Jump to content

தீபச்செல்வன் மீது எறியப்படும் துரோகக்கற்கள்.


Recommended Posts

தீபச் செல்வனின் தங்கை புலிகளால் பிடித்துச் செல்லப் பட்டு கள முனைக்கு அனுப்பப் பட்டிருந்தபோது தீபச் செல்வன் யாழ்ப்பாணத்தில் இருந்தார். அவரிற்கே தங்கை உயிரோடு இருக்கிறாரா என்று தெரியாது . அதே நேரம் அவர் இறந்து விட்டதாகவும் வெய்திகள் வெளியாகியிருந்தது. அதனைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன் பின்னர் தனது தங்கை உயிருடன் இருப்பதாக  தீபச் செல்வன் அறியத் தந்ததும் நான் அந்த பதிவையும் அழித்து விட்டிருந்தேன். புலிகளால் பிடித்துச் செல்லப் பட்ட தங்கைக்காக அவரே எழுதிய கவிதை யழிலும் உள்ளது இணைப்பு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65983&hl=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

 

-----------
இதேபோல தீபச்செல்வனின் தங்கையை – அதிலும் அவள் பதின்மூன்று வயதுச்சிறுமியாக – பள்ளி மாணவியாக இருந்தபோது புலிகள் அவளை பிடித்துச் சென்றதையும் தீபச்செல்வன் தன்னுடைய
--------------------------------
இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின.
கடைசியில் பொய்த்துப்போய்
கிடக்கிறது எனது சொற்கள்.
இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?

ஷெல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு
நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?
யார் உன்னை இழுத்துச் சென்றனர்?
அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.
அண்ணா நமது தேசத்தைப்போலவே
உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.

குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்
என்று அம்மா சொல்லுகிறாள்.
-----------------------------------
(நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு)

 

அடுத்ததாக  தீபச் செல்வனுடனான பணப் பிரச்சனையை  நான் அவரை விரைவில் நேரே சந்திப்பேன் அப்போது தீர்த்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

இந்த ஆவணப் படம் தொடர்பாக தீபச் செல்லனிற்கும் எனக்கும் 22 யூன் மாதம் 2011 ஆண்டு முகப் புத்தகத்தில் நடந்த உரையாடல் நான் வீடியோவை கேட்பதும் அவரது மழுப்பல் பதிலும்

Capture_zps291a7431.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கேவலம் கெட்ட வாழ்கையை விட நஞ்சு குடித்து சாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டமான பேச்சு தன் ஊரை கெடுக்குதுங்க - அது

வெட்டித்தானமாக் கேக்கிறவங்க

காதையும் கெடுக்குதுங்க

சந்திலும் பொந்திலும் வாதம் - அதால்

தலைவலி மருந்துக்கு லாபம்

கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து

குடும்பத்தை கலக்குதுங்க - பெரும்

குழப்பமாக்கியே சண்டைகள் மூட்டி

பொழப்பயும் கெடுக்குதுங்க

புரளியும் வதந்தியும் மூட்டி - ஒரு

பொய்யை நூறாகக் கட்டி - கரும்

பூதம் என்றும் சிறு பேய்கள் என்றும் - பல

பாதையும் ஊரையும் கெடுக்குதுங்க

அறையில் வளர்ந்து வெளியில் பறந்து

அவதிப் படுத்துதுங்க - ஊரை

அவதிப் படுத்துதுங்க - அது

அரசியல் வரைக்கும் நாக்கை நீட்டியே

அமைதியை கெடுக்குதுங்க ...

 

 

~~~~~ நன்றி

~~~~~பட்டுக்கோட்டை கல்யாணம்

 

குரல் ~ 196 (பயனில சொல்லாமை - Against vain Speaking)

பயனில்சொல் பாராட்டுவானை மகனேனல்

மக்கட் பதடி யேனல்

பயனற்றவைகளை சொல்லி பயன் பெற நினைப்பவனை, மனிதன் என்பதை விட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ எங்க எண்டு கேக்கிறதாலயும் அதுக்கு  ஏதோ பதில் தெளிவில்லாம வாற படியாலயும் தீபச் செல்வன் காசு வாங்கின மாதிரி ஆகி விடுமா? இது எதையும் நிரூபிக்க இல்லையே சாத்திரி?

