Jump to content

ஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை..(2) .!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் ஆரம்பப் பகுதியைப் பார்க்க, பின்வரும் இணைப்பில் அழுத்தவும்...!.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137109

 

பகுதி-2

 

Ayers1.jpg

 

பரந்து கிடந்த அந்தச் சிவப்புக் கல் மலைக்குவியலின், வாய்ப்பக்கத்தை நோக்கித் தனது காரைச் செலுத்திய ‘ மாயா', அங்கு தனியாக நின்றிருந்த ஒரு ‘யூகலிப்டஸ்' மரத்தின் அருகே நிறுத்தினாள்! அந்த மரமும், அவளைப்போலவே பல நினைவுகளைச் சுமந்து கொண்டிருப்பது போலவே அவளுக்குத் தெரிந்தது. ‘உலுறுவின்' மேலே சென்று, அதிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காக, உல்லாசப்பயணிகள் சிலர் வரத் தொடங்கியிருந்தனர். ‘உலுறுவை' அவள் பார்க்கும் விதத்துக்கும், மற்றவர்கள் பார்க்கும் விதத்துக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகத் தான் அவள் எண்ணினாள். எல்லாரும் ‘கயிலாயம்' போவதனால், நானும் போக வேண்டும் என்பது போலத் தான் அவர்களது வருகை இருக்கும்!

 

ஆனால், மாயா, அந்த மலையின் வெளி அழகை ரசிக்கவில்லை. அதன் பிரமாண்டத்தைத் தன்னுள் உள்வாங்கிக் கொள்கின்றாள். அகல விரிந்த இரவு வானத்தின் நட்சத்திரச் சிதறல்களிலும்,  அடர்ந்த காடுகளின் நடுவில் காணப்படும் ‘மயான அமைதியிலும் ' அவள் இதே ‘உணர்வை' அடைவதுண்டு. ஒரு வேளை, தனது மூதாதையர்களின் ‘ கனவுக்காலங்கள்' என்பது இதுவாகத் தான் இருக்கவேண்டும் என அவள் பலமுறை சிந்தித்ததும் உண்டு. எல்லோருக்கும் எதுவுமேயில்லாத பாலை நிலமாகத் தெரிவது, அவளுக்கு மட்டும் எல்லாமே நிறைந்த ஒரு ‘வளமான பூமியாகத்' தோன்றுகின்றது.தனது உடலும், பிரபஞ்சமும் ஒன்றோடு ஒன்று ‘பின்னிப் பிணைந்தது’  போன்ற ஒரு விதமான ‘உணர்வு' அவளுக்கு இங்கு வரும்போது ஏற்படும்.

 

நினைவுகளின் நகர்வுகளுக்குக் கடிவாளம் போட்டவள், உரத்த குரலில்’பின்டி' என்று கத்தினாள். அப்போது அந்த மலைப்பிளவும். உரத்த குரலில், திருப்பிக் கத்தியது. பின்னர் தனது கணவனின் பெயரைச் சொல்லிக் ‘குலன்' என்று கத்தவும், மலைப்பிளவும் உரத்த குரலில் மீண்டும் திரும்பக் கத்தியது.    

 

