Jump to content

மனம் என்னும் மாயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரவு முழுவதும் அவள் தூங்கினாளா என்று அவளுக்கே தெரியவில்லை. ம் ..... கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு மூன்று மணி நேரம் தூங் கியிருப்பாளா??? நீண்ட நாட்களின் பின் மனவருத்தம், மட்டற்ற மகிழ்ச்சி,எல்லையில்லா நின்மதி என மாறி மாறி அவளை அலைக்களித்தபடிதான் அந்த இரவு நகர்ந்தது. ஆனாலும் அவளின் மனம் இத்தனை சீக்கிரம் இவ்வளவு தெளிவடையும்  என்று அவளே நினைத்துப் பார்க்கவில்லை. கடந்த காலங்களை எண்ணிப்பார்த்தபோது வரிசையாய் எல்லாம் வந்து போயின.

 

என்னிடம் என்னதான் இல்லை என்று இவ்வளவு  நாட்கள் இத்தனை கேவலப்பட்டேன்  என்று எண்ணியபோது பெருமூச்சு ஒன்றும் நீண்டதாய் வந்தது. எல்லாம் விதியின் செயல்தான் அன்றி வேறென்ன என்று மனம் நின்மதி அடைந்தது. அவனுக்கும் அவளுக்குமான நெருக்கம், இல்லை நெருக்கம் என்று சொல்வதை விட இருவருக்குமான ஒரு தேவை, மனப் பகிர்வு இருவருக்குமே தேவைப்பட்டதாகவே அவள் எண்ணினாள். அவளது பயித்தியக்காரத்தனமான ஆசைகளை தானே தனக்குள் நியாயப்படுத்தியும் இருக்கிறாள். எனக்கு என் கணவன் மேல் அன்பு இருக்குத்தானே. அதனால் இது துரோகமாகாது என்றுகூட எண்ணியிருக்கிறாள். அவனின் வார்த்தைகளில் மயங்கி வார்த்தைகளுக்காகவே அவனுடன் கதைக்கும் நேரங்களுக்காக மணிக்கணக்காக காத்திருந்து தான் வீணாக்கிய நேரங்களை எண்ணினால் இப்பொழுது சிரிப்பாகவே இருக்கிறது.

 

நேற்று நடந்ததை எண்ண ஒருகணம் உடல் அதிர்ந்து மீண்டும் சமநிலை கொள்கிறது. கடந்த நாட்களாக அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு இல்லாமல் இவள் தூக்கம் தொலைத்து பயித்தியக்காரிபோல் தான் ஆகிப் போனாள். தொலைபேசி கூட வேண்டாம். ஒரு செய்தியை எழுதி அவளை சமாதானப் படுத்தக்கூட அவன் முயலாதது அவளை எதை எதையோ எண்ண வைத்தது.

 

அவன் மட்டும் என்னை இப்படியே விட்டுவிட்டால் நிட்சயமாக நான் இறந்து விடுவேன் என அவள் மனம் உறுதியாக நம்பியது. மற்ற எதைப்பற்றியும் எண்ணிப்பார்க்காத அவளின் சுயநலம் கண்டு அவளுக்கே வெறுப்பும் ஏற்பட்டது. காலையில் எல்லாம் அவனுடன்  இரண்டு நிமிடமாவது பேசி அவன் முகத்தைப் பார்த்த பின்னர்தான் அவளுக்கு வேலையே ஓடும். அப்படிபட்டவன் மூன்று நாட்களாக இவளுடன் பேசாது எதுவும் எழுதாது இவளை அசட்டை செய்வது இவளால் தாங்க முடியாததாகி, எத்தனை தரம் அழுதிருப்பாள் என்று எண்ண முடியாது அழுகையில் கழித்தாள்.

