Jump to content

கிறிஸ்தவத்தை பற்றி போட்டு வாங்கும் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் நல்ல  தலைவராக  வரணும் என்றால்

முதலில் மற்றவர்களை  மதிக்க

அவர்களது தெய்வங்களை  மதிக்க

அவர்களது கலாசாரங்களை  மதிக்க கற்றுக்கணும்

 

சீமானது பேச்சு

எமக்குள் மேலும் மேலும்  பிரச்சினைகளை  வளர்க்கக்கூடியது

அதனால் அதை  வன்மையாக  கண்டிக்கின்றேன்

Link to comment
Share on other sites

அப்போ பெரியாற மட்டும் தலைவரா ஏற்றுக்கொண்டு திரிங்க .... அவர் இந்து மதத்தை பற்றியும் தான் பேசினார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ பெரியாற மட்டும் தலைவரா ஏற்றுக்கொண்டு திரிங்க .... அவர் இந்து மதத்தை பற்றியும் தான் பேசினார்

 

எனது பார்வை  ஒரு ஈழத்தமிழனாக  மட்டுமே........

எமது  இன்றையநிலையில்

சீமான் இப்படி பேசுவது எமக்கு எந்த நன்மையும்  தராது........ :(  :(  :(

Link to comment
Share on other sites

சீமான் ஈழத்தமிழர்களுக்காக மட்டும் அரசியல் செய்யவில்லையே தமிழகத்தை பொருத்தவரை அரசியலோடு கலந்த பகுத்தறிவு பிரச்சாரமும் அவசியம் பெரியாரில் இருந்து அண்ணா தொடங்கி கலைஞர் வரை அதை தான் செய்தார்கள்

Link to comment
Share on other sites

இது சீமானின் குரலா?

 எனக்கு இந்த வீடியோவில் சந்தேகமா இருக்கு.... இது சீமானின் பேச்சா? எங்கே துளசி?

 

சீமான் ஒரு கிருத்தவர் என்று பரவலான கதை உண்டு....

ஆனால் இப்படி கேணைத்தனமா கதைக்கிறார்...(இந்த வீடியோவின் படி :) )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் குரல்தான். சந்தேகமில்லை.

 

அவர் சொல்வதுகூட வாஸ்த்தவம் தான். கிறீஸ்த்தவனான நானே எனக்குள் அவ்வப்போது கேட்டுக்கொள்ளும் கேள்விகள். இதுவரை பதில் கிடைக்காத கேள்விகள். 

 

இறைவன் இருந்திருந்தால் இந்த உலகில் இவ்வளவு அநியாயங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை.

 

தனது சொந்த மக்களில் ஆறு மில்லியன் பேரை ஹிட்லர் கொன்றபோது கூட வந்து கப்பாற்ற முடியாத ஒரு இறைவன் எவரையுமே காப்பாற்றுவார் என்று நான் நினைக்கவில்லை. 

 

மதங்கள் பேசி நாம் பிரிந்து இருந்தது போதும். எமது ஒரே அடையாளம் தமிழ். தமிழர்களாக ஒன்றிணைவோம்.

 

மதங்களோ கடவுள்களோ எம்மைக் காப்பாற்ற வரப்போவதில்லை. நாமே எம்மைக் காப்பாற்றிக்கொள்ளாவிட்டால், அழிவுதான் மிச்சம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதங்களில் உள்ள மூடத்தனங்களை சரியாக இனங்கண்டு.. சரியாக விமர்ச்சிப்பதில் தவறில்லை. அது எம்மதமாகினும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்காக ஒரு மதத்தை மட்டும் தாக்கிப் பெசுவது சரியல்ல.  பெரியார் கடவுள் இல்லை என்றுதான் கூறியதாக ஞாபகம்.  அதோடு அவர்  அதிகம் தாக்கிப் பேசியதும் தனது மதமான இந்து மதத்தை.

 

எல்லா மதங்களின் மூலமும் சைவசமயம்தான்.  அதனைத்தான் ஒவ்வொரு மதமும் தங்கள் பிரதேசத்திற்கேற்ப மாற்றியமைத்தன.  யேசுவின் பால்யபருவத்தைப் பற்றி பைபிளில் கூறப்படவில்லை.  இமயமலையில் கழிந்திருக்கலாம் என்பது அவரது போதனைகளிலிருந்து ஊகிக்கலாம்.

Link to comment
Share on other sites

சீமானின் குரல்தான். சந்தேகமில்லை.

அவர் சொல்வதுகூட வாஸ்த்தவம் தான். கிறீஸ்த்தவனான நானே எனக்குள் அவ்வப்போது கேட்டுக்கொள்ளும் கேள்விகள். இதுவரை பதில் கிடைக்காத கேள்விகள்.