இந்த இடத்தில், மாயாவின் கணவன் ‘குலனைப்' பற்றிக் கொஞ்சம் சொல்வது பொருத்தமென நினைக்கிறேன்! அவுஸ்திரேலியாவின் கரையோரம் தவிர்ந்து, மத்திய பகுதிகளில் பொதுவாக 'பூர்வீகக் குடிகளே' அதிகமாக வாழ்கின்றார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் அதிகம் இல்லை. அதனால், குலனும், ஒரு மந்தை நிலையத்தில் ‘மாடுகளை மேய்ப்பவனாக' வேலை செய்தான். பகல் முழுவதும் குதிரைகள் மீதிருந்தபடி, மாடுகளை வழிநடத்துவது தான் அவனது வேலையாக இருந்தது. 'டிங்கோ' (Dingo) என அழைக்கப்படும் காட்டு நாய்களிடமிருந்தும், மற்றும் திருடர்களிடமிருந்தும் ‘மந்தைகளைக் கவனமாகப்' பாது காப்பது தான் அவனது தொழிலாக இருந்தது. அத்துடன், பூர்வீகக் குடிகளுக்கே தனித்துவமான ‘ தடம் பார்த்துத் தேடுதல்' (Tracking Skills) ஐ உபயோகித்துத் தப்பியோடி மறைந்து வாழும், சிறைக்கைதிகள், தேடப்படும் குற்றவாளிகள், போன்றவர்களைத் தேடிப்பிடிக்க, போலீசார் அவனது உதவியை நாடுவதுமுண்டு.

 

553655-180611-raparapa.jpg

 

அப்போதெல்லாம், பூர்வீகக் குடிகளுக்கு, மதுசாரம் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. ஆதலால், அவர்கள் ‘யாராவது ஒரு வெள்ளைக்காரனின் காலில் விழுந்து தான் ‘அதிக பணத்தைக் கொடுத்து' அவர்கள் மூலம் 'மதுபானங்களை' வாங்கியாக வேண்டும்! இப்படி ஒரு நாள், மதுவருந்தி விட்டு நடந்து வரும்போது, ‘கைது' செய்யப்பட்ட குலனுக்கு, இரண்டு வாரங்கள் தனிமைச் சிறைத்தண்டனை கிடைத்தது.  ஒரு திறந்த வெளியில், வாழ்நாள் முழுவதையும் செலவழித்த ஒருவன், தனிமைச் சிறையில் போடப்பட்டால், இரண்டு நாட்கள் கூட அவர்களில் சிலரால் உயிர் வாழ முடியாது. அவர்களது ‘குடும்பப்  பிணைப்புகள்' அவ்வளவு தூரம் இறுக்கமானவை! அத்துடன் , இயற்கையுடனான அவர்களது தொடுகையும் மிகவும் நெருக்கமானது. நீரிலிருந்து வெளியே, தூக்கிப்போடப்பட்ட ஒரு மீனின் நிலையில் தான், இவர்கள் சிறைகளில் இருப்பார்கள். சிறையில் போடப்பட்ட இரண்டாவது நாளே குலன், சிறைக்கூட்டினுள் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டான்.

 

Cat+Cages+Old+LA+zoo+2010.jpg

 

இப்போதெல்லாம், பூர்வீகக் குடிகளுக்கெனச் சிறைச்சாலைக்குள்ளேயே ‘ தனியான திறந்த சிறைகள்' அமைக்கப்பட்டுள்ளன!

 

அவளுக்கும், குலனுக்கும் இடையேயான காதலின் காரணமாகவே ‘மாயா' இப்போதெல்லாம் இங்கு வருகிறாள். அவளுக்குள்ளே, வெளியே சொல்ல இயலாத ஒரு ‘ரகசியம்' ஒன்று புதைந்து கிடக்கின்றது. அவளது, அம்மம்மாவுக்குக் கூடத் தெரியாத ‘இரகசியமாக' அவள் அதைத் தனக்குள் மிகவும் ஆழமாகப் புதைத்து வைத்திருக்கிறாள். குலனின் தற்கொலைக்குப் பின்னர் மாயா, அவளது அம்மாவுடன் வசிக்கவில்லை. இன்னுமொரு ‘காம்பில்' உள்ள சில நண்பிகளுடன் சேர்ந்து வசித்து வந்தாள். அதற்கான முக்கிய தேவையும் அவளுக்கிருந்தது. குலன் இறந்த சில வாரங்களிலேயே, அவனது  குழந்தை தனது வயிற்றில் வளர்வது மாயாவுக்குத் தெரியவந்தது.