 

இவள் தன் தொலைபேசியில் செய்திகளை மன்றாட்டமாக அனுப்பிக்கொண்டே இருந்தாள் அவனை ஒருமுறை தன்னும் தன்னுடன் கதைக்கும் படி. இனி எழுதி என்ன செய்வது. என்னை இப்படி வெறுக்கும்படி என்ன செய்தேன் என்று தானே தன்னைக் கேட்டும் பதில் கிடைக்கவில்லை. நேற்று கணவன் இவளை அவதானித்துவிட்டான். உனக்கு என்ன பிரச்சனை என்றான் முதல்லில். இவளுக்கு நெஞ்சு பயத்தில் திடுக்கிட்டதுதான் எனினும் அவனுக்கு முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் எனக்கு என்ன பிரச்சனை வரப்போகிறது என்று அடித்து அமர்த்திவிட்டாள். அவனும் விடவில்லை. உன்னுடன் இத்தனை நாள் வாழ்கிறேன். எதையோ பறிகொடுத்தது போல் இருக்கிறாய். முகம் எல்லாம் வீங்கின மாதிரி இருக்கு.  என்ன என்று சொல்லு என்றான். ஒரு நிமிடம் எல்லாவற்றையும் கணவனிடம் கூறிவிடுவோமா என்று எழுந்த சுய பட்சாதாபத்துடன் கூடிய எண்ணத்தை  மறுகணமே அடக்கிக் கொண்டாள்.

 

பாவம் கணவன். இப்ப எதோ சாதாரண விடயம் என்று கூறச் சொல்கிறான். நான் கூறினால் அவனால் தாங்க முடியுமா ??? ஒரேயடியாய் என்னை விட்டுவிட்டுப் போய் விடுவான். அதன் பின் அவளின் நிலை???? ஊரெல்லாம் விடயம் தெரிந்து, அவளைப் போற்றுபவர்கள் எல்லோருமே காறித் துப்புவார்கள் என்று எண்ணியபோதே மனம் நடுங்கியதுதான். ஆனாலும் மற்றவனைத் தூக்கிப் போட மனம் இடங்கொடுக்கவே இல்லை. இப்படியான உறவுகள் கட்டு இல்லாத கிணற்றின் கரையில் நடப்பது போன்றது என்பதை அவள் உணரவே இல்லை. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். எங்கு பார்த்தாலும் இப்படியான விடயங்கள் கடைசியில் இரு பக்கத்திலும் பலத்த சேதாரத்தைத்தான் கொண்டுவர முடியும் என்பது தெரிந்தும் அவள் மனம் அவனிடமிருந்து மீளவே இல்லை.

 

அடிக்கடி தொலைபேசியை எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள். வேலை முடிய என்னுடன் கதைத்துவிட்டுப் போகிறீர்களா என்று இவள் அனுப்பியிருந்த செய்திக்கு, அவன் போட்ட பதில் வெறும் M என்ற வார்த்தை தான். அது அவளை அந்தரத்தில் பறக்க வைத்தது. மூன்று நாட்களின் தவிப்பு அடங்கப் போகிறது. அவனுக்கு என்மேல் கோபம் எதுவும் இல்லை என்று தன்னுக்குள் மகிழ்வடைந்தவளாக நேரத்தைப் பார்த்தாள். இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது. அவளின் வேலை நேரம் முடிவடைந்து விட்டது. அவள் பேருந்து எடுத்து வீட்டுக்குப் போய்ச் சேர ஒரு மணித்தியாலம் ஆகிவிடும். அவன் இவளுடன் பேசப்போவது வெறும் பத்தோ பதினைந்தோ நிமிடங்கள் தான். ஆனாலும் அதுவே அவளுக்கு நாள்முழுவதும் என்ன அடுத்தடுத்த நாட்களுக்கும் போதுமானதாக இருந்திருக்கிறது.

 

வாகன நெரிசலும் பேருந்தின் நெரிசலிலும் அவனுடன் நின்மதியாகக் கதைக்க முடியாது எனத் தோன்ற பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குள் புகுந்து அத்தனை துணிகளையும் ஒன்றும் விடாது புரட்டிப் பார்த்தாள். பெரிய கடை என்றதனால் யாரும் இவளை அசட்டை செய்யவில்லை. நேரம் குறைந்துகொண்டுவர மனம் அவன் குரல் கேட்கத் தயாரானது. இதோ அவன் அழைக்கிறான். ஸ்கைப்பில் ஹெட்போன் பொருத்தி தயாராக இருந்தவள் பதட்டமானாள். அவளுக்கு அவன் குரல் கேட்கவில்லை. மீண்டும் அவன் அடித்தபோதும் அதே நிலை தான். ஸ்கைப் வேலை செய்யாவிட்டால் போன் செய்யவென்று இன்னொரு தொலைபேசியும் தயாராவே வைத்திருந்தாள். அதில் அவனுக்கு போன்செய்ய அவனின் தொலைபேசி பிசி என்று கூறி இவள் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்தது. நான் எடுக்கிறன் என்று பதில் அனுப்பினாள். அவனிடமிருந்து திங்கள் மாலை எடுக்கிறேன் என்ற வரிகளோடு செய்தி வந்தது. இன்று வெள்ளிக் கிழமை. திங்கள் என்றால் இன்னும் மூன்று நாட்களா??? என்னும் பரிதவிப்பு ஏற்பட மீண்டும் மீண்டும் அவனுடன் தொடர்பு கொண்டாள். அவன் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதை தொலைபேசியின் செய்தி சொல்லியது. மாறி மாறி இரு தொலை பேசிகளிலும் அடித்தும் எந்தப் பயனும் இல்லை.

