய அரசியல் அமைப்புகளை போன்று ஜனநாயக மதம் சாரா ஆட்சியை ஏற்படுத்துவோம்.

 

ஈரானும் ஈராகும் 10 வருடம் ஒன்றுடன் ஒன்று முஸ்லீம்கள் என்ற அடையாலத்துடன் அடிபட்டது போல நீங்களும் உங்களை அழியுங்கள். அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கி சவுதி போராளிகளுக்கு கொடுத்து சிரியாவை அடிப்பிக்கும் பாடத்தை நீங்களும் சிங்கவர்களும் ஒருவருக்கொருவர் படிப்பியுங்கள். ஒருவரை ஒருவர் காலவீவாவுக்குள் உயிரோடு வைத்து கட்டுங்கள். 

 

நீங்கள் விரும்பினால் இந்துவாக இருங்கள் இல்லையேல் சைவனாக இருந்து அதை திருத்திக்கொள்ளுங்கள் இல்லை சாதராண இறை நம்பிக்கையுள்ளவர்களாக இருங்கள் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை. ஒரு தேசீயவாதியாக இன அடயாளத்தை முன்நிறுத்தும் போத கருத்துக்கள் முரண்படுகின்றது அவ்வளவுதான்.

 

நாங்கள்தான் சொல்லிவிட்டோமே நாங்கள் எப்படி இருக்க விருப்புகிறோம் என்று. ஆனால் உங்களை மாதிரி மத வெறியர்களாக சொந்த அக்கா தங்கைகளை கல்லா எறிந்துமட்டும் கொல்ல மாட்டோம்.  நாங்கள் எதுவாக இருந்தாலும் அது பரவாயில்லை. நீங்கள் சன்னியாகும் , சியாவகும் ஒரே நேரத்தில் இருந்துகொண்டு ஒருவர் மீது ஒருவர் தினமும் குண்டுத்தாக்குதல் செய்து அழித்துக்கொண்டிருங்கள். 

 

Link to comment
Share on other sites

நாங்கள்தான் சொல்லிவிட்டோமே நாங்கள் எப்படி இருக்க விருப்புகிறோம் என்று. ஆனால் உங்களை மாதிரி மத வெறியர்களாக சொந்த அக்கா தங்கைகளை கல்லா எறிந்துமட்டும் கொல்ல மாட்டோம். நாங்கள் எதுவாக இருந்தாலும் அது பரவாயில்லை. நீங்கள் சன்னியாகும் , சியாவகும் ஒரே நேரத்தில் இருந்துகொண்டு ஒருவர் மீது ஒருவர் தினமும் குண்டுத்தாக்குதல் செய்து அழித்துக்கொண்டிருங்கள்

.

இஸ்லாமியர்கள் இந்தக் களம் பக்கம் எட்டியும் பர்ப்பதில்லை. இந்தக் களத்தில் எந்த ஒரு இஸ்லாமியர்களும் வந்து எந்த வாக்குவாதமும் செய்யவில்லை இருந்தும் நீங்கள் தொடர்ந்து இஸ்லாத்தை தாக்கி சீண்டி வருகின்றீர்கள். இந்து மதப்பற்றுள்ள ஒருவரின் குணம் எப்படிப்பட்டது என்பதற்கு உங்கள் கருத்துக்களை விட வேறு சான்று என்ன வேணும்? உங்கள் கருத்துக்கள் மற்ற மதங்களை தாக்குவதில் குறியாய் உள்ளது. எப்படியாவது தமிழர்கள் சாதி மத பேதங்களை கடந்து இனமாக ஒன்றுபட்டுவிடுவார்களோ என்ற பயம் மதப்பிளவுகளை விரிவாக்கும் உங்கள் கருத்துக்களில் தாராளமாக உள்ளது. இந்த நிலையில் அமரிக்காபோல் ஆட்சியும் அமைக்கப்போவதாகச் சொல்கின்றீர்கள். நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி அடக்குமுறைகளை மதத்துள் புதைக்காதீர்கள்!