 

பிறக்கப் போகும் குழந்தையைப்பற்றி, எல்லா அன்னையர்களும் சுமக்கின்ற கனவுகளையே மாயாவும் சுமந்தாள். அந்தக்குழந்தை அவளுக்கு மிகவும் அவசரமாகத் தேவைப்பட்டது போலவும் அவள் உணர்ந்தாள்.

 

வயிற்றில் நோவு, ஏற்பட்ட போது, தனியாகவே அந்த ‘பில்லா பொங்’ (Billabong) ஐ நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாள். மாலை நேரமாகையால், உயர்ந்த மரக்கிளைகளைலிருந்து, கூக்கபரா (Kookaburra) பறவைகளின் ஒலி, அவளைப்பார்த்து, யாரோ எக்காளமிட்டுச் சிரிப்பது போல கேட்டது.’தென்றல்' அவர்களது வயிற்றைத் தடவிக் ‘கிச்சு கிச்சு' மூட்டுவதனால் தான், அவை அவ்வாறு சிரிப்பதாக அம்மம்மா இளமையில் கூறுவதுண்டு.

 

எவரது உதவியுமில்லாமலே, ஒரு அழகிய ஆண் குழந்தையொன்றை, அந்த சிறு குளக்கரையின் , உயர்ந்து வளர்ந்த புற்களின் நடுவில் பெற்றெடுத்தாள்.

ஓரளவுக்கு, அயர்ச்சி தெளிந்து மாயா விழித்துகொண்டபோது அந்தக்குழந்தையின் ‘முனகல் சத்தம்' அவளது காதில் கேட்டது. மெதுவாகக் கண்விழித்துக் குழந்தையைப் பார்த்தவளுக்குத் தனது கண்களையே நம்ப முடியவில்லை.  

 

மூக்கையும், தலைமயிரையும் தவிர, அந்தக் குழந்தையின் ‘தோற்றம்' முழுவதுமே, ஒரு ‘வையிட் பெல்லா’ வாகவேயிருந்தது! அடுத்ததாக அவள் செய்த காரியமே, அவளை இவ்வளவு நாளும் வாட்டிக்கொண்டிருக்கின்றது.

 

அவளது மூதாதையர் செய்து வந்தது போலவே, அந்தக்குழந்தையை, ஒரு நெருப்பெறும்புகள் வாழும் ‘மண் குவியல்' ஒன்றினுள் வைத்து விட்டு, தனது அம்மம்மா வாழும் ;காம்பை' நோக்கி நடந்து சென்று விட்டாள்.

 

 

hamersley02.jpg

 

குழந்தையின் அவலம், சிறிது நேரம் வரை அவளது காதுகளில் கேட்டுக்கொண்டிருந்தது. கண்களைத் துடைத்தபடியே. அந்தக் குழந்தைக்கு ‘மானசீகமாக' ‘ஜோர்ஜ்' என்ற பெயரையும் வைத்து விட்டிருந்தாள். அந்தக் குழந்தையின், கன்னத்தில் ஒரு ‘பூமராங் ' (boomerang) போன்ற கறுத்த நிற ‘மச்சம்' ஒன்றிருந்தது அவளுக்கு இன்னமும், தெளிவாக நினைவிருக்கின்றது. ‘ஜோர்ஜ்' ஐப் பற்றி, நினைத்துப் பார்க்காத நாட்களே இல்லையெனக் கூறலாம்!

 

இப்போதெல்லாம், அவள் ‘உலுறு'வுக்கு அடிக்கடி வருவதற்கான காரணமே, சில மாதங்களுக்கு முன்பு அங்கு வரும்போது கண்ட, சுருட்டைக் கறுத்தத் தலைமயிருடனும், அகன்ற மூக்குடனும், காணும் அந்த 'வெள்ளை' இளைஞனின் உருவம் தான். அவளும் அடிக்கடி வருவதனால், அவனும் அடிக்கடி அங்கு வருகிறான் என்பதையும் புரிந்து கொண்டாள். ஒரு வேளை, அந்தப்பகுதியிலேயே வசிப்பவனாக இருக்க வேண்டும். அவனது ஒரு கன்னத்திலும்,

'பூமராங் '  போன்ற ஒரு மெல்லிய கருமை நிறம் கலந்த 'மச்சம்'..!

