Jump to content

இராணுவத்தில் இணைந்த பெண்களை மானபங்கபடுத்தும் தமிழ் சமூகமும் ஊடகங்களும் (பழ றிச்சர்ட்)


Recommended Posts

முகநூலில் இந்த கட்டுரையை வாசித்தேன். யாழ்கள வாசகர்களும் படிக்க இங்க இணைக்கிறேன். இக்கட்டுரையை எப்பிடி இங்கே இணைக்கலாம் என்றெல்லாம் ஒருவரும் அடிக்க வரப்படாது. வாசித்ததை பகிர்ந்துள்ளேன். 

 

 

 

பழ றிச்சர்ட் என்பவர் எழுதிய இக்கட்டுரையை உங்கள் வாசிப்புக்கு இங்கே பகிர்கிறேன்.

 

இராணுவத்தில் இணைந்த பெண்களை மானபங்கபடுத்தும் தமிழ் சமூகமும் ஊடகங்களும்

==================================
பேருந்தில் தனியாக ஒரு பெண் சென்றாலே உரசி பார்க்கும் சமூகம் இது. இந்த சமூகத்தில், அதீதமான முறையில் ஆணாதிக்கமும் ஒடுக்கியாளும் மனனோபாவமும் நிலவும் இராணுவத்தில் பெண்கள் எதிர்நோக்கும் ஒடுக்குமுறையை சமானியர்களால் அத்தனை இலகுவாக கற்பனை செய்திட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இராணுவத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இதே நிலை தான்.

சிறிலங்கா பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கெடற் பயிற்சிகள் கூட, தற்போது தமிழ் இணையத்தளங்களில் வெளியிடப்படும் காணொளியில் காண்பிக்கப்படுவதை விட கடினமானதாக இருக்கும். கப்டன்களாக இருக்கும் உயர்தர வகுப்பு படிக்கும் அண்ணாமார்களுக்கு வணக்கம் சொல்ல சில நொடிகள் தாமதித்தாலும், மைதானத்தை சுற்றி 10 முறை ஒட வேண்டும். இல்லாவிட்டால் 10 அடிகள் பின்புறத்தில் விழும். 

இராணுவ பயிற்சிகள் என்பது இதை விட கொடுமையானவை. எதிரில் யார் எதற்காக நின்றாலும் சரி ஆயுதாரியோ நிராயுதபாணியோ கவலைபடாமல், சுடு என்று உத்தரவிட்டால் சுட வேண்டும். துப்பாக்கி ரவை தசையை துளைக்கும் போது தெறிக்கும் இரத்தத்தை கண்டு வெற்றி பிரமிதம் கொள்ள வேண்டும். சுடப்பட்டவனின் மரண கதறலை வாழ்த்து ஒலியாக ஏற்று மேலும் முன்னேற வேண்டும். அது வெலிவேரியாவில் தண்ணீர் கேட்ட சிங்களவராக இருந்தாலும் சரி வன்னியில் தனிநாடு கேட்பவராக இருந்தாலும் சரி.... இதற்கு தயார் படுத்த வேண்டும் என்றால் பயிற்கள் அதற்கேற்ற வகையில் தான் இருக்கும்.

இப்படியிருந்தும் இராணுவத்திற்கு ஆள்கிடைப்பது குறைவதில்லை. காரணம்... 13 வருட பாடசாலை கல்வி, 4 வருட பட்ட படிப்பின் பின் 2 வருடங்கள் பயிற்சி என்ற பெயரில் 8000 ரூபாவிற்கு நேர காலம் இல்லாமல் குப்பை கொட்டிய பின் கிடைப்பதை விட அதிகமாக குறைந்த கல்வி தகமையுடன் கிடைக்கும் சம்பளம். கல்வி தகைமை குறிக்கப்பட்டாலும்... அது வெறும் கண்துடைப்புக்கு தான் ... அதன் காரணமாக தான் அனுராதபுரம் குருணாகல் மற்றும் சிங்கள சமூகத்தின் கீழ் சாதியினர் என்று குறிப்பிடப்படும் மக்கள் வாழும் கேகாலை ஆகிய பின்தங்கிய இடங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக இராணுவத்தில் இணைகின்றார்கள். 

