Jump to content

ஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை..(2) .!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் ஆரம்பப் பகுதியைப் பார்க்க, பின்வரும் இணைப்பில் அழுத்தவும்...!.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137109

 

பகுதி-2

 

Ayers1.jpg

 

பரந்து கிடந்த அந்தச் சிவப்புக் கல் மலைக்குவியலின், வாய்ப்பக்கத்தை நோக்கித் தனது காரைச் செலுத்திய ‘ மாயா', அங்கு தனியாக நின்றிருந்த ஒரு ‘யூகலிப்டஸ்' மரத்தின் அருகே நிறுத்தினாள்! அந்த மரமும், அவளைப்போலவே பல நினைவுகளைச் சுமந்து கொண்டிருப்பது போலவே அவளுக்குத் தெரிந்தது. ‘உலுறுவின்' மேலே சென்று, அதிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காக, உல்லாசப்பயணிகள் சிலர் வரத் தொடங்கியிருந்தனர். ‘உலுறுவை' அவள் பார்க்கும் விதத்துக்கும், மற்றவர்கள் பார்க்கும் விதத்துக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகத் தான் அவள் எண்ணினாள். எல்லாரும் ‘கயிலாயம்' போவதனால், நானும் போக வேண்டும் என்பது போலத் தான் அவர்களது வருகை இருக்கும்!

 

ஆனால், மாயா, அந்த மலையின் வெளி அழகை ரசிக்கவில்லை. அதன் பிரமாண்டத்தைத் தன்னுள் உள்வாங்கிக் கொள்கின்றாள். அகல விரிந்த இரவு வானத்தின் நட்சத்திரச் சிதறல்களிலும்,  அடர்ந்த காடுகளின் நடுவில் காணப்படும் ‘மயான அமைதியிலும் ' அவள் இதே ‘உணர்வை' அடைவதுண்டு. ஒரு வேளை, தனது மூதாதையர்களின் ‘ கனவுக்காலங்கள்' என்பது இதுவாகத் தான் இருக்கவேண்டும் என அவள் பலமுறை சிந்தித்ததும் உண்டு. எல்லோருக்கும் எதுவுமேயில்லாத பாலை நிலமாகத் தெரிவது, அவளுக்கு மட்டும் எல்லாமே நிறைந்த ஒரு ‘வளமான பூமியாகத்' தோன்றுகின்றது.தனது உடலும், பிரபஞ்சமும் ஒன்றோடு ஒன்று ‘பின்னிப் பிணைந்தது’  போன்ற ஒரு விதமான ‘உணர்வு' அவளுக்கு இங்கு வரும்போது ஏற்படும்.

 

நினைவுகளின் நகர்வுகளுக்குக் கடிவாளம் போட்டவள், உரத்த குரலில்’பின்டி' என்று கத்தினாள். அப்போது அந்த மலைப்பிளவும். உரத்த குரலில், திருப்பிக் கத்தியது. பின்னர் தனது கணவனின் பெயரைச் சொல்லிக் ‘குலன்' என்று கத்தவும், மலைப்பிளவும் உரத்த குரலில் மீண்டும் திரும்பக் கத்தியது.    

 

