Jump to content

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - லக்கிலுக்கின் பார்வையில்!


Recommended Posts

சென்னையில் கடந்த 1ஆம் திகதி வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தது.... அதுகுறித்த எனது வர்ணனையை நண்பர் குருவியாரின் வேண்டுக்கோளுக்கிணங்கி இங்கே பதிகிறேன்.... அடுத்த சந்திப்பில் யாழ்களத்து நண்பர்களையும் சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சியடைவேன் :D

* சில நாட்கள் முன்னர் நண்பர் முத்து (தமிழினி) தொலைபேசியில் சென்னை வருவதாகவும் சில நண்பர்களை நேரில் சந்தித்துப் பேச இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.... அது ஒரு வலைப்பதிவர் சந்திப்பாக இருக்கும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை....

* இந்த சந்திப்பு குறித்த பதிவினை அண்ணன் பாலபாரதி தகுந்த கால அவகாசம் இல்லாமல் புதன் அன்று தான் அறிவித்தார்.... பின்னூட்டம் மூலமாக நான் கண்டிப்பாக வருவதாக வாக்களித்து என் தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தேன்....

* சரியாக மாலை 6 மணிக்கு பாலபாரதி என் கைத்தொலைபேசியில் அழைத்தார்.... "எல்லாரும் வந்துட்டாங்க.... சீக்கிரம் வாங்க" என்றார்.... என் குதிரையை வேறு சர்வீசுக்கு விட்டிருந்ததால் வேக வேகமாக ராயப்பேட்டை நோக்கி ஆட்டோவில் சென்றேன்.... (மவுண்ட் ரோட்டில் இருந்து மணிக்கூண்டுக்கு போக 25 ரூபாய் அநியாயம்).... சர்வீஸ் சென்டரில் வேறு போட்டு தீட்டி அனுப்பி வைத்ததால் கொஞ்சம் டென்ஷனாகவே குதிரையை ஓட்டிக் கொண்டு நாகேஸ்வரராவ் பூங்காவுக்குச் சென்றேன்.... அறிவிக்கப்பட்ட நேரத்தை விட 10 நிமிடம் தாமதமாகவே அங்கு போய்ச் சேர முடிந்தது....

* நான் போய் சேர்ந்தபோது சுமார் 15 பேர் கூடியிருந்தனர்.... அறிமுகப் படலம் நடந்து கொண்டிருந்தது....

* அண்ணன் பாலபாரதி பார்ப்பதற்கு மீசையில்லாத விக்ரம் மாதிரி செம இளமையாக தெரிகிறார்.... முத்து (தமிழினி) ஆரம்பக் காலத்து அஜித் மாதிரி நல்ல சிகப்பாக, அழகாக கொஞ்சம் உயரமாக இருக்கிறார்.... கவுதம் மூத்தப் பத்திரிகையாளர் என்பதால் காதோர நரையோடு, மூக்குக் கண்ணாடி போட்டிருப்பார் என்று நினைத்திருந்தேன்... ஆனால் ரமணா விஜயகாந்த் மாதிரி ஸ்மார்ட்டாக இருக்கிறார்....

* வரவணையான் கறுப்பாக இருந்தாலும் செம களையாக இருக்கிறார்.... ரோசா வசந்த் எழுத்துக்கும் அவர் தோற்றத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை... ஆள் செம அமைதியாக இருந்தார்.... பரஞ்சோதி நான் எதிர்பார்த்த தோற்றத்திலேயே இருந்தார்... முத்துக் குமரன் அவர் வலைப்பூவில் இருக்கும் வண்ணப் படத்தைக் காட்டிலும் நேரில் கொஞ்சம் பூசினாற்போல தெரிகிறார்... கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்தார்...

* பாரதி கண்ட புதுமைப் பெண்ணைக் காண வேண்டுமா? பொன்ஸைப் பாருங்கள்.... கவிதா அணில்குட்டியுடன் வந்திருந்தாரா தெரியவில்லை... அவரை சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்த அணில்குட்டி அவருடையதா இல்லை பூங்காவில் வசிப்பதா என்று தெரியவில்லை....

* நான் சென்றபோது இருந்தவர்களை மட்டுமே வர்ணித்திருக்கிறேன்.... பிறகு ரொம்பவும் இருட்டி விட்டதால் லேட்டாக வந்தவர்களை சரியாக "கவனிக்க" முடியவில்லை....

