Jump to content

புலம் பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா? 

[Tuesday, 2014-02-18 23:49:01]
tamil-learn-seithy-200.jpg

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிறந்து, வளர்ந்து, மறைந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலமொழி கோலோச்சியது. அதற்கு அடுத்ததாக சமற்கிருதம் போற்றப்பட்டது. தமிழ் ஆதீனங்களிலும் தமிழ்ப் பண்டிதர்களது வீடுகளிலும் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. பாரதியார் ஆங்கிலம், சமற்கிருதம் உடபட பல மொழிகள் படித்தவர். ஆனால் பாரதியாரது காதல் தமிழ்மொழி மீதுதான் இருந்தது. அதனை அவர் பல பாடல்களில் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

  

நாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்

வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே

என்று பிறந்தனள் என்றறியாத இயல்பினள்

எனத் தமிழை ஏற்றிப் போற்றிப் பாடிய பாரதியாருக்கு உள்ளுர ஓர் அச்சம் இருந்தது. எதிர்காலத்தில் தமிழ் மெல்லச் சாகும் மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் என்ற அச்சம் அவரிடம் இருந்தது.

அதனைத் தமிழ்த் தாய் சொல்வது போல் பாரதியார் பாடியிருக்கிறார்.

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச 

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருது மேற்கே - அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை - அவை

சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை

என்ற கருத்து பாரதியார் காலத்தில் உரம் பெற்றிருந்தது. இன்றும் அப்படியான கருத்து ஆங்கிலம் கற்ற பல தமிழ் அறிவாளிகள், கல்விமான்கள் இடையே உள்ளது.

இன்று உலகில் வாழுகின்ற 600 கோடி மக்கள் மொத்தம் 6,000 மொழிகளைப் பேசுகின்றார்கள் எனக் கூறப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 6,000 மொழிகளிலே வெறுமனே 600 மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்குமாம். எஞ்சிய 5,400 மொழிகளும் அழிந்து விடும் என்று மொழியியலாளர்கள் எதிர்கூறுகிறார்கள். மேலும் இன்றைக்குப் பேசப்படுகின்ற 6,000 மொழிகளில் 3,000 மொழிகளை 1,000 க்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய 1,500 மொழிகளை 100 பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். அய்ந்நூறு மொழிகளை வெறும் 10 துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களை சமூகவியலாளர்கள் பட்டியல் போட்டிருக்கிறார்கள்.

(அ) பிற மொழி ஊடுருவல் மற்றும் அதன் ஆதிக்கம்.

(ஆ) வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக உருவாவது. எடுத்துக்காட்டு மலையாள மொழி.

(இ) தாய்மொழிக்குப் பதில் வேற்றுமொழி கற்கை மொழியாக, முதல்மொழியாக மாறிவிடுவது.

(ஈ) இளந்தலைமுறையினருக்குத் தாய் மொழியைக் கற்கவும் பேசவும் ஆர்வம் அல்லது வாய்ப்பு அற்றுப் போவது.

(உ) அரசு இல்லாதது. இருந்தாலும் அதன் ஆதரவு அற்றுப் போவது.

தமிழ்நரட்டில் தமிழ் கற்கை மொழியாக இல்லை

தமிழ்நாட்டில் தமிழ் மொழி உயிரோடு இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் அங்கு தமிழை ஏழு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பேசுகிறார்கள். சிறிது காலத்துக்கு முன்னர் அய்க்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாடு அவையின் அறிக்கை ஒன்றில் 100 ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாகத் தமிழும் இருகப்போவதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் 100 ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. இருந்தும் இன்றைய போக்கு நீடித்தால் 300 ஆண்டுகளுக்கு முன்னர் மொழி அழிவதற்கு உண்டான அத்தனை காரணிகளும் இப்போது தமிழுக்கு இருக்கின்றன. குறிப்பாகத் தமிழ் நாட்டில் தமிழ் கற்கைமொழித் தகைமையை இழந்து பள்ளிக்கூடங்களில் தனி ஒரு பாடமாக மட்டும் முடக்கப்பட்டு விட்டது.

திரைப்படத்துறை உள்ளிட்ட தமிழ்நாட்டு ஊடகங்களில் ஆங்கிலக் கலப்பு மிகுதியாகக் காணப்படுகிறது. உரையாடல்கள் பெரும்பாலும் தமிங்கிலத்தில் இடம்பெறுகின்றன. குறிப்பாக திரைப்பட நடிக, நடிகர்கள் உரையாடும் போது வாயில் தமிழே வரமாட்டேன் என்கிறது. இதற்குத் திரைப்படத் துறையில் பிறமொழி பேசுவோரது மேலாண்மை இருப்பது ஒரு காரணம்.

