Jump to content

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்


Recommended Posts

தொடர் 24

கிணற்றடியில் பல்லை மினுக்கியபடியே பொன்னம்மாவீட்டை எட்டிப்பார்த்தான். பொன்னமக்காவின் அழகில் மயங்கியதுண்டு.தோட்டது மரக்கறிகளை கொடுத்து பொன்னம்மாவை ரசித்தான்.அவளுக்கு எதுவும் தெரியாது.அவன் பொன்னமாவை ரசிக்க 

 

 

பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என்று கண்டபின்பும். அந்தப் பூட்டியும் பூட்டனும் புதிய துணையோடு புதுவாழ்வைத் தொடங்குவதையும் மேலைநாட்டுச் சமூகம் மகிழ்வோடு வரவேற்றுக் கொண்டாடுகிறது. எங்கள் தமிழ் சமூகத்திலும் அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டால் என்ன? என்ற சிந்தனை புத்தனைத் தூண்டுவதுபோல் தெரிகிறது. இது வரவேற்கப்படுமா? வறுத்தெடுக்கப்படுமா? உறவுகளின் கருத்துகளிலும் பதம் காண முடியும். மேலும்; சொந்த மண்ணுக்கு மீண்டும் அழைத்துவந்து அதன் வாசனையை நுகரவைத்த திறன்கண்டு வாழ்த்துக்கள்!!   :rolleyes:  :rolleyes:
Link to comment
Share on other sites

  • Replies 256
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் எழுத்து உண்மையில் பழைய விடயங்களை கிளறி விட்டது உண்மை. எத்தனையோ ஆண்டுகளாக மறந்துபோய் இருந்த விடயங்கள் நினைவில் வந்து போயின. தொடருங்கள் புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கொஞ்ம் வாசித்து பாத்தேன்.முடியிற மாதிரி கானலை கையை விட்டுட்டன்

Link to comment
Share on other sites

நானும் கொஞ்ம் வாசித்து பாத்தேன்.முடியிற மாதிரி கானலை கையை விட்டுட்டன்

 

ஆரம்பமானது சுமேரியரால் அது ஆடி அடங்குவதும் சுமேரியரால். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் மாத்தயா, எலக்கிரி கத்தா, அபி ஒக்கம எக்காய், சின்ஹ கொடிய எக்கட அல்லமு.... :lol:  :D

 

யாராவது ஒரு முஸ்லீம் பெண்ணை கதையில் இணையுங்கள் அப்பா! ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் ஒன்றாக வாழலாம்.  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் மாத்தயா, எலக்கிரி கத்தா, அபி ஒக்கம எக்காய், சின்ஹ கொடிய எக்கட அல்லமு.... :lol:  :D

 

யாராவது ஒரு முஸ்லீம் பெண்ணை கதையில் இணையுங்கள் அப்பா! ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் ஒன்றாக வாழலாம்.  :D  :icon_idea:

 

நாங்கள் இணைந்தாலும் அவையள் இணையமாட்டினமே ......மனித உரிமைகள மதிக்கப்பட்டால் ஒன்றாக வாழலாம் இல்லையென்றால் புலிகள்,சிங்கங்கள்,ஒட்டகங்கள் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இணைந்தாலும் அவையள் இணையமாட்டினமே ......மனித உரிமைகள மதிக்கப்பட்டால் ஒன்றாக வாழலாம் இல்லையென்றால் புலிகள்,சிங்கங்கள்,ஒட்டகங்கள் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது.

 

 

அவர் நாலில் ஒன்றாக  இருந்துவிட்டுப்போகலாம் என்கிறார்.....

