Jump to content

வா...என்னை வருடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வா…… என்னை வருடு!

AsiaLadyPen.jpg

 

குளிர் பூச்சியத்திற்கு கீழே 15 ஆக இருந்தது. காற்று தாறுமாறாக வீசிக்கொண்டிருந்தது. அக்காற்றில் அலைக்கழியும் பனிப்பூக்கள் பூமியைத் தொட நிமிடங்களைக் கரைத்தன. அறையின் யன்னல் ஓரமாக எவ்வளவு நேரத்திற்குத்தான் இவற்றை இரசிப்பது? எனக்கு அலுத்து விட்டது. வீட்டில் எல்லோரும் படுக்கைக்குச் சென்று விட்டார்கள் அவள் மட்டும் இன்னும் சமையல் கட்டில் பாத்திரங்களைக் கழுவி அடுக்கும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. அவள் கரங்களின் தொடுகைக்காக மனதிற்குள் ஏக்கங்கள் குமைந்து கொண்டிருந்தன. அவளின் பாராமுகமும் அலட்சியமும் என்னைத் தினம் தினம் அவமானப்படுத்துகிறது. அடி போடீ என்று வெறுக்கும் சக்தியை இன்னும் உயிர்மை கொடுக்கவில்லை.

அந்தக்கரங்களுக்குள் கட்டுண்டு கிடக்கும் கதகதப்பிற்காக ஒவ்வொரு மணித்துளியும் எதிர்பார்ப்புடன் கரைகின்றன. இன்றாவது அவளின் வருடல் கிட்டாதா?...ம்… சமையல் அறையில் விளக்குகள் அணைக்கும் ஒலி கேட்கிறது..வருகிறாள்…..என்னுடைய பார்வையை தீனமாக வைத்துக் கொள்கிறேன்…தன்னுடைய பூரண திருப்திக்காகவே தேடி என்னைத் தேர்ந்தெடுத்தவள்… அவளின் அதரங்களுக்குள் எத்தனை தடவைகள் அலைமோதியிருப்பேன்…

ஏன்?....ஏன்? என்னை அவள் தள்ளி வைக்கிறாள்? ஊமையின் வேதனைபோல உள்ளுக்குள்ளேயே எண்ணங்கள் குமைந்தன. அவளின் தொடுகை மட்டுமே என்னை உயிர்ப்பிக்கும்.முன்பெல்லாம் என்னை வருடும் அந்த நீண்ட வெண்டைக்காய் போன்ற விரல்களின் கதகதப்பில் போதையேறி என்னை மறந்து எத்தனை இலாவகமாக அவளோடு அவளின் இழுப்பிற்கும் இறுக்கமான பிடிப்பிற்குள்ளும் கட்டுண்டு கிடந்திருக்கிறேன்…. இப்போது மட்டும் அவளுக்கு என்ன ஆயிற்று? அவள் என்னை நெருங்காத அளவிற்கு அப்படி என்ன தவறு செய்து விட்டேன்?

…….என் தேவதை வருகிறாள் அவளின் வருகையை என் மனம் உணர்கிறது. படுக்கை அறைக்கதவைச் சாத்தியவள் என்னைக் கவனியாததுபோல குளியல் அறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள்…..குளிக்கிறாள் போலும்..குளித்து வரட்டும். ஈரம் சொட்டச் சொட்ட அந்த அழகான கூந்தலை  இரவின் மெல்லிய ஆடையில், அவள் அள்ளி முடிந்திருப்பதை இரசிப்பதே தனி சுகந்தான்….ம் வந்து விட்டாள் நான் என்னைத் தயாராக்கிக் கொண்டேன்.   “வா…. என்னை வருடு.” அவளின் தொடுகைக்காக கசியத் தொடங்கினேன். அவள் துளியேனும் கவனிப்பதாகத் தெரியவில்லை. அவள் தொட்டால் நான் சிலிர்ப்பேன்…அவள் தொட்டால் நான் துளிர்ப்பேன். அவள் தொட்டால் நான் நிமிர்வேன் அவள் தொடுகை என்னை வீரியமாக்கும். அந்த விரல்களின் வருடல் எவ்வளவு சுகமானது……. சந்தன சோப்பின் வாசனை மிக மிக அருகில் அவளின் மெல்லிய மூச்சின் வெப்பம் சிறிதாக என்னில் பரவியது. எனக்குள் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் படபடத்தன…. அவளின் கூரிய விழிகளில் இருந்து தீர்க்கமான ஒரு பார்வை என்னைக் குறிவைத்து இறங்குகிறது……… மெல்லக்கண்களை  மூடிக்கொள்கிறாள்..எட்டி இழுத்து அவளை அணைக்கலாமா என்று தோன்றியது முடியவில்லை அசைவற்று நிற்கிறேன். சாளரங்களின் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டு அவள் கட்டிலில் படுத்திருந்த துணைவனின் மார்போடு அணைந்து கொண்டாள். நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக, அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத் தொடங்குகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

நானும் என்னமோ நடக்கப் போகுதெண்டு... தெண்டத்துக்கு ஏமாந்ததுதான் மிச்சம்..!!