 

என்னை வேண்டுமென்றே இவன் தவிர்கிறானா??? ஒரேயடியாக என்னை கைவிட்டுவிடப் போகிறானா ??? அவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டதா ??? ஏன் என்னைத் தவிர்க்க வேண்டும். இத்தனை நாட்களில் இப்படி அவன் செய்ததே இல்லையே. அவனுடன் கதைக்காது எப்படி உயிர் வாழப்போகிறேன் என்றெல்லாம் மனம் ஏதேதோவெல்லாம்  எண்ணி ஓலமிட்டுப் பேதலித்தது.

 

இவளுக்கு ஏமாற்றம் கோபம் எல்லாம் சேர்ந்து அழுகையை வரவழைத்தன. பொது இடம் என்றுகூடப் பார்க்காது பலத்து அழ ஆரம்பித்தாள். எங்கு நிற்கிறோம்  என்ன செய்கிறோம் என்றெல்லாம் அவளுக்குப் புரியவே இல்லை. கடைச் சிப்பந்திப் பெண் வந்து இவள் தோளைத் தொட்டு உனக்கு ஏதும் வருத்தமா என்று கேட்டபோதுதான் இவளுக்குச் சுய நினைவு வந்தது. கடகடவென கடையை விட்டு வெளியே வந்தவளுக்கு மூளை மரத்துப்போனது போல் உணர்வு ஏற்பட்டது. எங்கே போகிறோம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வீதியில் இறங்கினாள்.

 

காது கிழியும் கோர்ண் சத்தங்கள். இவள் சுய நினைவு வரப்பெற்றவளாக தலையைத் திருப்பினால், பயத்தில் இதயம் வேகமாக அடிக்க மனதில் உறை நிலை அதிர்வுகள் ஏற்பட்டது. கையிலிருந்த பை அதிர்ச்சியில் கீழே விழ இன்னும் வினாடி நேரத்தில் நான் இறந்துவிடுவேன் என குரல் ஒன்று காதில் நாராசமாக ஒழிக்க அப்படியே அசைவற்று  நின்றாள் அவள்.

 

அவளை அப்படியே பற்றி இழுத்தது ஒரு கை. அதன் பின்னரே சுய நினைவு வரப்பெற்று பார்த்தாள் அவள். ஒரு கறுப்பினப் பெண்மணி இவளை இழுத்து வீதி ஓரத்தில் விட்டுவிட்டு வீதியில் விழுந்த இவளது  கைப்பையை எடுத்துவந்து இவள் கைகளில் கொடுத்து என்ன மை சயில்ட். என்ன பிரச்சனை உனக்கு என்று இவளை கைகளை பிடித்து கூட்டிப் போய் அண்மையில் இருந்த பஸ்தரிப்பு நிலையத்தில் அமரவைத்தாள். அதன் பின் தான் இவள் திரும்பிப் பார்த்தாள். அரை அடி தூரத்தில் இருந்த விளக்குக் கடவையில் அந்த ஜீப் மோதி நிற்க பின்னால் வந்த இரு கார்கள் அடுக்கடுக்காய் ஒன்றுடன் ஒன்று மோதி வாகனங்கள் மூன்று இவளின் கண்மூடித்தனத்தால் நாசமாகி இருந்தன.

