Jump to content

வா...என்னை வருடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழைப்பை ஏற்று வருடலாம் என்று வந்தேன்!! :D ஏமாந்து போனேன் :o

 

…….என் தேவதை வருகிறாள் அவளின் வருகையை என் மனம் உணர்கிறது. படுக்கை அறைக்கதவைச் சாத்தியவள் என்னைக் கவனியாததுபோல குளியல் அறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள்…..குளிக்கிறாள் போலும்..குளித்து வரட்டும். ஈரம் சொட்டச் சொட்ட அந்த அழகான கூந்தலை  இரவின் மெல்லிய ஆடையில், அவள் அள்ளி முடிந்திருப்பதை இரசிப்பதே தனி சுகந்தான்….ம் வந்து விட்டாள் நான் என்னைத் தயாராக்கிக் கொண்டேன்.   “வா…. என்னை வருடு.” அவளின் தொடுகைக்காக கசியத் தொடங்கினேன். அவள் துளியேனும் கவனிப்பதாகத் தெரியவில்லை. அவள் தொட்டால் நான் சிலிர்ப்பேன்…அவள் தொட்டால் நான் துளிர்ப்பேன். அவள் தொட்டால் நான் நிமிர்வேன் அவள் தொடுகை என்னை வீரியமாக்கும். அந்த விரல்களின் வருடல் எவ்வளவு சுகமானது……. சந்தன சோப்பின் வாசனை மிக மிக அருகில் அவளின் மெல்லிய மூச்சின் வெப்பம் சிறிதாக என்னில் பரவியது. எனக்குள் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் படபடத்தன…. அவளின் கூரிய விழிகளில் இருந்து தீர்க்கமான ஒரு பார்வை என்னைக் குறிவைத்து இறங்குகிறது……… மெல்லக்கண்களை  மூடிக்கொள்கிறாள்..எட்டி இழுத்து அவளை அணைக்கலாமா என்று தோன்றியது முடியவில்லை அசைவற்று நிற்கிறேன். சாளரங்களின் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டு அவள் கட்டிலில் படுத்திருந்த துணைவனின் மார்போடு அணைந்து கொண்டாள். நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக, அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத் தொடங்குகிறேன்.

 

 

இதெல்லாம் ரொம்ம டூ மச்!!!

 

 

 

சகாரா அக்காவின் முத்திரையே தனி. ஒவ்வொரு படைப்பும் நளினமாகவும் புதுமையாகவும் இருக்கும். தொடக்கத்தில் ஒரு பீடிகையுடன் வந்து இறுதியில் வாசகர்களை ஒரு புதிய தளத்துக்குள் விட்டுச் சென்று விடுவா. மிகுதிக் காட்சிகளை வாசகனே உய்த்தறிந்துகொள்ளவேண்டும். அதுவே அவவின் படைபுக்களின் வெற்றி என எண்ணுகின்றேன். வாழ்த்துக்கள் அக்கா! :)

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
என் பங்கிற்கு எனது புரிதலையும் வைத்து விடுகிறேன். உண்மை கதைசொல்லிக்கே வெளிச்சம்.
 
இந்தக்கதையினை முடிவு இப்படி இருக்கிறது: 'சாளரங்களின் திரைச்சீலையினை இழுத்து மூடிவிட்டு அவள் கட்டிலில் படுத்திருந்த (உண்மையில் உறக்கத்திலிருந்த என்று எழுதியிருப்பின் இன்னமும் பொருந்தியிருக்கும் என்பது எனது அபிப்பிராயம்) துணைவனின் மார்போடு அணைந்து கொண்டாள். நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத்தொடங்குகிறேன்'
 
ஒரு வரியில் சொல்வதனால், இரசிக்காது விடப்பட்ட எறவுஸ்ட்(இதுக்குத் தமிழ் தெரியவில்லை) பெண்மையின் பார்வையில் தான் கதை இருக்கிறது. அதனால் தான் கணவன் படுத்திருந்தான் என்பதைக் காட்டிலும் உறக்கத்திலிருந்தான் என்பது அதிகம் பொருந்தும் என்பது எனது அபிப்பிராயம்.
 
இந்தக் கதையின் ஆரம்பத்தில் வரும் சாளரமும் முடிவில் வரும் சாளரமும் முற்றிலும் வேறுவேறானவை. கதையின் ஆரம்பத்தில் கதைசொல்லி தனது வீட்டு ஜன்னல் ஊடாகத் தான் பார்த்துக்கொண்டு நிற்கிறார். வெளியில் காற்றும் பனிப்பூக்கள் போன்ற பனியும் கதைசொல்லிக்கு ஒரு தியானநிலையினை உருவாக்கி விடுகின்றன. 'எவ்வளவு நேரத்திற்குத் தான் இவற்றை ரசிப்பது?' என்ற இடத்தில் கதைசொல்லியின் அகம் ஆதிக்கம் எடுத்துக்கொள்கிறது. கதையின் முடிவில் மூடப்பட்ட திரைச்சீலை திறக்கப்பட்ட இடம் இது. 
 
அகத்தின் திரைச்சீலை திறக்கப்பட்ட பின்னர், அனைத்தும் அவள் தன்னைச் சார்ந்து தான் பேசுகிறாள். 'அவள் கரங்களின் தொடுகைக்காக மனதுள் ஏக்கங்கள் குமைந்து கொண்டிருந்தன' என்பது முதல் இவ்வாறு ஏகப்பட்ட மனந்திறந்த வசனங்கள் அவளது மனநிலையின் தாபத்தினையே பேசுகின்றன. புறக்கணிப்பு அல்லது அலட்சியப்படுத்தப்படல் அல்லது வேண்டாது விடப்படல் என்பன வேண்டுமாயின் எல்லோரிற்கும் தெரிந்திராததாய் இருக்கலாம், ஆனால் எறவுசல் அனைவருக்கும் பரிட்சயமான உணர்வு தானே. எறவுஸ்ட் நிலையில் அவள் தனது உணர்வை தன்னில் இருந்து பிரித்தெடுத்து ஒரு பிற மனிசி ஆக்கிப் பேசியுள்ளளாள். அவளிற்குள் அந்ததத் தருணத்தில் அது அவ்வளவு தத்ரூபமாக இருந்தது.
 