கோயில்களில் தமிழ் வழிபாட்டு மொழியாக இல்லை. இசையில் தெலுங்குமொழியின் ஆதிக்கம். வழக்காடு மன்றங்களில் தமிழ்மொழிப் பயன்பாடு முற்றாக இல்லை. வீட்டுத் திருமணங்களில் தமிழ் இல்லை. ஏன் பிறக்கும் குழந்தைகளின் பெயர்களில் கூடத் தமிழ் இல்லை. தங்களை தமிழ் உணர்வாளர்கள் எனக் கூறிக் கொள்ளும் தமிழர்கள் கூடத் தமது பிள்ளைகளுக்கு பொருள் விளங்காத வேற்று மொழிப் பெயர்களையே சூட்டி மகிழ்கிறார்கள்.

ஈழத்தில் தமிழ்மொழி

தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக தமிழ்மொழி அதிகமாகப் பேசப்படும் நாடு ஈழம் ஆகும். மொத்தம் 2.2 கோடி மக்களில் 25 விழுக்காடு மக்கள் (முஸ்லிம்கள் உட்பட) தமிழ் பேசுகிறார்கள். தமிழ் அரச மொழியாக ஒப்புக்கு மட்டும் இருந்தாலும் கற்கை மொழி தாய்மொழி தமிழாக இருக்கிறது. மழலைப் பள்ளி தொடக்கம் பல்கலைக் கழகம் வரை தமிழில் படிக்கலாம். அண்மைக்காலத்தில் பல்கலைகங்களில் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் ஆங்கிலம் கற்கை மொழியாக மாற்றப்பட்டுள்ளது.

மலைநாட்டில் 5 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அங்கே தமிழ் கற்கை மொழி என்றாலும் தமிழ்ப் பள்ளிகள் இல்லாத போது பிள்ளைகள் சிங்களப் பாடசாலைகளில் படிக்க வேண்டிய கட்டாயம் எழுகிறது. இதனால் காலப் போக்கில் அவர்கள் சிங்களவர்களாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. மலை நாட்டுத் தமிழர் தங்கள் தாய்மொழியை இழக்கவில்லை. ஆனால் பெரும்பான்மை இனத்தோடு திருமண உறவுகள் செய்து கொள்வதால் இனக் கலப்பு இடம் பெற்று வருகிறது. இளம்தலைமுஐற சிங்கள மொழி மூலம் கல்வி கற்பதால் அவர்கள் படிப்படியாகக் கரைந்து வருகிறார்கள்.

வட - கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் இப்போது சிங்கள மொழி மூலம் படிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் தமிழ்மொழி பேசுவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவிடும் அபாயம் இருக்கிறது.

மொழிமாறியதால் இனம் மாறிய தமிழர்கள்

சென்ற நூற்றாண்டில் கத்தோலிக்க பாடசாலைகளில் கற்கைமொழியைத் தமிழில் இருந்து சிங்களத்துக்கு மாற்றியதால் கம்பகா மாவட்டத்தில் உள்ள நீர்கொழும்பு, புத்தளம் பகுதிகளில் வாழ்ந்த கத்தோலிக்கத் தமிழ்ப் பரதவர்கள் இன்று சிங்களவர்களாக மாறிவிட்டார்கள். இவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்னர் jதமிழ்நாட்டின் கரையோரப் பட்டினங்களான கீழக்கரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்து போர்த்துக்கேயரால் கொண்டு செல்லபட்டவர்கள். அவர்களது மொழிமாற்றம் இனமாற்றத்தில் முடிந்து விட்டது.

இந்த இன மாற்றத்தை உருவாக்கியவர் கத்தோலிக்க ஆயர் எட்மன்ட் பீரீஸ் ஆவர். இவர் டிசெம்பர் 27, 1897 இல் சிலாபம் என்ற ஊரில் பிறந்தவர். மும்மொழி வல்லுநர். இளவயதில் தனது பாட்டனிடம் சிங்களம் மற்றும் தமிழ் இலக்கியம் படித்தவர். 1924 இல் பாதிரியராக ஞானதீட்சை பெற்ற இவர் 1940 இல் ஆயர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இப்படிப் பதவி உயர்த்தப்பட்ட முதல் சிங்களவர் பீரீஸ் ஆவர். இவர் தனது உத்தியோக சின்னமாகச் சிங்கம் பதிக்கப்பட்ட சிலுவையை வைத்திருந்தார். இரண்டாவது வத்திக்கன் அவை (1962-65) தாய்மொழியில் தேவாலய வழிபாட்டை அனுமதித்ததை அடுத்து ஆயர் பீரீஸ் திருப்பலி பூசை, தோத்திரங்கள் ஆகியவற்றை இலத்தீன் மொழியில் இருந்து சிங்களத்துக்கு மாற்றிவிட்டார்.