இது தனிப்பட்ட முடிவா

இனத்தக்கான முடிவா  என்பது தான்  சிக்கல்... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தக் கதைக்குள் வாறம்  என்று நினைக்கும் அளவுக்கு நிறைய விடையங்களை திணித்து எழுதப்படுவதனால் வாசிப்பவர்களுக்கு வோர் அடிக்குது..தப்பாக சொல்லவில்லை..எழுதுவதோடு உங்கள் பங்கு முடிந்து விட்டது படிச்சால் என்ன விட்டால் என்ன என்று இருக்க கூடாது..

Link to comment
Share on other sites

நானும் தப்பாகச் சொல்லவில்லை..யாயினி அவர்களே!.. "யாராவது ஒரு முசுலீம் பெண்ணை கதையில் இணையுங்கள் அப்பா!" என்று கொழும்பன் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளனர். அதற்கு நீங்கள் ஏன் மொட்டாக்குப் போட்டு முகத்தை மூடவேண்டும்? தப்பாகச் சொல்லியிருந்தால் அடியேனை மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தக் கதைக்குள் வாறம்  என்று நினைக்கும் அளவுக்கு நிறைய விடையங்களை திணித்து எழுதப்படுவதனால் வாசிப்பவர்களுக்கு வோர் அடிக்குது..தப்பாக சொல்லவில்லை..எழுதுவதோடு உங்கள் பங்கு முடிந்து விட்டது படிச்சால் என்ன விட்டால் என்ன என்று இருக்க கூடாது..

 

உங்கள் கருத்து கவனத்தில் எடுக்கப்படுகிறது......பகிர்வுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தப்பாகச் சொல்லவில்லை..யாயினி அவர்களே!.. "யாராவது ஒரு முசுலீம் பெண்ணை கதையில் இணையுங்கள் அப்பா!" என்று கொழும்பன் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளனர். அதற்கு நீங்கள் ஏன் மொட்டாக்குப் போட்டு முகத்தை மூடவேண்டும்? தப்பாகச் சொல்லியிருந்தால் அடியேனை மன்னிக்கவும்

 

நான் உங்கள் கருத்தையோ இல்லை மற்றவர்களின் கருத்தையோ பார்த்துட்டு என் கருத்தை எழுதவில்லை,அப்படி எழுதுபவளும் அல்ல..தவறாக கருதிக் கொள்ள வேண்டாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் வேகமாக நகர்ந்த கதை இப்போது ஆமை வேகத்தில் செல்கின்றது. மதுரனையும் நிலாவையும் மீண்டும் ஊருக்கு அனுப்பி வைத்தால்(நாடு கடத்தல் :lol: ) கதை சுவாரசியாமாகச் செல்லும் என நினைக்கின்றேன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி நானும் நீண்ட நாள் எழுதவில்லை. விரைவில் முடிவுக்குக் கொண்டுவர ஒரு கூட்டு முயற்சி எடுப்பம் கவலை வேண்டாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி நானும் நீண்ட நாள் எழுதவில்லை. விரைவில் முடிவுக்குக் கொண்டுவர ஒரு கூட்டு முயற்சி எடுப்பம் கவலை வேண்டாம்