இந்து சமயம் இப்படித்தான் இரு என்று மனிதர்களை பலாத்காரப்படுத்தவில்லை.

மாதா மாதம் இவ்வளவு கட்டணம் செலுத்து என்றோ, கட்டாயம் தீட்சை கேள் என்றோ வற்புறுத்தவில்லை.

இதைத்தான் படி என்றுகூட கூறவில்லை.

 

ஆக, விரும்பினால் வா என்னும் போக்கிலேயே உள்ளது.

 

மதங்களை அரசியல்வாதிகளும் சாதாரண மனிதர்களும் தங்களது சுயலாபங்களுக்கு கையில் எடுத்ததற்கு மதங்களை குறை கூற முடியாது.

 

கிழக்கு ஐரோப்பா, ரஷ்ய கொம்மியூனிச வீழ்ச்சிக்கும் முக்கிய காரணம் அரசியல் சார்பான மதங்களின் அவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடுருவல்தான்.

 

ஆக, மனிதனின் தவறுகளுக்கு மதத்தை குற்றம் கூற முடியாது.

 

மதங்களை மனிதன்தான் உருவாக்கினான் ...........
மதங்கள் என்ன சொல்கின்றது ....
4000 5000 வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது ...........
இவை இப்போது ஏற்படும் காயங்களுக்கு மருந்தாகாது.
 
ஊரில் உள்ள கோவிலுக்கு ஒரு மனிதன் போகும் போது .......... நீ இன்ன தொழில் செய்பவன் உள்ளே போக முடியாது என்று. ஈழத்தில் உள்ள எல்லா கோவிலும் கதவடைக்கும் போது.
சாதியை மதத்திற்குள் புதைக்காதீர்கள் என்று நீங்கள் புது கதை சொல்கிறீர்கள்.
 
ஓகே.
அப்போ எங்கு சென்று புதைப்பது?
அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ..... மனிதா உள்ளே வா என்று அன்போடு அழைக்கிறது.
 
நீங்கள் என்ன பூதாரம் பேசுகிறீர்கள்  என்றே புரிய முடியவில்லை.
Link to comment
Share on other sites

.

இஸ்லாமியர்கள் இந்தக் களம் பக்கம் எட்டியும் பர்ப்பதில்லை. இந்தக் களத்தில் எந்த ஒரு இஸ்லாமியர்களும் வந்து எந்த வாக்குவாதமும் செய்யவில்லை இருந்தும் நீங்கள் தொடர்ந்து இஸ்லாத்தை தாக்கி சீண்டி வருகின்றீர்கள். இந்து மதப்பற்றுள்ள ஒருவரின் குணம் எப்படிப்பட்டது என்பதற்கு உங்கள் கருத்துக்களை விட வேறு சான்று என்ன வேணும்? உங்கள் கருத்துக்கள் மற்ற மதங்களை தாக்குவதில் குறியாய் உள்ளது. எப்படியாவது தமிழர்கள் சாதி மத பேதங்களை கடந்து இனமாக ஒன்றுபட்டுவிடுவார்களோ என்ற பயம் மதப்பிளவுகளை விரிவாக்கும் உங்கள் கருத்துக்களில் தாராளமாக உள்ளது. இந்த நிலையில் அமரிக்காபோல் ஆட்சியும் அமைக்கப்போவதாகச் சொல்கின்றீர்கள். நல்லது.

அவ்வளவு இலகுவில் நாங்கள் ஏமாறப்போவதில்லை.  எழுதும் வரைக்கும் இந்துக்களை பற்றி கேவமான கீழத்தர பொய்களை எழுதின அற்பத்தனங்கள், இனி எழுத இல்லை என்றவுடன் நான் அது இல்லை, இது இல்லை என்கிறார்கள். 