 

அவள் வழக்கம் போல, மலை வாயை நோக்கித் தாயின் பெயரை, உரக்கக் கூறிக் கத்தியபோது, அவனும் உரக்கக் கூவுவது கேட்டது!

 

அதற்கு ‘மலை வாய்' உரத்த குரலில் அளித்த பதில்…..’மாயா…..”  !

 

 

(சிறு கற்பனைகள் மட்டும் கலந்த ஒரு உண்மைக்கதை....ஒரு அவுஸ்திரேலிய 'பூர்வீகக் குடிமகனால்' கூறப்பட்டது...!)

 
Link to comment
Share on other sites

நல்ல கதை பூங்கை. வாழ்த்துக்கள்.
 
சில வருடங்களுக்கு முன் நீல மலைப்  [ Blue Mountains] பகுதிக்குப் போயிருந்தோம்.
 
அங்கு டிஜரீடு வாசித்துக் கொண்டிருந்த ஒரு பூர்வீகக் குடிமகன் எங்களைக் கண்டு முகம் மலர்ந்தான். அந்த சிரிப்பில் ஒரு அன்னியோன்யம் தெரிந்தது.
 
நெடிய வாட்ட சாட்டமான உடலில் சுடலைப் பொடி. நீண்ட சடை. இடையைச் சுற்றி ஒரு துண்டு.
 
 
++++++++++++++++++++++++++++++++++  
 
மாயா = ம் + யா
 
ம் ‍  = பிரபஞ்சம் இதனுள் அடங்கும்
யா = பிரபஞ்சம் இதிலிருந்து விரியும்
 
ஈஸ்வரா = இஸ் + வரா
 
இஸ் = பிரபஞ்சம் இதனுள் அடங்கும் 
வரா = பிரபஞ்சம் இதிலிருந்து விரியும்
 
ஈஸ்வரா = மாயா ???  :blink:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ...!  இணைப்புக்கு  நன்றி புங்கை ,  மாயா போன்றே அவனும் ஓரளவு ஊகித்திருக்கக் கூடும்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கதையினை வாசித்து முடிந்தபின்பு கவலையாக இருக்கிறது. ஒருவேளை நாங்களும் எங்கள் உறவுகளைப் பிரிந்து பல்வேறு நாடுகளில் சிதறிவாழ்வதுதான் காரணமோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன்... கதையை வாசிக்க சுராசியமாகவுள்ளது, புங்கை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான புங்கையின் கதையோடம். நன்று அடிக்கடி எழுதுங்கள்.

 

Link to comment
Share on other sites

நல்லதொரு கதை வாசித்த நிறைவு! பாராட்டுகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையண்ணாவின் கதையென்றால்

புனைவுடன் 

நியமும் கலந்திருக்கும் என்பது அறிந்தது தானே

அருமை

இன்னும் கொஞ்சம் நேரத்தை  ஒதுக்கலாமே  எமக்காக..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்ல கதை பூங்கை. வாழ்த்துக்கள்.
 
சில வருடங்களுக்கு முன் நீல மலைப்  [ Blue Mountains] பகுதிக்குப் போயிருந்தோம்.
 
அங்கு டிஜரீடு வாசித்துக் கொண்டிருந்த ஒரு பூர்வீகக் குடிமகன் எங்களைக் கண்டு முகம் மலர்ந்தான். அந்த சிரிப்பில் ஒரு அன்னியோன்யம் தெரிந்தது.
 
நெடிய வாட்ட சாட்டமான உடலில் சுடலைப் பொடி. நீண்ட சடை. இடையைச் சுற்றி ஒரு துண்டு.
 
