Jump to content

வாழ்க்கை ஒரு வட்டம்.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.....

அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த   பனிக்கால   இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும்   ..நித்திரை வரவே இல்லை. இரவு மங்கிய வெளிச்சத்தில் ..கடிகாரம் மணி 1.05 காட்டியது ...  நடு   நிசி....எழுந்து பாத்ரூம்   போய்  விட்டு வந்து  தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் தூங்க  முயற்சிக்கிறாள் ..அருகே இரு   குழந்தைகளும்  ஆழ்ந்த் நித்திரை .....  முன்னைய  நாட்கலேன்றால் அவரவர்  அறையில்  தனியே படுப்பார்கள். இரவில் ஏதும் அவசரமென்றால் கதவைத்தட்டி  அனுமதிபெற்று ...உள்  வரவேண்டும் எ ன்பது பாஸ்கரனின் கண்டிப் பான  கட்டளை.   இந்நாட்டு  வழக்கப்படி   ஆணுக்கு  ஒன்றும் பெண்ணுக்கு  ஒன்றுமாக மூன்று அறை கொண்ட வீட் டில் தான் ஒரு குடும்பத்தை  அனுமதிப்பார்கள்.    

 

 

சில வாரங்களாக  ...அவர்கள் இவளோடு தூங்குகிறார்கள் இவளுக்கும் அது இதமாக் இருந்தது. அவர்களும் ஒரு  ஆதரவாக உணர்ந்து   இருந்தார்கள்.பாஸ் கரனுடன் அமைதியாக  சென்ற குடும்ப வாழ்க்கை இப்படி புயலாக  மாறும்  என  அவள்  எண்ணவே  இல்லை. சில் மாதங்களுக்கு முன் நாங்கள்  சற்று பெரியவீடுவாங்குவோம்  ஆலோசனை கூறி  ..அவர்களிருந்த  வீடு விற்பனைக்கானது . பின்பு ஒரு மூன்று அறைகள் கொண்ட (கொண்டோ )தொடர்மாடிக்கு  இடம்  மாறியபோது தான்  அனித்தா விழித்துக்  கொண்டாள் .

 

சில  மாதங்களாக அவன் இரண்டு நாள் வேலை....தூர இடத்தில் வேலை  என  சாட்டு சொல்லி அங்கு  தங்குவதாக  சொல்வான். வீட் டிலும் எந்நேரமும் சிந்தனை வயப்பட்டவனாக இருப்பான். பிள்ளைகள்  எங்கா வது வெளியில் கூட்டிப் போவதற்காக  இருந்தாலும் தாமதமாக் வந்து அந்த நாளை சோகத்தில் ஆழ்ந்துவான். மகளுக்கு பன்னிருவய தாகிறது அவளில்  மிகுந்த நேசம் உள்ளவன். தன தாயின் சாயல் என்று சொல்வான். படிக்கும் காலத்திலேயே காதலித்துகைப்  பிடித்தவன். இவளும் தந்தையை இழந்த்தவள் .  கனடா நாட்டில்    கடின உழைப்பால்  முன்னுக்கு வந்தவர்கள். ஒரே ஒரு தங்கை ..அவளும் மணமாகி ஒரு ஆண் குழந்தையுடன் மகிழ்வாய்  வாழ்கிறாள். கோடை விடுமுறையில் மகனுடன் சேர்ந்து பந்துவிளையாடுவான்.  அமைதியான  வாழ்வில்  ஏன்  இப்படி ஒரு சுழல் காற்று 

