Jump to content

கூரையை பிச்சுக்கொண்டு கொட்டுமா???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்கள்  இருவர்

 

ஒருவர் ஒரு கட்டிடத்தின் வேலைகள் முழுவதையும்  ஒப்பந்த அடிப்படையில்  எடுத்து  அதற்கமைய  வேலைக்கு ஆட்களை  அமர்த்தி சொந்த தொழில் செய்பவர்.

வீடு வாகனம் விரும்பியபடி சுற்றுலா என்று கொஞ்சம் வசதியாக  வாழ்பவர்......

இவர் பெயர்  அகமெட்..

 

மற்றவர்

வேலையை  இழந்து

வீட்டு  வாடகை  கூட  செலுத்தாது

பலவாறும் கடன் தொல்லையில்  உலைபவர்

சாப்பாட்டுக்கே  கடினமான நிலை......

எந்த நேரமும் வீதிக்கு வரலாம்........

இவர் பெயர் முகமெட்.....

 

அகமெட்டுக்கு  தனது நண்பரது நிலை கவலை தருவதால்

வேலை  கொடுக்க விருப்பம்

ஆனால் நட்புக்கெட்டுவிடக்கூடாது என்றும் யோசிப்பவர்.

அதனால் வேலை என்று இல்லாது

தன்னுடன் உதவிக்கென்று கூட்டிச்சென்று 

அவருடன் சேர்ந்து தானும் உணவருந்தி

அதற்கும் பணம் கொடுத்து

கொஞ்ச  பணத்தை  அவரது சட்டைக்குள்ளும் வைத்துவிடுவார்

ஆனால் முகமெட் அதை ஏற்கமாட்டார்

நட்புக்காக  வந்தேன் என்பார்

சிலநேர  கெடுபிடிக்குப்பின் முகமெட்  பணத்துடன்  வீடு செல்வார்

இது   மாதத்தில் எப்போதாவது நடப்பது........

 

 

அன்றும் இப்படித்தான்

ஆறாம் மாடிக்கு ஒரு பொருளை படிகளால் தூக்கிச்செல்லவேண்டும்

இருவரும்  சேர்ந்து   தூக்கிச்சென்றபின்

இருவரும் சென்று ஒரு பாரில் உணவருந்திவிட்டு

50  ஈரோக்களை அவரது சட்டைக்குள் வைக்கின்றார்

வழமைப்படி முகமெட் மறுக்கின்றார்

இல்லை  வைச்சுக்கோ என அகமெட் உறுத்த

பணத்தை எடுத்துக்கொண்டவர் 

பாரில் முன் பக்கம் சென்று ஒரு பக்கற் சிகரெட்டும்

3 உரசிப்பார்க்கும் லாட்டரி சீட்டும் எடுத்து வருகிறார்

23   ஈரோக்கள் செலவு.

அகமெட்டுக்கு கோபம் வருகிறது

இப்படி செலவளிக்கலாமா எனப்புத்திசொல்கிறார்

 

கதைத்தபடியே

முகமெட்  லாட்டறி  சீட்டை  உரசுகிறார்

அவரது முகத்தில் மாறுதல்கள் தெரிகின்றன

அவரது கைகள் நடுங்குவதையும் உடல் வேர்ப்பதையும் அகமெட் கவனிக்கின்றார்

அகமெட்டிடம் வந்து  இதைப்பார்  என  உறுதிப்படத்தச்சொல்லி  கேட்கிறார்

அகமெட் ரிக்கற்றினைப்பார்க்கின்றார்

ஆம்  இலக்கங்கள் சரியாக  இருக்கின்றன

இவரது முகத்திலும் சந்தோசம் பரவுகின்றது....

 

முகமெட்

அந்த ரிக்கற்றை  மட்டும் எடுத்துக்கொண்டு

மற்றைய  ரிக்கற்றுக்கள் கைத்தொலைபேசி மற்றும்

சிகரெட் பைக்கற்றை  எல்லாவற்றையும் விட்டு விட்டு வெளிில் ஓடுகின்றார்

அகமெட்  பின்னால் கூப்பிட்டபோதும் அவர் ஓடி மறைந்து விடுகிறார்.........

 

2  நாட்கள் முடிந்து விட்டன

முகமெட் எந்த வகையிலும் அகப்படவில்லை

அகமெட் வந்து  என்னிடம் இதைச்சொல்கிறார்

நான் கேட்டேன் ஏன் நீ  ஏதாவது எதிர்பார்க்கின்றாயா என.

