Jump to content

தமிழர்களுக்கு நியமனம் கிழக்கில் வழங்கப்படமாட்டாது கிழக்கின் ஆளுநர். கூட்டமைப்பு கண்டனம்


Recommended Posts

தமிழர்களுக்கு நியமனம் கிழக்கில் வழங்கப்படமாட்டாது கிழக்கின் ஆளுநர். கூட்டமைப்பு கண்டனம்

By Editor on March 12, 2014

govner_a-1024x685.jpg

விடுதலைப் புலிகளுக்கு கிழக்கில் நாங்கள் நியமனம் வழங்கத் தயாராக இல்லை. நீங்கள் எங்கு போய் முறையிட்டாலும் தமிழர்களுக்கு நியமனம் கிழக்கில் வழங்கப்படமாட்டாது என தன்னைச் சந்திக்க வந்த பட்டதாரிகளிடம் கிழக்கின் ஆளுநர் கூறியதை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக அரியநேத்திரன் எம். பி. தெரிவித்தார்.

 

கிழக்கு மாகாணத்துக்கென நடாத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றிருந்தும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படாமல் இருந்த மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் பலர் கிழக்கின் ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவை சந்தித்து தமது குறைபாடுகளைச் சொல்லி திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்துக்கு கடந்த திங்கட்கிழமை சென்றிருந்தார்கள்.

 

அவ்வாறு சென்ற பட்டதாரிகளிடம் ஆளுநர் நடந்து கொண்ட முறை பற்றி பத்திரிகைகளுக்கு தெரிவித்த போதே அரியநேத்திரன் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் யுவதிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் மிகக்கூடிய புள்ளிகளைப் பெற்றிருந்த போதிலும் இனவிகிதாசார அடிப் படையில் தமிழர்களுக்கு மட்டக் களப் பிலும் அம்பாறையிலும் இடமில்லையென காரணம் காட்டி நேர்முகப்பரீட்சைக்கு முதலாம் நிலை தொடக்கம் 5 ஆம் நிலைப் புள்ளிகளைப் பரீட்சையில் பெற்றவர்கள் கூட அழைக்கப்படவில்லை.

 

மிகக்குறைந்தளவு புள்ளிகளைப் பெற்ற முஸ்லிம் சிங்கள பரீட்சார்த்திகளே நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இந்த அநீதியை தெரியப்படுத்த மேற்படி இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகளே ஆளுநரை சந்தித்து தமது கவலையைத் தெரிவிக்க சென்றுள்ளனர்.

 

ஆளுநர் நடந்து கொண்ட முறை அராஜகமானதும் நாகரீகமற்றதும் ஆகும். நீங்கள் அனைவரும் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள். நீதிமன்றமல்ல எங்கு சென்றாலும் தமிழர்களுக்கு நியமனம் வழங்கப்படமாட்டாது என ஒரு இராணுவத்தளபதி போல் நடந்து கொண்டுள்ளார். கடந்த காலங்களில் இந்த மாவட்டங்களில் தமிழர்களுக்கு கூடுதலான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களும் சிங்களவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இனிவரும் காலங்களில் தமிழர்களுக்கு நியமனம் வழங்கப்படமாட்டாது என அந்த பட்டதாரி இளைஞர்களையும் யுவதிகளையும் அநாகரிகமாக நடத்திக் கொண்டதுடன் ஒரு இராணுவத் தளபதி போல் நடந்தும் கொண்டுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.

 

இது போன்றே அண்மையில் முகாமைத்துவ உதவியாளர் நியமனத்தையும் ஆளுநர் செய்துள்ளார். அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகவே ஆளுநர்களை சிவில் உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்கும் படி கோரி வந்துள்ளோம். முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஆலோ சனைப்படி ஆளுநரைச் சந்திக்க சென்ற அந்தப் பட்டதாரிகளுடன் ஆளுநர் நடந்து கொண்ட முறை அநாகரிகத்தன்மை வாய்ந்ததென அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.supeedsam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு இப்ப பெரிசா கிழக்கை பற்றி கதைக்கிறது இல்லை ...சேர்ந்து இழுக்க கடினமோ தெரியவில்லை ...அங்கே ஒரு மாகாண சபை இருக்கிறது , அதன் எதிர் கட்சி தலைவர் யார் என்றே எனக்கு தெரியாது/ வேறை ஆக்களுக்கு தெரியுமோ தெரியாது  ...அந்தளவில் அவர்களின் முக்கியத்த்துவம் கூட்டமைப்பால் , வெளி உலகத்தீட்கு தெரியபடுத்தபடுகிறது ...அனந்தி ஜெனீவா போகலாம் என்றால் அங்கே உள்ள ஒருவர் ஏன் போக முடியாது ?

Link to comment
Share on other sites

 ...அனந்தி ஜெனீவா போகலாம் என்றால் அங்கே உள்ள ஒருவர் ஏன் போக முடியாது ?