 

வல்வை... தாயகத்தில் இந்திய சஞ்சிகைகளில் இப்படியான உத்திகளில் அமைந்த கதைகளை வாசித்திருந்தாலும்...

ஈழத்து எழுத்துலகில் இப்படியான முயற்சிகள் அரிது... 

 

பாராட்டுகள்! தொடருங்கள்!!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சோழியன் அண்ணா.... :lol: சும்மா பம்பலா ஏதாவது எழுதுவம் என்று வெளிக்கிட்டு ஒரு முப்பரிமாணக்கதையும் இந்தக்கதையும் ஒரே நேரத்தில் எழுதி முடித்துவிட்டேன் முப்பரிமாணத்திற்கு இன்னும் கொஞ்சம் திருத்தங்கள் வடிவமைப்புகள் என்று செய்யவேண்டி இருந்ததா.. இது அப்படியே குட்டியா இருந்தது உடன தூக்கிப் போட்டுட்டன்....

 

அதோடு பச்சைப்புள்ளிகளை உடனடியாக அள்ளி வழங்கிய வள்ளல்களுக்கும் நன்றிகள். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மினைக்கெட்டிருந்து கிளுகிளுப்பாய் வாசிச்சன்.....கடைசியிலை உள்ள கிளுகிளுப்பும் சிலிர்ப்பும் பாதாளத்துக்கே போட்டுது...அதுசரி மிச்சம் எப்பவரும்??? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மினைக்கெட்டிருந்து கிளுகிளுப்பாய் வாசிச்சன்.....கடைசியிலை உள்ள கிளுகிளுப்பும் சிலிர்ப்பும் பாதாளத்துக்கே போட்டுது...அதுசரி மிச்சம் எப்பவரும்??? :D

 

figure_laughing_pointing_md_wm.gif

Link to comment
Share on other sites

யார் நினைப்பதாக புனையப்பட்டுள்ளது?? :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே விளங்கேல்லையோ?????? :o


மேல இரண்டுபேர் கருத்து எழுதி இருக்கிறார்கள் அவர்களும் விளங்கித்தான் எழுதினார்களே இல்லையோ தெரியேல்லையே!!! :o  :o  :unsure:

Link to comment
Share on other sites

திரைச்சீலையா இருக்குமோ என்று ஒரு சந்தேகம்.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைச்சீலையா இருக்குமோ என்று ஒரு சந்தேகம்.. :huh:

1237811334_crying-in-the-audience.gif

 

திரைச்சீலையையும் தொட்டுட்டாப்பா என்னை மட்டும் தொடவில்லை 

 

 

 சாளரங்களின் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டு அவள் கட்டிலில் படுத்திருந்த துணைவனின் மார்போடு அணைந்து கொண்டாள். நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக, அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத் தொடங்குகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைச்சீலையா இருக்குமோ என்று ஒரு சந்தேகம்.. :huh:

திரைச்சீலையை ஆராவது 'உதட்டில' வைப்பாங்களா" ? :D

 

ஏதாவது ' கிழு கிழுப்பான' கதைப் புத்தகமாய் இருக்கும்! :o

Link to comment
Share on other sites

அவளின் தொடுகைக்காக கசியத் தொடங்கினேன். அவள் துளியேனும் கவனிப்பதாகத் தெரியவில்லை. அவள் தொட்டால் நான் சிலிர்ப்பேன்…அவள் தொட்டால் நான் துளிர்ப்பேன். அவள் தொட்டால் நான் நிமிர்வேன் அவள் தொடுகை என்னை வீரியமாக்கும். அந்த விரல்களின் வருடல் எவ்வளவு சுகமானது……. சந்தன சோப்பின் வாசனை மிக மிக அருகில் அவளின் மெல்லிய மூச்சின் வெப்பம் சிறிதாக என்னில் பரவியது. எனக்குள் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் படபடத்தன…. அவளின் கூரிய விழிகளில் இருந்து தீர்க்கமான ஒரு பார்வை என்னைக் குறிவைத்து இறங்குகிறது……… மெல்லக்கண்களை  மூடிக்கொள்கிறாள்..எட்டி இழுத்து அவளை அணைக்கலாமா என்று தோன்றியது முடியவில்லை அசைவற்று நிற்கிறேன். சாளரங்களின் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டு அவள் கட்டிலில் படுத்திருந்த துணைவனின் மார்போடு அணைந்து கொண்டாள். நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக, அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத் தொடங்குகிறேன்.

 

 

சென்ட் பொட்டில்?

