Jump to content

இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்


Recommended Posts

எங்கள் அனைவரினதும் உட்கிடக்கை மெள்ளமெள்ள வெளியே வருது.

 

மதங்களை பற்றியோ கடவுளை பற்றியோ விவாதிப்பதர்ற்கு விருப்பந்தான். 

 

ஆனால் இங்கு கவனிக்கப்படவேண்டியது இந்த பிரசுரம் எதுக்காக வெளியிடப்பட்டது என்பதுதான்.

 

இஸ்லாத்தையும் ஏனைய தமிழ் மக்களையும் பிரித்தாயிற்று இனி இந்துக்களையும் கிரிச்த்தவர்களையும் பிரிக்கவேண்டியிருக்கு.

 

அதனூடே ஆயர்களின் அதீத அரசியல் செயற்பாட்டை வீரியம் குறைய செய்யமுடியும்.

 

 

என்னதான் பெரும்பான்மை இந்துக்களாக இருந்தாலும் புத்தத்துக்கு முன்னால் சிறுபாண்மை தான்.

Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ்சூரியன்

கிறிஸ்தவன் [கத்தோலிக்கன்  ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன்

சண்டமாருதன்

நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.   தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.   ஒரு இந்தியப் பார்ப்பனனு

சண்டமாருதன்

சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூற

இந்துக்கள் மதம் மாறுவதில் என்ன பிழை?

கிறிஸ்தவர்கள் ஆங்கிலம் பேசுவதில்லை. முஸ்லிம்கள் அரபிக் பேசுவதில்லை. ஆனால் ஒற்றுமையாகவும் குறிப்பாக கூட்டமாகவும் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

மனிதர்கள் மகிழ்ச்சியாய் இந்த பூஞ்சோலை என்னும் பூமியில் வாழவேண்டும் என்பதே இறைவனின் சித்தம் ........................................இறைவன் என்ற ஒருவன் இருக்கின்றான் என்று நினைக்கும் அனைத்து மனித உள்ளங்களுக்கும் தெரிந்த விடயம் ............................ஆனால் இறைவன் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை மனிதன் தவறாக பயன்படுத்திக்கொண்டே அன்றுமுதல் இன்று வரை வாழ்ந்து வருகிறான் .................எல்லா மதத்திலும் இறைவனை எப்பிடி நம்புகிறோமோ அப்பிடியே சாத்தானையும் நம்ப வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் .............சாத்தான் என்பவன் கொடியவன் .....இறைவனுக்கு எதிரானவன் .....................ஆனால் ................இறைவனால் மனிதை படைக்கப்பட்டவன் ...................தன்னால்  எந்த உணர்வுகளுடன் மனிதனை படைத்த இறைவனால் கொடுக்கப்பட்ட மனித உணர்வு,சுதந்திரம் இவற்றை மனிதனுக்கு கொடுத்து மனித மாண்பை எதிர்பார்ப்பவன் தான் இறைவன் .......இல்லாவிட்டால் அவன் குறைவன்..............ஆனால் மனிதனின் பலவீனத்தை கொடியவன் இறைவனின் எதிரி சாத்தான் பயன்படுத்தி இத்தனை துன்பங்களையும் இன்று இந்த பூமியை ஆட்கொள்ள வைக்கிறான் ....................ஐயையோ....................தொலைஞ்சன் தமிழ்சூரியன் .............. :D
 
அன்பே இறைவன் என்ற ஒருவனை நீங்கள் கற்பனை செய்து வைத்திருந்தால்..........மனிதராகிய எம் அத்தனை உணர்ச்சிகளுக்கும் சுஇதந்திரம் தந்து எம்மை தன்னைப்போல வழ வேண்டும் என்று நினைப்பவன் ................அப்பிடி அவன் நினைக்காவிடில் அவன் இறைவன் அல்ல ......................ஆனால் நாம் தான் அந்த உணர்வை தவறாக நினைத்து ....................போய்க்கொண்டிருக்கிறோம் ..சாத்தானின் வழி நடத்தலில் ................மன்னிக்கவும் இனி நீங்கள் என்ன கேட்பீர்கள் என்பதும் எனக்கு தெரியும் , :lol: ................அதற்கு பதில் கூற எனக்கு தகுதியில்லை என்பதும் தெரியும் .. :) ...........உங்களுக்கு சமாதானம்  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வத்திக்கானும் மக்காவும் என்னபாசையை முன் வைக்குது? வேத வசனங்களை என்ன பாசையிலை கதைக்கினம்? :unsure:  :rolleyes:


 

இந்துக்கள் மதம் மாறுவதில் என்ன பிழை?

