Jump to content

அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரத் தயாராகி வரும் நிலையில்: இந்தியா எதற்காக இந்த வழமைக்கு மாறான நகர்வில் இறங்கியது � இதன் ஊடாக புதுடெல்லி வெளிப்படுத்த விரும்பிய செய்தி என்ன?


Recommended Posts

sri-india.jpg

இந்தியா சொல்ல வரும் செய்தி என்ன?

  • ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரத் தயாராகி வரும் நிலையில், இந்திய அரசாங்கத்தினால் கடந்த வாரம், 20 ஊடகவியலாளர்கள் கொழும்பில் இருந்து புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொழும்பில் முக்கியமான ஊடகங்களின் மூத்த ஊடகவியலாளர்கள் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஜெனிவா தீர்மானத்துக்கான தயார்படுத்தல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கொழும்பு ஊடகவியலாளர்கள் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. 

    புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட கொழும்பு ஊடகவியலாளர்கள் குழுவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் உள்ளிட்ட அதிகாரிகள் சகிதம் சந்தித்தார். மிகவும், பொறுமையாகவும், விரிவாகவும் அவர் கொழும்பு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார். இந்தியா எதற்காக இந்த வழமைக்கு மாறான நகர்வில் இறங்கியது � இதன் ஊடாக புதுடெல்லி வெளிப்படுத்த விரும்பிய செய்தி என்ன என்பது இங்கு ஆராய வேண்டிய விடயம். இந்தத் தருணத்தில் புதுடெல்லி எதையோ ஒன்றைச் சொல்ல வருகிறது என்பதை சாதாரணமாக எவராலுமே புரிந்து கொண்டு விட முடியும். அதைச் சொல்வதற்கு கொழும்பில் தருணம் கிடைக்க வாய்ப்பில்லாத சூழலில் தான், இங்கிருந்து ஊடகவியலாளர்கள் குழு அங்கு அழைத்துச் செல்லப்பட்டது. 

    ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்து இந்தியா எந்த முடிவையும் எடுக்கவில்லை என்ற போதிலும், இலங்கையின் மீது அதிக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதை அது விரும்பவில்லை என்பதை, சல்மான் குர்ஷித்தின் கருத்துகளில் உணர முடிகிறது. கடந்தமுறை ஜெனிவா தீர்மானத்தை இந்தியாவே நீர்த்துப் போகச் செய்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இந்த முறை இந்தியாவினால், ஒரு எல்லைக்கு அப்பால் சென்று இலங்கைக்கு உதவமுடியாது.      

    வெளிப்படையாக சொல்வதானால், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா எதிர்த்தால், அது காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் அமைக்கப் போகும் கூட்டணிக்கும், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே, இலங்கைக்கு வெளிப்படையாக உதவ முடியாத நிலையில் உள்ள இந்தியா, இன்னொரு பக்கத்தில், சர்வதேச சமூகத்துடன் முரண்போக்கை கடைப்பிடிக்கும் இலங்கையை அந்த வழியில் இருந்து திருப்பவும் எத்தனிக்கிறது. அதை வெளிப்படையாகவே சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். உலக நாடுகளுடனும், மக்களுடனும், மோதல் போக்கை கைவிடுவதற்குச் சாத்தியமான வழிகளை இலங்கை கண்டறிய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

    இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கை மீதான அமெரிக்க தீர்மானங்கள் குறித்து பல பக்கங்களிலும் சிந்திக்கிறது. 

    ஒருபக்கத்தில் அது, போரினால் - மனிதஉரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் காயங்களுக்குப் பதில் சொல்லியாகி வேண்டும் என்கிறது. 

    இன்னொரு பக்கம், சர்வதேச சமூகத்துடன் இலங்கை முரண்படக் கூடாது என்கிறது.

     மற்றொரு பக்கம், சர்வதேச சமூகம் இலங்கைக்கு அதிகம் அழுத்தம் கொடுக்க கூடாது என்றும் கூறுகிறது. 

    இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்தியா ஒரு குழப்பமான நிலையில் இருப்பதாக- இந்த விவகாரத்தில் ஏதேனும் ஒரு பக்கம் சார்ந்து நிற்காமல் தம்மை, மிகச் சிறந்த நடுநிலையாளராக காட்டிக் கொள்ள முனைகிறது என்பது புலப்படும். 