இந்த இடத்தில், மாயாவின் கணவன் ‘குலனைப்' பற்றிக் கொஞ்சம் சொல்வது பொருத்தமென நினைக்கிறேன்! அவுஸ்திரேலியாவின் கரையோரம் தவிர்ந்து, மத்திய பகுதிகளில் பொதுவாக 'பூர்வீகக் குடிகளே' அதிகமாக வாழ்கின்றார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் அதிகம் இல்லை. அதனால், குலனும், ஒரு மந்தை நிலையத்தில் ‘மாடுகளை மேய்ப்பவனாக' வேலை செய்தான். பகல் முழுவதும் குதிரைகள் மீதிருந்தபடி, மாடுகளை வழிநடத்துவது தான் அவனது வேலையாக இருந்தது. 'டிங்கோ' (Dingo) என அழைக்கப்படும் காட்டு நாய்களிடமிருந்தும், மற்றும் திருடர்களிடமிருந்தும் ‘மந்தைகளைக் கவனமாகப்' பாது காப்பது தான் அவனது தொழிலாக இருந்தது. அத்துடன், பூர்வீகக் குடிகளுக்கே தனித்துவமான ‘ தடம் பார்த்துத் தேடுதல்' (Tracking Skills) ஐ உபயோகித்துத் தப்பியோடி மறைந்து வாழும், சிறைக்கைதிகள், தேடப்படும் குற்றவாளிகள், போன்றவர்களைத் தேடிப்பிடிக்க, போலீசார் அவனது உதவியை நாடுவதுமுண்டு.

 

553655-180611-raparapa.jpg

 

அப்போதெல்லாம், பூர்வீகக் குடிகளுக்கு, மதுசாரம் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. ஆதலால், அவர்கள் ‘யாராவது ஒரு வெள்ளைக்காரனின் காலில் விழுந்து தான் ‘அதிக பணத்தைக் கொடுத்து' அவர்கள் மூலம் 'மதுபானங்களை' வாங்கியாக வேண்டும்! இப்படி ஒரு நாள், மதுவருந்தி விட்டு நடந்து வரும்போது, ‘கைது' செய்யப்பட்ட குலனுக்கு, இரண்டு வாரங்கள் தனிமைச் சிறைத்தண்டனை கிடைத்தது.  ஒரு திறந்த வெளியில், வாழ்நாள் முழுவதையும் செலவழித்த ஒருவன், தனிமைச் சிறையில் போடப்பட்டால், இரண்டு நாட்கள் கூட அவர்களில் சிலரால் உயிர் வாழ முடியாது. அவர்களது ‘குடும்பப்  பிணைப்புகள்' அவ்வளவு தூரம் இறுக்கமானவை! அத்துடன் , இயற்கையுடனான அவர்களது தொடுகையும் மிகவும் நெருக்கமானது. நீரிலிருந்து வெளியே, தூக்கிப்போடப்பட்ட ஒரு மீனின் நிலையில் தான், இவர்கள் சிறைகளில் இருப்பார்கள். சிறையில் போடப்பட்ட இரண்டாவது நாளே குலன், சிறைக்கூட்டினுள் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டான்.

 

Cat+Cages+Old+LA+zoo+2010.jpg

 

இப்போதெல்லாம், பூர்வீகக் குடிகளுக்கெனச் சிறைச்சாலைக்குள்ளேயே ‘ தனியான திறந்த சிறைகள்' அமைக்கப்பட்டுள்ளன!

 

அவளுக்கும், குலனுக்கும் இடையேயான காதலின் காரணமாகவே ‘மாயா' இப்போதெல்லாம் இங்கு வருகிறாள். அவளுக்குள்ளே, வெளியே சொல்ல இயலாத ஒரு ‘ரகசியம்' ஒன்று புதைந்து கிடக்கின்றது. அவளது, அம்மம்மாவுக்குக் கூடத் தெரியாத ‘இரகசியமாக' அவள் அதைத் தனக்குள் மிகவும் ஆழமாகப் புதைத்து வைத்திருக்கிறாள். குலனின் தற்கொலைக்குப் பின்னர் மாயா, அவளது அம்மாவுடன் வசிக்கவில்லை. இன்னுமொரு ‘காம்பில்' உள்ள சில நண்பிகளுடன் சேர்ந்து வசித்து வந்தாள். அதற்கான முக்கிய தேவையும் அவளுக்கிருந்தது. குலன் இறந்த சில வாரங்களிலேயே, அவனது  குழந்தை தனது வயிற்றில் வளர்வது மாயாவுக்குத் தெரியவந்தது.

