Jump to content

கூரையை பிச்சுக்கொண்டு கொட்டுமா???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்கள்  இருவர்

 

ஒருவர் ஒரு கட்டிடத்தின் வேலைகள் முழுவதையும்  ஒப்பந்த அடிப்படையில்  எடுத்து  அதற்கமைய  வேலைக்கு ஆட்களை  அமர்த்தி சொந்த தொழில் செய்பவர்.

வீடு வாகனம் விரும்பியபடி சுற்றுலா என்று கொஞ்சம் வசதியாக  வாழ்பவர்......

இவர் பெயர்  அகமெட்..

 

மற்றவர்

வேலையை  இழந்து

வீட்டு  வாடகை  கூட  செலுத்தாது

பலவாறும் கடன் தொல்லையில்  உலைபவர்

சாப்பாட்டுக்கே  கடினமான நிலை......

எந்த நேரமும் வீதிக்கு வரலாம்........

இவர் பெயர் முகமெட்.....

 

அகமெட்டுக்கு  தனது நண்பரது நிலை கவலை தருவதால்

வேலை  கொடுக்க விருப்பம்

ஆனால் நட்புக்கெட்டுவிடக்கூடாது என்றும் யோசிப்பவர்.

அதனால் வேலை என்று இல்லாது

தன்னுடன் உதவிக்கென்று கூட்டிச்சென்று 

அவருடன் சேர்ந்து தானும் உணவருந்தி

அதற்கும் பணம் கொடுத்து

கொஞ்ச  பணத்தை  அவரது சட்டைக்குள்ளும் வைத்துவிடுவார்

ஆனால் முகமெட் அதை ஏற்கமாட்டார்

நட்புக்காக  வந்தேன் என்பார்

சிலநேர  கெடுபிடிக்குப்பின் முகமெட்  பணத்துடன்  வீடு செல்வார்

இது   மாதத்தில் எப்போதாவது நடப்பது........

 

 

அன்றும் இப்படித்தான்

ஆறாம் மாடிக்கு ஒரு பொருளை படிகளால் தூக்கிச்செல்லவேண்டும்

இருவரும்  சேர்ந்து   தூக்கிச்சென்றபின்

இருவரும் சென்று ஒரு பாரில் உணவருந்திவிட்டு

50  ஈரோக்களை அவரது சட்டைக்குள் வைக்கின்றார்

வழமைப்படி முகமெட் மறுக்கின்றார்

இல்லை  வைச்சுக்கோ என அகமெட் உறுத்த

பணத்தை எடுத்துக்கொண்டவர் 

பாரில் முன் பக்கம் சென்று ஒரு பக்கற் சிகரெட்டும்

3 உரசிப்பார்க்கும் லாட்டரி சீட்டும் எடுத்து வருகிறார்

23   ஈரோக்கள் செலவு.

அகமெட்டுக்கு கோபம் வருகிறது

இப்படி செலவளிக்கலாமா எனப்புத்திசொல்கிறார்

 

கதைத்தபடியே

முகமெட்  லாட்டறி  சீட்டை  உரசுகிறார்

அவரது முகத்தில் மாறுதல்கள் தெரிகின்றன

அவரது கைகள் நடுங்குவதையும் உடல் வேர்ப்பதையும் அகமெட் கவனிக்கின்றார்

அகமெட்டிடம் வந்து  இதைப்பார்  என  உறுதிப்படத்தச்சொல்லி  கேட்கிறார்

அகமெட் ரிக்கற்றினைப்பார்க்கின்றார்

ஆம்  இலக்கங்கள் சரியாக  இருக்கின்றன

இவரது முகத்திலும் சந்தோசம் பரவுகின்றது....

 

முகமெட்

அந்த ரிக்கற்றை  மட்டும் எடுத்துக்கொண்டு

மற்றைய  ரிக்கற்றுக்கள் கைத்தொலைபேசி மற்றும்

சிகரெட் பைக்கற்றை  எல்லாவற்றையும் விட்டு விட்டு வெளிில் ஓடுகின்றார்

அகமெட்  பின்னால் கூப்பிட்டபோதும் அவர் ஓடி மறைந்து விடுகிறார்.........

 

2  நாட்கள் முடிந்து விட்டன

முகமெட் எந்த வகையிலும் அகப்படவில்லை

அகமெட் வந்து  என்னிடம் இதைச்சொல்கிறார்

நான் கேட்டேன் ஏன் நீ  ஏதாவது எதிர்பார்க்கின்றாயா என.