 
++++++++++++++++++++++++++++++++++  
 
மாயா = ம் + யா
 
ம் ‍  = பிரபஞ்சம் இதனுள் அடங்கும்
யா = பிரபஞ்சம் இதிலிருந்து விரியும்
 
ஈஸ்வரா = இஸ் + வரா
 
இஸ் = பிரபஞ்சம் இதனுள் அடங்கும் 
வரா = பிரபஞ்சம் இதிலிருந்து விரியும்
 
ஈஸ்வரா = மாயா ???  :blink:

 

இவரைச் சொல்லுகிறீர்களா, ஈசன்?

 

இவருடன் ஒரு நாள் கதை கொடுத்தேன்! பின்னால, நிக்கிற கறுத்தக் கார், இவருடையது தான்! :D

 

blue-mountain-aboriginal-didgeridoo-play

 

அநேகமான, பூர்வீகக் குடிகளின் பெயர்களில், மாயா, பின்டி, குலன் என்பதை, எல்லா அவுஸ்திரேலிய மாநிலங்களினலும் வாழும், வெவ்வேறு இனப் பூர்வீகக் குடிகளுக்கும் பொதுவாகவே உள்ளன!

 

அவர்களது மொழிகளுக்கு எழுத்துருக்கள் இல்லாததால், 'மாயாவை' சில இடங்களில் 'மியா' என்று ' மையா' என்றும் அழைக்கிறார்கள்! அதே போலவே, பின்டியும், பிந்தி எனவும், பிந்தை எனவும் மாற்றியும் அழைக்கிறார்கள்.

 

ஆனால் இவர்கள் பேசும்போது, நுணுக்கமாக அவதானித்தால், 'தமிழ்' அல்லது 'மலையாளம்' போலவே சத்தங்கள், வருகின்றன! :D

 

மிகக் கடுமையான அவதானத்தின் பின்னர் 'தண்ணி' என்ற வார்த்தையும் இடைக்கிடை வந்து போகின்றது! என்ன, கருத்து என்று தெரியவில்லை! :unsure:

 

வரவுக்கு நன்றிகள், ஈசன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ...!  இணைப்புக்கு  நன்றி புங்கை ,  மாயா போன்றே அவனும் ஓரளவு ஊகித்திருக்கக் கூடும்...! :)

வணக்கம், சுவியர்.

 

இவர்களது, தேவையில்லாத 'குழந்தைகளைக்' கொடுமையான முறையில் கொன்று விடும் பழக்கம், கங்காருக்களை அவதானித்ததில் இருந்து வந்திருக்கக் கூடும் என அனுமானிக்கிறேன்! :o

 

பொதுவாக, கங்காருக்களின், பைகளுக்குள் தான், குட்டிகளுக்குப் பாலுட்டும் 'முலைக்காம்புகள்' அமைந்திருக்கும். 

 

மிகவும் சிறியதாகவே இவை, தாயின் கருப்பையிலிருந்து 'பிறந்து' பின்னர் 'தாங்களாக' கங்காருப் பைகளிலிருந்தே, மிகுதியான முதிர்ச்சி நிலையை அடைகின்றன!

 

பொதுவாக, எதிர்பார்ப்புக்கும் மேலாக, அந்த வருடத்து 'வரட்சி' இருக்குமென்பதைக், கங்காருத் தாய்களால், ஏதோ ஒரு வகையில் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

 

அவ்வாறு உணர்ந்தால், அவை தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுப்பதை நிறுத்திவிட, 'குட்டிகள்' அந்தப் பையிலேயே மரணித்துப் போகின்றன! 

வெளிப் பார்வைக்குக் 'கொடுமை' போலத் தோன்றினாலும், அந்தக் குட்டிகள் எப்படியோ 'அழியத் தானே போகின்றன' எனப் பார்க்கையில், தாய்க் கங்காருக்கள், எங்களை விடவும், பல யுகங்களுக்கு, முன்னேறியுள்ளதாகவே, நான் கருதுகின்றேன்..!