Link to comment
Share on other sites

இங்கு சாத்திரி என்னத்தை தனது கையில் கொண்டு வந்து கருத்தையும் தனது பொய்யையும் திசைதிருப்புவார் என்பது தெரிந்ததே.எங்களிடமும் பல பதிவுகள் ஆவணங்கள் இருக்கிறது. அதையெல்லாம் தீபனோ நானோ கொண்டு வந்தால் எங்களை எப்படி பழிசுமத்தி பொய்யால் வெல்லலாம் என்பதற்கு சாத்திரியால் முடிந்த படி வகைகள் இருக்கிறது.  
 
சாத்திரியின் பொய்யான குற்றச்சாட்டு ஆனந்தவிகடன் வரை எழுதுவேன் என சாத்திரி விட்ட மிரட்டலின் பின்னாலேயே இங்கு எழுத வேண்டி வந்தது. 
 
ஆனால் தொடர்ந்து தீபன் மீதான சாத்திரியின் தொல்லைக்கு பதில் எழுத வேண்டிய கடமை இங்கு எழுத வைக்கிறது. சாத்திரியின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துவிட்டு இத்தோடு இங்கு எழுதுவதை நிறுத்துகிறேன். இனிமேல் சாத்திரிக்கு இதில் பதில் எழுதி நானோ தீபனோ மினக்கெடமாட்டோம்  என்பதனை எங்கள் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் தெரிவிக்கிறோம்.
 
முதலில் சாத்திரிக்கு தீபன் மீது பழிதீர்க்கும் காரணம் எதனால் என்பதை தெளிவுபட வாசகர்கள் புரிய வேண்டும்.
 
தீபன் தனது தங்கை பற்றி ஏற்கனவே எழுதிய கவிதையில் தனது தங்கை இறந்து போனதாக எங்கும் எழுதவில்லை. தனது மனநிலமையில் தங்கையின் பிரிவை தனது உணர்வால் வெளிப்படுத்திய கவிதையை சாத்திரியும் இன்னும் சிலரும் தீபனின் தங்கை இறந்து விட்டதாகவும் புலிகள் கொன்றுவிட்டதாகவும் எழுதிக் கொண்டிருந்தார்கள். 
 
தனிப்பட தீபனின் தங்கை குடும்ப நிலமைகள் எனக்குத்  தெரியும் அதனால் பல இடங்களில் இவ்விடயம் பற்றி நானும் மௌனமாகவே இருந்தேன். ஆனால் சாத்திரி தனது அதிமேதாவித்தனத்தை வெளிப்படுத்தல் மற்றவர்களின்  உயிருக்கு அவர்களது பாதுகாப்புக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை யோசிக்காமல் தனது காதில் எட்டும் விடயங்களை மிகைப்படுத்தி எழுதி தன்னை அனைத்தும் அறிந்த மகானாகவே காட்டுவது வளமை. 
 
இதுபோலவே தீபனின் தங்கை விடயத்திலும் நடந்தது.தனது தங்கைக்கு நடக்காத ஒன்றை தனது கற்பனைப்படி சாத்திரி எழுதியதற்காக தீபன்  தனது தங்கையைப் பற்றிய தவறான செய்தியை சுட்டிக்காட்டிய போது தான் சாத்திரிக்கு கோபம் வந்தது.  தனது பொய்யை நம்பிய அனைத்துலக புலிவாந்திகளுக்கு முன்னால் தன்னை நியாயமாக்க வேண்டிய தேவையேற்பட்டது.
 
தனது எழுத்தில் நம்பிக்கையில்லாத நிலமை வரக்கூடாதென்பதற்காக தீபனுடன் தனது வீரத்தை காட்ட வெளிக்கிட்டதன் முடிவே ஆவணப்படத்துக்காக தான் பணம் கொடுத்ததாக பொய்யான பழியை தனக்கு வேண்டிய தற்கால புலிவாந்திகள் யாவருக்கும் பரப்புரை செய்யத் தொடங்கியதோடு தீபனுக்கும் தனிச்செய்தியை முகநூல் மூலம் அனுப்பினார்.
 