கிறிஸ்தவர்கள் ஆங்கிலம் பேசுவதில்லை. முஸ்லிம்கள் அரபிக் பேசுவதில்லை. ஆனால் ஒற்றுமையாகவும் குறிப்பாக கூட்டமாகவும் இருக்கிறார்கள்.

 

 

Link to comment
Share on other sites

ஏன் எல்லோரும் எங்களை 'இந்து' என்று குறிப்பிடுகிறார்களோ தெரியவில்லை! நாங்கள் 'இந்துக்கள்' இல்லை!

 

இதை நான் சொல்லவில்லை! காலஞ்சென்ற இந்தியப்பிரதமர் 'ராஜீவ்' காந்தியே சொல்லியிருக்கின்றார்!

 

இந்திய இராணுவம் வந்த காலத்தில், இந்திய இராணுவத்தின் ஒரு பகுதியினர், தாங்கள் 'சக' இந்துக்களைக் கொலை செய்ய வேண்டியுள்ளதே என்று ஆதங்கப்பட்டார்களாம்!

 

அப்போது அவர், உண்மையான இந்துக்கள் 'வைரவ சூலத்தை' வணங்குவதில்லை!

 

எனவே நாங்கள் 'இந்துக்கள்' அல்ல! அவரது கருத்துப்படி 'அசுரர்கள்" ! அழிக்கப்படவேண்டியவர்கள்! :wub:

 

இதுவே இன்று வரை, இந்திய ஆழும் வர்க்கத்தின் பார்வை!

 

மற்றும்படிக்குச் சண்டமாருதனதும், யாழ் வாலியினதும் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன்!  

 

 

நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

 

தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.

 

ஒரு இந்தியப் பார்ப்பனனுக்கு இஸ்லாத்தின் மீதிருக்கும் வெறுப்பை விட ஈழத்தவர் மீதான வெறுப்பு அதிகம் என்பது இவர்கள் மண்டையில் என்றும் ஏறப்போவதில்லை.

 

இலங்கைத் தமிழன் இராவண வம்சம் என்ற வெறுப்பில் பார்க்கும் வடநாட்டவர்களே அதிகம். இந்திய அதிகாரவர்க்கம் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட சூழ்ச்சிகளி்ல் இந்த உள்ளீடும் தாராளமாக இருக்கின்றது.

 

இன்றுவரை இலங்கைப்படைகள் தமிழக மீனவர்களை கொன்றுதள்ளுகின்றது. இந்திய அதிகாரவர்க்கம் எந்த வகையிலும் இந்த விசயத்தில் இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கியது கிடையாது. இந்திய இந்துத்துவத்தை பொறுத்தமட்டில் தமிழ மீனவனை விட இலங்கைப் பவுத்தர்களின் நட்பே மேலானது.

 

இந்திய இந்துத்துவம் பற்றிய புரிதல் யாழ்பாணத்தில் தம்மை இந்து என்று பிதற்றுபவர்களிடம் சற்றும் கிடையாது. இந்திய இந்துத்துவம் என்பது இந்தியாவை சாதிவாரியாக கூறுபோட்டு மதவாரியாக பிளவுகளை ஏற்படுத்தி மக்களை சிதைத்து சூட்சும அரசியலூடாக வெறும் இரண்டு மூன்று வீத பார்ப்பான் இந்திய மைய அரசியலை ஆழ்வதற்கான உத்திதான் இந்துத்துவம். இந்துத்துவம் என்பது சூட்சும அரசியல் தவிர ஆன்மீகம் கிடையாது.

 

ஈழத்தவர்கள் தமது சைவத்தை அதன் குறைகளை கழைந்து தனித்துவத்துடன் நல்லதொரு ஆன்மீகமாக வளர்த்தெடுத்திருக்கலாம். ஆனால் தமது தலைகளை கொண்டுபோய் இந்துத்துவாக்களிடம் ஓட்டுவதில் குறியாய் உள்ளனர்.  இதற்கும் ஒரு காரணம் உண்டு அது இந்தியாவில் பார்ப்பான் சாதியில் மேலோங்கியிருப்பதைபோல் ஈழத்தில் இவர்கள் இந்துத்துவத்தை வைத்து சாதியின் மேன்மையில் உயர்வை காட்ட முற்படுவதே அதன் பிரதான காரணம்.

