Jump to content

இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்


Recommended Posts

திருமணம் நடந்தாலும் வேறு முறைப்படி தான் நடந்திருக்கும். ஒத்துக்கொள்ளுங்கோ. :D

ஞானஸ்நானம் பெறாத ஒருவரை தேவாலயத்தில் கத்தோலிக்க முறைப்படி திருமணம் செய்ய முடியுமா? இல்லை தானே? :unsure:

எந்த மதத்தில் இப்பிடி திருமணத்திற்கு ஒத்துக்கொள்வார்கள் .........ஆனால் அது சரி என்று நான் கூறவில்லை ........................மனித வடிவில் பேய்களாக வாழும் நாம் அதைத்தான் செய்ய முடியும் கடவுளுக்கு எதிராக .உண்மைக்கு எதிராக ..........................ஆனாலும் என்னை இந்த திரியில் கீரொவாக்க நினைக்கும் கேள்விகளுக்கு .............கொமடியனாக பதில் சொல்ல வேண்டிய நிலை ..............இதுவும் என்னை கடந்து செல்லும் ...................சப்ப்ப்பா ...............ஒரே புழுக்கமாய் இருக்கு .முடியல  :lol:

Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ்சூரியன்

கிறிஸ்தவன் [கத்தோலிக்கன்  ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன்

சண்டமாருதன்

நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.   தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.   ஒரு இந்தியப் பார்ப்பனனு

சண்டமாருதன்

சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூற

திரிப்பதில் Phd ஸ்ய்தவர்கள் வசனம் வசனம் வசனமாக திரிக்கிறார்கள். 

 

 

நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

 

தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.

 

முதலில் வைரவ சூலம் என்ன என்றது தெரியாமல் எழுதும் நகைச்சுவை இது. சூலாயுதம் தமிழர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட இரும்பு ஆயுதம். அது பின்னர் Zeos கைவரைக்கும் போனதொன்று. நாகர் சாமிகள் வைத்திருப்பது. இராமசாமிகள் அதிகம் விரும்பாதது. இதற்குள் இந்துவத்துவ கோமாளிதனம் ஒன்றும் கிடையாது. 

 

ஒரு இந்தியப் பார்ப்பனனுக்கு இஸ்லாத்தின் மீதிருக்கும் வெறுப்பை விட ஈழத்தவர் மீதான வெறுப்பு அதிகம் என்பது இவர்கள் மண்டையில் என்றும் ஏறப்போவதில்லை.

 

பாகிஸ்தான் காரனை, வங்காளத்தை  ஒரு கை பார்த்த பின்னர்தான் இந்திரா காந்தி தமிழருக்கு உதவ வந்தவ. சில மர மண்டைகளுக்குள் சரித்திரம் உடனேயே வழிந்தோடிவிடுகிறது. தனக்கும் நடந்து தெரியும் மாத்ரி சுத்துமாத்து விடுகிறார்கள். கள்ளகடத்தல் ராஜிவ் JR இடம் நன்றாக மாட்டி அசடு வழிந்தார். பிரேமதாச பின் வளத்தில் வடிவாக போட்டார். விஜித முனி முதுகில் போட்டார். சில நரிகள் எத்தனை முறை வாங்கியும் திருந்துவத்தில்லை. திரும்ப திரும்ப வந்து வாலாட்டும்.  வாஜ்பாய் ஒரு போதும் தமிழரை தாக்கவில்லை. பாசியம் கலந்த முசோலினி சோனியா மட்டும்தான் தமிழரைத்தாக்கினார். மர மணைகளுக்கு சிங்குகள் இலங்கை வந்ததே தமக்கும் இந்தியாவில் இந்துகள் செய்ததை திருப்பி கொடுக்க. புஸ் மிக கேலக்கெட்ட அமெரிக்க அதிபராகி போனது போல தமிழ்ரை அழித்துவிட்டு குடும்பி இந்தியாவின் கேவக்க்கெட்ட பிர்தமர் என்ற பெயருடன் போய்ச்சேருகிறது.   சுஸ்மா வந்து இலங்கை வந்து போன பின்னர்தான் காங்கிரஸ் பணிய நேர்ந்தது. இப்போது மோடி தமிழ்நாட்டை கைப்பற்ற தமிழருக்கு பல உதவிகள் செய்துதான் ஆவார். இதற்குள் இந்துவம் காண்போர் யானை தடவும் குருடுகள்.

 

இலங்கைத் தமிழன் இராவண வம்சம் என்ற வெறுப்பில் பார்க்கும் வடநாட்டவர்களே அதிகம். இந்திய அதிகாரவர்க்கம் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட சூழ்ச்சிகளி்ல் இந்த உள்ளீடும் தாராளமாக இருக்கின்றது.

 

ஈழத்தமிழர் இராவணர் என்று அவர்கள் சொல்வதில்லை. திரும்ப தெரியாத கதை ஒன்று போதிக்கப்படுகிறது. இலங்கையைத்தான் இராணவ ராஜ்ஜியம் என்பார்கள். அதில் சிங்களவர்கள்தான் அதிகம் என்பது அவர்களுக்கு தெரியும்.  இதனால்தான் இலங்கையில் இராவணபல சேனையை ஏற்படுத்தி இந்தியாவை சிங்களவர்கள் எதிர்க்கிறார்கள். முதலில் இலங்கையில் என்ன நடக்கிறது என்று ஆர்வம் காட்டினால் சரித்திரம் விளங்கும். வடகத்தவர்களின் கோபம், தங்கள் அரச குடும்பத்தை புலிகள் கொலை செய்தார்கள் என்பது. இந்திரா காந்திக்கு சீக்கியரை வாங்கின பழியை புலிகளுக்கு செய்தார்கள்.  இதற்குள் சோனியாவுக்கு பின்வளம் கழுவும் மரமண்டை மலையாளிகள் புகுந்து தங்களுக்கு தமிழ் நாடு மீது இருக்கும் குரோதத்தையும் காட்டினார்கள். குதர்க்கத்தால் சிலர் எதை எதையோ எல்லாம் திரிக்கிறார்கள். மலையாள மரமண்டைகள் வடநட்டவர் அல்ல. 12ம் நூற்றாண்டுவரை தமிழ் பேசிய ஒரு இனம். 

 

இன்றுவரை இலங்கைப்படைகள் தமிழக மீனவர்களை கொன்றுதள்ளுகின்றது. இந்திய அதிகாரவர்க்கம் எந்த வகையிலும் இந்த விசயத்தில் இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கியது கிடையாது. இந்திய இந்துத்துவத்தை பொறுத்தமட்டில் தமிழ மீனவனை விட இலங்கைப் பவுத்தர்களின் நட்பே மேலானது.

 

இந்தியாவில் பவுத்ததரின் நட்பு மேலானது என்று எங்கும் சொல்லவில்லை. யாரும் அதை நிரூபிக்க முடியாது. அது வெறும் வெறுவாய் சப்பிக் கதை அளப்பு. கள்ளக்கடத்தலில் ஈடுபட்ட ரஜீவ், முசோலினி சோனியா, குடும்பிகளின் "பாதுகாப்புக் கொள்ளை" மட்டும்தான் அது.  தெரியாதவர்கள் அறிந்து கொள்ள " இந்தியாவில் இன்றும் காங்கிரசுக்கு இருக்கும் ஒரே ஒரு வாக்கு ஆதரவு அது மதம் சாராதது என்பதே.  மரமண்டை அல்ல,  இல்லை இலை, குழை மண்டை இருந்தால் கூட காங்கிரஸ் பௌத்ததை தூக்கி பிடியாது என்பது விளங்கும். அதனால்த்தான் அது தமிழர்கள் இந்துக்களாக இருந்த்தும் அவர்கள் பக்கம் சாரவில்லை என்று காட்டிகொள்ள முனைகிறது. சீக்கியர் இடித்த பல இந்துக் கோவில்களை ரஜீவ்காந்தி திரும்ப கட்டினார் என்பதை சம்மாந்துறை PhD களுக்கு தெரியாது. 

 

இந்திய இந்துத்துவம் பற்றிய புரிதல் யாழ்பாணத்தில் தம்மை இந்து என்று பிதற்றுபவர்களிடம் சற்றும் கிடையாது. இந்திய இந்துத்துவம் என்பது இந்தியாவை சாதிவாரியாக கூறுபோட்டு மதவாரியாக பிளவுகளை ஏற்படுத்தி மக்களை சிதைத்து சூட்சும அரசியலூடாக வெறும் இரண்டு மூன்று வீத பார்ப்பான் இந்திய மைய அரசியலை ஆழ்வதற்கான உத்திதான் இந்துத்துவம். இந்துத்துவம் என்பது சூட்சும அரசியல் தவிர ஆன்மீகம் கிடையாது.

 

யாழ்பாணத்தில் SJV தொடக்கம் எப்போதுமே கிறிஸ்தவர்கள்தான் உரிமை போராட்டத்தில் முன்னணி. பிரபாகரன் தனது மகனுக்கு சாள்ஸ் அன்ரனி என்று பெயர் வைத்ததிற்கும் காரணம் இருக்கு. எனவே இந்தியாவில் இந்துவம் என்ன செய்தும் நாம் கவலைபட வேண்டியதில்லை. கடத்தல்க்கார காங்கிரஸ் பதவி போய் BJP பதவிக்கு வந்த பின்னர் சம்மந்துறை இந்துதவ சரித்திரம் மாறிவிடும்.

 

ஈழத்தவர்கள் தமது சைவத்தை அதன் குறைகளை கழைந்து தனித்துவத்துடன் நல்லதொரு ஆன்மீகமாக வளர்த்தெடுத்திருக்கலாம். ஆனால் தமது தலைகளை கொண்டுபோய் இந்துத்துவாக்களிடம் ஓட்டுவதில் குறியாய் உள்ளனர்.  இதற்கும் ஒரு காரணம் உண்டு அது இந்தியாவில் பார்ப்பான் சாதியில் மேலோங்கியிருப்பதைபோல் ஈழத்தில் இவர்கள் இந்துத்துவத்தை வைத்து சாதியின் மேன்மையில் உயர்வை காட்ட முற்படுவதே அதன் பிரதான காரணம்.

 

சமயம் வளர்பதற்கில்லை. சம்மாந்துறை இந்துத்வம்தான் வளர்க்கப்படுவது.  இந்த சைவ சித்தாந்த பாடலுக்கு பொருள் சைவத்திற்க்கும் இந்து சமயத்துக்கும் இடையில் தான் பெரிய ஆப்பாக இறுக்கிவிட்டத்தாக நினைத்து  சைவத்தை வளர்க்கும் திருகுதாளக் கதை விடமாட்டர்கள்.  இதுதான் சைவ சித்தாந்ததின் அடிப்படை "ஓராதே ஒன்றையும் முற்றுன்னாதே நீ முந்தி பாராதே பார்த்தனை பார்" சைவம் வளர்பதற்கல்ல, அதில் பிராத்தனை கூட செய்ய வேண்டியதில்லை. 

