Jump to content

நேசம் உணவு உற்பத்தி கணக்கறிக்கையும் பெற்ற வெற்றியும்.


Recommended Posts

நேசம் உணவு உற்பத்தி கணக்கறிக்கையும் பெற்ற வெற்றியும்.

 

2012 நேசம் உற்பத்திகள் தொழில் முயற்சியின் பரீட்சார்த்தமாக சாம்பிராணி உற்பத்தியினையடுத்து மிக்சர் உணவு உற்பத்தியினை 09.06.2012 அன்று ஆரம்பித்திருந்தோம். மிக்சர் உற்பத்தியினை மட்டக்களப்பினைத் தளமாகக் கொண்டு ஆரம்பித்திருந்தோம்.

முதல் கட்டம் 4பிரதான தொழிலாளர்களைக் கொண்டு ஆரம்பித்திருந்த இம்முயற்சிக்கு மொத்தம் 336500.00ரூபாவினை முதலிட்டிருந்தோம். அத்தோடு உதவியாளர்கள் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் உட்பட 7பேர் பணியில் இணைந்தார்கள்.

DSCN0229.png

 

வேலைசெய்வோருக்கான மதிய உணவும் வழங்கியிருந்தோம். தேவைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கான உணவுகளும் வழங்கப்பட்டது. வேலைக்கு ஏற்ப முதல் ஆறுமாதங்களும் சம்பளங்களும் வழங்கப்பட்டு தொழிலில் தொடர்ந்த வெற்றியை பெறலாமென்ற நம்பிக்கை பிறந்தது.

இத்தொழிலில் ஈடுபட்ட கணவனையிழந்த 3பிள்ளைகளின் தாயான மாலா என்ற பெண்ணுக்கு மதியம், இரவு உணவும் இங்கிருந்தே வழங்கப்பட்டதோடு மாதாந்தம் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கான பண உதவியினை பிரித்தானியாவிலிருந்து நந்தன் என்ற உறவு வழங்கியிருந்தார்.

உணவு உற்பத்தியினை அடுத்த மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கில் மேலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரிடம் உதவி கோரப்பட்டது. தனது உதவியை வழங்குவதாக இலங்கை சென்ற ஒரு தமிழரும் அவரது நண்பர்கள் சிலரும் நேசம் உணவு உற்பத்தி நிலையத்திற்கு சென்று பார்வையிட விரும்பியிருந்தனர். அவர்கள் சென்று பார்ப்பதற்கான ஒழுங்குகளையும் செய்திருந்தோம்.

DSCN0223.png

நேரில் சென்று பார்த்து வந்தவர்கள் உதவிக்குப் பதிலாக எமது முயற்சியையே சிதைத்துவிட்டு தொடர்புகளிலிருந்து விடுபட்டனர். தொழிலில் ஈடுபட்டவர்களது தொலைபேசியிலக்கம் யாவும் பெற்றுக் கொண்டு திரும்பியவர்கள் தொலைபேசியில் தொழிலாளியொருவருடன் தொடர்ந்து தொடர்பைப் பேணிவந்தார் குறித்த நபர். நேசம் உணவு உற்பத்திகளை தாங்கள் வாழும் புலம்பெயர் தேசங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முகவர் உரிமையையும் தருமாறு கேட்டிருந்தார். நாங்களும் நம்பினோம். ஆனால் நாம் நம்பிய நபர் செய்த துரோகத்தை எங்களால் நம்ப முடியாது போனது.

வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் வழங்கும் பணத்தை உங்களுக்குத் தராமல் இந்த உதவி நிறுவனம் உங்களிடம் வேலை வாங்குகிறது எனவும் குழப்பியடித்தார். அது மட்டுமன்றி மிக்சர் உணவு உற்பத்தியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பெருந்தொகை பணத்தினை புலம்பெயர் தமிழர்கள் வழங்கியிருப்பதாகவும் கூறி ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த தொழிலில் வீழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்கள்.