 

சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்யவேண்டும் கங்கணம் கட்டுபவர்கள் இவர்கள். தமிழ்நாட்டுப் பிள்ளை மார்களும் ஆதீனங்களும் பபார்ப்பனனுக்க செம்பு தூக்கி சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். இவர்களுக்கு பக்கபலமாய் கடிதங்களும் ஆலோசனை ஆதரவுகளும் வழங்குவதில் காலகாலமாக யாழ்ப்பாண பிள்ளைமார்கள் பின்நிற்பதில்லை. பின்னர் வெட்கமே இல்லாமல் தமிழும் சைவமும் இரு கண்கள் என்பார்கள். இந்த கூறுகெட்ட தனத்தை என்னவென்று சொல்வது!!

http://eswaramoorthy.webs.com/naadumnaveenarum.html

 

இந்தப் புத்தகத்தில் சைவருக்கும் நவீன சைவருக்கும் இடையிலான வாக்குவாதம் உள்ளது. நவீன சைவம் என்பது சோமசுந்தர நாயக்கர் தொட்டு வள்ளலார் மறைமலலையடிகள் என தொடர்ந்து சைவத்தை சீரமைக்கவும் தமிழ் மொழியை முதன்மையாக்கி தமிழ்த்தேசீயத்துக்கு அடிகோலவும் வழிவகுத்த ஒரு தரப்பு. எங்கே சாதி ஒழிந்துவிடுமோ என்று இது அத்தனைக்கும் முரணாக இருந்தது அடுத்த தரப்பு. சீர்திருத்தத்திற்கு முற்றுமுழுதாக எதிர்ப்பாளர்களாக இருந்ததில் நாவலரின் தலையாய பங்கில் இருந்து ஏராளமான யாழ்ப்பாண பிள்ளைமார்களின் பங்களிப்பு இருந்தது. தொடர்ந்தும் இருந்து வருகின்றது.

 

இங்கே சிலர் இருக்கின்றர்கள் தடாலென தந்தை பெரியாரை தாக்குவதில் குறியாய் இருப்பவர்கள். இந்த நவீன சைவத்தின் அடுத்த கட்ட வடிவம் தான் பெரியாரின் எழுச்சி என்பது இவர்களுக்குப் புரியாது. இந்த சைவப் பிள்ளைமார்களை திருத்தவே முடியாத என்ற நூற்றாண்டுக்குமேற்பட்ட முயற்சியின் தோல்வியே கடவுளே இல்லை என்ற முடிவு நோக்கித் தள்ளியது.

 

எனவே, சைவத்தையே அதன் சாதீய வர்க்க அடிப்படைகளில் இருந்து சீர்திருத்த முடியாதபோது அதுவே இப்போது இந்துத்துவவா என்று பலிபீடத்தில் கொண்டுபோய் தலையை வைக்கும் போது அதையா திருத்த முடியும்?

 

திருத்த முடியாத இந்தக் குப்பையை தலைமுழுகுவதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்பது எப்போதோ எடுக்கப்பட்ட முடிவு.

 

ஆன்மீகத்துக்கு மதம் தேவையில்லை.

 

நானும் நீயும் இந்து ஆனால் நான் உன்னைத் தொடமாட்டேன் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்ற இந்துமத நிலை உலகின் எந்த மூலையிலும் கிடையாது. எவன் எந்த மதத்துக்கு போனால் என்ன விட்டால் என்ன. மனிதாபிமானத்தை மனிதநேயத்தை விரும்புகின்றவன் இந்த மதத்தில் இருந்துகொண்டே அதை கருவறுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

எங்கள் அனைவரினதும் உட்கிடக்கை மெள்ளமெள்ள வெளியே வருது.

 

மதங்களை பற்றியோ கடவுளை பற்றியோ விவாதிப்பதர்ற்கு விருப்பந்தான். 

 

ஆனால் இங்கு கவனிக்கப்படவேண்டியது இந்த பிரசுரம் எதுக்காக வெளியிடப்பட்டது என்பதுதான்.