கிருபன் வழங்கிய உதவி பற்றி ஏற்கனவே சாத்திரிக்கும் தெரியும். நிழலி, சாத்திரி உட்பட பலரிடம் உதவி கேட்கப்பட்டது. நிழலி வேலை இழந்திருந்ததால் தன்னால் முடியாதென்று சொன்னார். ஏற்கனவே நிழலி 2மாவீரர்களின் பிள்ளைகளை பொறுப்பேற்றிருந்ததால் நிழலியால் இவ்வுதவியை செய்ய முடியா போனதை வருத்தத்தோடு அறியத்தந்த பின்னர் கிருபனுக்கு தனிமடல் மூலமே கேட்டு உதவியை கிருபனே அனுப்பியும் வைத்தார்.
 
(கிருபன் இவ்வுதவியை நேசக்கரம் சார்பாக செய்யவில்லை. நானும் நேசக்கரம் சார்ந்தும் இவ்வுதவியை கேட்கவில்லை. நட்பு ரீதியாகவே கேட்ட உதவி. கிருபனும் தன்னை வெளிப்படுத்தாமல் செய்த உதவி. ஆனால் ஏற்கனவே உதவி கேட்டவர்களுக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தினேன். அது போல சாத்திரிக்கும் தெரியப்படுத்தினேன். இதுவரையில் சாத்திரிக்கு கிருபன் அனுப்பிய தொகைகூட எவ்வளவென்பது தெரியாது. தனது குத்து மதிப்பான கணக்கில் மட்டுமே இங்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்)
 
இவ்விடத்தில் கிருபன் செய்த இவ்வுதவி பற்றி நேசக்கரத்திலும் தெரிவிக்கவில்லையென்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் கிருபன் நேசக்கரம் பணிகளுக்கு தந்த உதவிகளை நேசக்கரம் கணக்கறிக்கையில் தெரிவித்து வந்துள்ளேன் என்ற கருத்து சரியாக புரிந்து கொள்ளப்படாமல் ஏற்கனவே கருத்துகள் வைக்கப்பட்டுள்ளது.
 
இங்கு கிருபன் தனது பெயர் இழுபட்டது பற்றி கண்டித்திருக்கிறார். தீபச்செல்வன் மீது சாத்திரி எறியும் கற்களுக்கெல்லாம் கிருபனின் உதவிதான் சாத்திரிக்கு ஆதாரம். அதனை கிருபனே அறிவித்தால் மட்டுமே சாத்திரியின் பணமல்ல அது என்பது மற்றவர்களுக்கு தெரியும்.
 
இதனை தீபனோ நானோ இல்லை யாரோ ஒருவர் உதவினார் அவரை நாங்கள் வெளிப்படுத்த முடியாதுள்ளோம் என பேசமாமல் இருந்தால் சாத்திரியின் பொய்யே தீபன் மீதான மற்றவர்களின் நம்பிக்கையை சிதைக்கும். கிருபன் உங்களது பெயரை நான் வேண்டுமென்று இங்கு கொண்டு வந்து எனது தனிப்பட்ட பகையை தீர்க்கவில்லையென்பதனை புரிந்து கொள்ளுங்கள் கிருபன் . 
 
தனது பொய்யான தகவலை பொய்யென்று சுட்டிக்காட்டியதற்காகவே தீபன் மீதான ஆவணப்படம் பொய் சாத்திரியால் திரிக்கப்பட்டு தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டதாக தனது முகநூல் விசுவாசிகளுக்கும் புலிவாந்திகளுக்கும் பொய்யான கதையை பரப்பிக் கொண்டிருக்கிறார்.
 
 
 

வீடியோ எங்க எண்டு கேக்கிறதாலயும் அதுக்கு  ஏதோ பதில் தெளிவில்லாம வாற படியாலயும் தீபச் செல்வன் காசு வாங்கின மாதிரி ஆகி விடுமா? இது எதையும் நிரூபிக்க இல்லையே சாத்திரி?

 

கொஞ்சம் பொறுங்கோ யஸ்ரின் சாத்திரியின் வீடியோ கேள்விக்கு பதில் தாறன்.

Link to comment
Share on other sites

தெருத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு அடித்து அருள் பெறுவதில் சாத்திரி கெட்டிக்காரன். யாராவது அமைதியாக செய்துவிட்டு அல்லது செய்கிற நல்ல விடயங்களை தனது பெயரில் போட்டு முதல்வனாகும் வளமையான குணமே சாத்திரி இங்கு வீடியோ கேட்கும் கதையாகும். 
 