எழுத்துநடை அற்புதமாக விரிகிறது. தானே சிருஸ்ட்டித்த பிறமனிசி சார்ந்து தன்னை அவள் ஒரு தேவதையாக வர்ணிக்கிறாள். இது இட்டுக்கட்டப்பட்டதல்ல. அவள் அத்தருணத்தில் தன்னை அப்படித் தான் உணர்கிறாள். வெண்டைக்காய் விரல், குளித்து விட்டு ஈர முடியுடன் இரவுடையில் வரல் என அனைத்திலும் உணர்வு கொப்புளிக்கிறது. 
 
பல ஆண்களிற்கு மயக்கம் பிறக்கும். காரணம் ஆணும் பெண்ணும் பல படி வேறானவர்கள். பெண்ணின் எறவுஸ்ட் நிலையில் அவளிற்கு அவளைப் புகழ்வது மிகப்பிடிக்கும். அது ஒரு சிம்பனி என்று வைத்துக்கொள்ளலாம்.
 
'நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத்தொடங்குகிறேன்' என்ற கடைசிவரி, தன்நிலை எந்தச் சந்தேகமும் இன்றிப் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதற்காகவே அற்புதமாக வை;ககப்பட்டிருக்கிறது.
 
இவ்வளவும் நடந்தது தெரியாமல் அவள் கணவன் அவள் விளக்கணைத்த சமையலறையில் விளைந்ததை உண்டு தூங்கிக் கிடக்கிறான். அவளது அகத்தின் திரைச்சீலை வலிந்து இழுத்து மூடப்படுகிறது.
 
இந்தக்கதையில் என்ன சிக்கல் என்றால், இந்தக் கதை பிறந்த இடம் பிரத்தியேகமானது. அந்தப் பிரத்தியேக இடத்தில் இதனைக் கதைசொல்லியால் தங்குதடையின்றிப் பேசமுடியும். ஆனால் பொதுக்களத்தில் போட்டபோது, எச்சரிக்கை உணர்வுகள் படைப்பை வெனறு கிளம்பி விடுகின்றன. அதனால் பூனையும் பேனையும் அனுசரிக்கப்படுகின்றன.
 
 
கதையின் அளவைத் தாண்டி ஏற்கனவே பொழிப்பு வந்து விட்டதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். ஆனால் இன்னமும் பேசலாம்.
 
குறிப்பு: இது ஒரு வாசகனாய் எனது புரிதல் மட்டுமே. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் நினைக்கிறேன் என்ட புத்திக்கு :huh: எட்டின வரை ஒரு கணவன் தனது மனைவியின் ஸ்பரிசத்திற்கு :lol: ஏங்குவதாக கதை எழுதப்பட்டு உள்ளது :unsure:

 

யாழ்வாலியின் பதிவை வாசித்ததும் தான் கணவன் அப்பாவியாய் கட்டிலில் நித்திரை கொள்கிறார் என புரிந்து கொண்டேன் :lol:
Link to comment
Share on other sites

வல்வை சகாறா காப்பாத்துங்கோ..!!! படுக்கப்போனாலும் படுக்க முடியவில்லை.! "என்னைவிட உங்களுக்கு சகாறாத் தங்கச்சியின் கதைதான் முக்கியமோ...??" மனிசியின் புலம்பல் தாங்கமுடியவில்லை..!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகாறா காப்பாத்துங்கோ..!!! படுக்கப்போனாலும் படுக்க முடியவில்லை.! "என்னைவிட உங்களுக்கு சகாறாத் தங்கச்சியின் கதைதான் முக்கியமோ...??" மனிசியின் புலம்பல் தாங்கமுடியவில்லை..!!!!!!

 

 

படுக்க

படுக்க...........

என்று எல்லா  இடமும் எழுதுகிறார்

எதுவாக  இருக்கும்...............?? :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகாறா காப்பாத்துங்கோ..!!! படுக்கப்போனாலும் படுக்க முடியவில்லை.! "என்னைவிட உங்களுக்கு சகாறாத் தங்கச்சியின் கதைதான் முக்கியமோ...??" மனிசியின் புலம்பல் தாங்கமுடியவில்லை..!!!!!!

 

 

முதலில என்னைக் காப்பாற்ற வழி தெரியேல்லை :icon_mrgreen:  இப்ப இவர் ஒருத்தர் தன்னைக் காப்பாற்று என்று புலம்புகிறார்... புலம்பலை சமாளிச்சு வன்முறையில் அகத்துடையாள் இறங்காமல் காப்பாற்ற ஏதாவது வழி தேடுவதை விட்டுவிட்டு மீண்டும்  மீண்டும் இங்கே திரிந்தால் பிறகு எங்களால் மட்டுமில்லை எவராலும் காப்பாற்ற முடியாது சொல்லீட்டன்...இந்தப்பக்கம் எட்டியும் பாக்கவேண்டாம்...நம்ம இலையான் கில்லர் திரிபதாதியைப்பார்த்து ஓட்டம் எடுப்பதுபோல் ஓடிப் போய்விடுங்கள் :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் நினைக்கிறேன் என்ட புத்திக்கு :huh: எட்டின வரை ஒரு கணவன் தனது மனைவியின் ஸ்பரிசத்திற்கு :lol: ஏங்குவதாக கதை எழுதப்பட்டு உள்ளது :unsure:

 

ரதி

உங்கள் பார்வையில் கணவன்,

இசையின் பார்வையில் திரைச்சீலை

ரோமியோவின் பார்வையில் கிளுகிளுப்பான புத்தகம்

அர்யூனின் பார்வையில் பேனா

மல்லையின் பார்வையில் பூக்கன்று, சென்ட்பாட்டில்,பேனா?

பாஞ்சின் பார்வையில் இறக்கையின் வாரிசு????கிகி

கவிதையின் பார்வையில் அது..படைப்பாளியின் கரு எதுவோ அது….எதுப்பா????

