Jump to content

இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்


Recommended Posts

 

அழகாக சொல்லி இருக்கிறீர்கள்!
well done!
பச்சை இல்லை. 
இந்துமதம் ஒரு கடல் அதற்குள் பல முத்துக்கள் இருக்கிறது. வெளியே கொண்டுவர வேண்டும்.
இப்போது எங்கும் சாக்கடைதான் இந்த கடலோடு கலக்கிறது ..... முத்துக்களை காணவே முடியவில்லை.
 
ஒரு திருத்தம் நிச்ச்ச்சயம் வேண்டும்!

 

 

நீங்கள் முதலாம் வகுப்பில் இருந்தால் அதற்குரிய பாடங்கள்தான் தெரியும்.

 

நீங்கள் சாக்கடைக்குள் நின்றால் உங்களைச் சுற்றிச் சாக்கடைதான் தெரியும்.

கடையில் இருந்து முதலுக்கு வாருங்கள்.

 

முதல் தெரியும்!! 

Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ்சூரியன்

கிறிஸ்தவன் [கத்தோலிக்கன்  ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன்

சண்டமாருதன்

நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.   தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.   ஒரு இந்தியப் பார்ப்பனனு

சண்டமாருதன்

சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூற

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முதலாம் வகுப்பில் இருந்தால் அதற்குரிய பாடங்கள்தான் தெரியும்.

 

நீங்கள் சாக்கடைக்குள் நின்றால் உங்களைச் சுற்றிச் சாக்கடைதான் தெரியும்.

கடையில் இருந்து முதலுக்கு வாருங்கள்.

 

முதல் தெரியும்!! 

 

 

சாக்கடை என்று தெரிந்த பின்பு யாராவது அங்கு நிற்பானா?
நங்கள் கரையேறி பலகாலம்.
இப்போதும் அது சாக்கடையாகவே இருக்கிறது என்றுதான் எழுதுகிறேன்.
 
முன்னுக்கும் பின்னுக்கும் நின்று பார்த்தல் எனும் முரண்பாட்டை முதலில் இல்லாது ஒழித்து.
மனிதன் பார்க்கும்போது கடவுளின் எண்ணம் சிந்தனை தெரிய கூடிய வாறு மதத்தை மாற்றவேண்டும்.
 
அல்லது முன்னுக்கு நின்று பார்ப்பவர்கள் .... தமக்கு என்று ஒரு சொந்த மதத்தை உருவாக்கி இது முன்னுக்கு நின்று பார்பவர்களுக்கு மட்டும் உரித்தானது என்று அடையாள படுத்தி கொள்ளவேண்டும்.
 
பின்னுக்கு நிற்பவர்கள் நாங்கள் கிறிஸ்தவமோ இஸ்லாமோ .....  எமக்கு விளங்க  கூடியவாறு கதைப்பவர்களுடன் பேசி ஒரு புரிதலை உருவாக்கி கொள்கிறோம்.
 
முன்னுக்கு நிற்பவர்களுக்கு மட்டுமே விளங்கும் என்றால் பின்னுக்கு நிற்கும் எங்களை எங்களை ஏன் இந்துக்கள் என்று வரையறுத்து கொள்கிறீர்கள் ??
இஸ்லாமும் கிறிஸ்தவமும் .....இந்து என்று அடிக்க வந்தால் எம்மை முன்னுக்கு தள்ளிவிட வசதியாய் இருக்குமாக்கும் ??
 
புறம்போக்கு சிந்தனைகளை கலந்து விடுவதால்தான் ............ அது சாக்கடையாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
இன்று உலகின் பெரிய இந்து நாட்டில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை.
ஊரோடு கூடி பஸ் ஏறினாலே உரச என்று ஒரு கூட்டம் ஏறுகிறது. அடிப்படை நாகரீகம் கூட செத்து கிடக்கிறது.
 
கடவுளுக்கு முன்னுக்கு மட்டுமே மனிதர்கள் இருக்கலாம் .............. பின்னுக்கும் இருந்தால்?
கடவுள் பற்றி விவாதிக்க நிறைய வந்துவிடும்.
பின்னுக்கும் வைத்திருப்பவர் கடவுள் என்ற தகுதியை இழந்து .......... வலது குறைந்தவர் என்று ஆகிவிடுவார்.
 
வலது குறைந்தவரை வணங்கும் வரிசையில் அறிவுள்ள எவனாவது போய் முன் வரிசையில் நிற்பானா ??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கிறிஸ்தவ மதம் மேல் வெறுப்புதான் இப்போ வருகின்றது..  மதமாற்ற முயற்சியில் முன்னுக்கு நிற்பவர்கள் கிறிஸ்தவம்

.

என் சொந்த உறவு  ஒன்று உந்த பிந்துகோஸ் கூட்டத்துடன் தெரியாமல் தொடர்பை வைத்து கொண்டார்.

கடைசியாக மதம்  மாறி பொட்டு பூ  வெல்லாம் அழித்து விட்டார்கள்.  அலங்கோல மாய் போய் விட்டார்கள்.

 

சொந்த அண்ணன் மகள் பூப்புனித வீட்டுக்கே வரவில்லை. மதம் போக கூடாதாம். நாங்கள் சாத்தான் என்கிறார்கள்.

அவரது பலவீனத்தை வைத்தே  மத மாற்றம் செய்யப்பட்டார்.

 

ஒரு வாத்தியார்....தமிழ்வாத்தியார்....சைவ சிந்தனையள் கூடின வாத்தியார்.....எட்டு பிள்ளைகளை பெத்தெடுத்து....வளர்த்து ஆளாக்கினாப்பிறகு.....அதிலை ஏழு வேறைவேறை மதங்களுக்கு மாறீட்டுதுகள். பிள்ளையள் எல்லாரும் நால்லாய்த்தானிருக்கினம்.ஆனால் வாத்தியார் மதம் மாறவேயில்லை கண்டியளோ.வாத்தியாரும் கிட்டடியிலை மோசமாய்ப்போனார்.....செத்தவீட்டுக்கு பிள்ளையள் ஏழு பேரும் வரேலாதகட்டம்...காரணம் அங்கை மத சட்டங்கள் தடுக்குதாமெல்லே.....அதாவது சைவர் சாத்தான்களுக்கு சமமாம்.சைவ கிரியைகள் சாத்தானின் கிரியைகளாமெல்லே....கடைசியிலை வாத்தியார்ற்ரை செத்தவீடு ஒருபிள்ளையும் அவரின்ரை பிள்ளையளோடையும் முடிஞ்சுதாம்..
 
பெத்த தாய்தகப்பனுக்கே மதம் குறுக்கை நிக்குதெண்டால் மிச்சத்தை யோசிச்சு பாருங்கோ!
மதத்தை விட மனிதாபிமானம்தான் வேண்டும்.அதை எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்றாலும்......மனிதாபிமானம்..
 
இந்த திரி தொடர்ந்தால் கேடுகெட்ட திருமணச்சடங்கு நிகழ்ச்சி ஒன்றையும் எழுதலாமென நினைக்கின்றேன்.
 
பிரி நன்றி உங்கள் கருத்திற்கு.... :)
Link to comment
Share on other sites

 

சாக்கடை என்று தெரிந்த பின்பு யாராவது அங்கு நிற்பானா?
நங்கள் கரையேறி பலகாலம்.
இப்போதும் அது சாக்கடையாகவே இருக்கிறது என்றுதான் எழுதுகிறேன்.
 
முன்னுக்கும் பின்னுக்கும் நின்று பார்த்தல் எனும் முரண்பாட்டை முதலில் இல்லாது ஒழித்து.
மனிதன் பார்க்கும்போது கடவுளின் எண்ணம் சிந்தனை தெரிய கூடிய வாறு மதத்தை மாற்றவேண்டும்.
 
அல்லது முன்னுக்கு நின்று பார்ப்பவர்கள் .... தமக்கு என்று ஒரு சொந்த மதத்தை உருவாக்கி இது முன்னுக்கு நின்று பார்பவர்களுக்கு மட்டும் உரித்தானது என்று அடையாள படுத்தி கொள்ளவேண்டும்.
 
பின்னுக்கு நிற்பவர்கள் நாங்கள் கிறிஸ்தவமோ இஸ்லாமோ .....  எமக்கு விளங்க  கூடியவாறு கதைப்பவர்களுடன் பேசி ஒரு புரிதலை உருவாக்கி கொள்கிறோம்.
 
முன்னுக்கு நிற்பவர்களுக்கு மட்டுமே விளங்கும் என்றால் பின்னுக்கு நிற்கும் எங்களை எங்களை ஏன் இந்துக்கள் என்று வரையறுத்து கொள்கிறீர்கள் ??
இஸ்லாமும் கிறிஸ்தவமும் .....இந்து என்று அடிக்க வந்தால் எம்மை முன்னுக்கு தள்ளிவிட வசதியாய் இருக்குமாக்கும் ??
 
புறம்போக்கு சிந்தனைகளை கலந்து விடுவதால்தான் ............ அது சாக்கடையாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
இன்று உலகின் பெரிய இந்து நாட்டில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை.
ஊரோடு கூடி பஸ் ஏறினாலே உரச என்று ஒரு கூட்டம் ஏறுகிறது. அடிப்படை நாகரீகம் கூட செத்து கிடக்கிறது.
 
கடவுளுக்கு முன்னுக்கு மட்டுமே மனிதர்கள் இருக்கலாம் .............. பின்னுக்கும் இருந்தால்?
கடவுள் பற்றி விவாதிக்க நிறைய வந்துவிடும்.
பின்னுக்கும் வைத்திருப்பவர் கடவுள் என்ற தகுதியை இழந்து .......... வலது குறைந்தவர் என்று ஆகிவிடுவார்.
 
வலது குறைந்தவரை வணங்கும் வரிசையில் அறிவுள்ள எவனாவது போய் முன் வரிசையில் நிற்பானா ??

 

 

நான் மனதைப்பற்றி கதைக்க முற்பட்டால்..

நீங்கள் உடைகளைப்பற்றிக் கதைக்கிறீர்கள்!

 

நான் கடவுளைப்பற்றிக் கதைக்க முற்பட்டால்..

நீங்கள் கடவுளைச் சுற்றி இருப்பவர்களைப்பற்றி விளக்கம் சொல்கிறீர்கள்!

நேர்சுக்குப் படித்தவன் வைத்தியன் அல்ல... அதேபோல பார்வையாளனோ விமர்சகனோ கடவுளை அறிந்தவனாக மாட்டான்.

 

யாவற்றுக்கும் அததற்கேற்ற படிப்பினையும் அனுபவமும் தேவை.

 

எனது அனுபவத்தின்படி.. எனது கடவுளை வணங்கியவாறு விமானம் ஏறினேன்... கடவுள் செயலால் நல்லாய் இருக்கிறேன்.

 

அதனால்.. எனது சமயத்தை எனக்கு முன்னால் நின்று எவராவது இழிவு செய்தால்... தென்னம்பாளையும் மலவாளியும் பக்கத்தில் இருந்தால்.. தோய்த்தடிப்பேன்.

Link to comment
Share on other sites

Pashupata Shaivism[edit]
Saivism-india-pasupata.png

Pashupata Shaivism: The Pashupatas (Sanskrit: Pāśupatas) are the oldest named Shaivite group.[16] The Pashupatas were ascetics.[17] Noted areas of influence (clockwise) includeGujarat, Kashmir and Nepal.[citation needed] But there is plentiful evidence of the existence of Pāśupata groups in every area of the Indian subcontinent. In the far South, for example, a dramatic farce called the Mattavilāsanaprahasana ascribed to a seventh-century Pallava king centres around a Pāśupata ascetic in the city of Kāñcīpuram who mistakes a Buddhist mendicant's begging bowl for his own skull-bowl. Inscriptions of comparable date in various parts of South East Asia attest to the spread of Pāśupata forms of Śaivism before the arrival there of tantric schools such as the Shaiva Siddhanta.[18]

Shaiva Siddhanta[edit]
Saivism-india-siddhanta.png

Shaiva Siddhanta: Considered normative tantric Saivism, Shaiva Siddhanta provides the normative rites, cosmology and theological categories of tantric Saivism.[19] There is a dualistic dimension to Shaivism, as expounded by Meykandar. The pure, or Shuddha Saivism,however, proclaimed by Rishi Thirumular and his paramparai (guru lineage), is strictly non-dualistic, and proclaims the soul to be at all times one with Shiva. [20] This tradition was once practiced all over India. For example the theologians Sadyojoti, Bhatta Nārāyanakantha and his son Bhatta Rāmakantha (ca. 950-1000 AD) developed a sophisticated Siddhanta theology in Kashmir.[21] However the Muslim subjugation of north India restricted Shaiva Siddhanta to the south,[22] where it merged with the Tamil Saiva cult expressed in the bhakti poetry of the Nayanars.[23] It is in this historical context that Shaiva Siddhanta is commonly considered a "southern" tradition, one that is still very much alive.[24]

Kashmir Shaivism[edit]
Saivism-india-kashmir.png

Kashmir Shaivism: Kashmir Saivism, a householder religion, was based on a strong monistic interpretation of the Bhairava Tantras (and its subcategory the Kaula Tantras), which were tantras written by the Kapalikas.[25] There was additionally a revelation of the Siva Sutras to Vasugupta.[26] Kashmir Saivism claimed to supersede the dualistic Shaiva Siddhanta.[27] Somananda, the first theologian of monistic Saivism, was the teacher of Utpaladeva, who was the grand-teacher ofAbhinavagupta, who in turn was the teacher of Ksemaraja.[28][29] The label Kashmir Shaivism, though unfortunately now widely adopted, is really a misnomer, for it is clear that the dualistic Shaiva Siddhanta was also in North India at one point in time.

Siddha Siddhanta[edit]

Natha Siddha Siddhanta: Founded by Matsyendranatha (ca 800–1000) and expounded by Rishi Gorakshanatha (ca 950), this monism is known as Bhedabheda, embracing both thetranscendent Shiva as well as the immanent Shiva. Shiva is efficient and material cause. The creation and final return of soul and cosmos to Shiva are likened to bubbles arising and returning to water. Influential in Nepal, Uttar Pradesh, Bihar and West Bengal.

