Jump to content

எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள் உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள்


Recommended Posts

எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள்
உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள்
 
எங்களைத் தெரிகிறதா? எம் நிலை புரிகிறதா
எங்களின் எண்ணிக்கை அடிக்கடி கூறப்படும்
எண்ணிக்கைகள் மாற்றப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்படும்
ஆனால் எங்களை எவருக்கும் தெரியாது
எங்கள் வாழ்நிலையும் எவருக்கும் புரியாது
இப்போதாவது எம்மைத் தெரிகின்றதா?
குடும்பத்தலைவர்களை இழந்தவர்கள் என
சுட்டிச்சொல்லப்படுபவர்கள் நாங்கள்.
 
எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள்
உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள்
எத்துணை இடர்களுக்குள் 
எம் வாழ்வு தொடர்கின்றது என பாருங்கள்
 
வாழ இடம், வசிக்க வீடு 
உழைப்புக்கு வழி 
உண்பதற்கு உணவு 
உடுக்க உடை 
இப்படி எதற்குமே வழியின்றி
தனித்து விடப்பட்டு
மெல்ல செத்துக்கொண்டிருக்கின்றோம்
 
பசித்து அழும் குழந்தையை
ஆற்றிட வழி தெரியாமல்,
பள்ளிக்கு குழந்தைகளை
அனுப்பி வைக்கும் வசதியில்லாமல்,
எங்கள் அவலவாழ்வு தொடர்கின்றது
 
படையினரின் கழுகுப்பார்வையிலிருந்து
பெண்பிள்ளைகளை காப்பாற்ற வழியின்றி
நித்தமும் மனவதைப்படுகின்றோம்.
ஆண்பிள்ளைகளின் உயிருக்கு
எந்தவேளையிலும் ஆபத்துவரலாமென
தினம்தினம் அஞ்சிஅஞ்சி 
செத்துக்கொண்டிக்கின்றோம் 
 
இப்படி நாளும் நாளும் 
சாகடிக்கப்படும் எங்களை
எவருக்கும் தெரியாது
ஆனால் மாநாடுகளில்
எங்கள் எண்ணிக்கைகளை
அடிக்கடி கூறிக்கூறி பேசுவதற்கும்,
அலசி ஆராய்வதற்கும்
ஆயிரம் ஆயிரமாய் ஆட்கள் தயார்
ஆனால் எம்மைப்; பற்றி சிந்திக்கவோ,
எம் வாழ்நிலையை மேம்படுத்தவோ
ஆருக்கும் நேரமில்லை
 
மாதினி
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மைப்; பற்றி சிந்திக்கவோ,
எம் வாழ்நிலையை மேம்படுத்தவோ
ஆருக்கும் நேரமில்லை..............................

 

 

 

.......பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், மந்தாகினி!

 

எமது இனமானது வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கப்பட வேண்டுமென, ஒரு கூட்டமே 'கங்கணம்' கட்டிக்கொண்டிருக்கின்றது! :o

 

அந்த முடிவின் அடிப்படையில், அதற்கேற்பக் காரணங்கள் தேடப்படுகின்றதேயன்றி, எமது துயரைக்  'காது கொடுத்துக்' கேட்பதற்கு யாருமே இல்லாத 'அனாதைகள்' நாங்கள் என்பது நிஜமாகிக் கொண்டு வருகின்றது! :icon_mrgreen:

 

ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் மனதுக்குக் கடினமாக இருக்கிறது அல்லவா, மந்தாகினி?  

 

இல்லாவிட்டால், உலகத்துக்கு கருணையைப் போதித்த புத்த பெருமானின் பெயரால், நாம் அழிக்கப்படுவதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

 

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற தாரக மந்திரத்தை முன்மொழிந்த இனம், வந்தவரை எல்லாம் 'சிம்மாசனங்களில்' அமர்த்திவிட்டு, அவர்கள் முன்பு 'சப்பாணி' கட்டிக்கொண்டு இருந்த இனம், அதன் விளைவுகளை இன்று அனுபவிக்கின்றது என்பதைத் தவிர வேறு ஒன்றும் நினைக்க முடியவில்லை!

 

உங்கள் 'கவிதையின்' தாக்கம் ... இவ்வளவையும் எழுத வைத்துவிட்டது.....!

 

உங்கள் 'ஆதங்கங்கள்' நியாயமானவை என்பதைத் தவிர வேறு எதை, எம்மால் செய்ய முடியும் என்று தோன்றவில்லை!

 

அந்த அளவுக்கு 'எமது இனம்', மீண்டும், மீண்டும் தண்டிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது!

 

ஒரே இடத்தில், குந்தியிருந்து, அழுது ஆற்றிக் கொள்வதற்காகவாவது, அடிக்கடி வாருங்கள்!

 

கவிதைக்கு நன்றிகள்! 

Link to comment
Share on other sites

வணக்கம், மந்தாகினி!

 

எமது இனமானது வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கப்பட வேண்டுமென, ஒரு கூட்டமே 'கங்கணம்' கட்டிக்கொண்டிருக்கின்றது! :o

 

அந்த முடிவின் அடிப்படையில், அதற்கேற்பக் காரணங்கள் தேடப்படுகின்றதேயன்றி, எமது துயரைக்  'காது கொடுத்துக்' கேட்பதற்கு யாருமே இல்லாத 'அனாதைகள்' நாங்கள் என்பது நிஜமாகிக் கொண்டு வருகின்றது! :icon_mrgreen:

 

ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் மனதுக்குக் கடினமாக இருக்கிறது அல்லவா, மந்தாகினி?  