தமிழினியின் பார்வையில் பேனா

நிலாக்கா பார்வையில் பேனா

சாந்தியின் பார்வையில் குழப்பம்

விசுகரின பார்வையில் தன்நிலை

சுமேயின் பார்வையில் பூனை

 

உண்மையிலேயே சொல்லப் போனால் இக்கதையை கற்பனைக்குள் உரித்தெடுக்கும்போது இவ்வளவு தூரத்திற்கு வாசிப்போரைச் சென்றடையும் என்று சற்றேனும் நினைக்கவில்லை. இது ஒரு எதிர்பாராத திணறல்தான். என் மீதான நட்பாலா அல்லது இக்கதைமீதான பார்வையால் பதிவிடல்களா என்பதையும் பிரித்தறிய முடியாமல் ஒரு திகைப்பில் என் நிலை…….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆண் வாசகர்களை மட்டம் தட்டும் கதை..! எனது கண்டனங்கள். :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் ஆழமான விமர்சனம் அற்புதமாக சகாராவின் கதையை உடைத்தெறிகிறது. நான் கூட காலை எழுதும்போது எண்ணினேன் மற்றவர் சார்ந்து தன்  முடிவை மாற்ருகிறாரோ என்று. ஆனாலும் எழுத முடியவில்லை.

 

தவறு கதையை செம்மைப்படுத்தி உயர்வைத்தந்திருக்கிறது... உடைத் தெறிய முடியாதபடி பலப்படுத்தியிருக்கிறது.. :wub:

இன்னுமொருவன் இவ்விடத்தில் இரண்டு விதமாக வெளிப்பட்டிருக்கிறார் ஒன்று தலைசிறந்த விமர்சகனாக இன்னொன்று தேடல் நிறைந்த வாசகனாக.. அவருடைய விமர்சனத்திற்கும் தேடலுக்கும் பதில் அளிக்கவேண்டிய நிலையிலிருக்கிறேன்... யாழின் சேர்வர் மாற்றத்தில் சற்று தாமதிக்கிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் ஆழமான விமர்சனம் அற்புதமாக சகாராவின் கதையை உடைத்தெறிகிறது. நான் கூட காலை எழுதும்போது எண்ணினேன் மற்றவர் சார்ந்து தன்  முடிவை மாற்ருகிறாரோ என்று. ஆனாலும் எழுத முடியவில்லை.

Link to comment
Share on other sites

படுக்க

படுக்க...........

என்று எல்லா  இடமும் எழுதுகிறார்

எதுவாக  இருக்கும்...............?? :lol:  :D  :D

 

 

நீங்கள் பலே கில்லாடி...!. ஒப்புக்கொள்கிறேன்...!! :D

 

எழுதிவிட்டுத்தான் யோசித்தேன்! யாராவது வருவார்கள் என்று!! :rolleyes:

 

"நினைத்தேன் வந்தாய் நூறுவயது." :wub:

Link to comment
Share on other sites

எல்லா எழுத்தாளர்களினதும் எழுத்துக்களில் ஒரு பகுதி சொந்த அனுபவம் மற்றயது துய படைப்பு. அதில் எது என்ன விகிதம் என்பது படைப்புக்கும் எழுத்தாளனுக்கும் மாறுபடும். 

 

வலவையின் கதையின் விமர்சனத்தில் இன்னுமொருவன் சற்று அதமிதியமாகவே ஆராந்திருந்தார்.

 

(வலவை மறுத்தாலும், ஏற்றாலும்) இதில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு இயல்பு மாற்றத்தை உறவுகளுடன்  பகிந்து கொள்ள தன்னை அறியாமல் இந்த கதை பாணியை தெரிந்தெடுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அதை விவரிக்க அவர் தனது சமையைல், குளியல் அறைகளை கொண்டுவந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். 

 

அதில் அவர் -ஒரு எழுத்தாளன் - ஒரு வீடு-  ஒரு இரவின் முடிவு என்று கதையை அமைக்கவில்லை. தனது பழைய "பலவற்றில் தோய்ந்த கலகலப்பான வாழ்க்கை" இப்போது திசை மாறி, சிலவற்றில் கடமையாக மட்டும் முடிந்துவிடுறது என்ற தனது புது அனுபவத்தை சொல்லத்தான் வந்தார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். கதையில் வரும் பெண் வல்வை என்பதையும், காட்சிகள் அவரின் பொழுது முடிவடையும் விதம் என்றதை விளங்கிகொள்ள முடிந்தால் அவரின் முயற்சியின் பெரும்பகுதியை வெற்றியே. 

 

இது விடுகதையாக முடிந்துவிட்டதா அல்லது கதையாக இருக்கிறதா என்றது அவரின் சொல்ல வந்ததின் தோல்வி வெற்றியில் போய்முடியாது. அவர் சொல்லவந்தது அவரின் அனுபவனம். அது நன்றாக சொல்லப்படுகிறது. 

 

அது விடுகதையானதா அல்ல இன்னமும் கதையாக இருக்கிறதா என்பது யாழின் வாசகர்களின் தொழில் துரவுகளின் அவசியம் எவ்வளவில் இருக்கிறது என்பதை சுட்டும் அளவுக்கு, வல்வை பக்கத்தில் இருந்து எதையும் சுட்டாது. அவரின் பக்கத்தில் அது அவர் தெரிந்த உதாரணத்தில் இருந்த ஒரு சின்ன technical glitch என்பதற்கு மேல் போகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை ஒரு தலை சிறந்த எழுத்தாளர், கவிஞர் !

 

எழுத வேண்டும் என்ற 'தாகம்' அவரிடம் நிறைய உண்டு !

 

ஆனால், அவர் தனது கற்பனைகளைக் காகிதத்தில் துப்ப நினைக்கும் போதெல்லாம், எதுவோ ஒன்று இடைஞ்சலாக வந்து தடுத்து விடுகின்றது!

 

அதற்கு, முள்ளிவாய்க்கால் சம்பவங்களும், நம்பியிருந்த 'இந்தியா' என்ற நந்தியின் செயல்பாடுகளும் காரணமாக இருக்கலாம்!

 

அதாவது அவரது எண்ணங்களுக்கு 'வடிகாலமைக்கும்' பேனா, நீண்ட காலமாகக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது!

 

தனது ஏக்கங்களையும், தாகங்களையுமே 'பேனாவின்' மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது எனது கணிப்பு!

 

தோற்றுப்போனவனை விடவும் 'துவண்டு போனவனின்' மனநிலையே, அவரது கதை மூலம் வெளிப்படுகின்றது!