தன்னுடைய பெயரை தக்க வைக்க யார் மீதும் யாரின் தியாகங்கள் இழப்புகள் மீதும் நெருப்புமூட்டியேனும் மகிழ்ச்சி காணும் நல்ல மனம் சாத்திரிக்கு. காலம் பல உண்மைகளை சொல்லும் சிலரது பாதுகாப்பு வாழ்வுக்காக பல விடயங்களில் மௌனமாக இருக்க வேண்டியிருக்கிறது. இந்த மௌனங்களே சாத்திரி காட்டில் இப்போது மழைக்காலமாக அமையவும் காரணமாக இருக்கிறது.
 
சாத்திரியின் ஆவணப்படம் அல்லது வீடியோவுக்கான பதிலும் உண்மையும் இதுதான் :-
 
தீபச்செல்வன் ஊடாக கிளிநொச்சியில் பல கிராமங்களிற்கான உதவிகள் செய்து கொண்டிருந்த 2009 - 2010காலம். அங்குள்ள பெற்றோரை இழந்த குழந்தைகளின் மனநிலமை போரின் பின்னான பாதிப்புகள் பற்றி பல கட்டுரைகளை தீபன் எழுதிக் கொண்டிருந்தார். தமிழ், யேர்மன், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் போரால் பாதிப்புற்ற குழந்தைகள் பற்றியதொரு ஆவணப்படம் எடுப்பமோ என தீபனிடம் கேட்டிருந்தேன்.
 
அப்போது நேசக்கரம் மூலம் உதவி வழங்கப்பட்டுக் கொண்டிருந்த மாணவர்களும் இந்த ஆவணப்பட முயற்சிக்கு தங்களால் ஆன ஆதரவை வழங்குவதாக முன்வந்திருந்தார்கள். மற்றைய மாணவர்களிடம் அவர்களது ஊர்களில் உள்ள குழந்தைகளின் நிலமைகளை தொகுத்து இப்படத்தை அனைத்துலக சமூகத்திற்கு இதனை வழங்குவோம் என்ற நோக்கில் பேசினோம். 
 
ஆனால் இதற்காக ஒரு சதமும் யாரும் கொடுக்கவில்லை. தேவையான பணத்தை நான் தருவதாக கூறினேன்.
 
(நேசக்கரத்திற்கான படமில்லை இது என்பதால் இதற்கான பணத்தை மாதாந்தம் எனது வேலையிலிருந்து சேமித்து தருவதாக சொல்லியிருந்தேன். இன்றுவரை மாதம் 20€வாக உண்டியல் வைத்து சேர்த்துக் கொண்டிருக்கிறேன். மும்மொழியிலும் படத்தை வெளியிடுவதற்கு தேவைப்படும் பணத்தை உடனடியாக தேட முடியாது)
 
 
இந்த வருடம் நிச்சயம் எங்கள் 4வருட கனவை நிறைவேற்றக்கூடிய எங்களது குழந்தைகள் பற்றிய ஆவணப்படத்தை வெளியில் கொண்டு வருவோம்.
 
ஆனால் தீபனும் மற்றைய மாணவர்களும் தங்களுக்கு கிடைத்த நேரங்களில் சில வீடியோ பதிவுகளை மேற்கொண்டு வந்தார்கள். அவற்றை எனக்கும் தந்திருந்தார்கள். அவற்றுக்கான ஒலிப்பதிவு சேர்க்கை மற்றும் குரல் பதிவுகளை இங்கே Germanyஇல்  செய்வதென முடிவெடுத்தோம்.
 
இந்த ஆவணப்படத்தை நாங்கள் வெளியிட முன்னர் ஊடகங்களில் இதுபற்றிய ஒரு செய்தியை போட விரும்பினேன். அப்போது சாத்திரியிடம் பல்கலைக்கழக மாணவர்களை வைத்து  ஒரு ஆவணப்படம் எடுத்துக் கொண்டிருப்பதாக சொன்னேன். சாத்திரி தனக்கு இந்திய முதல் ஐரோப்பிய தமிழ் ஊடகங்கள் யாவிலும் தொடர்புகள் இருப்பதாகவும் அதன் மூலம் தன்னால் ஊடகங்களில் விளம்பரம் செய்து தர முடியுமென்றார். (ஆனால் ஆவணப்படம் எவ்வகையில் வரப்போகிறது என்ற எதுவும் சாத்திரிக்கு சொல்லவில்லை) 
 