Lingayatism[edit]
Saivism-india-vira.png

Lingayatism: Made popular by Basavanna (1105–1167), this version of qualified nondualism, Shakti Vishishtadvaita, accepts both difference and nondifference between soul and God, like rays are to the sun. Shiva and the cosmic force are one, yet Shiva is beyond His creation, which is real, not illusory. God is efficientand material cause. Influential primarily in Karnataka.

Shiva Advaita[edit]
Saivism-india-advaita.png

Shiva Advaita: This monistic theism, formulated by Srikantha (ca 1050), is called Shiva Vishishtadvaita. The soul does not ultimately become perfectly one withBrahman, but shares with the Supreme all excellent qualities. Appaya Dikshita (1554–1626) attempted to resolve this union in favor of an absolute identity—Shuddhadvaita. Its area of origin and influence covers most of Karnataka state.

Shaivism left a major imprint on the intellectual life of classical Cambodia, Champa in what is today southern Vietnam, Java and the Tamil lands. The wave of Shaivite devotionalism that swept through late classical and early medieval India redefined Karnataka and Tamil Nadu. Shaivite worship legitimized several ruling dynasties in pre-modern India, incluidng the Chola and the Rajputs. A similar trend was witnessed in early medieval Indonesia with the Majapahit empire and pre-Islamic Malaya.[30][31] Nepal is the only country in the world where Shaivism is the most popular form of Hinduism.

Link to comment
Share on other sites

 

சந்திக்கு சந்திக்கு ............ இருக்கும் எல்லா ஆலமரத்தின் கீழும் இத்தியின் கீழும் ...
இருக்கும் முருகனும் பிள்ளையாரும் எங்கு போய்விட்டார்கள் ?
அவர்களை வணங்கும் அதனை இந்து கூட்டமும் எங்கு போய்விட்டார்கள்?
 
இத்தனை  கோவிலும் குளமும்  இருந்த ஈழத்தில் பிறந்த ஒரு  இந்து குழந்தை ... ஏன் தேவாலயத்தில் சென்று நிற்கவேண்டும்? 
இவளவு இந்து கோவிலும் ஒரு ஆனதை பிள்ளையை பராமரிக்கும் மனிதாபிமானத்தை ஏன் தனது பக்த அடியார்களுக்கு சொல்லி கொடுக்கவில்லை?
 
நீங்கள் சாக்கடை இந்து மதத்தை தூக்கி பிடிக்கும்போது .............
ஜேசுவிட்காக  தனது வாழ்வை துறந்த ஒரு பாதிரியார் ஏன் தனது  கிறிஸ்தவத்தை தூக்கி பிடிக்க முடியாது? 
 
தன்னிடம் எது இருக்கிறதோ அதைதான் அவனால் பகிர்ந்துகொள்ள முடியும்.
பாதிரியாரிடம் பைபிள்தான் இருக்கிறது.
தேவலாயத்தின் வாசலில் வந்து நிற்கும் ஒருவனுக்கு கிறிஸ்தவமதம் பற்றி சொல்லி கொடுக்காவிட்டால் அது மாபெரும் தவறு.
அதை ஒரு பாதிரியார் செய்ய துணியமாட்டார்.
 
----
----
 
லட்சம் இந்துக்கள் இருக்கும் நாட்டில் ......... ஒரு இந்து குழந்தை போய் தேவாலயத்தி வாசலில் நின்றிருந்தால் .உங்கள் மதத்தை வெளியில் சொல்ல வெட்கப்பட பழகி கொள்ளுங்கள்.
பின்பு அந்த குழந்தையை ஒரு மனித குழந்தை என்று தூக்கி எண்டுத்த்வன் அதை கொடுத்தான் இதை கொடுத்தான்  என்று புலம்புவதை என்றாலும் நிறுத்தி கொள்ளுங்கள்.
தன்னிடம் எது இருக்கிறதோ அதைதான் அவனால் பகிர்ந்துகொள்ள முடியும்.

 

 

இங்கு நீங்கள் எழுதிய கருத்து மூலம் உதவி செய்து விட்டு மதம் மாற்றுவதில் தவறில்லை என்கிறீர்கள்.

போரில் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் எனும் போது அவர்கள் தாமாக சென்று தேவாலயத்தின் முன் நின்றிருக்க மாட்டார்கள். அவர்களை இவர்களாக கண்டெடுத்திருப்பார்கள் அல்லது யாராவது தேவாலயத்தில் ஒப்படைத்திருப்பார்கள் என நினைக்கிறேன். சைவ சமயத்தவர்கள் தமது சமயம் சார்ந்த அமைப்பினூடாக உதவி செய்கிறார்களா இல்லையா என்பது இரண்டாவது விடையம். ஆனால் தனிப்பட்ட முறையில் உதவி செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். கிறிஸ்தவர்களுக்கும் உதவி செய்கிறார்கள். அதற்காக மதம் மாற்றி விட்டு உதவி வழங்கவில்லை.

தூயவன் அண்ணாவும் அப்பிள்ளைகளுக்கு உதவி செய்திருக்கிறார். அதை விட வேறு நபர்கள் மூலம் அப்பிள்ளைகளை பொறுப்பேற்று பார்க்க சம்மதித்திருக்கிறார்.

உண்மையில் தேவாலயத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது தான் நோக்கமாக இருந்தால் அவரவர் மதத்திலேயே இருக்கத்தக்கதாக உதவியை செய்ய வேண்டும். அப்பிள்ளைகளை மதம் மாற்றியது பிழை. மதம் தான் மாற்றி விட்டார்கள் என்றால் அவர்களை வேறு நபர்கள் பொறுப்பேற்க வரும்போது தர முடியாது என கூறுவது உங்களுக்கு சரியாக தோன்றுகிறதா? ஆக மொத்தத்தில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனநிலையிலும் பார்க்க அவர்களை மதம் மாற்ற வேண்டும் என்ற மனநிலையில் தான் அவர்கள் உள்ளார்கள். (எல்லோரையும் குற்றம் சாட்டவில்லை. இப்படி நடப்பவர்களை குற்றம் சாட்டுகிறேன்.)

இன்று வடகிழக்கில் விகாரைகள் அமைக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. நாளைக்கு கிறிஸ்தவ சிறுவர்களை பௌத்த சமயமாக மாற்றி விட்டு இவர்கள் எமது விகாரைக்கு முன் வந்து நின்றார்கள். அதனால் மதம் மாற்றினோம் என்று சொன்னால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டால் ஆச்சர்யமில்லை.

Link to comment
Share on other sites

a

சைவ சமயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 

சைவ சமயம்

150px-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%

இக்கட்டுரை சைவ சமயம் தொடரின் ஒரு பகுதியாகும்.

சைவ சமயம் (சமக்கிருதம்: शैव पंथ, śaiva paṁtha; ) என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். சைவம் சிவனுடன் சம்பந்தமாவது என திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார்.[1] சிவ வழிபாட்டினை சிவநெறி என்றும் சைவநெறி என்றும் கூறலாம்.[2] சைவசமயத்தினை சுருக்கமாக சைவம் என்று அழைக்கின்றார்கள். பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும், இம்மதத்தினை சிவ மதம் என்றும் தமிழர் சமயம் நூலில் பாவணார் குறிப்படுகிறார்.[3] இச்சமயம் உலகில் தோன்றிய முதல் சமயமென என்று கூறப்பெறுகிறது.[4]

இந்து சமயப் பிரிவுகளான வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம் முதலிய பிற பிரிவுகளை தன்னுள் எடுத்துக் கொண்ட இச் சமயம் இந்து சமயப்பிரிவுகளுள் முதன்மையானதாக கொள்ளப்பெறுகிறது. இம்மதத்தினை இருநூற்று இருபது மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். பக்தி இலக்கிய காலத்தில் சைவம் தமிழுக்கு பெரும் சேவை செய்து சைவத்தமிழ் என்று பெயர் கொண்டது. இதற்கு நாயன்மார்களும், சமயக் குரவர்களும் பெரும் உதவி செய்தனர்.

'தென்னாடுடைய சிவனே போற்றி' என்பது பொதுவாக வாழ்த்தப்படுவதாகும். வேதங்களும், ஆகமங்கள்முதலானவையும் சிவபிரானின் சதாசிவக் கோலத்தினால் அருளப்பட்டவை என்பர். பதினெண் புராணங்களுள்பத்து புராணங்கள் சிவன் பற்றியவை. இந்தியா, நேபாளம், இலங்கை, தென்கிழக்காசியா, ஐரோப்பா முதலான எல்லா நாடுகளிலும் சிவாலயங்கள் காணப்படுகின்றன.

 

 

சைவ சமயத்தின் தோற்றம்[தொகு]

பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும் தமிழர் சமயம் நூலில் பாவணார் குறிப்படுகிறார்.

மத்திய அமெரிக்காவின் மாயன் நாகரிகமும், கிழக்காசிய நாடுகளில் ஜாவா, பாலி முதலிய இடங்களில் காணப்படும் கோவில் இடிபாடுகளும் சிவ வழிபாடு உலகமெங்கும் இருந்துள்ளமையை காட்டுகின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தினை ஆய்வு செய்து எழுதிய சர்.ஜான் மார்ஷல் என்பவர் உலகின் மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகிறது என கூறுகிறார்.[2]

மொகெஞ்சதாரோ - ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி. யு. போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார்.

சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும். இதனைச் சைவம்என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம்.[5] /*சைவசமயத்தின் வரலாற்றை நாம் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதியதை வைத்து பேசுகிறோம்,எனது அறிவுக்கு அக்கருத்துகள்,வரலாற்று கூற்றுகள் தவறாகப்படுகின்றது. 'சமயமென்பது மனிதர்களை கடவுளின் நிலைகளுக்கு கொண்டு செல்வது. அதாவது ஆனமாக்களை பக்குவபடுத்தவே சமயத்தை சதாசிவ கடவுள் உலகம் உண்டாக்கப்பட்டபொழுது உண்டாக்கினான். இதை ஸ்ரீகண்ட உருத்தரர் தனது எட்டு சீடர்கள் மூலமாக உலகமக்களுக்கு போதிக்கபட்டது. அவர்களின் காலத்தில் இமயமலை பூமியில் இல்லை. கைலாயம் மேருமலையின் நடுவில் இருந்துள்ளது, மேருமலையோ பூமியின் மத்தியில் இருந்துள்ளது. அதாவது பூமத்திய ரேகையின் மீது, மேருமலைக்கு தெற்கே தில்லை இருந்துள்ளது {திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தென்தில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்} தில்லைக்கு தெற்கே இராவணவன்னஃ ஆண்ட இலங்கை இருந்துள்ளது. (இதை பட்டிணாத்தார் கூறியுள்ளார் 'தனது தாயின் உடலுக்கு நெருப்பு வைக்க பாடிய பாட்டில் முன்னே இட்ட தீ தென் இலங்கை'. அன்று வாழந்த உயிரினங்களில் மனிதர்கள், தேவர்கள், அரக்கர்கள் என்ற உயிரினங்களும் வாழ்ந்து வந்துள்ளார்கள் (இன்று ஆராய்ச்சியாளர்களும் பூமியில் மூன்று விதமான மனிதர்களாக வாழந்து வந்தார்கள என்கிறார்கள்) அரக்கர்களும், தேவர்களும் தீரா பகையால் சண்டையிட்டு அழிந்து விட்டார்கள் என்கிறது தமிழ். ஆரியன் என்ற சொல் சதாசிவனையும், அவனின் நிலைஅடைந்தவரகளையும் குறிக்கும். செத்து சம்பலாகவும், புழுக்களானவர்களை குறிக்காது. இன்றோ மடிந்து போன மனிதர்கள் உண்டாக்கிய மதங்கள் இப்பூமியை நரகமாக்கிறது. திருமந்திரத்தை படித்தால் நான் சொல்லியுள்ள கருத்துகள் உண்மை எனபதை உணர்வீர்கள்§ வெற்றிலிங்கம்=மும்பை/*

சிவ முழக்கங்கள்[தொகு]
  1. நம பார்வதீபதயே - ஹர ஹர மஹாதேவா
  2. சித் சபேசா - சிவ சிதம்பரம்
  3. கார்த்திகேய நாம சங்கீர்த்தனம் - சிவ சுப்ரஹ்மண்யோம்
  4. வல்லீ காந்த ஸ்மரணம்-சிவ சுப்ரஹ்மண்யோம்
  5. தென்னாட்டுடைய சிவனே போற்றி - எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

இந்த முழக்கத்தில் "-" குறிக்கு முந்தையதை ஒருவர் முழங்க,"-" குறிக்கு பின்னையதை மற்ற சிவ பக்தர்கள் முழங்குகின்றார்கள். இவையில்லாமல் "சிவ சிவ" என்றும் கூறுவார்கள்.

“தென்னாடுடைய சிவனே போற்றி; என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்பதை மணிவாசகப் பெருந்தகை அருளினார்.

சைவ சமய பிரிவுகள்[தொகு] அடிப்படை வகைகள்[தொகு]

ஊர்த்தசைவம், அனாதி சைவம், ஆதிசைவம், மகாசைவம், பேதசைவம், அபேத சைவம், அந்தரசைவம், குணசைவம், நிர்க்குணசைவம், அத்துவாசைவம், யோகசைவம், ஞானசைவம், அணுசைவம், கிரியாசைவம், நாலுபாதசைவம், சுத்தசைவம் என்று பதினாறுவகைப்பட்டதாய்ச் சிவனைப் பரதெய்வமாகக்கொண்டு வழிபடுஞ் சமயம், சைவம் ஆகும். [6]

பிரிவுகள்[தொகு]
  1. காசுமீர சைவம்
  2. வீர சைவம்
  3. சிவாத்துவைதம்
  4. பாசுபதம்
  5. காபாலிகம்
  6. காளாமுகம்
  7. பைரவம்
  8. மாகேசுவரம்
  9. சிவபாகவதம்
  10. மகாவிரதம்
  11. காலானனம்
  12. பூர்வ சைவம்
  13. காணாபதம்
  14. கரலிங்கம்
  15. அவாந்தர சைவம்
  16. காருணிக சித்தாந்தம்
  17. காருக சித்தாந்தம்
  18. காதக சித்தாந்தம்
  19. பிராவார சைவம்
  20. அந்நிய சைவம்
  21. நையாயிகம்
  22. வைசேடிகம்

என பல வகையான பிரிவுகள் இருக்கின்றது.[7]

இவற்றின் தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளனவாயினும் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை.