இந்தக் காலப் பகுதியில் மன்னார் மாவட்டம் யாழ்ப்பாண மறை மாவட்டத்தில் இருந்தது. இல்லையேல் மன்னாரில் வாழ்ந்த தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களத்தைப் படித்து சிங்களவர்களாக மாறியிருப்பார்கள். இதில் ஒரு வியப்பு என்னவென்றால் இங்கு தமிழ் இந்துக்கள் சிறுபான்மையராக இருந்தும் அவர்கள் தங்கள் இன அடையாளத்தை இழக்காமல் இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள்.

19 ஆம் நூற்றாண்டில் கூலிகளாகப் புலம்பெயர்ந்த தமிழ்நாட்டுத் தமிழர்கள்

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர் பிடித்து ஆண்ட நாடுகளில் தேயிலை, கோப்பி, இரப்பர், கரும்புச் செய்கைகளில் ஈடுபட்டார்கள். அதற்குக் கூலியாட்கள் தேவைப்பட்டனர். என்ன காரணத்தாலோ அவர்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள்தான் பேரளவு கண்ணில் பட்டார்கள். அவர்களை இலட்சக் கணக்கில் காலனி நாடுகளுக்கு ‘ஒப்பந்தக் கூலிகளாக’ (indentured labour) அழைத்துச் சென்று குடியேற்றினார்கள். கங்காணிகள் மூலம் துறைமுகங்களுக்குக் கொண்டு வரப்பட்டு, ‘உடல் நோயோ மன நோயோ இல்லை’ என்று சான்றிதழ் அளிக்கப்பட்டு, ஒப்பந்தத்தில் கைநாட்டு/கையெழுத்து வாங்கப்பட்டு, கழுத்தில் எண் எழுதிய வட்டத் தகரம் கட்டப்பட்டு, கப்பலில் கால் நடைகள் போல் ஏற்றப்பட்டார்கள். போகுமிடம் பற்றியோ வேலை பற்றியோ ஒன்றையுமே அந்த மக்கள் தெரிந்திருக்கவில்லை.

இந்த தமிழச் சாதி எங்கெல்லாம் கொண்டு போகப்பட்டு எப்படியெல்லாம் தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வதை பட்டார்கள் என்பதை பாரதியார் மனம் நொந்து பாடியிருக்கிறார்.

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்

தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்

மிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள

பற்பல தீவினும் பரவி யிவ்வெளி்ய

தமிழச் சாதி, தடியுதை யுண்டும் 

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்

வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்

பிணிகளாற் சாதலும் ..............................

இலங்கைத் தீவுக்கு 1823 ஆம் ஆண்டு ஆளுநர் எட்வேட் பார்ன்ஸ் அவர்களுக்குச் சொந்தமான கன்னொருவ தோட்டத்தில் (பேரதேனியா) இருந்துதான் மலைநாட்டுத் தமிழர்களுடைய வரலாறு தொடங்குகிறது. இவர்கள் தகரத்தால் வேய்ந்த 'லைன்' என்ற சிறு கொட்டில்கள் கொண்ட தொகுதிகளில் குடியிருத்தப் பட்டார்கள். தொடர்ந்து நடந்த புலப்பெயர்வால் 1921 இல் அவர்களது எண்ணிக்கை 692,000 ஆக உயர்ந்தது. 1946 இல் இந்த எண்ணிக்கை 7,33,700 (விழுக்காடு 11.02) ஆக மேலும் உயர்ந்தது. ஆனால் 1948 இல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா அவர்களால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டம் அவர்களது குடியுரிமையைப் பறித்தது. 1949 இல் தேர்தல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் அவர்களது வாக்குரிமையையும் பறித்தது. பின்னர் டிசெம்பர் 03, 1964 இல் எழுதப்பட்ட லால் பகதூர் சாஸ்திரி - பண்டாரநாயக்க உடன்படிக்கையின் 525,000 தமிழகத் தமிழர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். இதனால் 2011 இல் மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 8,42,323 (4.16) ஆக வீழ்ச்சி அடைந்தது. விளைவு மலைநாட்டுத் தமிழர்களது நாடாளுமன்ற பிரதிநித்துவம் குறைந்து விட்டது.

இலங்கைத் தீவுக்க, தமிழ்நாட்டு சமூக ஏணியின் அடிமட்டத்தில் இருந்த தமிழர்களே புலம் பெயர்ந்தார்கள். அவர்களது வாழ்க்கை முறை கடந்த 200 ஆண்டுகளில் பெரிய மாற்றத்தைப் பெறவில்லை. உலகில் படுமோசமாகத் சுரண்டப்படும் தொழிலாளர்கள் என்ற 'பட்டம்' இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில், இதே பாணியில் வேறு நாடுகளுக்குத் தமிழர்கள் கூலிகளாகப் புலம் பெயர்ந்தார்கள். மொரிசியஸ், பிஜீ, றியூனியன், தென் ஆபிரிக்கா, மடகஸ்கர், மலேசியா, சிங்கப்பூர், கரிபியன் தீவுகள், சீசெல்ஸ் போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தார்கள். இவர்கள் இன்று தங்கள் தாய்மொழியை முற்றாக மறந்துவிட்டார்கள். அவர்களது சமய எச்சங்களே அவர்களைத் தமிழர்கள் என அடையாளப் படுத்துகிறது.