 

என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே, கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே... நினைவுக்கு வரவேண்டுமே...! :icon_idea:  

Link to comment
Share on other sites

இவராக இருக்கலாம். இளமையாகவும் கொஞ்சம் திடகாத்திரமாகவும் இருந்த மாதிரி ஞாபகம். அதே இடம் தான். குகைக்கு முன்பாக.
 
இவர் பிரித்தானியா சென்று வந்ததாகவும் இவருடைய பழைய ஓவியங்களை லண்டன் நூதனசாலை அவுஸ் பழங்குடிகளின் ஓவியம் என்று நல்ல விலைக்கு வாங்கியதாகவும் ஒருவர் சொன்னார். கொஞ்ச நாள் நல்ல காசு கையில் புழங்கியதாம்.
 
இவரை வைட் ஃபெலாக்கள் ஜோன் என்று அழைப்பார்கள் என்று நினைக்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையண்ணா.. நிறைய விடையங்கள் தெரிந்து வைத்திருக்கிறீங்கள்.இன்னும் நிறைய விடையங்கள் பற்றி எழுதனும் என்பது ஆவல்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை! உங்களின் எழுத்தாற்றலை கண்டு பெரிதும் மெச்சுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
original_checking_cattle__copy_.jpg
dingo_medium.jpg 
blue-mountain-aboriginal-didgeridoo-play

 

எம்மைப் போன்று,  இவர்கள் கட்டுவதும்... வேட்டி, சாரம் போலுள்ளது.
அவர்களது பெயர்களிலும்.... நமது பெயர் கலந்துள்ள‌து.
அப்படிப் பார்க்கையில்... குமரிக்கண்டம் அழிய முன்பு, தற்போதுள்ள ஆசியக்கண்டமும், அவுஸ்திரேலியக் கண்டமும் ஒரே நிலப் பகுதியாக இருந்த போது..... தமிழகம், ஈழத்திலிருந்து கால் நடையாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற தமிழ் மக்களாக இருக்கலாம்.

 

மேலும் புங்கை குறிப்பிடும் "டிங்கோ" போன்ற நாய்களை இப்போதும் அநேகமான‌ யாழ்ப்பாண‌ வீடுகளில் வளர்ப்பு நாயாக காணலாம். அவுஸ்திரேலிய வனாந்தரத்தில்.. திரியும் சில மண்ணிற மாடுகளும்... நம் ஊர் மாடுகளாவே தெரிகின்றன. இவர்கள் இடம் பெயரும் போது... தமது தேவைகளுக்காக அந்த நாயையும், மாட்டையும் ஆசியாவிலிருந்து கூட்டிச் சென்றிருக்கலாம் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

புங்கை உங்கள் எழுத்து வளமைபோல ஒரு வரலாற்றுக் கதையையும் சொல்லிச் சென்றுள்ளது. மாயா மனசில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறாள். ஒரு பெண்ணாய் அவள் பட்ட துயர்களிலிருந்து கண்ணீராய் ஒரு சந்ததியின் கதையை மாயா சொல்லிக் கொண்டு போகிறாள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இறுதிக்கதையில் உங்கள் முத்திரை நன்றாகவே உள்ளது புங்கை வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

இவரைச் சொல்லுகிறீர்களா, ஈசன்?

 

இவருடன் ஒரு நாள் கதை கொடுத்தேன்! பின்னால, நிக்கிற கறுத்தக் கார், இவருடையது தான்! :D

 

blue-mountain-aboriginal-didgeridoo-play

 

அநேகமான, பூர்வீகக் குடிகளின் பெயர்களில், மாயா, பின்டி, குலன் என்பதை, எல்லா அவுஸ்திரேலிய மாநிலங்களினலும் வாழும், வெவ்வேறு இனப் பூர்வீகக் குடிகளுக்கும் பொதுவாகவே உள்ளன!