* என்னை நேரில் பார்த்ததுமே முகத்தில் மூன்று குத்து விட வேண்டும் என திட்டமிட்டிருந்ததாக ஒரு வலைப்பதிவாளர் என்னிடம் தனியாகத் தெரிவித்தார்.... அதிர்ஷ்டவசமாக குத்து எல்லாம் விடவில்லை....

* ஒரு வலைப்பதிவாளர் இன்றிலிருந்து உனக்கு ஒரு சகோதரன் இருப்பதாக நினைத்துக்கொள் என்றார்.... சகோதரன் இல்லாமல் பிறந்த என்னை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட வைத்து விட்டார்....

* அய்யா சிவஞானம்ஜி பேசும்போது வலை பதியும் போது மட்டுமல்லாமல் கமெண்டுகள் போடும்போதும் கொஞ்சம் பொறுப்புணர்ச்சியோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.... ஒரு கேடுகெட்ட கமெண்டைப் படித்து விட்டு ஒரு நாள் முழுக்க உறக்கம் வராமல் தவித்ததாகச் சொன்னார்....

* தோழர் சந்திப்பு உலகமயமாக்கல் மற்றும் இந்துத்துவாவை எதிர்த்து தான் எழுதுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.... வலைப்பூக்களில் குழு மனப்பான்மை வந்துவிட்டதாகவும் அது நல்லதா என்பது ஆய்வுக்குரியது என்றும் சொன்னார்....

* பாலபாரதி பேசும்போது அனானி கமெண்டுகளைப் பற்றி ரொம்பவும் ஆவேசமாகப் பேசினார்....

* பார்வையாளராக வந்திருந்த தோழர் ஒருவர் வலைப்பதிவர் சந்திப்பினை திராவிடத் தமிழர் சந்திப்பாக நினைத்து திராவிட கருத்துக்களை சொற்பொழிவாற்ற தொடங்கிவிட்டார்.... அப்போது குறுக்கிட்ட Stimulation இது வலைப்பதிவர் சந்திப்பு என்பதை நினைவுறுத்தினார்....

* வலைப்பதிவர் சந்திப்பில் நான் வாய் திறந்தது மசால் வடை சாப்பிட மட்டுமே... எதுவும் பேசாமல் மற்றவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனித்தேன்...

* படங்கள் எடுக்கும்போது மட்டும் சில வலைப்பதிவர்கள் தர்மசங்கடமாக நெளிந்தனர்.... படங்கள் வலைப்பூவில் ஏற்றப்பட மாட்டாது என உறுதியளிக்கப்பட்டது....

* வலைப்பதிவர் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்தது....

* அதன்பின் டீ சாப்பிட ஒரு குரூப் கிளம்பியபோது அதில் நானும் ஒட்டிக்கொண்டேன்....

* சாலையில் பைக் பில்லியன்களில் பெண்கள் ஒட்டிக்கொண்டு போவதைப் பற்றி பேச்சு வந்தது.... அப்போது சென்ற ஒரு ஜோடியைப் பார்த்து திராவிடத் தமிழர்கள் வலைப்பூவின் அமைப்பாளர்களில் ஒருவரான முத்து (தமிழினி) அடித்த கமெண்டு... "எவனோ திராவிடப் பிகரைத் தள்ளிக்கிட்டு போறான்யா"

* பாலபாரதி எனக்கு நிறைய அட்வைஸ் கொடுத்தார்.... என் எழுத்துக்களின் (?) ப்ளஸ், மைனஸ்களை அக்குவேறு ஆணிவேறாகச் சொன்னார்....

* நிறைய வலைப்பூ நண்பர்கள் ஒரு சர்ச்சைக்குரிய பதிவு நான் போட்டதற்காக என்னை கடிந்துக் கொண்டார்கள்.... ஒவ்வொருவரிடமும் என் "சுயமரியாதை" புராணத்தை பாட வேண்டி இருந்தது....

* நண்பர் வரவனையான் கள்ளங் கபடமில்லாமல் பழகுகிறார்.... ஈழப் பிரச்சினை குறித்த எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்....

* முத்துக் குமரன் கொள்கைக் குன்றாக நெருப்பு போல இருக்கிறார்.... பெரியார் குறித்து பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார்.... திராவிடம் குறித்து நிறையப் பேசுகிறார்....

* டீ குடிக்கும் வைபவம் முடிந்தவுடன் சிலர் தாகசாந்தி செய்துக் கொள்ள வேண்டும் என்றார்கள்.... எனக்குத் தாகம் வந்தால் ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிப்பேன்... சில நண்பர்கள் பொன்னிற திரவம் எதையோ உள்ளே தள்ளினார்கள்....