சைவ சித்தாந்தத்தை தத்துவமாகக் கொண்டு விளங்குவது சித்தாந்த சைவம். இச்சைவம் இந்தியாவில் மட்டுமன்றி நேபாளம், இலங்கை, மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பிறநாடுகளிலும் விளங்குகிறது.

அகப்புறச் சமயம்[தொகு]

இவற்றில் பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம் ஆகியவை அகப்புறச் சமயங்கள் (அகப்புறசமயம்) எனவும் அறியப்பெறுகின்றன.[8]பாசுபதம், மாவிரதம்,காபாலம்,வாமம்,வைரவம்,அபிக்கவாத சைவம் ஆகியவையும் அகப்புறச் சமயம் என்றும் கூறப்பெறுகின்றன.[9]

சைவ வழிபாட்டின் பண்புகள்[தொகு]
முதன்மைக் கட்டுரை: சைவ சித்தாந்தம்

பழம்பெருஞ் சமயமாகிய சைவத்தில் கடவுள் வழிபாட்டுப் பண்பும், பயனும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. வாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் (பற்று) என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனது. இவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லை. பாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்டகால அனுபவத்தில் பாசத்தடையில் (பற்றிலிருந்து) இருந்து நீங்கிப் பதியினைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளது. இந்த நிலையே ஞானம் எனப்படுகிறது. இந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்துவப் பண்பாகும்.

சைவ வழிபாட்டிற்கு ஆதார நூலாக விளங்கும் சிவாகமங்கள் இந்த ஞானம் பற்றிய விளக்கத்தை முதலில் வைத்தே கடவுள் வழிபாட்டு விதிமுறைகளைத் தெரிவிக்கின்றன. சைவ வழிபாட்டுத் தலமான ஆலயமும் ஞானி ஒருவரின் உடல் அமைப்பின் மாதிரியிலேயே உருவமைக்கப்படும். அங்கு நிகழும் கிரியைகள் யாவும் (விழுந்து கும்பிடுதல் முதல் பூசை செய்தல் வரை) இந்த ஞான விளக்கப் பின்னணியிலேயே அமையும்.

பாவ புண்ணியம்[தொகு] பாவம்[தொகு]

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல் போன்றவற்றினை சைவம் பாவம் என்கிறது. இதனை செய்பவர்கள் நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை அனுபவிப்பர் என்கிறது.

புண்ணியம்[தொகு]

புண்ணியம், பதிபுண்ணியம் பசுபுண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியம் சிவபுண்ணியம் எனவும்படும். பசு புண்ணியம் உயிர்புண்ணியம் எனவும் படும். பதி புண்ணியம், சிவபெருமானை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் ஆகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நோக்கிச் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பசுபுண்ணியம் ஆகும். பதி புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முத்தியைக் கொடுக்கும். பசு புண்ணியங்களுக்கும் பயன் உண்டு; ஆனால், அப்பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியப்பயன் சிவபெருமானால் அனுபவிக்கப்படாததால், அழிவதில்லை. அதன் பயன், உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும். “பசித்து உண்டு, பின்னும் புசிப்பானை ஒக்கும் இசைத்து வருவினையில் இன்பம்." சிவஞானபோதம் எட்டாம் சூத்திரம் முதல் அதிகரணத்தில் உள்ள வெண்பாவில் மெய்கண்டார் தெளிவுற அருளிச்செய்துள்ளார். இதன் பொருள் பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுப்பது பசு புண்ணியம்; அவ்வுணவின் பயனாக, அவனுக்குள்ள பசி ஆறுகிறது. அவனுக்கு மீண்டும் பசி வரும்போது, முன்புண்ட உணவின் பயன் அனுபவிக்கப்பட்டுவிட்டதால், அவனுக்குச் செய்த பசு புண்ணியமும் அத்தோடு அழிந்துவிடுகிறது.

சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாகும், மேலும் 1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றனவும் புண்ணியத்தில் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு புண்ணியங்களை செய்தவர்கள் சிவ இன்பத்தையும், சீவ ( உயிர் ) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர் என்று சைவர்கள் நம்புகிறார்கள். [10]

சைவ அடியவர்கள்[தொகு]

சைவ உலகில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும், மாணிக்கவாசகரும் நால்வர் எனப்படுவர். இவர்களை சைவசமயக் குரவர்கள் என்றும் அழைப்பர். சைவ அடியாளர்கள் உடலில் திருநீறு அணிய வேண்டும். சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே உறக்கம் நீங்கி எழ வேண்டும்.திருநீறு அணிந்து சிவபெருமானை நினைந்து திருப்பள்ளி எழுச்சி முதலிய திருமுறைப் பாடல்களை ஓத வேண்டும். தூய நீர் கொண்டு அனுட்டானம் செய்து திருவைந்தெழுத்தை எண்ணித் திருமறைகள், திருமுறைகள் ஓத வேண்டும்.

சைவ நெறி நூல்கள்[தொகு]

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர் எழுதிய தேவாரம், மாணிக்கவாசக சுவாமிகள் எழுதிய திருவாசகம் இரண்டும் தமிழ் மொழியில் உள்ள சைவ வேதம் ஆகும்.

  1. சங்கற்ப நிராகரணம்
  2. உண்மை விளக்கம்
  3. உண்மை நெறி விளக்கம்
  4. நெஞ்சு விடு தூது
  5. கொடிக்கவி
  6. போற்றிப் பஃறொடை
  7. வினா வெண்பா
  8. திருவருட் பயன்
  9. சிவப் பிரகாசம்
  10. இருபா இருபஃது
  11. சிவஞான சித்தியார் - ஆசிரியர் : திருத்துறையூர் - அருணந்தி சிவாச்சாரியார்
  12. சிவஞான போதம் - ஆசிரியர் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர்
  13. திருக்களிற்றுப் படியார் - ஆசிரியர் : உய்யவந்ததேவ நாயனார்
  14. திருவுந்தியார் - ஆசிரியர் உய்யவந்ததேவ நாயனார்
சைவ தொண்டு[தொகு]

சிவாலயத்துக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்தலை சைவம் சிவ தொண்டென அழைக்கிறது. இவ்வாறு செய்யும் தொண்டினால் பலன் பெற்று ஆத்மாக்கள் இறைவனை அடைகின்றன என்றும் நம்பப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு] ஆதாரங்கள்[தொகு]
  1. Jump up திருமந்திரம் -1486
  2.  Jump up to:2.0 2.1 http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm
  3. Jump up தமிழர் சமயம் - பாவாணர்
  4. Jump up http://www.valaitamil.com/tamil-and-samayam_6859.html
  5. Jump up வைதிக சைவம் - வேற்றுமையில் ஒற்றுமை
  6. Jump up சென்னைப் பேரகரமுதலி - சைவ வகைகள்
  7. Jump up அபிதான சிந்தாமணி : ப. 746
  8. Jump up http://218.248.16.19/slet/l5F31/l5F31s07.jsp?id=3640
  9. Jump up http://www.tamizhkavyathedal.com/letterSearch/?letter=%E0%AE%85
  10. Jump up சைவ சமயம் - வினாவிடை
உசாத்துணை[தொகு] வெளி இணைப்புகள்[தொகு] [மறை]
20px-Om-tamil.png சைவ சமயம் 20px-Om-tamil.png
    வரலாறு   பிரிவுகள்   குறியீடுகள்   கடவுள்கள்   தொண்டர்கள்   விரதங்கள்   திருமடங்கள்   ஆதீனங்கள்   விழாக்கள்   புராணங்கள்   தலங்கள்   கலைகள்  

 

Link to comment
Share on other sites

ஐயா... விக்கிபீடியாவை முழுமையாக நம்ப முடியாது.. நீங்களூம் ஆக்கங்கள் இணைக்கலாம்.  :D

 

ஆடு வெட்டி மீன் முட்டை அவிச்சு பறை அடிச்சு வேள்வி செய்யுறதுக்கும் சைவத்துக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லுங்க.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Pashupata Shaivism[edit]

Saivism-india-pasupata.png

Pashupata Shaivism: The Pashupatas (Sanskrit: Pāśupatas) are the oldest named Shaivite group.[16] The Pashupatas were ascetics.[17] Noted areas of influence (clockwise) includeGujarat, Kashmir and Nepal.[citation needed] But there is plentiful evidence of the existence of Pāśupata groups in every area of the Indian subcontinent. In the far South, for example, a dramatic farce called the Mattavilāsanaprahasana ascribed to a seventh-century Pallava king centres around a Pāśupata ascetic in the city of Kāñcīpuram who mistakes a Buddhist mendicant's begging bowl for his own skull-bowl. Inscriptions of comparable date in various parts of South East Asia attest to the spread of Pāśupata forms of Śaivism before the arrival there of tantric schools such as the Shaiva Siddhanta.[18]

Shaiva Siddhanta[edit]
Saivism-india-siddhanta.png

Shaiva Siddhanta: Considered normative tantric Saivism, Shaiva Siddhanta provides the normative rites, cosmology and theological categories of tantric Saivism.[19] There is a dualistic dimension to Shaivism, as expounded by Meykandar. The pure, or Shuddha Saivism,however, proclaimed by Rishi Thirumular and his paramparai (guru lineage), is strictly non-dualistic, and proclaims the soul to be at all times one with Shiva. [20] This tradition was once practiced all over India. For example the theologians Sadyojoti, Bhatta Nārāyanakantha and his son Bhatta Rāmakantha (ca. 950-1000 AD) developed a sophisticated Siddhanta theology in Kashmir.[21] However the Muslim subjugation of north India restricted Shaiva Siddhanta to the south,[22] where it merged with the Tamil Saiva cult expressed in the bhakti poetry of the Nayanars.[23] It is in this historical context that Shaiva Siddhanta is commonly considered a "southern" tradition, one that is still very much alive.[24]

Kashmir Shaivism[edit]
Saivism-india-kashmir.png

Kashmir Shaivism: Kashmir Saivism, a householder religion, was based on a strong monistic interpretation of the Bhairava Tantras (and its subcategory the Kaula Tantras), which were tantras written by the Kapalikas.[25] There was additionally a revelation of the Siva Sutras to Vasugupta.[26] Kashmir Saivism claimed to supersede the dualistic Shaiva Siddhanta.[27] Somananda, the first theologian of monistic Saivism, was the teacher of Utpaladeva, who was the grand-teacher ofAbhinavagupta, who in turn was the teacher of Ksemaraja.[28][29] The label Kashmir Shaivism, though unfortunately now widely adopted, is really a misnomer, for it is clear that the dualistic Shaiva Siddhanta was also in North India at one point in time.

Siddha Siddhanta[edit]

Natha Siddha Siddhanta: Founded by Matsyendranatha (ca 800–1000) and expounded by Rishi Gorakshanatha (ca 950), this monism is known as Bhedabheda, embracing both thetranscendent Shiva as well as the immanent Shiva. Shiva is efficient and material cause. The creation and final return of soul and cosmos to Shiva are likened to bubbles arising and returning to water. Influential in Nepal, Uttar Pradesh, Bihar and West Bengal.

Lingayatism[edit]
Saivism-india-vira.png

Lingayatism: Made popular by Basavanna (1105–1167), this version of qualified nondualism, Shakti Vishishtadvaita, accepts both difference and nondifference between soul and God, like rays are to the sun. Shiva and the cosmic force are one, yet Shiva is beyond His creation, which is real, not illusory. God is efficientand material cause. Influential primarily in Karnataka.

Shiva Advaita[edit]
Saivism-india-advaita.png

Shiva Advaita: This monistic theism, formulated by Srikantha (ca 1050), is called Shiva Vishishtadvaita. The soul does not ultimately become perfectly one withBrahman, but shares with the Supreme all excellent qualities. Appaya Dikshita (1554–1626) attempted to resolve this union in favor of an absolute identity—Shuddhadvaita. Its area of origin and influence covers most of Karnataka state.

Shaivism left a major imprint on the intellectual life of classical Cambodia, Champa in what is today southern Vietnam, Java and the Tamil lands. The wave of Shaivite devotionalism that swept through late classical and early medieval India redefined Karnataka and Tamil Nadu. Shaivite worship legitimized several ruling dynasties in pre-modern India, incluidng the Chola and the Rajputs. A similar trend was witnessed in early medieval Indonesia with the Majapahit empire and pre-Islamic Malaya.[30][31] Nepal is the only country in the world where Shaivism is the most popular form of Hinduism.

 

நன்றிகள், யாழ் அன்பு!

 

இதில் சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் சைவத்தைப்பற்றியதே!  இது தான் தமிழனின் மதத்தின் வரலாறு!

 

Shiva Advaita: This monistic theism, formulated by Srikantha (ca 1050), is called Shiva Vishishtadvaita. The soul does not ultimately become perfectly one withBrahman, but shares with the Supreme all excellent qualities. Appaya Dikshita (1554–1626) attempted to resolve this union in favor of an absolute identity—Shuddhadvaita. Its area of origin and influence covers most of Karnataka state.

Shaivism left a major imprint on the intellectual life of classical CambodiaChampa in what is today southern VietnamJava and the Tamil lands. The wave of Shaivite devotionalism that swept through late classical and early medieval India redefined Karnataka and Tamil Nadu. Shaivite worship legitimized several ruling dynasties in pre-modern India, incluidng the Chola and the Rajputs. A similar trend was witnessed in early medieval Indonesia with the Majapahit empire and pre-Islamic Malaya.[30][31] Nepal is the only country in the world where Shaivism is the most popular form of Hinduism.

 

Shaivism is the most popular form of Hinduism!

 

இந்துமதமானது பின்வரும் மதங்களைத் தன்னுள் கொண்டுள்ளது.

 

சைவம், சாக்தம், வைணவம், காணபத்தியம்,காபாலம், காமாரம், சௌரம் என்பன முக்கியமானவையாகும்!

