Jump to content

தமிழர்களுக்கு நியமனம் கிழக்கில் வழங்கப்படமாட்டாது கிழக்கின் ஆளுநர். கூட்டமைப்பு கண்டனம்


Recommended Posts

தமிழர்களுக்கு நியமனம் கிழக்கில் வழங்கப்படமாட்டாது கிழக்கின் ஆளுநர். கூட்டமைப்பு கண்டனம்

By Editor on March 12, 2014

govner_a-1024x685.jpg

விடுதலைப் புலிகளுக்கு கிழக்கில் நாங்கள் நியமனம் வழங்கத் தயாராக இல்லை. நீங்கள் எங்கு போய் முறையிட்டாலும் தமிழர்களுக்கு நியமனம் கிழக்கில் வழங்கப்படமாட்டாது என தன்னைச் சந்திக்க வந்த பட்டதாரிகளிடம் கிழக்கின் ஆளுநர் கூறியதை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக அரியநேத்திரன் எம். பி. தெரிவித்தார்.

 

கிழக்கு மாகாணத்துக்கென நடாத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றிருந்தும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படாமல் இருந்த மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் பலர் கிழக்கின் ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவை சந்தித்து தமது குறைபாடுகளைச் சொல்லி திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்துக்கு கடந்த திங்கட்கிழமை சென்றிருந்தார்கள்.

 

அவ்வாறு சென்ற பட்டதாரிகளிடம் ஆளுநர் நடந்து கொண்ட முறை பற்றி பத்திரிகைகளுக்கு தெரிவித்த போதே அரியநேத்திரன் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் யுவதிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் மிகக்கூடிய புள்ளிகளைப் பெற்றிருந்த போதிலும் இனவிகிதாசார அடிப் படையில் தமிழர்களுக்கு மட்டக் களப் பிலும் அம்பாறையிலும் இடமில்லையென காரணம் காட்டி நேர்முகப்பரீட்சைக்கு முதலாம் நிலை தொடக்கம் 5 ஆம் நிலைப் புள்ளிகளைப் பரீட்சையில் பெற்றவர்கள் கூட அழைக்கப்படவில்லை.

 

மிகக்குறைந்தளவு புள்ளிகளைப் பெற்ற முஸ்லிம் சிங்கள பரீட்சார்த்திகளே நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இந்த அநீதியை தெரியப்படுத்த மேற்படி இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகளே ஆளுநரை சந்தித்து தமது கவலையைத் தெரிவிக்க சென்றுள்ளனர்.

 

ஆளுநர் நடந்து கொண்ட முறை அராஜகமானதும் நாகரீகமற்றதும் ஆகும். நீங்கள் அனைவரும் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள். நீதிமன்றமல்ல எங்கு சென்றாலும் தமிழர்களுக்கு நியமனம் வழங்கப்படமாட்டாது என ஒரு இராணுவத்தளபதி போல் நடந்து கொண்டுள்ளார். கடந்த காலங்களில் இந்த மாவட்டங்களில் தமிழர்களுக்கு கூடுதலான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களும் சிங்களவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இனிவரும் காலங்களில் தமிழர்களுக்கு நியமனம் வழங்கப்படமாட்டாது என அந்த பட்டதாரி இளைஞர்களையும் யுவதிகளையும் அநாகரிகமாக நடத்திக் கொண்டதுடன் ஒரு இராணுவத் தளபதி போல் நடந்தும் கொண்டுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.

 

இது போன்றே அண்மையில் முகாமைத்துவ உதவியாளர் நியமனத்தையும் ஆளுநர் செய்துள்ளார். அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகவே ஆளுநர்களை சிவில் உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்கும் படி கோரி வந்துள்ளோம். முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஆலோ சனைப்படி ஆளுநரைச் சந்திக்க சென்ற அந்தப் பட்டதாரிகளுடன் ஆளுநர் நடந்து கொண்ட முறை அநாகரிகத்தன்மை வாய்ந்ததென அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.supeedsam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு இப்ப பெரிசா கிழக்கை பற்றி கதைக்கிறது இல்லை ...சேர்ந்து இழுக்க கடினமோ தெரியவில்லை ...அங்கே ஒரு மாகாண சபை இருக்கிறது , அதன் எதிர் கட்சி தலைவர் யார் என்றே எனக்கு தெரியாது/ வேறை ஆக்களுக்கு தெரியுமோ தெரியாது  ...அந்தளவில் அவர்களின் முக்கியத்த்துவம் கூட்டமைப்பால் , வெளி உலகத்தீட்கு தெரியபடுத்தபடுகிறது ...அனந்தி ஜெனீவா போகலாம் என்றால் அங்கே உள்ள ஒருவர் ஏன் போக முடியாது ?

Link to comment
Share on other sites

 ...அனந்தி ஜெனீவா போகலாம் என்றால் அங்கே உள்ள ஒருவர் ஏன் போக முடியாது ?

