Jump to content

கவலைக்கு மருந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை வாழ்வதற்கே

 

கடவுள் மனிதனை படைத்து நல்லபடியாக வாழ்ந்து வா என்றுதான் அனுப்பி வைக்கிறான்.  நாம்தான் நந்தவனத்து ஆண்டியாக வாழ்க்கையை  போட்டு உடைத்து விடுகிறோம்

 

கவலை மூட்டைகளை சுமந்துக் கொண்டு வாழ்க்கையை சுமையாக்கி விடுகிறோம்

 

எது நடந்தாலும்,  நாம் அந்த வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்கிறபோது, எது நடக்கப்போகிறதோ அது நன்றாகவே நடக்கும் என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டு, சந்தோசஷமாக எதிர்கொள்வதில் என்ன நஷ்டம்.

 

பீஷ்மர் போர்முனையில் கூட சந்தோஷமாக இருந்தாராம். சாவின் விளிம்பிலும் அனைவருக்கும் நீதி சொல்கிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்கிறார்.

 

சண்டையின் போது சிரிக்க தெரிந்தவன் எதிரியை கொஞ்சம் கொஞ்சமாக வெல்கிறான் என்கிறது உளவியல்.

 

சந்தோசமான மனநிலையை வளர்த்துக் கொண்டால் கவலைகளை வென்று விடலாம். காலையில் எழுந்திருக்கும் போதே உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக என்ற சந்தோசத்தோடு எழுந்திரியுங்கள்உண்மையில் அந்தநாள் உங்களுக்கு உற்ச்சாகமாகவே அமையும்.

 

இந்த உலகில் பிரச்சனை இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. பில்கேட்ஸ்க்கு கூட பிரச்சனைகள் இருக்கிறது. அவர் கம்பெனிமேல் நிறைய வழக்குகள் போடப்பட்டு நடக்கிறது.

 

அவர் எப்போதும் தன்னை நம்பர் ஒன்னாகவே வைத்திருக்க போராட வேண்டி இருக்கிறது.

 

ஆனாலும் அவர் பிரச்சனைகளை பற்றியே நினைத்து கொண்டிருந்தால் அவரால் வெற்றி பெறவே முடியாது

 

பல கஷ்டங்கள் நாமே உருவாக்கி கொண்டதுதான்.  நம்மால் அவற்றை போக்கி கொள்ளவும் முடியும். அதில் புதைந்து போகவும் முடியும். புதைந்து போன மனிதன் புலம்பிதான் திரிவான். ஆனால் சிந்திக்க தெரிந்த மனிதன் சிரித்துத்தான் வாழ்வான்

 

 

சிரிக்க திறக்கும் உதடுகள் வழியே துன்பம் வெளியேறிவிடும் என்கிறார் கவிபேரசு.  சிரிபொலி கேட்கும் வீட்டின் திண்ணையில் மரணம் உட்காருவதே இல்லை

 

ஒவ்வொரு சிரிப்பிலும் சில மில்லிமீட்டர் உயிர் நீளக்கூடும். மரணத்தை தள்ளிப்போடும் மார்க்கம் தான் சிரிப்பு என்கிறார் அவர்

 

ஒரு ஜென் ஞானி இறக்கும் தருவாயில் இருந்தார். சுற்றிலும் சீடர்கள் சோகமாக நின்றுக் கொண்டிருந்தனர். அவரது தலைமாட்டில் நிற்கும் சீடரை பார்க்கிறார் ஞானி. சீடர் வெளியே ஓடுகிறார். குருவிற்கு பிடித்த இனிப்பு பலகாரத்தை  வாங்கி  வருகிறார்.  

 

குருவுக்கு சந்தோசம். அதை ஆசையோடு வாங்கி சாப்பிடுகிறார்.  பின் அந்த சீடரை அருகில் அழைக்கிறார். கடைசியாக உபதேசம் செய்யத்தான் அழைக்கிறார் என்று நினைத்த சீடர் அருகில் சென்று குனிகிறார்.

 

குருவின் உதடுகள் மெல்ல அசைகின்றனஆஹா என்ன ருசி. சொல்லிவிட்டு முகத்தில் அந்த இறுதி சிரிப்புடன் கண்களை மூடுகிறார்.

 

சீடருக்கு குருவின் உபதேசம் புரிகிறது. வாழ்வின் கடைசி நிமிடம் வரை வாழ்க்கையை ருசிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்பதே அந்த உபதேசம். வாழ்க்கை ஒரு சந்தோஷ சாகரம். இதை தெரிந்து கொண்டவன் முத்தெடுக்கிறான். தெரியாதவன் மூச்சு திணறுகிறான்.

 

உங்கள் புன்னகை தான் மற்றவரை உங்களை நோக்கி இழுத்து வரும். புலம்பல்கள் அல்ல.

 

http://jothidasudaroli.blogspot.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.