 

சைவம், சிவனை முழுமதற் கடவுளாகக் கொண்டது!

 

அதே போல சாக்தம் சக்தியையும், வைணவம் விஷ்ணுவையும், காணபத்தியம் கணபதியையும் முழுமுதற் கடவுளாகக் கொண்டவை! காபாலம், கபாலங்களை வழிபடுவது!

 

வேதங்கள், செவி வழிக்கதைகளை வைத்து 'ஆரியர்களால்' தொகுக்கப்பட்டவை! இந்தக் கதைகளும், மூலத் தத்துவங்களும், சிந்துவெளி, ஹரப்பா போன்ற இடங்களில் வாழ்ந்தவர்களிடமிருந்து பெறப்பட்டவை! அல்லது அவர்களின் அழிவின் பின்பு திருடப்பட்டவை! :o

 

ஏறத்தாள வேதங்கள் முழுவதுமே, அசுரர்களை (இந்தியாவின் பூர்வீக கறுப்பு நிற மக்களை) ஆரிய இனம், அழிப்பதையே பாடல்களாகக் கொண்டுள்ளது! ஆரியத் தலைவன், இந்திரனின் புகழ் பாடுவதிலேயே அதன் 'உள்ளீடு' முடிந்து போகின்றது! மற்றும்படி மிகுதி முழுவதும், பர தார மணங்களும், ஒருவர் மனைவியை இன்னொருவர் கவர்ந்து செல்வதும், சோம பானம் (ஒரு போதைப்பொருள்? அல்லது வாழ்நாளை நீடிக்கச் செய்யும் ஒரு பொருள்) அருந்துவதுமாகவே கழிகின்றது. ஊர்வசி, ரம்பை, திலோத்துமை,போன்ற ஆடலழகிளை, ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதிலுமே கதையாக உள்ளது! வேதங்களில் வருகின்ற ஒரு 'உருத்திரன்' என்னும் தறுதலையுடன் எமது சிவன் அடையாளப்படுத்தப் படுகிறார்! சூரியனின் மனைவியான சசி தேவிக்கும், இன்னும் ஆறு பேருக்கும் பிறந்த 'ஸ்கந்த' என்பவனோடு எமது முருகன் இணைக்கப்படுகிறார்)

 

பகவத் கீதை எனப்படுவது உண்மையில் வேதங்களின் பகுதியல்ல! அது மிகவும் அண்மைக்காலத்தில் தான் தொகுக்கப்பட்டது! ஆரிய அநியாயங்கள், வருணாச்சிரம தர்மங்களில் உள்ள அநியாயங்கள் எல்லாம் முலாம் பூசப்பட்டு, ஒரு நவீன மதமாக, 'இந்து மதம்' இப்போது தன்னை வெளிக்காட்டுகின்றது! பகவத் கீதையும், வேதாந்தங்களில் ஒன்றாகத் தரமுயர்த்தப்பட்டு உள்ளது! இப்போது பிரமாவின் சிரசில் இருந்து பிறந்தவன் 'பிராமணன்' என்பது மாற்றப்பட்டு, பிராமணன் என்பவன் 'அறிவாளி' என்றும், எல்லோரும் (சூத்திரர்கள் உட்பட) பிராமண நிலையை அடையலாம் என்றும் மாற்றப்பட்டுள்ளது!

ஆனால் நடைமுறையில், எனக்குத் தெரியச் சில பணக்கார வெள்ளைக்காரர்களைத் தவிர, எவரும் பிராமணர்களாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதை நான் அறியவில்லை!

 

சைவத்தின் 'அழகு' அது ஒரு திறந்த புத்தகம்! எல்லோருக்கும், அவரவர் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி வணங்கும் வழிகள் உண்டு! அநேகமான வழிபாட்டு முறைகள், மனித வாழ்வுக்குத் தேவையான 'தினசரி' உடற்பயிற்சிகளும், மனப் பயிற்சிகளுமே!

 

இதை ஏன் இங்கு விளங்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றும் எனக்குப் புரியவில்லை! :o

 

ஆனாலும் எழுத வேண்டும் என்ற உந்துதல் உள்ளது. அதனால் எழுதுகின்றேன்! :D

Link to comment
Share on other sites

a

உண்மையில் இந்த பிரசுரம் காலம் காலமாக வாழும் கத்தொலிக்கரையொ புரட்டஷான் மக்களையோ சைவர்களில் இருந்து பிரிக்கும் நோக்கில் வெளியிடவில்லை. இது முற்று முழுதாக ஜொகொவா,பிலதெல்லியா, பெந்துக்கொஸ் போன்ற மதம் மாற்றும் பிரிவினரையே  குறி வைத்து எழுதப்பட்டது. 

 

இதை வைத்து இங்கு ஒரு மதப் போறோ இல்லை என்றால் சில விசமிகள் விரும்பும் சாதிப் போரையோ யாரும் நடாத்தவேண்டாம்.

 

இஸ்லாத்தில்  பேதம் இல்லாமலா சன்னி முஸ்லிம்கள் சியா முஸ்லிம்கள் என்று அடிபட்டு சாகுரார்கல் முஸ்லிம் நாடுகளில்? தென் ஆசியாவில் முஸ்லிம்களில் ஏழைகள் இல்லையா? ஆபிரிக்க நாடுகளில் முஸ்லிம் ஏழைகள் இல்லையா?

 

சைவ ஆலயங்களில் தமிழ் பூசை என்ற கொள்கை தற்பொழுது எல்லா நலன் விரும்பிகளாலும் முன்னடுக்கப் படுகிறது.

 

கத்தோலிக்க  மதத்தில்   கூட சில நூற்றாண்டுகலுக்கு முன்னர்தான் அவரவர் தாய் மொழியில்  வழிபாடு நடாத்தலாம் என்று சட்டம் கொண்டுவரப் பட்டது. இதற்க்காக உழைத்தவர் யேர்மன் நாட்டை சேர்ந்த பாதிரியார். இவர் யேர்மன் மொழியில் பூசை செய்ய வேண்டும் என்று சொன்ன ஒரே காரனதிட்க்காக ஊரே திரண்டு தெவாலயிதில் இவரை தீ வைத்து கொலை செய்த கருப்பு வரலாறு உள்ளது. இதன் த்டர்சியெ முதலில் போலந்து நாட்டிலும் பின்னர் யேர்மன் நாட்டிலும் பின்னர் உலகமெல்லாம் தங்கள் தாய் மொழியில் வழிபாடு செய்யும் உரிமை கத்தோலிக்கருக்கு கொடுக்கப்பட்டது. இப்பொழுது தமிழர்கள் மீண்டு தங்கள் தாய் மொழியில் வழிபாடு என்று செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறாகள். சைவ சமயத்தில் இன்னும் பல சீர் திருத்தங்கள் பலரால் முன்னெடுக்கப் படுகிறது இது பற்றி வெகுவிரைவில் யாதிய முலாம் பூசும் வேசதாரிகள் அறிவார்கள்.

 

உண்மையில்  எமது சைவத் தமிழர்கள் அன்னை வேளாங்கனி .மாடு மாதா,லூட்ச் மாதா, பசேல் மரியாச்டெஇன் போன்ற கத்தோலிக்க ஆலயங்களுக்கு அதிகம் சென்று வழிபாடு செய்பவர்கள். ஆனால் பிரச்னை  ஏனைய மதம் மாற்றும் பிரிவுகளே .

 

இந்த மதம் மாற்றும் என்னய்யா பிரிவுகளால் சைவர்கள்,இந்துக்கள் மட்டும் அல்ல கத்தோலிக்கரும் மிகவும் பாதிப்படையிறார்கள்  என்பது தான் உண்மை. 

 

இங்கு சிலருக்கு புதியவகை நோய்கள் 2 பிடிச்சிருக்கு ஏதாவது செய்தி இணைத்தால் புளிவாந்தி எடுப்பது இல்லை என்றால் யாதிய வாந்தி எடுப்பது. இத இவர்களாக விடும் வரை சமூகம் திருந்தாது.

 

இராமன் இராவணன் சண்டை தமிழ் இந்திய சண்டை இல்லை. சிவ பக்தனுக்கும் விஸ்ணு பக்தனுக்கும் (சைவ வைணவ சண்டை)நடத்த யுத்தம். இது ஐரோப்பாவில் நடந்த சிலுவைப் போர் (கத்தோலிக்க ,புரட்டஸ்தாந்து சண்டை போன்றது. அரபு,முஸ்லிம் நாடுகளில் இன்னமும் நடக்கும் சியா சன்னி முஸ்லிம் பிரிவினை போன்றது.

 

Link to comment
Share on other sites

என்னுடைய மனத்தில் ஐயனார் என்றோ முருகன் என்றோ இரண்டு தெய்வங்கள் வந்து போவதில்லை. கோபம் வந்து போகும். பொறாமை, குரோதம் என் மனத்தில் வந்து போவதில்லை. எனக்குச் சாதி இருப்பதும், இல்லாதிருப்பதும் ஒன்றே. வாழ்வின் பொருளை சாதி மறைப்பதில்லை. எல்லா உயிரும் இன்ப துன்பகளை அனுபவிப்பதால் மட்டுமே ஆன்ம ஈடேற்றம் அடைகின்ற்ன. ஏழ்மை எனறதில் துன்பம் மட்டும் என்றோ பணம் என்பதில் இன்பம் மட்டும் என்றோ எங்கும் இல்லை. பிறப்பிறப்பின் பலனை அது மாற்றாது. சாதியால் துன்பம் என்றோ, அடிமை குடிமை வைத்தாளுவதால் இனபம் என்றோ இல்லை. எல்லாமே ஒவ்வொருவகை வாழ்க்கை. இதில் எந்தவகை வாழ்க்கையும் ஆன்ம ஈடேற்றத்தை முன்னால் தள்ளுவதோ அல்லது பின்னால் தள்ளுவதோ இல்லை. மனிதனுக்கு மனிதன் நீதி தீர்க்க முடியாது. நீதியை ஏற்றுக்கொள்ள் வைக்கப்படுபவனுக்கு அது இன்னொரு வாழ்க்கை. ஆனால் நீதி தீர்க்க முனைபவன் மனம் மட்டும் வினைகளுக்குள் தன்னை ஆழ்த்துகிறது. சாதியை வைத்து இலாபம் அடையலாம் என்று நினைப்பவன் தன்னை கர்ம வினைகளுக்கு இரையாக்குகிறான். இது பணத்தை வைத்து, பெண்ணை வைத்து வாழ முயல்பவன் போன்றதே. இதில் எந்தப் பேதமும் இல்லை.

 

கடவுள்களுக்கு பின்னால் சொல்லப்படும் கதைகளும், மதங்களும் ஒரே நிலையில்த்தான் இருக்கின்றன. கிறிஸ்தவர்கள் ஜேசு தேவதூதானக உலகம் வந்தார் எங்கிறார்கள்.  இந்துக்கள் சிவன் மோகினியான கிருஸ்ணனின் மீது கொண்ட காதலால் அவள் தொடையில் இருந்து ஐயனார் பிறந்தார் எங்கிறார்கள். இரண்டும் ஒரே நிலையில் இருக்கும் கதைகளே. கிறிஸ்தவனுக்கு தேவதூதான ஜேசு கன்னி மேரியிடம் வந்தான் என்னும் போது பக்தி பிறக்கிறது. இந்துவுக்கு சிவனினதும் பெருமாளினதும் கருணையால் ஐயனார் வந்து உதித்து அவ்ர்களை அசுரர்களிடம் இருந்து காப்பாற்றிய கதையக் கேடக கருணையால் கண்ணீர் மல்கிறது. இந்துக்கு ஜேசுவின் கதை முட்டாள் தனம் போல தோன்றுகிறது. கன்னி குழந்தை பெற்றாளா என்கிறான். அதே நேரம் கிறிஸ்தவனுக்கு சிவனினதும் பெருமாளினதும் ஓரினச்சேர்க்கை பற்றி பேசுவது பாவம் போலப் படுகிறது.  ஆனால் இரண்டின் பலனும் ஒன்றே. சில மனங்களில் சில கதைகள், காட்சிகள், ஒலிகள் பக்தியை தூண்டுகின்றன. மன்ம் அதில் லயித்து உள்ளே அடங்குகின்றது. ஒருதாயின் ஒரு பிள்ளைக்கு வயிற்றுப் போக்கு என்று வைத்துக்கொள்ளுங்கள். மற்றயதிற்கு சாப்பாடு செரிக்காமல் வயிற்றுக் குத்து என்று வைத்துகொள்ளுங்கள். தாய் இரண்டுக்கும் வேறு வேறு மருந்துதான் கொடுப்பாள். வயிற்று போக்கு குழந்தைக்கு வயிற்றை கட்டவும், வயிற்று குத்து குழந்தைக்கு வயிற்று போக்கை தூண்டவும் தான் மருந்து கொடுப்பாள். இறைவனுக்கு யாருக்கு எந்த முறையில் ஈடேற்றம் கொடுக்க வேண்டும் என்ற போதனையை நாம் செய்ய முடியாது.  அவன் சரியான மதத்தில் சரியான உயிரை கொண்டு சென்று ஈடேற்றுவான். அதில் நம் தலையீடு நகைப்பிற்கிடம். எந்த மதமும் பாதை தவறாது. எந்த மதமும் சீர்திருத்தத்தால் பலன் பெறாது. இது சைவ சித்தாந்த கோட்பாடுகள். மனிதன் பூமியில் நடப்பதை மாறுவதாக நினைத்தால் அவன் கடவுளின் தொழிலில் கைவைக்க தெரிந்து கொண்டுவிட்டான் என்பது பொருள். எனவே அத்தகைய அனுமானங்கள் வெறும் விவாதத்திற்கு மட்டும்தான் காணும்.