 

சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்யவேண்டும் கங்கணம் கட்டுபவர்கள் இவர்கள். தமிழ்நாட்டுப் பிள்ளை மார்களும் ஆதீனங்களும் பபார்ப்பனனுக்க செம்பு தூக்கி சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். இவர்களுக்கு பக்கபலமாய் கடிதங்களும் ஆலோசனை ஆதரவுகளும் வழங்குவதில் காலகாலமாக யாழ்ப்பாண பிள்ளைமார்கள் பின்நிற்பதில்லை. பின்னர் வெட்கமே இல்லாமல் தமிழும் சைவமும் இரு கண்கள் என்பார்கள். இந்த கூறுகெட்ட தனத்தை என்னவென்று சொல்வது!!

http://eswaramoorthy.webs.com/naadumnaveenarum.html

 

சமஸ்கிருதம் வடநாட்டவரின் மொழிகளின் தாய் மொழி. அவர்கள் ஏன் அதில் பூஜை செய்யக்கூடாது? யாரும் சொல்லாமலே சம்மாந்துறை காவடிகள் அங்கே வீதிகளுக்கு கூட அரபிக்கில் பெயர் சூட்டிவிட்டுவந்து ஆப்பிறுக்கள் செய்கிரார்கள்.  தமிழரின் பூசை மந்திரங்கள் பௌத்தர்களை கழுவேற்றிக்கொலை செய்த்துவிட்டு நாயனார் பட்டம் பெற்ற்வர்களின் தேவாரங்கள் மட்டும்தான். தி மு.க ஆட்சியில் அது விரிவு படுத்தபட்டது. அறியாதவர்களுக்கு இதுவும் ஒன்று யாழ்ப்பாணத்து கோவில்களில் அரபிக்கில் தொழுவதில்லை யாழ்பாணத்தில் எல்லா கோவில்களிலும் தமிழில் தேவாரம் பிரதானமாக பாடப்படும். மேலும் ஐயர் தான் பூசை முடியவும், தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு, ஊஞ்சல் பா, திருவெம்பாவை, திருப்பாவை  என்றெல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கி கொடுப்பர். யாழ்பாணத்தில் சம்மாந்துறைவிட அலுவல்கள் கொஞ்சம் வித்தியாசம். அங்கு கழுவேற்றும் நாயன் மார்களின் தேவாரங்கள் முக்கிய இடம் பெறும்

 

இந்தப் புத்தகத்தில் சைவருக்கும் நவீன சைவருக்கும் இடையிலான வாக்குவாதம் உள்ளது. நவீன சைவம் என்பது சோமசுந்தர நாயக்கர் தொட்டு வள்ளலார் மறைமலலையடிகள் என தொடர்ந்து சைவத்தை சீரமைக்கவும் தமிழ் மொழியை முதன்மையாக்கி தமிழ்த்தேசீயத்துக்கு அடிகோலவும் வழிவகுத்த ஒரு தரப்பு. எங்கே சாதி ஒழிந்துவிடுமோ என்று இது அத்தனைக்கும் முரணாக இருந்தது அடுத்த தரப்பு. சீர்திருத்தத்திற்கு முற்றுமுழுதாக எதிர்ப்பாளர்களாக இருந்ததில் நாவலரின் தலையாய பங்கில் இருந்து ஏராளமான யாழ்ப்பாண பிள்ளைமார்களின் பங்களிப்பு இருந்தது. தொடர்ந்தும் இருந்து வருகின்றது.

 

ஒருவரின் புத்தகம் இந்துமதம் அல்ல. குரான் பாணி இந்துமத்தில் எடுபடுமாயின் அது சனாதன மார்க்கமாக இருக்க முடியாது. வேதாசலம் கிறிஸ்தவனாக இருந்து தமது பெயரை மறைமலை என மாற்றிவர். அவரை விட பெரியார் இந்துமதம் இல்லை என்றும் வாதிட்டவர். முடிவு நூல் எதுவும் இந்து மதத்தில் இல்லை. கீதை, வேதங்கள், கூட முடிவு நூல்கள் அல்ல. இந்த புத்தாகம் இன்னொரு ஆராச்சி மட்டுமே. யாரும் ஏற்கலாம் தள்ளி வைக்கலாம். ஆனால் இந்துமதம் சீர்த்திருத்த என்றதற்கு அப்பால் பட்டது.  அதை சைவ சித்தாந்த நூல்கள் தெளிவாக சொல்லி செல்கின்றன. அதுதான் தமிழரின் அடிப்படை ம்தம்.

 

இங்கே சிலர் இருக்கின்றர்கள் தடாலென தந்தை பெரியாரை தாக்குவதில் குறியாய் இருப்பவர்கள். இந்த நவீன சைவத்தின் அடுத்த கட்ட வடிவம் தான் பெரியாரின் எழுச்சி என்பது இவர்களுக்குப் புரியாது. இந்த சைவப் பிள்ளைமார்களை திருத்தவே முடியாத என்ற நூற்றாண்டுக்குமேற்பட்ட முயற்சியின் தோல்வியே கடவுளே இல்லை என்ற முடிவு நோக்கித் தள்ளியது.

 

தூயவன் பெரியாரை ஏற்பதில்லை. பெரியாரை சமூக சீர்திருத்தவாதியாக மட்டும் நான் ஏற்கிறேன். பெரியாரின் சீடனான அண்ணாவே பிற்காலம் சமய ஈடுபாடு கட்டினார். பெரியார் யாரையும் திருத்த முடியாமல் கடவுள் இல்லை என்றால் அவரும் கொள்கை இல்லாத கோமாளியாக்கபடுவார். ஆனால் பெரியாரை விளங்காதவர்கள் சொல்லும் மனிதன் அல்ல பெரியார்.  இந்து மதத்தில் ஒருபாகம் நாத்திகம். அத்துவைதம் மனிதன் மட்டும்தான் இருக்கிறான் என்கிறது.  அதாவது கடவுள், மனிதன் என்று இரண்டு நிலை இல்லை என்கிறது. பெரியாரின் சமூக சீர்த்திருத்தங்களால் தான் தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள் மட்டும் ஆட்சியில் இருக்கின்றன. காங்கிரஸ் அங்கே வால் கூட ஆட்டமுடியாமல் இருப்பது பெரியாரின் வெற்றியே. அவர் தோல்வி காணவில்லை. தோல்வியால் அவர் நாதிகனானார் என்பது, கதை எல்லாம் முடிந்து போன பின்னர் எழுதும் வங்கு ரோத்து முடிவுரை. 

 

 

எனவே, சைவத்தையே அதன் சாதீய வர்க்க அடிப்படைகளில் இருந்து சீர்திருத்த முடியாதபோது அதுவே இப்போது இந்துத்துவவா என்று பலிபீடத்தில் கொண்டுபோய் தலையை வைக்கும் போது அதையா திருத்த முடியும்?

 

திருத்த முடியாத இந்தக் குப்பையை தலைமுழுகுவதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்பது எப்போதோ எடுக்கப்பட்ட முடிவு.

 

ஆன்மீகத்துக்கு மதம் தேவையில்லை.

 

சைவசித்தாந்ததில் சாதியம் இருக்கு என்று ஊளை இட்டு யாரும் அதை கேடக்கபோவதில்லை.  ஆன்மீகத்துக்கு மதம் தேவை இல்லை. அதனால் மதம் இருக்க கூடாது என்றும் இல்லை. முகமது, புத்தர், ஜேசு எல்லோரும் தங்கள் மதங்களைத்தான் ஆக்கினார்கள். இதனால் மட்டும்தான் மதங்கள் உண்டாகின.  சமூக பிரச்சனையான சாதியை மத்திற்குள் இணைதவர்கள் ஆரியர்கள். அதாவது ஆளும் அதிகாரத்தை கொண்டிருந்த ஆரியகள் தங்களை மத்த தலைவர்கள் ஆகினார்கள். இது சரியாக மகாநாமாவின் புத்தம் இலங்கை எங்கும் பரவவேண்டும் என்றது போன்றதே. அதை வைத்து இன்று காசாக்க முயல்பவர்கள் பாசியர்கள்.  தமிழரின் சைவசித்தாந்ததில் சாதியம் இருக்கு என்று ஊளை இட்டு யாரும் அதை கேடக்கப் போவதில்லை. வடமாகாண சபைக்கு அதன் அதிகாரத்தை தந்தால் தங்களைதாங்கள் கவனிக்க முடியும் என்பது அவர்களின் வாக்களிப்பின் தெரிவு. ஆனால் அவருக்கு ஆப்பிறுக்கல்களும் போதனைகளும் தான் கொடுக்க முடியும் என்பது கோத்தாவின் மரமண்டையின் தீர்மானம். 

 

நானும் நீயும் இந்து ஆனால் நான் உன்னைத் தொடமாட்டேன் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்ற இந்துமத நிலை உலகின் எந்த மூலையிலும் கிடையாது. எவன் எந்த மதத்துக்கு போனால் என்ன விட்டால் என்ன. மனிதாபிமானத்தை மனிதநேயத்தை விரும்புகின்றவன் இந்த மதத்தில் இருந்துகொண்டே அதை கருவறுக்க வேண்டும்.

 

மகாநாவின் புத்தத்தை அறியாதவர்கள் எழுதுவது இது. அங்கிருக்கும் ச்சதியம் எங்கும் இல்லை. இதுவேதான் சுன்னி முஸ்லீம்கள் சியா முஸ்லீம்களுக்கு குண்டுவைக்கும் காரணமும்.  பாகிஸ்தானிய பாசிகள் வங்காள திராவிடர்களை தீண்டாதவர்களாக ஆக்கி வைத்திருந்த போது இந்துக்கள்தான் விடுவித்தார்கள். "மனிதாபிமானத்தை மனிதநேயத்தை விரும்புகின்றவன் இந்த மதத்தில் இருந்துகொண்டே அதை கருவறுக்க வேண்டும்." மனித நேய கோத்தாவின், மகிந்தாவின்  போருக்கு ஒற்ற்வர் வேலை செய்ய  போனவர்களின் மனித நேயதத்துவம் இது .

 

Link to comment
Share on other sites

திரிப்பதில் Phd ஸ்ய்தவர்கள் வசனம் வசனம் வசனமாக திரிக்கிறார்கள்.

http://tamizl.com/?p=61871

இராவணன் தமிழ் மன்னன் என்கின்றார்கள். நீங்களோ இராவணனை சிங்களவர்களுடன் சம்மந்தப்படுத்தி இந்துத்தவா ராமனுடன் ஐக்கியமாகின்றீர்கள். இது ஏன்? இராவணன் எமது பரம்பரை சிவனை வழிபடுகின்றவன் என்று சொல்லவேண்டியதுதானே? அதில் ஏதேனும் கௌரவப்பிரச்சனை உண்டோ? கம்பன் கழக ஜெயராசு ஏதாவது சொன்னாரோ?

