Jump to content

ஆண்மைக் குறைபாடு - Erectile dysfunction விறைத்தெழும் செயல் பிறழ்ச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விறைத்தெழுந்து வருவாயென

உளக் கிளர்ச்சியுடன் காத்திருந்தேன்

நிமிர்ந்தெழத் திராணியற்று

சோர்ந்து கிடக்கின்றாய்.

மனவிருப்பிருந்தால்

சோரேன் எனும் திடமிருந்தால்

வாழ்க்கை சொர்க்கமாகும்.

 
ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன?
 
இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படைதல்’ குறைபாடு மிக முக்கியமானதாகும்.
 
உடலுறவின்போது ஆண் உறுப்பு போதியளவு விறைப்படைந்து நிற்காதலால் உடலுறவு திருப்தியைக் கொடுக்காத நிலை எனச் சொல்லலாம். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை பெரிய குறைபாடாகக் கூறமுடியாது. இளைஞர்களில் ஏற்படுவது பெரும்பாலும் உளம் சார்ந்ததே.
 
ஆயினும் தொடர்ச்சியாக இது நிகழ்ந்தால் அதனை Erectile Dysfunction எனக் கூறுவர். வயது அதிகரிக்க அதிகரிக்க இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை ஆகும். ஆண்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒருவருக்கு இது ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சிலருக்கு லேசாகவும் சிலருக்கு மிகக் கடுமையாகவும் என இது பல்வேறு நிலைகளில் ஏற்படக் கூடும்.
 
இருந்தபோதும் முக்கியமான அம்சம் என்னவென்றால் 90 சதவிகிதமானவர்கள் அதனை வெளிவிடாமல் மனதில் வைத்துக் கொண்டு துன்புறுகிறார்களே ஒழிய வைத்திய ஆலோசனை பெறுவதில்லை.
 
காரணம் என்ன?
 
1) பலருக்கு (80%) இது ஒரு உடல் சார்ந்த நோயாகும். பெரும்பாலும் வேறு நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம்.
a.முக்கியமாக இது இரத்தக் குழாய்கள் (நாடி) சார்ந்த நோயாகும். பக்கவாதம், மாரடைப்பு போன்றவையும் அவ்வாறே இரத்தக் குழாய் நோய்கள்தான்.
b.நீரிழிவு ஒரு முக்கிய காரணியாகும். உண்மையில் 35 சதவிகிதமான நீரிழிவு நோயளர்களை இப் பிரச்சனை பாதிப்பதாக தரவுகள் கூறுகின்றன.
c.புரஸ்ரேட் நோய் முள்ளந் தண்டு நோய் ஆகியவற்றிற்கான சத்திரசிகிச்சையின் பின்விளைவாகவும் இது ஏற்படலாம்.
d.போதைப் பொருள் பாவனை மற்றொரு முக்கிய காரணமாகும். புகைத்தல், மதுபாவனை, ஏனைய போதைப் பொருள் பாவனைகள் இதனைக் கொண்டுவரும்.
e.ஆண் ஹோர்மோனான டெஸ்டஸ்ரரோன் குறைபாடு மற்றொரு காரணமாகும்.
 
2) சிலரில் இது மன உணர்வுகளோடு தொடர்புள்ள பிரச்சனையாகும். உளநெருக்கீடு, மனச்சோர்வு போன்ற உளநோய்கள் உள்ளவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். பாலுறவு பற்றிய பதற்றம் (Performance Anxiety), பாலுறவு கொள்ளப் போகும் பெண்ணுடனான உறவில் உள்ள உரசல் (realationship Failure), Fear of intimacy போன்றவையும் காரணமாகலாம்.
 
3) வேறு நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் இக் குறைபாடு ஏற்படலாம். பிரஸருக்கு உபயோகிக்கும் தயசைட் மாத்திரை, மனச் சோர்வுக்கு உபயோகிக்கும் மருந்துகள், தூக்க மருந்துகள், குடலில் அமிலம் சுரப்பதைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் சிமிரிடீன் மாத்திரை போன்றவை சில மருந்துகளாகும்.
 
மருந்து காரணம் எனக் கருதினால் உடனடியாக அதனை நிறுத்தி ஏற்கனவே உள்ள நோயை அதிகரிக்கச் செய்து விட வேண்டாம். மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அதற்கான மாற்று மருந்தை உபயோகிக்க வேண்டும்.
erectiledysfunction-1.jpg?w=300
உளம் சார்ந்ததா உடல் சார்ந்ததா?
 
பலருக்கு இது உடல் சார்ந்ததாகவும், சிலருக்கு உளம் சார்ந்ததாகவும் இருக்கிறது என்றோம். இதனை வேறுபடுத்தி அறிவது எப்படி?
 