 

பிறக்கப் போகும் குழந்தையைப்பற்றி, எல்லா அன்னையர்களும் சுமக்கின்ற கனவுகளையே மாயாவும் சுமந்தாள். அந்தக்குழந்தை அவளுக்கு மிகவும் அவசரமாகத் தேவைப்பட்டது போலவும் அவள் உணர்ந்தாள்.

 

வயிற்றில் நோவு, ஏற்பட்ட போது, தனியாகவே அந்த ‘பில்லா பொங்’ (Billabong) ஐ நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாள். மாலை நேரமாகையால், உயர்ந்த மரக்கிளைகளைலிருந்து, கூக்கபரா (Kookaburra) பறவைகளின் ஒலி, அவளைப்பார்த்து, யாரோ எக்காளமிட்டுச் சிரிப்பது போல கேட்டது.’தென்றல்' அவர்களது வயிற்றைத் தடவிக் ‘கிச்சு கிச்சு' மூட்டுவதனால் தான், அவை அவ்வாறு சிரிப்பதாக அம்மம்மா இளமையில் கூறுவதுண்டு.

 

எவரது உதவியுமில்லாமலே, ஒரு அழகிய ஆண் குழந்தையொன்றை, அந்த சிறு குளக்கரையின் , உயர்ந்து வளர்ந்த புற்களின் நடுவில் பெற்றெடுத்தாள்.

ஓரளவுக்கு, அயர்ச்சி தெளிந்து மாயா விழித்துகொண்டபோது அந்தக்குழந்தையின் ‘முனகல் சத்தம்' அவளது காதில் கேட்டது. மெதுவாகக் கண்விழித்துக் குழந்தையைப் பார்த்தவளுக்குத் தனது கண்களையே நம்ப முடியவில்லை.  

 

மூக்கையும், தலைமயிரையும் தவிர, அந்தக் குழந்தையின் ‘தோற்றம்' முழுவதுமே, ஒரு ‘வையிட் பெல்லா’ வாகவேயிருந்தது! அடுத்ததாக அவள் செய்த காரியமே, அவளை இவ்வளவு நாளும் வாட்டிக்கொண்டிருக்கின்றது.

 

அவளது மூதாதையர் செய்து வந்தது போலவே, அந்தக்குழந்தையை, ஒரு நெருப்பெறும்புகள் வாழும் ‘மண் குவியல்' ஒன்றினுள் வைத்து விட்டு, தனது அம்மம்மா வாழும் ;காம்பை' நோக்கி நடந்து சென்று விட்டாள்.

 

 

hamersley02.jpg

 

குழந்தையின் அவலம், சிறிது நேரம் வரை அவளது காதுகளில் கேட்டுக்கொண்டிருந்தது. கண்களைத் துடைத்தபடியே. அந்தக் குழந்தைக்கு ‘மானசீகமாக' ‘ஜோர்ஜ்' என்ற பெயரையும் வைத்து விட்டிருந்தாள். அந்தக் குழந்தையின், கன்னத்தில் ஒரு ‘பூமராங் ' (boomerang) போன்ற கறுத்த நிற ‘மச்சம்' ஒன்றிருந்தது அவளுக்கு இன்னமும், தெளிவாக நினைவிருக்கின்றது. ‘ஜோர்ஜ்' ஐப் பற்றி, நினைத்துப் பார்க்காத நாட்களே இல்லையெனக் கூறலாம்!

 

இப்போதெல்லாம், அவள் ‘உலுறு'வுக்கு அடிக்கடி வருவதற்கான காரணமே, சில மாதங்களுக்கு முன்பு அங்கு வரும்போது கண்ட, சுருட்டைக் கறுத்தத் தலைமயிருடனும், அகன்ற மூக்குடனும், காணும் அந்த 'வெள்ளை' இளைஞனின் உருவம் தான். அவளும் அடிக்கடி வருவதனால், அவனும் அடிக்கடி அங்கு வருகிறான் என்பதையும் புரிந்து கொண்டாள். ஒரு வேளை, அந்தப்பகுதியிலேயே வசிப்பவனாக இருக்க வேண்டும். அவனது ஒரு கன்னத்திலும்,

'பூமராங் '  போன்ற ஒரு மெல்லிய கருமை நிறம் கலந்த 'மச்சம்'..!

