Jump to content

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்


Recommended Posts

தொடர் அச்சொட்டாக உள்ளது புங்கையூரன் அவர்களே வாழ்த்துக்கள் !!

"நிலா, நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டும், நீங்கள் படிப்பில கவனம் செலுத்த வேண்டும் என மதுரன் கூறினான்!
‘தங்கள் காதலை அவன் வெறும் ‘வயசுக் கோளாறாக' ப் பார்க்கவில்லை என்பதைத் தெளிவு படுத்தினான்!
நிலாவுக்கு அவனை நினைக்கப் பெருமையாக இருந்தது. உண்மையிலேயே தனக்கு ஒரு நிரந்தரமான ‘வாழ்க்கைத் துணை' கிடைத்துவிட்டதாகவே மகிழ்ந்து போனாள்!

அந்த நிமிடத்திலிருந்து அவனைத் தனது கணவனாகவே அவள் வரித்துக் கொண்டாள்!"

சுமேரியரின் கதை வாசித்து முடிய அதனை எப்படித் தொடரலாம் என்று யோசித்தேன்! மேலே உள்ள அத்தனை கருவும் என்னில் உதித்தது. பந்திக்குப் பிந்திவிட்டேன், இனி சோற்றுக்கு நான் எங்கேபோவேன்??.

Link to comment
Share on other sites

  • Replies 256
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் அச்சொட்டாக உள்ளது புங்கையூரன் அவர்களே வாழ்த்துக்கள் !!

"நிலா, நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டும், நீங்கள் படிப்பில கவனம் செலுத்த வேண்டும் என மதுரன் கூறினான்!

‘தங்கள் காதலை அவன் வெறும் ‘வயசுக் கோளாறாக' ப் பார்க்கவில்லை என்பதைத் தெளிவு படுத்தினான்!

நிலாவுக்கு அவனை நினைக்கப் பெருமையாக இருந்தது. உண்மையிலேயே தனக்கு ஒரு நிரந்தரமான ‘வாழ்க்கைத் துணை' கிடைத்துவிட்டதாகவே மகிழ்ந்து போனாள்!

அந்த நிமிடத்திலிருந்து அவனைத் தனது கணவனாகவே அவள் வரித்துக் கொண்டாள்!"

சுமேரியரின் கதை வாசித்து முடிய அதனை எப்படித் தொடரலாம் என்று யோசித்தேன்! மேலே உள்ள அத்தனை கருவும் என்னில் உதித்தது. பந்திக்குப் பிந்திவிட்டேன், இனி சோற்றுக்கு நான் எங்கேபோவேன்??.

 

அடுத்தடுத்த பந்தியுள் இடமிருந்தால் குந்துங்கள். அல்லது .....ம் :D

 

கதையை எழுதிப் போட்டதோட புங்கையை இந்தப்பக்கம் காணவே இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியரின் கதையின் ஆரம்பம் அலுப்புத்தட்டாமல் விறுவிறுப்பாய் சென்றது அழகு. வாழ்த்துகள்.

 

தொடரினை அடுத்து எடுத்துச் சென்ற புங்கையூரன் கதையினை தொய்ய விடாமல் எடுத்துச் சென்றது சிறப்பாய் இருந்தது.

கவிதை அழகு. வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் முடிவுரையை  கதையை  ஆரம்பித்தவரே  எழுதும்படி  ஒரு உத்தரவை  விடுத்தால்.....

மற்றவர்கள் இடையில் முறித்து முடிக்காமல் இருக்க  உதவும்

என்ன  நினைக்கின்றீர்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் மட்டும்தான் முன்பக்கத்தில் நிற்கின்றது.கதையை தேடிப்பிடிக்கவேண்டியுள்ளது ,கதை முன் பக்கத்திலேயே நிக்க ஒரு வழியை காட்டுங்கப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி வரவுக்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் மட்டும்தான் முன்பக்கத்தில் நிற்கின்றது.கதையை தேடிப்பிடிக்கவேண்டியுள்ளது ,கதை முன் பக்கத்திலேயே நிக்க ஒரு வழியை காட்டுங்கப்பா

 

 

 

இல்லை...............இது தான் நல்லது கதை   முற்றத்தில்  ..கருத்து வேறுபக்கத்தில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா. நான் நினைத்த பாதையில் கதையை நகர்த்துகிறீர்கள் நன்றி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் மட்டும்தான் முன்பக்கத்தில் நிற்கின்றது.கதையை தேடிப்பிடிக்கவேண்டியுள்ளது ,கதை முன் பக்கத்திலேயே நிக்க ஒரு வழியை காட்டுங்கப்பா

 

 

யாழில இப்ப இருக்கிறதே ஒரு கதைதான். அதைத்த் தேடித் பிடிக்கக் கூட கஸ்ரமோ ?????