 

கர்மவினைகளின் பாரத்தை வண்ணானின் அழுக்குத்துணி மூட்டையாக அறிவாளிகள் வர்ணிப்பார்கள். அதில் உண்மை இல்லை. கர்ம வினை அழுக்குத்துணி மூட்டை போன்ற ஒரு உடமை அல்ல.  அது ஒரு இயல்பு போன்றது. இறப்பு பிறப்பை அனுபவித்து தேற்றம் கண்ட ஆன்மா வைத்தியனிடம் இருந்து வந்த நோயாளி போன்றது. அவன் அங்கே தேவையான குடிநீரை,  கஷாயத்தை குடித்து உடம்மை சரி செய்துவிட்டான். இப்போது அவன் ஆரோக்கியமாக இருக்கிறான். ஆனால் எல்லோரும் அதே அளவு இறப்பு பிறப்பால் ஒரேயளவு ஈடேற்றம் அடைவதென்று இல்லை. வண்ணான் இன்று தனது அழுக்குத்துணி மூட்டையை குளத்துக்கு எடுத்து சென்றான் என்று வைத்திருங்கள். அங்கு அவன் முகில் கூட்டம் மூடுவதை கண்டு வீடு திரும்பினான். அதனால் அவன் இன்று செய்த்திருக்க வேண்டிய சலவை நிகழவில்லை. அந்த பிறப்பு இறப்பு வீணானது. அழுக்கு இன்னமும் அங்கே இருக்கு. ஒரு வேளை நாளைக்கு அவன் திரும்பி வரும் போது சூடான வெய்யில் சுவாத்தியமாக இருக்கலாம்.

 

நிச்சயம் நிறையக்கதைகள் எல்லா மதத்திலும் இருக்கு. சிவன் பல மூர்த்தங்கள் எடுத்தாக உண்டு. அர்த்தநாரீஸ்வரர் என்ற மூர்த்தத்தில் எனக்கு பெரிய வாரப்பாடு இல்லை. ஆன்மா ஆண்,பெண் பேதம் அல்ல எந்த இரட்டை நிலையோ இல்லாதது. இந்த இரட்டை நிலையை கடக்காவிட்டால் அத்துவைதம் போன்றவற்றை உணரமுடியாது. பாவ புண்ணியங்கள் மனத்தை கீழ் நிலைக்கு இறக்குவது உண்மையே. இதனால் இரண்டும் இருள் சேர் இருவினயே. அதாவது பசியால் அழும் குழந்தையை பார்த்துவிட்டு ஒரு டொலர் காசை அந்த பிள்ளைக்கு சாப்பிட கொடுக்கும் போதும், பிச்சைக்காரன் சேர்த்த பணத்தை பறித்துக்கொண்டு ஓடும் போதும் மனம் லௌகீய கர்மாவில் சஞ்சரிக்கிறது. மனத்தில் செயல் சேராத நிலையில் நின்று கடமை ஆற்றும் போது அது பக்குவத்தை அடைந்துவிடுகிறது. இதன் போது அது தான் தேடிய நிலையை அடையலாம், இறைவனைக் காணலாம். மோக்ஷ் இன்பத்தை நுகராலாம். எது அந்த மனத்தின் முடிவாக இருக்க போகிறது என்பது அந்த மதத்தின் நிலையை பொறுத்தது. அத்துவைதி அந்த நிலையில் தன்னைதான் கடவுளாக காண்கிறான். அவனுக்கு கடவுளிற்கும் தனக்கும் பேதம் கிடையாது. பௌத்தன் தான் பரிபூரண நிர்வாணியாகியதாக காண்கிறான். சைவன் கைலாயமும், வைஸ்ணவன் வைகுண்டமும் போகிறார்கள். அந்த நிலையில் மரத்தில் பழுத பழம் கீழே விழுவது போல உடல் தனக்கு இனி ஒரு உபயோகம் காணாமல் உயிரில் இருந்து கழன்றுவிடும். அவன் இறப்பை சந்திப்பதில்லை. இறப்பு என்ற சொல் அவனின் அகராதியில் இல்லை 

 

எல்லாமதமும் சமுதாயத்தை சீர் அமைப்பதில்லை. மேற்கத்திய சமயங்கள் துறவறம் என்ற பெயரில் திருமணம் அற்ற வாழ்கையை நடத்துபவை. அவர்கள், இந்த மதங்களின் குருவானவர்கள். ஒருவழியில் தாமாக இறங்கி வந்தோ அல்லது சந்தர்ப்பம் அற்றோ சட்டப்படி திருமண உரிமை மறுக்கப்பட்டவர்கள். இன்றைய பௌத்த துறவிகளினதும் நிலை இதுதான். ஆனாலும் அவர்களில் பலர் மேற்குநாடுகளின் குரு நிலை என்ற சோடனைக்குள் மாட்டுவதில்லை என்பதும் உண்மை. இந்துச் சந்நியாசி வேறு பாதையை பினபற்றுபவன். அவனை மதம் கட்டுப்படுத்தாது. அவன் எந்த சமுதாயத்திற்கும் சார்ந்தவன் அல்ல. இந்தியாவில் இதை சட்டங்களிலும் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் அது அவனையும் மேற்கு நாட்டு குருவுகள் நிலைக்கு இழுத்து செல்வதே அல்லாமல் எந்த பலனும் அற்றது. சன்நியாசி இயற்கையின் வழியில் வாழ்வை ஒடவிடுவான். அவன் காட்டிலும் இருப்பான். வீட்டிலும் இருப்பான். அவன் தன்னை எதனுடனும் இணைக்காததால் உலகோடு ஓடும் புளியம் பழமும் போன்ற ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வாழ்க்கையை நடத்துவான். தனது நோக்கமாக எதுவோ (நிர்வாணமோ, மோட்சமோ, இறைவனைக் காணுதலோ )அதில் அவன் மனம் கண்ணாக இருக்கும். அவனின் இந்த நிலையை அடைக்கோழியின் கண்களுடன் பரமகம்சர் ஒப்பிடுகிறார். கோழி வெளியே சலனமின்றி அமர்ந்திருக்கிறது. அதன் மனம் முழுவதும் உள்ளே அடங்கி அதன் முட்டைகள் மீது குவிந்திருக்கிறது. சன்நியாசி தன் முடிவில் தான் தேடியதை காண்பான். அதன் பின்னர் அவன் உடல் தானாக உதிர்ந்து போகும். அவனுக்கு உடல் உபயோகமற்றது அல்ல, அது சுமை. அதற்கு அவன் காலைக்கடன் கழிக்க வேண்டும், குளிப்பாட்ட வேண்டும், உணவு ஊட்ட வேண்டும். மருந்து தேட வேண்டும். இளைப்பற வேண்டும். இதானால் அவன் தான் அடைந்த உயர் நிலயில் இருந்த்து திருப்பி வந்து வினை சேர் கருமங்களை ஆற்ற வேண்டியிருக்கும். ஆனால் ஜீவன் முத்தர்கள் என்பாரால் தமது உடல் அழிந்து போவதை தடுக்க முடியும். கருமமாற்றா நிலையில் இருந்து உண்ண முடியும், உடுக்க முடியும், உறங்க முடியும். இப்படியான நிர்வாணிகள் பூமிக்கு வந்த தூதர்களாக வாழ்ந்து,  கர்ம வினையாற்றாமல், சீடர்கள் மீது கருணைகாட்டி அவர்களையும் தாங்கள் அடைந்த நிலைக்கு அழைத்து செல்ல முடியும். த்ங்களின் அனுபவத்தை, பள்ளி ஆசிரியன் போன்று அறிவால் வடித்துக் கொடுக்காமல், பங்கிட்டு பிரித்து எடுத்து சீடனுக்கு கொடுக்க முடியும். இவர்கள் மகா குருக்களாக சீஷ்யர்களின் ந்லன் கருதி உயிரை உடலில் தக்க வைத்திருப்பார்கள். 

 

சமுதாயத்தை கவனிக்க வேண்டியது சட்டங்கள் என்பது புரிகிறது. இதுதான் ரோமன் சட்டங்களுடன் கலந்து போன கிறிஸ்தவத்தில் காண்ப்படும் பிரச்சனை. நாகரீகமாக நடந்து கொள்ளும் போது இறைமனம் அற்று போகிறது. அந்த நாகரிகமான நடத்தை ஒரு வகை கிப்பொகிறேசி நடத்தை. மனத்தில் இருக்கும் சகலதும் வெளியான பின்னரே மனத்தில் இறை நிலை குடிகொள்ளும்.(அப்போது நாகரிக நடத்தை எங்கிருக்க முடியும்?) எத்தனை நித்தியானந்தா பிறந்தாலும் சரியான மனம் தளம்புவதில்லை. இதைத்தான் பாரத கதையில் குடும்ப பெண்ணாக இருந்து கொண்டு புலையனை குருவாக்கி ஞனம் பெற்று அதை முனிவருக்கு உபதேசித்த பெண்ணின் கதை சொல்கிறது. 

Link to comment
Share on other sites

இல்லாத மதத்தின் பெயர் இந்து!

 
இல்லாத மதத்தின் பெயர் இந்து! - ம.செந்தமிழன்

’பொய் உரைப்பது, அதையே கொள்கையாக்குவது, அதையே தத்துவமாக்குவது, அதையே நடைமுறைப்படுத்துவது, ஏற்க மறுப்பவர்களை அச்சுறுத்துவது அல்லது அரவணைத்துக் கொள்வது’ – ’இந்து தர்மம்’ என்றால் என்னவென விளக்கம் கேட்டால், இதுவே எனக்குத் தெரிந்த இந்து தர்மம்.

இந்து மதம் என ஒன்று இப்பொழுதும் இல்லை, முற்பொழுதும் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவே ’இந்து தேசம்’ எனப் பொய் உரைத்து, அதையே கொள்கையாக, தத்துவமாக, நடைமுறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார்களே, இதுவே அவர்களது சிறப்பு.

சிந்துவெளியைக் கண்ட கிரேக்கப் பயணிகள் ’சிந்து’ எனும் தமிழ்ச் சொல்லை அவர்கள் மொழி உச்சரிப்பிற்கேற்ப ’இண்டு’ (sindhu – indu) என்றனர். திருச்சியை ஆங்கிலத்தில் trichy எனவும், தஞ்சாவூரை tanjore எனவும் உச்சரிப்பது போல.

சந்திரகுப்த மௌரியனது கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் தமது நூலுக்கு வைத்த பெயர், ‘இண்டிகா’. சிந்துநதி நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு அழைத்தனர். இந்திய நிலப்பரப்பின் கடந்த 5000 ஆண்டுகால வரலாற்றில், சிந்துவெளி நாகரிகத்தை ஒதுக்கி விட்டு எவராலும் இந்திய அரசியலைப் புரிந்துகொள்ள இயலாது.

சிந்துவெளியில் வாழ்ந்தோர் தமிழர்களே, என்பதை அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், இரா.மதிவாணன் உள்ளிட்ட சமகால அறிஞர்கள் நிறுவியுள்ளனர். சிந்துவெளி எழுத்துகள் வாசிக்கப்பட்டு, அவை அனைத்துமே தூய தமிழ்ச் சொற்கள்தாம் என்பதும் தெள்ளத் தெளிவாக உரைக்கப்பட்டுவிட்டது.

‘குயவன், கண்ணன், தச்சன், அந்தனன், அவ்வப்பன், அவ்வன், அட்டன்’ உள்ளிட்ட சொற்கள்தான் சிந்துவெளிச் சித்திர எழுத்துகளில் உள்ளன. (Dravidian Indus valley language – prof. R.Mathivanan / thamizh chanror peravai publication)

ஆரியர்கள் பிழைப்பு தேடி சிந்துவெளிப்பகுதிக்கு வந்தவர்கள். வரலாற்றாசிரியர் ராகுல் சாங்கிருத்யாயன் வார்த்தைகளில் கூறுவதானால், ‘ஆரியர்கள் வந்தபோது அவர்களிடம் குதிரைகளைத் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை’. (ரிக்வேத கால ஆரியர்கள் / என்.சி.பி.எச்)

சிந்துவெளித் தமிழர்களோ, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி வாழ்ந்தனர். சிந்து ஆற்றிலிருந்து பெரும் படகுகளில் சரக்குகளை ஏற்றி, இன்றைய அரபிக் கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்ளுக்கு மாற்றி, கண்டம் விட்டு கண்டம் வணிகம் செய்தவர்கள். ரிக் வேதம் படித்தால், ஆரியர்களது காட்டுமிராண்டித்தனமான வாழ்வியலை எவராலும் புரிந்துகொள்ள இயலும்.

அவர்கள் சிந்துவெளிக்கு வந்தபோது, அவர்களுக்கென சமயமும் இல்லை, கடவுளும் இல்லை. அவர்களது வழிபாடுகள் எல்லாம், அக்னி, வாயு, வருணன் போன்ற சிறு தேவதை வழிபாடுகளே. தேவர்கள் / தேவதைகள் எல்லாரும் வானில் இருப்பதாக அவர்கள் நம்பினர். நெருப்பில் பலி பொருட்களைப் போட்டு எரித்தால், புகை வழியாக வானில் உள்ள தேவர்களுக்கு அப்பலிகள் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்தவர்களே ஆரியர்களின் முன்னோர்கள். குதிரைகளையும், அவ்வப்போது மனிதர்களையும் இவ்வாறு தீயில் போட்டு எரித்து ’வழிபட்டனர்’. இதுவே ஆதிகால ஆரியரது சமய நடைமுறை.

இப்போதும், பிராமணச் சடங்குகளில், தீ வளர்த்து துணிகளைப் போட்டு எரிப்பதைக் காணலாம். இந்தத் துணிகள் வானில் உள்ள தேவதைகளுக்கு புகையாகச் சென்று சேரும் என்பதே பொருள். அவர்களது ஆதி மந்திரங்கள், குறிப்பாக ரிக் வேத மந்திரங்கள், இதைத்தான் உரைக்கின்றன.

ஆனால், தமிழர்களது நாகரிகம், ஆதிச்சநல்லூர் ஆய்வுகளின்படி, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. குமரிக்கண்ட ஆய்வுகளின் வழியே தமிழர் வரலாற்றைக் கண்டால், ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதைச் சமகால ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மயன் எனும் மாமுனிவர் உரைத்தவையே, ’பிரணவ வேதங்கள்’ எனும் ஆதி நால்வேதங்கள் என்பதை, ஜெஸ்ஸி மெர்கே எனும் அமெரிக்க ஆய்வாளர் நிறுவியுள்ளார். மாமுனி மயனது வேதங்கள், பிரபஞ்சத் தோற்றம் குறித்த வியக்க வைக்கும் தகவல்களைக் கொண்டுள்ளதை, ஜெஸ்ஸியின் கட்டுரைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது.