உளம் சார்ந்ததின் அறிகுறிகள்
 
a.திடீரெனத் தோன்றுவது,
b.சில நாட்களில் விறைப்பு ஏற்படுவும் வேறு சில நாட்களில் விறைப்பு ஏற்பட மறுப்பதும்,
c.பொதுவாக 60க்கு உட்பட்ட வயதுகளிலும் பொதுவாக உளம் சாரந்த ஆண்மைக் குறைபாடு எனலாம்.
d.காலையில் நித்திரை விட்டெழும்போது எவருக்கும் தானாக உறுப்பு விறைப்படையும். இது இயல்பானது. சிலருக்கு தினமும் இல்லாமல் சில வேளைகளில் மட்டும் அதிகாலை விறைப்பு ஏற்படுகிறதெனில் அது உளம் சார்ந்ததே.
e.வழமை போல உறவில் ஆர்வமற்றுப் போவதும் அத்தகையதே
 
உடல் சார்ந்ததின் அறிகுறிகள்
 
a.ஆண்மைக் குறைபாடு படிப்படியாக தோன்றி வரவர மோசமாகும்.
 
b.எப்பொழுதுமே விறைப்பு ஏற்படாதிருத்தல்.
c.பொதுவாக 60க்கு மேற்பட்ட வயது.
d.அதிகாலையில் தானாக ஆணுறுப்பு விறைப்படைதல் முற்றாக அற்றுப் போதல்.
e.உடலுறவில் ஆர்வம் இருந்தபோதும் ஆணுறுப்பு ஒத்துழைக்க மறுத்தல்.
 
மருத்துவ ஆலோசனை
 
மேற் கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
பிரச்சனை உள்ளவருக்கு டெஸ்டஸ்ரரோன் குறைபாடு இருக்கிறதா என அறிய மருத்துவர் அவரின் ஆண்குறியின் வளர்ச்சி, மார்பின் அளவு, முக ரோமங்களின் வளரச்சி வேகம் ஆகியவற்றை கேட்டும் பரிசோதித்தும் அறிவார்.
 
குருதியில் ஆண் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்ரரோன் அளவை பரிசோதிக்கவும் கூடும்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியன இருக்கின்றனவா என சோதித்து அறிவார்.
 
சிகிச்சை
 
 
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவசியம்.
புகைத்தல், மது பாவனை ஆகியவற்றின் பாவனையை நன்றாகக் குறைக்க வேண்டும். அல்லது முற்றாக நிறுத்துவது சாலச் சிறந்தது.
உளவளத் துணை பலருக்கு உதவி செய்யும்.
மருந்துகளைப் பொறுத்த வரையில் phospho diesterase type 5 inhibitors (PDE5 inhibitors) என்ற வகை மருந்துகள் ஆண்குறி விறைப்படைதல் குறைபாட்டிற்கான சிகிச்சையைப் பொறுத்த வரையில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன.
 
70சதவிகிதமானவர்களுக்கு இவை நல்ல பலனைக் கொடுக்கின்றன.
ஆயினும் அண்மையில் பக்க வாதம், மாரடைப்பு ஆகியன வந்தவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
அல்லது மாரடைப்பு வருவதற்கான நிலையில் உள்ள இருதய நோயாளர்கள் (Unstable Angina) தவிர்க்க வேண்டும்.
நெஞ்சு வலிக்கு ரைனைற்றேட் (Trinitrate) உபயோகிப்பவர்கள் அதனுடன் சேர்த்து உபயோகிக்கக் கூடாது.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் உபயோகிக்கலாம்.
இவற்றில் மூன்று வகையான மாத்திரைகள் இப்பொழுது கிடைக்கின்றன.
அவையாவன

1.Sildenafil

2.Vardenafil
3.Tadalafil
 
இவை பொதுவாக உடலுறவிற்கு சற்று நேரம் முன்பாக எடுக்க வேண்டிய மாத்திரைகளாகும். வேறுபட்ட நேரத்திற்கு பயன் தரும்.
சில்டெனபில் என்பது வயக்ரா என்ற பெயரில் முதல் முதலாக அறிமுகமாகி மிகவும் பெயர் பெற்றதாகும்.
ஏனையவை அதற்கு பிந்திய மருந்துகள்.
 
சில்டெனபில்
உடலுறவிற்கு 60 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.

சுமார் நான்கு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.

 
வார்டெனபில்
இது உடலுறவிற்கு சுமார் 25 முதல் 45 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.

சுமார் ஆறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.

 
ரடலபில்
இது உடலுறவிற்கு சுமார் 30 நிமிடங்கள் முதல் 12 மணிநேரம் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.

சுமார் முப்பத்தாறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது. எனவே வாரத்திற்கு இரண்டு எடுத்தாலே நாள் முழுவதும் வேலை செய்யும் எனலாம்.

 
பக்க விளைவுகள்
 
இம் மருந்துகள் சிலருக்கு நெஞ்செரிப்பு, வயிற்றுப் பிரட்டு, வாந்தி, தலையிடி, தலைப்பாரம், தசைப்பிடிப்பு, மூக்கடைப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

இவை சற்று நேரத்தில் மறைந்துவிடக் கூடியன.

 
ஏனைய சிகிச்சைகள்
 
டெஸ்டஸ்ரரோன் குறைபாடு உள்ளவர்களுக்கு அதனை மாத்திரைகளாகவோ, ஊசியாகவோ கொடுப்பதுண்டு.

வேறு சில மாத்திரைகள், உபகரணங்கள் போன்றவையும் உதவக் கூடும்.

இவை எதனையும் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரமே உபயோகிக்க வேண்டும்.
 
 
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
 
குடும்ப வைத்தியர்
 
நன்றி:- வீரகேசரி 07.12.2008
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சிட்டு குருவி லேகியம் என்ன மாதிரி டாக்டர்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.