 

இந்தியாவில் பவுத்ததரின் நட்பு மேலானது என்று எங்கும் சொல்லவில்லை. யாரும் அதை நிரூபிக்க முடியாது. அது வெறும் வெறுவாய் சப்பிக் கதை அளப்பு.

 

அப்படியானால் இதுவரை காலமும் இந்திய சிங்கள பேரினவாதத்திற்கு உதவியதும் தமிழர்களை அழித்ததும் அழிக்க உற்றதுணையாய் நின்றதும் ராஜீவ் சோனியா செய்த தவறு மற்றபடி ஈழத்து இந்தூக்கள் மீது இந்திய இந்தூக்கள் அளவு கடந்த பாசத்துடன் இருக்கின்றார்கள்?

 

சமஸ்கிருதம் வடநாட்டவரின் மொழிகளின் தாய் மொழி. அவர்கள் ஏன் அதில் பூஜை செய்யக்கூடாது?

.

வடநாட்டவன் எவனோ அவனுக்கு தெரிந்த மொழியில் பூசையை செய்யட்டும் தமிழன் ஏன் தனக்குத் தெரியாத பாசையில் ஏன் பூசை செய்யவேணும்? இதைத்தானே நூறு வருடங்களுக்கு மேலா கேக்கிறாங்கள்.

 

மேலும் ஐயர் தான் பூசை முடியவும், தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு, ஊஞ்சல் பா, திருவெம்பாவை, திருப்பாவை என்றெல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கி கொடுப்பர்

 

என்ர தாய்மொழியில் பாடுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்க அவன் யார்?

 

மகாநாவின் புத்தத்தை அறியாதவர்கள் எழுதுவது இது. அங்கிருக்கும் ச்சதியம் எங்கும் இல்லை. இதுவேதான் சுன்னி முஸ்லீம்கள் சியா முஸ்லீம்களுக்கு குண்டுவைக்கும் காரணமும். பாகிஸ்தானிய பாசிகள் வங்காள திராவிடர்களை தீண்டாதவர்களாக ஆக்கி வைத்திருந்த போது

 

 

உங்கட மதத்தில உள்ள சாதீயத்தை களைவதைப்பற்றி கதைக்கேக்க ஏன் அதைவிட்ட பௌத்தத்திலும் இஸ்லாத்திலும் சாதி இருக்கு என்று வேறு எங்கோ இழுத்துக்கொண்டு போகின்றீர்கள்? ஆக உங்கட மத்தில உள்ள கோளாறுகளை திருத்த முன்வர மாட்டீர்கள் அங்கயும் இருக்கு இங்கயும் இருக்க என்று சாக்குப் போக்கு சொல்வீர்கள்

 

இதைத்தான் சுருக்கமாக சொல்லியாச்சு. நீங்கள் நாவலர் பிள்ளைமாரின் மிச்ச சொச்சம். உங்ளை திருத்த அந்த சிவனாலும் முடியாது. கடசியா நாலு தமிழன் மிச்சமிருந்து சிங்களவன் அவர்களைக் கொல்ல வரும்போதும் நான் அந்தச் சாதி நீ அந்தச் சாதி என்று கத்திக்கொண்டே சாவீர்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலருக்கு தமிழ்க் கிறீஸ்த்தவர்களை அறவே பிடிக்காது, இன்னும் சிலருக்கு கிறீஸ்த்தவர்களுடன் ஒப்பிடும்போது முஸ்லீம்கள் எவ்வளவோ மேல். 

 

இவர்கள் எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். நீங்கள் விரும்பினாலென்ன, விரும்பாவிட்டாலென்ன நாங்களும் தமிழர்கள்தான். எங்கள் தாயகமும் தமிழீழம்தான். நாங்கள் பின்பற்றும் கலாச்சாரமும் பாரம்பரியமும் தமிழரின் கலாச்சாரப் பாரம்பரியங்கள்தான். . உங்களைப்போலவே தாயக விடுதலைப் போராட்டத்தில் நாங்களும் தியாகங்கள் செய்திருக்கிறோம். நீங்கள் பட்ட அதேயளவு துன்பங்களை நாங்களும் பட்டிருக்கிறோம். சிங்களவன் உங்களுக்கு வேறு, எங்களுக்கு வேறு என்று பிரித்துப்பார்த்து இனவழிப்புச் செய்யவில்லை. அவனைப் பொறுத்தவரையில் நானும், நீங்களும் தமிழர்களே. 

 

நான் பிறப்பால் கத்தோலிக்கன். அது நான் விரும்பியோ அல்லது புரிந்துகொண்டோ சேர்ந்துகொண்ட மதம் கிடையாது. எனது தாய் தந்தையர் கத்தோலிக்கர்கள் , அதனால் நானும் கத்தோலிக்கன். எனது தாய்வழியில் அவர்து பெற்றோரில் ஒருவர் இந்து. மற்றையவர் கத்தோலிக்கர். ஆனால் யாரையும் யாரும் வற்புறுத்தி தமது வணக்கத்தலங்களுக்கு அழைத்துச் செல்லவில்லை. தேவையான சுதந்திரம் எல்லோருக்கும் இருந்தது. 

 

சைவத்திலிருந்து ஒருவன் இன்னொரு மதத்திற்குச் செல்கிறான் என்றால் அது ஏன் என்று அறிய முற்படுங்கள். அதைவிடுத்து தூற்றவேண்டாம். இன்று கத்தோலிக்கர்களாக இருப்பவர்கள் கூட முன்னர் இந்துக்களே. 

 

பிரபாகரன் எனும் ஒப்பற்ற மனிதன் பிறந்த இனத்தில் பிறந்ததற்காக நான் தமிழன் என்று பெருமைப்பட்டிருக்கிறேன். பிரபாகரன் சைவனா கத்தோலிக்கனா என்று நான் பார்க்கவில்லை. என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு தமிழன், அவன் பின்னால் செல்ல அது ஒன்றே போதுமானதாக இருந்தது எனக்கு. ஆனால் இன்று முதன் முதலாக தமிழன் என்று சொல்வதற்கு வெற்கப்படுகிறேன். 

 

முஸ்லீம்களை "தேசியப் பாதுகாப்பு " காரணத்துக்காக இந்துக்களுடன் கத்தோலிக்கர்களும் சேர்ந்த்தேதான் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டினார்கள்.அப்போது இந்துக்களுக்கு மற்றைய தமிழர்கள் கத்தோலிக்கர்களாகத் தெரியவில்லை. இப்போது தெரிகிறது. 1990 இல் முஸ்லீம்களை விரட்டப்பட்டார்கள், இன்று கத்தோலிக்கர்களை தமிழினத்திலிருந்து வெளியேற்றுவது பற்றிச் சிந்திக்கிறோம். 

 

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முஸ்லீம்கள், கத்தோலிக்கர்கள்........இப்படியே எல்லோரையும் விரட்டிவிட்டு இந்துத்துவ தமிழீழம் கேட்கப்போகிறீர்களா?? சந்தோஷம். தாராளமாகக் கேளுங்கள்:. 

 

முன்பு யாரோ ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது, " அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், நாம் வாய்திறக்கவில்லை, பின்னர் கம்மியூனீஸ்களைத் தேடி வந்தார்கள், அப்போதும் நாம் வாய் திறக்கவில்லை. இறுதியாக எம்மைத்தேடி வந்தார்கள், எமக்காப் பேசுவதற்கு அபோது எவருமே இருக்கவில்லை ".

 

வாழ்க இந்துத்துவத் தமிழீழம் !!!!!


http://tamizl.com/?p=61871

இராவணன் தமிழ் மன்னன் என்கின்றார்கள். நீங்களோ இராவணனை சிங்களவர்களுடன் சம்மந்தப்படுத்தி இந்துத்தவா ராமனுடன் ஐக்கியமாகின்றீர்கள். இது ஏன்? இராவணன் எமது பரம்பரை சிவனை வழிபடுகின்றவன் என்று சொல்லவேண்டியதுதானே? அதில் ஏதேனும் கௌரவப்பிரச்சனை உண்டோ? கம்பன் கழக ஜெயராசு ஏதாவது சொன்னாரோ?

 

 
அப்படியானால் இதுவரை காலமும் இந்திய சிங்கள பேரினவாதத்திற்கு உதவியதும் தமிழர்களை அழித்ததும் அழிக்க உற்றதுணையாய் நின்றதும் ராஜீவ் சோனியா செய்த தவறு மற்றபடி ஈழத்து இந்தூக்கள் மீது இந்திய இந்தூக்கள் அளவு கடந்த பாசத்துடன் இருக்கின்றார்கள்?
 

.
வடநாட்டவன் எவனோ அவனுக்கு தெரிந்த மொழியில் பூசையை செய்யட்டும் தமிழன் ஏன் தனக்குத் தெரியாத பாசையில் ஏன் பூசை செய்யவேணும்? இதைத்தானே நூறு வருடங்களுக்கு மேலா கேக்கிறாங்கள்.


 

 
என்ர தாய்மொழியில் பாடுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்க அவன் யார்?

 

 

உங்கட மதத்தில உள்ள சாதீயத்தை களைவதைப்பற்றி கதைக்கேக்க ஏன் அதைவிட்ட பௌத்தத்திலும் இஸ்லாத்திலும் சாதி இருக்கு என்று வேறு எங்கோ இழுத்துக்கொண்டு போகின்றீர்கள்? ஆக உங்கட மத்தில உள்ள கோளாறுகளை திருத்த முன்வர மாட்டீர்கள் அங்கயும் இருக்கு இங்கயும் இருக்க என்று சாக்குப் போக்கு சொல்வீர்கள்

 

இதைத்தான் சுருக்கமாக சொல்லியாச்சு. நீங்கள் நாவலர் பிள்ளைமாரின் மிச்ச சொச்சம். உங்ளை திருத்த அந்த சிவனாலும் முடியாது. கடசியா நாலு தமிழன் மிச்சமிருந்து சிங்களவன் அவர்களைக் கொல்ல வரும்போதும் நான் அந்தச் சாதி நீ அந்தச் சாதி என்று கத்திக்கொண்டே சாவீர்கள்.

 

 

சண்டமாருதன்,

 

இங்கே தமிழ்த் தேசியத்தின் தூண்களென்று தம்மை வரிந்துகட்டிக் கொண்டு எழுதுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அடிப்படைவாத சிந்தனையுடையவர்கள் என்பது சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வருகிறது.

 

முதன் முதலாக தமிழன் என்று என்னைக் கூறுவதில் வெட்கப்படுகிறேன். ஏனென்றால் அப்படியொன்றில்லை இங்கே. இருப்பதெல்லாம் சைவ - இந்துத்துவ - தமிழர்கள் மட்டும்தான். மற்றையவர்கள் எல்லாம் ஒன்றில் முஸ்லீம்கள் அல்லது கிறீஸ்த்தவர்கள். 

 

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கருத்தக்கள் ஆறுதலாக இருக்கின்றன. 