இல்லையப்பா

அவனது சுகம் அறிய  ஆவல்

அவன் போன  வேகத்தில் அவனுக்கு ஏதும் நடந்துவிட்டதோ என கவலையாக இருக்கு.......

 

அடுத்த கிழமை முடியும்......

(எவ்வளவு விழுந்திருக்கும்)....... :icon_idea:

 

எச்சரிக்கை : லொத்தரும் உங்களையும் உங்கள்  வாழ்வையும் அழித்துவிடும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காக்க வைத்து விட்டீர்களே.... விசுகு.
என்ன நடந்திருக்கும்... என்று அறிய ஆவலாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

தலைப்பைப் பார்த்தால் ஒண்டும் கொட்டாதுபோல இருக்கே... 

ஆனால் எல்லா இலக்கங்களும் சரியா இருந்தால் கொட்டத்தானே வேணும்?!  :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப தொடக்கம் இந்தக் கெட்ட பழக்கம்?   :o  

 

சவர்க்காரத்தைப் போட்ட 'அரைவாசியில' வாட்டர் பம்பை நிப்பாட்டி விட்டிட்டு ஓடிப்போய் ஒழிச்ச மாதிரி?  :D

 

கெதியாப் பம்பைத் திறந்து விடுங்கப்பா..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காக்க வைத்து விட்டீர்களே.... விசுகு.

என்ன நடந்திருக்கும்... என்று அறிய ஆவலாக உள்ளது. :)

 

காதில்  விழுந்ததை அப்படியே  போட்டுவிட்டால்.......?

எனக்கே  விடை  வர  ஒரு கிழமை எடுத்தது

அதை நீங்களும் அனுபவியுங்கோ. :lol:  :D

 

அது சரி  என் கேள்விக்கு என்ன  பதில்???

எவ்வளவு............? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்தால் ஒண்டும் கொட்டாதுபோல இருக்கே... 

ஆனால் எல்லா இலக்கங்களும் சரியா இருந்தால் கொட்டத்தானே வேணும்?!  :D

 

சரி

தொகையைச்சொல்லுங்கோ.... :D -

 

இது சுரண்டும் துண்டில் விழுந்தது என்பது ஞாபகமிருக்கட்டும் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான்" எண்ட மாதிரித்தான் கதை முடியும் போலை கிடக்கு ............ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப தொடக்கம் இந்தக் கெட்ட பழக்கம்?   :o  

 

சவர்க்காரத்தைப் போட்ட 'அரைவாசியில' வாட்டர் பம்பை நிப்பாட்டி விட்டிட்டு ஓடிப்போய் ஒழிச்ச மாதிரி?  :D

 

கெதியாப் பம்பைத் திறந்து விடுங்கப்பா..! :icon_idea:

 

 

ஊரில் சொல்வார்கள்

எல்லாத்திலேயும்  ரொம்ப  நல்லவனா  இருக்கப்படாது என்று....

 

நண்பர் ஒருவரது அனுபவம்

கொஞ்சம் வித்தியாசமாகவும்

நான் அறிந்தவரை

முதன் முதலாக

தேவைப்படுபவருக்கு  கிடைத்தது  போலிருந்தது

அது தான் தலைப்பு

 

நன்றியண்ணா

விரைவில் தண்ணி  வரும்... :icon_idea:

Link to comment
Share on other sites

இந்த களத்தில புங்கை அண்ணாவின் உவமான உவ மேயங்கள யாராலும் அடிச்சிக்க முடியா.... முடியல்ல.....:D

விசு அண்ணா சீக்கிரம் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் . காத்திருக்க  முடியாது  தொடரட்டும்  தொடர் .............. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதில்  விழுந்ததை அப்படியே  போட்டுவிட்டால்.......?

எனக்கே  விடை  வர  ஒரு கிழமை எடுத்தது

அதை நீங்களும் அனுபவியுங்கோ. :lol:  :D

 

அது சரி  என் கேள்விக்கு என்ன  பதில்???

எவ்வளவு............? :icon_idea:

 

//மற்றவர்

வேலையை  இழந்து

வீட்டு  வாடகை  கூட  செலுத்தாது

பலவாறும் கடன் தொல்லையில்  உலைபவர்

சாப்பாட்டுக்கே  கடினமான நிலை......

எந்த நேரமும் வீதிக்கு வரலாம்........//

 

இந்த நிலைமையில்.. இருப்பவருக்கு, வேலை செய்ய பஞ்சி.

இப்படியான நிலையில்...  சூதாட்டத்திலும், ஈடுபடுவதால்....