கதை எழுதும் பேனா?

Link to comment
Share on other sites

சகாறா அக்காவின் வாயில் இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

படத்தை பார்த்தாலே புரியல . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா அக்காவின் வாயில் இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

படத்தை பார்த்தாலே புரியல . :icon_mrgreen:

புரிஞ்சுது, அர்ஜுன்! :lol:

 

ஆனால், ஆராவது இந்தக்காலத்தில, 'கசியிற' பேனை, அதுவும் படுக்கையறையிலை....! :o

 

அவனவன் விசைப்பலகையில தட்டிக்கொண்டிருக்கிறான்! 

 

இவ மட்டும்...! :icon_idea:

Link to comment
Share on other sites

சகாறா அக்காவின் வாயில் இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

படத்தை பார்த்தாலே புரியல . :icon_mrgreen:

புரிகிறது அருச்சுன். அதுவும் பொருத்தம் போல இருக்கு. அறையில் யன்னல் ஒரம் இருக்கும் ஒரு பூ கண்ரு கூட அந்த விபரங்களுக்கு பொருந்தும் போலிருக்கு.  

 

மேலும் மனத்தில் பல கேல்விகள். எழும். அவ்ற்றுக்கெல்லாம் பதில் வேண்டும். வல்வை கதை எழுதிய பிறக்கு அதற்க்கு ஏன் இந்தக் கவலை?

மேலும் இசை கதையைக்கிழப்பும் வரைக்கும் யாருக்கும் சிந்திக்கவும் தோன்றவில்லைப்போலிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்படியும் கதை எழுதலாமோ? அட சீ எனக்கு தெரியாம போயிற்று ...:D

Link to comment
Share on other sites

அந்தப் பெரிய படத்தைப் பார்த்துவிட்டும்....! அந்த அந்தரங்கத்துக்குள் அலைமோதியதை அறிவதற்கு உறவுகள் படும் பாடு.....!!. அவள் பூத்தகாலம் தொட்டுக் காத்திருந்தவன் துணைவனாகிக் கட்டிலில்...! அவள் துணையின்றி அவன் தூங்கவும் அவள்தான் விடுவாளா..!! :wub:.  விட்டுவிட்டுத் தன் கற்பனை ஊற்றை வடிக்க உன்னைத் தேடுவாளா...? இறக்கையின் வாரிசுவே..?? :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மினைக்கெட்டிருந்து கிளுகிளுப்பாய் வாசிச்சன்.....கடைசியிலை உள்ள கிளுகிளுப்பும் சிலிர்ப்பும் பாதாளத்துக்கே போட்டுது...அதுசரி மிச்சம் எப்பவரும்??? :D

 

கதையைப் படிச்சுட்டு பேசாமல் போயிருக்கலாம் , நாங்கள் எல்லாம் போகலை...!  இப்ப பாருங்கள் அவ கைதட்டிச் சிரிக்கிறா ...! :D

 

இதுக்குள்ள இனியென்ன மிச்சம் கிடக்கு...!

 

Link to comment
Share on other sites

உங்களுக்காக இப்படி ஏங்கும் அதனை இப்படி தவிக்கவிடலாமா அக்கா???  :wub::D

அதை திருப்திப்படுத்தினால்தான் எங்களுக்கும் திருப்தியாய் இருக்கும்...! :icon_idea:

புனைவு அருமை!  நிறைய எழுதுங்கோ..... அக்கா! :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கொஞ்சம் வாசிக்கவே விளங்கிவிட்டுது. நன்றாக இருந்தது வாசிக்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையைப் படிச்சுட்டு பேசாமல் போயிருக்கலாம் , நாங்கள் எல்லாம் போகலை...!  இப்ப பாருங்கள் அவ கைதட்டிச் சிரிக்கிறா ...! :D

 

இதுக்குள்ள இனியென்ன மிச்சம் கிடக்கு...!

 

சாளரங்களின் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டு அவள் கட்டிலில் படுத்திருந்த துணைவனின் மார்போடு அணைந்து கொண்டாள். நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக, அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத் தொடங்குகிறேன்.

 

 

இவ்வளவத்தையும் ஏக்கத்தோடை சொன்ன பேனை அங்காலை நடந்த மிச்சத்தையும் சொல்லாதோ எண்டொரு நப்பாசைதான்..... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எழுத்தாளனின் ..பேனா  மெளனமாய் கண்ணீர் விட்டால் இப்படிதான் இருக்குமோ ..? புனைவு அபாரம் .

Link to comment
Share on other sites

இவ்வளவத்தையும் ஏக்கத்தோடை சொன்ன பேனை அங்காலை நடந்த மிச்சத்தையும் சொல்லாதோ எண்டொரு நப்பாசைதான்..... :lol:  :D

 

இதே ஆசைதான் எனக்கும்... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.