சில மாதங்களுக்கு  முன்பு ...அவள் அவனது செல் போனை ஆராய்ந்த போது   தான் ஒரு பெண்ணின் பெயர் பல தடவை பதிவாகி இருந்தது. அதுபற்றிக்  கேட்டதால்  தான் முதலில் சாட்டுபோக்கு சொன்னான் ...பின் பிரச்சினையாகி ஒரு பூகம்பமே வெடித்து,  சென்ற வாரம் தனது  உடுப்புக்களை எடுத்துக்கொண்டு தன்  ஒன்று விட்ட  சகோதரனின்  வீட் டுக்கு  செல்லுமளவுக்கு வந்து விட்டது .. மறுநாள் அவனது  சகோதரன் வந்திருந்தார்.  தன தம்பிக்கு சில  வருடங்களாக  ஒரு பெண்ணின் சிநேகிதம் இருந்தது என்றும் அவளுடன்  வாழப்போவதாக சொல்லி விட் டாராம்.  அவளும் மன்றாட்டமாய் கேட்டாள் . பிள்ளை களை   எண்ணி தன்னுடன் சேர்த்து வைக்க ம்கேட்டு கெஞ்சினாள் .அவரோ இது குடும்ப விடயம் என் நழுவி விட்டார்.      அவன் மனம் மாறுவான் என் காத்திருந்தாள் .  ...அப்போது தான் அவள்  கடந்த கால அவனது நடவடிக்கைகளை அசை போட்டாள் . . சில் மாதங்களாகவே திட்டமிட்டு வீட்டை யும் விற்க  பண்ணி ..அதில் வந்த தொகையில் சிறுபகுதியில் இந்த மூன்று  அறைகொண்ட (கொண்டோ )தொடர் மாடியை வங்கி விட்டு  மீதிப்ப் பணத்தை தன வசபடுத்தி விட்டான்  என்று.

 

 

இனி என்ன செய்வாள் தன் னோடு   வாழப் ப்பிடிக்காத வனை ?  விவாக ரத்து மிகவும் மலிந்த   பொருளாகி விட்டது .பதின் மூன்று வருட இல் வாழ்க்கை சலித்து விட்டது ..ஒரு  கணமாவது  பெற்ற பிள்ளைகளை எண்ணி பார்த்தானா? மகள் மிகவும் சோகமாய் இருக்கிறாள். எப்படி விளங்கக் படுத்துவேன்...அவனது அயோக்கிய  தனத்தை ...சென்ற வா ரம் அம்மாவும் தங்கை குடும்பமும் வந்துபார்த்து விட்டுபோனார்கள் ...ஒரு விழாவுக்கு சென்றால் ஊரவர்  உறவினர் என்ன எண்ணுவார்கள்.  பெண்கள்  கூடிக் கதைப்பார்கள் . இப்படியும் ஒரு துரோகமா... இரண்டு பிள்ளைகளுக்கு  தந்தை யானவனை எப்படி தான்  வளைத்து பிடித்தாளோ  ...இன்று சில ஆசைகளுக்காக  என்னை விட்டு செல் கிற வன் நாளைக்கு அவளையும் விட்டு செல்ல மாட்டான் என்பது என்ன நிச்சயம் ...மின்னுவதெல்லாம்  பொன்னென்று  எண்ணி ..இவனது மதி கெ ட்ட  தனத்தால் வரும் விளைவு...

என் பிள்ளைகள்   என்ன பாவம் செய்தார்கள். .? அவர்களை தாயும் தந்தையுமாக் கவனித்து வளர்க்கக் வேண்டும்... இப்படியானவர்கள் எப்போது  ஒரு குடும்பத்தின் அருமை பெருமை .. பெறுமதியினை  உணரபோகிரார்கள்..?..கட்டியவளைக் கைவிட்டு,  , காசுபண மேலாம் சுருட்ட ..கூட  வந்து  ஓட்டியவளு ம் கை விட்டு,  நோய் வாய்பட்டு வைத்திய சாலை யில் ..பார்க்க ஒருவருமில்லாமல் ...கடந்த காலத்தை  நினைத்து க டைக் கண்ணால்  நீர் வழிய .....அப்போது காலம் கடந்து விடும். .இவ்வாறு எண்ணியவள் நன்றாக  அயர்ந்து போனாள் .

 

திடீரென விழித்தவள்  நேரத்தை பார்த்தும் ..ஒ இன்று சனிக் கிழமை சற் று அவர்கள் தூங்கட்டும் என்று  எண்ணி சத்தமிடாமல் எழுந்து சென்று காலை க் கடன் கலைமுடித்து காலை  உணவுக்கு தயாரானாள் .என்ன கஷ்ட் துன்பம் வந்தாலும் என்  பிள்ளைகளை  வளர்த்து ஆளாக்குவேன் என்று எண்ணிய வாறு பிள்ளைகளை .தற்காப்புக் கலை (.கராட்டி) வகுப்புக்கு அழைத்து  செல்ல  தயாரானாள் ஒருபுதுமை பெண்ணாக ..........