Link to comment
Share on other sites

நிலாமதிதான் கதையை சிறிது நகர்த்தி இருக்கிறார்.. கொழும்பு பயணத்திலும் கதைக்கு திருப்பங்களை ஏற்படுத்தலாம்..  அடுத்த பகுதி எழுதுபவருக்கு பல கதைக்கான சம்பவங்களை சிந்திக்க வாய்ப்பளித்திருக்கிறார் நிலாமதி. பாராட்டுகள்!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை அர்யுன் கதையை தொடர இருக்கிறார். அதற்கு முன் யாராவது எழுதுவதானால் எழுதுங்கள். ஆனால் கொஞ்சம் நீளமாக எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  புங்கையண்ணா

அந்தமாதிரி

பல  மைல் கீழிறங்கி  யோசித்தள்ளீர்கள்

அந்த நாளைய  ஆட்டங்களின் மீள்  ஓட்டம் போலும்

 

தொடருங்கள்

புங்கையண்ணா

இன்னும் மேலே தள்ளி  மெருகூட்டியுள்ளார்.

வணக்கம், விசுகர்..!

 

அந்த நாளைய ஆட்டங்களை, இங்கே எழுதினால் 'யாழ்' தாங்குமா? :icon_mrgreen:

 

அவற்றில் சிலவற்றை மட்டுமே பொறுக்கியெடுத்துக் கோர்த்த 'சின்ன மாலை" ! :D  

 

கருத்திட்டமைக்கும், வரவுக்கும் நன்றிகள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நாள் கதை எழுதும்போது ஒரு கதையாகவே எழுதினேனே தவிர பழையன பற்றி நினைக்கவே இல்லை. புங்கை எழுதியதாய் வாசிக்க பழசுகள் நிறைய ஞாபகம் வந்திட்டுது. சிரிச்சு வயிறு நொந்துபோச்சு. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் புங்கை. அவ்வளவு ரசனையாய் எழுதியிருக்கிறீர்கள் 

 

கருத்துக்கு நன்றிகள், சுமே!

 

உங்கள் முன்னெடுப்பு மிகவும் மெச்சப்பட வேண்டியதென்பதுடன், 'யாழ்' என்னும் கடலில் ஆழைப்புதைந்திருக்கும் 'முத்துக்களை' வெளியே கொண்டு வரவும் உதவும்!

 

கதை தொடங்கி இரண்டு நாட்கள் கூட முழுமையாக முடியவில்லை!

 

அதற்குள் மூன்று உறவுகள், கதைகளைப் பகிர்ந்திருக்கின்றார்கள் என்பது, 'யாழ்' களத்தின் எதிர்காலம், இன்றுடனோ அல்லது நாளையுடனோ முடிந்து போகப்போவதில்லை என்பதையும், எமது ஏற்றங்கள், இறக்கங்களுக்கேற்ப 'யாழும்' எம்மோடு உயர்ந்து, தளர்ந்து செல்கின்றாள் என்பதையுமே பறைசாற்றி நிற்கின்றது!  

 

கதை என்பது ஒரு காலத்தின் கண்ணாடி! ஒரு காலத்தின் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றது என்பதே எனது பணிவான நம்பிக்கை!

 

கதை நகர்ந்து செல்லும் போது, தேவையென 'உறவுகள்' கருதினால், இன்னுமொரு 'பாகம்' எழுதுவதில் எனக்கு உடன்பாடே! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அண்ணா இது கவிதையா கதையா என்று என் மனம் விவாதிச்சே ஒரு மணி நேரம் ஓடிவிட்டது. அவ்வளவு 'கவித்துவமாக' இருக்கிறது உங்கள் கதை.

உங்கள் உவமானங்கள் 'சனிக்கிழமை காகம்', 'காளீ பக்தன்', 'யாழ்ப்பாணத்து காவோலைகள்', 'படிப்பு சோறு ' உங்கள் கதையை எங்கையோ கொண்டு செல்கின்றன.

இந்த கதை முடியக்கூடாது என்று, சிறுவயதில் ஒரு ரூபாய்க்கு வாங்கிய 100 'பல்லி முட்டை' இனிப்பை ஒவ்வொன்றாக சாப்பிடுவது போல என் மனம் ஏங்கியது.