தனக்கு என்னிடமுள்ள வீடியோக்களை அனுப்புமாறு கேட்டிருந்த சாத்திரிக்கு அவற்றை கொடுப்பதில் உடன்பாடிருக்கவில்லை. காரணம் நாங்கள் என்ன நோக்கத்துக்காக இதனை தயாரிக்க முனைந்தோமோ அவற்றை தனது தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளும் நல்லெண்ணம் கொண்ட பத்திரிகையாளர் என்பதனை பல தரவுகள் பல போராளிகளது வாழ்வு சாத்திரிக்கு பலியானதால் இவ்விடத்தில் அவதானமாக இருக்க வேண்டிய தேவையிருந்தது. 
 
சாத்திரிக்கு சந்தேகம் வராமல் எங்களது படத்துக்கான ஊடக விளம்பரத்தை பெறலாம் என்ற நோக்கில் சாத்திரிக்கு ஒரு ஆவணப்படம் தாயகத்தின் உண்மை நிலவரங்களை வைத்து வரவுள்ளது என்பதனை மட்டும் சொல்லி விளம்பரத்தை செய்து தருமாறு கேட்டிருந்தேன். சாத்திரி என்னிடமிருந்த வீடியோக்களை பெற்றுக் கொள்ளவே பெரும் முயற்சி செய்தார். நான் தீபச்செல்வன் எடுத்துக் கொண்டிருக்கிறார் விரைவில் வரும் வந்ததும் தருவேன்என கூறியிருந்தேன் . அதற்கு முன் ஊடகங்களில் விளம்பரத்தை செய்து தருமாறு கேட்டிருந்தேன். 
 
இந்தவேளை தீபனுக்கு கூறியிருந்தேன். சாத்திரி  வீடியோ கிளிப்புகளை பெற்றுக் கொள்ள நிற்பதால் நாங்கள் நினைக்கும் விடயம் நிறைவேற தடைகள் வரும். வீடியோ பற்றி அதிகம் எதுவும் கதைக்காமல் பிடிகுடுக்காமல் கதைக்குமாறு. அதன்படி தீபனும் சாத்திரிக்கு பதிலளித்திருந்தார். 
 
சாத்திரி இதோ ஒருபேப்பர் ஆனந்தவிகடன் குமுதம் என பல ஊடகங்களில் விளம்பரம் செய்து தருவதாக சொன்னது தவிர எந்த விளம்பரத்தையும் செய்து தரவேயில்லை. ஆனால் தீபச்செல்வனுடன் ஆவணப்படம் தயாரிப்பில் ஆதரவு தந்த பல்கலைக்கழக மாணவர்களுடன் தொடர்புகளையும் விபரங்களையும் தருமாறும் கேட்டுக்கொண்டேயிருந்தார்.
 
ஏற்கனவே பல விடயங்களில் சாத்திரியின் மீதான நம்பகம் இல்லாமையால் சமாளித்துக் கொண்டு சாத்திரியை முறிக்காமல் போக வேண்டியிருந்தது. எதிர்த்து நாங்கள் போனால் எங்களது வேலைகளில் சாத்திரியின் தலையீடும் சாத்திரி பின்னால் நிற்கும் ஆட்களின் தடைகளும் எங்களை நினைத்த விடயத்தை செய்யவிடாது. 
 
உண்மையில் எங்களது ஆவணப்படம் வெளியில் வர வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தால் சாத்திரி விளம்பரங்களை செய்து தந்திருப்பார். ஆனால் அதனைச் செய்யாமல் வீடியோ கிளிப்களை கேட்டுக் கொண்டதற்கான காரணம்  நாங்கள் வீடியோ எடுத்த இடங்களில் உள்ள அரசபடை அதிகாரிகளால் தொல்லை தருவதற்கே தவிர நல்லெண்ணத்தில் அல்ல. 
 
ஒருமுறை தீபனின் கமராகூட அரசபடைகளால் பறிக்கப்பட்டது. இதற்கு காரணம் சாத்திரியே. இதுபோல இன்னொரு மாணவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட வீடியோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கும் சாத்திரியே காரணம். இத்தகைய நபர்களால் ஆபத்துகள் இருப்பதை உணர்ந்தே சாத்திரியை ஏற்றுக் கொண்டது போல நடிக்க வேண்டி வந்தது.
 