    போர் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும், தமிழர்களிடம் ஆறாக வடுவாக உள்ள காயங்கள், அவற்றுக்கு உகந்த மருந்திடப்படாமல் ஆறப் போவதில்லை என்பதை இந்தியாவுக்க உணர்த்தியிருக்க வேண்டும். அதுபோலவே, இந்தப் பெரிய காலஇடைவெளியை, பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றி தமிழர்களை தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளத் தவறிய, இலங்கை அரசின் நிலையையும் இந்தியா முழுமையாக விளங்கியிருக்க வேண்டும். இத்தகைய கட்டத்தில், இந்தியா இரண்டு தரப்புக்கும் விலாங்கு மீன் போன்று தலையையும் வாலையும் காட்டுவதை விட வேறு வழியில்லை. இந்தநிலையில், மூன்றாவது தரப்பான, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகினது நடவடிக்கைகளை தடுக்கவும் முடியாத - ஏற்றுக் கொள்ளவும் முடியாத இக்கட்டான நிலைக்குள்ளேயும் இந்தியா சிக்கியுள்ளது.  இந்தியாவினது இந்தக் கையறு நிலையை கொழும்பு ஊடகவியலாளர்களுக்கு வெளிப்படுத்துவது சவுத் புளொக்கின் நோக்கமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் அது இந்தியாவைப் பலவீனமான நாடாகவே வெளிப்படுத்தும். அவ்வாறாயின், கொழும்பு ஊடகவியலாளர்களின் மூலம் புதுடெல்லி சொல்ல வந்துள்ள செய்தி என்ன என்ற கேள்வி எழுகிறது.  

    இலங்கை அரசாங்கம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா கூற முற்படுவதாகவே தோன்றுகிறது. அதாவது, மனிதஉரிமை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியதே தவிர, தட்டிக் கழிக்கப்படக் கூடியதல்ல என்று தெளிவாக கூறுகிறது இந்தியா. அதற்கு நம்பகமான வழிமுறையில், சர்வதேச சமூகத்தைப் பகைத்துக் கொள்ளாமல், நடுநிலையாக செயற்பட வேண்டும் என்றும் அது கூறமுற்படுகிறது. ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முதலீடாகப் பயன்படுத்த முனைகிறது. மீண்டும், தன்னை மின்சாரக் கதிரைக்கு கொண்டு செல்ல முனைகிறார்கள் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேசத் தொடங்கியுள்ளார். அதேவேளை, யாருக்கும் அடிபணியப் போவதில்லை என்றும் அவர் கூறி வருகிறார். சதாம் ஹுசேன், கடாபி, போன்றவர்களை நினைவுபடுத்தும் அரசாங்கம், தம்மையும் அவ்வாறே அமெரிக்கா பழிவாங்க முற்படுவதாக சிங்கள மக்களிடையே எடுத்துக் கூறி வருகிறது. இந்தப் போக்கு, நல்லிணக்கத்துக்குப் பதிலாக, சிங்களத் தேசியவாத சிந்தனைகளையே கூர்மைப்படுத்தி வருகிறது, இது ஆபத்தானது என்பதை இந்தியா உணர்வதாக தெரிகிறது. இத்தகைய பிரசாரங்களை தடுத்து, அரசாங்கம் மென்போக்குடன்- ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்த கொழும்பு ஊடகங்களை புதுடெல்லி பயன்படுத்த முயன்றுள்ளதாகத் தெரிகிறது.  

    உலகத்தில் இருந்து இலங்கை தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது என்று சல்மான் குர்ஷித் குறிப்பிட்டது, அத்தகைய தனிமைப்படுத்தலை இந்தியா விரும்பவில்லை என்பதற்கான அடையாளமே. அத்தகைய சூழலை ஏற்டுத்தாமல் தடுப்பதற்கே இந்தியா முனைகிறது. அதற்கு கொழும்பு ஊடகங்களைப் பயன்படுத்த புதுடெல்லி முனைந்திருக்கலாம். எவ்வாறாயினும், இதனை அரசாங்கத்திடம் கூறாமல், ஊடகங்களிடம் கூற புதுடெல்லி முனைந்திருக்காது. அரசாங்கம் இதனை நிராகரித்த நிலையில் தான், ஊடகங்களின் மூலம் அழுத்தம் ஏற்படுத்த இந்தியா முனைந்திருக்கலாம். இந்தநிலையில், ஊடகங்களின் ஊடாக இந்தியா முன்வைத்துள்ள இந்தக் கருத்துகளை கொழும்பு எந்தளவுக்கு கருத்தில் கொள்ளும் என்பதைப் பொறுத்தே இந்தியாவினது அடுத்த நகர்வுகள் தீர்மானிக்கப்படலாம்.