 

மீண்டு வாருங்கள், எங்கள் அபிமான கவிதாயினியே! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

"எனது கதை சொல்லாத எதையும் நான் கதைக்கு வெளியே சொல்லிவிட முடியாது"
 
அந்தக்கூற்று கதைசொல்லிக்கு மட்டுமே பொருத்தமானது. வாசகனிற்கு அல்ல. மனிதனை ஒத்த அகத்தோடான றோபோட்டை விஞ்ஞானத்தால் இப்போதைக்கு உருவாக்க முடியாது என்பது மட்டும் போதுமானது மனிதனின் அகத்தின் பிரமிப்பை உணர்த்துவதற்கு. 
 
மொழியினை அனைவரும் ஒருவாறு பயன்படுத்துவதில்லை. ஆழ்மனதின் வெளிப்பாடுகளை அடித்துக்கூறிவிட அனைவராலும் முடிந்துவிடுவதில்லை. இதனால் தான் ஒவ்வொரு நூலும் அதன் வாசகரளவு எண்ணிக்கையான பிரதிகளைக் கொண்டிருப்பதாகப் பேசப்படுகிறது. மொழி கலாச்சாரம் முதலிய அனைத்தும் அந்நியமான இரு மனிதர்களிற்கிடையே மொழியைத் தாண்டிய அதிர்வு சாத்தியப்படுகிறது. மனிதனிற்கும் விலங்குளிற்குமிடையே அதிர்வு சாத்தியப்படுகிறது. 
 
நான் நினைக்கிறேன், இயற்கையின் கூர்ப்பைப்போல, பொளிப்புரை இலக்கியத்தின் கூர்ப்பு. ஏதோ ஒன்று உள்ளிற்குள் பிசைய, படைப்பாளி அதனை ஏதோ ஒரு வடிவில் வைத்துவிடுகிறார். படைப்பாளி அந்தப் படைப்பை வைத்தநேரத்தில, உள்ளுரத் தனக்கிருந்த அந்த அதிர்விற்கு மட்டுமே அவர் உண்மையாக இருக்கிறார். அந்த அதிர்வின் பிரகாரம் ஏதோ ஒரு வகையில் அதை வெளிப்படுத்திவிடுகிறார். ஆனால், வெளிப்படுத்தியதன் பின்னர், தான் வெளிப்படுத்தியதற்குப் பொளிப்புரை வழங்க பிறிதொரு தருணத்தில் அவர் முயலின், அவரின் பொளிப்புரை கூட அவரது படைப்பிற்குக் காரணமான உணர்விற்கு உண்மையாக இருக்கமுடியாது (இதைத்தான் ஜெயகாந்தன் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்). அதற்கு இரு காரணங்கள். ஒன்று உள்ளார்ந்த அதிர்வை ஆட்டிகுலேட் பண்ணுவது எல்லோரிற்கும் எப்போதும் சாத்தியப்படுவதில்லை. இரண்டாவது, படைப்பை வெளியில் போட்டதன் பின்னர் பீட்பாக்லூப் ஆரம்பித்துவிடும் (அதாவது உள்ளுணுர்வு எப்படியோ பிறந்தது. அது படைப்பிற்குக் காரணமானது. அந்த வகையில் உள்ணுணர்வின் வெளிப்பாடு படைப்பு. ஆனால் படைப்புப் பிறந்த மாத்திரத்தில் படைப்பு, மீண்டும் உள்ணுர்விற்கு உள்ளீடாகத் தொடங்கிவிடும். ஆதனால் உள்ளீடு சற்று மாறி, புதிய வெளிப்பாடு தோன்றும்..இவ்வாறு வெளியீடு உள்ளீட்டில் மாறிமாறி செல்வாக்குச் செலுத்துவதையே பீட்பாக்லூப் என்று கூறியுள்ளேன்). இந்த பீட்பாக்லூப்பின் காரணம் ஒரு படைப்புச் சார்ந்து மற்றவர்களின் எதிர்வினை மட்டுமல்ல, எழுதியவரே தான் எழுதியதைப் படிக்கும் போது வாசகராகிவிடுகிறார்.
 
இந்தக் கதையில் கூட, பேனை, பூனை அது இது என்று ஏகப்பட்ட விடயங்களை, 'யாரின் பார்வையில் இக்கதை கூறப்பட்டது?' என்ற கேள்வி சார்ந்து சகாரா தற்போது அனுசரிக்கிறார். ஆனால் அந்தக் கேள்விக்கான பதில் உண்மையில் கதையிலேயே உண்மையாக இருக்கிறது. என்னபை; பொறுத்தவரை அது பேனையும் இல்லை பூனையும் இல்லை. ஆனால், பொளிப்புரையின் ஆதிக்கத்தில் கதை இப்போது மருவத்தொடங்கி விட்டது. கதை கருத்தரித்த புள்ளிக்கு எழுத்தாளர் மீண்டு உண்மையில் தனக்குத் தானே ஏன் இந்தக் கதை எழுதப்பட்டது என்று சிந்திப்பதற்கு இனிப் பிரயத்தனம் அதிகம் தேவைப்படும். பொளிப்புரைகளிற்கு முந்திய கதை மிக அழகாக இருந்தது என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். அந்தவகையில் கிருபனின் ஆதங்கத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன்.
 
சகாரா கதைகளில் அவர் இணைக்கும் படங்களை எங்கிருந்து எவ்வாறு தேடிப்பிடிக்கிறாரோ தெரியாது. ஆனால் அவை அற்புதம். படம்பார் பாடம் படி என்ற எங்களின் பால பாடம் சார்ந்து இன்று எத்தனையோ ஆய்வுகள் ஆமாம் என்று தலையாட்டி ஆமோதிக்கின்றன. படங்களின் பங்கு உங்கள் கதைகளில் அபாரம்.