இந்தக்கதையை நம்பிய வேலையாட்கள் தங்களுக்கு வெளிநாட்டிலிருந்து தந்த பணத்தை தருமாறு பிரச்சனை தந்தார்கள்.வேலையிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வராமல்விட்டார்கள். இறுதியில் அவர்களே உண்மையை புரிந்த போது புதியவர்களால் நேசம் உணவு உற்பத்தி தொடர்ந்து கொண்டிருந்தது. இவர்களில் ஒருபெண் தன்னை மீள எடுக்குமாறு வேண்டியிருந்தார். ஆனால் அனைத்து குழப்பங்களுக்கும் அவரே காரணமாக இருந்து எமது வியாபாரம் இடைநிற்கும் அளவு குழப்பங்களை தந்ததும் இந்தப் பெண்ணே. இவ்விடத்தில் எவ்வித கருணையும் காட்டப்படாமல் திரும்ப வர விரும்பிய யாரையும் உள்வாங்கவில்லை.

இம்முயற்சிக்கு  நாங்கள் முதலிட்டதன் நோக்கம் எதிர்காலத்தில் பலருக்கான வேலை வாய்ப்பினை வழங்குவதன் மூலம் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவே. ஆனால் உதவ விரும்புவதாக வந்தவர்களை நம்பியதில் நாங்கள் முன்னெடுத்த முயற்சி பாதியில் முறியும் நிலமைக்கு வந்திருந்தது.

DSCN0226.png

 

2012 டிசம்பர் கணக்கை முடித்த போது எமக்கு 26.985,50ரூபா நட்டத்தில் நின்றது. போட்ட முதலுக்கே அழிவு வருமோ என அஞ்சும் நிலமையுருவாகியிருந்தது. எனினும் நிருவாகத்தை புதுப்பித்து 2013 புதிய பணியாளர்கள் புதிய நிருவாகப்பொறுப்பாளரையும் நியமித்து தொடர்ந்தோம்.

புதிதாக நிருவாகத்தைப் பொறுப்பேற்ற இளைஞர் 2013 டிசம்பர் வரையில் புதியவர்களை பணியில் அமர்த்தி 2013ம் ஆண்டு சம்பளம் செலவுகள் தவிர்த்து மொத்தம் 66.616,50ரூபாவினையும் இலாபத்தையும் பெற்றுத் தந்துள்ளார். இவ்வருடம் ஆயுர்வேத மருத்துவம் பயிலத் தொடங்கியுள்ள எமது சக பணியாளர் ஒருவருக்கு இவ்வருடத்திற்கான படிப்புச் செலவுக்கு 66.616,50ரூபாவினையும் வழங்கியுள்ளோம்.

இவ்வருடம் மிக்சர் உணவு உற்பத்தியை எமது உப அமைப்புகளான ஒரு அமைப்பிடம் கையளித்துள்ளோம். இம்மாதம் இன்னொரு பின்தங்கிய கிராமத்தின் தொழில் முயற்சிக்கான உதவியாக நேசம் உணவு உற்பத்தி தற்போது கைமாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.

நேசம் உணவு உற்பத்தியில் பெற்றுக் கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் முதலீட்டாளர்களோ அல்லது இதர நபர்கள் வியாபார நிலையங்களுக்கோ அல்லது தொழில் நடைபெறும் இடங்களுக்கு சென்றுவர அல்லது மேற்பார்வை செய்யவோ தொடர்புகளைப் பேணவோ அனுமதிப்பதினை தவிர்த்துக் கொண்டோம்.

அப்படி சென்று வர விரும்புவோருக்கான நிபந்தனைகளையும் வகுத்துக் கொண்டோம். எமது தொழில் முயற்சிகளில் அல்லது உற்பத்தி முயற்சிகளில் முதலீடு செய்வோருக்கான விதிகளையும் சற்று கடுமையாகவே வகுத்துக் கொண்டு 2013 மட்டக்களப்பு புல்லுமலைப் பகுதியில் சீமேந்துக்கல் உற்பத்தியினை ஆரம்பித்திருந்தோம்.

வருமுன் காக்கும் முயற்சியாக நாம் வகுத்த விதிகளும் நிபந்தனைகளும் கடுமையானவையாகவும் அதேநேரம் விமர்சனத்தையும் தந்துள்ளது. எனினும் விதிகள் வகுக்காவிடில் எங்களது முயற்சிகள் வீணாகிப் போய்விடும். இந்த உண்மையை கடந்த கால பட்டறிவின் மூலம் ஒன்றுக்குப் பலமுறை பெற்றிருக்கிறோம்.