தொடரும் என்று கண்ட போது, சூப்பி முடிந்த 50 சத ஐஸ்பழம் வாயிலே இனிக்க 'தடியை நக்கி கொள்ளும்' மனசைப்போல ஆகிவிட்டது என் மனசு.

நன்றிகள் உங்கள் 'அருமையான' எழுத்துக்கும் நேரத்துக்கும்.

நன்றிகள், முதல்வன்!

 

பிறக்கும் குதிரையின் 'கால்களின் அளவைப் பார்த்தே' அதன் எதிர்காலத்தைக் கணித்துக் கூறக்கூடிய மேதைகள் இருக்கின்றார்கள்!

 

நான், அந்த அளவுக்கு இல்லையெனினும், உங்கள் எழுத்துக்களை வைத்தே,உங்கள் எழுத்துக்களின் எதிர்காலத்தை  'எதிர்வுகூற' முடியும்!

 

அவ்வளவு அழகான உவமான, உவமேயங்கள் உங்கள் 'சிறு கருத்திலேயே' துள்ளி விளையாடுகின்றன!

 

இந்தக் கதையில், நீங்களும் இணைந்து பயணிக்க வேண்டுமென்பதே எனது பணிவான வேண்டுகோள்!

 

கடலில் எறிக்கின்ற 'நிலா' ப் போல அல்லாது 'யாழில்' தெறிக்கின்ற நிலாவாக மாறுங்கள்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில இப்ப இருக்கிறதே ஒரு கதைதான். அதைத்த் தேடித் பிடிக்கக் கூட கஸ்ரமோ ?????

 

கருத்து எழுத வேண்டிய திரியை ஒவ்வொரு கதையின் இறுதியிலும் இணைத்தால் நல்லது என நினைக்கின்றேன். :D

Link to comment
Share on other sites

சுமேரியரின் கதை தொடர்வதில் கட்டுப்பாடுகள் ஏதும் உண்டா? 'மனைவி தப்பி ஓட்டம்!' திரியில் உள்ளதுபோல பலமுறை தொடரவும் முடியுமா. ??? :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கிட்டீங்கள் புங்கை....! அடுத்தது யார்....எப்ப...எப்ப...! ஸ் ஸப்பா.! :D

நன்றிகள் சுவியர்!

 

நான் கலக்கினது ஒரு பக்கமிருக்கப் பிறகு வந்த ஆக்கள் தான், இந்தக் கதையைத் தொடர்வதற்கு, பல வாசல்களைத் திறந்து விட்டுள்ளார்கள்! :D

 

நீங்களும் ஒருக்கா, உள்ளுக்குள்ள பூந்து விளையாடிப்பார்க்கவேண்டியது தானே! :icon_idea:

சுமோக்காவும் புங்கையூரான் அண்ணாவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். கதை நன்றாக செல்கின்றது. அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கின்றோம்.

நன்றிகள் தமிழினி!

 

உங்கள் வாய்க்குச் சர்க்கரை தான் போட வேணும்!

 

சொல்லி வாய் மூட முதலே, மேலும் இரண்டு அத்தியாயங்கள் வந்திட்டுது! :D

கதையை நகர்த்தும் விதம் மிக அழகு. கெதியாய் தொடருங்கள்,  வாசிக்க மிக ஆவல்!!  :)

நன்றிகள் அலை!

 

உங்களுக்குக் கதை கேட்கிறது எண்டால், நல்ல விருப்பம் எண்டு எங்களுக்கு நல்லாவே தெரியும்! :D

புங்கையூரன், கதை நன்றாக உள்ளது. பாராட்டுகள்!!  :D

 

நன்றிகள் சோழியன்!

 

உங்கள் 'அத்தியாயத்துக்காக' கண்களை அகலவிரித்தபடி காத்துக்கொண்டிருக்கிறேன்! :lol:

பூங்கையூரான் .. பிரமாதம்..

’பிள்ளை, ஏலுமெண்டால் தாரணியையும் கூட்டிக்கொண்டு போவன்...ஆமிக்காரரும் அதுவுமா ஊரெல்லாம் கெட்டுப் போய்க்கிடக்குது...’ ..கதையின் பாதையை மாற்றக்கூடிய  வரிகளை பதிந்து இருக்கிறீர்கள் ~ Action starts here; is it?