Link to comment
Share on other sites

http://tamizl.com/?p=61871

இராவணன் தமிழ் மன்னன் என்கின்றார்கள். நீங்களோ இராவணனை சிங்களவர்களுடன் சம்மந்தப்படுத்தி இந்துத்தவா ராமனுடன் ஐக்கியமாகின்றீர்கள். இது ஏன்? இராவணன் எமது பரம்பரை சிவனை வழிபடுகின்றவன் என்று சொல்லவேண்டியதுதானே? அதில் ஏதேனும் கௌரவப்பிரச்சனை உண்டோ? கம்பன் கழக ஜெயராசு ஏதாவது சொன்னாரோ?

 

இராவணன் தமிழ் மன்னனா இல்லையா என்பது தெரியாமல் எழுத வந்தது நகைச்சுவை. ஆனால் வடஇந்தியர் அவனை ஈழத்தமிழர் என்று அவனை அழைப்பதாக காட்ட முடியுமா? இந்துமத்த்தில்ல் அசுரர் தேவர் என்று இருவர் இருப்பதை தெரியாமல் இந்த வரைக்கும் சைவத்தை சீர்திருத்தியமைக்கு நன்றி. இதுவும் இன்னொரு வைரவர் சூலம். 

 

 

அப்படியானால் இதுவரை காலமும் இந்திய சிங்கள பேரினவாதத்திற்கு உதவியதும் தமிழர்களை அழித்ததும் அழிக்க உற்றதுணையாய் நின்றதும் ராஜீவ் சோனியா செய்த தவறு மற்றபடி ஈழத்து இந்தூக்கள் மீது இந்திய இந்தூக்கள் அளவு கடந்த பாசத்துடன் இருக்கின்றார்கள்?

 

கதையை இன்னொருதடவை திரிக்க வேண்டுமாயின் அளவு கடந்த அளவு கடந்த அளவு கடந்த பாசத்துடன்தான் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொளுங்களேன். அதன் பின்னர்?  தெரியாததை, அல்லது விட்ட பிழையை ஏற்க இந்தளவு கஸ்டமா? 

 

.

வடநாட்டவன் எவனோ அவனுக்கு தெரிந்த மொழியில் பூசையை செய்யட்டும் தமிழன் ஏன் தனக்குத் தெரியாத பாசையில் ஏன் பூசை செய்யவேணும்? இதைத்தானே நூறு வருடங்களுக்கு மேலா கேக்கிறாங்கள்.

அதையேதான் தமிழர் அராபிக்கில் செய்கிறார்கள், சிங்களவர்கள் பாளியில் செய்கிறார்களாயிற்றே. இதில் எப்படி சாதித்துவம் வந்து இந்துக்களை மட்டும் கெடுத்தது?. அராபிக்கில் செய்யும் தமிழர் தமக்கு பாசை தேவை இல்லை, சிங்கள அடிமைத்தனம் காணும் என்கிறார்களே. அவர்கள் கெடுபடவில்லையா?

 

 

என்ர தாய்மொழியில் பாடுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்க அவன் யார்?

 

தாய் மொழியே இல்லாதவர்களுடன் அவர் எவ்வளவு மேல்? எமது மதத்தை பற்றி கூறை கூற எந்த மரமண்டைகளுக்கு  உரித்திருக்கோ அந்த மரமண்டைகள் நேரம் ஒதுக்க முடியாதா? நாம் எனது மொழியில் தொழுவம், விடுவம். இதில் சிங்கள கோத்தாவின் கூத்தாடிகளின் அதிகாரம் என்ன? 

 

உங்கட மதத்தில உள்ள சாதீயத்தை களைவதைப்பற்றி கதைக்கேக்க ஏன் அதைவிட்ட பௌத்தத்திலும் இஸ்லாத்திலும் சாதி இருக்கு என்று வேறு எங்கோ இழுத்துக்கொண்டு போகின்றீர்கள்? ஆக உங்கட மத்தில உள்ள கோளாறுகளை திருத்த முன்வர மாட்டீர்கள் அங்கயும் இருக்கு இங்கயும் இருக்க என்று சாக்குப் போக்கு சொல்வீர்கள்.

 

நாங்களும் உங்களை மதத்தைபற்றித்தானே கேட்டோம். அதை புரியவில்லையா? மறுமொழி சொல்லமுடியாமல் சறுக்க வேண்டிய அளவுக்கு பௌத்துவம் நகேடு கெட்ட மதமானால்அதற்கு தமிழர் மாற வேண்டும் ஏன் அரட்டை அடிப்பான.  அவர்களை திருஞாசம்பந்தர் கழுவேற்றியதில் என்ன தவறு? எம்மை வேவு பார்த்து சிவியம் நடத்தியவர்கள் எம்ம்மை திருத்தவர இலகுவாகாது. 

 

இதைத்தான் சுருக்கமாக சொல்லியாச்சு. நீங்கள் நாவலர் பிள்ளைமாரின் மிச்ச சொச்சம். உங்ளை திருத்த அந்த சிவனாலும் முடியாது. கடசியா நாலு தமிழன் மிச்சமிருந்து சிங்களவன் அவர்களைக் கொல்ல வரும்போதும் நான் அந்தச் சாதி நீ அந்தச் சாதி என்று கத்திக்கொண்டே சாவீர்கள்.

 

நாவலர் ஆரம்பித்து வைத்த அன்நிய மத எதிர்ப்பைத்தான் எகிப்திய சித்தி லெப்பை பார்த்து கொப்பி அடித்தார்.  நாவலர் இறுக்கமான அன்நிய மத எதிர்ப்பாளன் என்பதை வெள்ளைக்காற பாதிரிகளுக்கு விவிலிய வேதத்தில் இருந்த பிழைகளை சுட்டிக்காட்டி திருத்தியதில் தெரியும். அவர் பாணியில் நாமும் தொடருவோம்.  பின வாங்க வேண்டியதில்லை. நாவலர் தன் பிழைகளை பிற்காலம் திருத்தியது போலவும் செய்வோம். அதுவெல்லாம நம் விருப்பம். மற்றவர்கள்  எந்தவகை மரமண்டைகள் நமக்கு சொல்ல வர?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மதத்தில் இப்பிடி திருமணத்திற்கு ஒத்துக்கொள்வார்கள் .........ஆனால் அது சரி என்று நான் கூறவில்லை ........................மனித வடிவில் பேய்களாக வாழும் நாம் அதைத்தான் செய்ய முடியும் கடவுளுக்கு எதிராக .உண்மைக்கு எதிராக ..........................ஆனாலும் என்னை இந்த திரியில் கீரொவாக்க நினைக்கும் கேள்விகளுக்கு .............கொமடியனாக பதில் சொல்ல வேண்டிய நிலை ..............இதுவும் என்னை கடந்து செல்லும் ...................சப்ப்ப்பா ...............ஒரே புழுக்கமாய் இருக்கு .முடியல  :lol:

 

 

தமிழ்ச்சூரியன்,

 

நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? உங்களை இந்துத்துவக் கத்தோலிக்கன் என்று நிறுவ முயற்சிக்கிறீர்களா?? அல்லது நான் கத்தோலிக்கன்தான் என்று சொன்னால் யாழ்களத்தில் உங்களை ஒதுக்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களா?? உங்களின் அடையாளத்தை எதற்காக இவர்களுக்காக விட்டுக்கொடுத்து சமரசம் செய்ய வேண்டும். சிலர் நீங்கள் மட்டும் நல்லவர், மற்றைய 999 கிறீஸ்த்தவர்களும் கெட்டவர்கள் என்று நற்சான்றுப்பத்திரம் வேறு கொடுக்கிறார். இவர்கள் யார் நமக்குச் சான்றிதழ் கொடுக்க ?? இவர் தமிழர்களென்றால், நாங்கள் யார்?? தமிழரில்லையா?? போர்க்களத்திலும், அரசியலிலும் நாங்கள் போராடியபோது மட்டும் நாங்கள் தமிழர், இப்போது மட்டும் தீண்டத்தகாதவர்கள், வேண்டப்படாதவர்கள் அப்படித்தானே?? 

 

ஒரு பெண்ணோ அல்லது ஆனோ திருமணத்திற்காக இன்னொரு மதத்தைத் தழுவுகிறார் என்றால் அது அவரது தவறு. நிச்சயம் அவரால் இன்னொரு மத அனுட்டாங்களையோ அல்லது கடவுள்களையோ தனது கடவுளாகவும் மதமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிறப்பிலிருந்து திருமணம் முடிக்கும்வரை ஒரு மதத்தை மட்டுமே வழிபட்டு விட்டு, பெண்ணிற்காகவும், ஆணிற்காகவும் திடீரென்று இன்னொரு மதத்தை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வதென்பது சுத்த நாடகமேயன்றி வேறில்லை.  அப்படியொருவர் செய்கிறார் என்றால் அவர் தன்னைத்தானே ஏமாற்றுகிறார் என்றுதான் அர்த்தம். என்னைப்பொறுத்தவரை ஒருவரை தனது மதத்திற்கு மாறு என்று கேட்பதும் தவறு, அப்படி மாறுவதும் தவறு. 

 

அவரவர் தனது மத்தத்தில் இருந்துகொண்டே வாழ்க்கையைல் அனுசரித்துப் போவதுதான் சரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி இல்லை, துளசி. :)

 

 

மன்னியுங்கள் ......
பெயரை குறிப்பிடாமல் தோற்றத்தை குறித்து எழுதிவிட்டேன் போல் இருக்கு.
Link to comment
Share on other sites

சைவத்திலிருந்து ஒருவன் இன்னொரு மதத்திற்குச் செல்கிறான் என்றால் அது ஏன் என்று அறிய முற்படுங்கள். அதைவிடுத்து தூற்றவேண்டாம். இன்று கத்தோலிக்கர்களாக இருப்பவர்கள் கூட முன்னர் இந்துக்களே.

----

----

இன்று கத்தோலிக்கர்களை தமிழினத்திலிருந்து வெளியேற்றுவது பற்றிச் சிந்திக்கிறோம்.

 

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முஸ்லீம்கள், கத்தோலிக்கர்கள்........இப்படியே எல்லோரையும் விரட்டிவிட்டு இந்துத்துவ தமிழீழம் கேட்கப்போகிறீர்களா?? சந்தோஷம். தாராளமாகக் கேளுங்கள்:. 

 

சைவத்திலிருந்து ஒருவன் இன்னொரு மதத்திற்கு ஏன் செல்கிறான் என்பதில் சில காரணங்களை தான் நாங்களும் எழுதியுள்ளோம். உடனே எமக்கெதிராக கருத்து வைக்கிறீர்கள்.

 

இங்கு யார் கத்தோலிக்கர்களை தமிழர்கள் இல்லை என்றோ அவர்களை தமிழினத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமெனவோ கூறியது? :unsure: மதமாற்றுதல் தொடர்பில் இங்கு விமர்சன கருத்து வைத்துள்ளோமே தவிர கிறிஸ்தவர்களை எதிரி என கூறவில்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

 

மன்னியுங்கள் ......
பெயரை குறிப்பிடாமல் தோற்றத்தை குறித்து எழுதிவிட்டேன் போல் இருக்கு.

