Jump to content

நடிகர் கே எஸ் .பாலசந்திரன் காலமானார் .


Recommended Posts

இலங்கை வானொலி நாடக சினிமா நடிகர் கே எஸ் பாலசந்திரன் கனடாவில் இன்று காலமானர் .

இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் இயக்குனரும் ஆவார் .

 

இந்த மாபெரும் தமிழ் கலைஞனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள் .


1543156748_1e434014a2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறந்த ஒரு கலைஞ்சன்...பலரை சிரிக்க  வைத்தவர். ஆழ்ந்த  அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்திற்கென்றே ஒரு தனித்துவமான நகைச்சுவை காற்று இருப்பதை வெளிக்காட்டிய ஒரு சிறந்த கலைஞ்ஞன். 

 

ஆழ்ந்த  அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த  அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாண பேச்சுவழக்கு தமிழால் சிரிக்க வைத்தவர். இவர் யாழ்கள உறுப்பினராக இருந்தவர் என நினைக்கின்றேன்.
 
அன்னாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆன்மா அமைதி பெற பிரார்த்திக்கிறேன்.

 

அமரர் கே. எஸ் பாலச்சந்திரன் அவர்கள்  யாழ்க்கருத்துக்கள உறுப்பினரும் கூட

 

பொன்னியின்செல்வன் 

http://www.yarl.com/forum3/index.php?showuser=3518

 

கே.எஸ். பாலச்சந்திரன் 

http://www.yarl.com/forum3/index.php?showuser=7026

 

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=63615&p=546516

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=66756

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமரர் பாலச்சந்திரன் அவர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்கள்.

 

இவரின் "வொன்டர் ஃபுல் வைத்திலிங்கம்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்க்க...

http://www.tubetamil.com/tamil-tv-shows/wonderful-vaithilingam-gtv.html

 

hqdefault.jpg

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

மிகவும் சிறந்த ஒரு கலைஞ்சன்...பலரை சிரிக்க வைத்தவர். ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

கணணி சோர்வைத் தரும்போது சொலிரயர் (Solitaire) சென்று சோர்வை நீக்கி மீண்டும் உற்சாகமடைவது போன்று, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சலிப்பை ஏற்படுத்தும் நேரங்களில் அமரர் பாலச்சந்திரன் அவர்களின் நிகழ்ச்சிக்கு சென்றால், சலிப்பு மாறி குதூகலிப்பு தானே மீண்டுவரும்.

அன்னாரின் மறைவு கனக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்.!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்....அண்ணே ரைட் என்ற வசனம் இன்னும் காதில் ஒலிக்கின்றது.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரணியூரானது, தணியாததாகம் எனும் வாணொலி நாடத்தில் ஒரு கதாபாத்திரமாக நடித்து தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர். அவ்வேளையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் மேல்மாடியில் உள்ள இறைவரித்திணைக்களத்தில் வேலைசெய்ததாக நினைவிருக்கு, (தப்பாக இருந்தால் மன்னிக்கவும்) யாழ் நகரில் பிரபல தளபாட விற்பனை நிலையத்தில் இவரை அடிக்கடி சந்தித்திருக்கிறேன், மரியாதை கருதி கொஞ்சம் எட்டவே நின்றுவிட்டேன் ஆதலால் நெருங்கிப்பழகும் வாய்ப்புக்கிடைத்தும் தவிர்த்துவிட்டேன்.

 

"அண்ணை ரைற்" தனிநபர் நாடகம் தமிழ்பேசும் உலகின் பட்டிதொட்டிகளிலுமெல்லாம் இவரை அறிமுகப்படுத்தியது. அதன்பின்பு செங்கைஆழியானது "வாடைக்காற்று" நாவலை திரைப்படமாக்கியபோது அதில் முக்கியபாத்திரமேற்று நடித்துள்ளார். இதைபற்றி அவர் கூறும்போது, யாழ் ராணித்தியேட்டர் வாசலில் கட்டியிருந்த வாடைக்காற்று விளம்பரப்பலகையில் அதிகமாகக் காகம் எச்சம்போட்டு, பரிதாபத்துக்குரிய ஒரு பேர்வளியாக ஒரு கட்டவுட் இருந்துதே அந்த உருவம்நான்தான் எனவும் ரசிகர்கள் மத்தியில் தன்னை அறிமுகம் செய்திருக்கிறார்.

 

தமிழ்மண் தன்மடியில் தாலாட்டிய  திறன்மிகு படைப்பாளி மற்றும் கலைஞர்கள் வரிசையில் திரு.பாலச்சந்திரன் அவர்களும் காலத்தால் மறக்கப்படமுடியாதவராகிறார். அவரது பெயரைச்சொன்னாலே புலத்தில் நாமெல்லாம் வாழ்ந்தகாலத்தின் வாசனையை இப்போதும் உணரமுடியுமென்பதில்லாது, அக்காலத்தின் பெறுமதியை மதிப்பிட்டுக்கொள்ளலாம்.

 

அன்னையின் கைகளால் அமுதுண்ட நாட்களும்

அரும்பு மீசையுடன் மனம் அலைபாய்த நாட்களும்

திண்ணையில் வாணொலியைச் சூழ்ந்திருந்த நாட்களும்

"அண்ணைறைற்" உன்னை நினைக்கையில் இனியும்வரும்.

 

புலத்தில் மட்டுமின்றி, புலம்பெயர்தேசத்திலும் தனது கலைத்திறனை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி புலத்தின் நினைவுகளை புலம்பெயர்தேசத்திலும் கொண்டுவந்தார் என்றவகையில், எம் புலத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும்வண்ணம் எம்மத்தியில் வாழ்ந்த ஒரு ஊடகமாகவே தமிழுலகம் அவரைக்கணித்துநிற்கின்றது.

 

ஒரு சிறந்த கலைஞனை நாம் இழந்துநிற்கும்வேளையில், அவரைப் பிரிந்து துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கட்கு ஆத்மபலத்தைக்கொடுக்கும்வண்ணமும், அவரது ஆத்மா வீடுபேறடையவும் எல்லாம்வல்ல இயற்கையை வேண்டுகிறோம்.

 

இவண்,

எழுஞாயிறும், அவன் சமூகமும்.

 

 

Link to comment
Share on other sites

உன்னதக் கலைஞன். ஈழத்த்து நாடகத் துறையிலும், சிறிது காலம் உயிர்ப்புடன் இருந்த சினிமாத் துறையிலும் தனியிடம் பிடித்தவர்.

முன்பு இங்கு யாழிலும் சிலவேளை எழுதுவார். அவருடன் கதைப்பதற்காகத்தான் யாழில் இணைந்தேன்.  'வாடைக்காற்று' திரைப் படப் பிரதி தன்னிடம் உள்ளதாகவும், அதனை சுத்தம்  செய்து  திரையிட உள்ளதாகவும் கூறினார்.

 

ஆழ்ந்த  அனுதாபங்கள். அண்ணனின் பிரிவால் துயருறும் உறவுகளுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அருள எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் .

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்! அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.