 

விவாதிக்க முடியவில்லை என்றவுடன் சொந்த குணத்தைக்காட்டி சம்பந்தருக்கு கழுதப்பால் பருக்கிய இழி குணத்தை பார்த்தோமே. ஆனால் நாங்கள் மற்றவர்களின் தலைவரை பற்றி வெளிவந்த வீடியோ படங்களை பற்றி சொல்ல வரவில்லை. நாங்கள் பார்க்கத்தெரியாத குருடுகளும் இல்லை.  இந்து மத்தத்தவன் ஒருவனுக்கு அப்படியான் கேவலக் குணம் எப்போதுமே வருவத்தில்லை. மற்ற மதத்தினை இந்துக்களை அழித்தது மட்டும் என்றுமே நடக்காத சரித்திரம். உலகத்தின் மிக கொடுரமான மிருகத்தனமாக இந்துக்களை  கொலைகளை செய்தவன் தான் கான்சி முகமெட்.  ஆனால் இந்துக்கள் என்றுமே தங்களை தாக்காதவர்களை தாக்கியதில்லை. மேலும் நாயன்மார் சரித்திரத்தில் மெய்பொருள் நாயனாரின் சரித்திரம் தனி. அது முஸ்லீம்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றதால் இங்கே எழுதுகிறேன். . தன்னை எதிரி தாக்க வந்திருக்கிறான் என்று கண்டபின்னரும் அவன தான் ஒரு சிவனடியான் என்று பொய் சொல்வதால் அவனுக்கு பாத பூசை செய்தார். அவன் முதுகில் குத்திய பின்னரும், அவன் சிவனடியான் என்று சொன்னதால் தன் மேய்ப்பாதுகாவலரின் துணையுடன் அவனை அனுப்பி வைத்துவிட்டு தான் தனியாக இறந்தார். அவ்வளவு உயர்வானது தமிழரின் வீரம். அவ்வளவு மரியாதையானது இந்து மதம். அந்த மதம், அந்த குலத்தில் பிறந்த நாங்கள். நாடில்லாவிட்டாலும், வீடில்லாவிட்டாலும் உண்ண உணவில்லாவிட்டாலும் சிங்களவருகு பினவளம் கழுவும் வேலைக்கு போக மாட்டோம். 

 

அதனால் நான் அப்படி பேசவில்லை.  மேலும் சுத்த சைவனாக வாழ்நாள் முழுக்க வாழ்ந்திட்டத்தால் போராடாம் கீராட்டம் என்று நினக்கவில்லை. அதனால் கழுத்தில்  சைனட் குப்பியுடன் திரியத்தக்க தன்மான்ம் என்னில் குறைகிறது. ஆனல் 146,000 மக்களை துடிக்க பதைக்க குண்டுகளால் எரித்துவிட்டு பேடிகள் போல ஐ.நா பிரேரணையை இனி திருப்ப முடியாது என்றவுடன் வெக்கம் கெட்டத்தனமாக பின்வளத்தில் கால் அடிக்க ஓடிதிருந்து காட்டி தன்னை நரியிலும் கெட்ட கோளையாக காட்டும் அளவுக்கு பேய்வாரியும் இல்லை. வீராமாக கொலை செய்தவர்கள் "மின்சாரக்கதிரை"  என்று பேடிகள் மாதிரி ஓலம் போட்டு அழமால் துணிந்து நெஞ்சை நிமிர்த்தி ஐ.நாவை விசாரிக்க சொல்லி கேடக வேண்டும். இந்தியா இனி உதவ மாட்டாது என்று மறுத்த பிறக்கு இரண்டு நாளாக புதிய இந்துத்துவதை வைத்துக் கரைகிறார்கள் இங்கே. இவர்களை கேட்கிறேன் இவர்களுக்கு தெரியாதா இந்த சொல்லே 99 % மட்டக்களப்பு, ம்லையக, யாழ்ப்பாணத்து தமிழருக்கு தெரியாது என்று. இதை வைத்தா இந்தியாவை எங்களை கொண்டு மிரட்டுவித்து மின்சாரக்கதியிலிருந்து விடுவிக்காலம் என்று நினைக்கிறார்கள்.

