Jump to content

தாயே உனக்காயும் விபூசிக்காகவும்.


Recommended Posts

தாயே உனக்காயும் விபூசிக்காகவும்.
523617_10152056650593002_309994609_n_zps
 
அம்மா அம்மா என - நீ
அழைத்துச் சொல்லும் துயரத்தின் ஈரம்
நெஞ்சுக்குள் நெருப்பாய் மூண்ட நாட்கள்
இன்று போல.....!
உன்னைக் கைவிடோமென நம்பிய
உனது பிள்ளைகளின் கனவுகள் மீது
உனது நம்பிக்கைகள் து(த)ளிர்த்துக் கொண்டன.
 
உனது கண்ணீரை உனது துயரங்களை
நீ சொல்லியழுகிற போதெல்லாம்
மறுமுனையில் உனக்காய் 
உனது குழந்தைகளுக்காய்
அழுத நாட்கள் அதிகம் தாயே....!
 
நிலம் மீட்கும் போரில் பிள்ளைகள்
விதையாகிப்போன பின்னும்
வீரத்தின் அடையாளமாய் அவர்கள்
விட்டுச் சென்ற கனவுகள் வாழும் நிலத்தில்
வாழும் கனவோடுதானே வன்னியைப் பிரியாமல் 
அங்கேயே வாழ விரும்பினாய்....!
 
ஏன்றாவது திரும்புவான் கடைக்குட்டியென்ற
கனவைத் தானே தாயே என்றென்றும் புலம்புவாய்
அவனது வரவைத் தானே நீ தினமும் ஏந்தினாய்...!
'காணாமற்போனவர்கள் ஒருநாள் வருவார்கள்'
நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் வரிசையில் நீ
அவனைத் தேடித்தானே அலைந்து திரிந்தாய்....!
 
காணாமற்போனவனை நாங்களும் தேடித்திரிந்தோம் 
என்றாவது வருவானென நீ நம்பியது போலவே நம்பினோம்.
இன்றோ உன்னையும் உனது மீதி நம்பிக்கையான
குழந்தையையும் பறிகொடுத்து
உங்களிருவரையும் தேடுகிறோம் தாயே....!
 
மீண்டு வருவீர்களென்ற நம்பிக்கையில்
தாயே உனக்காயும் விபூசிக்காகவும்
மனுக்களோடு மனிதவுரிமையாளர்கள் 
மனங்கள் மட்டுமல்ல – அவர்
கண்களும் திறக்குமென்ற நம்பிக்கையோடு
தாயே உங்கள் விடுதலைக்காக
உலகெங்கும் வேண்டுகிறோம்.....!
 
16.03.2014
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபஞ்சப் பெருவெளியில்
எந்தத் தாய்க்கும் நேராத கொடுமை
இந்தத் தாய்க்கு நேர்ந்திருக்கிறது...

 

பெற்ற மகனைத் தேடியவரைப்
பிடித்துப் போய்ச் சிறையிட்ட
பெருங் கொடுமை...!

 

போதாதற்கு-
பருவம் வந்து பத்தே நாளேயான
பாச மகளையும் கைது செய்திட்ட
பாதகர் கொடுமை...!!

 

விழி திற உலகே,
விரைந்தவர் விடுதலை பெறவே...!!

 

கண்ணீரை வரவழைத்து விட்ட
கவிதை தந்தீர் சாந்தி...
வாழ்த்துக்கள்!
 

தமிழர் நம் வாழ்வைத்
தழுவட்டும் விரைவில் சாந்தி...!!

 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தகவல் : காணாமல் போன தனது சகோதரனைத் தேடியழுத 13 வயதுச் சிறுமி விபூஷிகா, கடந்த 14.03.2014 அன்று அவளது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரால் பட்டப்பகலில் கிராமத்தவர் முன்னிலையில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டாள்.