நாம் மேற்கொள்ளும் வியாபார முயற்சிகள் யாவுமே சமூக சேவைக்கானதாக அமைவதால் இவ்வியாபாரத்தில் இணைய விரும்பும் முதலீட்டாளர்களும் கட்டளையதிகாரிகள் என்ற நிலையிலிருந்து இறங்கி வியாபாரத்தோடு சமூகப்பொறுப்பையும் பங்கேற்க வேண்டுமென்பதனை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

இதுவரையில் முதலீட்டாளர்கள் எவரும் தேவையற்ற தலையீடுகளையோ அல்லது இடைஞ்சல்களையோ தரவில்லை. பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் தங்கள் உதவியாகவே முதலிட்டுள்ளார்கள். தங்கள் முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்தையும் நேசக்கரம் சமூக சேவைகளுக்கு தந்திருக்கிறார்கள். உதவி வரும் அனைவருக்கும் நன்றிகள்.

நேசம் உணவு உற்பத்தியின் முதலீட்டாளர்கள் :-

சிறி (கனடா) – 50000.00ரூபா

சாந்தி , ரமேஸ் வவுனியன்(யேர்மனி) – 286500.00ரூபா

மொத்த முதலீடு – 336500.00ரூபா.

 

நேசம் உணவு உற்பத்தி 2012 – 2013 கணக்கறிக்கை.

2012mixer.jpg

2013mixer.jpg

 

முதலீடு உற்பத்திப் பொருட்கள் விபரம் :-

nesamproduct-batticalo_Seite_1.jpg

உணவு உற்பத்தி தொடர்பான பழைய செய்தியிணைப்பு :-

http://nesakkaram.org/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/

 

 

Link to comment
Share on other sites

அக்கா,

இந்த குழுமமா உலர் உணவு பொருட்களை விநியோகம் செய்பவர்கள்?

உணவு தயாரிப்பாளர்கள் மிகவும் நேர்த்தியான உணவு பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பது மகிழ்ச்சியான விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவணிக்கு பிறகு சம்பளங்கள் குறைய காரணம் என்ன..?

வேலையாட்கள் வேலையை விட்டு சென்று விட்டார்களா.?

இருந்தும் உற்பத்தி குறையாமல் கூடி கொண்டு சென்று இருக்கிறதே. என்ன முறையை கையாண்டீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா.?

Link to comment
Share on other sites

திங்கள் வரை யாழ் களத்துக்கு வரமாட்டேன் உறவுகளே. எங்களது பெண்கள் அபிவிருத்தி மன்றத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்துலக பெண்கள் தினத்திற்கு லண்டன் போகிறேன். திங்களின் பிறகு உங்கள் கேள்விகளுக்கு பதில் தருகிறேன் முதல்வன், மற்றும் விவசாயி விக்.

Link to comment
Share on other sites

அக்கா,

இந்த குழுமமா உலர் உணவு பொருட்களை விநியோகம் செய்பவர்கள்?

உணவு தயாரிப்பாளர்கள் மிகவும் நேர்த்தியான உணவு பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பது மகிழ்ச்சியான விடயம்.

 

சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனைகளுக்கு வருவார்கள். எப்போதும் சுகாதாரம் கவனிக்கப்படும் விடயமாக உள்ளது.சுகாதாரம் குறைபாடெனில் லைசென்ஸ் தடை செய்து விடுவார்கள். தடுப்பூசி மற்றும் உடல் ஆரோக்கியம் நோய்கள் இல்லையென்ற சான்றிதழும் கட்டாயம் அனைவருக்கும் காட்ட வேண்டும்.
 
சந்தைப்படுத்தலுக்கு தனியே ஒரு குழுவை அமைத்து செய்தோம். தற்போது இந்த வியாபாரத்திற்கான நிர்வாகம் யாவும் புதியவர்களை நியமித்து அடுத்தமாதம் மீண்டும் தொடங்கவுள்ளது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.