 

கதை கற்பனை அல்ல  பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டும் தன்னம்பிகையுடன்   வாழ  வேண்டும் எனும் நல்  நோக்கத்துக்காக எழுதபட்ட குட்டிக் கதை . .

Link to comment
Share on other sites

கதை எழுதியதற்குப் பாராட்டுகள்! 

கதையைப்பற்றி ஆறுதலாக சொல்லுகிறேன்!  :o  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனையோ விடயங்கள் புலம்பெயர்  சூழலில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. சமூக கால மாற்றங்கள் இவற்றை சாதாரணமாக்கி விட்டுவிட்டன. நன்றி அக்கா கதைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாக்கா நன்றாக கதையை நகர்த்தி இருக்கிறீர்கள். கதையில் படிமம் இயல்பாக நகர்ந்திருக்கிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்ற தலைப்பு கதையோடு சரியாக பின்னிவரவில்லைபோலத் தோன்றுகிறது. இந்தக்கதை ஒரு ஆணின் சுயநலத்தை அப்பட்டமாக சொல்கிறது. பெண்ணிற்கான தீர்வை விதியென்று ஏற்றிருக்கிறது. இலகுவாக பெண் ஏமாற்றப்படக்கூடியவள் என்பதை மட்டுமே கதாசிரியராக சொல்லமுற்படுகிறீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பெண்களின் இயலாமையைக் கூறுகின்றீர்கள்  போலிருக்கு , பிள்ளைகளுக்கு அவர் ஏதாவது செய்துதானே ஆகவேண்டும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இப்படியான சோகக்கதைகளை நேரடியாகவே பார்த்திருக்கின்றேன்.
ஒரு சமூக கதையை தந்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு படிப்பினைக் கதை, நிலாக்கா!

 

என்னைக்கேட்டால், தவறு முழுவதும் எமது கலாச்சாரத்திலேயே தங்கியுள்ளது.

 

பொதுவாக, எமது கலாச்சாரத்தில் பெண்கள், திருமணம் முடிந்ததும்,தங்கள் உறவுக்குச் 'சமுதாயமும்', 'உறவுகளும்' என்றுமே காவலாக இருக்கும் என்று நினைத்துவிடுவது தான் தவறு!

 

வெளிநாட்டு வாழ்க்கையில், சமுதாயக்காவலும், உறவுகளின் காவலும் இல்லாமல் போய்விடுகின்றன என்பதை நாம் 'வசதியாக' மறந்து விடுகின்றோம் ! 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை எழுதியதற்குப் பாராட்டுகள்! 

கதையைப்பற்றி ஆறுதலாக சொல்லுகிறேன்!  :o  :)

 

வரவுக்குனன்றி.  உங்கள்க கருத்துக்காக  காத்திருக்கிறேன்.

இப்படி எத்தனையோ விடயங்கள் புலம்பெயர்  சூழலில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. சமூக கால மாற்றங்கள் இவற்றை சாதாரணமாக்கி விட்டுவிட்டன. நன்றி அக்கா கதைக்கு.

 

வருகைக்கு  நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாக்கா நன்றாக கதையை நகர்த்தி இருக்கிறீர்கள். கதையில் படிமம் இயல்பாக நகர்ந்திருக்கிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்ற தலைப்பு கதையோடு சரியாக பின்னிவரவில்லைபோலத் தோன்றுகிறது. இந்தக்கதை ஒரு ஆணின் சுயநலத்தை அப்பட்டமாக சொல்கிறது. பெண்ணிற்கான தீர்வை விதியென்று ஏற்றிருக்கிறது. இலகுவாக பெண் ஏமாற்றப்படக்கூடியவள் என்பதை மட்டுமே கதாசிரியராக சொல்லமுற்படுகிறீர்களா? 

 

 ஆம் அவள் ஏமாற்றபட்டு விட் டாள். ஆனால் ஆசையும் மயக்கமும் தீர்ந்து விட ..மனம் மாறி மன்னிப்பு கேட்டுவருவான்  என ஒரு சின்ன உள்ளுணர்வும் இருக்கிறது. 