 

அந்த இடத்திலிருந்து, கதையைக் கொண்டு செல்ல ஒரு நல்ல வாய்ப்பு ஒரு இருப்பது உண்மை தான்!

 

ஆனால், பலர் சேர்ந்து எழுதும் போது, பலரது 'பார்வைகள்' கதையை வெவ்வேறு திசைகளில் இழுத்துச் செல்லப்படுவது தான், கதை நகர்வின் சிறப்பாக அமைந்து விடுகின்றது!

 

கிட்டத்தட்ட ஒரு 'கவியரங்கை' ஒத்த நிகழ்வு!

 

நீங்களும் உங்கள் 'பார்வையை' இதனுள் 'நுழைத்தால்' என்ன?  :D

 

அந்த நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன், சசி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் அச்சொட்டாக உள்ளது புங்கையூரன் அவர்களே வாழ்த்துக்கள் !!

"நிலா, நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டும், நீங்கள் படிப்பில கவனம் செலுத்த வேண்டும் என மதுரன் கூறினான்!

‘தங்கள் காதலை அவன் வெறும் ‘வயசுக் கோளாறாக' ப் பார்க்கவில்லை என்பதைத் தெளிவு படுத்தினான்!

நிலாவுக்கு அவனை நினைக்கப் பெருமையாக இருந்தது. உண்மையிலேயே தனக்கு ஒரு நிரந்தரமான ‘வாழ்க்கைத் துணை' கிடைத்துவிட்டதாகவே மகிழ்ந்து போனாள்!

அந்த நிமிடத்திலிருந்து அவனைத் தனது கணவனாகவே அவள் வரித்துக் கொண்டாள்!"

சுமேரியரின் கதை வாசித்து முடிய அதனை எப்படித் தொடரலாம் என்று யோசித்தேன்! மேலே உள்ள அத்தனை கருவும் என்னில் உதித்தது. பந்திக்குப் பிந்திவிட்டேன், இனி சோற்றுக்கு நான் எங்கேபோவேன்??.

உங்கள் வாலிப அனுபவங்களை வாசித்ததில், உங்களைப் பற்றிய ஒரு 'மதிப்பீடு' எனது மனதில் ஆழமாக ஏற்பட்டது என்பது உண்மை தான்!

 

இந்த மனிதன், தேவையில்லாமல் ஒரு நாளும் 'பிழையான வழியில்' போகாது என்பதே அது! எங்கட ஊர்ப்பாசையில சொன்னால், 'அலவாங்கு விழுங்கி' (கோவிச்சுக் கீவிச்சுப் போடாதேயுங்கோ  :D ) என்று அழைப்பார்கள்! மனிசன் லேசில தன்ர 'கொள்கைகளிலிருந்து' வளையாது என்று கருத்து!

 

அந்த எதிர்பார்ப்பையே, நீங்கள் தேடிய 'கருக்களில்' மறைந்திருக்கின்றது! :lol:

 

உங்கள் அனுபவங்களே நீங்கள் சொல்லும் 'சோறாகும்' !

 

அது உங்களிடம் நிரம்பவே இருக்கிறது எண்டு எங்களுக்கு நல்லாவே தெரியும்!

 

கருத்துக்கு நன்றிகள்!

சுமேரியரின் கதையின் ஆரம்பம் அலுப்புத்தட்டாமல் விறுவிறுப்பாய் சென்றது அழகு. வாழ்த்துகள்.

 

தொடரினை அடுத்து எடுத்துச் சென்ற புங்கையூரன் கதையினை தொய்ய விடாமல் எடுத்துச் சென்றது சிறப்பாய் இருந்தது.

கவிதை அழகு. வாழ்த்துகள்.

ஒரு பதிவை எழுதி முடித்தபின்னர், உங்கள் கருத்துக்காகக் காத்திருப்பது வழக்கம், கறுப்பி!

 

அது அனேகமாக, நல்ல வெயில் நேரத்தில  'கூவில்' கள்ளடிச்ச மாதிரி ஒரு 'கிக்கைத்' தரும்! :icon_idea: 

 

நன்றிகள், கறுப்பி! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிய பாதங்களும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்று சொல்லுவார்கள்!

 

அதே போல, இந்தத் தொடரானது நிலா அக்காவைத் தட்டியெழுப்பிக் கூட்டிக்கொண்டு வந்ததைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்! :icon_idea:

 

உங்கள் வலைப்பூ பற்றியோ, உங்கள் படைப்புகள் பற்றிய அறியாத பல புதிய உறவுகள், யாழில் இருக்கக் கூடும்! 

