Jump to content

வா...என்னை வருடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை ஒரு தலை சிறந்த எழுத்தாளர், கவிஞர் !

 

எழுத வேண்டும் என்ற 'தாகம்' அவரிடம் நிறைய உண்டு !

 

ஆனால், அவர் தனது கற்பனைகளைக் காகிதத்தில் துப்ப நினைக்கும் போதெல்லாம், எதுவோ ஒன்று இடைஞ்சலாக வந்து தடுத்து விடுகின்றது!

 

அதற்கு, முள்ளிவாய்க்கால் சம்பவங்களும், நம்பியிருந்த 'இந்தியா' என்ற நந்தியின் செயல்பாடுகளும் காரணமாக இருக்கலாம்!

 

அதாவது அவரது எண்ணங்களுக்கு 'வடிகாலமைக்கும்' பேனா, நீண்ட காலமாகக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது!

 

தனது ஏக்கங்களையும், தாகங்களையுமே 'பேனாவின்' மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது எனது கணிப்பு!

 

தோற்றுப்போனவனை விடவும் 'துவண்டு போனவனின்' மனநிலையே, அவரது கதை மூலம் வெளிப்படுகின்றது!

 

மீண்டு வாருங்கள், எங்கள் அபிமான கவிதாயினியே! :D

 

இதைத்தான்  பல  காலமாக சகாராவிடம் கூறி  வருகின்றேன்

ஆனால்  இதுவெல்லாம்  கணக்கே இல்லை

இன்னும் இருக்கு

ஆனால்...

வரணும்

வருவார்

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான்  பல  காலமாக சகாராவிடம் கூறி  வருகின்றேன்

ஆனால்  இதுவெல்லாம்  கணக்கே இல்லை

இன்னும் இருக்கு

ஆனால்...

வரணும்

வருவார்

 

விசுகு அண்ணா எதுவாக இருந்தாலும் தன்னால் கனிந்து வெளிப்படும்போதுதான் அதன் முழுமையை அனுபவிக்கமுடியும். அது எழுத்துத் துறைக்கும் விதிவிலக்கல்ல மற்றைய கலைகளைக்காட்டிலும் இலக்கியத்தில் அணைகள் போடவோ வட்டம் போட்டுக்கொண்டு எழுதகோல்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பதோ இயலாத ஒன்று அப்படி நிறுத்தி எழுது என்னும்போது எழுதியும் நில் என்னும் போதும் நிறுத்தியும் எழுதினால் அந்த எழுதுகோலின் படைப்புகள் உயிர்ப்பைத் தொலைத்துவிடும். எழுத்து என்பது கிணறு அல்ல அது சுனையாக கசிந்து நதியாக மாறி, ஆறாகப் பெருகி கடலாகப்பரவவேண்டும். அத்தகைய எழுத்துகள் கிணறுகளுக்குள் அடங்காது தேவை என்னும்போது எடுக்கவும் தேவையில்லை என்றபோது சேமிக்கவும் இயல்பான எழுத்தாளனுக்குத் தெரியாது. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு எழுத்தாளனால் எழுதவும் முடியாது மற்றவர்கள் மறுக்கிறார்கள் என்பதற்காக ஒரு எழுத்தாளனால் முடங்கவும் முடியாது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய இந்த படைப்பை பற்றிய  விமர்சனங்கள யாழ் உறுப்பினர்கள் அல்லாத வெளியிடங்களிலும் நிறையவே எதிர் கொள்ள வேண்டிதாக இருக்கிறது. விமர்சனம் என்றால் அது அவரவர்களுடைய உணரும் தன்மையைச் சூழலை வைத்தே உருவாகிறது என்பதை இந்தப்படைப்பு எனக்கு நன்றாக இனம் காட்டியிருக்கிறது. இந்தச்சமயத்தில் நான் 90களின் முற்பகுதியில் வாசித்த கவிஞர் வைரமுத்துவின் ஒரு கவிதைப்படைப்பை இங்கு இணைப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப்படைப்பை  கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய காலத்தில் மிகுந்த சர்ச்சைக்குரியதாக பேசப்பட்ட படைப்பு இது நீங்களும் அத்தகைய படைப்பை அறிந்து கொள்ளுங்கள். ஒரு கவிஞனுக்கு எதிராக பெண்கள் பக்கமிருந்து பெரும் போர்க்கொடியைத் தூக்கப்பண்ணிய படைப்பு என்று சொன்னாலும் மிகையாகாது.

 

 

இக்கவிதை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பெய்யெனப் பெய்யும் மழை கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றது!