 

இஸ்லாத்தையும் ஏனைய தமிழ் மக்களையும் பிரித்தாயிற்று இனி இந்துக்களையும் கிரிச்த்தவர்களையும் பிரிக்கவேண்டியிருக்கு.

 

அதனூடே ஆயர்களின் அதீத அரசியல் செயற்பாட்டை வீரியம் குறைய செய்யமுடியும்.

 

 

என்னதான் பெரும்பான்மை இந்துக்களாக இருந்தாலும் புத்தத்துக்கு முன்னால் சிறுபாண்மை தான்.

 

இங்கு நாம் தான் விவாதிக்கிறோமே தவிர அங்குள்ள மக்கள் இந்த துண்டுப்பிரசுரம் பற்றி கருத்தில் கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன்.  எனினும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

வாங்கோ வாங்கோ, மனைவியுடன் வந்தால் உங்களுடன் நீண்ட நேரம் மினக்கடுவன். தனியாக வந்தால் கொஞ்ச நேரம் கதைத்து விட்டு போய்விடுவேன். :)

 

நான் தனியே எப்போதும் எங்கும் போவதில்லை .....................அது காலம் கடந்தாச்சு .அந்தக்காலம் இனி வராது ......... :D  :D

Link to comment
Share on other sites

நான் தனியே எப்போதும் எங்கும் போவதில்லை .....................அது காலம் கடந்தாச்சு .அந்தக்காலம் இனி வராது ......... :D:D

உங்கள் திருமணம் எந்த முறையில் நடந்தது ?

உங்கள் மனைவி எவ்வளவு காலத்துக்கு பின்னர் மதம் மாறினார் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவன் [கத்தோலிக்கன்  ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன் = இந்து ...................எள்ளு எண்ணெய் எரிப்பவன் .............அதே வேளை தேவநற்கருணை எடுப்பதில் இடைவெளி கொடாதவன் .....................ஆனால் மகிழ்ச்சியாய் வாழ்பவன் .............................மனிதனாக வாழ நினைப்பவன் ................. :)

நீங்கள் எழுதி இருப்பது உண்மை எனில் உங்களுக்கு ஒரு முறை தலை குனிகிறேன்.

கிரிஸ்தவ மதம் எனக்கு பிடிக்கும் தமிழ் கிரிஸ்தவர்களை அடியோடு வெறுப்பவன். ஒரே காரணம் மேலே ரதி எழுதியதுதான். ஜேசு என்ன சொன்னார் என்பது தெரியாத மூடர்களாகவே அவர்களை காண்பதால் .....

 

"அன்பை கொன்று விட்டூ ஆச்சாரத்த்த்தை வாழவைப்பது மதமா? மதமா?"

 

25  வருடம் முருகனை வணங்கிய ஒரு பெண்ணை திருமணதித்தின் பின் ஜேசுவை வணங்கு என்றால்?

அங்கே கடவுள் காதால் கருணை ஏதாவது ஒன்று உண்டா?

 

ஜேசுவை வணங்குவதால் ஏதும் குறை வரப்போவதில்லை.... முருகனை வணங்காதே என்று சொல்வது அடாவடித்தனம்.

Link to comment
Share on other sites

உங்கள் திருமணம் எந்த முறையில் நடந்தது ?

உங்கள் மனைவி எவ்வளவு காலத்துக்கு பின்னர் மதம் மாறினார் ??

சார் எல்லாம் விபரமாக் முதல் கருத்துக்களில் எழுதியுள்ளேன் ..........படியுங்கள் ....முதலில் தலையங்கம் என்ன என்று படியுங்கள் .ப்ளீஸ் .............

நீங்கள் எழுதி இருப்பது உண்மை எனில் உங்களுக்கு ஒரு முறை தலை குனிகிறேன்.

கிரிஸ்தவ மதம் எனக்கு பிடிக்கும் தமிழ் கிரிஸ்தவர்களை அடியோடு வெறுப்பவன். ஒரே காரணம் மேலே ரதி எழுதியதுதான். ஜேசு என்ன சொன்னார் என்பது தெரியாத மூடர்களாகவே அவர்களை காண்பதால் .....

 

"அன்பை கொன்று விட்டூ ஆச்சாரத்த்த்தை வாழவைப்பது மதமா? மதமா?"

