Jump to content

நாங்களும் எழுதலாமே !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முக நூலில் கந்தையா முருகதாசன் என்னும் பத்திரிகையாளர் ஒரு விண்ணப்பம் வைத்தார். எழுத்தாளர்களை எல்லாம் இணைத்து ஒவ்வொரு வாரம் ஒருவர் கதை எழுதுவது என்று. அதாவது ஒருவர் ஒரு கதையைத் தொடங்க அடுத்த வாரம் இன்னொருவர் தொடர்வார். நான் யாழில் தொடங்கினால் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே வேறொரு ஊரின் இணையத் தளத்தில் அதை ஆரம்பிப்பதாக இரு நாட்களில் அறிவித்துவிட்டார். 

 

நாம் இங்கே நிறையப்பேர் கதை எழுதுபவர்கள் இருக்கிறோம். நாம் ஒரு தொடரை இங்கே ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது.

 

உறவுகளே! உங்கள் கருத்துக்களும் ஆதரவும் எதிர்பார்க்கப் படுகிறது.

Link to comment
Share on other sites

இது 'ஏலையா" முருகதாசன் பண்ணாகம் இணையத்தளத்திற்காக தற்போது ஆரம்பித்திருக்கிறார் என நினைக்கிறேன்.

 

இப்படி ஒரு உத்தியில் அமைந்த தொடர்கதை ஒன்றை ஏற்கெனவே ஜேர்மனியில் இருந்து வெளிவந்த 'பூவரசு' சஞ்சிகைக்காக எழுதியிருக்கிறோம். அதில் முதலாவதும், இறுதியானதும் அங்கத்தை இந்துமகேஷ் எழுத, எனைய அங்கங்களில் ஒவ்வொன்றை நான், சந்திரவதனா செல்வகுமாரன், சாந்தினி வரதராஜன் உட்பட வேறு சிலரும் எழுதியதாக ஞாபகம் இருக்கிறது.

 

சுமே! நீங்கள் முதலாவது மற்றும் இறுதி அங்கங்களை எழுதினால், நானும் இடையில் ஒரு அங்கத்தை எழுதலாம்.   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி கறுப்பி. யாழ் களத்தில் சாத்திரி,சோழியன், புங்கை,நெடுக்ஸ், பாஞ்ச்,சாந்தி, சகாரா, அர்ஜுன், இசைக்கலைஞன்,நேற்கெழுதாசன்,நிலாமதி அக்கா, கோமகன், புத்தன், சுபேஸ், கவிதை, லியோ,கிருபன்,ஜீவா, அபிராம், நிழலி, அஞ்சரன் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கின்றனர். வேறு யாருடைய பெயர்களும் விடுபட்டால் கூறுங்கள். இதனை பேர் இருக்கிறோம் வாரம் ஒரு தடவை ஒருவராக எழுத சுவாரசியமாக இருக்கும். என்ன கருப்பொருளில் எழுதலாம் என்பதையும் கூறுங்கள்.

 

 

 

 

 

விடுபட்ட பெயர்களை இணைத்துள்ளேன். வேறும் பெயர்கள் இருந்தால் கூறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களும் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம் சோழியன்

Link to comment
Share on other sites

வருகைக்கு நன்றி கறுப்பி. யாழ் களத்தில் சாத்திரி,சோழியன், புங்கை,சாந்தி, சகாரா, நேற்கெழுதாசன்,நிலாமதி அக்கா, கோமகன், புத்தன், சுபேஸ், கவிதை, லியோ,கிருபன் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கின்றனர். வேறு யாருடைய பெயர்களும் விடுபட்டால் கூறுங்கள். இதனை பேர் இருக்கிறோம் வாரம் ஒரு தடவை ஒருவராக எழுத சுவாரசியமாக இருக்கும். என்ன கருப்பொருளில் எழுதலாம் என்பதையும் கூறுங்கள்.

 

கதையின் ஆரம்பமும் முடிவும் உங்களின் கையில் என்றால், கருப்பொருளைப்பற்றி பெரிதாக கவலைப்படாமல், நாணயக்கயிறு கையில் இருக்கிற துணிவுடன், எதை எதை எழுதக்கூடாது என்ற நிபந்தனைகளை அறிவித்துவிட்டு ஆரம்பிக்க வேண்டியதுதான்.

 

கோமகன் என்ற எழுத்தாளரை விட்டுவிட்டீர்களே..?! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் ஆரம்பமும் முடிவும் உங்களின் கையில் என்றால், கருப்பொருளைப்பற்றி பெரிதாக கவலைப்படாமல், நாணயக்கயிறு கையில் இருக்கிற துணிவுடன், எதை எதை எழுதக்கூடாது என்ற நிபந்தனைகளை அறிவித்துவிட்டு ஆரம்பிக்க வேண்டியதுதான்.

 

கோமகன் என்ற எழுத்தாளரை விட்டுவிட்டீர்களே..?! 