 

எத்தனை ஓலம் போட்டாலும் புலம் பெயர் தமிழர் இனி பினவாங்கப் போவதில்லை. கடைசி நேரம். தமிழன் என்றால் குப்பி கடிப்பான். அல்லது வீரபாண்டிய கட்டப்பொமன் மாதிரி தன் சுருக்கு கயிறை தானே தன் கழுத்தில் மாட்டுவான். சிங்கள்வன் என்றால் அப்பனை அணைக்குள் வைத்து கட்டுவான். பிலிமாதள்வை, எகிலபொல கூட்டமாகின் அண்ணை தம்பி காட்டிக்கொடுப்பான.

 

ஐ.நா பிரேரணை வருகிறது இவர்கள் எப்படி நடக்க் போகிறார்கள் என்று பார்க்கத்தான் போகிறோம். இந்துத்துவம் என்று திரும்ப திரும்ப கூறி கூன் விழுந்த கிழவிகள் மாதிரி மாரடித்து ஓலம் போட்டு கத்த போகிறார்களா அல்லது நெஞ்சை நிமிர்த்து "நாம் செய்தோம். நீ விசாரி" என்று ஐ.நாவுக்கு ரோசமாக பதில் அளிப்பார்களா என்றுதான் பார்க்கப் போகிறொம். 

 

ஆண்டாண்டு காலமாக  இந்து மதத்தை திட்டுவதில் மட்டும் செய்த்திருக்கும் PhDயை பார்த்தோமே.

 

இந்து மதத்தை திட்டுவதால் புலம் பெயர் மக்களை சலிப்படைய செய்யலாம் என்ற கனவுகளை பார்க்க போகிறோமே. 

 

வவுனியாவுக்குள் சிவசேனா வந்துவிட்டதாக அவிட்டு விட முனைந்த ஏமாற்றை பார்த்தோமே.

 

நான் அதுவல்ல. இதுவல்ல என்று கூறி தப்பித்து ஒடப்பார்க்கும் கோளைத்தனத்தையும் தான் பார்க்கிறோமே. சம்பந்தர் களுதைப்பால் குடித்தாக திட்டும் வீரம் ஆப்கானி பாகிஸ்தானி மிருகங்கள் அசுவமேதயாகம் என்று குதிரையின் கழிவுகளை குடிக்கும் போது சொல்ல ஏன் கூசுகிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ மதம் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டாம் என்று யார் சொன்னது? எதற்காக மதம் மாற்றுவான் என்று தான் கேட்கிறேன். அந்த பிள்ளைகள் சிறு பிள்ளைகளாக இருப்பதால் விரும்பி மதம் மாறியிருக்க மாட்டார்கள். கட்டாய மதமாற்றம் என்பது அந்த பிள்ளைகளை உளவியல் ரீதியாக பாதிக்கக்கூடியது.

 

ஒரு மதத்தை தலைமையாக கொண்டு தான் உதவி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. போரில் பாதிக்கப்பட்டவர்களை நீ சைவமா கோவிலுக்கு போ  கிறிஸ்தவமா தேவாலயத்துக்கு போ என்று கூறி உதவி செய்வதென்பது மதத்தை பிரதிநிதிப்படுத்துவது போன்றது. அந்த பிள்ளையை யார் தேவாலாயத்தில் கொண்டு போய் விட்டார்களோ தெரியாது. அழைத்து சென்றவர்கள் அந்த பிள்ளையை சைவமா கிறிஸ்தவமா என கேட்டு விட்டு அழைத்து சென்றிருப்பார்கள் என்றுமில்லை. அல்லது தேவாலயத்தினரே அந்த பிள்ளையை அழைத்து சென்றும் இருக்கலாம்.