 

அவள் வழக்கம் போல, மலை வாயை நோக்கித் தாயின் பெயரை, உரக்கக் கூறிக் கத்தியபோது, அவனும் உரக்கக் கூவுவது கேட்டது!

 

அதற்கு ‘மலை வாய்' உரத்த குரலில் அளித்த பதில்…..’மாயா…..”  !

 

 

(சிறு கற்பனைகள் மட்டும் கலந்த ஒரு உண்மைக்கதை....ஒரு அவுஸ்திரேலிய 'பூர்வீகக் குடிமகனால்' கூறப்பட்டது...!)

 
Link to comment
Share on other sites

நல்ல கதை பூங்கை. வாழ்த்துக்கள்.
 
சில வருடங்களுக்கு முன் நீல மலைப்  [ Blue Mountains] பகுதிக்குப் போயிருந்தோம்.
 
அங்கு டிஜரீடு வாசித்துக் கொண்டிருந்த ஒரு பூர்வீகக் குடிமகன் எங்களைக் கண்டு முகம் மலர்ந்தான். அந்த சிரிப்பில் ஒரு அன்னியோன்யம் தெரிந்தது.
 
நெடிய வாட்ட சாட்டமான உடலில் சுடலைப் பொடி. நீண்ட சடை. இடையைச் சுற்றி ஒரு துண்டு.
 
 
++++++++++++++++++++++++++++++++++  
 
மாயா = ம் + யா
 
ம் ‍  = பிரபஞ்சம் இதனுள் அடங்கும்
யா = பிரபஞ்சம் இதிலிருந்து விரியும்
 
ஈஸ்வரா = இஸ் + வரா
 
இஸ் = பிரபஞ்சம் இதனுள் அடங்கும் 
வரா = பிரபஞ்சம் இதிலிருந்து விரியும்
 
ஈஸ்வரா = மாயா ???  :blink:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ...!  இணைப்புக்கு  நன்றி புங்கை ,  மாயா போன்றே அவனும் ஓரளவு ஊகித்திருக்கக் கூடும்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கதையினை வாசித்து முடிந்தபின்பு கவலையாக இருக்கிறது. ஒருவேளை நாங்களும் எங்கள் உறவுகளைப் பிரிந்து பல்வேறு நாடுகளில் சிதறிவாழ்வதுதான் காரணமோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன்... கதையை வாசிக்க சுராசியமாகவுள்ளது, புங்கை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான புங்கையின் கதையோடம். நன்று அடிக்கடி எழுதுங்கள்.

 

Link to comment
Share on other sites

நல்லதொரு கதை வாசித்த நிறைவு! பாராட்டுகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையண்ணாவின் கதையென்றால்

புனைவுடன் 

நியமும் கலந்திருக்கும் என்பது அறிந்தது தானே

அருமை

இன்னும் கொஞ்சம் நேரத்தை  ஒதுக்கலாமே  எமக்காக..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்ல கதை பூங்கை. வாழ்த்துக்கள்.
 
சில வருடங்களுக்கு முன் நீல மலைப்  [ Blue Mountains] பகுதிக்குப் போயிருந்தோம்.
 
அங்கு டிஜரீடு வாசித்துக் கொண்டிருந்த ஒரு பூர்வீகக் குடிமகன் எங்களைக் கண்டு முகம் மலர்ந்தான். அந்த சிரிப்பில் ஒரு அன்னியோன்யம் தெரிந்தது.
 
நெடிய வாட்ட சாட்டமான உடலில் சுடலைப் பொடி. நீண்ட சடை. இடையைச் சுற்றி ஒரு துண்டு.
 