* என் நினைவில் இருந்ததை மட்டுமே எழுதியிருக்கிறேன்.... சந்திப்பில் கலந்துகொண்ட நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும்.... அனைவருமே சந்திப்பு குறித்து அவரவர் பதிவில் ஏதாவது எழுத வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்....

(http://madippakkam.blogspot.com)

Link to comment
Share on other sites

ஆனாலும் உங்களுக்கு அதிகப்படியான ளொள்ளுப்பா...! போய் வந்தீங்க நட்பு பாராட்டினீங்க.... அதுக்காக அவை குடித்த பொன்னிற பாணத்தை பற்றி எல்லாமா சொல்லுறது...???

கடைசில சொல்லி இருக்கிறதால அது மட்டும்தான் ஞாபகத்தில் நிக்கப்போகுது....!

எண்டாலும் இது அனியாயம்...

Link to comment
Share on other sites

தமிழ்மணம்..குருவிகள் தமிழில் வழங்கும் விஞ்ஞானச் செய்திகளுக்கு ஆரம்ப காலந்தொட்டு..தகுந்த இடம் வழங்கி வந்த வலைப்பூக்கள் பூத்துக் குலுங்கும் ஓர் நந்தவனம். அதில் சிறகடித்துப் பறந்த வலைப்பூ வண்ணாத்துப்பூச்சிகளின் ஒன்று கூடல் எப்படி அமைந்திருந்தது,,ஜாலியா...அமைந்

Link to comment
Share on other sites

லக்கிலுக்கு

நடந்த சந்திப்பை மிகவும் சுவையாக நேரில் பார்ப்பது

போன்ற உணர்வு ஏற்படும் வண்ணம் அருமையாக கூறியுள்ளீர்கள். நன்றி

Link to comment
Share on other sites

எல்லாற்ற மாடும் ஓடுதெண்டு...... :oops: :cry: மிகுதியை சின்னப்பு மப்பில வந்து சொல்லுவார்,, கேளுங்க.. :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

எல்லாற்ற மாடும் ஓடுதெண்டு...... :oops: :cry: மிகுதியை சின்னப்பு மப்பில வந்து சொல்லுவார்,, கேளுங்க.. :evil: :evil: :evil:

எல்லாரும் ஏதோ சொல்லுறாங்க எண்டிட்டு தானும் எதியோப்பியாவில இருந்து எதையோ தட்டித் தட்டி சொல்ல வெளிக்கிட்டார். :twisted: மப்பில்லாட்டி கூட்டத்துக்குப் பேச்சே வராதோ :roll:

Link to comment
Share on other sites

எல்லாற்ற மாடும் ஓடுதெண்டு...... :oops: :cry: மிகுதியை சின்னப்பு மப்பில வந்து சொல்லுவார்,, கேளுங்க.. :evil: :evil: :evil:

இவங்க கொஞ்சம் சுயநலத்துக்கு வெளில..சுய தேவைகளுக்கு வெளியில...சுயவிளம்பரத்துக்கு வெளில..தமிழ்மணம்..வலைப்பூக்கள

Link to comment
Share on other sites

யாராவது எங்காவது எதுக்காவது சந்திச்சா ஓடியோவில பதிஞ்சுகொண்டுவந்து குடுங்ககைய்யா குருவியிட்ட இதுதான் கதைச்சனாங்க எண்டு. முதல்ல ஏதோ தன்னப்பற்றி கதைச்சாங்க எண்டது இப்ப ஏதோ மாடு மேய்க்கிற கதை கதைக்குது. இதத்தான் மேல்மாடி தட்டீற்று எண்டுறதா. ஆனா தனக்கும் தான்சார்ந்ததற்கும் நல்லாவே விளம்பரம் குடுக்குது. வீட்டில கதைக்க யாரும் இல்லப்போல கணினில வந்து கொட்டிட்டுக் கிடக்கு :roll:

Link to comment
Share on other sites

சுடரக்கா..நீங்கள் ஏன் இதுக்க வந்து சம்பந்தம் சம்பந்தமில்லாமல்...ஏதேதோ...சொல

Link to comment
Share on other sites

லக்கி இன்றைய (09-09-2006) பிபிசி தமிழோசையில் சென்னையில் நடைபெறும் வலைப்பதிவாளர் மாநாட்டில்..தமிழ் வலைப்பதிவுகள் பற்றிப் பெருமிதமாகவும்..தமிழ்மணம்..அக

Link to comment
Share on other sites

20060909165652bolg-conf_203.jpg

சென்னையில் 'வலைப்பூக்கள்' குறித்த மாநாடு

வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் சென்னையில் தான் அதிகம் என கூறப்படுகிறது

இணையதளத்தில் தகவல்பரிமாற்றம் நடைபெறும் முறையின் எதிர்காலநிலையை பிரதிபலிக்கும் விதமாக, தமிழக தலைநகர் சென்னையில் இன்று சனிக்கிழமை தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று துவங்கியது.