 

கண்ணாடி போடுங்கள் ப்ளீஸ் :lol:

 

Link to comment
Share on other sites

கண்ணாடி போடுங்கள் ப்ளீஸ் :lol:

 

 அடக்.. குறும்புக்காரக் கோமகன்.. என்னைக் கண்டூட்டு ஒழிச்சூட்டார்!!  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மறந்துவிட்டேன் நெடுக்ஸ், அஞ்சரன், பாஞ்ச் கூட எழுத்தாளர்கள் தானே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி கறுப்பி. யாழ் களத்தில் சாத்திரி,சோழியன், புங்கை,சாந்தி, சகாரா, நேற்கெழுதாசன்,நிலாமதி அக்கா, கோமகன், புத்தன், சுபேஸ், கவிதை, லியோ,கிருபன் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கின்றனர். வேறு யாருடைய பெயர்களும் விடுபட்டால் கூறுங்கள். இதனை பேர் இருக்கிறோம் வாரம் ஒரு தடவை ஒருவராக எழுத சுவாரசியமாக இருக்கும். என்ன கருப்பொருளில் எழுதலாம் என்பதையும் கூறுங்கள்!

 

புங்கையின் பெயர் இந்தப்பட்டியலில் இடம்பெற்றதைக் கண்ட மகிழ்ச்சியில், 'புங்கை' ஆடிய ஆனந்த நடனம்! :lol:

 

நல்ல முயற்சி, சுமே! ஆரம்பியுங்கள்.....! தொடருவோம்! :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கோ ...நானும் கிறுக்கிறேன்...சுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கோ ...நானும் கிறுக்கிறேன்...சுமே

 

நல்லா எழுதுறவை எல்லாம் இப்பிடித்தான். கிறுக்குவதற்கும் ஒரு ரசனை வேண்டும் தெரியுமோ ?????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையின் பெயர் இந்தப்பட்டியலில் இடம்பெற்றதைக் கண்ட மகிழ்ச்சியில், 'புங்கை' ஆடிய ஆனந்த நடனம்! :lol:

 

நல்ல முயற்சி, சுமே! ஆரம்பியுங்கள்.....! தொடருவோம்! :icon_idea:

 

 

நல்ல காலம் நடனத்தை நேர்ல பாக்க வரச்சொல்லிக் கூப்பிடாமல் விட்டிட்டியள் :D

 

Link to comment
Share on other sites

என்னை மறந்ததேன் தமிழ்மகளே! என்று நொந்திருந்தேன்!. ஆனால் என்னையும் நெடுக்ஸ், அஞ்சரன் போன்ற எழுத்தாளர்களுடன் சேர்த்துப் பெருமைப்படுத்துவதற்கே என்றறிந்ததும் ஆனந்தம் தாங்கவில்லை!!. :D:lol:

 

ஏதோ! ஒருமாதம் யோசித்து எழுதிய கதை ஒன்றை ஒரு நாள் பதிகிறேன். நீங்களோ! ஒரு வாரத்தில் என்று குறுக்கிவிட்டீர்கள்.!. மனைவியின் கவனிப்பு தேய்ந்து விடுமோ! என்றொரு சந்தேகம்!!. :(

 

உங்களுக்கு யேர்மனியில் இருந்த பரிச்சயம் உண்டு. திருநெல்வேலி அல்லவா இவ்விடம் எங்கே வாங்கலாம்?? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மறந்ததேன் தமிழ்மகளே! என்று நொந்திருந்தேன்!. ஆனால் என்னையும் நெடுக்ஸ், அஞ்சரன் போன்ற எழுத்தாளர்களுடன் சேர்த்துப் பெருமைப்படுத்துவதற்கே என்றறிந்ததும் ஆனந்தம் தாங்கவில்லை!!. :D:lol:

 

ஏதோ! ஒருமாதம் யோசித்து எழுதிய கதை ஒன்றை ஒரு நாள் பதிகிறேன். நீங்களோ! ஒரு வாரத்தில் என்று குறுக்கிவிட்டீர்கள்.!. மனைவியின் கவனிப்பு தேய்ந்து விடுமோ! என்றொரு சந்தேகம்!!. :(

 

உங்களுக்கு யேர்மனியில் இருந்த பரிச்சயம் உண்டு. திருநெல்வேலி அல்லவா இவ்விடம் எங்கே வாங்கலாம்?? :wub:

 

உங்கள் மனைவிக்கு என்றதனால் நானே இங்கிருந்து அனுப்பி விடுறன். :lol:

 

Link to comment
Share on other sites

புலிகளை பாடியா கதை இருக்க வேண்டும் ,எனது பெயரை காணவில்லை . :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சமகாலத்தில் மிகச்சிறந்த பின் நவீனத்துவ எழுத்தாளராகிய என்னை சேர்க்காத மையவாத சிந்தனையை கண்டிக்கிறேன்.. :blink: வெளிநடப்பு செய்கிறேன்..! :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை பாடியா கதை இருக்க வேண்டும் ,எனது பெயரை காணவில்லை . :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

 

ஒரு சில சனத்துக்கு கனவிலையும் புலி நினைப்புத்தான்... :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மறந்துவிட்டேன் நெடுக்ஸ், அஞ்சரன், பாஞ்ச் கூட எழுத்தாளர்கள் தானே.