 
++++++++++++++++++++++++++++++++++  
 
மாயா = ம் + யா
 
ம் ‍  = பிரபஞ்சம் இதனுள் அடங்கும்
யா = பிரபஞ்சம் இதிலிருந்து விரியும்
 
ஈஸ்வரா = இஸ் + வரா
 
இஸ் = பிரபஞ்சம் இதனுள் அடங்கும் 
வரா = பிரபஞ்சம் இதிலிருந்து விரியும்
 
ஈஸ்வரா = மாயா ???  :blink:

 

இவரைச் சொல்லுகிறீர்களா, ஈசன்?

 

இவருடன் ஒரு நாள் கதை கொடுத்தேன்! பின்னால, நிக்கிற கறுத்தக் கார், இவருடையது தான்! :D

 

blue-mountain-aboriginal-didgeridoo-play

 

அநேகமான, பூர்வீகக் குடிகளின் பெயர்களில், மாயா, பின்டி, குலன் என்பதை, எல்லா அவுஸ்திரேலிய மாநிலங்களினலும் வாழும், வெவ்வேறு இனப் பூர்வீகக் குடிகளுக்கும் பொதுவாகவே உள்ளன!

 

அவர்களது மொழிகளுக்கு எழுத்துருக்கள் இல்லாததால், 'மாயாவை' சில இடங்களில் 'மியா' என்று ' மையா' என்றும் அழைக்கிறார்கள்! அதே போலவே, பின்டியும், பிந்தி எனவும், பிந்தை எனவும் மாற்றியும் அழைக்கிறார்கள்.

 

ஆனால் இவர்கள் பேசும்போது, நுணுக்கமாக அவதானித்தால், 'தமிழ்' அல்லது 'மலையாளம்' போலவே சத்தங்கள், வருகின்றன! :D

 

மிகக் கடுமையான அவதானத்தின் பின்னர் 'தண்ணி' என்ற வார்த்தையும் இடைக்கிடை வந்து போகின்றது! என்ன, கருத்து என்று தெரியவில்லை! :unsure:

 

வரவுக்கு நன்றிகள், ஈசன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ...!  இணைப்புக்கு  நன்றி புங்கை ,  மாயா போன்றே அவனும் ஓரளவு ஊகித்திருக்கக் கூடும்...! :)

வணக்கம், சுவியர்.

 

இவர்களது, தேவையில்லாத 'குழந்தைகளைக்' கொடுமையான முறையில் கொன்று விடும் பழக்கம், கங்காருக்களை அவதானித்ததில் இருந்து வந்திருக்கக் கூடும் என அனுமானிக்கிறேன்! :o

 

பொதுவாக, கங்காருக்களின், பைகளுக்குள் தான், குட்டிகளுக்குப் பாலுட்டும் 'முலைக்காம்புகள்' அமைந்திருக்கும். 

 

மிகவும் சிறியதாகவே இவை, தாயின் கருப்பையிலிருந்து 'பிறந்து' பின்னர் 'தாங்களாக' கங்காருப் பைகளிலிருந்தே, மிகுதியான முதிர்ச்சி நிலையை அடைகின்றன!

 

பொதுவாக, எதிர்பார்ப்புக்கும் மேலாக, அந்த வருடத்து 'வரட்சி' இருக்குமென்பதைக், கங்காருத் தாய்களால், ஏதோ ஒரு வகையில் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

 

அவ்வாறு உணர்ந்தால், அவை தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுப்பதை நிறுத்திவிட, 'குட்டிகள்' அந்தப் பையிலேயே மரணித்துப் போகின்றன! 

வெளிப் பார்வைக்குக் 'கொடுமை' போலத் தோன்றினாலும், அந்தக் குட்டிகள் எப்படியோ 'அழியத் தானே போகின்றன' எனப் பார்க்கையில், தாய்க் கங்காருக்கள், எங்களை விடவும், பல யுகங்களுக்கு, முன்னேறியுள்ளதாகவே, நான் கருதுகின்றேன்..!