 

மீண்டும் சுய நலத்துக்காக  வந்தவள் அவனை  ஏமாற்று வாள் என்பதையும்  குறிக்கும். அதனால் வாழ்க்கை ஒருவட்டம்  என கருதினேன்

சில பெண்களின் இயலாமையைக் கூறுகின்றீர்கள்  போலிருக்கு , பிள்ளைகளுக்கு அவர் ஏதாவது செய்துதானே ஆகவேண்டும்...!

 

 

அவர் விரும்பினால் செய்யட்டும். ஆனால் அவள் படித்தவள் வங்கியில் வேலை 

 

..தன் காலில்நிற்கும் தென்பு  உண்டு.

 

இப்படியான சோகக்கதைகளை நேரடியாகவே பார்த்திருக்கின்றேன்.
ஒரு சமூக கதையை தந்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்.

 

 

தங்கள் வருகைக்கு நன்றி

நல்ல ஒரு படிப்பினைக் கதை, நிலாக்கா!

 

என்னைக்கேட்டால், தவறு முழுவதும் எமது கலாச்சாரத்திலேயே தங்கியுள்ளது.

 

பொதுவாக, எமது கலாச்சாரத்தில் பெண்கள், திருமணம் முடிந்ததும்,தங்கள் உறவுக்குச் 'சமுதாயமும்', 'உறவுகளும்' என்றுமே காவலாக இருக்கும் என்று நினைத்துவிடுவது தான் தவறு!

 

வெளிநாட்டு வாழ்க்கையில், சமுதாயக்காவலும், உறவுகளின் காவலும் இல்லாமல் போய்விடுகின்றன என்பதை நாம் 'வசதியாக' மறந்து விடுகின்றோம் ! 

 

தங்கள் வருகைக்கு நன்றி ...பெண்கள் முழுக்க் முழுக்க  கணவனையே   சார்ந்து இருக்க கூடாது .. களவும் கற்று மற  என்பது போல தள்ளிவிட் டாலும் நீந்த கற்றுக்  கொள்ள  வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை கற்பனை அல்ல 

பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டும் தன்னம்பிகையுடன்   வாழ  வேண்டும் எனும் நல்  நோக்கத்துக்காக எழுதபட்ட குட்டிக் கதை . .

 

 

 

ஒரே மாதிரியான வாழ்க்கை

ஒரே பொருளை  நுகர்தல்....

போன்றவற்றால்  சிலர் தடுமாறுவதுண்டு

காலம் அவர்களைத்தண்டிக்கும்

ஆனால் அந்த பிஞ்சுகளே உடனடியாக

இதற்கான விலையைக்கொடுப்பர் என்பது   வேதனை  தரும் உண்மை

முடிவு தேவையானது...

 

நன்றி  பாட்டி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை அக்கா பாராட்டுக்கள்.

வாழ்வில் ஒரு போதும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை என்று சொல்ல மனம் வரவில்லை இது இன்னொரு உறவின் வலி என்பதால்.. இதை தனியே ஆண்கள் மட்டும்தான் இப்படி செய்வது என்பதை ஏற்றுகொள்ளமுடியாது... இப்படி பல பெண்களும் குடும்பங்களையும் பிள்ளைகளையும் விட்டு தறிகெட்டுதிரிகிறார்கள்.. இதுகுறித்து நெடுக்ஸ் அண்ணாவின் என்றியை எதிர்பார்க்கிறேன்.. :D கதைக்கு நன்றி அக்கா..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கதை நன்றாக இருந்தாலும் சிறிது செம்மைப்படுத்தலில் கவனம் செலுத்துங்கள் .கதைக்கு வாழ்த்துக்கள் நிலாமதி .

Link to comment
Share on other sites

விவாகரத்தின்பின் முன்னாள் கணவன் உதவித்தொகை கொடுக்க வேண்டி வரும். இது அந்தப் புது மனைவிக்கு சில மாதங்களின் பின் எரிச்சலைக் கொடுக்கும். ஆகையால், நிம்மதியான வாழ்க்கைக்கு வழியில்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.