மொரிசியஸ் தீவில் 115,000 தமிழர்கள் (6.1) வாழ்கிறார்கள். ஆனால் வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 0.6 விழுக்காடு மட்டுமே. இவர்கள் 1727 க்குப் பிறகு குடியேறியவர்கள். தமிழைப் பேரளவு மறந்து விட்டாலும் 125 கோயில்களைக் கட்டி வழிபாடு செய்கிறார்கள். தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம், தீபாவளி, மகா சிவராதிரி கொண்டாடுகிறார்கள். திருவள்ளுவர், பாரதி போன்றோருக்கு விழா எடுக்கிறார்கள். இருநூறு தமிழ்மொழி தொடக்கப்பள்ளிகளில் அதேயளவு ஆசிரியர்கள் தமிழைக் கற்றுக் கொடுக்கிறார்கள். இதனால் இவர்களிடம் தங்கள் தலைமுறை பற்றிய ஒருவித பெருமிதம் காணப்படுகிறது. ஆனால் கிறித்தவ தமிழர்கள் மொலாட்டோ மற்றும் கிரியோலி இனத்தவர்களோடு இரண்டறக் கலந்து தங்கள் இன அடையாளத்தை இழந்து விட்டார்கள்.

ரீயூனியன் தீவில் 30 விழுக்காட்டுக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். வணிகம், தொழில், அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் செல்வாக்கு உடையவர்களாக காணப் படுகிறார்கள். மொரிசியஸ் தமிழர்களைப் போலவே ரீயூனியன் தமிழர்களும் 1848 இல் புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் இருந்து ஒப்பந்தக் கூலிகளாக அங்கு புலம் பெயர்ந்தவர்கள். கிரியோலி மொழியே பரவலாகப் புழக்கத்தில் உள்ளது. தமிழர்களில் 95 விழுக்காட்டினர் தமிழ் பேசத் தெரியாதவர்கள். இவர்கள் அய்ந்து ஆறு தலைமுறைக்குள் தங்கள் மொழியை இழந்துவிட்டார்கள். மொரிசியஸ் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றை ரீயூனியன் தமிழர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அண்மையில் இங்கு 3 உயர்நிலைப் பள்ளிகளிலும் ஒரு கல்லூரியிலும் தமிழ் விருப்ப பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.

றீயூனியனுக்கு போனவர்களே அங்கிருந்து சீசெல்ஸ் தீவுக்கு இடம்பெயர்ந்தார்கள். இன்று சுமார் 115,000 பேர் அங்கு வாழ்கிறார்கள். இந்து பாரம்பரியத்தை கைவிடாது ஓரளவு வசதியாக வாழ்கிறார்கள்.

இடம்போதாத காரணத்தால் ஏனைய நாடுகள் பற்றி எழுதுவதை தவிர்த்துக் கொள்கிறேன்.

20 ஆம் நூற்றாண்டில் இடம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி தொடக்கம் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து கூலிகளாக வெளிநாடுகளுக்கு ஆங்கிலேயரால் அழைத்துச் செல்லப்பட்டதைப் பார்த்தோம். நூற்றிஅய்ம்பது ஆண்டுகள் கழித்து மேலும் ஒரு தொகையினர் ஈழத்தில் இருந்து வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இவர்கள் கூலிகளாக அல்லாமல் பிறந்த நாட்டில் பெரும்பான்மை இனத்தால் மொழி, சமய அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை காரணம் காட்டி அரசியல் அடைக்கலம் கேட்டு ஏதிலிகளாகச் சென்றார்கள். இவர்களில் மெத்தப் படித்தவர்களும் இருந்தார்கள், அதிகம் படியாதவர்களும் இருந்தார்கள். இந்தப் புலப்பெயர்வு 1983 இல் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக் கலவரத்தை அடுத்து இடம்பெற்றது. 1983 - 2003 இடைப்பட்ட காலத்தில் 12 இலட்சம் தமிழர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தார்கள்.

தமிழ்நாட்டுக்கு மட்டும் 1,25,000 பேர் ஏதிலிகளாக ஈழத்தில் இருந்து 1983, 1990, 2006 கால கட்டங்களில் இடம்பெயர்ந்தார்கள். இவர்களில் 90,000 பேர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 117 க்கு மேற்பட்ட ஏதிலி முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் போதுமான அடிப்படை வசதிகளின்றி கூலிவேலை செய்து பிழைக்கிறார்கள். ஏனையோர் முகாம்களுக்கு வெளியே வாழ்கிறார்கள். அகவை 25 க்கு உட்பட்ட பலர் சொந்த மண்ணின் வாசனை அறியாதவர்கள்.