 

 

:lol::D

 

இதற்கெல்லாம் எதற்கு மன்னிப்பு? :) எனது தோற்றம் உங்களுக்கு தெரியாது. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவத்திலிருந்து ஒருவன் இன்னொரு மதத்திற்கு ஏன் செல்கிறான் என்பதில் சில காரணங்களை தான் நாங்களும் எழுதியுள்ளோம். உடனே எமக்கெதிராக கருத்து வைக்கிறீர்கள்.

 

இங்கு யார் கத்தோலிக்கர்களை தமிழர்கள் இல்லை என்றோ அவர்களை தமிழினத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமெனவோ கூறியது? :unsure: மதமாற்றுதல் தொடர்பில் இங்கு விமர்சன கருத்து வைத்துள்ளோமே தவிர கிறிஸ்தவர்களை எதிரி என கூறவில்லை. :rolleyes:

 

 

இல்லை, ஏன் மதம் மாறுகிறார்களென்ற காரணத்தை இதுவரை நீங்கள் தேடவில்லை. இதுவரை இங்கே கக்கியதெல்லாம் கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், இந்துக்களை மதம் மாற்றுகிறார்கள் என்கிற வக்கிரம் மட்டுமே. அப்படி காரணத்தைத் தேடியிருப்பீர்களென்றால் நிச்சயம் இங்கே இப்படி எழுதிய்ருக்க மாட்டிர்கள். 

 

தூயவன் என்று தன்னைக் கூறிக்கொள்பவர் "எனக்கு முஸ்லீம்களிக்கூடப் பிடிக்கும், ஆனால் கிறீஸ்த்தவர்களைப் பிடிப்பதில்லை" என்றும், இதே திரியில் மருதங்கேணி என்று நினைக்கிறேன், "எனக்குக் கிறீஸ்த்தவர்களைக் கொஞ்சமும் பிடிப்பதில்லை" என்றும் கூறியிருக்கிறார்கள். அதை முதலில்ப் படியுங்கள். 

 

ஒருவன் மதம் மாறுகிறார் என்றால் அவரேன் மதம் மாறுகிறார் என்பதைக் கண்டுபிடியுங்கள். கத்திஅதன்பிறகு கிறீஸ்த்தவர்களை தள்ளிவைக்கலாம், விமர்சிக்கலாம், எதுவும் செய்யலாம். 

Link to comment
Share on other sites

யாரவது முதல்ல இந்துனா யாருன்னு வரையறை செய்யுங்க. 
 
எனக்கு நான் இந்துவானு ஒரே குழப்பமா இருக்கு !!??
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலருக்கு தமிழ்க் கிறீஸ்த்தவர்களை அறவே பிடிக்காது, இன்னும் சிலருக்கு கிறீஸ்த்தவர்களுடன் ஒப்பிடும்போது முஸ்லீம்கள் எவ்வளவோ மேல். 

 

இவர்கள் எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். நீங்கள் விரும்பினாலென்ன, விரும்பாவிட்டாலென்ன நாங்களும் தமிழர்கள்தான். எங்கள் தாயகமும் தமிழீழம்தான். நாங்கள் பின்பற்றும் கலாச்சாரமும் பாரம்பரியமும் தமிழரின் கலாச்சாரப் பாரம்பரியங்கள்தான். . உங்களைப்போலவே தாயக விடுதலைப் போராட்டத்தில் நாங்களும் தியாகங்கள் செய்திருக்கிறோம். நீங்கள் பட்ட அதேயளவு துன்பங்களை நாங்களும் பட்டிருக்கிறோம். சிங்களவன் உங்களுக்கு வேறு, எங்களுக்கு வேறு என்று பிரித்துப்பார்த்து இனவழிப்புச் செய்யவில்லை. அவனைப் பொறுத்தவரையில் நானும், நீங்களும் தமிழர்களே. 

 

நான் பிறப்பால் கத்தோலிக்கன். அது நான் விரும்பியோ அல்லது புரிந்துகொண்டோ சேர்ந்துகொண்ட மதம் கிடையாது. எனது தாய் தந்தையர் கத்தோலிக்கர்கள் , அதனால் நானும் கத்தோலிக்கன். எனது தாய்வழியில் அவர்து பெற்றோரில் ஒருவர் இந்து. மற்றையவர் கத்தோலிக்கர். ஆனால் யாரையும் யாரும் வற்புறுத்தி தமது வணக்கத்தலங்களுக்கு அழைத்துச் செல்லவில்லை. தேவையான சுதந்திரம் எல்லோருக்கும் இருந்தது. 

 

சைவத்திலிருந்து ஒருவன் இன்னொரு மதத்திற்குச் செல்கிறான் என்றால் அது ஏன் என்று அறிய முற்படுங்கள். அதைவிடுத்து தூற்றவேண்டாம். இன்று கத்தோலிக்கர்களாக இருப்பவர்கள் கூட முன்னர் இந்துக்களே. 

 

பிரபாகரன் எனும் ஒப்பற்ற மனிதன் பிறந்த இனத்தில் பிறந்ததற்காக நான் தமிழன் என்று பெருமைப்பட்டிருக்கிறேன். பிரபாகரன் சைவனா கத்தோலிக்கனா என்று நான் பார்க்கவில்லை. என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு தமிழன், அவன் பின்னால் செல்ல அது ஒன்றே போதுமானதாக இருந்தது எனக்கு. ஆனால் இன்று முதன் முதலாக தமிழன் என்று சொல்வதற்கு வெற்கப்படுகிறேன். 

 

முஸ்லீம்களை "தேசியப் பாதுகாப்பு " காரணத்துக்காக இந்துக்களுடன் கத்தோலிக்கர்களும் சேர்ந்த்தேதான் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டினார்கள்.அப்போது இந்துக்களுக்கு மற்றைய தமிழர்கள் கத்தோலிக்கர்களாகத் தெரியவில்லை. இப்போது தெரிகிறது. 1990 இல் முஸ்லீம்களை விரட்டப்பட்டார்கள், இன்று கத்தோலிக்கர்களை தமிழினத்திலிருந்து வெளியேற்றுவது பற்றிச் சிந்திக்கிறோம். 

 

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முஸ்லீம்கள், கத்தோலிக்கர்கள்........இப்படியே எல்லோரையும் விரட்டிவிட்டு இந்துத்துவ தமிழீழம் கேட்கப்போகிறீர்களா?? சந்தோஷம். தாராளமாகக் கேளுங்கள்:. 

 

முன்பு யாரோ ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது, " அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், நாம் வாய்திறக்கவில்லை, பின்னர் கம்மியூனீஸ்களைத் தேடி வந்தார்கள், அப்போதும் நாம் வாய் திறக்கவில்லை. இறுதியாக எம்மைத்தேடி வந்தார்கள், எமக்காப் பேசுவதற்கு அபோது எவருமே இருக்கவில்லை ".

 

வாழ்க இந்துத்துவத் தமிழீழம் !!!!!

 

 

சண்டமாருதன்,

 

இங்கே தமிழ்த் தேசியத்தின் தூண்களென்று தம்மை வரிந்துகட்டிக் கொண்டு எழுதுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அடிப்படைவாத சிந்தனையுடையவர்கள் என்பது சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வருகிறது.

 

முதன் முதலாக தமிழன் என்று என்னைக் கூறுவதில் வெட்கப்படுகிறேன். ஏனென்றால் அப்படியொன்றில்லை இங்கே. இருப்பதெல்லாம் சைவ - இந்துத்துவ - தமிழர்கள் மட்டும்தான். மற்றையவர்கள் எல்லாம் ஒன்றில் முஸ்லீம்கள் அல்லது கிறீஸ்த்தவர்கள். 

 

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கருத்தக்கள் ஆறுதலாக இருக்கின்றன. 

 

மன்னிக்கவேண்டும் !
தமிழ் கிறிஸ்தவர்களின் அடாவடித்தனம் எனக்கு பிடிக்காது ............. அதன் பொருள் இந்து வாதத்தை முன் நிறுத்துகிறேன் என்று பொருள் ஆகாது.
தமிழர்களிடம் என்ன குறைபாடு இருக்கிறதோ ......... அதை களைந்து விட வேண்டும் என்பதே எனது எண்ணம்.
முதலில் நாம் தமிழராக இருந்தால்தான் ..........
எமக்கு என்று ஒரு நிலம் கலாச்சாரம் மதம் என்று இருக்கும்.
தமிழர் என்ற பதத்தை நாம் விட்டு விட்டால் ................ நாம் அனாதைகள் ஆகிவிடுவோம். பின்பு எமக்கு தெரிவுகள் இருக்காது யார் யார் தூக்குகிறானோ. அங்கே ஒட்டி கொள்ள வேண்டியதுதான்.
 
இருவர் திருமணம் செய்யும்போது ........
திருமணத்தை ஏதாவது ஒரு முறையில்தான் செய்ய முடியும். ஆனால் கிறிஸ்தவர்கள் காதல் திருமணம் என்று வரும்போதே நீ கிறிஸ்தவனாக மாறாவிட்டால் திருமணம் நடக்காது என்று காதலை தூக்கி குப்பையில் போடுவதை நேரில் பலமுறை பார்த்திருக்கிறேன்.இந்த முடிவில் ............ ஏன் திருமணம் செய்ய வேண்டும் ?
இப்போது எப்படி இருமனம் இணைவதை பற்றி பேசலாம் ................. இனி விபச்சாரம் பற்றி மட்டுமே பேசலாம்.
இது ஒரு அடாவடிதனம் ............ உங்கள் மதம் எப்படி உங்களுக்கு உயர்வானதோ? அடுத்தவன் மதமும் அடுத்தவனுக்கு அப்படி  என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
 
எனது தனிபட்ட எண்ணம் இந்து மதத்தை அடியோடு வேர் அறுப்பதுதான். அது ஒரு சாக்கடையாகவே நான் பார்கிறேன். அதை எமது மதம் என்று தூக்கி பிடித்து துர்  நாற்றம் அதிகரிக்கிறதே தவிர எந்த பலனும் இல்லை .
யாரிடமும் ஒரு விளக்கமும் இல்லை ............
 
மேலே புங்கை ஊரான் எழுதுவதுபோல் சும்மா வெள்ளை அடித்து கொண்டு இருக்க வேண்டியதுதான் ...
அதையும் மீறி யாரும் கேட்டால் ..............? ஏன் இஸ்லாத்தில் இல்லையா கிறிஸ்தவத்தில் இல்லையா ? என்று  மில்லியன்  டாலர் கேள்வியை கேட்டு நியாம் கற்பிப்பார்கள். 
எங்கு எது இருந்தால் எனக்கு என்ன ........?
என்னுடைய வீட்டுக்குள் ஏன் சாக்கடை இருக்க வேண்டும்? அதை சுத்தம் செய்ய கூடாதா ?
 