வடமாகாணம் மாதிரியே, கிழக்கு மாகாண சபை தீர்மானத்தை எடுத்து அனுப்பிவைதிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

ஈழத் தமிழர் அனைவருமே சுதந்திரம் பெற்ற காலம் முதல் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

 

இதனால் ஏற்பட்ட போராட்டங்கள் எல்லாம் நாமறிந்ததே. ஆனால் இந்தப் பிரச்சினை வடககு கிழக்கு பிரச்சினையாக மாறி இப்போது வடக்கு மாகாணத்திற்கான பிரச்சினையாக மாறியுள்ளது போன்று அரசியல்வாதிகள் பலர் நடந்து கொள்கின்றனர். இது மாவட்டமாக பின்னர் பிரதேசமாக சுருங்கி விடுமோ என்ற அச்சமும் எழுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமாகாணம் மாதிரியே, கிழக்கு மாகாண சபை தீர்மானத்தை எடுத்து அனுப்பிவைதிருக்க வேண்டும்.

 

மல்லை , உங்கட பகிடி எல்லோருக்கும் விளங்காது :)

 

அதை கொன்சம் விளக்கமாக -இப்படி பாமர மக்களுக்கும் விளங்குகிற மாதிரி சொல்ல வேண்டும் ..

 

1.அனந்தி கதைக்க போகிற வட மாகாணத்த்துக்கு ஆக , அவரை அனுப்பியது வட மாகாண சபை 

 

2.சுமந்திரன் கதைக்க போகிறார் , இலங்கை நாடாளுமன்றத்துக்காக - அதனால்தான் அவர் போர் குற்ற விசாரணை தேவை இல்லை என்பது - இன்னும் விளக்கம் குறைந்த ஆக்களுக்காக

 

3.கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவரும் இல்லை , ஏன்னெனில் அந்த மாகாணசபை ஒருவரையும் அனுப்பவில்லை -அவர்கள் நடுநிலையோ தெரியவில்லை :))

Link to comment
Share on other sites

அனந்தி ஜெனீவா போகலாம் என்றால் அங்கே உள்ள ஒருவர் ஏன் போக முடியாது

 

இது கேள்வி.

 

வடமாகாணம் மாதிரியே, கிழக்கு மாகாண சபை தீர்மானத்தை எடுத்து அனுப்பிவைதிருக்க வேண்டும்.

 

இது பதில்

 

1.அனந்தி கதைக்க போகிற வட மாகாணத்த்துக்கு ஆக ,அவரை அனுப்பியது வட மாகாண சபை

2.சுமந்திரன் கதைக்க போகிறார் , இலங்கை நாடாளுமன்றத்துக்காக - அதனால்தான் அவர் போர் குற்ற விசாரணை தேவை இல்லை என்பது - இன்னும் விளக்கம் குறைந்த ஆக்களுக்காக

3.கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவரும் இல்லை , ஏன்னெனில் அந்த மாகாணசபை ஒருவரையும் அனுப்பவில்லை -அவர்கள் நடுநிலையோ தெரியவில்லை :))

 

 

 

இது விளக்கம் குறந்தவர்களுக்கான கேள்வியின் விளக்கமா அல்லது பதிலின் விளக்கமா என்பதுவும் விளங்கவில்லை. 

 

விளக்கம் குறைந்தவர்களுக்கு நாம் என்ன செய்ய முடியும்?

 

துரோணர் குருவியை காட்ட அருசுனனுக்கு கழுத்து மட்டும் தெரிந்தாம்.  துரியோதனுக்கு காடு, வானம், பூமி சகலதும் தெரிந்ததாம்.

 

பிரேரணையை வலுவாக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் கோரிக்கை வைப்பதறக்காக சுமந்திரனை அரசு  பணம் கொடுத்து அனுப்பியதை விள்க்கம் குறைந்தவர்களுக்கு சொன்னால் அவர்களுக்கு அது விளங்கவா போகிறது. அதனால் அந்த விளக்கம் குறைந்தவர்களை அவர்கள் பாட்டுக்கு விட்டுவிடுங்கள். நமக்கு அந்த வம்பு வேண்டாம். (அனந்தியை வடமாகாணம் அனுப்பியது விதைவைகள், காணாமல் போனோரின் பிரதிநிதியாக. வடமாகாணத்துக்காக கதைப்பதற்கு என்று எங்கே சொல்லப்பட்டிருக்கு? )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

துரோணர் குருவியை காட்ட அருசுனனுக்கு கழுத்து மட்டும் தெரிந்தாம்.  துரியோதனுக்கு காடு, வானம், பூமி சகலதும் தெரிந்ததாம்.

 

 

இவர்கள் போவது தமிழர்களை பிரதிநிதிபடுத்தி என்றால் ஏன் TNA கிழக்கு மாகாணத்தில் இருந்தும் ஒருவரை  அனுப்பவில்லை என்பதுதான் எனது கேள்வி. அதற்க்கு நீங்கள் சொல்லுகிறீர்கள் , அதை கிழக்கு மாகாண சபை அனுப்ப வேண்டும் என்று ...அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு ? என்ன விதத்தில் சுமந்திரன் போகிறாரோ அதே விதத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் ஒருவர் போலாம்தானே ...? அதற்க்கு ஏன் கிழக்கு மாகாண சபை அனுமதி /அனுசரணை வேண்டும்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.