ஆனால் எங்களது முயற்சிகளில் தானே கதாநாயகன் போல வேடமிட்டு இந்தியா முதல் இதர தனது கொலிடே போகும் நாடுகள் வரையும் நேசக்கரம் தனது தயவிலும் தன்னாலுமே இயங்குவதாக படம் காட்டிக்கொண்டு திரிந்தார்.
 
யாவும் தெரிந்தும் பேசாமல் எனது வேலைகளில் கவனமாக இருந்தது பெயர் வேண்டுமென்றதற்கு அல்ல. பலரை காப்பாற்ற வேண்டிய தேவையிருந்ததால். ஒரு கட்டத்தில் நேரடியாகவே சாத்திரி மீதான எதிர்ப்பைக் காட்ட வேண்டி வந்த போதே கடந்தவருடம் நேசக்கரத்தை அழிப்பேன் என்று சபதமிடும் வரை தொடர்ந்தது. 
 
இன்று தீபனுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை போல கடந்த வருடம் எனக்கு சாத்திரி சவால்விட்டிருந்தார். 
 
கே.பியிடமும் , கருணாவிடமும் தான் தொலைபேசியில் கதைத்து நேசக்கரத்தை நிறுத்துமாறு கூறியிருப்பதாகவும் வேண்டுமானால் கருணா , கேபியிடம் கேட்குமாறும் எழுதியிருந்தார். இத்தோடு ஒரு வரியையும் சேர்த்திருந்தார். அதாவது கே.பி. கருணாவின் தொடர்பு உங்களுக்கு இருக்கிறது தானே நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு எழுதியிருந்தார் முகுநூலில்.
 
இப்படியெழுதியது  மற்றவர்களுக்கு நானும் கே.பி கருணாவின் தொடர்பில் உள்ளவர்களின் ஆளென எப்போதாவது சொல்லுவதற்கு தனது ஆயுதமாக பயன்படுத்தவே. கே.பி.கருணாவுடன் தொடர்பு கொள்ள வேண்டிய எவ்வித தேவையோ அல்லது எவ்வித அலுவலோ எனக்கு இதுவரையில் இல்லை. இனியும் இருக்காது.
 
கடந்த வருடம் சாத்திரி எழுதிய எச்சரிக்கை :-
 
reply1_zps9548bbb7.jpg
reply_zps88e06dd1.jpg
 
தனது எழுத்துக்களில் கடந்த காலங்களில் தன்னை மற்றவர்கள் மிரட்டுவதாகவே எழுதி மற்றவர்களின் நம்பிக்கையை பெற்றிருந்தார். ஆனால் தானே அத்தகையதொரு வழிமூலமே அமைதியாக பணிசெய்வோர் மீதும் பயணிப்போர் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார். தனது பொய்யை மறைக்க மற்றவர்கள் மீது எத்தனையாயிரம் பொய்களை புனைந்து கட்டுகிறார்.
 
தீபனுக்கு நேற்று விடுத்திருக்கும் சாத்திரியின் எச்சரிக்கை இது :-
 
1931934_10152065971343801_1458967577_n_z
 
சாத்திரி இதுவரையில் ஒரு சதமும் தீபனுக்கு கொடுக்கவில்லையென்பது உண்மை தனது பொய்யை மறைக்க நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் படத்தை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருப்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளுங்கள். 
 
போரின் குழந்தைகள் பற்றி ஆவணப்படத்தை UN , UNICHEF, SOSபோன்ற அனைத்துலக அமைப்புகளுக்கு அனுப்பும் கனவோடு ஆரம்பித்தோம். ஆனால் தான் பணத்தை தந்ததாக பொய்சொல்லி எங்களது எல்லா உழைப்பையும் சுயநலத்தோடு பலியெடுத்துக் கொண்டிருக்கிறார்.ஆனாலும் இந்தப்படத்தை நாங்கள் வெளியிடுவோம். இந்த வருடம் நிச்சயம் கொண்டு வருவோம். ஆனால் சாத்திரியின் பங்களிப்போ ஆதரவோ இங்கு ஒரு சதமோ துளியோ இல்லையென்பதனையும் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.ஆனால் சாத்திரியின் பங்களிப்போ ஆதரவோ இங்கு ஒரு சதமோ துளியோ இல்லையென்பதனையும் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.
 