தமிழ் கிறிஸ்தவர்கள் மேல் உள்ள வெறுப்பும் அவர்கள் தமிழர்களாக இருப்பதால்தான்.
Link to comment
Share on other sites

ஐரோப்பிய வழக்கத்தின் படி இந்து இந்திய மத்ததை பின்பற்றுபவன். வைதீக இந்து வேதங்களை பினபற்றுபவன். மனத்த்தால் இந்து இறைவனை வழிபடுபவன். அவனின் பிரச்சனை இறைவன் அல்லது கடவுள் யார் என்பதுவே. 

Link to comment
Share on other sites

தமிழ்ச்சூரியன்,

 

நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? உங்களை இந்துத்துவக் கத்தோலிக்கன் என்று நிறுவ முயற்சிக்கிறீர்களா?? அல்லது நான் கத்தோலிக்கன்தான் என்று சொன்னால் யாழ்களத்தில் உங்களை ஒதுக்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களா?? உங்களின் அடையாளத்தை எதற்காக இவர்களுக்காக விட்டுக்கொடுத்து சமரசம் செய்ய வேண்டும். சிலர் நீங்கள் மட்டும் நல்லவர், மற்றைய 999 கிறீஸ்த்தவர்களும் கெட்டவர்கள் என்று நற்சான்றுப்பத்திரம் வேறு கொடுக்கிறார். இவர்கள் யார் நமக்குச் சான்றிதழ் கொடுக்க ?? இவர் தமிழர்களென்றால், நாங்கள் யார்?? தமிழரில்லையா?? போர்க்களத்திலும், அரசியலிலும் நாங்கள் போராடியபோது மட்டும் நாங்கள் தமிழர், இப்போது மட்டும் தீண்டத்தகாதவர்கள், வேண்டப்படாதவர்கள் அப்படித்தானே?? 

 

ஒரு பெண்ணோ அல்லது ஆனோ திருமணத்திற்காக இன்னொரு மதத்தைத் தழுவுகிறார் என்றால் அது அவரது தவறு. நிச்சயம் அவரால் இன்னொரு மத அனுட்டாங்களையோ அல்லது கடவுள்களையோ தனது கடவுளாகவும் மதமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிறப்பிலிருந்து திருமணம் முடிக்கும்வரை ஒரு மதத்தை மட்டுமே வழிபட்டு விட்டு, பெண்ணிற்காகவும், ஆணிற்காகவும் திடீரென்று இன்னொரு மதத்தை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வதென்பது சுத்த நாடகமேயன்றி வேறில்லை.  அப்படியொருவர் செய்கிறார் என்றால் அவர் தன்னைத்தானே ஏமாற்றுகிறார் என்றுதான் அர்த்தம். என்னைப்பொறுத்தவரை ஒருவரை தனது மதத்திற்கு மாறு என்று கேட்பதும் தவறு, அப்படி மாறுவதும் தவறு. 

 

அவரவர் தனது மத்தத்தில் இருந்துகொண்டே வாழ்க்கையைல் அனுசரித்துப் போவதுதான் சரி. 

 

நாந்தான் அண்ணா மதம் மாற சொல்லி கேட்பது தொடர்பாகவே 999 பேருடன் தமிழ்சூரியன் அண்ணாவை ஒப்பிட்டு எழுதியுள்ளார். இங்கு நல்லவர், கெட்டவர், தமிழர், தமிழரில்லை என எழுதவில்லை. நீங்கள் தவறான அர்த்தத்தில் விளங்கிக் கொள்ளாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையர்கள் இலங்கையை ஆக்கிரமித்தபோது பல இந்துக்களை கிறீஸ்த்தவர்களாக மதமாற்றம் செய்தார்கள். அதேபோல அதேகாலத்தில் வேலை வாய்ப்பிற்காக பல இந்துக்கள் கிறீஸ்த்தவத்தைத் தழுவிக்கொண்டார்கள். 

 

ஆனால் இன்று எவரும் துப்பாக்கியோ அல்லது வாளோ ஏந்திக்கொண்டு மதம் மாறுங்கள் என்று வற்புறுத்துவதில்லை. 2 வருடங்களுக்கு முன்னர் தாயகத்திலிருந்து அகதியாக ஒரு இளம்பெண் இங்கே வந்திருந்தார். அவருக்கு இங்கே எவரையும் தெரிந்திருக்கவில்லை. கத்தோலிக்கக் குடும்பம் ஒன்று அவருக்கு எல்லா உதவிகளையும் செய்து அவர் அகதி அந்தஸ்த்துப் பெற உதவியது. இதனால் அந்த சைவப் பெண் ஒருநாள் கத்தோலிக்கத் திருப்பலியின்போது கத்தோலிக்க மதத்தைத் தழுவிக்கொண்டது மட்டுமல்லாமல் தனது குடும்பந்த்தில் தாயகத்தில் எஞ்சியிருந்தவர்களையும் இங்கே அழைத்து அவர்களையும் மதமாற்றம் செய்தார். அவர் மதம் மாரவேண்டும் என்று எவருமே அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. அவராகவேதான் மதம் மாறினார்.

 

எனது நண்பர்களில் ஒருவர். பிறப்பிலிருந்தே தீவிர சைவர். பல்கலைக் கழகத்தில் கத்தோலிக்கப் பெண்ணொருவரை விரும்பினார். பெண்ணின் குடும்பமோ யாழ்ப்பானத்தில் பெயர்பெற்ற கத்தோலிக்க ஆயரின் குடும்பத்தைச் சேந்ர்தவள். அவளால் தனது மதத்தைவிட்டு வரமுடியவில்லை. மணமகன் மாறிக்கொண்டார். இதில் தவறு யாரது ?


 

மன்னிக்கவேண்டும் !
தமிழ் கிறிஸ்தவர்களின் அடாவடித்தனம் எனக்கு பிடிக்காது ............. அதன் பொருள் இந்து வாதத்தை முன் நிறுத்துகிறேன் என்று பொருள் ஆகாது.
தமிழர்களிடம் என்ன குறைபாடு இருக்கிறதோ ......... அதை களைந்து விட வேண்டும் என்பதே எனது எண்ணம்.
முதலில் நாம் தமிழராக இருந்தால்தான் ..........
எமக்கு என்று ஒரு நிலம் கலாச்சாரம் மதம் என்று இருக்கும்.
தமிழர் என்ற பதத்தை நாம் விட்டு விட்டால் ................ நாம் அனாதைகள் ஆகிவிடுவோம். பின்பு எமக்கு தெரிவுகள் இருக்காது யார் யார் தூக்குகிறானோ. அங்கே ஒட்டி கொள்ள வேண்டியதுதான்.
 
இருவர் திருமணம் செய்யும்போது ........
திருமணத்தை ஏதாவது ஒரு முறையில்தான் செய்ய முடியும். ஆனால் கிறிஸ்தவர்கள் காதல் திருமணம் என்று வரும்போதே நீ கிறிஸ்தவனாக மாறாவிட்டால் திருமணம் நடக்காது என்று காதலை தூக்கி குப்பையில் போடுவதை நேரில் பலமுறை பார்த்திருக்கிறேன்.இந்த முடிவில் ............ ஏன் திருமணம் செய்ய வேண்டும் ?
இப்போது எப்படி இருமனம் இணைவதை பற்றி பேசலாம் ................. இனி விபச்சாரம் பற்றி மட்டுமே பேசலாம்.
இது ஒரு அடாவடிதனம் ............ உங்கள் மதம் எப்படி உங்களுக்கு உயர்வானதோ? அடுத்தவன் மதமும் அடுத்தவனுக்கு அப்படி  என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
 
எனது தனிபட்ட எண்ணம் இந்து மதத்தை அடியோடு வேர் அறுப்பதுதான். அது ஒரு சாக்கடையாகவே நான் பார்கிறேன். அதை எமது மதம் என்று தூக்கி பிடித்து துர்  நாற்றம் அதிகரிக்கிறதே தவிர எந்த பலனும் இல்லை .
யாரிடமும் ஒரு விளக்கமும் இல்லை ............
 
மேலே புங்கை ஊரான் எழுதுவதுபோல் சும்மா வெள்ளை அடித்து கொண்டு இருக்க வேண்டியதுதான் ...
அதையும் மீறி யாரும் கேட்டால் ..............? ஏன் இஸ்லாத்தில் இல்லையா கிறிஸ்தவத்தில் இல்லையா ? என்று  மில்லியன்  டாலர் கேள்வியை கேட்டு நியாம் கற்பிப்பார்கள். 
எங்கு எது இருந்தால் எனக்கு என்ன ........?
என்னுடைய வீட்டுக்குள் ஏன் சாக்கடை இருக்க வேண்டும்? அதை சுத்தம் செய்ய கூடாதா ?
 
தமிழ் கிறிஸ்தவர்கள் மேல் உள்ள வெறுப்பும் அவர்கள் தமிழர்களாக இருப்பதால்தான்.

 

 

 

வெறுமனே சகட்டுமேனிக்கு தமிழ்க் கிறீஸ்த்தவர்களை வெ௳றுக்கிறேன் என்றால் என்ன அர்த்தம் ?? முதலில் அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பிரபாகரன் எனும் ஒப்பற்ற மனிதன் பிறந்த இனத்தில் பிறந்ததற்காக நான் தமிழன் என்று பெருமைப்பட்டிருக்கிறேன். பிரபாகரன் சைவனா கத்தோலிக்கனா என்று நான் பார்க்கவில்லை. என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு தமிழன், அவன் பின்னால் செல்ல அது ஒன்றே போதுமானதாக இருந்தது எனக்கு. ஆனால் இன்று முதன் முதலாக தமிழன் என்று சொல்வதற்கு வெற்கப்படுகிறேன். 

 

முஸ்லீம்களை "தேசியப் பாதுகாப்பு " காரணத்துக்காக இந்துக்களுடன் கத்தோலிக்கர்களும் சேர்ந்த்தேதான் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டினார்கள்.அப்போது இந்துக்களுக்கு மற்றைய தமிழர்கள் கத்தோலிக்கர்களாகத் தெரியவில்லை. இப்போது தெரிகிறது. 1990 இல் முஸ்லீம்களை விரட்டப்பட்டார்கள், இன்று கத்தோலிக்கர்களை தமிழினத்திலிருந்து வெளியேற்றுவது பற்றிச் சிந்திக்கிறோம். 

 

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முஸ்லீம்கள், கத்தோலிக்கர்கள்........இப்படியே எல்லோரையும் விரட்டிவிட்டு இந்துத்துவ தமிழீழம் கேட்கப்போகிறீர்களா?? சந்தோஷம். தாராளமாகக் கேளுங்கள்:. 

 

முன்பு யாரோ ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது, " அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், நாம் வாய்திறக்கவில்லை, பின்னர் கம்மியூனீஸ்களைத் தேடி வந்தார்கள், அப்போதும் நாம் வாய் திறக்கவில்லை. இறுதியாக எம்மைத்தேடி வந்தார்கள், எமக்காப் பேசுவதற்கு அபோது எவருமே இருக்கவில்லை ".