 

25  வருடம் முருகனை வணங்கிய ஒரு பெண்ணை திருமணதித்தின் பின் ஜேசுவை வணங்கு என்றால்?

அங்கே கடவுள் காதால் கருணை ஏதாவது ஒன்று உண்டா?

 

ஜேசுவை வணங்குவதால் ஏதும் குறை வரப்போவதில்லை.... முருகனை வணங்காதே என்று சொல்வது அடாவடித்தனம்.

நீங்கள் கேட்பது நியாயம் ..............ஆனால் பிழையான நபரிடம் கேட்டு விட்டீர்கள் அன்பே  :)

Link to comment
Share on other sites

வத்திக்கானும் மக்காவும் என்னபாசையை முன் வைக்குது? வேத வசனங்களை என்ன பாசையிலை கதைக்கினம்? :unsure::rolleyes:

வட்டிகனில் ஒரு மொழியும் இல்லை. மெக்காவிலும் ஆங்கிலம் பொது மொழியாகும். தமிழ் தேவாலயங்களிலும் தமிழில்தான் பூசை நடக்குது. இங்கிலாந்து தமிழ் தேவாலயத்தில் கூட தமிழ்தான்.

மானிப்பாய் முருகன் கோவிலில் என்ன மொழியில் அரிச்சினையுங்கொ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வத்திக்கானும் மக்காவும் என்னபாசையை முன் வைக்குது? வேத வசனங்களை என்ன பாசையிலை கதைக்கினம்? :unsure:  :rolleyes:

 

 

 

 

அந்த இடத்த்தில் வசிக்கும் மக்களுக்கு விளங்கும் பாஷையில் மதத்த்தை போதிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

சார் எல்லாம் விபரமாக் முதல் கருத்துக்களில் எழுதியுள்ளேன் ..........படியுங்கள் ....முதலில் தலையங்கம் என்ன என்று படியுங்கள் .ப்ளீஸ் .............

நீங்கள் கேட்பது நியாயம் ..............ஆனால் பிழையான நபரிடம் கேட்டு விட்டீர்கள் அன்பே :)

அதில்லை தமிழ் சூரியன் உங்கள் எழுத்தோட்டம் கொஞ்சம் குழப்பமாக உள்ளது, எதுக்கும் உங்களுக்கு தனிமடல் அனுப்புகிறேன்

Link to comment
Share on other sites

கிரிஸ்தவ மதம் எனக்கு பிடிக்கும் தமிழ் கிரிஸ்தவர்களை அடியோடு வெறுப்பவன். ஒரே காரணம் மேலே ரதி எழுதியதுதான்.

 

ரதி இல்லை, துளசி. :)

 

Link to comment
Share on other sites

அதில்லை தமிழ் சூரியன் உங்கள் எழுத்தோட்டம் கொஞ்சம் குழப்பமாக உள்ளது, எதுக்கும் உங்களுக்கு தனிமடல் அனுப்புகிறேன்

 

எனக்கு விளங்கியதன் படி தமிழ்சூரியன் அண்ணாவின் மனைவி கிறிஸ்தவமாக மாறிய பின்னர் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இப்பொழுதும் தனது மனைவியை கோவில்களுக்கு செல்ல அனுமதிக்கிறாராம். ஆனாலும் மனைவி இப்பொழுதும் கிறிஸ்தவர். எனவே பிள்ளைகளும் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள்.

 

ஒருவேளை அவர் மனைவி கிறிஸ்தவராக மாற விரும்பியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பது எனது கேள்வி..

Link to comment
Share on other sites

எனக்கு விளங்கியதன் படி தமிழ்சூரியன் அண்ணாவின் மனைவி கிறிஸ்தவமாக மாறிய பின்னர் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இப்பொழுதும் தனது மனைவியை கோவில்களுக்கு செல்ல அனுமதிக்கிறாராம். ஆனாலும் மனைவி இப்பொழுதும் கிறிஸ்தவர். எனவே பிள்ளைகளும் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள்.

 

ஒருவேளை அவர் மனைவி கிறிஸ்தவராக மாற விரும்பியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பது எனது கேள்வி..