 

என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே, கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே... நினைவுக்கு வரவேண்டுமே...! :icon_idea:  

Link to comment
Share on other sites

இவராக இருக்கலாம். இளமையாகவும் கொஞ்சம் திடகாத்திரமாகவும் இருந்த மாதிரி ஞாபகம். அதே இடம் தான். குகைக்கு முன்பாக.
 
இவர் பிரித்தானியா சென்று வந்ததாகவும் இவருடைய பழைய ஓவியங்களை லண்டன் நூதனசாலை அவுஸ் பழங்குடிகளின் ஓவியம் என்று நல்ல விலைக்கு வாங்கியதாகவும் ஒருவர் சொன்னார். கொஞ்ச நாள் நல்ல காசு கையில் புழங்கியதாம்.
 
இவரை வைட் ஃபெலாக்கள் ஜோன் என்று அழைப்பார்கள் என்று நினைக்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையண்ணா.. நிறைய விடையங்கள் தெரிந்து வைத்திருக்கிறீங்கள்.இன்னும் நிறைய விடையங்கள் பற்றி எழுதனும் என்பது ஆவல்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை! உங்களின் எழுத்தாற்றலை கண்டு பெரிதும் மெச்சுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
original_checking_cattle__copy_.jpg
dingo_medium.jpg 
blue-mountain-aboriginal-didgeridoo-play

 

எம்மைப் போன்று,  இவர்கள் கட்டுவதும்... வேட்டி, சாரம் போலுள்ளது.
அவர்களது பெயர்களிலும்.... நமது பெயர் கலந்துள்ள‌து.
அப்படிப் பார்க்கையில்... குமரிக்கண்டம் அழிய முன்பு, தற்போதுள்ள ஆசியக்கண்டமும், அவுஸ்திரேலியக் கண்டமும் ஒரே நிலப் பகுதியாக இருந்த போது..... தமிழகம், ஈழத்திலிருந்து கால் நடையாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற தமிழ் மக்களாக இருக்கலாம்.

 

மேலும் புங்கை குறிப்பிடும் "டிங்கோ" போன்ற நாய்களை இப்போதும் அநேகமான‌ யாழ்ப்பாண‌ வீடுகளில் வளர்ப்பு நாயாக காணலாம். அவுஸ்திரேலிய வனாந்தரத்தில்.. திரியும் சில மண்ணிற மாடுகளும்... நம் ஊர் மாடுகளாவே தெரிகின்றன. இவர்கள் இடம் பெயரும் போது... தமது தேவைகளுக்காக அந்த நாயையும், மாட்டையும் ஆசியாவிலிருந்து கூட்டிச் சென்றிருக்கலாம் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

புங்கை உங்கள் எழுத்து வளமைபோல ஒரு வரலாற்றுக் கதையையும் சொல்லிச் சென்றுள்ளது. மாயா மனசில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறாள். ஒரு பெண்ணாய் அவள் பட்ட துயர்களிலிருந்து கண்ணீராய் ஒரு சந்ததியின் கதையை மாயா சொல்லிக் கொண்டு போகிறாள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இறுதிக்கதையில் உங்கள் முத்திரை நன்றாகவே உள்ளது புங்கை வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

இவரைச் சொல்லுகிறீர்களா, ஈசன்?

 

இவருடன் ஒரு நாள் கதை கொடுத்தேன்! பின்னால, நிக்கிற கறுத்தக் கார், இவருடையது தான்! :D

 

blue-mountain-aboriginal-didgeridoo-play

 

அநேகமான, பூர்வீகக் குடிகளின் பெயர்களில், மாயா, பின்டி, குலன் என்பதை, எல்லா அவுஸ்திரேலிய மாநிலங்களினலும் வாழும், வெவ்வேறு இனப் பூர்வீகக் குடிகளுக்கும் பொதுவாகவே உள்ளன!