சுபம்  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி டமில்முரசு அவுஸ்ரேலியா ........................................................................................................................................................................................................................திரும்பிப்பார்க்கிறேன் -- முருகபூபதி -வரலாற்றுப்பதிவாளர் சிட்டி சுந்தரராஜன் . இணைந்திருந்து இயங்கிய இலக்கிய வரலாற்றுப்பதிவாளர் சிட்டி சுந்தரராஜன் தமிழக இலக்கிய முன்னோடிகளுடன் நெருக்கமான உறவைப்பேணியவர் ஆக்க இலக்கியப்படைப்புகளை இருவர் அல்லது மூவர் அல்லது நால்வர் அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் இணைந்து எழுதமுடியுமா? இம்முயற்சியை பரிசோதனையாகவே மேற்கொண்ட சிலரின் படைப்புகள் குறித்து அறிந்திருக்கின்றோம். பல வருடங்களுக்கு முன்னர் எஸ்.பொன்னுத்துரை - இ.நாகராஜன் குறமகள் வள்ளிநாயகி இராமலிங்கம் - சு.வேலுப்பிள்ளை கனகசெந்திநாதன் - முதலானோர் இணைந்து மத்தாப்பு என்ற நாவலை படைத்தனர். பின்னர் எஸ்.பொன்னுத்துரை - வ. அ. இராசரத்தினம் - எம்.ஏ. ரஹ்மான் - சாலை இளந்திரையன் ஆகியோர் இணைந்து சதுரங்கம் என்ற நூலை எழுதினார்கள். 1970 களில் வீரகேசரி வாரவெளியீட்டில் அருண். விஜயராணி -தேவமனோகரி - மண்டூர் அசோக்கா - தாமரைச்செல்வி ஆகியோர் இணைந்து நாளைய சூரியன் என்ற தொடர்கதையை எழுதினார்கள். அதேபோன்று புலோலியூர் இரத்தினவேலோன் மற்றும் கோகிலா மகேந்திரன் இருவரும் இணைந்து நெடுங்கதையொன்றை எழுதியிருக்கிறார்கள். தற்பொழுது ஐரோப்பா - கனடா அவுஸ்திரேலியா - முதலான நாடுகளைச்சேர்ந்த பல எழுத்தாளர்கள் இணைந்து ஒரு தொடர்கதையை எழுதத்தொடங்கியிருக்கிறார்கள். படைப்பு இலக்கியமும் கரு - உருவம் - உள்ளடக்கம் சார்ந்ததுதான். ஒரு குழந்தையை ஒரு பெண்மாத்திரம்தான் கருவில் சுமந்து பெற்றெடுக்கமுடியும். அதுபோன்றதே படைப்பு இலக்கியமும். எனவே இருவரோ பலரோ இணைந்து ஒரு ஆக்க இலக்கியத்தை சிருஷ்டிக்க முடியாது என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். பேராசிரியர் கைலாசபதியும் அவரது மனைவி சர்வமங்களம் கைலாசபதியும் இணைந்து செஞ்சீனம் பற்றிய ஒரு பயண இலக்கியத்தை எழுதியிருக்கிறார்கள். தமிழகத்தின் முக்கியமான விமர்சகர் எஸ். வி. ராஜதுரையும் வ. கீதாவும் இணைந்தும் சில விமர்சன நூல்களை எழுதியுள்ளனர். இவ்வாறு தனது இலக்கிய சகாக்களுடன் இணைந்து சில நூல்களை எழுதியிருக்கும் சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் அவர்களைப்பற்றிய இந்தப்பதிவினை எழுத முற்படுகையில் அவர் - கு.ப.ரா.வுடன் இணைந்து எழுதிய – பாரதியை மகாகவியாக நிரூபிக்க முயலும் கட்டுரைகள் கொண்ட - கண்ணன் என் கவி - தி.ஞானகிராமனுடன் இணைந்து எழுதிய நடந்தாய் வாழி காவேரி - சோ.சிவபாத சுந்தரத்துடன் இணைந்து எழுதிய தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் மற்றும் தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி ஆகியனவும் பெ.சு.மணியுடன் இணைந்து எழுதிய அதிசயப்பிறவி வ.