என்னமோ தேவாலயத்தில் தனிய கிறிஸ்தவர்களின் பணத்தில் உதவி செய்வது போல் கதைக்கிறீர்கள். வெளிநாட்டிலுள்ள சைவ சமயத்தவர் பலர் தேவாலயங்களின் மூலம் பண உதவி செய்கிறார்கள். அதை வாங்குகிறார்கள் தானே?

 

இங்கு ஒரு மதம் நல்லதா கெட்டதா என்பதல்ல விவாதம். மதமாற்றுவது சரியா பிழையா என்பது தான் விவாதம். கட்டாய மதமாற்றல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதால் தான் அவர்கள் மேல் விமர்சனம் வைக்கிறோமே தவிர. இயேசு நல்லவரா கெட்டவரா என்று அவர்கள் மதத்தை பற்றி இங்கு நான் எதுவும் எழுதவில்லை.

 

 

நான் திரும்ப திரும்ப எழுதியும் ..........
நீங்கள் இன்னமும் அதே கேள்வியில் தொங்கி கொண்டு நிட்கிண்றீர்கள்.
இதற்கு பின்பும் தயவு செய்து இதே கேள்வியை கேட்காதீர்கள்.
 
தேவாலயத்திற்கு செல்லும் ஒரு மனிதனை கிறிஸ்தவன் ஆக்க ஒரு பாதிரியார் முயற்சி செய்யாது விட்டால்.
அது பெரும் அயோக்கியத்தனம். க்ரிசதவத்தின் ஊடாகவே ஒரு மனிதன் கடவுளின் இராச்சியத்தை அடைந்து நித்திய வாழ்வை அடையலாம் என்று முழுமையாக நம்பி தனது வாழ்வை. கடவுளுக்கு சேவை செய்ய என்று அர்ப்பணித்த ஒரு பாதிரியார் ............. காணும் மனிதர்கள் எல்லோருக்கும் கிறிஸ்தவத்தை போதிக்க வேண்டும்.
அது அவருடைய முழு முதல் கடமை.
 
 
ஒரு நிர்க்கதியான குழந்தையை கூட்டி  சென்று விடுவதற்கு ஈழத்தில் ஏதாவது ஒரு இந்து கோவில் இருக்கிறதா??
துன்பத்தால் துவளும் ஒரு பரம்பரை இந்து மனிதன் கடவுளை தொழுவதற்கு என்று வரும்போதே. அவனின் தொழிலை காட்டி அவனுக்கு கதவடைக்கும் ........... அடிப்படை மனிதாபிமானமே செத்து கிடக்கும் இந்து கோவிலில்  ஒரு அநாதை குழந்தையை எந்த தயவில் கூட்டி செல்ல முடியும்?
அங்கு மனிதர்கள் இருக்கிறார்களா  மனிதாபிமானம் பற்றி பேச ?
அல்லது ஒரு மனிதனின் துன்பத்தை புரியும் அடிப்படை அறிவு அங்கு இருக்கிறதா ??
எல்லாமே செத்து கிடக்கும் இந்து கோவிலை கட்டி வைத்திருந்தால் .............. மனிதர்கள்  சக மனிதர்களை தேடித்தான்  போவார்கள்.
 
தேடி செல்வோருக்கு கடவுளை காண்பிப்பது அவனது கடமை.
 
ஏன் இந்துக்கள் தேவலயத்திட்கு காசு அனுப்புகிறார்கள்?
இந்து கோவிலில் இருக்கும் பிராமணன் எல்லாம் செத்து விட்டார்களா ? 
ஏன் துயவன் சிறுவர்களை தத்தெடுக்க பாதிரியாரை நாட வேண்டும் ? ஒரு ஐயரை ஏன் நாடவில்லை ?
 
எனது கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருந்தால் ...........
எழுதுங்கள் விவாத்தத்தை  தொடரலாம்.
 