கவிதைக்கான குறிப்பு : எப்பொழுதும் தனது சகோதரனைக் கேட்டு அழுது ஓலமிட்ட அத் தமிழ் சகோதரி இப்பொழுது கடத்தப்பட்டிருக்கிறாள். காவல்துறைத் தலைமையகம் அறிவித்திருப்பதைப் போல அதனை மனிதாபிமானக் கடத்தலா எனத் தீர்மானிப்பது உங்கள் கையிலிருக்கிறது.
vipooshika.jpg

நரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள

விபூஷிகா எனும் சகோதரி

விமானத்தைக் காணவில்லை

உலக வரைபடமே இங்கே பார்

யோசனைகளோடு விம்மியழுது

உதித்த சூரிய மகள் எங்கேயெனச் சொல்

அண்ணன்மார் மூவருக்கு இளையவள்

அன்னையின் விழிகளோ அன்பின் உறைவிடம்

அதுதான் ஐயாக்களே தமிழனின் பாசம்

அதுவன்றி வாழ்க்கையே போராட்டம் தங்கையே

கொடிய கனவொன்றைப் போல

மூத்தவர்கள் இருவர் மரித்திட

முப்பொழுதும் பார்த்திருந்த

இளைய அண்ணனும் கடத்தப்பட

பனையழகு எல்லாம் அழிந்த பூமியில்

ஸ்வரம் இழந்த பாடலானாள்

இரட்சகனைத் தேடியதால் – நரகத்துக்கு

கொண்டு செல்லப்பட்டுள்ள சகோதரியொருத்தி

கற்றறிந்த சிலுவைக் குறிகளுக்கு

சத்தியத்தில் இடமில்லை

குரலெழுப்பிப் பூத்த மலரொன்று

சிதைகிறது இரகசியமாக

அவளுமொரு சிறுமி

இருந்திருக்கக் கூடும் கனவுகள் ஆயிரம்

இன்னும் கண்டிருக்கக் கூடும்

எப்பொழுதாவது ஒரு புன்னகைத் துளியை

உலகம் ஒரு சிறைக்கூடம்

நலிந்தவர்கள் மட்டும் சிக்கிக் கொள்ளும் சதி பீடம்

இன்றும் வலி தந்திருக்கக் கூடும்

ஒரு கொடியவனின் பார்வை

வேண்டுமென்றே கடத்தப்பட்டாள் கறுப்புத் திலகமிட்டவள்

உருவழித்து தீப்பற்றியெரிகிறது எனது இருதயம்

உருகவில்லையா செவிமடுக்கையில் உம் மனங்கள்

நரக நதியினின்றும் மீண்டிட

நீந்திடு விபூஷிகா!

சிங்கள மூலம் : கஸுன் மகேந்திர ஹீனடிகல

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

 

 

free_vipooshika.jpg

http://inioru.com/

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயும் மகளும் சேமமாய் விடுதலை  பெற பிரார்த்திப்போம் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கையே விபூசிக

தளிர் நீயென்று

உனக்கும் விடுதலை வேண்டியே

போராட நான் புறப்பட்டேன்

ஆயிரம் ஆயிரம் தோழர் தோழியரை

மண்தோண்டி வித்துடலாய்

விதைத்து விட்டு

உங்கள் வாழ்வுக்காய்

நானும் வீழத்துநிந்தேன்,

சாவு என்னை நெருங்கவில்லை

சத்தியமாய் உயிர் பயத்தால்

நான் ஊர் தாட்டவில்லை

அண்ணாவை காட்டுங்கோ

என்று -நீ

அழுத போதெல்லாம்

நெஞ்சமே வெடிக்கிறது

உனக்காக நாம்

போராடப்போனோம்-இன்று

எமக்காக நீ போராடி நின்றாய்

உன் கண்ணீருக்கும்

பதில் வந்துசேரும்.

பயந்து ஓடியவர் என்று

எம்மை சிலர் சொல்லட்டும்.

நாம் பழி தீர்க்குமட்டும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த  சிறு கொழுந்துக்காக கவிதை எழுதிய  அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் விடுதலை பெற பிரார்த்திப்போம்

இந்த பிள்ளைக்காக கவிதைகள் தந்தவர்களுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.