Jump to content

பெண்போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாம்


Recommended Posts

லண்டன் மாப்பிளை றாம்
 
லண்டன் மாப்பிளைக்கு ஆசைப்பட்டு காசையும் இழந்து நடுத்தெருவில் பொலிசில் பிடிபட்டு நடுத்தெருவில் நிற்கும் பெண்ணின் கதை இது
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் பெயரில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருவதனால் தமிழ் பெண்களும் இளைஞர்களும் மிகவும் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்
யுத்தம் நிறைவடைந்த பிற்பாடு விடுதலை புலிகள் இயக்கத்தின் பெயரில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருகிறது. இதற்கமைய கடந்த மே மாதம் 31 ஆம் திகதி மானிப்பாய், கோப்பாய் ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு கிடைத்த விஷேட தொலைபேசி அழைப்பினூடாக இலங்கை பெண்ணொருவரின் தொலைபேசி இலக்கத்தினை குறிப்பிட்டு குறித்த பெண் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர் எனவும் அப்பெண்மனி பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல் விடுக்கப்பட்டது.
குறித்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டமைக்கு அமைவாக அவ்வழைப்பு லண்டன் நகரிலிருந்து வந்துள்ளது. அத்தோடு கிடைக்கப்பெற்ற இலங்கை பெண்ணின் தொலைபேசி இலக்கம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட போது வல்வெட்டித்துறை பிரதேசத்தினை சேர்ந்த பெண் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் லண்டனிலிருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு தொடர்பில் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது அது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என்றார். இதற்கமைய குறித்த பெண்ணின் தொலைபேசிக்கு கிடைத்த அழைப்பு தொடர்பில் பரிசீலனை செய்த போது அப்பெண்ணிற்கு கிடைத்த அழைப்புகளில் லண்டனிலிருந்து தொலைபேசியினூடாக தகவல் கொடுத்தவரின் இலக்கமும் காணப்பட்டது.
இந்த தொலைபேசி இலக்கம் தொடர்பில் அப் பெண்ணிடம் விசாரணை செய்த போது தனது திருமணத்திற்காக இணையத்தளமொன்றில் விளம்பரமொன்று பிரசுரித்ததாகவும் குறித்த விளம்பரத்தினை பார்த்த லண்டனிலுள்ள ஒருவர் தன்னை திருமணம் செய்ய தயார் எனவும் அதற்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் ருபாவினை இலங்கையிலுள்ள வங்கியொன்றினூடாக தனக்கு அனுப்பி வைத்தால் லண்டனிலேயே திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றாராம்.
இதற்கமைய குறித்த பெண் அப்பணத்தை லண்டன் நபரினால் வழங்கப்பட்ட கணக்கொன்றிற்கு அனுப்பியுள்ளார். இருப்பினும் அப் பெண்ணை லண்டனுக்கு அழைத்து செல்லவில்லை எனவும் இது தொடர்பாக அந்த நபரிடம் தொலைபேசியினூடாக தொடர்பு கொண்ட போது தன்னை அச்சுறுத்தியதாகவும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை மேற்கொண்டால் பின் விளைவுகள் மோசமாக இருக்குமென அச்சுறுத்தியுள்ளார்.
இதேவேளை இலங்கை வங்கியொன்றின் கணக்கு இலக்கத்தின் உரிமையாளர் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட போது முன்னாள் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த 36வயதுடைய வேலாயுதம் பிள்ளை சுதத் என அறிய கிடைத்தது. இதற்கமைய முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த சுதத் நேற்று முன்தினம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை பிரிவிடம் அழைத்து வரப்பட்டார்.
ஆகவே இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் தமிழ் பெண்களும் இளைஞர்களும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.
canadamirror
 
 
வன்னிமைந்தனுக்கு ஆதாரம்.
Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இத மாதிரி கேணத் தனமான செய்தி வேற ஒன்றுமில்லை.இதற்கும் ராம் தான் காரணமா? ஆதாரம் எங்கே?...இப்படியான செய்திகளால்ல் உண்மையான செய்தியும் அடிபட்டு போகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத மாதிரி கேணத் தனமான செய்தி வேற ஒன்றுமில்லை.இதற்கும் ராம் தான் காரணமா? ஆதாரம் எங்கே?...இப்படியான செய்திகளால்ல் உண்மையான செய்தியும் அடிபட்டு போகிறது

உங்களுக்கு விடுப்பு தேவைப்படுது.ஆனால் அதற்கு இந்த திரி உங்களுக்கு அவல் தராது.என்ன ஆதாரங்கள் சிக்கியிருக்கு எண்டது ராமின் தலைவலி, அதை இங்கு பொதுவெளியில் பகிரங்கப்படுத்துவது அவ்வளவு சமயோசிதமான செயலல்ல
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு விடுப்பு தேவைப்படுது.ஆனால் அதற்கு இந்த திரி உங்களுக்கு அவல் தராது.என்ன ஆதாரங்கள் சிக்கியிருக்கு எண்டது ராமின் தலைவலி, அதை இங்கு பொதுவெளியில் பகிரங்கப்படுத்துவது அவ்வளவு சமயோசிதமான செயலல்ல

ராமை பொது வெளி அடையாளப்படுத்துவது சமயோசிதமில்லை என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு இப்படியான செய்திகளை கொண்டு வந்து போடுகிறீர்கள்?...ஒன்றை நிருபீக்க வேண்டும் என்டால் ஆதாரத்தோட எழுதுங்கோ இல்லாட்டில் மூடிட்டு இருங்கள்...இங்கே ராம் நல்லவன்,கெட்டவன் என்ட விவாதத்திற்கு நான் வரவில்லை.கின்ட் செய்திகள் என்டால் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் மு.புத்தகத்தில் எழுதிக் கொள்ளுங்கோ.இஞ்ச என்னத்திற்கு கொண்டு வந்து போடுறீங்கள்?...கடைசியாக அவமானம் இணைத்த செய்திக்கும்,ராமுக்கும் என்ன சம்மந்தம் என்டு கேட்டால் தெரிந்தால் எழுதுங்கோ.தெரியாட்டில் பேசாமல் இருங்கோ...இப்படித் தான் காலம்,காலமாய் மக்களை பேய்க்காட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்

Link to comment
Share on other sites

துஷ்பிரயோகம் செய்யப்பட்டது  தமிழ் பெண்கள்அவர்களின் அனுமதி இல்லை இத‌னால் ஆதாரங்கள் தரமுடியவில்ல....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.