அதாவது, தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படும் இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறைகளில் பிளாக்கிங் என்கிற நடைமுறை தற்போது அதிவேகமாக பிரபலமடைந்துவருகிறது. இதை தமிழில் வலைப்பதிவுகள் என்றும் வலைப்பூக்கள் என்றும் வலைப்பின்னல்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

பத்திரிகைத்துறையின் ஆரம்பகாலகட்டத்தில் கையெழுத்துப்பிரதிகள் நடத்தப்பட்டன. அதாவது தனிமனிதர் ஒருவர் தனக்கு பிடித்த விடயங்கள் பற்றிய தனது கருத்துக்களை கையால் எழுதி தனிச்சுற்றுக்கு விடுவது கையெழுத்துப்பிரதியாக விளங்கிவந்தது. ஏறக்குறைய அதேபோன்றதொரு விடயம் தான் இணையத்தில் வலைப்பதிவுகளாக உருவெடுத்திருக்கிறது.

அதாவது, இணையத்தில் உலவத்தெரிந்த யார் வேண்டுமானாலும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. பேசுவதில், எழுதுவதில் மற்றவர்களோடு கருத்துப்பரிமாறுவதில் ஆர்வம் இருக்கும் யாரும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம்.

ஒருவகையில் இந்த வலைப்பதிவுகள், தனிமனிதர்களின் இணையதள தகவல் மற்றும் கருத்துப்பரிமாற்றத்திற்கான எதிர்கால தனிமனித ஊடகங்களாக உருவெடுத்து வருகின்றன.

இந்திய அளவில் இப்படிப்பட்ட வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் அதிகம்பேர் சென்னையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியான வலைப்பதிவாளர்களின் தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று இன்று சனிக்கிழமை சென்னையில் துவங்கியுள்ளது.

bbc.com/tamil

---------------------

யாழிற்கு வலைப்பூக்களை அறிமுகம் செய்தவர்..யாழ் அண்ணா என்று அழைக்கப்படும் சுரதா அண்ணாவே..! வலைப்பூ என்ற பதம் திசைகளில் மாலனின் குறிப்பில் தான் முதன்முதலில் சொல்லப்பட்டது என்று நினைக்கின்றோம்.!

Link to comment
Share on other sites

வலைப்பூ என்ற பதம் திசைகளில் மாலனின் குறிப்பில் தான் முதன்முதலில் சொல்லப்பட்டது என்று நினைக்கின்றோம்.!

நானும் அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.... மாலன் ஆரம்பகாலங்களில் வலைப்பூக்களில் தீவிரமாக இருந்தவராம்.... நிறைய எழுத்தாளர்கள் வலைப்பூக்களில் அமெச்சூர் எழுத்தாளர்கள் வந்தவுடன் விலகிவிட்டார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்....

Link to comment
Share on other sites

20060909165652bolg-conf_203.jpg

சென்னையில் 'வலைப்பூக்கள்' குறித்த மாநாடு

வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் சென்னையில் தான் அதிகம் என கூறப்படுகிறது

இணையதளத்தில் தகவல்பரிமாற்றம் நடைபெறும் முறையின் எதிர்காலநிலையை பிரதிபலிக்கும் விதமாக, தமிழக தலைநகர் சென்னையில் இன்று சனிக்கிழமை தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று துவங்கியது.

அதாவது, தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படும் இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறைகளில் பிளாக்கிங் என்கிற நடைமுறை தற்போது அதிவேகமாக பிரபலமடைந்துவருகிறது. இதை தமிழில் வலைப்பதிவுகள் என்றும் வலைப்பூக்கள் என்றும் வலைப்பின்னல்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

பத்திரிகைத்துறையின் ஆரம்பகாலகட்டத்தில் கையெழுத்துப்பிரதிகள் நடத்தப்பட்டன. அதாவது தனிமனிதர் ஒருவர் தனக்கு பிடித்த விடயங்கள் பற்றிய தனது கருத்துக்களை கையால் எழுதி தனிச்சுற்றுக்கு விடுவது கையெழுத்துப்பிரதியாக விளங்கிவந்தது. ஏறக்குறைய அதேபோன்றதொரு விடயம் தான் இணையத்தில் வலைப்பதிவுகளாக உருவெடுத்திருக்கிறது.

