Jump to content

அமெரிக்காவின் காலடிக்குள் குழி தோண்டும் இலங்கை.


Recommended Posts

obama-statement-story-top.jpg

அமெரிக்காவின் காலடிக்குள் குழி தோண்டும் இலங்கை

  • அமெரிக்காவின் காலடிக்குள் தனக்குப் பாதுகாப்பான புகலிடம் ஒன்றைத் தேடும் முயற்சியில் இலங்கை தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவுக்கு கீழே, தென் அமெரிக்க நாடுகளை தன் பக்கம் திருப்பும் திட்டமே இது. இந்த முயற்சியை இலங்கை அரசாங்கம் தொடங்கியது, இப்போதல்ல. அதற்கான முயற்சிகள், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த போதே, தொடங்கப்பட்டு விட்டன. ஆனாலும், அதற்கான பலன், கடந்த ஆண்டு கூட ஜெனிவாவில் சரியாக கிடைக்கவில்லை. இந்த ஆண்டிலாவது, தென் அமெரிக்க நாடுகளின் மூலம் இலங்கை பாதுகாப்பைத் தேடிக் கொள்ள முடியுமா என்ற கேள்விகள் நீடிக்கின்றன. 

    இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த போது, மேற்குலக நாடுகள் தவிர, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆதரவும் அதற்கு அதிகமாக கிடைத்திருந்தது.  அது, இலங்கைக்கு ஒரு உண்மையை புலப்படுத்தியது. தனியே ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை, அதற்கு அப்பாலும் உறவுகளை தேடிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது. குறிப்பாக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள ஆபிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதன் மூலமே, ஜெனிவாவில் நிலைத்திருக்க முடியும் என்று உறுதியாக நம்பியது அரசாங்கம். 

    அமெரிக்கா முதலாவது தீர்மானத்தைக் கொண்டு வந்த போதே, இலங்கைக்கு இன்னொரு ஒரு விடயமும் வெளிச்சமாகி விட்டது. இனிமேல், ஜெனிவா தலைவலி தொடரப் போகிறது என்பதே அது.போர்க்குற்ற விவகாரங்களுக்கு ஒரு முடிவு காணப்படும் வரை, அமெரிக்கா விடப் போவதில்லை என்பதை உணர்ந்த அரசாங்கம், அதற்கேற்றவாறு, இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்க நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்தத் தொடங்கியது. இந்த நாடுகளுடன் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி, தூதுவர்கள் நியமிக்கப்பட்டனர்.  ஆபிரிக்காவில் நைஜீரியா, கென்யா, உகண்டா உள்ளிட்ட பல நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை இலங்கை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆபிரிக்க நாடுகளுக்கு தீவிரவாதம் முக்கியமான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதால், அதனை அடக்குவதற்கு இலங்கைப் படையினரின் அனுபவங்களை பெறுவதற்கு விரும்புகின்றன. அந்தச் சந்தர்ப்பத்தை வைத்து, பல நாடுகளை மடக்கிப் போட்டுள்ளது இலங்கை அரசாங்கம். உள்நாட்டில் சிறு சிறு திட்டங்களுக்குக் கூட, வெளிநாடுகளிடம் கையேந்தும், இலங்கை அரசாங்கம், உகண்டாவில் தொழிற்பயிற்சி நிலையத்தை அமைத்துக் கொடுக்கும் அளவுக்கு தனது வெளிநாட்டு கொள்கையை மாற்றிக் கொண்டது. அதேவேளை, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தீவிரவாதம் என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலுக்குரியதொரு விவகாரமாக இல்லாததால், அங்கு அந்த விவகாரம் அவ்வளவாக கைகொடுக்கவில்லை. இதனால், பொதுவாகவே, தென் அமெரிக்க நாடுகளிடம் ஊறியுள்ள அமெரிக்க எதிர்ப்புணர்வை தனக்குச் சாதகமாகத் திருப்ப முற்படுகிறது இலங்கை. 

    அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு என்பது, இலத்தீன் அமெரிக்காவின் முக்கியமான ஒரு விடயம்.  அமெரிக்கா தமது வளங்களைச் சுரண்டுவதாக இலத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றிடம் உள்ள கருத்தும், கியூப புரட்சி ஏற்படுத்திய தாக்கமும் அதற்கு முக்கிய காரணம். இதனை, இப்போது இலங்கை அரசாங்கம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது. 

    இலத்தீன் அமெரிக்காவில், இலங்கைக்கு இரண்டு முக்கியமான நட்பு நாடுகள் உள்ளன. 

    முதலாவது கியூபா, 

    இரண்டாவது வெனிசுவேலா. 

    வெனிசுவேலாவில், ஹியூகோ சாவேஸ் ஜனாதிபதியாக இருந்த வரை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவருடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருந்தார்.  இப்போதைய ஜனாதிபதியுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாவிட்டாலும், அந்த உறவு கெட்டுப் போகாமல் தொடர்கிறது. கியூபாவும், வெனிசுவேலாவும், அமெரிக்க எதிர்ப்பை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் நாடுகள். இந்த நாடுகளை வைத்து, மேலும் பல இலத்தீன் அமெரிக்க நாடுகளை வளைத்துப் போட இலங்கை அரசாங்கத்தினால் முடியவில்லை.  இலத்தீன் மொழி பேசும் இராஜதந்திரிகளை வைத்தே அதனைச் செய்ய வேண்டியிருந்தது.ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம் தோற்றுப் போனதும், ஜெனிவாவுக்கான தூதுவராக பதவியில் இருந்த தாமரா குணநாயகத்தை நீக்கிய அரசாங்கம் பின்னர், அவரை, கியூபாவுக்கான தூதுவராக நியமித்து இலத்தீன் அமெரிக்க நாடுகளை வளைத்துப் பிடிக்க முனைந்தது. 