 

அவர்களது மொழிகளுக்கு எழுத்துருக்கள் இல்லாததால், 'மாயாவை' சில இடங்களில் 'மியா' என்று ' மையா' என்றும் அழைக்கிறார்கள்! அதே போலவே, பின்டியும், பிந்தி எனவும், பிந்தை எனவும் மாற்றியும் அழைக்கிறார்கள்.

 

ஆனால் இவர்கள் பேசும்போது, நுணுக்கமாக அவதானித்தால், 'தமிழ்' அல்லது 'மலையாளம்' போலவே சத்தங்கள், வருகின்றன! :D

 

மிகக் கடுமையான அவதானத்தின் பின்னர் 'தண்ணி' என்ற வார்த்தையும் இடைக்கிடை வந்து போகின்றது! என்ன, கருத்து என்று தெரியவில்லை! :unsure:

 

வரவுக்கு நன்றிகள், ஈசன்!

கதையுடன தெரியாத பல விசயங்களையும் அறியக்கூடியவாறு இருந்தது. நன்றி

இந்த படத்தில் உள்ள பழங்குடிமகனுடைய கார் பின்னால் நிற்பதாக கூறியுள்ளீர்கள். இவரின் வாழ்க்கைச் சூழல் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையுடன தெரியாத பல விசயங்களையும் அறியக்கூடியவாறு இருந்தது. நன்றி

இந்த படத்தில் உள்ள பழங்குடிமகனுடைய கார் பின்னால் நிற்பதாக கூறியுள்ளீர்கள். இவரின் வாழ்க்கைச் சூழல் புரியவில்லை.

வணக்கம், சண்டமாருதன் !

 

பொதுவாக பழங்குடி மக்களின் 'வாழ்க்கை நிலை' அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில், மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது! இவர்களுக்கென,அரசாங்கம் பல விதமான 'உதவிகள்' செய்கின்ற போதும், எல்லாமே, அரை வாசி 'அபோரிஜின்' அல்லது கால்வாசி 'அபோரிஜின்' என்று வெள்ளைகளே, அவற்றை அனுபவிக்கின்றார்கள்.

 

இவர்களின் நிலை எப்போதும், 'செத்தையில இருக்கிறதைத் தூக்கி மெத்தையில போட்டால், திரும்பவும் செத்தையை நாடிப்போகும்' நிலை தான்!

 

ஒரு சிலர் 'இப்போது' கொஞ்சம் கொஞ்சமாக ' அரசியல்', 'விளையாட்டு' போன்ற துறைகளில் முன்னேறிக்கொண்டு வருகிறார்கள்!

 

இவர்களும் தங்களுக்கெனத் தனித்துவமான 'பிரதேசங்கள்' வைத்திருக்கிறார்கள்! ஒரு 'இனத்தின்' பிரதேசத்துக்குள். வேறு இனத்தவர் 'போவது' மிகவும் குறைவு!

 

இதன் பிரகாரம், 'Blue Mountains' பிரதேசத்தில், 'மேலுள்ளவர்'  வசிக்கிறார். இவருக்கு, வெளிநாட்டினர் வரும்போது, இவருடன் இருந்து படம் எடுப்பதற்குப் 'பணம்' கொடுப்பதுண்டு. அத்துடன்  Didjeridoo எனும் நீண்ட குழாய் போன்ற வாத்தியக்கருவியையும் வாசிப்பார்.அதனாலும், இவருக்கும் பணம் கொடுப்பார்கள். அதனால்  இவரிடம் பணம் புழங்குகின்றது! அதை வைத்து ஒரு பழைய 'பென்ஸ் கார்' வாங்கி வைத்துள்ளார். அதனால் தான் அதைக் குறிப்பிட்டேன்!