இந்த மாமுனி மயனைத்தான், தேவதச்சன் மயன் என சமஸ்கிருத இதிகாசங்கள் அழைத்தன. மயன் எனும் சொல்லே தூய தமிழ்ச் சொல்தான். மயன் உரைத்த வேதங்களைப் பிற்காலத்தில் ஆரியர்கள் தமது மொழிகளில் எழுதிக் கொண்டனர். மயனது ஆதிவேதம், ஏறத்தாழ 13,500 ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது என்பது ஜெஸ்ஸி மெர்கேவின் கருத்து. மயன் குமரிக் கண்டத்தில் இன்றைய தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்ந்தவர். ஆலமரத்தடியில் தவம் செய்து, சிவனிடமிருந்து வேதங்களைக் கற்றதாக மயன் உரைக்கிறார். இதிகாசங்களிலும் ஏறத்தாழ இக்கருத்தையே ஆரியர்கள் பதிவு செய்தனர்.

ஆனால், அவர்களது வழக்கமான கற்பனைக் கோட்டைகளை மயன் மீதும் கட்டி வைத்து, அவர் ’ஆகாயத்தில் கோட்டை கட்டினார்’ என்றெல்லாம் எழுதி வைத்துவிட்டனர். இதனால், இச்செய்திகளே பொய் என்னும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது.

குமரிக் கண்டம், ஆதித்தநல்லூர், சிந்துவெளி, சங்ககாலம், பிற்காலச் சோழர் காலம் ஆகிய பல்லாயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில், தமிழர்கள் தமது சமயத்தை ‘இந்து மதம்’ என ஒருபோதும் அழைத்ததே இல்லை.

பிரபஞ்சத் தோற்றத்தைப் படிப்படியான வளர்ச்சிகளுடன் தெளிவாக உரைத்த பரிபாடல் ‘மாயோன்’, ‘முருகவேள்’ ஆகியோரைத்தான் வழிபட்டது. தொல்காப்பியம் ‘நிலமும் பொழுதுமே’ (time and space) முதற்பொருள் என்றது. ஐந்திணைகளுக்கும் ஐந்து கடவுளர்களைத் தொல்காப்பியம் பதிவு செய்தது. சங்க இலக்கியத்தில் எண்ணற்ற பாடல்கள் ‘ஆலமர் செல்வன்’ என சிவ வழிபாட்டு பதிவாகியுள்ளது. சிவன், திருமால், முருகவேள், வேலன், கொற்றவை, காளி, இந்திரன் உள்ளிட்ட தெய்வங்கள் தமிழர் வரலாற்றில் தொன்று தொட்டு வணங்கப்பட்டு வருகின்றன.

பல்லவர், களப்பிரர் காலத்தில் ஆரியச் சமயங்களான சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் திணிக்கப்பட்டபோது, சிவனியமும், மாலியமும் பரவித் தழைத்தன.

பிற்காலச் சோழர்கள் சிவனியத்தை வளர்த்தெடுத்தனர்.

பிற்காலச் சோழர் காலம் வரைக்கும், தமிழகத்தில் எந்தக் கல்வெட்டிலும், ஓலைச் சுவடியிலும், மட்பாண்டங்களிலும், இன்னபிற சான்றுகளிலும் ‘இந்து’ எனும் சொல்லே இல்லை. தமிழர்கள் தம்மை, ஒருகாலத்திலும் இந்துக்களாக எண்ணியதே இல்லை. ஏனெனில், இந்து என்று ஒரு மதம் உண்மையில் இல்லை. அது, ஆரியர்களின், குறிப்பாக ஆரிய பிராமணர்களின் கற்பனைக் கோட்டை.

கணிதக் கணக்கீடுகளால் பிரபஞ்சத்தை விளக்கிய மெய்யியல் எண்ணியம் (சாங்கியம்) என்பதாகும். கபிலர் எனும் தமிழ் அந்தணர் வழியாக உரைக்கப்பட்ட வேதம் இது. கபிலை நிறம் என்பதே சாம்பல் வண்ணம்தான். ஆனால், கொஞ்சமும் சங்கடம் இன்றி, ’ரிஷி கபிலர் அருளிய ஸாங்க்ய தத்வம்’ என்று கபிலரின் சாங்கியத்தை நூலாக வெளியிடுகின்றன ஆரிய பிராமண அமைப்புகள்.

கீதையும் இவ்வாறே இவர்களால் திரிக்கப்பட்டது. கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம், ‘கபில முனிவரின் சாங்கியத்தை உனக்கு உரைக்கிறேன்’ என்கிறார். கபிலரின் சாங்கியத்தோடு, தமது ஆரிய பிராமணிய இடைச் செருகல்களை இணைத்து, கீதையின் உண்மையான வடிவத்தைச் சீரழித்துவிட்டன இவ்வமைப்புகள்.

கண்ணன் எனும் சொல் சிந்துவெளி எழுத்துகளில் பல்வேறு இடங்களில் உள்ளது. கண்ணன் கருப்புத் தமிழரே அன்றி, சிவப்பு ஆரியர் அல்ல. இராமனும் கருப்புதான். இன்றைக்கு வழக்கில் உள்ள இராமாயணமும், பாரதமும் வெகு பிற்காலத்தில்தான் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்கு முன், அவை தமிழில் இருந்திருக்க வேண்டும். சான்றாக, முதற் சங்கப் புலவர்களில் ஒருவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்பதாகும். இவரே பாரதத்தைத் தமிழில் பாடிய புலவர்.

சங்ககால சேர மன்னர்களில் ஒருவர் பெயர், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’ என்பது. பாரதப் போர் நடந்தபோது, படையினர் அனைவருக்குமே இம்மன்னர் உணவு வழங்கினார் என்பதால், இப்பெயர் வந்தது.

தமிழில் பாடப்பட்ட மூல பாரத, இராமாயண நூல்கள் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே, ஆரிய பிராமணர்கள் தமக்கு வசதியாக மொழிமாற்றம் செய்த நூல்களை மட்டும் வைத்துக் கொண்டு வரலாற்றைத் தவறாகக் காணும் நிலையில் உள்ளது தமிழ் இனம்.

பிற்காலத்தில் தோன்றிய பிராமணிய - வைதீக மெய்யியலாளரான ஆதி சங்கரர் தமது ’சௌந்தர்ய லஹரி’யில், பாடியவை அனைத்துமே, சிவன் – சக்தி ஆகிய தமிழர் மூலக் கடவுளரைப் போற்றிய பாடல்களே. ஆதிசங்கரர் உமையம்மை மீது ஆழமான பற்று கொண்டவர். ’சௌந்தர்ய லஹரி’ சிவனைக் காட்டிலும் அம்மையின் மீது அதிக ஈடுபாட்டுடன் பாடப்பட்டது.

இப்பாடல்கள், திருமூலரது திருமந்திரத்தை ஒட்டி இயற்றப்பட்டவை என்பதை, இரு நூல்களையும் படிக்கும் எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள இயலும்.

இன்றைக்கும் இந்திய நிலப்பரப்பெங்கும், வழிபடப்படும் தெய்வங்கள் தமிழர் தெய்வங்களே!

சிவன், திருமால், முருகன், காளி, கண்ணன், இராமன் ஆகிய தெய்வங்களை விட்டால், ஆரியர்களுக்கு வணங்குவதற்கு கடவுளே இல்லை. விநாயகர், தெய்வானை போன்ற வடக்கிந்திய கடவுளரும் கூட, சிவன் குடும்பத்துடன் இணைந்துதான் தெய்வநிலை அடைய இயலும் நிலை உள்ளது.

ஆரியரது ஆதி தெய்வங்களான, பிரம்மன், அக்னி, வாயு ஆகியோருக்குக் கோயில்களே இல்லை. விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம்.

இந்த நிலையில், ’இந்து’ எனும் சொல்லால் தமிழர்களை அழைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்றைக்கு இந்தியச் சட்டத்தின்படி, ‘எவரெல்லாம் கிறித்தவர் இல்லையோ, இஸ்லாமியர் இல்லையோ அவரெல்லாம் இந்து’ ஆவர். ’எதுவெல்லாம் சாம்பார் இல்லையோ, சட்னி இல்லையோ அதுவெல்லாம் கருவாட்டுக் குழம்பு’ என்பதுபோல.

புத்தம், சமணம் ஆகிய வைதீக எதிர்ப்புச் சமயங்களும் கூட இந்துசமயத்தின் பிரிவுகள்தான் என்பதே சட்டம்.

சித்தர்களும், அந்தணர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், எண்ணற்ற மெய்யறிவாளர்களும் தவத்தால், வாழ்வியலால், ஆய்வுகளால் உணர்ந்து உரைத்த சிவனிய, மாலிய சமயங்களும் இந்து மதத்தின் பிரிவுகளே என்பது சட்டம்.

வைணவக் கோயில்களில் அர்ச்சகராவதற்கு சாதி ஒரு நிபந்தனையே இல்லை என்பதே வைணவ ஆகமத்தின் விதி. வைணவ ஆகமத்தின்படி சாதி கேட்பதே பாவம். சிவனிய ஆகம விதிகளும் பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்று கூறவே இல்லை. ஆனால், ’இந்து’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, பிராமணர்கள் இந்த இரு கோயில்களையும் வசப்படுத்திக் கொண்டனர்.

உண்மையில், இக்கோயில்களைக் கட்டிய மன்னர்களும் இந்துக்கள் இல்லை, உள்ளே இருக்கும் கடவுளரும் இந்துக்கள் இல்லை, கோயிலை வடிவமைத்த சிற்பிகளும் இந்துக்கள் இல்லை.

தமிழர்களுக்கென பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. அவ்வராலாற்றில் பிரபஞ்சத் தோற்றம், வாழ்வியல் குறித்த தத்துவங்கள் உண்டு. பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி உரைக்காத சமயமே தமிழர்களிடம் இருந்ததில்லை. நம்மைப் பொறுத்தவரை சமயம் என்றால், அதன் மெய்யியல் அணுவையும் அண்டத்தையும் பற்றிய அறிவியல் வழிப்பட்ட விளக்கம் தருவதாக இருக்க வேண்டும்.

தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்ரியன் என்ற சுய நல வெறி பிடித்த கட்டுக் கதைகள் தமிழர்களால் எழுதப்பட்டவை அல்ல. இவற்றுக்கும் தமிழர்களுக்கும் வரலாற்று வழித் தொடர்புகள் ஏதும் இல்லை.

சுருங்கச் சொன்னால், தமிழர்கள் இந்துக்கள் அல்லர்!

ஆகவே, கோவிலுக்குச் செல்வது, சித்தர்களைப் போற்றுவது, ஓக முறையில் உடலை, மனதைப் பேணுவது, தவம் இயற்றுவது ஆகிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போர், இவை அனைத்தும் தமிழர் மரபுப் பங்களிப்புகளே என்பதை உணர வேண்டும். இச் செயல்கள் அனைத்தும் இந்துத்துவ நடைமுறைகள் எனக் கூறுதலும் பழித்தலும், வரலாற்றுக்குச் சற்றும் பொருத்தமற்ற, அடிப்படையற்ற அவதூறு ஆகும்.

நாத்திகராக இருக்கலாம். ஆனால், தமிழர் சமயங்களின் பெருமிதங்களையும், வழிபாட்டு உரிமைகளையும் ’இந்து’ எனும் பிராமணிய அமைப்புக்குத் தாரை வார்த்துவிட வேண்டாம். ஏனெனில், இதைத்தான் கடந்த சில நூற்றாண்டுகளாக பிராமண அமைப்புகளும் செய்து வருகின்றன.

- ம.செந்தமிழன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சரி.. பொன்மலர்.
 
ஒரு சிறிய திருத்தம். 
 
 
சைவத் தமிழரே விழித்தெழுங்கள்.

 

 

சாதி என்ற தூக்க மாத்திரை சாப்பிட்ட எந்தவொரு சைவத் தமிழனாலும் விழித்தெழ முடியாது.!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மனதைப்பற்றி கதைக்க முற்பட்டால்..

நீங்கள் உடைகளைப்பற்றிக் கதைக்கிறீர்கள்!

 

நான் கடவுளைப்பற்றிக் கதைக்க முற்பட்டால்..

நீங்கள் கடவுளைச் சுற்றி இருப்பவர்களைப்பற்றி விளக்கம் சொல்கிறீர்கள்!

நேர்சுக்குப் படித்தவன் வைத்தியன் அல்ல... அதேபோல பார்வையாளனோ விமர்சகனோ கடவுளை அறிந்தவனாக மாட்டான்.

 

யாவற்றுக்கும் அததற்கேற்ற படிப்பினையும் அனுபவமும் தேவை.

 

எனது அனுபவத்தின்படி.. எனது கடவுளை வணங்கியவாறு விமானம் ஏறினேன்... கடவுள் செயலால் நல்லாய் இருக்கிறேன்.

 

அதனால்.. எனது சமயத்தை எனக்கு முன்னால் நின்று எவராவது இழிவு செய்தால்... தென்னம்பாளையும் மலவாளியும் பக்கத்தில் இருந்தால்.. தோய்த்தடிப்பேன்.

 

கடவுளை சுற்றி இருப்பவர்கள்தான் கடவுளை பிரதிபலிப்பவர்கள்.
அவர்களுடைய கற்பனைதான் கடவுளாக இருக்கிறார்.
கடவுளை காணாதவரை .........
கடவுளை பற்றி விமர்சிக்க முடியாது.
 
கடவுளை சுற்றி இருப்பவர்கள் எங்கள் கண் முன்னே இருக்கிறார்கள்.
என்ன செய்கிறார்கள் என்பதை எமது கண்முன்னேயே செய்கிறார்கள்.
இந்த அடாவடி தனங்களை அவர்கள் கைவிட வேண்டும் என்றுதான் எழுதுகிறேன்.
 