ஒன்றுமே நடந்திருக்காது  ............................ஆனால் திருமணம் நடந்திருக்கும் ................விட்டுக்கொடுப்புகளே வாழ்க்கை ..................என் மனைவியின் அந்த விட்டுக்கொடுப்பின் புனிதம் ................இன்று ..............................வாழ்க்கை ...............மனித சாத்தான்களுக்கு ,துன்பங்களுக்கு அப்பாற்பட்டது ....................இதை உணர்பவன் வழ்பான்  :)  :D

Link to comment
Share on other sites

எங்கள் அனைவரினதும் உட்கிடக்கை மெள்ளமெள்ள வெளியே வருது.

மதங்களை பற்றியோ கடவுளை பற்றியோ விவாதிப்பதர்ற்கு விருப்பந்தான்.

ஆனால் இங்கு கவனிக்கப்படவேண்டியது இந்த பிரசுரம் எதுக்காக வெளியிடப்பட்டது என்பதுதான்.

இஸ்லாத்தையும் ஏனைய தமிழ் மக்களையும் பிரித்தாயிற்று இனி இந்துக்களையும் கிரிச்த்தவர்களையும் பிரிக்கவேண்டியிருக்கு.

அதனூடே ஆயர்களின் அதீத அரசியல் செயற்பாட்டை வீரியம் குறைய செய்யமுடியும்.

என்னதான் பெரும்பான்மை இந்துக்களாக இருந்தாலும் புத்தத்துக்கு முன்னால் சிறுபாண்மை தான்.

100 % உண்மை, இது நன்கு திட்டமிட்டு சிங்கள,மலையாளி,ரோ, முஸ்லிம் கும்பலின் செயல், இது எம்மிடையில் பிரிவினை வளர்க்க திட்டமிட்டு விதைக்கப்படுகிறது !!!

Link to comment
Share on other sites

எனக்கு விளங்கியதன் படி தமிழ்சூரியன் அண்ணாவின் மனைவி கிறிஸ்தவமாக மாறிய பின்னர் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இப்பொழுதும் தனது மனைவியை கோவில்களுக்கு செல்ல அனுமதிக்கிறாராம். ஆனாலும் மனைவி இப்பொழுதும் கிறிஸ்தவர். எனவே பிள்ளைகளும் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள்.

 

ஒருவேளை அவர் மனைவி கிறிஸ்தவராக மாற விரும்பியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பது எனது கேள்வி..

உதுகள் நல்லா விளங்க்குகின்றீர்கள் :icon_mrgreen:. அனுமதி கேட்டுத்தான் போகணுமா :lol:

Link to comment
Share on other sites

உதுகள் நல்லா விளங்க்குகின்றீர்கள் :icon_mrgreen:. அனுமதி கேட்டுத்தான் போகணுமா :lol:

 

அப்ப எதை நன்றாக விளங்கவில்லை? / விளக்கவில்லை? :unsure:

 

என்ன கேட்கிறீர்கள்? :unsure: தமிழ்சூரியன் அண்ணாவின் மனைவி பற்றி என்றால் அவர் தமிழ்சூரியன் அண்ணாவின் அனுமதி கேட்காமலும் கோவிலுக்கு போகலாம் என நினைக்கிறேன். அந்த சுதந்திரம் அவர் வீட்டில் உள்ளதாம். :rolleyes:

Link to comment
Share on other sites

சார் உண்மையில் மதம் என்னும் பதமே அன்பு ................முதலில் நான் பிறப்பில் கிறிஸ்தவனாக இருந்தாலும் .................இது வரை எந்த மதத்தைப்பற்றியும் விமர்சிக்கவில்லை .அந்த தகுதியும் எனக்கில்லை .ஏனனில் எனக்கு மற்ற மதங்களின் கொள்கைகள் ,உண்மைகள் தெரியாது .............ஆனால் நன் பின்பற்றும் கிறிஸ்தவ மதம் போலவே ஏனைய மதங்களும் கூறி நிற்கும் என்பதே என் எதிர்பார்ப்பு .................ஆனால் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் எல்லோரும் அந்த மதம் சொல்வதுபோல செயல்படுகிறார்கள் என்று கூறவும் கூற மாட்டேன் ......................அதேபோலேவே ஏனைய மதங்களை பின்பற்றும் ஒவ்வொருவரும் அந்த மதத்தின் போதனையின்  படி வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கவும் மாட்டேன் ,.../........................ஆனால் ..................பிறப்பால் தமிழனாக பிறந்த நாம் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் இறைவனை காட்டி நிற்கவேணும் ....................அதுவே எம் கலை கலாச்சாரம் ,பண்பாடாய் அமைந்து உள்ளது ....அதை நிலை நிறுத்தியவர்கள் நான் பிறந்த இனத்தில் நான் பார்த்த தமிழீழ விடுதலைப்புலிகள் ..............இயேசு என்ன சொன்னாரோ .................அதை உலகிற்கு காட்டியவர்கள் ..............நான் படித்த பைபிள் மூலம் அவர்களை  இறை பண்போடு ஏற்றுக்கொண்டவன் ....................
 