ரா. என்பனவும் நினைவுக்கு வருகின்றன. பல வருடங்களுக்கு முன்பு 1975 காலப்பகுதியில் என்று நினைக்கின்றேன். நானும் மல்லிகை ஜீவாவும் கொழும்பு பாமன்கடையில் அப்பொழுது வசித்துக் கொண்டிருந்த சுந்தா சுந்தரலிங்கம் அவர்களைப் பார்க்க ஒரு மாலைவேளையில் சென்றோம். அங்கு சுந்தா - எம்மிடம் காண்பித்த சில ஒளிப்படங்களில் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. சற்று வித்தியாசமான படம். சுந்தா தவில் வித்துவானாகவும். பரராஜசிங்கம் நாதஸ்வரக் கலைஞராகவும் இருவருக்கும் மத்தியில் தீட்சண்யமான கண்களுடன் ஒருவர் தாளம் தட்டியவாறும் காணப்பட்டனர். சுந்தாவிடம் கேட்டேன் ---- யார் இவர்? அவருடைய கண்களில் தீட்சண்யம் ஒளிர்கிறதே...? சுந்தாவை முந்திக் கொண்டு ஜீவா சொன்னார் - அவர்தான் சிட்டி. சிறந்த இலக்கிய விமர்சகர். சிட்டி புனைபெயர். இயற்பெயர் சுந்தரராஜன். பல ஆண்டுகாலமாக அயராமல் எழுதிக் கொண்டும் இலக்கியம் பேசிக் கொண்டுமிருந்த சிட்டி தமது 96 ஆவது வயதில் இறந்து விட்டதாக தமக்கு மின்னஞ்சல் கிடைத்துள்ளதாக – சிட்னியில் வதியும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் தொலைபேசியூடாக எனக்கு தகவல் சொன்னார். சிட்டி எப்பொழுதுமே நகைச்சுவையுணர்வுடன் எழுதியும் பேசியும் வந்தவர். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு பராசக்தி அவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் - க்யூவில் தம்முடன் நின்ற பலர் தமக்கு முன்பே போய் விட்டதாகவும்.... தான் இன்னமும் க்ய+விலேயே நின்று கொண்டிருப்பதாகவும் --- வேடிக்கையாகக் குறிப்பிட்டிருக்கிறார். வரவிருக்கும் மரணத்தையும் நகைச்சுவையுடன் நயக்கும் சிட்டி தன்னை- I Am A Chronicler of Literature - என்றே அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பியவர். எனது வாழ்வில் சிட்டி அவர்களை மூன்று தடவைதான் சந்தித்து உரையாடியிருக்கிறேன். 1984 இல் சென்னையில் தீபம் காரியாலயத்தில் நடந்த இலக்கியச் சந்திப்பிலும் அதே ஆண்டு மயிலாப்பூரில் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இடம்பெற்ற இலக்கியச் சிந்தனை விழாவிலும் - பின்னர் 1990 ஆம் ஆண்டு அடையாறில் நண்பர் ரங்கநாதன் இல்லத்தின் மொட்டை மாடி கீற்றுக் கொட்டகையில் நடந்த மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் அறிமுக நிகழ்வுக் கூட்டத்திலும் சிட்டியுடன் பேசியிருக்கிறேன். பச்சையப்பன் கல்லூரியில் சி.என்.அண்ணாத்துரையின் சக மாணவ நண்பனாக திகழ்ந்த சிட்டி - இலக்கிய உலகில் - வ.ரா. - கு.ப.ரா. புதுமைப்பித்தன் - சி.சு.செல்லப்பா - தி.ஜானகிராமன் உட்பட பல முன்னணி படைப்பாளிகளுடனும் இலங்கையர்களான சோ.சிவபாதசுந்தரம் - சுந்தா சுந்தரலிங்கம் ஆகியோருடனும் நெருக்கமான நட்பை பேணியவர். சுந்தா - அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்பும் தமது தொடர்பை கடிதங்கள் மூலம் பேணியவர். மேலே குறிப்பிடப்பட்ட அனைவரும் சிட்டியுடன் கியூ வில் நின்றவர்கள்தான். அனைவரும் முன்பே போய்விட இவர் சற்றுத் தாமதமாக 96 வயதில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். சிட்டி குறிப்பிடும் Chronicler என்ற ஆங்கிலப்பதத்திற்கு தமிழில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வரலாற்றுப்பதிவாளர் என அர்த்தம் கொள்ளலாம். பல சிறுகதைகளும் நாடகங்களும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் ஆய்வுகளும் எழுதியிருக்கும் சிட்டி அந்திமந்தாரை (சிறுகதைகள்) சில விஷயங்கள் (நகைச்சுவைக் கட்டுரைகள்) என்பனவும் எழுதியுள்ளார். வித்தியாசமான படைப்பாளி. தமது பலத்தையும் பலவீனத்தையும் வெளிப்படையாகச் சொன்னவர். ஏன் இவ்வாறு மற்றொருவருடன் இணைந்து சில முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறீர்கள்? என்று நாடகக்கலைஞரும் பொதுசன ஊடகவியலாளருமான பரீக்ஷா ஞாநி - ( இந்த ஞாநிதான் இம்முறை நடந்த இந்திய பாராளுமன்றத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்டிருப்பவர்) சிட்டியிடம் கேட்டபொழுது - அதற்குக் காரணம் என் சோம்பல்தான். என்னால் பொறுமையாக உட்கார்ந்து நிறைய எழுத முடியாது. ஆனால் தகவல்களைத் திரட்டுவது ஒழுங்குபடுத்திப் பிரிப்பது பிறகு கோர்வைப்படுத்தி அதன் அடிப்படையில் டிக்டேட் செய்வது எல்லாம் எனக்கு சுலபம் - எனச் சொல்லியிருக்கிறார். (ஆதாரம்: சுபமங்களா நேர்காணல் - மே-1992) புதுமைப்பித்தனின் சில கதைகள் குறித்து இவர் சொன்ன கருத்துக்களினால் வெகுண்டெழுந்த – புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரும் - புதுமைப்பித்தனின் வரலாறு எழுதியவருமான தொ.மு.சி.ரகுநாதன் - மிகவும் காட்டமான குரலில் சுபமங்களாவில் சிட்டியை கடுமையாக விமர்சித்தார். அத்துடன் நின்றுவிடாமல் - புதுமைப்பித்தன் - விமர்சனமும் விஷமத்தனங்களும் என்ற விரிவான நூலையும் அவசர அவசரமாக எழுதி வெளியிட்டார். இவ்வாறு கண்டனங்களுக்குள்ளான சிட்டி - சோ.சிவபாதசுந்தரத்துடன் இணைந்து தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் (1989) எழுதி வெளியிட்ட பின்பு ஈழத்து எழுத்தாளர்களின் கடும் சீற்றத்துக்கும் ஆளானார். தெளிவத்தை ஜோசப் - எழுதிய மலையக சிறுகதை வரலாறு நூலிலும் சிட்டி விமர்சிக்கப்பட்டார். இலங்கை எழுத்தாளர்களை மிகவும் நேசித்தவர் சிட்டி. ஈழத்து இலக்கியப்படைப்புகளை தேடிப்பெற்று வாசிக்கும் இயல்பு கொண்டவர். எனினும் சரியான தகவல்கள் அவருக்கு உரிய வேளைகளில் கிட்டாமல் போனதனால் - அந்தப் பதிவுகளில் பலவிடயங்கள் விடுபட்டுப்போயிருக்கக் கூடும். 1984 இல் தீபம் காரியாலயத்தில் நடந்த இலக்கியச் சந்திப்பில் நண்பர் தி.க.சிவசங்கரன் (தி.க.சி) என்னை அறிமுகப்படுத்திப் பேசும்போது – எனது முதலாவது கதைத் தொகுதியான சுமையின் பங்காளிகள் தொகுப்பை கையில் வைத்துக்கொண்டே வந்திருந்தவர்களுக்கு காண்பித்துப் பேசினார். அச்சந்திப்பில் தொ.மு.சி.ரகுநாதன் - ராஜம்கிருஷ்ணன் - அசோக மித்திரன் - சிட்டி - சோ.சிவபாதசுந்தரம் - ஜெயந்தன் -சா.கந்தசாமி - இலங்கை எழுத்தாளர்களான மு.கனகராஜன் - காவலூர் ஜெகநாதன் - கணபதி கணேசன் - க.நவம் (தெணியானின் தம்பி) உட்பட பலர் கலந்து கொண்டனர். சிட்டியும் - சோ.சி.யும் எழுதிய நூலில் எனது கதைகள் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் இருந்தது. இதுபற்றி சுமையின் பங்காளிகள் - இரண்டாவது பதிப்பில் குறிப்பிட்டுள்ளேன். சிட்டியின் எழுத்துலக வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்வையும் விரிவாக எழுதியுள்ளார் நரசய்யா. 2002 இல் வெளியான சாதாரண மனிதன் என்ற இந்நூலை சென்னை கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. இந்நூலையும் பெ.சு.மணியுடன் சி;ட்டி இணைந்து எழுதிய அதிசயப்பிறவி வ.ரா.என்னும் நூலையும் சிட்டி தனது குடும்ப நண்பரான – அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வசித்த சுந்தா சுந்தரலிங்கத்தின் மனைவிக்கு சில வருடங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தார். திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் குறிப்பிட்ட இந்த இரண்டு நூல்களையும் எனக்குப்படிக்கத் தந்திருந்தார். இரண்டுமே அருமையான தகவல் சுரங்கங்கள். பத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம் எழுதிய வீரகேசரி பத்திரிகை தொடர்பான வரலாற்று நூலான ஒரு நாளிதழின் நெடும் பயணம் என்ற நூலில் வீரகேசரியின் முன்னாள் ஆசிரியரான வ.