 

 

இன்னுமொருவன்,

முதலில் விமர்சனம் ஒன்றை முன்வைத்து இந்தப்படைப்பின் உருவாக்கத்தை தேட முயற்சித்திருக்கிறீர்கள் தலை வணங்குகிறேன். உங்கள் தேடலில் புலப்படாத ஏதோ ஒன்றை வாசிப்பாளர்களின் பதிவுகளுக்கூடாகவும் அதற்கு கருத்திட்ட என்னுடைய பதிவுகளூடாகவும் உங்கள் முயற்சி முன்னேறியிருக்கிறது. இந்த விமர்சகனின் பார்வை கூர்ப்படைந்து வெற்றி பெறுவது புறவெளியை விட்டு அகவெளியில் பயணிக்கும் போதுதான் வாசகரின் கேள்வி சார்ந்து அனுசரித்து பதில் வழங்கல் என்பது அவர்களின் கருத்தை ஏற்புடையதாக்கி இன்னும் அவர்களின் மனதில் தோன்றும் விடயங்களை அறியும் ஆவலாக இருக்கும் என்பது விமர்சகர் அறியாத ஒன்றல்ல. அடித்துச் சொல்லப்படும் கருவுக்குப் பன்முகம் கிடையாது. இதுதான் இன்னதுதான் என்று விட்டால் வாசகர் மேற்கொண்டு இப்படைப்புப் பற்றி பேச முன்வரமாட்டார். வாசகரை சிந்திக்கத் தூண்டி தேடலில் உட்கார்த்தி வைப்பது அவ்வளவு இலகுவான விடயமும் அல்ல…. தேடல் ஏற்படவேண்டுமானால் படைப்பு மீள மீள வாசிக்கத்தூண்டவேண்டும். பொழிப்புரைகள் விமர்சனங்கள் என்பன ஒரு படைப்பின் அடிப்படை நோக்கையே மாற்றிவிடக்கூடியன. பொழிப்புரைகளுக்குப் பின்னால் கதை மருவிவேறு உருவங் கொள்வதும் சாத்தியமானது. இப்போது இவ்வளவு கருத்துப்பதிவு பொழிப்புரைகளுக்குப் பின்னால் மீண்டும் ஆரம்பக்கதையை வாசிப்போமானால் என்னை இப்போது எந்தப் பொழிப்புரை அதிகமாக கவர்ந்திருக்கிறதோ அதுவே அந்தப்படைப்பில் தெளிவாகப் புலப்படுவதுபோல் தோன்றும். ஏனெனில் என்னை ஈர்த்திருக்கும் தன்மையை மட்டுமே அதிகமாக மனம் நாடச் சொல்லும். நான் எழுதும்போது இருந்ததை விட அனைவரின் கருத்துக்களையும் வாசித்தபின்னால் எனக்கே நான் எழுதியவை புதுமையாகவும் வெவ்வேறு பரிமாணம் கொண்டவையாகவும் காட்சி அளித்து மீள மீள வாசிக்கத்தூண்டுகிறது. நல்ல காலம் கதை சிறிதாக அமைந்துவிட்டது. நிச்சயமாக நீங்கள் மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதில் ஐயமில்லை. உங்களுக்குக் கிடைத்திருக்கும் அனுபவங்களினூடாகவே உங்கள் விமர்சனம் இவ்வளவு தெளிவாக வெளிவருகிறது என்பதை உணர முடிகிறது. அத்தோடு இந்த படங்கள் இணைப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்….ஒருவரை முதலில் கவர்வது காட்சி அதன் பின்னரே மற்றவை எவையாகிலும்….. மனதை வசைக்கும் காட்சிகள் தென்படும்போது சில கணம் அதனிடத்தில் நின்று நிலைப்பது உண்மைதானே… கதை வடிவங்களுக்கும் நிச்சயமாக காட்சி என்பது இன்றியமையாதது என்பது என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை.. அதைப்போல்தான் தலைப்புகளும்….. சும்மா கவனமின்றி ஏனோ தானோ என்று வாசிப்பவரையும் இதற்குள் என்ன இருக்கும் என்று உள் நுழைந்து வாசிக்கத் தூண்டுவதில் தலைப்புகளுக்கும் பெரும் பங்கு உண்டு. அதற்கு மேலே பதியப்பட்டிருக்கும் பதிவகளே நல்ல சாட்சி. நகைச்சுவையாகக்கூட நண்பர்கள் பதிவிட்டிருக்கலாம் இருப்பினும் அவர்களை அந்த தலைப்பு ஈர்த்திருப்பதனால்தான் குறும்பாகவும் அவர்களால் இங்கு வந்து பதிவை இட்டுச் செல்ல முடிந்திருக்கிறது…..

அடுத்து உங்கள் பங்கிற்கு வைத்த வாசகன் கருத்தைப்பற்றியும் தொடர்கிறேன்……. அதற்கு முன்னால் இன்னும் சிலருக்குப் பதிவிட்டுவிட்டு தொடர எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளங்காத கதைகள் எத்தனையோ படித்திருக்கின்றோம். சில வேளைகளில் கதாசிரியர் நினைத்துப் பார்த்திராத விளக்கங்கள் கூட கதைக்குப் பொருந்தி வரும்! <_<

 

"எனது கதை சொல்லாத எதையும் நான் கதைக்கு வெளியே சொல்லிவிட முடியாது" என்ற ஜெயகாந்தன் சொல்லியிருப்பதாக அண்மையில் படித்திருந்தேன். :icon_idea: எனவே பதவுரை, பொழிப்புரைகள் எல்லாம் தேவையா?

பி.கு: நான் பச்சை போட்டது "வருடு" என்ற சொல் தந்த கிறக்கத்தினால்தான் :icon_mrgreen:

 

இது ரொம்பக் கொடுமை கிருமி :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழைப்பை ஏற்று வருடலாம் என்று வந்தேன்!! :D ஏமாந்து போனேன் :o

 

என்ன ஏமாற்றம்????

ஒரு மகவைத் தாய் வருடுவதில்லையா?

ஒரு தந்தை மகளின் தலையை வருடி பெருமிதம் கொள்வதில்லையா?

ஒரு அண்ணன் தங்கையின் தலையை வருடி பாசத்தைப் பொழிவதில்லையா?.....

 

இதில் என்ன ஏமாற்ம் உங்களுக்கு?

தாயானால் அச்சம் தொலைத்துவிட்டு அனைத்தையும் உங்களிடம் பேசலாம்

தந்தையானால் பணிவோடு அறிவுரைகளை நான் எதிர்பார்க்கலாம்

அண்ணன் என்றால் எல்லாவிடயத்திலும் ஏட்டிக்குப் போட்டியிடலாம்.....