1983 க்கு முன்னரும் ஒரு சிறு தொகை தொழில்சார் வல்லுநர்கள் (மருத்துவர்கள், கணக்காளர்கள், பொறியியலாளர்கள்) இங்கிலாந்துக்கு தொழில் வாய்ப்புத் தேடிப் புலம் பெயர்ந்தார்கள்.

இப்படிப் புலம் பெயர்ந்தவர்கள் அய்ரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் குடியேறினார்கள். கனடாவில் மட்டும் இன்று 3,50,000 பேர் வாழ்கிறார்கள். இது கனடாவின் மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு. இவர்களில் 90 விழுக்காடு கனடிய குடியுரிமை பெற்றவர்கள். இங்கு ஏதிலிகளாக வந்து நிரந்தர வதிவிட குடிமக்களாக ஏற்றுக் கொண்ட பின்னர் இவர்களுக்குத் தங்களது குடும்ப உறுப்பினர்களை வரைவழைக்கும் உரிமை வழங்கப்படுகிறது.

கனடா ஒரு குடியேற்ற நாடு. ஆங்கிலேயர்கள் மற்றும் பிரஞ்சு மக்கள் இரண்டாவது தேசிய இனங்களாக (Second Nations) அடையாளப் படுத்தப்படுகிறார்கள். பூர்வீக குடிமக்கள் (Metis, Inuit) முதலாவது தேசிய இனமாக விளங்குகிறார்கள். இந்த இரண்டிலும் சேராதவர்கள் வெளிப்படையான சிறுபான்மையினர் (visible minorities) என அழைக்கப்படுகிறார்கள். யாராக இருந்தாலும் எல்லாக் குடிமக்களுக்கும் ஒத்த உரிமைகள் அரசியல் யாப்பிலேயே வழங்கப்பட்டுள்ளன. அதனை யாரும் மீறமுடியாது. மீறினால் சட்டம் தன் கடமையைச் செய்யும். குற்றம் செய்தவர் ஓர் அமைச்சராக இருந்தாலும் தப்ப முடியாது.

கனடா ஒரு கூட்டாச்சி (Confederal) நாடு. பரப்பளவில் இரண்டாவது பெரிய (9.9 மில்லியன் ச.கிமீ) நாடு. கனடா 10 மாநிலங்கள் 3 பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தலைநகர் ஒட்டாவா. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித் தனி நாடாளுமன்றங்கள் உண்டு. ஆட்சி மொழிகள் ஆங்கிலம் மற்றம் பிரஞ்சு. கனடாவின் மக்கள் தொகை 34.4 மில்லியன் (2011) ஆகும். பல்லின பண்பாடு (Multiculturism) அரசின் முக்கிய கோட்பாடாக இருக்கிறது. வெளிப்படையான சிறுபான்மையர் தங்கள் மொழி, பண்பாடு, சமயம் போன்றவற்றை பேணிக் காப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்த வசதி அண்டை நாடான அமெரிக்காவில் இல்லை. தனியொருவர் வருமானம் 43,270 அமெரிக்க வெள்ளி (உலக வங்கி 2010). ஆங்கில நாளேடுகள் 5, பிரஞ்சு 2. மைய நீரோட்ட த் தொலைக்காட்சிகள் 6, வானொலிகள் 3 ஆகியன இயங்குகின்றன.

ஒன்பதாவது இடத்தில் தமிழ்

தமிழர்களில் பெரும்பான்மையினர் ரொறன்ரோ (ஒன்ரேறியோ மாநிலத்தின் தலைநகர்) பெரும்பாகத்தில் (Greater Toronto Area) வாழ்கிறார்கள். மக்கள் தொகை 5.5 மில்லியன். இவர்களில் பாதிப் பேர் குடிவரவாளர்கள். பெரும்பான்மை (12 விழுக்காடு) தெற்காசியர்கள். அடுத்து சீனர்கள் (11 விழுக்காடு). இங்கே 170 மொழிகள் பேசப்படுகிறது. முதல் இடத்தில் இத்தாலி. இரண்டாம் இடத்தில் சீனம். ஒன்பதாவது இடத்தில் (2006) தமிழ் இருக்கிறது!