நீங்கள் எந்த வாளியால் யாரை அடித்தால் எனக்கு என்ன?
எனது வீட்டிற்குள் இருக்கும் இந்துமதம் என்ற சாக்கடையை துடைப்பத்தால் அடித்து சுத்தம் செய்வது 
என்பது கடவுளுக்கு நான் செய்யும் சிறு தொண்டாக நினைக்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மனதைப்பற்றி கதைக்க முற்பட்டால்..

நீங்கள் உடைகளைப்பற்றிக் கதைக்கிறீர்கள்!

 

நான் கடவுளைப்பற்றிக் கதைக்க முற்பட்டால்..

நீங்கள் கடவுளைச் சுற்றி இருப்பவர்களைப்பற்றி விளக்கம் சொல்கிறீர்கள்!

நேர்சுக்குப் படித்தவன் வைத்தியன் அல்ல... அதேபோல பார்வையாளனோ விமர்சகனோ கடவுளை அறிந்தவனாக மாட்டான்.

 

யாவற்றுக்கும் அததற்கேற்ற படிப்பினையும் அனுபவமும் தேவை.

 

எனது அனுபவத்தின்படி.. எனது கடவுளை வணங்கியவாறு விமானம் ஏறினேன்... கடவுள் செயலால் நல்லாய் இருக்கிறேன்.

 

அதனால்.. எனது சமயத்தை எனக்கு முன்னால் நின்று எவராவது இழிவு செய்தால்... தென்னம்பாளையும் மலவாளியும் பக்கத்தில் இருந்தால்.. தோய்த்தடிப்பேன்.

 

அது உங்களுடைய சொந்த அனுபவம்.
 
தாம் வணங்கும்  கடவுளின் பெயரால்  துன்புறுத்தபட்டு வீதியில் திரியும் மனிதர்களை நான் 
கண்டிருக்கிறேன் இது எனது சொந்த அனுபவம்.
 
இந்த அடாவடி தனங்களை மதம் என்று சொல்லி மழுப்பிவிட முடியாது.
இந்த கொடூரங்களை மதம் என்று மூடிவிட்டு இனியும் கும்பிட்டு கொண்டு இருக்க முடியாது.
 
இந்துமதம் என்ற சாக்கடை .............
சிறுவயதில் எனது சக மாணவிகளாக இருந்தவர்களை சாதி என்று சொல்லி அவர்களுக்கு செய்த 
அநியாங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். துன்பம் தாங்காது படிப்பை முறித்து வீடுகளில் தங்கியவர்களை நேரில் கண்டு இருக்கிறேன்.
 
இந்த சாதி வெறி பிடித்த பேயை எனது சமூகத்தில் இருந்து விரட்டி  அடிப்பது என்பது.
வள்ளியை மணம்  முடித்த முருகனுக்கு செய்யும் ஒரு சிறு தொண்டு என்று எண்ணுகிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் சைவபாடசாலைக்கு மாணவர்கள் இல்லை என நிர்வாகிகள் அழுகின்றனர்,,,,,,,,அதே சமயம் சாய் பாபாவின் பாலவிகாஸ் என்ற பாடசாலைக்கு மாணவர்கள் படை எடுத்து செல்கின்றனர்....அங்கு சென்று தெலுங்கு,கிந்தி,சமஸ்கிறுத மொழிகளில் பஜனை பாடுகின்றனர் ,.....சைவபாடசாலையில் தேவாரம் பாட மாணவர்கள் இல்லை....

Link to comment
Share on other sites

  • தமிழ்மொழியின் மூலம்தான் கடவுளர்கள் நேரில் வரவழைக்கப் படுகிறார்கள். மனிதர்களாகப் பிறப்பெடுக்கும்படிச் செய்யப் படுகிறார்கள், மனிதர்களைச் சந்திக்கும்படி செய்யப்படுகிறார்கள், மனிதர்கள் தாங்கள் விரும்பும் கடவுளர்களைச் சந்திக்கிறார்கள், மனிதர்கள் கடவுளர்களாகவே மாறுகிறார்கள்.

இதன் சான்றாக வாந்தவர்களே 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் 96 தொகையடியார்கள், இராமலிங்க அடிகள் பட்டினத்தார் போன்றோர்

  • தமிழ்மொழியில்தான் மனிதனைக் கடவுளாக்கும் பூசைமொழி இருக்கின்றது.

 தமிழில் தான் மந்தரம், மந்திரம், மந்திறம், மாந்தரம், மாந்தரீகம் என்று இருக்கிறது

  • தமிழ் எழுத்துக்கு அருளாற்றல் விளைவித்துத் தரும் ஆற்றலும், காற்று கருப்பு பேய் பிசாசு பில்லி சூன்யம் ஏவல் செய்வினை வைப்பு கழிப்பு மருந்து கண்ணேறு முதலியவற்றின் பாதிப்புக்களைத் தடுத்து நிறுத்திடும் ஆற்றலும் இருக்கின்றன.

கோயில்களில் உள்ள சக்கரங்கள் அனைத்துமே தமிழில் தான் எழுதப்பட்டுள்ளது

  • இந்துக் கோயில்கள் அனைத்திலும் கடவுளர்கள் வாழுகின்றார்கள்.
  • பல தலைகளோடும், பல கைகளோடும், வியப்பான மனித வடிவோடு காணப்படுகின்ற கடவுளர் சிலைகள் கருத்து விளக்கத்திற்காக (கார்ட்டூன் போன்று) உருவாக்கப் பட்டனவையே.
  • இன்றுள்ள சாதிக் கொடுமைகளும், தீண்டாமைக் கொடுமைகளும், வருணாச்சிரம தரும வெறிகளும், ஏற்றத் தாழ்வுகளும் ஆதிசிவனார் முத்தமிழ் மொழியில் அருளியுள்ள வேதத்தில் இல்லை, இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
  • கலியுகம் பிறந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நம் நாட்டுக்கு வந்திட்ட அன்னியர்களால், பிறமண்ணினர்களால் சமசுக்கிருதம் என்ற மொழியில் நாராயணர் என்ற கடவுள் கூறியதாகக் கூறப்படும் ஹிந்துவேதத்திலும் ஹிந்துமதத்திலும்தான் சாதி ஏற்றத் தாழ்வுகள், சாதிப் பாகுபாடுகள், தீண்டாமைகள், வருணாசிரம தருமங்கள், சனாதனக் கொள்கைகள், தேவதைக் கதைகள், அதிசயமான புராணங்கள், பயனில்லாத சடங்குகள், குழப்பமான தத்துவங்கள்… முதலியவைகள் இருக்கின்றன.

இந்து மதத்தில் முதலாளித்துவமும், மடமையும், ஏமாற்றும், சுரண்டலும், பொய்யும், புளுகும், ஆபாசமும் கலந்து உருவாக்கப்பட்ட கலப்பட மதம்தான் இன்று நாட்டு வழக்கில் கூறப்படும் ஹிந்துமதம். இதன் தலைவர்கள் பிறாமணர்களே; இதன் மொழி சமசுக்கிருதமே; இதன் ஆயுள் மூவாயிரமாண்டுகளே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நீங்கள் எழுதிய கருத்து மூலம் உதவி செய்து விட்டு மதம் மாற்றுவதில் தவறில்லை என்கிறீர்கள்.

போரில் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் எனும் போது அவர்கள் தாமாக சென்று தேவாலயத்தின் முன் நின்றிருக்க மாட்டார்கள். அவர்களை இவர்களாக கண்டெடுத்திருப்பார்கள் அல்லது யாராவது தேவாலயத்தில் ஒப்படைத்திருப்பார்கள் என நினைக்கிறேன். சைவ சமயத்தவர்கள் தமது சமயம் சார்ந்த அமைப்பினூடாக உதவி செய்கிறார்களா இல்லையா என்பது இரண்டாவது விடையம். ஆனால் தனிப்பட்ட முறையில் உதவி செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். கிறிஸ்தவர்களுக்கும் உதவி செய்கிறார்கள். அதற்காக மதம் மாற்றி விட்டு உதவி வழங்கவில்லை.

தூயவன் அண்ணாவும் அப்பிள்ளைகளுக்கு உதவி செய்திருக்கிறார். அதை விட வேறு நபர்கள் மூலம் அப்பிள்ளைகளை பொறுப்பேற்று பார்க்க சம்மதித்திருக்கிறார்.

உண்மையில் தேவாலயத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது தான் நோக்கமாக இருந்தால் அவரவர் மதத்திலேயே இருக்கத்தக்கதாக உதவியை செய்ய வேண்டும். அப்பிள்ளைகளை மதம் மாற்றியது பிழை. மதம் தான் மாற்றி விட்டார்கள் என்றால் அவர்களை வேறு நபர்கள் பொறுப்பேற்க வரும்போது தர முடியாது என கூறுவது உங்களுக்கு சரியாக தோன்றுகிறதா? ஆக மொத்தத்தில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனநிலையிலும் பார்க்க அவர்களை மதம் மாற்ற வேண்டும் என்ற மனநிலையில் தான் அவர்கள் உள்ளார்கள். (எல்லோரையும் குற்றம் சாட்டவில்லை. இப்படி நடப்பவர்களை குற்றம் சாட்டுகிறேன்.)

இன்று வடகிழக்கில் விகாரைகள் அமைக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. நாளைக்கு கிறிஸ்தவ சிறுவர்களை பௌத்த சமயமாக மாற்றி விட்டு இவர்கள் எமது விகாரைக்கு முன் வந்து நின்றார்கள். அதனால் மதம் மாற்றினோம் என்று சொன்னால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டால் ஆச்சர்யமில்லை.

 

ஒரு பாதிரியார் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு கிறிஸ்தவ மதம் பற்றி சொல்லி கொடுக்கவில்லை என்றால் 
அவர் கிறிஸ்தவத்தை நம்பவில்லை என்றே நான் பொருள் கொள்கிறேன்.
கிறிஸ்தவ மதத்தை முழுமையாக நம்பி அதுதான் முழுமுதல் கடவுள் என்ற பின்பே ஒருவன் பாதிரி ஆகிறான்.
அதுதான் முழுமை என்று நம்பியவன் ............. அதுதான் மனித வாழ்வை மேம்படுத்தும் என முழுமையாக நம்பியவன். சக மனிதர் எலோரும் கிறிஸ்தவத்தை பின்பற்றி சொர்கத்தை எட்ட வேண்டும் என்றே விரும்புவான். அப்படி இல்லாத பட்சத்தில் அவனுடைய பாதிரி என்ற நிலை கேள்விக்கு உள்ளாக்க பட வேண்டும்.
தேவாலயத்திலேயே வந்து நிற்கும் ஒரு சிறுவனை அவன் கிறிஸ்தவன் ஆக்கவில்லை என்றால் ...?
அது பெருத்த அயோக்கியத்தனம். தான் மட்டுமே சொர்கத்தை அடைய வேண்டும் என்ற சுய நிலை சிந்தனை.
 
இத்தனை இந்து கோவில் உள்ள நாட்டில் .............
போரால் பதிக்க பட்ட சிறுவர்களை கூட்டி  சென்று விடுவதற்கு என்று ஒரு இந்து கோவில் ஏன் இல்லை?
 
ஏன் தேவாலயத்தில் கொண்டு சென்று விடுகிறீர்கள் ?
இதனை பெரிய நல்லூர் கோவிலில் 15 சிறுவர்களை பராமரிக்க இடவசதி இல்லையா ? அல்லது மன வசதி இல்லையா ??
 
எங்களிலும் .......... எமது மதத்திலும் சேறை வாரி பூசி திரிந்து கொண்டு ............. அடுத்தவன் பற்றி கதைக்க என்ன இருக்கிறது ?
 
கிறிஸ்த்தவம் புனிதம் இல்லை.
தமிழர் மீது திணிக்க பட்ட ஒரு அடாவடி தனம்.
ஆனால் எம்மீது அழுக்கை சுமந்துகொண்டு அடுத்தவனை பற்றி பேச ஏதும் இல்லை.
எமது மதத்தில் உள்ள குறைகளை நீக்கினால் ............ யாரும் ஏன் அங்கு போக போகிறான்?
போவதற்கு வீதியை போட்டு விடுவதே நாங்கள்தான். பின்பு போனவர்களை அன்போடு அரவணைக்கிறார்கள்  என்றால் எப்படி?
அது ஒரு குற்றமா ??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் சைவபாடசாலைக்கு மாணவர்கள் இல்லை என நிர்வாகிகள் அழுகின்றனர்,,,,,,,,அதே சமயம் சாய் பாபாவின் பாலவிகாஸ் என்ற பாடசாலைக்கு மாணவர்கள் படை எடுத்து செல்கின்றனர்....அங்கு சென்று தெலுங்கு,கிந்தி,சமஸ்கிறுத மொழிகளில் பஜனை பாடுகின்றனர் ,.....சைவபாடசாலையில் தேவாரம் பாட மாணவர்கள் இல்லை....

 

நீங்கள் சிலுக்கு ஸ்மிதாவிட்கு ஒரு கோவில் கட்டி பாருங்கள் ....
எங்கு கூட்டம் அதிகம் வருகிறது என்று.
 
வெறும் பித்தல் ஆட்டங்களுக்கு காவடி ஆடியவர்கள் நாங்கள். அதன் பலனை இனி இப்படிதான் அனுபவிக்க வேண்டும். பிள்ளைகள் இப்போ கேள்விகள் கேட்கிறார்கள் ... எங்களிடம் விடைகள் இல்லை.
அவர்கள் கொள்ளையடிக்க திட்டம் வகுத்து தொடங்கியவர்கள் ...
எல்லா கேள்விக்கும் விடை வைத்திருக்கிறார்கள்.
 
புதுசா எதையும் பின்பற்றுவது என்றால் ............. பள்ளிக்கூடம் போய்  வந்த மேட்டுக்குடியினருக்கு மிகவும் குளிர்ச்சியான விடயம். படித்தவனுக்குத்தான் அது புதுசா தெரியும். 
Link to comment
Share on other sites

சரி இந்துமதத்தில் சாதியம் பிடிக்கவில்லை என்று மதம் மாறினவன் தன்னிலும் பார்க்க குறைந்த ஜாதியில் இருந்து பெண்/பிள்ளை எடுதிருக்க்கிரார்களா?

யாரிடமாவது அதற்கு சாட்சி இருக்கா?