சம்பளம் சலுகைக்கு அப்பால் இராணுவ பயிற்சி, கட்டுபாடுகள் ஏற்படுத்தும் விரக்தி தேசப்பற்றின் பெயரால் மூடி மறைக்கப்படும். ஒரு நாளும் படித்து பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியவர்களோ, பன்னாட்டு தனியார் தனியார் கம்பனிகளில் வேலைசெய்பவர்களோ இந்த இராணுவத்தில் இணைவதில்லை. சிப்பாய்களாக இணைபவர்கள் சமூகத்தில் அடித்தட்டை சேர்ந்தவர்கள்.

தமிழ் சமூகத்திலிருந்து இராணுவத்திற்கு சிலரை இணைத்து கொள்ள அரசு தீர்மானித்த போது, தேசப்பற்று எனும் ஏமாற்று தந்திரம் கைகொடுக்க வில்லை. ஏற்கனவே பொலிஸ் பயிற்சிக்கு இணைத்துகொள்ளப்பட்ட தமிழ் இளைஞர்கள் இடையிலேயே தப்பியோடி அவுஸ்திரேலியாவிற்கு படகேறிய அனுபவங்கள் அரசிற்கு உண்டு. ஆகவே தான் பெண்களை இலக்கு வைத்தார்கள். இன்றை சூழலில் 30000 சம்பளம் என்பது வறுமையில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிர்பார்க்க முடியாததாகும். முன்பு இவர்களை இலக்கு வைத்து ஆடை உற்பத்தி நிறுவனங்கள் படையெடுத்து ஆசை காட்டி கணிசமானவர்களை சுதந்திரவர்த்தக வலயத்திற்கு அழைத்து சென்று விட்டன. 

பண்டிகை கால விடுமுறைகளின் போது கொழும்பிலிருந்து பளை நோக்கி இரவு 8 மணிக்கு புறப்படும் புகை வண்டியில் பயணித்தீர்கள் என்றால், புறக்கோட்டையில் வாங்கிய ஆப்பிள் ஒரஞ் பழங்கள் தன் தம்பி தங்கையர்க்கு வாங்கி விளையாட்டு பொருட்களுடன் கையில் சீன தயாரிப்பு தொலைபேசி மற்றும் தளும்புகளுடன் பயணிக்கும் இவ்வாறான பெண்களை தாராளமாக காணலாம். ( இவர்கள் வாங்கி செல்லும் விளையாட்டு பொருட்களில் பிரதானமானது விளையாட்டு துப்பாக்கியாகும்). ஆசனம் பதிவு செய்து உறங்களிருக்கையில் பயணிப்பவர்களின் கண்களுக்கு இவர்கள் தென்படுவதில்லை. 

குடும்ப வாழ்வாதாரத்தை இழந்து தொழில் வாய்ப்புக்கள் இன்றி இருக்கும் இப்பெண்கள் வேறு வழியின்றி இராணுவத்தில் இணைந்திருக்க வேண்டும். இதன் பின்னால் இராணுவத்தின் நிர்ப்பந்தமும் நிச்சயம் இருந்திருக்கும்.

உலகின் எந்த இராணுவமாக இருந்தாலும் சித்திரவதைகள் என்பது இல்லாது இருக்காது. சிறிலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடுவோர் எண்ணிக்கை இதற்கு சாட்சி. பெண்களும் ஆண்களும் அதிக மன அழுத்தங்களுக்கும் பாலியல் சார் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுப்பது எங்கும் நடப்பது தான். இப்படியிருக்கும் போது தான் இராணும் தமிழ் பெண்களை கொடுமை படுத்துகின்றது என்ற குற்றசாட்டு முன் வைக்கப்படுகிறது. இதற்கு சர்வதேச சமூகத்திடம் நீதியும் கோருகின்றார்கள்.