5,000 ஐரோ... விழுந்தாலே, பெரிய தொகை.

அதுதான்... ஆபத்தில் உதவிய நண்பனையும் மறந்து, இந்த ஓட்டம் ஓடியிருக்கிறார்.

காசு முடிய... மொகமட் திரும்பவும் அகமட் இடம் வருவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு 10,000   யுரோ க்கு  கிட்ட விழுந்து இருக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரத்துக்கெல்லாம்  ஓடியிருக்க மாட்டார், ஒரு 1000 மாய் இருக்கும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி

சரி

 

எல்லோரும் அவசரப்படுகின்றீர்கள்

சொல்கின்றேன்...

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

 

-

பொறுங்களப்பா.....

சொன்னால் சொன்னது தான்

வாற  கிழமை தான் ...... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சுரண்டல் ரிக்கற்றில் ஐம்பதாயிரம்,ஒரு லட்சம் அப்படித் தானே இருக்கும்..கெதியா சொல்லுங்கோ எவ்வளவு..??? :)
   ஏன் ஐம்பது ஈரோ குடுத்தவர் கவலைப்படுகிறார்............பாவம் கஸ்ரப்பட்டவர் என்றால்  நல்லா இருக்கட்டுமே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சுரண்டல் ரிக்கற்றில் ஐம்பதாயிரம்,ஒரு லட்சம் அப்படித் தானே இருக்கும்..கெதியா சொல்லுங்கோ எவ்வளவு..??? :)

   ஏன் ஐம்பது ஈரோ குடுத்தவர் கவலைப்படுகிறார்............பாவம் கஸ்ரப்பட்டவர் என்றால்  நல்லா இருக்கட்டுமே..

 

இதற்குள் தான் நிற்கின்றேன்

இன்று எழுதி  விடுவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் தான் நிற்கின்றேன்

இன்று எழுதி  விடுவேன்

 

பேச்சு பேச்சாய் இருக்கணும், விசுகு.

நாங்க படுக்க ஆயத்தப் படுத்திறம், கெதியா... பதிலை சொல்லுங்க. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2  நாட்கள் முடிந்து விட்டன

முகமெட் எந்த வகையிலும் அகப்படவில்லை

அகமெட் வந்து  என்னிடம் இதைச்சொல்கிறார்

நான் கேட்டேன் ஏன் நீ  ஏதாவது எதிர்பார்க்கின்றாயா என.

இல்லையப்பா

அவனது சுகம் அறிய  ஆவல்

அவன் போன  வேகத்தில் அவனுக்கு ஏதும் நடந்துவிட்டதோ என கவலையாக இருக்கு.......

 

அடுத்த கிழமை முடியும்......

(எவ்வளவு விழுந்திருக்கும்)....... :icon_idea:

 

எச்சரிக்கை : லொத்தரும் உங்களையும் உங்கள்  வாழ்வையும் அழித்துவிடும். :(

 

பணம் விழுந்த துண்டுடன் ஓடத்தொடங்கியவனுக்கு 

எங்கு போவது?

எவருடன் பேசுவது?

யாரை  நம்புவது?

என்ன  செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை.

 

ஓடிக்கொண்டிருந்தவனுக்கு சொந்த தங்கையின் ஞாபகம்வர

அவரது வீட்டுக்கு   போகின்றான்

போய் ரூமில் பூட்டிவிட்டு

யோசிக்கின்றான்.

தங்கையிடமும் சொல்ல  மனம் வரவில்லை.

பங்குப்பிரச்சினைகளோ

பாசச்சிக்கல்களோ

இதற்குள் வரக்கூடாது.

இது வரை  தனியே  நான் துன்பப்பட்டபோது எவரும் காப்பாற்றவில்லையே.

எனவே 

தான் மட்டுமே இதைக்கையாளணும் என்ற  முடிவுக்கு வருகின்றான்.

 

துண்டை  போட்டோ  எடுத்தும்

பிரதி  எடுத்தும் ஒழித்து வைத்துக்கொண்டு

அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்குகின்றான்.

 

பணம் வங்கிக்கு வருகிறது

எல்லாக்கடனையும் கொடுக்கின்றான்

3/5 யை முதலீடாக  வங்கியில் இடுகின்றான்

 

தனக்கு  உதவிய  அந்த நண்பன் அகமெட்டை  மறக்காமல் அவரது வங்கிக்கு 5 ஆயிரம் ஈரோக்களை  அனுப்புகின்றான் (முதலில் அவர் வங்கி  மூலம் உதவி  செய்ததால் அவரது வங்கி இலக்கம் இவனது வங்கியில் இருந்தது.)