காசுக்கும்/assylum paper எடுக்கவும் மாறினவன் எல்லாம் நல்லா சவுண்டு விடுறாங்க.....

 

இளிச்சவாய் மதம் இந்து மதம் (நிறைய human resource இருக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இந்துமதத்தில் சாதியம் பிடிக்கவில்லை என்று மதம் மாறினவன் தன்னிலும் பார்க்க குறைந்த ஜாதியில் இருந்து பெண்/பிள்ளை எடுதிருக்க்கிரார்களா?

யாரிடமாவது அதற்கு சாட்சி இருக்கா?

காசுக்கும்/assylum paper எடுக்கவும் மாறினவன் எல்லாம் நல்லா சவுண்டு விடுறாங்க.....

 

இளிச்சவாய் மதம் இந்து மதம் (நிறைய human resource இருக்கு)

 

இது என்ன ரொம்ப கொமாடியா இருக்கு ??
 
சாதியே வேண்டாம் என்றுவிட்டு போனவன் .............
எப்படி குறைந்த சாதியில் பெண் எடுப்பது??
 
கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நன்று.
 
அதைதானே நாங்கள் திரும்ப திரும்ப சொல்கிறோம்.............
பார்ப்பன் எதை சொன்னாலும் இளிக்காதே என்று. இழிவை பார்க்கும்போது 
அதை ஒழி என்று.
Link to comment
Share on other sites

சாதி என்ற தூக்க மாத்திரை சாப்பிட்ட எந்தவொரு சைவத் தமிழனாலும் விழித்தெழ முடியாது.!!!

 

 

என்னைத் திருத்த முயல்கின்றேன்.
 
1. மனிதனை மதிப்பாக நடத்த முயற்சி செய்கிறேன்.
 
2. என் பிள்ளைகளுக்கு சாதி என்ற பதம் தெரியாது. அப்படி ஒரு நடைமுறை இருப்பதும் தெரியாது.
 
3. யாரையும் சாதி பார்க்கச் சொல்லவுமில்லை. யாரையும் சாதி பார்க்க வேண்டாம் என்றும் சொல்லவில்லை.
 
4. என்னால் குறிப்பிட்டளவு மனிதர்களுக்கு நன்மை கிடைக்கும் போது அவர்களின் சாதிப் பின்னனி எவருக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்காது.
 
5. சாதிப் பின்னனி காரணமாக யாராவது பலவீனமாக காணப்பட்டால் அச்சந்தர்ப்பத்தில் என்னால் ஏதாவது செய்ய முடிந்து அவர்கள் மனத்தைரியமோ சந்தோசமோ அடையமுடியுமென்றால் நிச்சியம் அதைச் செய்வேன்.
Link to comment
Share on other sites

‘நக்கீரன்’ இதழில் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச் சாரியார் ``இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற தொடரை எழுதிக் கொண்டு இருக்கிறார்.
அதன் 25-ஆவது தொடர் (9-3-2005) ஒரு தகவலை வெளியில் கொண்டு வந்துள்ளது.

"நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர் களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.``ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?’’ என்று மகா பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.``உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக் கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்.."
(`நக்கீரன்’ 9-3-2005 பக்கம் 18,19)

இதனைப் புரிந்து கொள்வதற்கு என்ன சிரமம் இருக்கிறது? சங்கராச்சாரியார் தமிழைப் பேசினால். அவர் தீட்டுப்பட்டு விடுவார்; காரணம் தமிழ் நீஷப்பாஷை.

தமிழைப் பற்றியும் தமிழர்களைப்பற்றியும் பார்ப்பனர்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்தவர்களுக்கு இது கண்டிப்பாக ஆச்சரியத் தைக் கொடுக்காது.

கோயில் கருவறைக்குள் தமிழன் அர்ச்சகன் ஆனால் சாமி தீட்டாகிவிடும்; தமிழில் வழிபட்டாலும் தீட்டாகி விடும் என்பதுதானே அவர்களின் நிலை.
ஆண்டாளின் ‘திருப்பாவை’யில் (பாடல் எண் 2) தீக்குறளைச் சென்றோதோம் என்றவர்க்கு விளக்கம் சொன்ன இதே சங்கராச்சாரியார் திருக்குறளைச் சென்று ஓதமாட்டோம் என்றாரா? இல்லையா?

குறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள். கோள் சொல்லும் தீயதைச் சொல்ல மாட்டோம் என்பதற்கு மாறாக திருக்குறளை ஓதமாட்டோம் என்று சொன்ன காழ்ப்புணர்ச்சிக் காரர்கள் தானே இந்தச் சங்கராச்சாரியார்கள்- பார்ப்பனர்கள்.

``சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம் பொருளுக்குச் சமானம். பரம் பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. அதற்கென்று ஒரு குறிப் பிட்ட பகுதியோ, ஒரு தேசமோ கிடையாது. இதைத் தான் ``சர்வ வியாபகத்வம்’’ என்பார்கள்.’’

``உலகில் முதன் முதலில் தமிழ்மொழி தோன்றிற்று. அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு தான் சமஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்ச நூற்றாண்டு களுக்கு முன்புதான் `பாணினி’ என்ற ஒருவர் இந்த சமஸ்ருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற்கொண்டுதான் அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் பாஷா சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய சாஸ்திரத்தில் சமஸ்கிருதம்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட் டுள்ளது” என்று கூறியவரும் சாட்சாத் அதே சந்திர சேகரேந்திர சரஸ்வதிதான். (ஆதாரம்; `ஞானவழி’ - வானதி பதிப்பக வெளியீடு).


பார்ப்பனர்கள் தமிழ் மொழியைத் தங்களது வாழ்க்கை வழிக்காகவும் வசதிக்கு ஆகவும் பேசு கிறவர்களே ஒழிய அம்மொழியில் உள்ள அன்புக் காகவோ, ஆர்வத்திற்கு ஆகவோ பேசுகிறவர்கள் அல்ல. உதாரணம் என்ன வென்றால், இந்தப் பார்ப் பனர்கள் தங்களுடைய வைதீக காரியங்களிலும் தேவாதி பூஜை பிரார்த் தனைகளிலும் தமிழை விலக்கி வைத்திருக்கிறவர்கள்.

இந்தப் பார்ப்பனர்கள் ஆரிய மொழி (வட மொழி)யையே மேலாக எண்ணுவதோடு, அதனுடைய மேன்மையைக் காப்பாற்றவே அதிகமாக முயற்சிப்பவர்கள்.

இந்தப் பார்ப்பனர்கள் தங்களுடைய ஒழுக்க ஆதாரங்கள் தமிழ்மொழியை சூத்திர (இழிவான - மிலேச்ச) பாஷை என்று குறை கூறுகிறதை ஏற்றுக் கொண்டு அதன்படி பெரிதும் ஒழுகுபவர்கள்’’ (`குடிஅரசு’ 4-5-1939) என்று தந்தை பெரியார் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

இதனையே அறிஞர் அண்ணாவும் தன் பாணியிலே எழுதுகின்றார்.
``தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின் றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தா லும், தமிழிலே பண்டிதரென பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை.

அதனைத் தம் தாய்மொழி யெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வட மொழியாகிய ஸம்ஸ்கிருதத்தின் மீதுதான்” (திராவிட நாடு’ 2-11-1947) என்கிறார் அறிஞர் அண்ணா.

சனாதனப் பார்ப்பனர்களிலிருந்து அரசியல் பார்ப்பனர்கள் வரை இதில் ஒத்தக் கருத்துதான்.

``என்கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதி காரியானால் இந்தியர்களை இந்தியுடன் சம°கிருதத் தையும் கட்டாயப் பாடமாகப் படிக்கச் செய்வேன்’’ என்றவர்தான் `வாயாடி’ சத்தியமூர்த்தி அய்யர் (`மெயில்’ 25-7-1939).

``சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத்தான் இப்பொழுது ஹிந்தியைத் திணிக்கிறேன்’’ என்று சென்னை லயோலா கல்லூரி விழாவில் (24-7-37) சென்னை மாநிலப் பிரதம அமைச்சர் என்ற தகுதியில் பேசியவர்தான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி).

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி கோல்வால்கரின் கூற்றும் இதுதான்.
``மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது. சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம் வரை, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண் டும்” (Bunch of Thoughts) அத்தியாயம் 8, பக்கம் 113)

இவ்வளவுக்குப் பிறகும் பார்ப்பனர்களை தமிழர்கள் என்று எப்படி எடுத்துக் கொள்வது! தமிழுக்கே தூணாக இருந்த, கோவில்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்களைத் தந்த சோழர்கள், பாண்டியர்கள் போன்ற சக்தி வாய்ந்த அரசர்கள் நினைத்திருந்தால் தமிழில் அர்ச்சனைகளை நடத்தச் சொல்லியிருக்கலாமே. அவர்களையெல்லாம் மறந்துவிட்டு தமிழை ஒரு மொழிப் பிரச்சினையாக்கி, ஜாதிப் பிரச்சினையாக்கி அரசியலாக்கிய பெரும வந்தேரி பார்ப்பனர்களையேச் சாரும்.http://sampiraani.blogspot.in/2005/09/blog-post_112770961244412415.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எல்லாரிடமும் ஒரு கேள்வி. உங்களில் எத்தனை பேர் உண்மையாகவே உங்கள் கடவுள்கள் இருப்பதாக நம்புகிறீர்கள்? நீங்கள் இங்கே விவாதிப்பது உண்மையாகவே உங்கள் கடவுள்களுக்கக்கவா அல்லது எதிரி மதக்காரனை பிழையென்று நிறுவிவிட வேண்டும் என்பதற்காகவா? என்னைப்பொறுத்தவரை இங்கே பெரும்பாலானோர் தமிழினத்துக்குள்ளேயே இருக்கும் இரு மதங்களில் தமது மதமே சரி, மற்றையது பிழை என்கிற அடிப்படையிலேயே கருத்துக்களை முன்வைக்கிறீர்கள். இது எமக்கு எந்தப்பலனையும் தரப்போவதில்லை. முகத்திரை கிழிகிறது, முகமூடி கிழிகிறதென்றெல்லாம் சந்தோஷப்படுமளவிற்கு மற்றையவர்கள் கேவலமானவர்களோ அல்லது நீங்கள் நினைப்பதுப்போல தரங்கெட்டவர்களோ கிடையாது. பிள்ளைபிடிக்காரர் என்று சிலர் கிறீஸ்த்தவரகளை அழைக்க விரும்புவது வீண் வீம்பே அன்றி வேரில்லை. அது அவர்களுடைய ஆழ் மனதிலிருந்து சிறுபராயம் தொட்டு ஊட்டி வளர்க்கப்பட்ட எதிர்ப்புணர்வின்பால் வருவது. இலகுவில் திருத்தப்பட முடியாததும் கூட. அதைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை. இப்படிப் பலரை ஏற்கனவே பார்த்தாயிற்று. பெரும்பாலான இந்துக்கள் கத்தோலிக்கரை தமது சகோதரர்களாகவே பார்க்கிறார்கள். அது இனிமேலும் தொடரும். 

 

சரி, எனது கேள்விக்கு வருகிறேன்,

 

2009 இல் பச்சிளம் பாலகர்கள், கைக்குழந்தைகள், இன்னும் பிறக்காதிருந்த சிசுக்கள், கர்ப்பிணிகள், தாய்மார், வயோதிபர் என்று ஈவு இரக்கமில்லாமல் சிங்களவன் அடித்துக் கொல்லும்போது நாங்கள் இங்கே தூக்கிப் பிடிக்கும் சிவனும், யேசுவும், முருகனும், மரியாளும், பிள்ளையாரும், அந்தோனியாரும் எங்கே போயிருந்தார்கள்?? வற்றாப்பளை அம்மன் கோவில், மருதமடு தேவாலயம், சென் பீற்றர்ஸ் தேவாலயம், சென். ஜேம்ஸ் தேவாலயம், செல்வச் சந்நிதி என்று எமது தாயகத்திலுள்ள எல்லாக் கடவுள்களின் உறைவிடங்களிலும் சிங்களவன் எங்களுக்குப் பலிக்களம் அமைத்து ரசித்தபோது இந்தக் கடவுள்கள் எல்லாம் எங்கே போய் ஒளிந்திருந்தார்கள்? மன்னாரிலிருந்து மக்கள் வெளியேறியபோது மடுமாதா சொரூபத்தையும் மக்கள் தங்களுடன் தூக்கிகொண்டு சென்றார்களாம், தெய்வத்திற்கே பாதுகாப்புக் கிடைக்கவில்லை அன்று !!!

 

உலகில் கிறீஸ்த்தவம் தோன்றிய ஊற்றாகிய யூத மதத்தின் யூதர்களில் 7 மில்லியன் மக்களை அடொஃப் ஹிட்லர் 1939 இலிருந்து 1945 வரைக்குள் நாசி வதை முகாம்களில் விஷவாயுவுக்கும், பீரங்கிகளுக்கும் உணவாக்கியபோது அந்தக் கடவுள் எங்கே போயிருந்தார்? தான் பிறந்த இனமாகிய யூத இனத்தையே யேசுநாதராலோ அல்லது பரம பிதாவாலோ அன்று காப்பாற்ற முடியவில்லையே? இதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள் என்று பல குருமார் உற்பட கிறீஸ்த்தவப் பாதிரியார்களைக் கேட்டுப் பார்த்தாயிற்று. எவருக்குமே விடை தெரியவில்லை. உண்மையில், இதற்கான விடை ஒன்றுதான். கடவுள் என்பவர் இன்று இல்லை. அப்படி ஒருவர் இருந்திருந்தால் இந்த அவலங்கள் எல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதே எனது கருத்து. 

 

அப்பாவிகள் கொல்லப்படவும், ஏதுமறியா பாலகர்கள் உயிருடன் எரிக்கப்படவும் வந்து கப்பாற்ற முடியாத கடவுள்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களால் எமக்கு என்ன பலன்? இந்தக் கேள்வியை நான் இப்போது அடிக்கடி என்னையே கேட்டு வருகிறேன். 

 

உங்களுக்குப் புரிகிறதா?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.