நீதி கோரப்படும், சர்வதேச சமூகத்திற்கஞ தலைமை அரசின் இராணுவம் என்ன செய்தது...? குவாட்டமாலா சிறைசாலையில் பெண்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்தது... குதவாயிலில் பிளாஸ்டிக் குழாயை நுழைத்து அதற்குள் முட்கம்பிகளை செலுத்தி பின் மிளாய் தூளையும் விட்டு குழாயை வெளியே எடுத்துவிடுவார்கள்... முட்டையை அவிய விட்டு யோனிக்குள் விட்டுவிடுவார்கள்.. வீட்டில் முட்டை அவித்திருந்தால் ஒடு உரிக்க படாத முட்டை எவ்வளவு சுடும் என்பதும் எவ்வளவு நேரம் சூடாக இருக்கும் என்றும் தெரிந்திருக்கும்... இப்படி கொடுமை படுத்திய அமெரிக்க அரசின் தலைமையிலான சர்வதேச சமூகம் கண்டுகொள்ளும் என்று எப்படி கணக்கு போடுகின்றார்களோ தெரியவில்லை.

இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைத்து கொள்ளப்பட்டார்கள் என்று செய்தி வெளிவந்த கணத்திலேயே அவர்களை இந்த சமூகமும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் மானபங்க படுத்தி விட்டார்கள். வெளிநாட்டு பெண்கள் என்றாலே பலபேருடன் சுற்றி திரிபவர்கள் என்று கணக்கு போடும் சமூகம் தானே இது... இராணுவத்தில் பெண்கள் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஆருடம் கூறும் அல்லது கற்பிதம் செய்யுமளவிற்கு மனவிகாரம் கொண்டவர்கள் இங்கு இருக்கின்றார்கள். விடுதலை புலிகள் குனியவைத்து சுட்டிருக்காவிட்டலால் பெண் போராளிகளை பற்றியும் இப்படி தான் கதைத்திருக்கும் சமூகம். தென்னிலங்கையில் விடுதலை புலிகளின் முகாம்களில் நடந்தவை என ஆபாச பட இறுவெட்டுகள் சிங்கள மொழி குரல் பதிகளுடன் உலாவியும் இருந்தன.

உண்மையில் பெண்கள் இராணுவத்தில் பாலியல் தேவைக்காக வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அதை வெளிப்படுத்தி இராணுவ முகாம்களுக்கு முன் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசை அடிப்பணிய வைப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான விடயம் அல்ல. ஆனால் ஒரு பரபரப்பை கிளப்பி இலாபம் தேட முனையும் ஊடகங்களின் செயற்பாடுகள் கடுமையாக கண்டிக்க தக்கது. வெட்கி தலை குனிய வேண்டியது. ஒரு வேளை அவ்வாறான வன்புணர்வு சம்பவங்கள் நடந்திருக்கா விட்டால் என்ன செய்யும் இந்த ஊடகங்கள். அந்த பெண்களின் நிலை என்ன? இப்படி செய்தி பரப்பி விடுவதால் அந்த பெண்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் மானபங்க படுத்தி வருவதற்கு என்ன தண்டனை? இப்படி ஈனதனமாக போராட வேண்டிய நிலையிலா தமிழ் சமூகம் இருக்கின்றது. 

இன்று குமுறும் இந்த ஊடகங்கள் யுத்தம் முடிந்த காலத்தில் எங்கு இருந்தன.... 2009 காலப்பகுயில் இருந்து இன்று வரை நான் வவுனியா பேருந்து நிலையத்தில் நிற்பதில்லை.