தொல்காப்பியன்.

 

Link to comment
Share on other sites

எல்லாமே சும்மா ஒரு பில்டப் தான். இந்தியா உண்மையிலே ஒன்றுமே செய்யதேவையில்லை. இது இந்தியா எலக்சனுக்கு குடுக்குற பில்டப். இம்முறையும் வழமை போல மேலை நாடுகள் ஒரு கண்டன தீர்மானம் ஆழ்ந்த வருத்தம் கவலையடைவதோடு எல்லாம் சரி. மஹிந்த இவங்களை கணக்கிலே எடுக்கபோவதில்லை. மஹிந்தவுக்கு பின்னால் சீனா முழு ஆதரவு தரும் போது மஹிந்தவை ஒரு கொம்பனாலும் அசைக்க முடியாது. தலைவர் ஒருவரை தவிர. இது தான் நிதர்சனம் நடைமுறை யதார்த்தம்.

Link to comment
Share on other sites

எல்லாமே சும்மா ஒரு பில்டப் தான். இந்தியா உண்மையிலே ஒன்றுமே செய்யதேவையில்லை. இது இந்தியா எலக்சனுக்கு குடுக்குற பில்டப். இம்முறையும் வழமை போல மேலை நாடுகள் ஒரு கண்டன தீர்மானம் ஆழ்ந்த வருத்தம் கவலையடைவதோடு எல்லாம் சரி. மஹிந்த இவங்களை கணக்கிலே எடுக்கபோவதில்லை. மஹிந்தவுக்கு பின்னால் சீனா முழு ஆதரவு தரும் போது மஹிந்தவை ஒரு கொம்பனாலும் அசைக்க முடியாது. தலைவர் ஒருவரை தவிர. இது தான் நிதர்சனம் நடைமுறை யதார்த்தம்.

ஆனாலும் நாடகத்தின் இந்தக்காட்சியும் அரங்கேறித்தானே ஆகவேண்டும்..?? கொஞ்சக்காலத்தில் களைச்சுப்போய்.. அடப்போங்கப்பா என்று ஓரமாப்போய் குந்திவிடுவார்கள்.. :D

Link to comment
Share on other sites

ஒன்றுமட்டும் விளங்கவில்லை.

சிறி லங்காவில் சுதந்திர ஊடகம் என்று ஒன்றில்லை. ஊடக சுதந்திரத்தில் சிறி லங்கா 165 இடம்.

வந்த குழுவோ கொத்தியின் விளம்பர லவுட் ஸ்பீக்கர்ஸ்.

இவர் நேரடியா கொத்திக்கு போன் போட்டிருக்கலாம்.

இது தாங்களும் எதோ செய்கிறோம் என்று காட்ட நடத்திய நிகழ்வாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

இந்தியா சிறீ லங்கா சார்பாக நடக்க இருந்தால் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்தியா சிறிலங்கா சார்ப்பாக வாக்களித்த பின் மஹிந்தவே இந்தியா எங்கள் நன்பன் என்று குத்திமுறிந்திருப்பான்.
 
ஆனால் இந்தியா எதிராக வாக்களித்த பின் என்ன முதுகில் குத்திவிட்டீர்கள் என்று சிறி லங்கா கேட்க முடியாது. ஏற்கனவே சொல்லி விட்டோம் என்ற பதில் வரும்.
 
இந்த ஊடகவியலாலர் சந்திப்பு சிறிலங்கா தமிழர் பிரச்சனைய தீர்ப்பதன் மூலம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்புவதற்கான ஒரு பாதை இருப்பதை பொதுமக்களுக்கு காட்டுவதாக இருக்கலாம். 
 
அதே நேரம் மஹிந்தவின் இந்திய எதிர் பிர‌சார முறியடிப்பாகவும் இருக்கலாம். 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.