 

இருந்தாலும், கதையில் ஒரு பெரிய 'எதிர்பாராத திருப்பத்தை' உங்கள் 'அத்தியாயம்' ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மையாகும்!

 

இனி எவ்வாறு தொடர்வது எனச் சிந்தித்து நின்றவர்களுக்கு, 'வானமே எல்லை' என்பது போல, கதையை விரித்துள்ளீர்கள்!

 

அதே நேரம், ஒரு 'ஆசிரியையின்' கடுமையான கண்டிப்பையும் உங்கள் அத்தியாயத்தில் நான் காணத் தவறவில்லை! :o

 

நன்றிகள், நிலாக்கா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சரின் சிந்தனையானது, கதையை ஒரு 'கிராமத்துச் சமுதாயத்தின் வலையமைப்புக்குள்' அழகாக நகர்த்திச் செல்லுகின்றது!

 

பிறத்தியான் ஒருவன் வந்து, தங்கள் ஊருக்குள் உள்ள 'ஒரு தேவதையைக்' கவர்ந்து செல்ல முயலும் போது,

 

அட, நாங்கெல்லாம் கேணையர்களா? என்பது போல அவர்கள் உணர்வது, கிராமிய சமுதாய அமைப்பில், நிச்சயம் நிகழக்கூடியதே!

 

கிட்டத்தட்ட 'ஏமநாதன்', பாண்டி நாட்டுக்குள்ள வந்த 'பாணபத்திரனை' ப் போட்டிக்கு அழைத்த மாதிரி! :D 

 

பாணபத்திரனைக் காப்பாற்ற அந்தப் பரம சிவனே வந்தான்!

 

ஆனால் இந்தப் பஞ்சர் போட்ட பொறியை உடைக்க, யார் வரப்போகின்றார்களோ என ஆவலுடன் காத்திருக்கிறேன்! :D 

 

வாழ்த்துக்கள்,பாஞ்ச்! 

Link to comment
Share on other sites

வாழ்துக்களுக்கு நன்றி புங்கையூரன்!! :D

 

'பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழா!!' மனதில் பதிந்தது போன்று,

 

புகழ்ச்சி வரும்போது மயக்கம் கொள்வதில்லை எனக்கு நானே கூறிக்கொள்ளும் ஒரு சமாதானமும் மனதில் பதிந்துதான் உள்ளது.

 

ஆனாலும் அது நடைமுறையில் சாத்தியமில்லை என்ற செய்தியும், அடிமனதில் ஒளிந்துள்ளதை மறுக்க முடியாது!.

 

புங்கையூரனின் புகழ்ச்சி என்னை ஏணியில் ஏற்றிவிட்டதை மறுப்பதற்கில்லை!.

 

நானாக விழுகிறேனா! அல்லது யாராவது தள்ளிவிட விழுகிறேனா பார்க்கலாம்!!. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக தொடருகிறது, வாழ்த்துக்கள் உறவுகளுக்கு. காதல்/சஸ்பென்ஸ்/த்ரில்லர் எல்ல்லாம் எதிர் பார்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அதுக்குள்ள சகோதரி நிலாமதியும் , பாஞ்சும் எழுதிவிட்டார்கள். நன்றாக உள்ளது ,ஆயினும் ஒரு சந்தேகம். நிலாமதியின் தொடர் கடைசிப் பந்தியில்  கொழும்பு செல்லும் மதுரன் அடுத்த தொடரில் திரும்பி வந்தது தெரியவில்லை. அதைத் தொடர்ந்து நிறையச் சம்பவங்கள் வந்துவிட்டன, கொஞ்சம் விரித்து எழுதியிருக்கலாமோ என நினைப்பு, :D

 

விமர்சிக்கிறது சுலபம்தான், எழுதினால்தான் அந்தக் கஸ்டம் புரியும்...! :)

Link to comment
Share on other sites

கொழும்பு பயணம்தானே.. எத்தனை தரமும் போய் வரலாம்.. எனினும் நிலாமதி எழுதிய பயணமும், பஞ்ச் எழுதிய கொழும்புப் பயணமும் ஒரே பயணமா என்பது கேள்விக்குறி... ஒரே பயணம் எனில் பல சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாதது.

 

எனினும் பஞ்ச் அவர்களுக்கும் பாராட்டுகள்!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917&p=990841

 

வில்லன்  வந்தாச்சு..... :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.