தயவு செய்து இனியும் கேட்ட அதே கேள்விகளை கேளாதீர்கள். இதை விட விளக்கி பதில் எழுத இந்த அற்ப இந்துவிட்கு   தெரியாது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
அதே போல்,
 
கிறிஸ்தவமும் இஸ்லாமும் பரஸ்பரம் கடும் ஒவ்வாமை கொண்டவை.
 
எப்படி சொல்கிறீர்கள் ? ஜேசு முகமதுவின் இன்னொரு அவதாரம் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்.
 
ஆனால் இந்துக்களாகிய நாம் மற்ற மதங்களை அழிக்க முனைவதில்லை.
 
சொந்த மதத்தில் இருப்பவனை சாதியை சொல்லி அடிக்கவே நேரம் போதவில்லை 
அப்படி என்று தான் எழுத வேண்டும்.
 
இங்கே கடவுளுக்காக இந்துக்கள் சண்டை போடப்போவதில்லை.
 
தசவராதம் படம் என்றாலும் பார்த்திருக்கலாம். ஒரு பகுதியை என்றாலும் காட்டுகிறார்கள் 
 
எம்மை விடுங்கள் என்பதே எம்முடைய வாதம்.
 
எங்களுடைய வாதமும் அதுதான் ..........
இந்த காட்டுமிராண்டி தனத்தை வளர்க்கும் கோவில்களை காடுகளுக்கு கொண்டு செல்லுங்கள்.
மனிதர்களை ஊர்களில் நிம்மதியாக மனிதராக வாழ விடுங்கள்.
 
மதம் என்பது எம்முடைய அடையாளம். 
 
மனிதர்கள் வெறியில் அலைய கூடாது ...........
அந்த அடையாளங்களை அழித்து விடுங்கள். மனிதர்கள் என்று முதலில் அடையாள படுவோம்.
 
மதம் எமது வாழ்க்கை முறை.
 
அதனால்தான் நாம் திரும்ப திரும்ப எழுதுகிறோம் ..............
அடுத்தவனை எய்த்து கனகாலம் சீவிக்க முடியாது. இதற்குள் நாமும் சிக்குண்டு தவிக்கிறோம் 
இந்த  நாதாரி தனமான வாழ்க்கை முறையை கைவிட்டு. மனிதர்களாக வாழ பழகுவோம்.
கோவில்களில் அன்பையும் பண்பையும் போதிப்போம் . அடிப்படை மனித நாகரீகங்களை சொல்லி கொடுப்போம். மனிதாபிமானத்தை வளர்ப்போம்.
 
மதம் எமது வரலாறு.
 
இந்த கோளாறை இனியும் சுமக்க முடியாது.
இது கூகிள் காலம் ......... இனியும் இத்தியில் பேயை காட்ட முடியாது.
லைவ் காம் பூட்டிவிட்டால் பேய் ஓடி விடுகிறது.
முருகனை தமிழ்நாட்டு எல்லை தாண்டி சட்டலைட்டில் தேடினாலும் காண கிடைக்கவில்லை.
அண்ணன் பிள்ளையார் வண்டியை தள்ளிக்கொண்டு டெல்லியிலும் நிற்கிறார். எதோ கோளாறு இருக்கிறது.
 
மதம் எமது கலாச்சாரம்.
 
அதனால்தான் கண்ட சாக்கடை எல்லாம் வந்து கலந்து சீரழிந்து கிடக்கிறோம்.
இப்போதாவது எமது கலாச்சாரத்தை தேடினாலே ...... ஒரு துளியாவது மிஞ்சும்.
 
மதமே எமது மொழியின் ஊற்று. 
 
இது இந்துமத புராணம் மாதிரியே இருக்கிறது.
அதனால்தான் இந்த மதத்தின் மீது இத்தனை வெறுப்பு.
தமிழுக்கும் இந்துமத சாக்கடைக்கும் என்ன சம்மந்தம் ??
 