 

வாழ்க இந்துத்துவத் தமிழீழம் !!!!!

 

 

சண்டமாருதன்,

 

இங்கே தமிழ்த் தேசியத்தின் தூண்களென்று தம்மை வரிந்துகட்டிக் கொண்டு எழுதுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அடிப்படைவாத சிந்தனையுடையவர்கள் என்பது சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வருகிறது.

 

முதன் முதலாக தமிழன் என்று என்னைக் கூறுவதில் வெட்கப்படுகிறேன். ஏனென்றால் அப்படியொன்றில்லை இங்கே. இருப்பதெல்லாம் சைவ - இந்துத்துவ - தமிழர்கள் மட்டும்தான். மற்றையவர்கள் எல்லாம் ஒன்றில் முஸ்லீம்கள் அல்லது கிறீஸ்த்தவர்கள். 

 

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கருத்தக்கள் ஆறுதலாக இருக்கின்றன. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாந்தான் அண்ணா மதம் மாற சொல்லி கேட்பது தொடர்பாகவே 999 பேருடன் தமிழ்சூரியன் அண்ணாவை ஒப்பிட்டு எழுதியுள்ளார். இங்கு நல்லவர், கெட்டவர், தமிழர், தமிழரில்லை என எழுதவில்லை. நீங்கள் தவறான அர்த்தத்தில் விளங்கிக் கொள்ளாதீர்கள்.

 

 

முடிவாக என்னதான் சொல்கிறீர்கள்? கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், அதனால் தள்ளி வைத்துவிடலாம் என்றா?? அல்லது இந்தத் திரியின் நோகமென்ன?? வெறுமனே கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், இரண்டு கருத்துக்கள் எழுதினோமா, எல்லாம் முடிந்தது, இனி வேறு அலுவல்ப் பார்க்கலாம் என்பதா?? 

 

இந்தத்திரி இங்கே கொண்டுவரப்பட்டதற்கான நோக்கம் ஒன்றிருக்கிறது. அதன் முடிவு எப்படியிருக்கப்போகிறதென்று அறிவது எனது விருப்பம். ஈற்றில் முஸ்லீம்களைப்போலவே இவர்க்ளையும் ஒரு நாளைக்குள் விரட்டலாம் என்று முடிந்தாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை. 

Link to comment
Share on other sites

இல்லை, ஏன் மதம் மாறுகிறார்களென்ற காரணத்தை இதுவரை நீங்கள் தேடவில்லை. இதுவரை இங்கே கக்கியதெல்லாம் கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், இந்துக்களை மதம் மாற்றுகிறார்கள் என்கிற வக்கிரம் மட்டுமே. அப்படி காரணத்தைத் தேடியிருப்பீர்களென்றால் நிச்சயம் இங்கே இப்படி எழுதிய்ருக்க மாட்டிர்கள். 

 

தூயவன் என்று தன்னைக் கூறிக்கொள்பவர் "எனக்கு முஸ்லீம்களிக்கூடப் பிடிக்கும், ஆனால் கிறீஸ்த்தவர்களைப் பிடிப்பதில்லை" என்றும், இதே திரியில் மருதங்கேணி என்று நினைக்கிறேன், "எனக்குக் கிறீஸ்த்தவர்களைக் கொஞ்சமும் பிடிப்பதில்லை" என்றும் கூறியிருக்கிறார்கள். அதை முதலில்ப் படியுங்கள். 

 

ஒருவன் மதம் மாறுகிறார் என்றால் அவரேன் மதம் மாறுகிறார் என்பதைக் கண்டுபிடியுங்கள். கத்திஅதன்பிறகு கிறீஸ்த்தவர்களை தள்ளிவைக்கலாம், விமர்சிக்கலாம், எதுவும் செய்யலாம். 

 

கிறிஸ்தவர்கள் கெட்டவர்கள் என நாங்கள் யாரும் கூறவில்லை. மதம் மாற்றுவது தொடர்பில் மட்டுமே அவர்கள் மேல் விமர்சனம் வைக்கிறோம். மற்றபடி ஏற்கனவே நான் கூறியது போல் எனது நண்பர்களில் முக்கால்வாசி பேர் கத்தோலிக்க சமயத்தவர்கள். ஒரு சில முக்கிய தருணங்களில் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். நல்லவர்கள்.

 

மதம் மாற்றுவது தொடர்பில் அது யார் செய்தாலும் தவறு. :rolleyes: மாறுபவன் தானாக மாறுவது வேறு. (அப்படி மாறுபவனும் தன்னை தானே ஏமாற்றுகிறான்.) திருமணத்தை காரணம் காட்டியோ அல்லது மூளைசலவை செய்தோ, பண ஆசை காட்டியோ மதம் மாற்றுவது தவறு.

 

கிறிஸ்தவம் என்றால் தனியே நீங்கள் மட்டுமல்ல. யஹோவா போன்ற மதமாற்றும் பிரிவினரும் உள்ளார்கள். அதை நானே பார்த்துள்ளேன். :rolleyes:

சிலர் ரோட்டில் போகும் போது மறித்து தமது மதத்துக்கு மாற சொல்லி கேட்பார்கள். இயேசு தான் கடவுள், மற்றவர்கள் எல்லாம் கடவுள் இல்லையாம் என கூறுவார்கள். வலுக்கட்டாயமாக தாம் வைத்துள்ள புத்தகத்தை திணிப்பார்கள். பிரான்சிலும் நடக்கிறது. (ஒரு புத்தகத்தின் தலைப்பு "ஆவிகளுடன் பேசுவது எப்படி". அதை நான் திறந்து உள்ளே வாசிக்கவில்லை.)

முன்னர் இவர்களுக்கு பதில் சொல்வதுண்டு பின்னர் அவர்களை கண்டால் எஸ்கேப்பாகி விடுவதுண்டு. ஆனால் இன்னொரு நாள் ஒருவரிடம் மாட்டுப்பட்டு விட்டேன். அங்கிருந்து எஸ்கேப்பாக முடியவில்லை. அதனால் ஏதும் பதில் சொல்ல வேண்டியதாகி விட்டது. எனக்கு இதில் நம்பிக்கையில்லை. எனக்கு எதுவும் கூறாதீர்கள் என்ற பின்னரும் கூறிக்கொண்டே இருந்தார். இயேசு சாத்தான்களை தான் அழித்தாராம். நல்லவர்களை உயிருடன் விட்டு வைத்துள்ளாராம் என்றார். ^_^

ஆனால் இவற்றை உண்மை என நம்பி யஹோவாவுக்கு மாறி கடைசியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சிலரையும் எனக்கு தெரியும். :o  :( இன்னும் பலர் பற்றி கேள்விப்பட்டுமிருக்கிறேன். :rolleyes: இவை மூளைசலவை செய்து மதம் மாற்றுதல்.

 

அதே போல் இலங்கையிலிருந்து ஒருவரை ஏஜென்சி மூலம் வெளிநாடு வருவதற்கு உதவி செய்வதாகவும் அதற்கு பதிலாக அந்நபர் வெளிநாடு வந்ததும் தமது மதத்துக்கு ஆட்கள் சேர்த்து விட வேண்டும் எனவும் சிலர் கேட்டிருக்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு நபர் அதற்கு மறுத்து விட்டிருந்தார். ஆம் என கூறி வருபவர்களும் இருக்கலாம். இது பணம் கொடுத்து அல்லது உதவி செய்து மதமாற்றும் முறை. :rolleyes:

Link to comment
Share on other sites

 

யாரவது முதல்ல இந்துனா யாருன்னு வரையறை செய்யுங்க. 
 
எனக்கு நான் இந்துவானு ஒரே குழப்பமா இருக்கு !!??

 

நீங்கள் மேலே இருக்கும் துண்டு பிரசுரத்தை மட்டும் கணக்கில் எடுக்காதீர்கள். இப்படி பலவற்றை அல்ல உதயன் என்ற தாயாரின் பேப்பரையே ஆமி அடித்து வெளியிட்டு வருவது இலங்கையின் அரசின் வழக்கம். இப்படியான துண்டு பிரசுரம் உரிமைக்கைக்காக போராடும் வடக்கு கிழக்கு ஆயர்மார்களை பின்னடைய செய்யவும், முறிந்து போன இலங்கை  முஸ்லீம்கள் இப்போது ஆதரவு தேட வெளிகிட்டிருப்பத்தால் தமிழர்கள் அவர்களுடன் இணைந்திடமால் இருக்கவும் அடித்து வெளியிடப்படுபவை. இதற்கும் சிவ சேனைக்கும் எந்த தொடர்பும் இருக்காது. இங்கே நகைச்சுவையாக பொழுது போக்கத்தகக விடையம், நோட்டீசை வெளிவிட்ட பின்னர் அரசால் அனுப்பிவைக்கப்படும்  ஸ்பின் டொக்ரேசுகளுக்கு இந்து ம்தம், சைவமதம் எதையுமே தெரியாது. இவர்கள்தான் இ.போ.சா பஸ்களின் "தாய்மார்களுக்கானவை" என்பதை நாய்மார்களுக்கானவை" என்று மொழிபெயர்க்கும் வித்தகர்கள். எனவே நீங்கள் இந்து யார் என்று இங்கே தேடுகிறார்கள் என்று நம்பிவிடாதீர்கள். இங்கு நடப்பது இலங்கை அரசு ஏவிவிட்ட கூத்து.  இந்த விவாதம் உண்மையான மதத்துடன் தொடர்பில்லாதது.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்தினால் மதமாற்றம் நிகழ்கிறது. அதுதான் தவறென்று நீங்கள் கருத்தாடினால் நிச்சயம் நானும் உங்களுடன் ஒத்துப்போகிறேன். ஆனால், அதைச் சாட்டாக வைத்துக்கொண்டு கிறீஸ்த்தவர்கள்மேல் காழ்ப்புணர்வைக் கொட்டுவது தவறு.

 

என்னைப்பொறுத்தவரை கிறீஸ்த்தவர்கள் இந்துவை மணமுடிக்கும்போது மதம் மாறும்படி கேட்பது பலமுறை நடந்திருக்கிறது. நானும் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். இது தவறு. மணமகணையோ அல்லது மணமகளையோ அவரவர் மதத்தில் இருக்க சுதந்திரம் கொடுக்க வேண்டும். பொதுவாக காதல்த் திருமணங்களில்த்தான் இது நடக்கிறது. பெற்றோரின் எதிர்ப்பு இருப்பது தெரிந்துகொண்டு காதலித்துவிட்டு இறுதியில் ஒருவரை மதம் மாறுங்கள் என்று கேட்பது அடாவடித்தனம்தான், ஒத்துக்கொள்கிறேன். அதற்காக கிறீஸ்த்தவர்கள் எல்லோரையும் பொதுவாகவே கெட்டவர்கள் என்று வாதிடுவது எந்த விதத்தில் நியாயம் ?