 

ஜீப் காரன் கூட அதிர்ந்துபோய் இருந்ததாகவே இவளுக்குப் பட்டது. அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லையா என்று இவள் அந்தக் கிழவியைக் கேட்டாள். நல்ல காலம் யாருக்கும் ஒன்றும் நடக்கவில்லைப் போல் தெரிகிறது. எதோ உன் அதிட்டம் உயிர் தப்பினாய் என்றுவிட்டு டேக் கேர் என்று கூறியபடி வந்த பஸ்ஸில் ஏறிச் சென்றுவிட்டாள்  அவள். அவர்களில் மூன்றாவது கார்க்காரன் மாடும் இவளைப் பார்த்து எதோ எல்லாம் திட்டினான். இவள் எந்த உணர்வுமின்றிப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

 

அடுத்த பஸ் வர இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கின்றது என எண்ணியபடி பார்வையைத் திருப்பியவள் தனக்குப் பக்கத்தில் அந்தக் கிழவி இருந்த இடத்தில் ஒரு SCRATCH CARD இருப்பதைக் கண்டதும் கைகளில் எடுத்துப் பார்த்தாள். அது இன்னும் சுரண்டிப் பார்க்கப்படாமல் புதிதாகவே இருந்தது. பாவம் அந்தப் கிழவியினுடையதாய்த்தான்  இருக்க வேண்டும். என்னுடன் கதைத்துவிட்டுக்  கைதடுமாறி வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள்.  நாளை வரும் போது கண்டால் கொடுப்போம் என எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டாள். அவள் இருந்த மனநிலையில் அவளுக்கு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்றே இருந்தது.

 

வீட்டுக்கு வந்தபின் மனம் அவனால் ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்தும் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தும் முற்றாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் சமநிலை அடைந்திருந்தது. அவன் திங்கள் போன் செய்கிறேன் என்றுதானே எழுதினான். நான் ஏன் என்னிலை மறந்து வீதிஎன்றும் பாராது அழுது என்னை நானே கேவலப்படுத்திக் கொண்டேன் என வெட்கமும் வந்தது. தொலைபேசி அடிக்க, எடுப்பதற்கு முன்னர் நின்றும் விட்டது. யார் என்று பார்ப்பதற்காக தொலைபேசியை எடுக்க, அந்த ஸ்க்ராட்ச் காட்டும் சேர்ந்து விழுந்து இவளைப் பார்த்துச் சிரித்தது. சரி வீதியில் கிடைத்தது. யாரும் உரிமை கொண்டாடலாம் தானே. அந்தக் கிழவியின் காட் தான் என்று என்ன நிட்சயம் என்று எண்ணியபடி காட்டை சில்லறைக் காசை எடுத்து சுரண்டியவளுக்கு மயக்கம் வராத குறை. 

 

என்ன செய்வது எது செய்வது என்று மனம் படபடக்கத் தொடங்க, அவனின் இலக்கங்களைத்தான் கைகள் முதலில் அழுத்தின. அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராது போக, அவள் மனம் கொந்தளிப்புக்களின் வீரியத்தைத் தாங்க முடியாது தனக்கிருக்கும் ஒரே நம்பிக்கையானவன் கணவன் மட்டுமே என எண்ணி மனம் தெளிவடைய, யாரோ ஒருவனுக்காக இறந்து போயிருந்தால் என் குடும்பம் அனாதையாகி நடுத்தெருவில் நின்றிருக்குமே என எண்ணி மனதைத் துடைத்தவளாக கணவனுக்கு போன் எடுத்து தன் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டதுமன்றி மனதுள் ஒரு தெளிவான தீர்மானத்தையும் எடுத்துக்கொண்டாள்.

 

 

யாவும் கற்பனை :D

 

Link to comment
Share on other sites

கணவனை ஏமாற்றியது போக முன்று வாகனங்களுக்கும் சேதாரம்.. :huh: ஒரு பெண் தனது வாழ்க்கையில் நான்கு ஆண்களின் உயிரை எடுப்பாளோ?? :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவனை ஏமாற்றியது போக முன்று வாகனங்களுக்கும் சேதாரம்.. :huh: ஒரு பெண் தனது வாழ்க்கையில் நான்கு ஆண்களின் உயிரை எடுப்பாளோ?

 

 

மிச்சம் ???? ஆருக்குத் தெரியும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் கிடக்கிறான்... விடுங்கள்!

 

அந்த' ஸ்கிராட்ச்' கார்ட்டைப் பற்றிக்கதையுங்கள்! :D

 

நல்ல வேளை...கார்ட் சுரண்டி மயங்கிப்போகாதது.....!