இத்தனையையும் எம்மால் தொலைக்க முடியாது.
 
நாங்களே தொலைந்து விட்டோம்  ........... இனி தொலைக்க என்ன இருக்கிறது?
 
இத்தனையையும் தொலைத்து என்னால் ஒரு வேற்று இனத்தவரை  (யேசுவை) வணங்க முடியாது.
 
ஜேசுவை வணங்குங்கள் என்று உங்களை யார் கேட்கிறார்??
ஜேசுவை நம்புவன் சக மனிதருக்கும் கடவுளை காட்ட முயற்சி செய்கிறான்.
நீங்கள் ஊருக்கு ஒரு சாதி வைத்து வெட்டி கொண்டிருந்தால் அவர்கள் வரத்தான் செய்வார்கள்.
நீங்கள் மனிதர்களாக சக மனிதரையும் அணைத்து வாழ்ந்தால் யாருமென் வர போகிறான்.
அப்படி வந்தாலும் எமது மதத்தின் புத்தகம் ஒன்றையும் அவனுக்கு கொடுத்தால் போச்சு.
இப்போ இந்து ஆகிய நான் படிக்க என்றே எனது மதத்தை சுருக்கமாக சொல்ல ஒரு புத்தகம் இல்லை.
இந்த லட்ச்சனத்தில் .....
அவனாவது வந்து கடுவுளை பற்றி சொல்கிறானே .... என்று ஆறுதல் அடைய கூடியதாக இருக்கிறது.
டென்மார்க் அம்மாவிடம் போனால் ஏதும் ஆறுதல் சொல்லுவா என்று சென்றால் .....
லிங்கத்தை தொண்டைக்குள் வைத்து விட்டு விட்டு எடுக்கிறா ..........
போர்ன் படம் பார்க்கிற மாதிரி இருக்கு ............. இதுக்கா அங்கிருந்து இங்கு வந்தோம் என்று இருந்துச்சு.
குப்பைகளை எம்மோடு வைத்திருந்தால் .............. இது பல மனிதர்கள் கூடி வாழும் உலகம். துப்பரவு செய்ய யாராவது வரத்தான் பார்ப்பான். அவனில் குறை கண்டால் எப்படி?
 
என் பெருமை என் மதத்தை பற்றி இருப்பதில் இருக்கிறது.
 
பற்றி கொண்டே இருங்கள் .............
தயவு செய்து இனியும் எங்களை பற்ற வைக்காதீர்கள்.
 
 
.

 

 

Link to comment
Share on other sites

மதமே மொழியின் ஊற்று என்றால் சமணத்தையும் பௌத்தததையும் தான் ஆதரிக்கவேண்டுமே தவிர தமிழை நீச பாசை என்று தீட்டு நீக்கும் முறை கொண்ட இந்துத்துவத்தை எப்படி ஆதரிப்பது?

 

திருக்குறள் சமண நூல் அல்ல என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. முதலாவது குறளே அதற்குச் சான்று. சமணத்தில் பரமாத்மாவின் இயல்புகள் திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் உள்ள ஓவ்வொரு குறளில் இருந்தும் விலகியது. கடவுள் வாழ்த்து சைவத்தின் பக்தி மார்க்க நெறியே.

 
அதைவிட திருவள்ளுவர்  திருக்குறளின் 3 இல் ஒரு பகுதியை காமத்திற்கு ஒதுக்கியுள்ளார். குளித்தால் உடலின் கிருமிகள் அழிந்து போம் என்று குளியாதிருக்கும் சமணர் ஒருவர் காமத்துப்பால் இயற்றினால்....
 
திருக்குறள், கம்பர் எழுதிய இராமாயணம், தேவார திருவாசகங்கள் என்று எண்ணற்ற இந்து / சைவ நூல்கள் தமிழை வளர்த்தது வரலாறு.