 

எனது நண்பர் ஒருவர் இந்துவாகவிருந்து கத்தோலிக்கனாக திருமணத்தின்பின்னால் மாறியவர். அவருடன் பலமுறை தேவாலயத்திற்குச் செல்லும்போது அவர் அங்கே வணங்கும் விதத்தைப் பார்க்கும்போது பிறப்பிலேயே கத்தோலிக்கனான எனக்கே வியப்பு ஏற்படுவதுண்டு. ஏனென்றால் பக்திப் பரவசத்தில் அவர்மூழ்கியிருந்து செபித்துக்கொண்டிருப்பார். சிலவேளைகளில் பல கார்களில் தூரத்துத் தேவாலயம் ஒன்றிற்குச் செல்லும் குடும்பங்கள் இவருக்காகவே பலமணிநேரம் வெளியே காத்திருக்க வேண்டியும் ஏற்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் வெறும் நாடகம். பிறந்ததிலிருந்து சிவனையிம், முருகனையும் , பிள்ளையாரையும் வழிபட்ட ஒரு தீவிர சைவரால் ஒரே நாளில் எப்படி முழுக் கத்தோலிக்கனாக மாறி செபிக்கத் தோன்றுகிறது. இப்போதெல்லம் இவர் செபிப்பதைப் பார்க்கும்போது எனக்குள்ளேயே சிரித்துக்கொள்வேன். ஒருவகையில் அவர் பரிதாபப்படவேண்டிய ஒருவர் என்று நினைப்பதுண்டு. தனது கடவுளை விட்டு விட்டு ஊர் உலகத்திற்காக வேஷம் போட்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டதே பாவம். 

 

இவ்வாறு நடப்பதைத் தடுக்கவேண்டுமென்றால் அது தனது மதத்தில் நிலையாக நிற்பதால் மட்டுமே முடியும். பெண்ணிற்காகவும் ஆணிற்காகவும் மதம் மாறவேண்டிய நிர்ப்பந்தம் என்றால் அந்தக் காதலின் உண்மைத்தன்மை எது ?? 

 

Link to comment
Share on other sites

முடிவாக என்னதான் சொல்கிறீர்கள்? கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், அதனால் தள்ளி வைத்துவிடலாம் என்றா?? அல்லது இந்தத் திரியின் நோகமென்ன?? வெறுமனே கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், இரண்டு கருத்துக்கள் எழுதினோமா, எல்லாம் முடிந்தது, இனி வேறு அலுவல்ப் பார்க்கலாம் என்பதா?? 

 

இந்தத்திரி இங்கே கொண்டுவரப்பட்டதற்கான நோக்கம் ஒன்றிருக்கிறது. அதன் முடிவு எப்படியிருக்கப்போகிறதென்று அறிவது எனது விருப்பம். ஈற்றில் முஸ்லீம்களைப்போலவே இவர்க்ளையும் ஒரு நாளைக்குள் விரட்டலாம் என்று முடிந்தாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை. 

 

சைவ சமயத்தவர் மட்டும் திறமில்லை. ஐயர் மார் எல்லாம் மக்களின் பணத்தை வாருவதிலேயே குறியாக நிற்கிறார்கள். ஆனால் அவர்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. ஆக மொத்தத்தில் இங்கு மதமாற்றம் தொடர்பாகவே கிறிஸ்தவர்களில் நான் விமர்சனம் வைத்தேனே தவிர பொதுவாக என பார்த்தால் அனைத்து சமயத்திலும் கடவுளின் பெயரால் மனிதன் மக்களை ஏமாற்றுகிறான். :)

 

இங்கு தமிழ் கிறிஸ்தவர்களோ சைவ சமயத்தவர்களோ ஈழத்தமிழர்கள் என்ற நிலையில் தமிழீழத்துக்கு ஆதரவாகவே உள்ளார்கள். எனவே யாரையும் தமிழீழத்தை விட்டு விரட்ட வேண்டிய தேவை இல்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவ சமயத்தவர் மட்டும் திறமில்லை. ஐயர் மார் எல்லாம் மக்களின் பணத்தை வாருவதிலேயே குறியாக நிற்கிறார்கள். ஆனால் அவர்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. ஆக மொத்தத்தில் இங்கு மதமாற்றம் தொடர்பாகவே கிறிஸ்தவர்களில் நான் விமர்சனம் வைத்தேனே தவிர பொதுவாக என பார்த்தால் அனைத்து சமயத்திலும் கடவுளின் பெயரால் மனிதன் மக்களை ஏமாற்றுகிறான். :)

 

இங்கு தமிழ் கிறிஸ்தவர்களோ சைவ சமயத்தவர்களோ ஈழத்தமிழர்கள் என்ற நிலையில் தமிழீழத்துக்கு ஆதரவாகவே உள்ளார்கள். எனவே யாரையும் தமிழீழத்தை விட்டு விரட்ட வேண்டிய தேவை இல்லை. :)

 

இதுபோதும் எனக்கு. ஏனென்றால் நானும் எனது ஒரே அடையாளம் ஆகிய "தமிழன்" என்பதை எவருக்ககவும் விட்டுக்கொடுக்கவும் தயாரில்லை. முதலில் நான் தமிழன், பிரபாகரன் இனத்தில் பிறந்தவன். அதன் பிறகே இந்தக் கத்தோலிக்கம் மதம் எல்லாம். உங்களுக்கு நன்றி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

வெறுமனே சகட்டுமேனிக்கு தமிழ்க் கிறீஸ்த்தவர்களை வெ௳றுக்கிறேன் என்றால் என்ன அர்த்தம் ?? முதலில் அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள்.

 

இருமனம் இணையும் திருமணம் வரும்போது .............
ஒரு மனதை நோகடித்து ............. 
இருமனத்தை இணைக்கும் அன்பை சாகடித்து ........
மதத்தை நிலைநிறுத்தும். மதம் பிடித்த நிலையை வெறுக்கிறேன்.
 
"பிறர் மேல் அன்பாயிரு" என்ற ஜேசுவின் வார்த்தைகளை மறந்த கிறிஸ்தவர்களை .............
கிறிஸ்தவர்களாக பார்க்க முடியவில்லை. ஒரு வித வெறி பிடித்தவர்களாக பார்க்கிறேன். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

எனது நண்பர்களில் ஒருவர். பிறப்பிலிருந்தே தீவிர சைவர். பல்கலைக் கழகத்தில் கத்தோலிக்கப் பெண்ணொருவரை விரும்பினார். பெண்ணின் குடும்பமோ யாழ்ப்பானத்தில் பெயர்பெற்ற கத்தோலிக்க ஆயரின் குடும்பத்தைச் சேந்ர்தவள். அவளால் தனது மதத்தைவிட்டு வரமுடியவில்லை. மணமகன் மாறிக்கொண்டார். இதில் தவறு யாரது ?

 

 

 

இது கேள்வி !
 
நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் .......... அவளுக்காக அவள் மனது சந்தோசப்பட எதையும் செய்ய நினைப்பேன். 
 
அவள் நான் தேவாலயத்திலேயே வளர்ந்துவிட்டேன் எனது திருமணமும் அங்கேயே நடந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். துரதிஸ்டவசமாக இருவரும் வேறு வேறு மதம் ஆகிவிட்டோம்........
 
இப்படி அவள் பேசினால் ...........
அவள் எமது காதலை பற்றி பேசுகிறாள். அவள் விருப்பின்படி தேவாலயத்தில் சென்று திருமணம் செய்வதில் (தனிபட்ட முறையில்) எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
 
நான் கத்தோலிக்க மதத்தை சார்ந்தவள் ....
வேறு மதங்களுக்கு மாற  முடியாது. நீ வந்து தேவாலயத்தில் ஞானஸ்தானம் எடுக்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தினால்.........
என்னுடைய பதில்.
இவளுவு நாளும் உன்னை கொஞ்சியதட்கும் தொட்டதற்கும் என்ன விலை கொடுக்க வேண்டும்?? 
காதலை சாகடித்து மதம் முன்னிறுத்த பட்டபின்பு ....
அவளுடன் வாழ்வதற்கு என்ன இருக்க போகிறது?? 
 
ஆயாரின் மகளாக இருந்தால் ............. ஜேசுவின் அன்பு பற்றிய தத்துவம் பற்றி அவள் நிறையவே அறிந்திருப்பாள். ஆகவே எனக்கு எந்த தயக்கமும் இருந்திருக்காது. 
Link to comment
Share on other sites

நாங்களும் உங்களை மதத்தைபற்றித்தானே கேட்டோம். அதை புரியவில்லையா? மறுமொழி சொல்லமுடியாமல் சறுக்க வேண்டிய அளவுக்கு பௌத்துவம் நகேடு கெட்ட மதமானால்அதற்கு தமிழர் மாற வேண்டும் ஏன் அரட்டை அடிப்பான. அவர்களை திருஞாசம்பந்தர் கழுவேற்றியதில் என்ன தவறு? எம்மை வேவு பார்த்து சிவியம் நடத்தியவர்கள் எம்ம்மை திருத்தவர இலகுவாகாது.

தமிழை வளர்த்ததில் சமண பௌத்த மதங்களின் பங்கை விலத்திப் பாரக்க முடியாது. திருவள்ளுவரையும் இளங்கோ அடிகளினதும் முக்கியத்தவம் வெளிப்படையானது. சம்மந்தமே இல்லாமல் உளறுவது மட்டுமில்லாமல் சம்மந்தன் என்ற கிரிமினல் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமணர்களை கழுவேற்றியதில் என்ன தவறு என்று கேட்கும் உங்களுடன் என்ன கருத்தாடலை செய்ய முடியும்? கழுவேற்றப்பட்ட அனைத்து மக்களும் தமிழ்மொழியை பேசிய தமிழர்களே ! அன்றைக்கு சமணர் பௌத்தர் என்று கழுவேற்றியதும் தமிழர்களே அதன்பிறகு சேரன் சோழன் பாண்டியன் என்று மாறிமாறிக்கொன்று குவித்ததும் தமிழர்களே கடந்த காலத்தில் ஈழத்தில் தோன்றிய 32 இயக்கமும் கோவணத்தை இறுக்கி கட்டிக்கொண்ட மாறி மாறி போட்டுத்தள்ளியதும் தமிழர்களையே.. இனி இஸ்லாம் கிருத்தவம் இந்து என்று போட்டுத் தள்ள முனைவதும் தமிழர்களுக்குள்ளாகவே ! உலகம் முழுக்க உருண்டு பிரண்டாலும் இந்தக் காட்டுமிராண்டிக்கூட்டம் திருந்தவே திருந்தாது.. எந்த ஒரு இனத்திடம் இருந்தும் எந்த நாகரீகத்தையும் கற்றுக்கொள்ளாது.. எந்த ஒரு அழிவிலிருந்தும் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளாது.. சைக்கோ கூட்டம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.