ரா.பற்றி குறிப்பிடும் பொழுது சிட்டி – பெ.சு.மணி இணைந்து எழுதிய நூலையும் ஆதாரமாக பதிவு செய்துள்ளார். பல இலக்கிய ஆய்வாளர்களுக்கு ஆதாரமாகத் திகழ்ந்த சிட்டி பல பத்திரிகைகளில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியில் பலவருடங்கள் சேவைபுரிந்தவர். நிறைய வாசித்தவர். யாத்ரீகனாக அலைந்து தகவல்கள் திரட்டி எழுதியவர். ஐந்தாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்தியப்பிரதமரினால் கௌரவிக்கப்பட்டவர். தீரர் சத்தியமூர்த்தி பற்றி அறிந்திருப்பீர்கள் அகில இந்திய காங்கிரஸின் மூத்த தமிழகத்தலைவர். அவரது பெயரில்தான் தமிழ்நாட்டில் சத்தியமூர்த்திபவன் காங்கிரஸின் தமிழக தலைமையகமாக இயங்குகிறது. சத்தியமூர்த்தியின் மகள் லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி சென்னை வாசகர் வட்டம் என்ற பதிப்பகத்தை தொடங்கி பல சிறந்த நூல்களை வெளியிடுவதற்கு சிட்டி சுந்தரராஜனே பின்னணியிலிருந்து இயங்கியவர். 1970 களில் வாசகர் வட்ட வெளியீடுகள் இலக்கியவட்டாரத்தில் தனித்துவமானதாக பேசப்பட்டது. ஒரே ஒரு முகப்பு ஓவியம்தான்; அனைத்து நூல்களுக்கும் அட்டைப்படமாக இருக்கும். ஆனால் அவற்றின் உள்ளடக்கத்திலிருக்கும் நாவல்கள் மற்றும் படைப்புகள் மிகவும் தரமாகவும் காலத்தையும் வென்று வாழ்வதாகவும் அமைந்திருக்கும். இலங்கை தமிழகம் மலேஷியா சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகள் தொகுக்கப்பட்ட அக்கரை இலக்கியம் - தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் இந்திரா பார்த்தசாரதி கி.ராஜநாராயணன் சார்வாகன் முதலானோரின் குறுநாவல் தொகுப்பு அறுசுவை சிட்டியும் ஜானகிராமனும் இணைந்து எழுதிய நடந்தாய் வாழி காவேரி உட்பட பல நூல்களை வாசகர் வட்ட வெளியீட்டிலிருந்தே படித்திருக்கின்றேன். நூறு வயதை எட்டுவதற்கு நான்கு ஆண்டுகள் இருக்கும் வேளையில் - தமக்கு முந்திக் கொண்டு ஓடியவர்களைத் தேடி நிதானமாக நடந்து சென்றுள்ளார். எழுத்திலும் பேச்சிலும் நிதானமாகத் திகழ்ந்த சிட்டியின் மறைவும் பதட்டமற்ற நிதானமானதே. 1910 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி பிறந்த சிட்டி 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி 96 வயதில் மறைந்தார். பிற்குறிப்பு: மணிக்கொடி கால எழுத்தாளர்களான சிட்டி சுந்தரராஜன் மற்றும் ந. சிதம்பர சுப்பிரமணியன் நினைவுக்கூட்டம் கடந்த மே 10 ஆம் திகதி சென்னையில் மயிலாப்பூரில் நடைபெற்றது. தகவல்: ஜெயமோகன் வலைப்பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கை ஒருத்தரும் எழுதிறதக் காணேல்லை
புத்தன் மட்டும் எத்தனைமுறை கிறுக்கிறது
பரியாரியும் முடிஞ்சளவிலை பத்து வைச்சிருக்கிறன்
பிடிச்சாச் சொல்லுங்கோ தொடரலாம்
கொஞ்ச நாளைக்கு மதுரனும் நிலாவும் தள்ளி இருக்கிறது நல்லதாம்
சாத்திரி சொன்னது உண்மையோ தெரியேல்லை  
எல்லாம் இறைவன் சித்தம் :D :D :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ! பரியாரி சுக்கானைக் கையில் எடுத்து மிகவும் லாகவமாய் கப்பலைச்  செலுத்துகின்றார் , நன்றாக உள்ளது...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...பரியாரியார் !