 
இந்து மதம் ஒரு பெரிய விருட்சம். அதில் கன்னடத்தில் சிவனை வணங்குபவர்களும், வங்காளத்தில் காளியை வணங்குபவர்களும், தெலுங்கில் கிருஷ்ணனை வணங்குபவர்களும் உள்ளார்கள். வந்தேறு குடிகள் எம் மொழியை நீச பாசை என்றால் நாம் அவர்களுக்காக எம்மொழியையோ, எம் மதத்தையோ கைவிடத் தேவையில்லை. ஏனென்றால் இது வந்தேறு குடிகளின் மதமல்ல. எங்கள் ஆயிரம் முப்பாட்டர்களின் மதம்.
 

 

மதமே எமது கலாச்சாரம் என்பதால் அதற்குள் சாதீயமும் ஏற்றதாழ்வுகளும் தக்கவைக்கப்படுகின்றது. அது இருக்கும் வரை ஒருவனை ஒருவன் ஏற்றும் ஜனநாயகப் பண்பு வராவே வராது. இவை சாத்தியப்படாத போத இன ஒற்றுமை என்பத எக்காலத்திலும் சாத்தியம் இல்லை.

 

சைவத்தில் சாதீயம் மதத்தில் இல்லை. அது மனிதரில் இருக்கிறது. சைவம் ஒருவனை தாழ்ந்தவன் என்று எங்கும் சொல்லவில்லை. காஷ்மீரில் உள்ள சைவசமய சமூகத்தில் சாதி அமைப்பு இல்லை. தமிழ்நாட்டின் சாதி அமைப்பும் யாழ்ப்பாண சாதி அமைப்பும் வித்தியாசமானவை. ஆனால் இரண்டு இடங்களிலும் சைவ சித்தாந்தம் ஒன்று. அப்படியானால் சாதியின் தோறுவாய் சம‌யமா இல்லை ஏனைய சமூக காரணிகளா ? 

 
அதே நேரம் நாரீகம், கல்வி வளர்ச்சி என்பன சாதீயத்தின் கிடுக்கிப் பிடியை நன்றாகத் தளர்த்தி உள்ளன. இது சைவத்தைக் கைவிட்டாதல் நிகழவில்லை என்பதைக் கவனிக்க. இது சைவமே சாதீயத்தைப் போணுகின்றது என்பவர்களுக்கு கசப்பான விசயம். அதே நேரம் சைவத்தை விட்டு விலகிய பச்சோந்திகள் தமது சாதிப் பெருமைகள் பேசுவதையும் கவனிக்க.

 

 

என்று ஒருவனுக்கு தான் வாழ்ந்த நிலத்தை விட மதம் தேசீய அடயாளமாகின்றதோ அதன் பிறகு அவனுக்கு நாடு அவசியம் இல்லை. மதத்தை காவிக்கொண்டு உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் வாழமுடியும். புலம்பெயர் தமிழர்களின் கோயில்களும் தேசீயமும் இதே வழிகாட்டலில் தான் நாடக்கின்றது. அவனுக்கு தேசம் நாலம் பட்சம்.

 

மதம் தேசிய அடையாளம் அல்ல. அவுஸ்திரேலிய வெள்ளை இன கிறீஸ்தவனும் அமெரிக்க வெள்ளை இனக் கிறீஸ்தவனும் தேசியத்தால் வேறு.

ஆனால் அடையாளத்தால் ஒன்று.
 

 

ஆன்மீகம் வேறு மதம் வேறு. நீங்கள் ஆன்மீகத்தை தொலைக்கும் மதவாதிகளா உருவெடுத்துள்ளீர்கள். அதற்கு விலையாக தேசம் தேசீயம் நாடு என்பதை கொடுகின்றீர்கள்.

 

வருந்தத்தக்க உண்மை. சில சமயம் பேசாதிருத்தலின்  விலை பேசுதலின் விலையவிட மிக அதிகமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.