இல்லையப்பா

அவனது சுகம் அறிய  ஆவல்

அவன் போன  வேகத்தில் அவனுக்கு ஏதும் நடந்துவிட்டதோ என கவலையாக இருக்கு.......

 

அடுத்த கிழமை முடியும்......

(எவ்வளவு விழுந்திருக்கும்)....... :icon_idea:

 

எச்சரிக்கை : லொத்தரும் உங்களையும் உங்கள்  வாழ்வையும் அழித்துவிடும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காக்க வைத்து விட்டீர்களே.... விசுகு.
என்ன நடந்திருக்கும்... என்று அறிய ஆவலாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

தலைப்பைப் பார்த்தால் ஒண்டும் கொட்டாதுபோல இருக்கே... 

ஆனால் எல்லா இலக்கங்களும் சரியா இருந்தால் கொட்டத்தானே வேணும்?!  :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப தொடக்கம் இந்தக் கெட்ட பழக்கம்?   :o  

 

சவர்க்காரத்தைப் போட்ட 'அரைவாசியில' வாட்டர் பம்பை நிப்பாட்டி விட்டிட்டு ஓடிப்போய் ஒழிச்ச மாதிரி?  :D

 

கெதியாப் பம்பைத் திறந்து விடுங்கப்பா..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காக்க வைத்து விட்டீர்களே.... விசுகு.

என்ன நடந்திருக்கும்... என்று அறிய ஆவலாக உள்ளது. :)

 

காதில்  விழுந்ததை அப்படியே  போட்டுவிட்டால்.......?

எனக்கே  விடை  வர  ஒரு கிழமை எடுத்தது

அதை நீங்களும் அனுபவியுங்கோ. :lol:  :D

 

அது சரி  என் கேள்விக்கு என்ன  பதில்???

எவ்வளவு............? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்தால் ஒண்டும் கொட்டாதுபோல இருக்கே... 

ஆனால் எல்லா இலக்கங்களும் சரியா இருந்தால் கொட்டத்தானே வேணும்?!  :D

 

சரி

தொகையைச்சொல்லுங்கோ.... :D -

 

இது சுரண்டும் துண்டில் விழுந்தது என்பது ஞாபகமிருக்கட்டும் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான்" எண்ட மாதிரித்தான் கதை முடியும் போலை கிடக்கு ............ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப தொடக்கம் இந்தக் கெட்ட பழக்கம்?   :o  

 

சவர்க்காரத்தைப் போட்ட 'அரைவாசியில' வாட்டர் பம்பை நிப்பாட்டி விட்டிட்டு ஓடிப்போய் ஒழிச்ச மாதிரி?  :D

 

கெதியாப் பம்பைத் திறந்து விடுங்கப்பா..! :icon_idea:

 

 

ஊரில் சொல்வார்கள்

எல்லாத்திலேயும்  ரொம்ப  நல்லவனா  இருக்கப்படாது என்று....

 

நண்பர் ஒருவரது அனுபவம்

கொஞ்சம் வித்தியாசமாகவும்

நான் அறிந்தவரை

முதன் முதலாக

தேவைப்படுபவருக்கு  கிடைத்தது  போலிருந்தது

அது தான் தலைப்பு

 

நன்றியண்ணா

விரைவில் தண்ணி  வரும்... :icon_idea:

Link to comment
Share on other sites

இந்த களத்தில புங்கை அண்ணாவின் உவமான உவ மேயங்கள யாராலும் அடிச்சிக்க முடியா.... முடியல்ல.....:D

விசு அண்ணா சீக்கிரம் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் . காத்திருக்க  முடியாது  தொடரட்டும்  தொடர் .............. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதில்  விழுந்ததை அப்படியே  போட்டுவிட்டால்.......?

எனக்கே  விடை  வர  ஒரு கிழமை எடுத்தது

அதை நீங்களும் அனுபவியுங்கோ. :lol:  :D

 

அது சரி  என் கேள்விக்கு என்ன  பதில்???

எவ்வளவு............? :icon_idea:

 

//மற்றவர்

வேலையை  இழந்து

வீட்டு  வாடகை  கூட  செலுத்தாது

பலவாறும் கடன் தொல்லையில்  உலைபவர்

சாப்பாட்டுக்கே  கடினமான நிலை......

எந்த நேரமும் வீதிக்கு வரலாம்........//

 

இந்த நிலைமையில்.. இருப்பவருக்கு, வேலை செய்ய பஞ்சி.

இப்படியான நிலையில்...  சூதாட்டத்திலும், ஈடுபடுவதால்....