 

இல்லாவிட்டால் இன்னும் எத்தனை சேதாரமோ! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாவும் கற்பனை எண்டு போட மறந்திட்டன். இனி ஆளாளுக்கு என்ன என்னவோ கற்பனை செய்யப் போகுதுகள். :D:lol: :lol:

 

கதையில் வரும் யாவும் கற்பனையே

Link to comment
Share on other sites

புதிய பஞ்சாங்கம். பழைய உணர்வுகள். கற்பனையிலும் பண்பாடுகள் மாறுவதற்குச் சிரமப்படுகிறது. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் ஒரு விடையத்தைப் பற்றி எழுதினால் அதனால் ஏற்படும் விமர்சனங்களையும் ஏற்க வேண்டும் அக்கா..இது பொது வெளி வேறு..என்னைப் பொறுத்த மட்டில்  ஆண்,பெண் நட்போ இல்லை பழகுதலோ தப்பு என்று சொல்ல மாட்டேன்..அதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்...

 அன்றாடாம் நாங்கள் வெளியில் வெளிக்கிட்டால் வேலை இடங்களில் பொது இடங்களில் ஒரு ஆணோடு கதைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் கூனிக் குறிகி நிற்க கூடாது.

 

அதே நேரம் வீட்டில் ஒரு துணைவர் என்று இருக்க அவரை மீறி இன்னும் ஒருவரோடு பழகுவது அவ்வளவு உசிதமானது அல்ல...கணவருக்கும்,மனைவிக்கும் தெரியக் கூடியதாக எத்தனையோ பேர் கூடப் படித்தவர்கள்,பழகியவர்கள் என்று வாழ்க்கை பூரா நல்ல உறவைப் பேணும் இதயங்களும் இருக்கிறார்கள்.பழகும்வரை நல்ல உறவுகளாக யாருக்கும் எந்த விதக்களங்கதையும் ஏற்படுத்தாதவர்களாக இருந்தால் அதுவே யாரையும் பாதிக்காது.

Link to comment
Share on other sites

யாவும் கற்பனை எண்டு போட மறந்திட்டன். இனி ஆளாளுக்கு என்ன என்னவோ கற்பனை செய்யப் போகுதுகள். :D:lol: :lol:

கதையில் வரும் யாவும் கற்பனையே

நாங்கள் நம்புகிறோம், நீங்கள் சொல்லிவிட்டீர்கள் நம்பிதானே ஆகவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சுமே ! :D

 

நம்புனவரைத்தான் ஏமாற்ற முடியும் , நம்பாதவரை எப்படி ஏமாற்றுவதாம்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் ஒரு விடையத்தைப் பற்றி எழுதினால் அதனால் ஏற்படும் விமர்சனங்களையும் ஏற்க வேண்டும் அக்கா..இது பொது வெளி வேறு..என்னைப் பொறுத்த மட்டில்  ஆண்,பெண் நட்போ இல்லை பழகுதலோ தப்பு என்று சொல்ல மாட்டேன்..அதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்...

 அன்றாடாம் நாங்கள் வெளியில் வெளிக்கிட்டால் வேலை இடங்களில் பொது இடங்களில் ஒரு ஆணோடு கதைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் கூனிக் குறிகி நிற்க கூடாது.

 

அதே நேரம் வீட்டில் ஒரு துணைவர் என்று இருக்க அவரை மீறி இன்னும் ஒருவரோடு பழகுவது அவ்வளவு உசிதமானது அல்ல...கணவருக்கும்,மனைவிக்கும் தெரியக் கூடியதாக எத்தனையோ பேர் கூடப் படித்தவர்கள்,பழகியவர்கள் என்று வாழ்க்கை பூரா நல்ல உறவைப் பேணும் இதயங்களும் இருக்கிறார்கள்.பழகும்வரை நல்ல உறவுகளாக யாருக்கும் எந்த விதக்களங்கதையும் ஏற்படுத்தாதவர்களாக இருந்தால் அதுவே யாரையும் பாதிக்காது.