அந்த காலப்பகுதியில் தடுப்பு முகாமகளிலிருந்தும் வேறு இடங்களில் இருந்தும் வவுனியா அநுராதபுர வைத்திய சாலைக்கு வந்து செல்பவர்கள் கணாமல் போனவர்களை தேடி ஜோசப் முகாம்க்கு வருபவர்கள், சிறைகளில் அடைக்கப்பட்டவர்களை பார்க்க வருபவர்கள் என வவுனியா பேருந்து நிலையம் நிறைந்திருக்கும். பெரும்பாலும் உறவுகளை தொலைத்துவிட்டு நிர்கதியான நிலையில் இருக்கும் பெண்கள் தான் நிறைந்திருப்பார்கள். இவ்வாறு நலிவடைந்த நிலையில் பலவீனமான பெண்களை குறி வைத்து பல்சர்களில் பேருந்து நிலையத்திற்கு ஆண்கள் கூட்டம் காலை முதல் படையெடுக்கும். வன்னி அயிட்டம் என்பது தான் இந்த பெண்களை குறிக்கும் சொல். பணத்தை காட்டி உதவுவதாக ஏமாற்றி கெஞ்சி என பலவழி முறைகளை கையாண்டு இந்த பெண்களை தங்கள் பாலியல் தேவைக்கு பயன்படுத்த வயது வித்தியாசமின்றி முனைந்தவர்கள் எத்தனை பேர். என்றுமே யுத்த களத்திற்கு சென்றிராத ஞாயிறு வீரகேசரியில் யுத்த செய்தி வாசித்து பெருமிதம் பேசிய இந்த நடுத்தர வர்க்கத்தை யாரும் அன்று கண்டு கொள்ளாதது ஏன்? இந்த விடயம் வவுனியா நகரத்தில் வசிப்பவர்கள் உட்பட பலருக்கு நன்கு தெரியும்.... வேடிக்கை என்னவென்றால் வன்னி அயிட்டத்தை மடக்குவம் என்ற வெளிமாவட்டங்களிலிருந்து கூட பலர் படையெடுத்திருந்தார்கள். இவ்வாறான விடயத்திற்கு என்றே பல வீடுகள் இருந்தன. பல இசுலாமிய தமிழ் இளைஞர்கள் புலானாய்வாளர்கள் என்ற போர்வையில் பேருந்து நிலையத்தில் பெண்களை அச்சுறுத்தி பாலியல் தேவைக்கு அழைத்து சென்ற போது ஏன் இந்த ஊடகங்கள் வாய் மூடியிருந்தன?

வவுனியா பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னாள் ஏ9 வீதியில் தரனி ரெஸ்ட் என்ற விடுதி இருக்கின்றது. இங்கு தான் முகாம்களில் இருந்து அழைத்துவரப்பட்ட பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தப்பட்டது.அச்சுறுத்தி அழைத்துவரப்பட்டவர்களை விட ஏமாற்றி அழைத்து வரப்பட்டவர்கள் தான் அதிகம். இந்த ஏமாற்று வேலையை அதிகம் செய்தவர்கள் மறத்தமிழர்கள் தான். பொலிஸ் இராணுவ ஆசிர்வாதம் இன்றி இந்த விடயம் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விடயங்கள் சில தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

ஒட்டு மொத்தத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நலிவுற்ற பெண்களை வன்னி அயிட்டங்கள் என்று கொச்சைபடுத்தி தமிழ் சமூகம் மானபங்கபடுத்திய போது யாரும் கண்டு கொள்ளாதது ஏன்? வன்னியில் இருந்து யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி அந்த சூழலில் வாடகை அறைகளில் தங்கியிருந்த மாணவிகளை அறை உரிமையாளர்களும் சுற்று வட்டாரமும் எண்ணத்தினாலும் பார்வையினாலும் மானபங்க படுத்தியதை யாரும் கண்டு கொள்ளாதது ஏன்?

ஒட்டுமொத்தமாக யுத்தத்திற்கு பின் தமிழ் பெண்களை இராணுவத்தை விட தமிழ் சமூகம் தான் அதிகமாக மானபங்கபடுத்தியது. மிக கேவலமான முறையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை மானபங்க படுத்திய தமிழ் சமூகம் அதனை கண்டுகொள்ளாத ஊடகங்கள் அரசியல் தலைமைகள் இன்று மீண்டும் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களை மானபங்கபடுத்தி குறுக்கு வழியில் இலாபம் தேட முனைகின்றார்கள்.

யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது அடித்தட்டு மக்கள் தான். இன்று யுத்தத்திற்கு பிந்திய 5 ஆண்களில் புதிய நடுத்தர வர்க்கம் ஒன்று உருவாகியுள்ளது. இவர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை அதிகம் இருக்கின்றது. ஆனால் அதை மறந்து வெளிநாடுகளில் குடியேறுவது தொடர்பாக தான் அவர்கள் சிந்திக்கின்றார்கள். அவர்களை தட்டியெழுப்பி சமூக கடமையை ஆற்ற நிர்பந்தம் செய்ய வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் உண்டு. அதை செய்வதை விடுத்து அப்பாவி அடிதட்டு மக்களை மானபங்க படுத்தி வெற்றி பெற எத்தணிக்க கூடாது.

இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைந்ததிற்கு விசனம் வெளியிடுபவர்கள், இதே இராணுவம் தங்கள் முகாம்களில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் பெண் மாணவிகளுக்கு பயிற்சி வழங்கும் போதோ அல்லது ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி இராணுவ பதவி வழங்கும் போதோ அல்லது அவர்கள் பயிற்சிகளில் காயமுறும் போதோ மனஉளைச்சலுக்கு ஆளாகும் போதோ இவ்வாறான செய்திகள் வருவதில்லை. ஏனென்றால் இந்த நடுத்தரவர்க்க சிந்தனையாளர்களுக்கு தான் மானமும் கற்பும் உரியது. அடித்தட்டை சேர்ந்தவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை. எதை சொல்லியும் அவர்களை கொச்சை படுத்தலாம். 

உண்மையில் இராணுவத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது ஊர்ஜிதம் என்றால் மக்கள் பிரதிநிதிகள் என்று நூற்று கணக்கில் இருப்பவர்கள் நியாயம் கிடைக்கும் வரை சத்தியாகிரக போராட்டம் ஒன்றை இராணுவ முகாமின் முன்னாள் ஆரம்பிக்கட்டும். நீங்கள் தைரியமாக இறங்கினால் மக்கள் பின் தொடர்வார்கள். அதற்குரிய வேலைகளை செய்வதை விடுத்து விட்டு ஊடகங்கள் இவ்வாறு செய்தி பரப்பி இலாபம் தேடும் ஈனபிழைப்பை நடத்த கூடாது.

 

Email - pazlarichard@gmail.com

Link to comment
Share on other sites

அருமையான பதிவு நன்றி அக்கா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அனுராதபுரத்திலும்.. பொலநறுவையிலும்.. சிங்கள இராணுவத்திற்காக கோத்தா.. விபச்சார மையங்களை திறந்து வைச்சு சிங்களப் பெண்களை கூலிக்கு அமர்த்தியதைப் பற்றியும் எழுதலாமே. அதற்காக இப்போ தமிழ் பெண்களை பயன்படுத்துவதை தட்டிக் கேட்க ஊடகங்கள் முனைந்தால்.. இவருக்கு ஏன் கொதிக்குது..???! இவர் என்ன சிங்களவனுக்கு தமிழ் பெண்களை பிள்ளை பிடிச்சுக் கொடுக்கிறாரோ. இந்தியப் படைகள் இருந்த போதும்.. இதைத்தானே செய்தார்கள். அப்புறம்.. குழிகளில் இருந்து.. தமிழ் பெண்களின் எலும்புக் கூடுகளை தான் மீட்க முடிந்தது.

 

ஆர்ப்பாட்டம் நடத்தி சிங்கள மக்களே இராணுவத்திற்குப் போன.. தங்கள் பிள்ளைகளை மீட்க முடியாது.. ரகசியமாக மத்திய கிழக்கிற்கு அனுப்பும் உண்மைகளை இவர் அறியாமல் உளறுகிராரா.. அல்லது சிங்கள இராணுவத்தின் இந்த தமிழ் விபச்சார ரெஜிமெண்ட் உருவாவதை இவர் வரவேற்கிறாரா..???!

 

ஏதோ ஆர்ப்பாட்டம்.. உண்ணாவிரதம் இருந்தால்.. அதை எல்லாம் மதிக்கும் தன்மை சிறீலங்காவில் உள்ளது போல எல்லோ இவர் காட்ட வெளிக்கிடுறார். சிறீலங்காவில்.. சாத்வீகப் போராட்ட வடிவங்கள் சாகடிக்கப்பட்டு கன காலம் ஆச்சு. முதலில நீங்கள் நித்திரையால எழும்பிட்டு.. ஊடகங்களை திட்டுங்கோ.