5,000 ஐரோ... விழுந்தாலே, பெரிய தொகை.

அதுதான்... ஆபத்தில் உதவிய நண்பனையும் மறந்து, இந்த ஓட்டம் ஓடியிருக்கிறார்.

காசு முடிய... மொகமட் திரும்பவும் அகமட் இடம் வருவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு 10,000   யுரோ க்கு  கிட்ட விழுந்து இருக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரத்துக்கெல்லாம்  ஓடியிருக்க மாட்டார், ஒரு 1000 மாய் இருக்கும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி

சரி

 

எல்லோரும் அவசரப்படுகின்றீர்கள்

சொல்கின்றேன்...

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

 

-

பொறுங்களப்பா.....

சொன்னால் சொன்னது தான்

வாற  கிழமை தான் ...... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சுரண்டல் ரிக்கற்றில் ஐம்பதாயிரம்,ஒரு லட்சம் அப்படித் தானே இருக்கும்..கெதியா சொல்லுங்கோ எவ்வளவு..??? :)
   ஏன் ஐம்பது ஈரோ குடுத்தவர் கவலைப்படுகிறார்............பாவம் கஸ்ரப்பட்டவர் என்றால்  நல்லா இருக்கட்டுமே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சுரண்டல் ரிக்கற்றில் ஐம்பதாயிரம்,ஒரு லட்சம் அப்படித் தானே இருக்கும்..கெதியா சொல்லுங்கோ எவ்வளவு..??? :)

   ஏன் ஐம்பது ஈரோ குடுத்தவர் கவலைப்படுகிறார்............பாவம் கஸ்ரப்பட்டவர் என்றால்  நல்லா இருக்கட்டுமே..

 

இதற்குள் தான் நிற்கின்றேன்

இன்று எழுதி  விடுவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் தான் நிற்கின்றேன்

இன்று எழுதி  விடுவேன்

 

பேச்சு பேச்சாய் இருக்கணும், விசுகு.

நாங்க படுக்க ஆயத்தப் படுத்திறம், கெதியா... பதிலை சொல்லுங்க. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2  நாட்கள் முடிந்து விட்டன

முகமெட் எந்த வகையிலும் அகப்படவில்லை

அகமெட் வந்து  என்னிடம் இதைச்சொல்கிறார்

நான் கேட்டேன் ஏன் நீ  ஏதாவது எதிர்பார்க்கின்றாயா என.

இல்லையப்பா

அவனது சுகம் அறிய  ஆவல்

அவன் போன  வேகத்தில் அவனுக்கு ஏதும் நடந்துவிட்டதோ என கவலையாக இருக்கு.......

 

அடுத்த கிழமை முடியும்......

(எவ்வளவு விழுந்திருக்கும்)....... :icon_idea:

 

எச்சரிக்கை : லொத்தரும் உங்களையும் உங்கள்  வாழ்வையும் அழித்துவிடும். :(

 

பணம் விழுந்த துண்டுடன் ஓடத்தொடங்கியவனுக்கு 

எங்கு போவது?

எவருடன் பேசுவது?

யாரை  நம்புவது?

என்ன  செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை.

 

ஓடிக்கொண்டிருந்தவனுக்கு சொந்த தங்கையின் ஞாபகம்வர

அவரது வீட்டுக்கு   போகின்றான்

போய் ரூமில் பூட்டிவிட்டு

யோசிக்கின்றான்.

தங்கையிடமும் சொல்ல  மனம் வரவில்லை.

பங்குப்பிரச்சினைகளோ

பாசச்சிக்கல்களோ

இதற்குள் வரக்கூடாது.

இது வரை  தனியே  நான் துன்பப்பட்டபோது எவரும் காப்பாற்றவில்லையே.

எனவே 

தான் மட்டுமே இதைக்கையாளணும் என்ற  முடிவுக்கு வருகின்றான்.

 

துண்டை  போட்டோ  எடுத்தும்

பிரதி  எடுத்தும் ஒழித்து வைத்துக்கொண்டு

அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்குகின்றான்.

 

பணம் வங்கிக்கு வருகிறது

எல்லாக்கடனையும் கொடுக்கின்றான்

3/5 யை முதலீடாக  வங்கியில் இடுகின்றான்

 

தனக்கு  உதவிய  அந்த நண்பன் அகமெட்டை  மறக்காமல் அவரது வங்கிக்கு 5 ஆயிரம் ஈரோக்களை  அனுப்புகின்றான் (முதலில் அவர் வங்கி  மூலம் உதவி  செய்ததால் அவரது வங்கி இலக்கம் இவனது வங்கியில் இருந்தது.)