 

இதில் எனக்கு நீங்கள் தாயா, தந்தையா, அண்ணனா? :lol:  :lol:  :D

இன்னுமொருவனின் விளக்கத்துடன் ஒத்துப் போகமுடிகின்றது. கதாசிரியர் படைப்பை உருவாக்குவதற்கான அதிர்வை படைப்பிலேயே தருவது இலகுவானதல்ல. சிறந்த மொழியாள்கை உள்ளவர்களாலேயே அதுமுடியும். அந்த வகையில் சகாறாவின் கதை சிறந்த மொழியாளுமையோடு விளங்குகின்றது. கதையா, விடுகதையா என்ற மயக்கத்தைத்தான் பின்னூட்டங்கள் தருகின்றன.

 

நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதெல்லாம் ரொம்ம டூ மச்!!!

 

சகாரா அக்காவின் முத்திரையே தனி. ஒவ்வொரு படைப்பும் நளினமாகவும் புதுமையாகவும் இருக்கும். தொடக்கத்தில் ஒரு பீடிகையுடன் வந்து இறுதியில் வாசகர்களை ஒரு புதிய தளத்துக்குள் விட்டுச் சென்று விடுவா. மிகுதிக் காட்சிகளை வாசகனே உய்த்தறிந்துகொள்ளவேண்டும். அதுவே அவவின் படைபுக்களின் வெற்றி என எண்ணுகின்றேன். வாழ்த்துக்கள் அக்கா! :)

 

டூ மச் என்றால் என்ன? :unsure:

 

நன்றி வாலி...

உண்மையாக படைப்புகள் வெற்றி பெறுவது என்பது படைப்பாளியைக்காட்டிலும் வாசகரின் கைகளிலேயே தங்கி இருக்கிறது. உண்மையில் இங்கு பதிவிட்டவர்கள் ஆரம்பத்திலேயே நகைச்சுவையாக சில பதிவுகளை மேற் கொண்டதாலேயே இப்பதிவு இவ்வளவு தூரம் பேசுபொருள் ஆகியிருக்கிறது. விளங்காத பையன்மாதிரி இசை முழுசிக் கொண்டு ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து வந்தவர்களும் சேர்ந்து மெருகேற்றி உயர்த்தி விட்டிருக்கிறார்கள். உண்மையில் இங்கு பதிவிட்ட நண்பர்களுக்கும் பச்சைப்புள்ளிகளை வழங்கி எனக்குள் உற்சாகத்தை விதைத்த மற்றவர்களுக்கும் நான் இவ்விடத்தில் நன்றி உரைக்க கடமைப்பட்டுள்ளேன். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வையின்.... எழுத்துக்களில் ஒரு, வீரியமும், திரிலும் இருக்கும்.

அதை... விட, அவ போடும்.. தலைப்பும் அழகானது.

வாழ்த்துக்கள்... வல்வை சகாறா. :)  

 

நன்றி தமிழ்சிறீ

Link to comment
Share on other sites

பாஞ்சின் பார்வையில் இறக்கையின் வாரிசு????கிகி[/size]

அதென்ன எனக்குமட்டும் நாலு கேள்விக்குறி????  வல்வை சகாறாவுக்கே விளங்காவிட்டால் நான் எந்த வளையில் போய் முட்ட...!!!! :o

 

புராதன காலத்தில், மடல் எழுதும் எழுதுகோலாக இருந்த பறவைகளின் இறக்கைதான் இன்று பேனாவாகப் பிறந்துள்ளது!...  இறக்கையின் வாரிசு!. :icon_idea:

 

உங்கள் கேள்விக்குப் பதிலளித்தேன்!. எங்கள் கேள்விக்குப் பதில் எப்போது வரும்?....  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என் பங்கிற்கு எனது புரிதலையும் வைத்து விடுகிறேன். உண்மை கதைசொல்லிக்கே வெளிச்சம்.
 
இந்தக்கதையினை முடிவு இப்படி இருக்கிறது: 'சாளரங்களின் திரைச்சீலையினை இழுத்து மூடிவிட்டு அவள் கட்டிலில் படுத்திருந்த (உண்மையில் உறக்கத்திலிருந்த என்று எழுதியிருப்பின் இன்னமும் பொருந்தியிருக்கும் என்பது எனது அபிப்பிராயம்) துணைவனின் மார்போடு அணைந்து கொண்டாள். நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத்தொடங்குகிறேன்'
 
ஒரு வரியில் சொல்வதனால், இரசிக்காது விடப்பட்ட எறவுஸ்ட்(இதுக்குத் தமிழ் தெரியவில்லை) பெண்மையின் பார்வையில் தான் கதை இருக்கிறது. அதனால் தான் கணவன் படுத்திருந்தான் என்பதைக் காட்டிலும் உறக்கத்திலிருந்தான் என்பது அதிகம் பொருந்தும் என்பது எனது அபிப்பிராயம்.
 
இந்தக் கதையின் ஆரம்பத்தில் வரும் சாளரமும் முடிவில் வரும் சாளரமும் முற்றிலும் வேறுவேறானவை. கதையின் ஆரம்பத்தில் கதைசொல்லி தனது வீட்டு ஜன்னல் ஊடாகத் தான் பார்த்துக்கொண்டு நிற்கிறார். வெளியில் காற்றும் பனிப்பூக்கள் போன்ற பனியும் கதைசொல்லிக்கு ஒரு தியானநிலையினை உருவாக்கி விடுகின்றன. 'எவ்வளவு நேரத்திற்குத் தான் இவற்றை ரசிப்பது?' என்ற இடத்தில் கதைசொல்லியின் அகம் ஆதிக்கம் எடுத்துக்கொள்கிறது. கதையின் முடிவில் மூடப்பட்ட திரைச்சீலை திறக்கப்பட்ட இடம் இது. 
 
அகத்தின் திரைச்சீலை திறக்கப்பட்ட பின்னர், அனைத்தும் அவள் தன்னைச் சார்ந்து தான் பேசுகிறாள். 'அவள் கரங்களின் தொடுகைக்காக மனதுள் ஏக்கங்கள் குமைந்து கொண்டிருந்தன' என்பது முதல் இவ்வாறு ஏகப்பட்ட மனந்திறந்த வசனங்கள் அவளது மனநிலையின் தாபத்தினையே பேசுகின்றன. புறக்கணிப்பு அல்லது அலட்சியப்படுத்தப்படல் அல்லது வேண்டாது விடப்படல் என்பன வேண்டுமாயின் எல்லோரிற்கும் தெரிந்திராததாய் இருக்கலாம், ஆனால் எறவுசல் அனைவருக்கும் பரிட்சயமான உணர்வு தானே. எறவுஸ்ட் நிலையில் அவள் தனது உணர்வை தன்னில் இருந்து பிரித்தெடுத்து ஒரு பிற மனிசி ஆக்கிப் பேசியுள்ளளாள். அவளிற்குள் அந்ததத் தருணத்தில் அது அவ்வளவு தத்ரூபமாக இருந்தது.
 