பேரளவு தமிழர்கள் ஏதிலிகளாக வந்தாலும் குடியுரிமை கிடைத்த பின்னர் அந்த எண்ணத்தை கைகழுவி விட்டார்கள். பாதிக்கு மேல் சொந்த வீடுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் வணிகம், மருத்துவம், அரசபணி, கைத்தொழில், உணவகம் மற்றும் பல்வேறு தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இருந்தும் பெரும்பான்மையினர் தொழிற்சாலைகளிலே நேரக் கூலிக்கு வேலை செய்கிறார்கள். தமிழர்கள் அரசியலையும் விட்டு வைக்கவில்லை. நீண்ட விடுதலைப் போராட்டம் காரணமாக தமிழ் சமூகம் ஏனைய சமூகங்களை விடக் கூடுதலாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலில் தீவிர ஈடுபாடு காணப்படுகிறது. அதன் காரணமாக மத்திய நாடாளுமன்றத்துக்குத் தமிழ் பெண்மணி ஒருவர் (2011) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மார்க்கம் நகரசபையில் ஒருவர் உறுப்பினராக இருக்கிறார்.

புதிதாக கனடாவுக்குப் புலம்பெயர்ந்த சமூகங்களில் தமிழ் சமூகத்தின் கல்வி, பொருளாதார வளர்ச்சி அசுர வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரண்டாம் தலைமுறையினர் பல்கலைக்க கழகங்களில் படித்து மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர் ஆகப் பட்டம் பெற்று ஆயிரக்கணக்கில் வெளியேறுகிறார்கள்.

தெருவுக்கு ஒரு கோயில்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றுதான் அவ்வையார் சொன்னார். ஆனால் இங்கு தெருவுக்கு ஒரு கோயில் இருக்கிறது. இரண்டு கோயில்கள் மட்டும் திராவிட சிற்ப முறையில் ஆகமவிதிப்படிக் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 100 க்கும் அதிகமான கோயில்கள் காணப்படுகின்றன. ஊர் இரண்டாவது போல கோயில்களும் இரண்டு மூன்றாகப் பிரிகின்றன.

பத்துக்கும் மேற்பட்ட இலவச வார ஏடுகள் தமிழில் வெளிவருகின்றன. திங்கள் ஒருமுறை ஒரு ஏடு வெளிவருகிறது. ஆங்கிலத்தில் இரண்டு மாத இதழ்கள். மூன்று தொலைக்காட்சிகள். ஜெயா, விஜயா, கலைஞர் உட்பட நான்கு 24 மணித்தியால தொலைக்காட்சிகள், ஏழு 24 மணித்தியால வானொலிகள் இயங்குகின்றன.

மூன்றில் ஒரு பங்கினரே தமிழ் படிக்கிறார்கள்

எல்லாம் சரி, தமிழ்மொழி வாழுகிறதா? இல்லை மெல்லச் சாகிறதா?

இங்கு அண்ணளவாக 55,000 தமிழ் மாணவர்கள் உயர் பள்ளிகளில் படிக்கிறார்கள். இவர்களில் 16,631 மாணவர்களே - அதாவது மூன்றில் ஒரு பங்கு மாணவர்களே - பள்ளிக் கூடங்களுக்கு வெளியே நடாத்தப்படும் தமிழ் வகுப்புகளில் சேர்ந்து படிக்கிறார்கள்.

கனடாவில் அரசுக் கல்விச் சபைகள், கத்தோலிக்கக் கல்விச் சபைகள், தனியார் பொதுப் பள்ளிக் கூடங்கள் சிவனியக் கோவில்கள், தொண்டு அமைப்புகள், தனியார் அமைப்புகள் ஆகியன தமிழ் மொழியைக் கற்பித்து வருகின்றன.

தொரன்ரோ மாவட்டக் கல்விச் சபை, யோர்க் கோட்டக் கல்விச் சபை, பீல் கல்விச் சபை, ஓட்டாவா மற்றும் கால்டன் கல்விச் சபை, மேல் கனடாக் கல்விச் சபை, மொன்றியல் கல்விச் சபை ஆகிய அரசுக் கல்விச் சபைகள், இளம் மழலை முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரைத் தமிழ்மொழியைக் கற்பிக்கின்றன. இவை, தமிழை ஒரு தொடர்பாடல் மொழியாகவே கற்பிக்க விழைகின்றன.

தொரன்ரோ மாவட்டக் கல்விச் சபையானது, இளம் மழலையர் முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவருக்குத் தமிழ்மொழி கற்பிக்கும் பொருட்டாகத் தமிழ்ப் பயிற்சி நூல்களை ஆக்கியுள்ளது. பிற கல்விச் சபைகளிடம் பாட நூல்களோ பயிற்சி நூல்களோ இல்லை. இக்கல்விச் சபைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தத்தம் விருப்பத்திற்கமையப் பாடங்களை ஆக்கிக் கற்பிக்கின்றனர். மேலும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரைத் தமிழ்மொழி கற்பிக்கத் ரொறன்ரோ மாவட்டக் கல்விச் சபை உட்பட எந்தக் கல்விச் சபையிடமும் பாடநூலோ பயிற்சி நூலோ இல்லை. முற்கூறிய அரசுக் கல்விச் சபைகளது பன்னாட்டு மொழிக் கற்கைத் திட்ட அலுவலர்கள் வழங்கிய புள்ளி விவரப்படி 2009 - 2010 கல்வி ஆண்டில் மொத்தமாக 8,867 மாணவர்கள் அரசுக் கல்விச் சபைகளில் தமிழ் மொழியைக் கற்கின்றனர்.