இறைவன் இருந்திருந்தால் இந்த உலகில் இவ்வளவு அநியாயங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை.

தனது சொந்த மக்களில் ஆறு மில்லியன் பேரை ஹிட்லர் கொன்றபோது கூட வந்து கப்பாற்ற முடியாத ஒரு இறைவன் எவரையுமே காப்பாற்றுவார் என்று நான் நினைக்கவில்லை.

மதங்கள் பேசி நாம் பிரிந்து இருந்தது போதும். எமது ஒரே அடையாளம் தமிழ். தமிழர்களாக ஒன்றிணைவோம்.

மதங்களோ கடவுள்களோ எம்மைக் காப்பாற்ற வரப்போவதில்லை. நாமே எம்மைக் காப்பாற்றிக்கொள்ளாவிட்டால், அழிவுதான் மிச்சம்.

கடவுள் மட்டுமே முழு சுதந்திரம் தருபவர்.

மனிதர் சுதந்திரம் என்றுவிட்டு கட்டுகட்டா சட்டம் போட்டு எங்களை அடைப்போம்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

இயற்கை தெய்வம் 72 வருடங்கள் (மூன்று தலைமுறை) எடுத்து கொல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதங்களில் உள்ள மூடத்தனங்களை சரியாக இனங்கண்டு.. சரியாக விமர்ச்சிப்பதில் தவறில்லை. அது எம்மதமாகினும்..! :icon_idea:

 

ஈழத்தமிழனுக்கு  ஏதாவது நன்மை  கிடைக்கவேண்டுமானால்

சீமான் 2016இல் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும்

அப்படி அவர் வரவேண்டுமென்றால்

இது போன்ற  சீண்டுதல்களை  முடிந்தவரை  தவிர்க்கவேண்டும்

2016இல்  அவரால் ஒரு நிலைக்கு  வரமுடியாவிட்டால்

ஈழத்தமிழினம் நிரந்தர  அடிமையாகும் என்ற  முடிவுக்கு வரலாம்..... :(  :(  :(

அந்த ஆதங்கமே  எனக்கு.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாத்திகம் பேசிக்கிட்டு கருணாநிதி எத்தினை வருசமா தமிழனை ஆளுறாரு. அண்ணன் சீமான்.. அவருக்கு கிறிஸ்தவப் பின்னணி இருக்கென்று நினைக்கிறேன்.. அவரின் இயற்பெயரில்.. செபஸ்ரியன் என்று உள்ளது.... மட்டும்...???!  தமிழர்களைப் பொறுத்த வரை மதம் அல்ல.. முக்கியம். மொழியும்.. நிலமும்.. இன இருப்புமே முக்கியம். :):icon_idea:

Link to comment
Share on other sites

சீமான் கிறிஸ்த்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அதை விமர்சிக்கின்றார் இந்து மதத்தையும் கடுமையாக விமர்சித்து இந்து அமைப்புக்களின் கடும்

கண்டனத்துக்கு ஆளாகி இருந்தார்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை படைச்சு அவரை இப்படி பேச வைச்ச கடவுள் இப்ப அறிவாளியா முட்டாளா?  :icon_idea:

 

 

  

 

படைப்பு இருந்தா படைப்பாளி இருக்கனும். சரி ரைட்டு. கடவுள் ஒரு படைப்பு என்றா கடவுளை படைச்ச படைப்பாளி யாரு? 

 

 

Link to comment
Share on other sites

சீமானை படைச்சு அவரை இப்படி பேச வைச்ச கடவுள் இப்ப அறிவாளியா முட்டாளா? :icon_idea:

படைப்பு இருந்தா படைப்பாளி இருக்கனும். சரி ரைட்டு. கடவுள் ஒரு படைப்பு என்றா கடவுளை படைச்ச படைப்பாளி யாரு?

நூறில் ஒரு கிராம் தக்காளி விதை வளர்ந்து இருபது கிலோ காய் தருகிறது.

அப்படியொரு கண்டுபிடிப்பை யார் செய்தது?

படைத்தவர் எல்லா உயிரினத்திற்கும் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்.

சீமானை பேச வைப்பது கடவுள் அல்ல மனிதர்.

நாங்கள் மண்டைய போடும்போது படைப்பாளியை காண்போம்.

சயன்ஸ் இன்னும் உலகில் உள்ள முழு உயிரினங்களையும் ஆராயவில்லை. அரைகுறையா கடவுள் இல்லை என்று தீர்ப்பு கொடுத்துவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.