 

இல்லாவிட்டால், உலகத்துக்கு கருணையைப் போதித்த புத்த பெருமானின் பெயரால், நாம் அழிக்கப்படுவதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

 

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற தாரக மந்திரத்தை முன்மொழிந்த இனம், வந்தவரை எல்லாம் 'சிம்மாசனங்களில்' அமர்த்திவிட்டு, அவர்கள் முன்பு 'சப்பாணி' கட்டிக்கொண்டு இருந்த இனம், அதன் விளைவுகளை இன்று அனுபவிக்கின்றது என்பதைத் தவிர வேறு ஒன்றும் நினைக்க முடியவில்லை!

 

உங்கள் 'கவிதையின்' தாக்கம் ... இவ்வளவையும் எழுத வைத்துவிட்டது.....!

 

உங்கள் 'ஆதங்கங்கள்' நியாயமானவை என்பதைத் தவிர வேறு எதை, எம்மால் செய்ய முடியும் என்று தோன்றவில்லை!

 

அந்த அளவுக்கு 'எமது இனம்', மீண்டும், மீண்டும் தண்டிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது!

 

ஒரே இடத்தில், குந்தியிருந்து, அழுது ஆற்றிக் கொள்வதற்காகவாவது, அடிக்கடி வாருங்கள்!

 

கவிதைக்கு நன்றிகள்! 

 

Link to comment
Share on other sites

வணக்கம், மந்தாகினி!

 

எமது இனமானது வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கப்பட வேண்டுமென, ஒரு கூட்டமே 'கங்கணம்' கட்டிக்கொண்டிருக்கின்றது! :o

 

அந்த முடிவின் அடிப்படையில், அதற்கேற்பக் காரணங்கள் தேடப்படுகின்றதேயன்றி, எமது துயரைக்  'காது கொடுத்துக்' கேட்பதற்கு யாருமே இல்லாத 'அனாதைகள்' நாங்கள் என்பது நிஜமாகிக் கொண்டு வருகின்றது! :icon_mrgreen:

 

ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் மனதுக்குக் கடினமாக இருக்கிறது அல்லவா, மந்தாகினி?  

 

இல்லாவிட்டால், உலகத்துக்கு கருணையைப் போதித்த புத்த பெருமானின் பெயரால், நாம் அழிக்கப்படுவதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

 

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற தாரக மந்திரத்தை முன்மொழிந்த இனம், வந்தவரை எல்லாம் 'சிம்மாசனங்களில்' அமர்த்திவிட்டு, அவர்கள் முன்பு 'சப்பாணி' கட்டிக்கொண்டு இருந்த இனம், அதன் விளைவுகளை இன்று அனுபவிக்கின்றது என்பதைத் தவிர வேறு ஒன்றும் நினைக்க முடியவில்லை!

 

உங்கள் 'கவிதையின்' தாக்கம் ... இவ்வளவையும் எழுத வைத்துவிட்டது.....!

 

உங்கள் 'ஆதங்கங்கள்' நியாயமானவை என்பதைத் தவிர வேறு எதை, எம்மால் செய்ய முடியும் என்று தோன்றவில்லை!

 

அந்த அளவுக்கு 'எமது இனம்', மீண்டும், மீண்டும் தண்டிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது!

 

ஒரே இடத்தில், குந்தியிருந்து, அழுது ஆற்றிக் கொள்வதற்காகவாவது, அடிக்கடி வாருங்கள்!

 

கவிதைக்கு நன்றிகள்! 

 

 

அவலப்படும் மக்களின் நிலையையோ,மக்களின் உணர்வுகளையோ புரிந்து கொள்வதற்கு எவருமே இல்லை என்ற வேதனைதான் இதனை எழுதவைத்தது. எங்கள் மக்களின் வாழ்வில் எப்படி விடிவு கிட்டப்போகின்றது.
இப்படியே பொய்யான தீர்மானங்கள்,மாநாடுகள் என்று காலம் உருண்டோட
மக்கள் வாழ்க்கை துன்பத்துள் கரைய வேண்டியதுதானா என்ற வேதனைதான் இதனை எழுத வைத்தது.
தங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி

எம்மைப்; பற்றி சிந்திக்கவோ,

எம் வாழ்நிலையை மேம்படுத்தவோ

ஆருக்கும் நேரமில்லை..............................

 

 

 

.......பகிர்வுக்கு நன்றி

அவலப்படும் மக்களின் நிலையையோ,மக்களின் உணர்வுகளையோ புரிந்து கொள்வதற்கு எவருமே இல்லை என்ற  வேதனைதான் இதனை எழுதவைத்தது.  எங்கள் மக்களின் வாழ்வில் எப்படி விடிவு கிட்டப்போகின்றது.
இப்படியே பொய்யான தீர்மானங்கள்,மாநாடுகள் என்று காலம் உருண்டோட
மக்கள் வாழ்க்கை துன்பத்துள் கரைய வேண்டியதுதானா என்ற வேதனைதான் இதனை எழுத வைத்தது.
தங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.