தனியார் தமிழ்க் கல்லூரிகள்

கனடா தமிழ்க் கலை தொழில் நுட்பக்கல்லூரி, அறிவகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (கனடா வளாகம்) டெல்ரா தமிழ்க் கல்லூரி ஆகியவை பள்ளிக் கூடங்கள் நடத்துகின்றன. இந்தப் பள்ளிக் கூடங்களில்:

(அ) தமிழ்மொழி - பாலர் வகுப்பு முதல் (OAC) தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கப்படுகிறது.

(ஆ) தமிழ்மொழி திறமைச் சித்திக்காக பல்கலைக் கழக புதுமுக வகுப்புகளுக்குக் கற்பிக்கப்படுகிறது.

( இ) மனோன்மணியம் சுந்தரனார் தமிழ்ப் பல்கலைக் கழகம் (கனடா வளாகம்), அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இரண்டிலும் தமிழ் இயல் இளங்கலைப் (BA) தமிழ் பட்டப் படிப்பு கற்பிக்கப்படுகிறது.

(ஈ) வாய்ப்பாடு, தண்ணுமை, புல்லாங்குழல், வீணை, நடனம், வயலின், பியானோ (keyboard) போன்ற நுண்கலைகள் கற்பிக்கப் படுகின்றன.

(உ) கணினி, தையல் வகுப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

இந்த தனியார் பள்ளிக்கூடங்கள் நீங்கலாக தனி ஆசிரியர்களால் ஏறத்தாழ அய்பதற்கும் அதிகமான நுண்கலை வகுப்புகள், முக்கியமாக நடன வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

கனடா பல்லின பண்பாட்டை ஊக்குவிக்கிற நாடு எனப் பார்த்தோம். ஒன்ரோறியோ மாகாணத்தில் இரண்டாம் நிலைப் பள்ளிக் கல்வித் திட்டத்தில் 9 ஆம், 10 ஆம், 11 ஆம், 12 ஆம் வகுப்புகளில் படிப்பிக்கப்படும் பாடங்களில் ஒன்றாகத் தமிழ் மொழியும் அங்கீகரிக்கப்பட்ட பாடமாக (credit subject) கற்க ஒன்ரோறியோ அரசு வாய்ப்பளித்துள்ளது.

ஒன்ரோறியோ மாகாண அரசின் கல்வி அமைச்சு தமிழ் படிப்பிப்பதற்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகிறது. கற்போர் தொகை மிக மிகக் குறைவாக இருப்பதால் தமிழ்மொழி பள்ளிக்கூட நேரத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாடமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பல்கலைக் கழகங்களிலோ அல்லது கல்லூரிகளிலோ உயர்கல்வியைப் பெறுவதற்கு 30 பாடங்களில் திறமை சித்திகள் தேவைப்படுகின்றன. இந்த 30 திறமைச் சித்திகளில் 1 - 4 வரையிலான திறமைச் சித்திகளைத் தமிழ்மொழிப் பாடத்தில் பெற்றுக் கொள்வது தமிழ் மாணவர்களுக்கு எளிதான காரியம். அப்படிச் செய்யும் போது மாணவர்கள் தமிழ்மொழி அறிவும் மொழி ஆளுமையும் பெறுவதோடு இன உணர்வும் பண்பாட்டு விழுமியங்களை விளங்கிக் கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வாய்ப்பை பெரும்பாலான பெற்றோர்கள் பயன்படுத்துகிறார்கள் இல்லை.

தமிழ் சோறு போடுமா?

பெற்றோர்களிடம் 'தமிழ் சோறு போடுமா?' என்ற மனப்பான்மை போலவே குடிகொண்டுள்ளது. இந்த மனப்பான்மை தமிழ் நாட்டிலும் உண்டு. இதனால் நடனம், இசை, தண்ணுமை, வீணை, தற்காப்புக் கலை, கின்னரம், நீச்சல் முதலிய வகுப்புகளுக்குப் பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கு நேரம் ஒதுக்கும் பெற்றோர்கள் கிழமையில் ஒரு நாள் நடக்கும் தமிழ்வகுப்புக்கு நேரம் ஒதுக்க முயல்வதில்லை.