 

அவர்களது மொழிகளுக்கு எழுத்துருக்கள் இல்லாததால், 'மாயாவை' சில இடங்களில் 'மியா' என்று ' மையா' என்றும் அழைக்கிறார்கள்! அதே போலவே, பின்டியும், பிந்தி எனவும், பிந்தை எனவும் மாற்றியும் அழைக்கிறார்கள்.

 

ஆனால் இவர்கள் பேசும்போது, நுணுக்கமாக அவதானித்தால், 'தமிழ்' அல்லது 'மலையாளம்' போலவே சத்தங்கள், வருகின்றன! :D

 

மிகக் கடுமையான அவதானத்தின் பின்னர் 'தண்ணி' என்ற வார்த்தையும் இடைக்கிடை வந்து போகின்றது! என்ன, கருத்து என்று தெரியவில்லை! :unsure:

 

வரவுக்கு நன்றிகள், ஈசன்!

கதையுடன தெரியாத பல விசயங்களையும் அறியக்கூடியவாறு இருந்தது. நன்றி

இந்த படத்தில் உள்ள பழங்குடிமகனுடைய கார் பின்னால் நிற்பதாக கூறியுள்ளீர்கள். இவரின் வாழ்க்கைச் சூழல் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையுடன தெரியாத பல விசயங்களையும் அறியக்கூடியவாறு இருந்தது. நன்றி

இந்த படத்தில் உள்ள பழங்குடிமகனுடைய கார் பின்னால் நிற்பதாக கூறியுள்ளீர்கள். இவரின் வாழ்க்கைச் சூழல் புரியவில்லை.

வணக்கம், சண்டமாருதன் !

 

பொதுவாக பழங்குடி மக்களின் 'வாழ்க்கை நிலை' அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில், மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது! இவர்களுக்கென,அரசாங்கம் பல விதமான 'உதவிகள்' செய்கின்ற போதும், எல்லாமே, அரை வாசி 'அபோரிஜின்' அல்லது கால்வாசி 'அபோரிஜின்' என்று வெள்ளைகளே, அவற்றை அனுபவிக்கின்றார்கள்.

 

இவர்களின் நிலை எப்போதும், 'செத்தையில இருக்கிறதைத் தூக்கி மெத்தையில போட்டால், திரும்பவும் செத்தையை நாடிப்போகும்' நிலை தான்!

 

ஒரு சிலர் 'இப்போது' கொஞ்சம் கொஞ்சமாக ' அரசியல்', 'விளையாட்டு' போன்ற துறைகளில் முன்னேறிக்கொண்டு வருகிறார்கள்!

 

இவர்களும் தங்களுக்கெனத் தனித்துவமான 'பிரதேசங்கள்' வைத்திருக்கிறார்கள்! ஒரு 'இனத்தின்' பிரதேசத்துக்குள். வேறு இனத்தவர் 'போவது' மிகவும் குறைவு!

 

இதன் பிரகாரம், 'Blue Mountains' பிரதேசத்தில், 'மேலுள்ளவர்'  வசிக்கிறார். இவருக்கு, வெளிநாட்டினர் வரும்போது, இவருடன் இருந்து படம் எடுப்பதற்குப் 'பணம்' கொடுப்பதுண்டு. அத்துடன்  Didjeridoo எனும் நீண்ட குழாய் போன்ற வாத்தியக்கருவியையும் வாசிப்பார்.அதனாலும், இவருக்கும் பணம் கொடுப்பார்கள். அதனால்  இவரிடம் பணம் புழங்குகின்றது! அதை வைத்து ஒரு பழைய 'பென்ஸ் கார்' வாங்கி வைத்துள்ளார். அதனால் தான் அதைக் குறிப்பிட்டேன்!