எழுத்துநடை அற்புதமாக விரிகிறது. தானே சிருஸ்ட்டித்த பிறமனிசி சார்ந்து தன்னை அவள் ஒரு தேவதையாக வர்ணிக்கிறாள். இது இட்டுக்கட்டப்பட்டதல்ல. அவள் அத்தருணத்தில் தன்னை அப்படித் தான் உணர்கிறாள். வெண்டைக்காய் விரல், குளித்து விட்டு ஈர முடியுடன் இரவுடையில் வரல் என அனைத்திலும் உணர்வு கொப்புளிக்கிறது. 
 
பல ஆண்களிற்கு மயக்கம் பிறக்கும். காரணம் ஆணும் பெண்ணும் பல படி வேறானவர்கள். பெண்ணின் எறவுஸ்ட் நிலையில் அவளிற்கு அவளைப் புகழ்வது மிகப்பிடிக்கும். அது ஒரு சிம்பனி என்று வைத்துக்கொள்ளலாம்.
 
'நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத்தொடங்குகிறேன்' என்ற கடைசிவரி, தன்நிலை எந்தச் சந்தேகமும் இன்றிப் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதற்காகவே அற்புதமாக வை;ககப்பட்டிருக்கிறது.
 
இவ்வளவும் நடந்தது தெரியாமல் அவள் கணவன் அவள் விளக்கணைத்த சமையலறையில் விளைந்ததை உண்டு தூங்கிக் கிடக்கிறான். அவளது அகத்தின் திரைச்சீலை வலிந்து இழுத்து மூடப்படுகிறது.
 
இந்தக்கதையில் என்ன சிக்கல் என்றால், இந்தக் கதை பிறந்த இடம் பிரத்தியேகமானது. அந்தப் பிரத்தியேக இடத்தில் இதனைக் கதைசொல்லியால் தங்குதடையின்றிப் பேசமுடியும். ஆனால் பொதுக்களத்தில் போட்டபோது, எச்சரிக்கை உணர்வுகள் படைப்பை வெனறு கிளம்பி விடுகின்றன. அதனால் பூனையும் பேனையும் அனுசரிக்கப்படுகின்றன.
 
 
கதையின் அளவைத் தாண்டி ஏற்கனவே பொழிப்பு வந்து விட்டதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். ஆனால் இன்னமும் பேசலாம்.
 
குறிப்பு: இது ஒரு வாசகனாய் எனது புரிதல் மட்டுமே. 

 

 

 

கதையின் அளவைத் தாண்டி ஏற்கனவே பொழிப்பு வந்து விட்டதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். ஆனால் இன்னமும் பேசலாம்.

சுத்த மோசமான வாசகப்பேனா போல் இருக்கிறது……….. :icon_mrgreen:  :icon_mrgreen: 

 

 

 

இந்த வாசகனின் அகவெளி அபாரம் ஆனால் ஒரு சிறு இழையில் தடம் புரட்டி படைப்பாளியை விழி பிதுங்க வைத்திருப்பது வாசகனின் சாமர்த்தியம். இவரென்ன இப்படி எழுதுகிறாரே என்று கோபத்திற்குப் பதில் இந்த வாசகனின் அகவெளி எழுத்தியலில் பிடிப்பு ஏற்படுகிறது… படைப்பாளி உபயோகித்த அதே யுக்தியை வைத்தே படைப்பின் அகவெளியை அலசியிருக்கிறது வாசகனின் பேனா. வாசகர்களைக் கலாய்க்க படைப்பாளி முன்வைத்த பொறியில் படைப்பாளியை மாட்டிவிட்டு நெஞ்சு நிமிர்த்துகிறது வாசகனின் பேனா. எப்போதுமே இன்னுமொருவன் முன்வைக்கும் விமர்சனமாகட்டும், வாசக எண்ணங்களாகட்டும் முத்திரை பதிப்பனவாகவே இருக்கின்றன.

 

எப்போதும் ஒரு படைப்பாளி என்பவர் அவர் கொடுக்கப்போகும் கருப் பொருளுக்குரிய அகவெளியைத் தனதாக உணர்ந்து எழுதினால்தான் அவர் எழுதும் படைப்பு வெற்றியடையும். செத்தவீட்டில் பிணமாக, திருமணவீட்டில் மணமக்களாக, பிரசவிப்பில் தாயாக, சனனத்தில் சிசுவாக, ஓடும் நதியினில் நீராக, ஏன் மனித உணர்வில் கலந்த நவரசங்களை எழுதமுனையும் வேளையில் சோகமாய், கோபமாய், தாபமாய், காதலாய், வெறுப்பாய், வியப்பாய், வீரமாய், பயமாய், சமநிலையாய் அவ்விடங்களுக்கு ஏற்ப எழுதும்போது அகவெளியில் அவ்வுணர்வுகளில் மூழ்கி எழும்போதுதான் சிறப்பான படைப்பிலக்கியம் தோன்றும் என்பதை சிறு இழையில் தடம்புரட்டி  திசை மாற்றக்கூடிய வாசகன் புரியாததல்ல.

இந்தக் கதையில் ஒரு ஆணாக படைப்பாளி மாறியிருப்பதை வாசகன் ஏற்றுக் கொள்ளவில்லை காரணம் வாசகனுக்கு புறநிலை பிம்பம் மனதிற்குள் ஆணித்தரமாக அமர்ந்திருப்பதாக இருக்கலாம். ஒரு ஆண் வருடலுக்கான தேடல்களுடன் அவாவுறும்போது நிச்சயமாக இவ்வுணர்வுகளைக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது…. வெளிப்படையாக சிலிர்ப்பதும், துளிர்ப்பதும், நிமிர்வதும், வீரியம் பெறுவதும் என்பதான சொற்கள் ஆண்களுக்கே உரித்துடையதாக சாரும் என்பதை வாசகன் அறியாதது போல் பாசாங்கு செய்வது எழுதிய என் மனதில் குறும்பான முறுவலை ஏற்படுத்துகிறது…..