அதாவது, இணையத்தில் உலவத்தெரிந்த யார் வேண்டுமானாலும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. பேசுவதில், எழுதுவதில் மற்றவர்களோடு கருத்துப்பரிமாறுவதில் ஆர்வம் இருக்கும் யாரும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம்.

ஒருவகையில் இந்த வலைப்பதிவுகள், தனிமனிதர்களின் இணையதள தகவல் மற்றும் கருத்துப்பரிமாற்றத்திற்கான எதிர்கால தனிமனித ஊடகங்களாக உருவெடுத்து வருகின்றன.

இந்திய அளவில் இப்படிப்பட்ட வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் அதிகம்பேர் சென்னையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியான வலைப்பதிவாளர்களின் தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று இன்று சனிக்கிழமை சென்னையில் துவங்கியுள்ளது.

bbc.com/tamil

---------------------

யாழிற்கு வலைப்பூக்களை அறிமுகம் செய்தவர்..யாழ் அண்ணா என்று அழைக்கப்படும் சுரதா அண்ணாவே..! வலைப்பூ என்ற பதம் திசைகளில் மாலனின் குறிப்பில் தான் முதன்முதலில் சொல்லப்பட்டது என்று நினைக்கின்றோம்.!

ஓய் லக்கீ படத்தில உம்மட முகத்தை கானேல்லையே :oops: :oops: ஓய் நீர் பார்க்க நம்ம மாப்பிள்ளை விஐய் போலத்தானே

:wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் சின்னப்பதாஸ் எல்லாரும் முதுகை காட்டிக்கொண்டு நிற்கினம் அதுல நீர் வேற விஜய் என்டு சொல்லிக்கொண்டு

Link to comment
Share on other sites

லக்கிலுக்: தற்ஸ்தமிழ் இனையத்தளம், கருத்துகளத்தை மூடக் காரணம் என்ன?

Link to comment
Share on other sites

லக்கிலுக்: தற்ஸ்தமிழ் இனையத்தளம், கருத்துகளத்தை மூடக் காரணம் என்ன?

அவர்களால் பராமரிக்க முடியவில்லை.... களத்திலும் சாதி, சமயச் சண்டைகள் அதிகமாக இருந்தது இன்னொரு காரணம்....

Link to comment
Share on other sites

அவர்களால் பராமரிக்க முடியவில்லை.... களத்திலும் சாதி, சமயச் சண்டைகள் அதிகமாக இருந்தது இன்னொரு காரணம்....

அதற்கும் காரணம் லக்கிதான் என்று ஒரு குரூப் சொல்கிறதே. (அவருடன் சண்டையிட முடியவில்லை என்பதால்) :wink:

Link to comment
Share on other sites

அதற்கும் காரணம் லக்கிதான் என்று ஒரு குரூப் சொல்கிறதே. (அவருடன் சண்டையிட முடியவில்லை என்பதால்) :wink:

நல்ல காலம் யாழ் இல ஒருவரும் நம்மட லக்கீஸ் ஓடை சண்டை இல்லை

(ஓய் சும்மா நகைச்சுவை பிறகு என்னில பாயிறேல்லை )

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

அதற்கும் காரணம் லக்கிதான் என்று ஒரு குரூப் சொல்கிறதே. (அவருடன் சண்டையிட முடியவில்லை என்பதால்) :wink:

:D :P :D :P

தட்ஸ் தமிழில் எனக்கு தாத்தாக்கள் எல்லாம் இருந்தார்கள்.... :lol:

Link to comment
Share on other sites

நல்லதொரு கண்ணோட்டத்தை வழங்கியிருக்கிறீர்கள் லக்கி!

அருமை..........

நானும் இத்தகவலை பீபீசீ தமிழில் கேட்டு விட்டு என் வலைப்பூவிலும் அதை இட்டிருந்தேன்.

http://ajeevan.blogspot.com/2006/09/blog-post.html

மகிழ்ச்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் யாழ் இல ஒருவரும் நம்மட லக்கீஸ் ஓடை சண்டை இல்லை

(ஓய் சும்மா நகைச்சுவை பிறகு என்னில பாயிறேல்லை )

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

என்ன சின்னா!

புதுசாக ஏதும் சண்டை தொடங்க வேணும் என்கின்றீர்களா? லக்கி, என்ன தலைப்பில் தொடங்கலாம் என்று யோசியுங்கள்! தொடங்கின பிறகு, ஒழுங்காக வரவேணும் சரியா? :wink: :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.