இங்கே மத சார் அரசியல் எதையும் நான் குறிப்பிடவில்லை ...............உண்மை நீதி நியாயம் .............அதுதான் நான் வணங்கும் யேசு எனக்கு சொன்னது ...........அதன் வடிவமே விடுதலைப்புலிகள் .......................இரண்டும் ஒன்றுதான் சார் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவம் தமிழில் வழிபாடு செய்கின்றார்கள் எனச் சிலர் சொல்கின்றார்கள். இந்துக்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் அவா. ஆனால் உண்மையில் கிறிஸ்தவம் அப்படி இனம் மொழியில் வழிபாடு செய்ய ஒரு காரணம். மதத்துக்கு ஆள் பிடிக்க வேண்டிய தேவை. அதை விட முக்கியமானது, இயேசுநாதர் ஒரு இஸ்ரேல்காரர். ஒரு யூதர். அவரின் தாய்மொழியான ஹப்றுவை இஸ்ரேல் மீள உருவாக்கப்பட்ட பின்னர் தான் மீளப்பெற்றார்கள். அது அழிந்து போனமொழியாக இருந்தது. இப்போதும் முதியவயதுள்ள யூதர்கள் ஹப்று தெரியாதவர்களாகவும், இளைய தலைமுறையே இனவுணர்வோடு அதைக் கற்கின்றவர்களாகவும் உள்ளனர்

அத்தோடு யூதர்கள் கிறிஸ்தவத்தை ஏற்கவில்லை. அது வத்திகானுக்கு நகர்ந்தது. அங்கே எல்லாமே மாற்றமடைந்தது. பிற்பாடு பிரித்தானியா தன் சாம்ராச்சியத்தில் என்னுமொரு பிரிவை உருவாக்கியது. இப்படி அலைந்து திரிந்தால் அது ஹப்றுவைத் தொலைத்து எல்லா மொழிகளுக்கும் பரவவித்திட்டது எனலாம். மற்றும்படி இஸ்லாமியர் அரபிலும், பௌத்தர்கள் பாளியிலும் சமணர்கள் பிரகித மொழியிலும் தான் இன்றுவரை வழிபடுகின்றனர்.

சமஸ்கிருதம் எப்படி எமக்குள் புகுந்தது என்றால் என்னுடைய ஊகம் ஆதிசங்கரர்(கேரளா) அனைத்து மதங்களையும் ஒன்றாக்கியதன் விளைவாகவே இருக்கும் என நினைக்கின்றேன். இன்று ஆங்கிலம் போல ஒரு பொதுமொழியாக அது எமக்குள் ஊடுருவியது. யாருடைய தாய்மொழியாகவும் இருக்கதால் அதுவே பொதுமொழி என அன்று எண்ணியிருக்கலாம். அதனால் சமஸ்கிருதம் தெரிந்தவர்ககளுக்கு கோவில்கள் தாரை வார்க்கப்பட்டார்கள். அதுவும் தமிழும் சேர்ந்து தமிழில் இருந்து பலமொழிகள் உருவாகிச் சிதைய நாங்களே காரணம் ஆனோம். அத்தோடு பல அழிவுகள். எம்மால் தமிழை முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியாத பெரும் அழிவுகள். மற்றும்படி கடவுள் கொடுத்த மொழி சமஸ்கிருதம் என்பதெல்லாம் நல்ல பூச்சுத்தல்கள். ஆனால் அன்று எப்படி நாங்கள் சமஸ்கிருதத்தை உள்ளே வாங்கி எவ்வாறு தமிழைச் சிதைவடைய வைத்தோமோ அதே தப்பினை இன்று ஆங்கிலத்தை உள்வாங்கிச் செய்கின்றோம். சமஸ்கிருதம் ஆவது பரவாயில்லை. ஒரு சில கோவில் பூசாரிகளே மட்டும் கற்றும் மொழியாக இருந்தது. அப்படி இருந்தும் இத்தனை அpவு எமக்கு... ஆனால் இன்று ஆங்கிலம் கொடுக்கப் போகும் அழிவு அப்படியானது அல்ல... அது மிகப்பெரிய அழிவைத் தரப் போகின்றது. என்னமும் 2,3 தலைமுறைகளில் நாம் திரும்பிப் பார்க்கின்றபோது கோடியில் இருந்து வெறும் லட்சக்கணக்கானவர்களே தமிழைப் பேசுகின்ற மொழியாக அது மாறிவிடும்.