 

வாசகரே ஒரு ஆணின் தொடுகை ஒரு பெண்மையை நாணவைக்கும், இந்நாணத்தினூடாக ஆணின் தேடலை இரட்டிப்பாக்கி நிமிர்வின்றி ஒடுங்கிய பெண்மைக்குள் உளவியல் தேடல் கொள்ளும் சிலிர்ப்பதும் , துளிர்ப்பதும் சாத்தியமானாலும் நிமிர்வும், வீரியமும் ஆண்மைக்கே சொந்தமாகி விடுகிறது. இவை என்னுடைய அக நுகர்வில் அறிந்தவை… அடக்கடவுளே…இதென்ன ஒரு வாசகனுக்குப் பதில் அளிக்க இன்னொரு படைப்பிற்குரிய வசீகரமாக சக்திகளை விரயம் செய்கிறேன். ஆதலால் இது பெருங்காதல் கொண்ட ஆணின் தேடலாக இப்படைப்பை உருவாக்க என்னையே ஆணாகப் பாவனை செய்து கொண்டேன்  ஊடல், கூடல் அறியாத பச்சைப்பாலகர்கள் இல்லைத்தானே. புறநிலை பிம்பத்தை அகத்திற்குள் போட்டுப் பார்க்காமல் அவ்விடத்தில் எதிர் பால் விம்பத்தை போட்டு பார்க்கும்படி வாசகப்பேனாவிறகு வேண்டுகோள் விடுக்கிறேன்… :rolleyes:  :rolleyes: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆண் வாசகர்களை மட்டம் தட்டும் கதை..! எனது கண்டனங்கள். :lol::)

 

எப்பிடி நெடுக்கு?????

பத்தி பத்தியா எழுதியென்டாலும் விளக்கம் தாங்கோ  :icon_mrgreen:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை ஒரு தலை சிறந்த எழுத்தாளர், கவிஞர் !

 

எழுத வேண்டும் என்ற 'தாகம்' அவரிடம் நிறைய உண்டு !

 

ஆனால், அவர் தனது கற்பனைகளைக் காகிதத்தில் துப்ப நினைக்கும் போதெல்லாம், எதுவோ ஒன்று இடைஞ்சலாக வந்து தடுத்து விடுகின்றது!

 

அதற்கு, முள்ளிவாய்க்கால் சம்பவங்களும், நம்பியிருந்த 'இந்தியா' என்ற நந்தியின் செயல்பாடுகளும் காரணமாக இருக்கலாம்!

 

அதாவது அவரது எண்ணங்களுக்கு 'வடிகாலமைக்கும்' பேனா, நீண்ட காலமாகக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது!

 

தனது ஏக்கங்களையும், தாகங்களையுமே 'பேனாவின்' மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது எனது கணிப்பு!

 

தோற்றுப்போனவனை விடவும் 'துவண்டு போனவனின்' மனநிலையே, அவரது கதை மூலம் வெளிப்படுகின்றது!

 

மீண்டு வாருங்கள், எங்கள் அபிமான கவிதாயினியே! :D

 

வருவதற்கான பெருமுயற்சியில்தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன எனக்குமட்டும் நாலு கேள்விக்குறி????  வல்வை சகாறாவுக்கே விளங்காவிட்டால் நான் எந்த வளையில் போய் முட்ட...!!!! :o

 

புராதன காலத்தில், மடல் எழுதும் எழுதுகோலாக இருந்த பறவைகளின் இறக்கைதான் இன்று பேனாவாகப் பிறந்துள்ளது!...  இறக்கையின் வாரிசு!. :icon_idea:

 

உங்கள் கேள்விக்குப் பதிலளித்தேன்!. எங்கள் கேள்விக்குப் பதில் எப்போது வரும்?....  :(

 

இப்பிடி ஏதாவது ஏடாகூடமாக குறியீடுகளைப் போட்டால்த்தானே நீங்கள் மறுபடியும் மறுபடியும் இங்கு வந்து அதனை அறியும் ஆவலில் நேரத்தைச் செலவிடுவீர்கள் :icon_idea: ..... அப்படி நடந்தால்தானே என்னுடைய அக்கையார் உங்களை நன்றாக மொத்து மொத்தென்று மத்தளம் வாசிக்கலாம். :D ... என்னுடைய அகவெளியில் மொத்துப்படும் மத்தளம் :lol: ஆகா... என்னமாய் தாளமிடுகிறது... அதை இரசிக்கக் கொடுத்து வைக்கவேண்டும். :wub:

 

உங்களுடைய கேள்வி என்ன எதற்கும் திரும்ப கேளுங்கோ.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி நெடுக்கு?????

பத்தி பத்தியா எழுதியென்டாலும் விளக்கம் தாங்கோ  :icon_mrgreen:  

 

இதுக்கு பத்தி எல்லாம் தேவையில்ல.. பக்கங்களை எண்ணிப் பாருங்கோ. :D:lol:

Link to comment
Share on other sites

இப்பிடி ஏதாவது ஏடாகூடமாக குறியீடுகளைப் போட்டால்த்தானே நீங்கள் மறுபடியும் மறுபடியும் இங்கு வந்து அதனை அறியும் ஆவலில் நேரத்தைச் செலவிடுவீர்கள் :icon_idea: ..... அப்படி நடந்தால்தானே என்னுடைய அக்கையார் உங்களை நன்றாக மொத்து மொத்தென்று மத்தளம் வாசிக்கலாம். :D ... என்னுடைய அகவெளியில் மொத்துப்படும் மத்தளம் :lol: ஆகா... என்னமாய் தாளமிடுகிறது... அதை இரசிக்கக் கொடுத்து வைக்கவேண்டும். :wub:

 

உங்களுடைய கேள்வி என்ன எதற்கும் திரும்ப கேளுங்கோ.... :icon_mrgreen:

ஆனாலும் இது ரெம்ப...... ரெம்ப... அதிகம். பாவம் நெடுக்குத் தம்பி.! பக்கங்களாக எழுதியும் பலனில்லை எனும்போது நான் எம்மாத்திரம் கவிதாயினியே..??  :o:(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.