 

உண்மைதான் யாயினி. விமர்சனத்தை ஏற்கும் துணிவில் தான் இதை எழுதினேன். அத்துடன் ஒன்றைக் கவனித்தீர்களோ தெரியவில்லை. இதில் பெயர்கள் ஒன்றையும் கூட நான் சேர்க்கவில்லை. முதலில் பெயரைத்த் தெரிவு செத்ஹ்டேன் தான். இருந்தாலும்  பெயர்கள் போடாது எழுதினால் எப்படி இருக்கும் என்று ஒரு பரீடசாத்தமும் தான். ஆனால் அதை ஒருவரும் கணக்கில் எடுக்கவில்லைப் போக, ஆண்களை இரு பெண்களுடன் தொடர்பு[படுத்தி எழுதினால் வரும் வரவேற்பு பெண்விடயத்தில் கிடைப்பதில்லை. ஒன்று ஆண்களின் பயம். தன்  வீட்டுக்கானதும் மற்றவனுக்குமான பயம். இதில் வந்த ஆண்களின் எண்ணிக்கையை வைத்தே அது தெரிகிறது. கதையை கதையாய்ப்  பார்க்கும் தன்மை எம்மவரிடம் இல்லை என்பதும் மனவருத்தத்துக்கு உரியது. ஆண் பெண் உறவில் இப்படி எத்தனையோ நடக்கின்றன. நானும் நீங்களுமோ அன்றி வேறு யாருமோ இதுபற்றிச் சொல்லி ஒன்றுமே நடக்கப் போவதில்லை என்பதும் ஒன்று. அடுத்து  சமூகத்துக்கு ஒவ்வாத கதை என்பதால் இதுபற்றி பெரிதாக விமர்சிக்கவும் யாரும் வரப்போவதும் இல்லை என்பதும் தான் உண்மை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் உங்களைக் 'கர்ப்பக்கிரகத்தில்' இருத்தி வைத்துப் பூசிக்க,, நீங்கள் ஓடப்போறன் எண்டு நிண்டால், நாங்க என்ன செய்யிறது? :o

 

மூலஸ்தானத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்ட தெய்வங்கள் ஓடினால், கோவில் பாழடைந்து விடும்! :icon_mrgreen:

 

அலங்கார மூர்த்திகள் ஓடட்டும், அதைப்பற்றி கவலையில்லை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நம்புகிறோம், நீங்கள் சொல்லிவிட்டீர்கள் நம்பிதானே ஆகவேண்டும்

 

நான் சொன்னால் உடனே நம்பிவிடுவதா??? திரும்பக் கேள்வி கேட்டால் அல்லோ சுவாரசியம் ஆரணி.

நாங்கள் உங்களைக் 'கர்ப்பக்கிரகத்தில்' இருத்தி வைத்துப் பூசிக்க,, நீங்கள் ஓடப்போறன் எண்டு நிண்டால், நாங்க என்ன செய்யிறது? :o

 

மூலஸ்தானத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்ட தெய்வங்கள் ஓடினால், கோவில் பாழடைந்து விடும்! :icon_mrgreen:

 

அலங்கார மூர்த்திகள் ஓடட்டும், அதைப்பற்றி கவலையில்லை! :D

 

நான் எல்லாம் ஓடுற கூட்டத்தில் அடங்க மாட்டன் புங்கை. நெடுக ஒரே மாதிரி எழுதி போரடிச்சுப் போச்சு அதுதான் .... :lol:

 

அந்தப் பெண்ணு ஏன் ஆத்துக்காரரை ஏமாத்திக் கொண்டு இருந்தாங்க? 

 

அது அந்தப் பெண்ணைத்தான் கேட்கவேணும். கண்டால் கேட்டுவிட்டு சொல்லுறன் அஞ்சலி :D

 

புதிய பஞ்சாங்கம். பழைய உணர்வுகள். கற்பனையிலும் பண்பாடுகள் மாறுவதற்குச் சிரமப்படுகிறது. :o

 

பழசோ புதிசோ உணர்வுகள் எப்போதும்  ஒன்றுதானே பாஞ்ச்

 

Link to comment
Share on other sites

கதை நன்று. இந்த உணர்வுகளின் ஊற்றுக்கும் உறக்கத்திற்கும் இன்னும் அழுத்தம் தேவை.  :D

Link to comment
Share on other sites

யாவும் கற்பனை :D

 

இவ்வளவு தூரத்துக்கு காதால் ரத்தம் வடிய பண்ண உங்களால் மட்டுமே முடியும்  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த சோழியன், கோமகன் இருவருக்கும் நன்றி.


யாவும் கற்பனை :D

 

இவ்வளவு தூரத்துக்கு காதால் ரத்தம் வடிய பண்ண உங்களால் மட்டுமே முடியும்  .

 

உண்மையைச் சொன்னாலும் விடுறியள் இல்லை. :D:lol:
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.