 

'Blue Mountains'  என்ற பியர் வரவும் ஒரு காரணம் உள்ளது. இந்த மலைக்குன்றுகளில் ' விக்ஸ்' மரங்கள் நிறைய வளரும். அதிகாலை வேளையில், பனி தடவப்பட்ட ;விக்ஸ்; இலைகளில் சூரிய ஒளி, பட்டுத் தெறிக்கும் போது, மலைகள் நீல நிறமாகத் தெரியும். :lol:

Link to comment
Share on other sites

பதிலுக்கு நன்றி புங்கையூரான்

இங்குள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கையும் மிகுந்த துயரம் நிறைந்தது. உலகில் அதிகளவு தற்கொலை செய்பவர்கள் இவர்கள். பலர் மது போதைக்கு அடிமையானவர்களாகவும் இருக்கின்றனர். நிறைய ஊனமுற்றவர்கள். பலர் மேம்பட்ட நிலையிலும் உள்ளனர் மேம்பாட்டை நோக்கி போராடிக்கொண்டும் உள்ளனர்.

இப்போத வயதான நிலையில் மிகவும் பாதிப்புக்குள்ளானவர்களாக காணப்படும் ஒரு தலைமுறை சிறுவயதில் பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு புறம்பான பள்ளிகளில் அடைத்து பாலியல் துஸ்பிரயோகம் முதல் அனைத்து இன ரீதியான துஸ்பிரயோகங்களுக்கு உட்பட்டு பாதி இறந்துபோக மீதி உடலும் உள்ளமும் சிதைக்கப்பட்ட தலைமுறை. இவ்வாறாக எஞ்சியிருந்த கடசிப் பள்ளிக்கூடம் 1996 ல் தான் மூடப்பட்டது.

இப்போதுள்ள பிரதமர் மற்றும் பிரதான கட்சித்தலைவர்கள் நடந்த கொடுமைகளுக்காக மன்னிப்புக்கேட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், சண்டமாருதன்!

 

ஆங்கிலேயர்களால், காலனித்துவப்படுத்தப்பட்ட' நாடுகளின்' பொதுவான நிலை, ஒரே மாதிரிப்போலத் தான் உள்ளது!

 

Maralinga -தெற்கு அவுஸ்திரேலியா போன்ற இடங்களில் தான், மிகவும் ஆபத்தான ' அணு ஆயுத பரிசோதனைகளைப்' பிரித்தானியா செய்து முடித்தது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் 'இந்தப் பூர்வீகக் குடிகளே" !

 

அத்துடன், இன்னுமொரு தனித்துவமான ஒரு  'அபோரிஜினல் இனம்' கொஞ்சம் 'நிறமாக' இருந்ததால், அந்த இனம் தங்களுக்குப் போட்டியாக வரக்கூடும் என்பதால், அந்த இனத்தில் ஆண்கள் அனைவரும், வரிசையில் அழைக்கப்பட்டு, அவர்கள் அனைவரும், ஈவிரக்கமின்றிக் 'காயடிக்கப் பட்ட' சம்பவங்களும் நடந்தேறின!

 

அதன் பின்னர், அந்த இனம் முழுவதுமாகவே அழிக்கப்பட்டது. :o 

 

நேரம் கிடைத்தால், நிச்சயம் இதைப்பற்றி 'யாழில்' எழுதுவேன்!

 

நீங்களும் அவ்வாறே எழுதினால், மற்றவர்களும் இப்படியான வரலாறுகளைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்!

 

அத்துடன், 'யாழ்' என்பதையும் ஒரு ஆவணப் பொக்கிசமாகவே நான் பார்க்கிறேன்!

 

நாளை, நாம் இல்லாத காலத்திலும், தமிழினமே ஒரு வேளை, அழிந்து போயிருந்தாலும், யாரோ ஒரு தமிழன் நிச்சயம், யாழிலிருந்து  பல உண்மைகளை அறிந்துகொள்வான் என்னும் நம்பிக்கை என்னிடம் நிறையவே உள்ளது! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.