வடமாகாணம் மாதிரியே, கிழக்கு மாகாண சபை தீர்மானத்தை எடுத்து அனுப்பிவைதிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

ஈழத் தமிழர் அனைவருமே சுதந்திரம் பெற்ற காலம் முதல் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

 

இதனால் ஏற்பட்ட போராட்டங்கள் எல்லாம் நாமறிந்ததே. ஆனால் இந்தப் பிரச்சினை வடககு கிழக்கு பிரச்சினையாக மாறி இப்போது வடக்கு மாகாணத்திற்கான பிரச்சினையாக மாறியுள்ளது போன்று அரசியல்வாதிகள் பலர் நடந்து கொள்கின்றனர். இது மாவட்டமாக பின்னர் பிரதேசமாக சுருங்கி விடுமோ என்ற அச்சமும் எழுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமாகாணம் மாதிரியே, கிழக்கு மாகாண சபை தீர்மானத்தை எடுத்து அனுப்பிவைதிருக்க வேண்டும்.

 

மல்லை , உங்கட பகிடி எல்லோருக்கும் விளங்காது :)

 

அதை கொன்சம் விளக்கமாக -இப்படி பாமர மக்களுக்கும் விளங்குகிற மாதிரி சொல்ல வேண்டும் ..

 

1.அனந்தி கதைக்க போகிற வட மாகாணத்த்துக்கு ஆக , அவரை அனுப்பியது வட மாகாண சபை 

 

2.சுமந்திரன் கதைக்க போகிறார் , இலங்கை நாடாளுமன்றத்துக்காக - அதனால்தான் அவர் போர் குற்ற விசாரணை தேவை இல்லை என்பது - இன்னும் விளக்கம் குறைந்த ஆக்களுக்காக

 

3.கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவரும் இல்லை , ஏன்னெனில் அந்த மாகாணசபை ஒருவரையும் அனுப்பவில்லை -அவர்கள் நடுநிலையோ தெரியவில்லை :))

Link to comment
Share on other sites

அனந்தி ஜெனீவா போகலாம் என்றால் அங்கே உள்ள ஒருவர் ஏன் போக முடியாது

 

இது கேள்வி.

 

வடமாகாணம் மாதிரியே, கிழக்கு மாகாண சபை தீர்மானத்தை எடுத்து அனுப்பிவைதிருக்க வேண்டும்.

 

இது பதில்

 

1.அனந்தி கதைக்க போகிற வட மாகாணத்த்துக்கு ஆக ,அவரை அனுப்பியது வட மாகாண சபை

2.சுமந்திரன் கதைக்க போகிறார் , இலங்கை நாடாளுமன்றத்துக்காக - அதனால்தான் அவர் போர் குற்ற விசாரணை தேவை இல்லை என்பது - இன்னும் விளக்கம் குறைந்த ஆக்களுக்காக

3.கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவரும் இல்லை , ஏன்னெனில் அந்த மாகாணசபை ஒருவரையும் அனுப்பவில்லை -அவர்கள் நடுநிலையோ தெரியவில்லை :))

 

 

 

இது விளக்கம் குறந்தவர்களுக்கான கேள்வியின் விளக்கமா அல்லது பதிலின் விளக்கமா என்பதுவும் விளங்கவில்லை. 

 

விளக்கம் குறைந்தவர்களுக்கு நாம் என்ன செய்ய முடியும்?

 

துரோணர் குருவியை காட்ட அருசுனனுக்கு கழுத்து மட்டும் தெரிந்தாம்.  துரியோதனுக்கு காடு, வானம், பூமி சகலதும் தெரிந்ததாம்.

 

பிரேரணையை வலுவாக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் கோரிக்கை வைப்பதறக்காக சுமந்திரனை அரசு  பணம் கொடுத்து அனுப்பியதை விள்க்கம் குறைந்தவர்களுக்கு சொன்னால் அவர்களுக்கு அது விளங்கவா போகிறது. அதனால் அந்த விளக்கம் குறைந்தவர்களை அவர்கள் பாட்டுக்கு விட்டுவிடுங்கள். நமக்கு அந்த வம்பு வேண்டாம். (அனந்தியை வடமாகாணம் அனுப்பியது விதைவைகள், காணாமல் போனோரின் பிரதிநிதியாக. வடமாகாணத்துக்காக கதைப்பதற்கு என்று எங்கே சொல்லப்பட்டிருக்கு? )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

துரோணர் குருவியை காட்ட அருசுனனுக்கு கழுத்து மட்டும் தெரிந்தாம்.  துரியோதனுக்கு காடு, வானம், பூமி சகலதும் தெரிந்ததாம்.

 

 

இவர்கள் போவது தமிழர்களை பிரதிநிதிபடுத்தி என்றால் ஏன் TNA கிழக்கு மாகாணத்தில் இருந்தும் ஒருவரை  அனுப்பவில்லை என்பதுதான் எனது கேள்வி. அதற்க்கு நீங்கள் சொல்லுகிறீர்கள் , அதை கிழக்கு மாகாண சபை அனுப்ப வேண்டும் என்று ...அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு ? என்ன விதத்தில் சுமந்திரன் போகிறாரோ அதே விதத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் ஒருவர் போலாம்தானே ...? அதற்க்கு ஏன் கிழக்கு மாகாண சபை அனுமதி /அனுசரணை வேண்டும்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.