 

14-vairamuthu-1-300.jpg

 

அழைப்பு!

தயவுசெய்து
என்னை தொல்லைசெய்!

 

தயவுசெய்து
என்னை கொள்ளையடி

 

கழுத்தடியில்
ஒரு
செல்ல கடி கடி

 

கூந்தல் கலைத்து
பூக்களை உதிர்த்துவிடு

 

ஓடிப்பிடித்து
என்னை உருக்குலைத்து
போடு

 

குளித்துவரும்
என்னை மீண்டும்
அழுக்காக்கு

 

எதிர்பாரா இடத்தில்
என்னை தீண்டு

 

எவ்வளவு இயலுமோ
அவ்வளவு தழுவு

 

எங்கே என் உயிர் எண்டு
கண்டு பிடி

 

அதன்
இட வலம் தொடு

 

இது தான்
இது தான் நான் கேட்டது

 

உதட்டு எச்சிலால்
உடல் பூசு

 

முத்தமிட்டு
என் மூச்சை
நிறுத்து

 

இது ஒன்றும்
ஒரு வழிப்பாதையல்ல

என் பங்கு செலுத்த
எனக்கும் இடம் கொடு

 

அங்கங்கே பரவு

எலும்பின் மச்சைகளின்
ஊருடுவு

 

மார்பக பள்ளத்தில்
முகம் வைத்து மூச்சுவிடு

 

மேகங்களுக்கு இடையில்
நட்சத்திரம் தூங்கினாலும்

இலைகளுக்கு இடையில்
காற்று தூங்கினாலும்

என் கண்கள்உனக்காக
இரவெல்லாம்
விழித்திருக்கும்

உனக்கில்லாத உரிமையா?

 

பூனையின் பாதம்
பொருத்தி
பொசுக்கென்று வந்து
புடவையிழு!

 

தீவிரத்தால் என்னை
திணறவை

 

என்னை தீண்டி விட்டு
எங்கேனும் ஒழிந்து கொண்டு
நித்தம் ஒரு தடவை
என்னை அழவை

 

என் பெண்மையின்
பரிபூரணமே!

 

என்
வெற்றிடம் வழியே
நிறைந்த நிறைவே

 

தாழாத தணங்கள்
தாழ்ந்தன உனக்காக!

 

ஆகாய கங்கை
பாய்ந்தது
உனக்காக

வா

என்னை வலி செய்

உயிர் பருகி என்னை
ஒலிசெய்

 

என்னுயிர் பயிராகும்
நீ பதித்த பள்ளத்தில்

 

எனக்குள்ளே பூப்பொழியும்
நீ முட்டும் அதிர்வில்

 

உன் நகர்த்தலுக்காக
துடிக்குது என் ஆடை

 

உன் நகம்
கிழிக்க
வீங்குது என் மார்பு!

 

தொட்டுக்கொண்டுறங்கும்
சுகம் ஒண்டு கருதி
உடல் என்ற உலையில்
கொதிக்குது என்குருதி!

 

நீ தந்த சுகம் எல்லாம்
நெற்றியில் தீ எரியும்

தியானத்தில்
வந்ததில்லை

 

வில்லாய் விறைக்கும்
கலவியில் கண்டதில்லை

பிரசவம் முடிந்த
பெரு மூச்சில்
கண்டதில்லை

 

எங்கே
மீண்டும் ஒரு முறை
முந்தானைக்குள் புகுந்து
முயல் குட்டியாகு!

 

தட்டாதே
தாய் சொல்லை கேள்

பத்துமாதம்
என் வயிறு சுமந்த
பிஞ்சு பிரபஞ்சமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படம். பாடல் எழுதியது  வைரமுத்துவோ  சரியாய்த் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த எழுத்தாளனிடமும்  காமரசத்தை சற்ரே உரசிச் செல்லும் நெகிழ்வான பக்கம் உண்டு. அவற்ரை அப்பப்ப எவ்வளவு தெளிக்கின்றார்கள் என்பதில் தான் கவிஞ்ர்கள் வேறு படுகின்றனர்...! :)

 

புஸ்பா தங்கத்துரை, சாண்டில்யன் /  பிரபஞ்சன் , கல்கி போல...!

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

மீளவும் பார்க்கும்போதுதான் நாம் யார் என்பதும் நமக்கான கொடை எது என்பதும் புரிபடுகிறது. வாழ்வியலின் பக்கங்கள் ஒவ்வொன்றும் கற்றுதரும் விடயங்கள் அளப்பெரியன. தொடர்வோம். எழுதுவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.