 

சிங்கள இராணுவம் எவ்வளவு ஆபத்தானது என்பதைத் தெரிந்தும்.. அதற்கு கிழக்கிலும் வடக்கிலும் பெண்களை ஆட்பிடிச்சு சேர்ப்பவர்கள் யார் என்று பார்த்தால்.. அதன் பின்னாலும் தமிழர்களாகிய ஒட்டுக்குழுக்களே உள்ளன. இன்று கிழக்கின் முகவர் ஒருவரும் யாழில் செய்தியாக்கப்பட்டுள்ளார். அவர்.. தன்னார்வ நிறுவனம் நடத்திறன் என்ற போர்வையில் இதை செய்கிறார். தன்னார்வ நிறுவனங்கள் நடத்துவோர் குறித்தும்.. எச்சரிக்கையாக மக்கள் இருக்க வேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளது. அவர்களுக்கும் ஒட்டுக்குழுக்கள் போல.. செயற்பட முனைகிறார்கள். சிங்களத்திடம்..சில சலுகைகளைப் பெற்றுக் கொள்ள.

 

ஏன் இராணுவத்திற்குள் இழுக்கப்படும் இந்தப் பெண்களுக்கு நல்ல முன்கூட்டிய விளக்கங்களை அளித்து அவரவர் திறமைக்கு ஏற்ப சிவில் வாழ்வுக்குரிய.. தொழில்பயிற்சிகள் அளித்து.. சிவில் வாழ்க்கையில் அவர்களை இணைக்கக் கூடாது. சிங்களப் பெண்களே இராணுவத்தை விட்டிட்டு.. மத்திய கிழக்கிற்கு ஓடும் நிலையில்.. தமிழ் பெண்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்பி.. சிங்கள இராணுவத்தின் விபச்சார தேவைகளுக்கு அவர்களைப் பயன்படுத்த அனுமதிப்பதும்.. எமது பெண்களை சோரம் போக ஊக்குவிப்பதும்..  மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமன்றி.. இது நீண்ட கால ஒழுங்கில்.. எமது இனத்திற்கு பல பாதகமான விளைவுகளை உண்டு பண்ணும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உசாத்துணை:

 

http://www.landinfo.no/asset/2321/1/2321_1.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையில் பெண்கள் இராணுவத்தில் பாலியல் தேவைக்காக வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அதை வெளிப்படுத்தி இராணுவ முகாம்களுக்கு முன் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசை அடிப்பணிய வைப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான விடயம் அல்ல. 

Email - pazlarichard@gmail.com

 

அண்ணாச்சி பறக்கும் தட்டில் நேற்றுதான் பூமிக்கு வந்திருக்கிறாரா ?
அண்ணா வணக்குமுங்கோ .............
 
பூமிக்கான உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.
Link to comment
Share on other sites

ஒரு அநியாயம் நடக்கும் போது அதனை முறையாக அணிதிரண்டு எதிர்க்கத் திராணியில்லாத நிலையில் இருக்கும் எமது ஊடகங்களும் நாமும் வெறுமனே உணர்ச்சி அரசியல் செய்ய விழைவது ஓரளவு உண்மை தான். ஆனால் ஒரு அரசு இயந்திரம் திட்டமிட்டு செய்யும் இனவழிப்பின் ஒரு பகுதியை தமிழ், முஸ்லிம் உதிரி இளைஞர்கள்/ஆண்கள் செய்யும் அநியாயங்களுடன் ஒப்பிட்டு சமப்படுத்துவது தவறானது. இதற்கு மேல் சர்வதேச ரீதியில் பெண்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளைச் சுட்டிக் காட்டி, உலகெங்கும் நடக்கும் கொடுமைகளின் ஒரு பகுதியாக இந்த விடயத்தையும் கணிப்பது இலங்கை அரசின் இனவாத முகத்தைப் பாதுகாக்கும் அல்லது முக்காடு போட்டு மறைக்க முற்படும் செயலே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தில் இணைந்த பெண்களை மானபங்கபடுத்தும் தமிழ் சமூகமும் ஊடகங்களும்

 

கருக்கலைப்பு, பாலியல் வல்லுறவு, பாலியல் சித்திரவதை இவை எதிலும் மானபங்கபடவில்லையாம். தமிழ் ஊடகங்கள் அதனை வெளியில் தெரிவித்து மானபங்கப்படுத்திவிட்டனவாம். தமிழ் ஊடகங்களின் தர்மம் பற்றி நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. ஊடகதர்மம் இன்றோ நாளையோ என்று இழுத்துக்கொண்டு தான் இருக்கின்றது. அதற்காக எல்லாவற்றையும் பொய் என்று எழுதிவிட முடியாது. 