 

மிகுதியில் தனக்கு ஒரு சிறு வீடு வாங்க முற்பணம் கட்டி 

அதன் ஒழுங்குகளையும் செய்து முடிக்கின்றான்.

தனது சொந்த நாட்டுக்கு (மறோக்கா)  3 மாதம் சுற்றுலா  போக விமான ரிக்கற்  எடுத்துவைத்துவிட்டு

அகமெட்டைத்தேடி  வருகின்றான்.

 

அகமெட்டுக்கும் வங்கியிருந்து குறும் செய்தி  வருகிறது

தனது வங்கியில் தனது கணக்கில் 5 ஆயிரம் ஈரோக்கள் அதிகரித்திருப்பது தெரிகிறது

ஆனால் வந்தவழி தெரியவில்லை.

இவனது செயலாக  இருக்கலாமோ என  சிந்தித்துக்கொண்டிருந்தவன்

முகமெட்  தன்னை  நோக்கி  வருவதைக்காண்கின்றான்.

 

ஓடிச்சென்று இருவரும்  கட்டித்தழுவிக்கொள்கின்றனர்

இருவரது கண்களிலும் கண்ணீர்.

சுகசெய்திகள்

மற்றும் பின்னர் நடந்தவை  அனைத்தையும் இருவரும்பேசி  முடிந்ததும்

தனக்கு வந்த 5 ஆயிரம் ஈரோக்கள் பற்றி  அகமெட்  கேட்கின்றான்

நான் தான் அனுப்பினேன் என்கின்றான் முகமெட்

கடவுள் கிருபையால் நான் நன்றாக இருக்கின்றேன்  எனக்கு எதற்கு அனுப்பினாய் என அகமெட் சொல்ல

உன் நல்ல மனதுக்காக  என முகமெட் கூற

அதை நீ  உனது  நல்ல மனதால் முறியடித்துவிட்டாய்  என அகமெட் செல்லமாக கோபித்துக்கொள்ள

இருவரும் ஆரத்தழுவி நிற்க

முகமெட் சொல்கின்றான்

நாளை  நான் ஊருக்கு போறேன்

இன்று  பாரில் இருவரும் குடிக்கலாம்

முதன் முறையாக நான் தான் காசு கொடுப்பேன்

அதை நீ  அனுமதிக்கணும் என்றபோது

அதை அகமெட் மறுக்காது புன்சிரிப்போடு இருவரும் பாருக்குள் நுளைகின்றனர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தொகை சொல்லவில்லியே....?3/5 முதலீடு  பிளேன் டிக்கெட்  வீடு முற்பணம் ..நண்பனுக்கு 5 ஆயிரம் ஈரோ .... :D

 

உங்களுக்கும் தெரியாதா .....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தொகை சொல்லவில்லியே....?3/5 முதலீடு  பிளேன் டிக்கெட்  வீடு முற்பணம் ..நண்பனுக்கு 5 ஆயிரம் ஈரோ .... :D

 

உங்களுக்கும் தெரியாதா .....?

அவசரக்குடுக்கைப்பாட்டி

சொல்லுவன் தானே.... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

இந்த அகமெட்..முகமெட் இருவரையும் காரில் ஏற்றி மிஷெல் கார் ஓடி போவதை பார்த்தேன் ஒருவேளை நீங்கள் சொல்லும் ஆக்களோ தெரில்லை விசு அண்ணே ..

 

(கார் ஓடி போவது பிரஞ்சு போலிஸ் ..பின்னாடி இருப்பவர்கள் அவர்கள் இருவரும் :D :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் இன்றுதான் இது என் கண்ணில் பட்டது. நன்றாக இருக்கு அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வாங்கியுள்ளார்,
3/5 சேமிப்பு,
நண்பனுக்கு 5,000 €.
மறோக்கோ சுற்றுலா...

எப்படியும்.... 500,000 € (அரை மில்லியன்) விழுந்திருக்க வேணும்.
யாயினி கேட்ட மாதிரி.... சுரண்டல் லொத்தரில், இவ்வளவு பரிசு கொடுப்பார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரக்குடுக்கைப்பாட்டி

சொல்லுவன் தானே.... :lol:  :D  :D

 

சொல்லிட்டால் இந்தப் பக்கம் வந்து தொந்தரவு செய்ய மாட்டம் தானே..கெதியா சொல்லுங்க..எனக்கு இதுக்கையே நிற்க ஏலாது,நிறைய வேலை இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்! என்ன மாதிரி?????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.