Jump to content

‘சர்வதேச பெண்கள் தினம்’ தமிழ் பெண்களால் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு


Recommended Posts

‘சர்வதேச பெண்கள் தினம்’ தமிழ் பெண்களால் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு

மார்ச் மாதம் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக அனுட்டிக்கப்படுகின்ற நேரத்தில் தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் (TWDF)ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி நிறுவனம் தமிழ் தகவல் நடுவம் மற்றும் கெண்டன் தமிழ் பாடசாலை ஆகியவற்றின் பிரதம அனுசரனையுடன் பிரித்தானியாவில் எட்ஜ்வெயர் என்னும் இடத்தில் அமைந்துள்ள கனோன் உயர் பாடசாலையில் மாற்றத்தை ஊக்குவிப்போம் என்ற 2014 ஆம் ஆண்டிற்குரியை கருப்பொருளை பிரதான குறிக்கோளாகக் கொண்டு சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் பெண்களிற்கெதிரான வன்முறை ஒழிப்பு பெண்களின் சமூகப்பங்களிப்பு சர்வதேச அளவில் தமிழ் பேசும் பெண்களின் நிலையும் அபிவிருத்தியும் போருக்கு பின்னான தமிழ் பெண்களின் நிலை மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி பிரதான தலைப்புகளாகக் கலந்துரையாடப்பட்டன.

2-300x205.jpg3-300x205.jpg

சமூக அபிவிருத்தி நிறுவன தலைவி டொக்ரர் தேவா அவர்களின் தலைமையில் நடையெற்ற இந்நிகழ்வின் பிரதம பேச்சாளர்களாக மகாராஸ்டிரா சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர் ராதா , டீ சொய்சா ,குர்தீஸ் சமூகத்தை சேர்ந்த எவ்றிம், யில்மாஸ் மற்றும் அவருடைய பிரதிநிதிகள் அத்துடன் தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் இணைப்பாளர்களான சாந்தி ரமேஸ் , வகிந்தினி , வனஜா ஆகியோர் பங்குபற்றினர்.

 

நிகழ்வின் பிரதான அங்கமாக ஊடகவியலாளர் பிரான்சஸ் கரிசன் அவர்கள் எமது போராட்டத்தில் பங்குபற்றிய முன்னாள் பெண்போராளிகளினது பாதுகாப்பிற்காகவும் நல்வாழ்விற்காகவும் தொடர்ச்சியாக ஆற்றிவரும் பணியை மதிப்பளித்து மானிடத்தின் குரல் 2014 என்ற விருது தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தினரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1-300x205.jpg

தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தினரால் பதிவுசெய்யப்பட்ட உண்மைச்சம்பவங்களின் தொகுப்பான உயிரோடு வழியும் கண்ணீரின் கதை என்ற நூலும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

 

நடனங்கள் மற்றும் கவிதைகள் ஆகியனவற்றை உள்ளடக்கிய இந்த நிகழ்வில் தமிழ் தகவல் நடுவத்தின் சட்ட ஆலோசனை மையத்தின்; பிரதம ஆலோசகர்களான கணநாதன் கீத்தாத்தனன் கஜன் ஆகியோரால் பிரித்தானியாவில் குடிவரவுச்சட்டங்களும் நடைமுறைகளும் என்ற கருத்தரங்கும் நடத்தப்பட்டது.

 

இந்நிகழ்வில் கல்வியலாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் நிறுவனப்பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

நிகழ்வின் இறுதி நிகழ்வாக தமிழ் பெண்கள் அபிவிருத்தி மன்றத்தின் 2014-2015 இற்குரிய திட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலும் மலையகத்திலும் தமிழ்பேசும் பெண்களின் அபிவிருத்தியையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்காகன பயிற்சித்திட்டங்களை அங்கிருக்கும் பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுத்துவது என்பதே அந்தப் பிரகடனத்தின் சாராம்சம் ஆகும்.

http://thisaikaddi.com/?p=41652

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  விடயம்

 

அதேநேரம்  10ந்திகதி  ஐநா முன்றலில் நடந்த  நிகழ்வில் இவர்கள் கலந்து கொண்டார்களா என  அறிய  ஆவல்...?

Link to comment
Share on other sites

ஓம் போனார்கள் மற்றவர்கள். ஆனால் எனக்கு போக முடியேல்ல. 

Link to comment
Share on other sites

ராஜேஷ் அக்கா வரல்லியோ? :(:D

பொரியல் சட்டியாலை அடிச்சுப்போடுவன் தம்பி கவனம். :lol:

 

ராஜேஷ் அக்கா இங்கையெல்லாம் வரமாட்டா தெரியாதோ ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜேஷ் அக்கா வரல்லியோ? :(:D

 

மரியாதை  தெரியாத பையனாக  இருக்கிறாரே  சுண்டல்

ராஜேஷ் ஆச்சி  என்று சொல்லணும் :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

www.neruppu.jpg  சொன்னாப்போலை கொஞ்சநாளாய் ராஜேஸ் அக்கான்ரை சலசலப்பு ஒண்டையும் காணேல்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடம்பு இடங்கொடுக்குதில்லப் போல.. ஆடி அடங்கிட்டுது. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.