 

மிகுதியில் தனக்கு ஒரு சிறு வீடு வாங்க முற்பணம் கட்டி 

அதன் ஒழுங்குகளையும் செய்து முடிக்கின்றான்.

தனது சொந்த நாட்டுக்கு (மறோக்கா)  3 மாதம் சுற்றுலா  போக விமான ரிக்கற்  எடுத்துவைத்துவிட்டு

அகமெட்டைத்தேடி  வருகின்றான்.

 

அகமெட்டுக்கும் வங்கியிருந்து குறும் செய்தி  வருகிறது

தனது வங்கியில் தனது கணக்கில் 5 ஆயிரம் ஈரோக்கள் அதிகரித்திருப்பது தெரிகிறது

ஆனால் வந்தவழி தெரியவில்லை.

இவனது செயலாக  இருக்கலாமோ என  சிந்தித்துக்கொண்டிருந்தவன்

முகமெட்  தன்னை  நோக்கி  வருவதைக்காண்கின்றான்.

 

ஓடிச்சென்று இருவரும்  கட்டித்தழுவிக்கொள்கின்றனர்

இருவரது கண்களிலும் கண்ணீர்.

சுகசெய்திகள்

மற்றும் பின்னர் நடந்தவை  அனைத்தையும் இருவரும்பேசி  முடிந்ததும்

தனக்கு வந்த 5 ஆயிரம் ஈரோக்கள் பற்றி  அகமெட்  கேட்கின்றான்

நான் தான் அனுப்பினேன் என்கின்றான் முகமெட்

கடவுள் கிருபையால் நான் நன்றாக இருக்கின்றேன்  எனக்கு எதற்கு அனுப்பினாய் என அகமெட் சொல்ல

உன் நல்ல மனதுக்காக  என முகமெட் கூற

அதை நீ  உனது  நல்ல மனதால் முறியடித்துவிட்டாய்  என அகமெட் செல்லமாக கோபித்துக்கொள்ள

இருவரும் ஆரத்தழுவி நிற்க

முகமெட் சொல்கின்றான்

நாளை  நான் ஊருக்கு போறேன்

இன்று  பாரில் இருவரும் குடிக்கலாம்

முதன் முறையாக நான் தான் காசு கொடுப்பேன்

அதை நீ  அனுமதிக்கணும் என்றபோது

அதை அகமெட் மறுக்காது புன்சிரிப்போடு இருவரும் பாருக்குள் நுளைகின்றனர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தொகை சொல்லவில்லியே....?3/5 முதலீடு  பிளேன் டிக்கெட்  வீடு முற்பணம் ..நண்பனுக்கு 5 ஆயிரம் ஈரோ .... :D

 

உங்களுக்கும் தெரியாதா .....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தொகை சொல்லவில்லியே....?3/5 முதலீடு  பிளேன் டிக்கெட்  வீடு முற்பணம் ..நண்பனுக்கு 5 ஆயிரம் ஈரோ .... :D

 

உங்களுக்கும் தெரியாதா .....?

அவசரக்குடுக்கைப்பாட்டி

சொல்லுவன் தானே.... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

இந்த அகமெட்..முகமெட் இருவரையும் காரில் ஏற்றி மிஷெல் கார் ஓடி போவதை பார்த்தேன் ஒருவேளை நீங்கள் சொல்லும் ஆக்களோ தெரில்லை விசு அண்ணே ..

 

(கார் ஓடி போவது பிரஞ்சு போலிஸ் ..பின்னாடி இருப்பவர்கள் அவர்கள் இருவரும் :D :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் இன்றுதான் இது என் கண்ணில் பட்டது. நன்றாக இருக்கு அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வாங்கியுள்ளார்,
3/5 சேமிப்பு,
நண்பனுக்கு 5,000 €.
மறோக்கோ சுற்றுலா...

எப்படியும்.... 500,000 € (அரை மில்லியன்) விழுந்திருக்க வேணும்.
யாயினி கேட்ட மாதிரி.... சுரண்டல் லொத்தரில், இவ்வளவு பரிசு கொடுப்பார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரக்குடுக்கைப்பாட்டி

சொல்லுவன் தானே.... :lol:  :D  :D

 

சொல்லிட்டால் இந்தப் பக்கம் வந்து தொந்தரவு செய்ய மாட்டம் தானே..கெதியா சொல்லுங்க..எனக்கு இதுக்கையே நிற்க ஏலாது,நிறைய வேலை இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்! என்ன மாதிரி?????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.