 

அண்ணன் ஒன்றை மறந்து (அல்லது மறைத்து விட்டார்). இந்த இராணுவத்தில் நடைபெறும் தமிழ் பெண்கள் மீதான குற்றச்சாட்டுக்களை வெளிநாட்டு ஊடகங்களும் சுற்றிக்காட்டியுள்ளன. மனிதஉரிமை அமைப்புக்களும் செய்துள்ளன. 

 

சரி பொய்யான தகவலை அவர்கள் பரப்புகிறார்கள் என்றால் அவர்கள் மேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? 

 

உலகின் எந்த இராணுவமாக இருந்தாலும் சித்திரவதைகள் என்பது இல்லாது இருக்காது

 

இதன் சுருக்கம் என்னவென்றொல் "உலகில நடக்காததா இலங்கையில நடக்குது". 

எனவே கண்டும் காணாமல் இருக்க சொல்கிறார். 

 

உண்மையில் பெண்கள் இராணுவத்தில் பாலியல் தேவைக்காக வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அதை வெளிப்படுத்தி இராணுவ முகாம்களுக்கு முன் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். 

 

:D  என்னது போராட்டமா? அண்ணனை தேடின சிறுமியையே தேட வச்சிட்டாங்கள். சிங்களவனுக்கே அடி உதை என்டா தமிழனுக்கு ?!? சிறீலங்கா இன்னும் ஜனநாயக நாடு என்டு நினைப்பு போல :wub: 

 

உண்மையில் இராணுவத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது ஊர்ஜிதம் என்றால் மக்கள் பிரதிநிதிகள் என்று நூற்று கணக்கில் இருப்பவர்கள் நியாயம் கிடைக்கும் வரை சத்தியாகிரக போராட்டம் ஒன்றை இராணுவ முகாமின் முன்னாள் ஆரம்பிக்கட்டும். நீங்கள் தைரியமாக இறங்கினால் மக்கள் பின் தொடர்வார்கள். அதற்குரிய வேலைகளை செய்வதை விடுத்து விட்டு ஊடகங்கள் இவ்வாறு செய்தி பரப்பி இலாபம் தேடும் ஈனபிழைப்பை நடத்த கூடாது.

 

1504058_455730654531088_1457713808_n.jpg

 

Link to comment
Share on other sites

இந்த கட்டுரையை எழுதியவர் பல கட்டுரைகளை எழுதி முகநூலில் குவித்துள்ளார் மற்றும் மின்னஞ்சலிலும் தொடர்ந்து பரப்பப்படுகிறது. பல ஊடக அறிஞர்கள் கலைஞர்கள் இந்த நபரின் முகநூலிலும் உள்ளார்கள். ஆனால் எல்லா கட்டுரைகளும் ஏதோ ஒரு வகையில் அரசாங்கத்தை அனுசரிக்கிறதாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரையாளர் ஒரு தெளிவின்மையாகவே எல்லா கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல முரண்பாடுகள் இவரது எழுத்தில் இருக்கிறது. 
 
அடக்குமுறைக்குள் இருக்கும் இனத்தால் இவர் சொல்வது போல சத்தியாக்கிரகமோ அல்லது எதிர்ப்பையோ தமிழர்களால் வெளிப்படுத்த முடியாது. ஆனால் இவர்களது எழுத்துக்களுக்கு சரியான பதில் எழுத்தை எழுதுக்கூடியவர்கள் மறுப்புகளையும் எதிர்வினைகளையும் வைக்க வேண்டும். மக்களுக்கு விளங்காத பின்நவீன முன்நவீன விளக்கம் போலவே இவரது எழுத்துக்கள் இருக்கிறது. 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.