 

'Blue Mountains'  என்ற பியர் வரவும் ஒரு காரணம் உள்ளது. இந்த மலைக்குன்றுகளில் ' விக்ஸ்' மரங்கள் நிறைய வளரும். அதிகாலை வேளையில், பனி தடவப்பட்ட ;விக்ஸ்; இலைகளில் சூரிய ஒளி, பட்டுத் தெறிக்கும் போது, மலைகள் நீல நிறமாகத் தெரியும். :lol:

Link to comment
Share on other sites

பதிலுக்கு நன்றி புங்கையூரான்

இங்குள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கையும் மிகுந்த துயரம் நிறைந்தது. உலகில் அதிகளவு தற்கொலை செய்பவர்கள் இவர்கள். பலர் மது போதைக்கு அடிமையானவர்களாகவும் இருக்கின்றனர். நிறைய ஊனமுற்றவர்கள். பலர் மேம்பட்ட நிலையிலும் உள்ளனர் மேம்பாட்டை நோக்கி போராடிக்கொண்டும் உள்ளனர்.

இப்போத வயதான நிலையில் மிகவும் பாதிப்புக்குள்ளானவர்களாக காணப்படும் ஒரு தலைமுறை சிறுவயதில் பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு புறம்பான பள்ளிகளில் அடைத்து பாலியல் துஸ்பிரயோகம் முதல் அனைத்து இன ரீதியான துஸ்பிரயோகங்களுக்கு உட்பட்டு பாதி இறந்துபோக மீதி உடலும் உள்ளமும் சிதைக்கப்பட்ட தலைமுறை. இவ்வாறாக எஞ்சியிருந்த கடசிப் பள்ளிக்கூடம் 1996 ல் தான் மூடப்பட்டது.

இப்போதுள்ள பிரதமர் மற்றும் பிரதான கட்சித்தலைவர்கள் நடந்த கொடுமைகளுக்காக மன்னிப்புக்கேட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், சண்டமாருதன்!

 

ஆங்கிலேயர்களால், காலனித்துவப்படுத்தப்பட்ட' நாடுகளின்' பொதுவான நிலை, ஒரே மாதிரிப்போலத் தான் உள்ளது!

 

Maralinga -தெற்கு அவுஸ்திரேலியா போன்ற இடங்களில் தான், மிகவும் ஆபத்தான ' அணு ஆயுத பரிசோதனைகளைப்' பிரித்தானியா செய்து முடித்தது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் 'இந்தப் பூர்வீகக் குடிகளே" !

 

அத்துடன், இன்னுமொரு தனித்துவமான ஒரு  'அபோரிஜினல் இனம்' கொஞ்சம் 'நிறமாக' இருந்ததால், அந்த இனம் தங்களுக்குப் போட்டியாக வரக்கூடும் என்பதால், அந்த இனத்தில் ஆண்கள் அனைவரும், வரிசையில் அழைக்கப்பட்டு, அவர்கள் அனைவரும், ஈவிரக்கமின்றிக் 'காயடிக்கப் பட்ட' சம்பவங்களும் நடந்தேறின!

 

அதன் பின்னர், அந்த இனம் முழுவதுமாகவே அழிக்கப்பட்டது. :o 

 

நேரம் கிடைத்தால், நிச்சயம் இதைப்பற்றி 'யாழில்' எழுதுவேன்!

 

நீங்களும் அவ்வாறே எழுதினால், மற்றவர்களும் இப்படியான வரலாறுகளைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்!

 

அத்துடன், 'யாழ்' என்பதையும் ஒரு ஆவணப் பொக்கிசமாகவே நான் பார்க்கிறேன்!

 

நாளை, நாம் இல்லாத காலத்திலும், தமிழினமே ஒரு வேளை, அழிந்து போயிருந்தாலும், யாரோ ஒரு தமிழன் நிச்சயம், யாழிலிருந்து  பல உண்மைகளை அறிந்துகொள்வான் என்னும் நம்பிக்கை என்னிடம் நிறையவே உள்ளது! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.