 

நாங்கள் எழுத்தாளர்களோ.. படைப்பாளிகளோ.. தமிழ் புலமைவாதிகளோ.. தமிழ் சான்றோர்களோ.. புலம்பெயர் இலக்கியவாதிகளோ.. புலம்பெயர் படைப்பாளிகளோ.. கிடையாது. இவ்வகையான எந்த அடைமொழிகளும் எங்களுக்கு வேண்டாம். பள்ளிக்கூடத்தில் கட்டுரை கதை கவிதை.. எழுதியதை.. யாழ் இணையத் தமிழில்.. எழுதப் பழக விட்டிருக்கு. அதற்காக இயன்றதை.. எழுதிறம். அந்த வகையில் நன்மை தீமை எல்லாம் இந்த யாழுக்கே. எது என்றாலும்.. யாழுக்கு வெளியில் எழுதிற நோக்கமும் இல்லை..! யாழுக்கு எழுதியதை வெளியில் ஒட்டுவதை தவிர. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை பாடியா கதை இருக்க வேண்டும் ,எனது பெயரை காணவில்லை . :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

 

மன்னிக்கவும் அர்யுன். வயது போகப்போக கன பேர் மறந்து போகுது. பெயர் போட்டுள்ளேன்.

 

நாங்கள் எழுத்தாளர்களோ.. படைப்பாளிகளோ.. தமிழ் புலமைவாதிகளோ.. தமிழ் சான்றோர்களோ.. புலம்பெயர் இலக்கியவாதிகளோ.. புலம்பெயர் படைப்பாளிகளொ.. கிடையாது. இவ்வகையான எந்த அடைமொழிகளும் எங்களுக்கு வேண்டாம். பள்ளிக்கூடத்தில் கட்டுரை கதை கவிதை.. எழுதியதை.. யாழ் இணையத் தமிழில்.. எழுதப் பழக விட்டிருக்கு. அதற்காக இயன்றதை.. எழுதிறம். அந்த வகையில் நன்மை தீமை எல்லாம் இந்த யாழுக்கே. எது என்றாலும்.. யாழுக்கு வெளியில் எழுதிற நோக்கமும் இல்லை..! யாழுக்கு எழுதியதை வெளியில் ஒட்டுவதை தவிர. :):icon_idea:

 

நான் யாழுக்கை எழுதுவதைத்தானே கதைக்கிறோம் நெடுக்ஸ். எவ்வளவு சிறப்பா உங்கட கதையை எழுதினநீங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழுக்கை எழுதுவதைத்தானே கதைக்கிறோம் நெடுக்ஸ். எவ்வளவு சிறப்பா உங்கட கதையை எழுதினநீங்கள்.

 

 

 யாழுக்காக என்றால்.. கேட்காமலே எழுதுவமில்ல..! :lol::D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமகாலத்தில் மிகச்சிறந்த பின் நவீனத்துவ எழுத்தாளராகிய என்னை சேர்க்காத மையவாத சிந்தனையை கண்டிக்கிறேன்.. :blink: வெளிநடப்பு செய்கிறேன்..! :huh::D

 

இங்க ஒருத்தரும் என்னைச் சாட்டி வெளி நடப்புச் செய்யத் தேவை இல்லை :D  நீங்களும் உண்டு கதை எழுத :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உள்ள உறவுகள் அனைவருமே நல்ல எழுத்தாற்றல் உள்ளவர்கள் தான். யாருமே யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. எல்லோரையும் எழுத கேட்பதே நியாயம். காலம் நேரம் சரியாக அமைய.. இயன்றவர்கள் நிச்சயம் எழுதுவார்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமாக யாழில் 23 பேர் எழுதுவதற்காக இருக்கிறோம். ஒரே கலக்குக் கலக்கிவிட மாட்டோமா என்ன. முதலில் நான் ஆரம்பிக்கிறேன் அடுத்த திங்கள். அதிலிருந்து ஒருவர் முடிய மற்றவர் தொடரலாம். எத்தனையாவதாக எழுதப் போகிறீர்கள் என்றும் திரியில் கூறிவிட்டீர்கள் என்றால் இலகுவாகிவிடும்.

 

அரசியல் இல்லாத காதல் கதை ஒன்றாக இருந்தால் பம்பலாக இருக்கும் என்பது என் எண்ணம்.


இதில் நான் பெயர் குறிப்பிடாதவர்களும், எழுத ஆர்வமுள்ள அத்தனை உறவுகளும் இதில் கலந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

யாழில் இதுவரை கதைகள் எழுதி, அதில் உறவுகள் பெற்ற பச்சைப்புள்ளிகளின் தொகையை நிரைப்படுத்தி, அந்த வரிசைப்படியே தொடரலாம் என்பது எனது பிரேரணை. ஆமோதிப்பது உறவுகளின் விருப்பம். தொகையை நிரைப்படுத்தித் தருவதற்கு, கணணித் தொழில்நுட்ப அறிஞர்கள் அநேகர் யாழில் உள்ளனர். அவர்களை நீங்கள் அணுகலாம் சுமேரியரே. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.