 

சுவியர் சொன்னது போல, கப்பல் சரியான பாதியிலேயே நகர்ந்து செல்கின்றது!

 

வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

எல்லோரும் எழுதி முடியுங்கள். முழுமையான கருத்தை முன்வைக்கிறேன் கருத்து வைக்கவில்லை என்றால் வாசிக்கவில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டாம். தனித்தனியான கருத்தைத் தரவில்லை என்று நண்பர்கள் யாரும் எண்ணவேண்டாம் உங்கள் தொடர் முழுமைபெற்ற பிற்பாடு ஒவ்வொருவரின் படையலைப்பற்றியும் எனது பார்வையை எழுதுகிறேன். :rolleyes:  :icon_idea:

 

 

என்ன சொல்லப் போறா மடம் ???????

 

நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்கிறது

:lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரியாரியார் தொடருங்கோ எல்லோரும் சொல்வது போல கப்பல் சரியான பாதையில் தான் போகுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோ தெரிஞ்ச பரியாரிதான். ஆனாலும் நல்லா எழுதிறியள். வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் வேகத்தைக் காட்டுங்கள். :lol:

 

Link to comment
Share on other sites

பரியாரியார் உங்கடை மருந்து நல்லா வேலைசெய்யுது. ஒரு முறை பாவித்த உடனேயே பலபேருடைய நோய் பறந்துபோய்விட்டது தெரிகிறது தொடருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரியாரியார் தொடர் சூப்பர் ....தொடரை தொங்கவிடாமல் தொடருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊக்கம் தரும் உறவுகளுக்கு நன்றி
நான் தனியே எழுதுவதில் சுவாரஸ்யம் இல்லை.
மாறி மாறி எழுத வேண்டும்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கதைப் பக்கம் இன்னும் ஒருவரும் வரேல்லை.வேலைக்கு முடிக்கத்தான் வேணும் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.