இங்கே எழுதப்பட்டவை சில என் எண்ணதின்பால் வெளிப்பட்டவை. வரலாற்று ஆதாரம் கொண்டிருக்கவில்லை.

Link to comment
Share on other sites

 ஆனால் இன்று ஆங்கிலம் கொடுக்கப் போகும் அழிவு அப்படியானது அல்ல... அது மிகப்பெரிய அழிவைத் தரப் போகின்றது. என்னமும் 2,3 தலைமுறைகளில் நாம் திரும்பிப் பார்க்கின்றபோது கோடியில் இருந்து வெறும் லட்சக்கணக்கானவர்களே தமிழைப் பேசுகின்ற மொழியாக அது மாறிவிடும்.

இங்கே எழுதப்பட்டவை சில என் எண்ணதின்பால் வெளிப்பட்டவை. வரலாற்று ஆதாரம் கொண்டிருக்கவில்லை.

இதற்கான ஒரே ஒரு முடிவு ,விடை .நாம் விரைந்து தமிழீழம் என்னும் எம் தாய் நாட்டை மீள பெறுவதற்கான  முயற்சிகளில் மும்முரமாய் இறங்க வேண்டும் ...............சங்கிலியன் ,பண்டாரவன்னியன் ,எல்லாளன் காலத்தில் இந்தப்பிரச்சனை இருக்கவில்லை . மகிந்த ராஜபக்ச போன்றவர்கள் காலத்திலேயே இந்தப்பிரச்சனை ..அதை உடைத்து எறியணும் .....இந்த சீரழிவுகள் எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டுமாயின் ,,,,அது எம் இந்த நிகழ்கால செயல்பாடுகளிலேயே தங்கியுள்ளது ..........................ஏதாவது செய்வோமா????

Link to comment
Share on other sites

ஒன்றுமே நடந்திருக்காது  ............................ஆனால் திருமணம் நடந்திருக்கும் ................விட்டுக்கொடுப்புகளே வாழ்க்கை ..................என் மனைவியின் அந்த விட்டுக்கொடுப்பின் புனிதம் ................இன்று ..............................வாழ்க்கை ...............மனித சாத்தான்களுக்கு ,துன்பங்களுக்கு அப்பாற்பட்டது ....................இதை உணர்பவன் வழ்பான்  :)  :D

 

திருமணம் நடந்தாலும் வேறு முறைப்படி தான் நடந்திருக்கும். ஒத்துக்கொள்ளுங்கோ. :D

ஞானஸ்நானம் பெறாத ஒருவரை தேவாலயத்தில் கத்தோலிக்க முறைப்படி திருமணம் செய்ய முடியுமா? இல்லை தானே? :unsure:

Link to comment
Share on other sites

அப்ப எதை நன்றாக விளங்கவில்லை? / விளக்கவில்லை? :unsure:

 

என்ன கேட்கிறீர்கள்? :unsure: தமிழ்சூரியன் அண்ணாவின் மனைவி பற்றி என்றால் அவர் தமிழ்சூரியன் அண்ணாவின் அனுமதி கேட்காமலும் கோவிலுக்கு போகலாம் என நினைக்கிறேன். அந்த சுதந்திரம் அவர் வீட்டில் உள்ளதாம். :rolleyes:

அன்பு என் வீட்டில் உள்ளது .......................அது சுதந்திரத்தின் தாய்................ஆனால் நீங்கள் நினைக்கும் மத வெறி என் வீட்டில் இல்லை காதல் ................ :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.