இங்கு வாழும் ஏனைய இனத்தவர், குறிப்பாக சீனர், இத்தாலியர், பஞ்சாபிகள், குஜராத்திகள் நான்கு தலைமுறை கழித்தும் தாய்மொழியை மறவாது அந்த மொழியில்தான் பேசுகிறார்கள். தமிழர்களைப் போலவே கென்யா, தன்சேனியா, உகண்டா போன்ற நாடுகளுக்கு குடியேறிப் பின்னர் கனடா வந்த குஜயராத்திகள் நாலு, அய்ந்து தலைமுறைக்குப் பின்னரும் தங்கள் தாய்மொழியை மறவாது பேசுகிறார்கள். சீனர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். வீட்டில் சீனமொழியை விட வேறு மொழி பேச மாட்டார்கள். கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி எங்கள்குடி என்று மார் தட்டும் தமிழர்கள்தான் தங்கள் தாய்மொழியைப் புறந்தள்ளுகிறார்கள்.

மொத்தத்தில் தமிழில் எழுதவோ பேசவோ ஆற்றல் இல்லாத இளைய தலைமுறை வளர்ந்து வருகிறது. இதனால் தமிழ் மெல்லச் செத்து வருகிறது. நுண்கலை ஆசிரியர்கள் நுண்கலைகளை ஆங்கிலத்தில் படிப்பிக்கிறார்கள்.

ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆடல் கலைக்குப் புகழ் தேடப் பிறந்த மாதவிப் பெண்மயிலாள் தனது 12 ஆவது அகவையில் அரங்கேறிய போது அரங்கில் தண்ணுமை முதல்வன், ஆடலோடு இசைந்து பாடக்கூடிய இசை ஆசிரியன், தூய, இனிய சொற்களால் பாடல் இயற்றும் நாவன்மையும் நல்ல நூலறிவும் மிக்க இயற் தமிழ்ப் புலவர் இருந்தனர். இந்தக் காலத்தில் இயற் தமிழ் புலவனை எங்கு தேடினும் காணோம்!

19 ஆம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த தமிழர்கள் கல்வி அற்றவராக இருந்தார்கள். வறியவர்களாக இருந்தார்கள். போக்கு வரத்து, தொடர்பு சாதனங்கள் இப்போது இருப்பது போல் அவர்கள் காலத்தில் இல்லை. எனவே அவர்கள் தங்கள் தாய்மொழியை விரைவாக இழந்துவிட்டனர்.

ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பேரளவு கல்வி கற்றவர்கள். பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள். வீட்டில் தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, கணினி எல்லாம் இருக்கின்றன. இந்தக் காலத்தில் தமிழ்மொழியைக் கணினி மூலம் கற்கும் வசதி கூட உண்டு. இருந்தும் தமிழ்மொழி மெல்ல செத்து வருகிறது.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் மொரேசியஸ், றீயூனியன், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆசிரியர்களையும் பாட நூல்களையும் அனுப்பிப் பிள்ளைகள் தமிழ் கற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது அந்த முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன.

இங்கு வாழும் யூதர்கள், பிரஞ்சுக்காரர்கள் தங்கள் பிள்ளைகளை கோடை காலத்தில் முறையே இஸ்ரேல், பிரஞ்சு நாட்டுக்கு ஹீப்புரூ, பிரஞ்சு மொழி, பண்பாட்டைப் படிக்க அனுப்புகிறார்கள். இந்த வசதிகள், வாய்ப்புக்கள் தமிழ் மாணவர்களுக்கு இல்லை.

ஒரு மொழி வளர வேண்டும் என்றால் அதற்கு அரச ஆதரவு இருக்க வேண்டும். தமிழக அரசு புலம்பெயர் தமிழர்களது மொழி, பண்பாட்டை மேம்படுத்த தனி அமைச்சு ஒன்றை உருவாக்க வேண்டும். மாணவர்கள் தமிழகத்துக்கு வந்து தமிழைப் படித்து தேர்ச்சி பெற வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். முன்னரைப் போல் தமிழ் ஆசிரியர்களையும் பாட நூல்களையும் தமிழர்கள் வாழும் அமெரிக்கா, கனடா, அய்ரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்.

இவற்றை நாம் செய்யா விட்டால் பாரதியார் அச்சப்பட்டது போல மேற்குலக நாடுகளில் தமிழ்மொழி மெல்லச் செத்துவிடும். (இந்தக் கட்டுரை சென்னையில் சனவரி 28 பெப்ரவரி 2 வரை நடந்த சங்கமம் 4 மாநாட்டில் படிக்கப்பட்டது)

நக்கீரன் தங்கவேலு

(தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா)

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifArticle.php?newsID=103959&category=Article&language=tamil

Link to comment
Share on other sites

உலகமயமாக்கலின், இணையத்தின் சக்தியால் கனடா தமிழர் அவுஸ்திரேலியா தமிழருடன் திண்ணையில் இரவு என்ன சாப்பாடு என்று தமிழை வளர்க்கிறார்கள்.

உண்மையாக கடந்த பத்து வருடத்தில் தமிழ் புத்துயிர் பெற்று வளர்கிறது.

உலகின் முதன் மொழி அழியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.