    காரணம், அவர் நன்கு இலத்தீன் மொழி பேசக்கூடியவர்.  ஆனால், தாமரா குணநாயகம் அதற்கு இணங்காததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இப்போது, பிறேசிலை வைத்து இலத்தீன் அமெரிக்க நாடுகளை வளைத்துப் போடும் காரியத்தில் இறங்கியுள்ளது அரசாங்கம். 

    கடந்த ஆண்டு, பிறேசில் தமக்கு ஆதரவு வழங்கும் என்று நம்பி ஏமாந்து போயிருந்த அரசாங்கத்துக்கு இப்போது கூடுதல் நம்பிக்கை கிடைத்துள்ளது.  காரணம், அந்த நாட்டுடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவு மட்டுமல்ல, பிறேசிலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் இடைவெளி அதிகரித்திருப்பதும் தான். 

    அமெரிக்க � பிறேசில் உறவு நெருக்கமாகவே முன்னர் இருந்தது.  ஆனால் பிறேசிலின் எண்ணெய் வளத்தை அமெரிக்க நிறுவனங்கள் கொள்ளையிடுவதாக எழுந்த குற்றச்சாட்டினால் இருதரப்பு உறவுகளில் விரிசல் எழுந்தது.  அண்மையில், அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு, பிறேசிலில் உளவு பார்த்த விவகாரத்தை எட்வேர்ட் ஸ்னோடன் அம்பலப்படுத்தியதை அடுத்து இந்த உறவுகளில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.  இவை தமக்குச் சாதகமாக மாறும் என்று இலங்கை நம்புகிறது. அதேவேளை, பிறேசிலுடள் இலங்கை நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளதும் கவனிக்கத்தக்கது. 

    கடந்தமாதம் பிறேசில் சென்றிருந்த பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அந்த நாட்டின் உயர்மட்டங்களுடன் நடத்திய பேச்சில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயத்தில், அதிக நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பயிற்சிகளை பரிமாறிக் கொள்வது, இதில் முக்கியமானது. முன்னர், இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில் பிறேசில் முக்கியமானதொரு நாடாக இருந்து வந்தது. இப்போது பயிற்சி, ஒத்திகை என்று அந்தப் பாதுகாப்பு உறவு விரிவடைந்துள்ளது. இலங்கையின் முக்கிய ஆயுத ஏற்றுமதி நாடாக இருந்ததால் தான், சந்திரிகா அரசாங்கம், முன்னாள் கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் றொகான் தளுவத்தையை பிறேசிலுக்கான தூதுவராக நியமித்திருந்தது. இப்போதைய அரசாங்கமும், அந்த உறவுகளைத் தொடர்வதற்காகவே, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை பிறேசிலுக்கான துணைத் தூதுவராக நியமித்துள்ளது. இவர் இறுதிப் போரில் 53வது டிவிசனுக்குத் தலைமை தாங்கியவர். 

    அதிலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலைக்கு இவரது படைப்பிரிவே காரணம் என்று மனிதஉரிமை அமைப்புகளால் குற்றம்சாட்டப்படுவதும் குறிப்பிடத்தக்கது.  போர்க்குற்றம் சாட்டப்படும் ஒருவரை துணைத் தூதுவராக ஏற்றுக் கொண்ட பிறேசில், இலங்கைக்கு எதிரான மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுகளை எந்தளவுக்கு தீவரமாக எடுத்துக் கொள்ளும் என்பது நியாயமான கேள்வியே. 

    உலகில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளாக இன்று பிறேசிலும் இந்தியாவுமே கருதப்படுகின்றன. ஐ.நா பாதுகாப்புச்சபையில் இந்த இரண்டு நாடுகளுக்கும் நிரந்தர உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்தளவுக்கு செல்வாக்குப் பெற்ற பிறேசிலை கைக்குள் வைத்துக் கொண்டு அமெரிக்காவின் காலடிக்குள், தமக்குச் சாதகமான அணியொன்றை கட்டியெழுப்ப முனைகிறது இலங்கை.  இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆதரவைப் பெறுவதன் மூலம், ஜெனிவாவில் தமது சவால்களை சமாளிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா என்பதற்கு வரும் மார்ச் 28ம் திகதி தான் பதில் கிடைக்கும்.

தொல்காப்பியன்..தாய் நாடு .

 

Link to comment
Share on other sites

வெனிசுவேலாவை எப்படி கூபாவின் காஸ்ட்ரோ சகோதரர்கள் அடக்கி ஆளுகிறார்கள் என்று ஒரு கட்டுரை வாசித்து திகைத்துவிட்டேன்.

ஏகாதிபத்தியத்தை, முதலாளித்துவத்தை எதிர்க்கிறோம் என்று கிளம்பியோரே அதை நிகழ்த்துவது பகிடி.

மதங்களை எதிர்க்கிறோம் என்று ரோலேக்ஸ் சேகுவாராவின் ஒற்றை கையை வைத்து பூசிப்பதும் பெரிய பகிடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை எதிர்த்தவர்கள் சீரும்சிறப்புமாக வாழ்ந்ததை நான் கேள்விப்படவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.