சாத்திரியின் தொல்லைகள் எங்களது பணிகளுக்கு வேறு வேறு வடிவங்களாக துரத்திக் கொண்டிருக்கிறது. தற்போது நேசக்கரத்தின் பணியாளர்களின் விபரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார். 
 
தீபச்செல்வன் தொடர்ந்தும் நேசக்கரத்தின் பணியாளராக இருப்பதால் சாத்திரியின் தொல்லை தீபச்செல்வனையும் துரத்திக் கொண்டிருக்கிறது.  எங்கள் மீது சாத்திரி எறியும் எல்லாக்கற்களும் நாளை எங்களையே அழித்தும் போகலாம். 
எனினும் நாங்கள் போராடுவோம்.
 
தீபச்செல்வனுக்கோ மற்றும் நேசக்கரம் பணியாளர்களுக்கோ ஆபத்து எனில் அது சாத்திரியின் ஆட்களாலேதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
 
இதற்குமேல் இங்கு எழுதமாட்டேன். காலம் சாத்திரியின் முகத்தை வெளிப்படுத்தும். அந்த நேரம் நானோ அல்லது என்னுடன் கூடவரும் நண்பர்களோ உயிரோடு கூட இல்லாது போகலாம் ஆனால் உண்மைகளை சொல்லாமல் காலம் சாகாது.
 
நன்றி
 
வணக்கம்.
 

 

Link to comment
Share on other sites

என்னுடைய தொல்லை 2009 லை இருந்து இருந்து கொண்டேதான் இருந்ததாம்.இலங்கை இராணுவத்தை வைத்து  தீபச் செல்வனின் கமறாவையெல்லாம்  அடிச்சு உடைச்சிருக்கிறன். இராணுவத்தை வைச்சு  ஒரு மாணவனை கூட போட்டுத் தாக்கியிருக்கிறன். ஆனால் அதையெல்லாம் தண்டி  நேசக்கரத்தை வழி நடத்துவதற்காக  என்னோடு ஒட்டி உறவாடினாராம் அதுவும் 3 வருடங்கள். இதே யாழ் இணையத்தில்  நேசக்கரம் தவிர்ந்து  எனது பதிவுகளிற்கும் ஓடியந்து  பாராட்டி பதிவுகள் போட்டிருந்ததும்  நான் இலங்கை இராணுவத்தை வைத்து  மிரட்டலாம் என்பதாலாம். அது சரி .நான் எழுதியவை ஏன் பாதி அழிக்கப் பட்டிருக்கின்றது சாந்தி முழுமையாக போட்டிருக்கலாமே. அதில் நீங்கள் அழித்த விடயங்கள்  கருணாவோடும் கே.பி யோடும் நாங்கள்  இருவரும் பேசிய விடயங்கள்தானே . சும்மா சீன் காட்டியது போதும்   அதே நேரம் நீங்கள் அழிக்காமல்  போட்ட எமது  முகப் புத்தக உரையாடவில் எழுதிய அதே விடயம்தான் "" இப்போதும் ஆணவத்தின் உச்சியில் நிற்கிறீர்கள்  வாழ்க வளர்க "" அதையேதான் தீபச் செல்வனிற்கும் எழுதியிருக்கிறேன். இப்போ வளர்ந்து விட்டீர்கள்  நல்லா வருவீர்கள் வாழ்க வளர்க. அப்போ . நீங்களே ஆப்பை  சீவிட்டு அதுக்குமேலை ஏறி அமர்ந்திருக்கிறீர்கள்...வரட்டா  நல்லிரவு வணக்கங்கள்

Link to comment
Share on other sites

இதையெல்லாம்....Prism இல் verify செய்ய சொல்லி CIA விடம் கேட்க்க வேண்டும்.... :)

 

உங்கள் சண்டையை பார்த்து தான் Snowden வேலையை விட்டு ஓடினானோ தெரியாது....

 

எல்லாரும் பெரிய ஆக்கள்...கொஞ்சம் கவனமா இருக்கோணும்.....

Link to comment
Share on other sites

நடந்த சம்பாஷனைய பாக்கேக்க சாத்திரி ரொம்ப பக்கா ........ ஆசாமி போல இருக்கு. நல்ல காலம் நம்ப வீட்டு அட்றஸ் அந்த ஆசாமிக்கு தெரியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.