Jump to content

அமெரிக்க தீர்மானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாசிக்கிறேன் :D

Link to comment
Share on other sites

  • Replies 122
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாசிக்கிறேன்  :D 

Link to comment
Share on other sites

கருத்துக்களைப் பதிந்து ஊக்கம் கொடுத்த விசுகு அண்ணா, புத்தன், நந்தன், மற்றும் மனதுக்குள் கருத்துக்களைப் பதிந்த எண்ணற்ற அன்பர்களுக்கும் நன்றிகள்..!  :D  :lol:

Link to comment
Share on other sites

பாகம் 15:

அடுத்தநாள் மேல்மருவத்தூர் பயணம். சென்னையில் இருந்து அதிக தூரம் இல்லை. ஒரு ஒன்றரை மணிநேரத்தில் சென்றடைந்துவிட்டோம் என நினைக்கிறேன்.

 

54591027.jpg

 

உள்ளே சென்று நான் அவசர அவசரமாக எனது சாமி வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டேன். பெண்மணி "அம்மா"வுக்கு பாதபூசை செய்ய வேண்டும் என்று உள்ளேயே தங்கிவிட்டார். 

 

ஒரு ஒரு மணி நேரத்தின்பின் வெளியே வந்த பெண்மணியின் முகமெல்லாம் அப்படி ஒரு பூரிப்பு. ஒரு கண்ணாடி குவளை முழுவதும் தீர்த்தம் கொண்டு வந்திருந்தார். என்னையும், வாகன ஓட்டுநரையும் குடிக்கச் சொன்னார். தீர்த்தம்தானே.. போய்ட்டுப் போகுது என்று குடித்துவைத்தேன். பிறகுதான் தெரிந்தது, அது "அம்மா"வின் பாதங்களைக் கழுவிய நீர் என்று.  :blink:  :( ஏதோ இரும்பு மனம் அமையப் பெற்றதால் வில்லங்கமாக எதுவும் நடக்கவில்லை. அந்த ஓட்டுனரோ மிகவும் மகிழ்வாக குடித்த திருப்தியில் இருந்தார்.  :huh:

 

மீண்டும் சென்னைக்குத் திரும்பியதும் அன்றைய இரவுப்பயணத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். முன்னதாக சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில் ஏறியபோது ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டிருந்தது. எனது முகச்சவரம் செய்யும் உபகரணங்கள், களிம்புகள், மீசை வெட்டும் கத்தரிக்கோல் என்பவற்றை தவறுதலாக கைப்பையினுள் (Hand luggage) வைத்துவிட்டேன். நல்லவேளையாக கத்திரிக்கோலைத்தவிர மீதி எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள். கத்திரிக்கோலையும் விட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் அது பாகிஸ்தானில் செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். :icon_idea: வட இந்திய பாதுகாப்பு அதிகாரி அதை என்னிடம் காண்பித்து 'பாகிஸ்தானில் செய்யப்பட்டுள்ளது' என்றார். ஆனாலும் என்ன.. $18 கத்தரிக்கோல் போயேபோச்சு.. :blink: அது பாகிஸ்தானில் செய்யப்பட்டிருந்தாலும் அதை அவர் குப்பையில் போடவில்லை. :huh:

 

அந்த அனுபவத்தினால், இந்த முறை எல்லா அழகுசாதனப் பொருட்களையும் :D கவனமாக பயணப் பொதியினுள் (luggage) போட்டு மூடினேன்.

 

*******************************************

 

இரவு பத்துமணி.. விடுதியின் வாடகை காரைப் பிடித்து விமான நிலையம் சென்றடைந்தோம். வாசலில் இருந்து வழக்கமான பரிசோதனைகள். பொதிகளின் எடையும் சரியாக இருந்தது. குடியகல்வு பிரிவில் கடவுச் சீட்டுகளையும், ஆவணங்களையும் பூதக்கண்ணாடி உபயோகிக்காத குறையாக பரிசோதித்தார்கள்.

 

ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு கிட்டத்தட்ட இரண்டுமணிநேர காத்திருப்பின்பின் விமானத்தினும் ஏறி அமர்ந்துகொண்டோம். விமானம் வழக்கம்போல் இந்த வழித்தடத்துக்கு உண்டான தகைமையுடன் இருந்தது. குறுகலான இருக்கைகள், கால் நீட்ட வசதிக்குறைவு போன்றவை. இந்தியர்கள் அதிகம் முறைப்பாடு செய்யமாட்டார்கள் என்பதாலா அல்லது, அதிக பிரயாணிகள் செல்லும் வழித்தடம் என்பதாலா என்று தெரியவில்லை.

 

பெண்மணிக்கு இதுதான் முதல் நீண்டதூரப் பயணம். அதனால் விமானத்தை நாம் பாவிக்க வேண்டிய முறைகள் பற்றி வாய்மொழியாகவே சொல்லிக் கொடுத்தேன். பயணத்தின்போது சிரமப்பட்டார்.

 

நான் வழக்கம்போல திரைப்படங்கள் பார்ப்பதில் நேரத்தை செலவழிக்கத் திட்டம் போட்டேன். முதலாவதாக கிராவிடி (Gravity) படத்தைப் போட்டேன். சின்னத் திரையில் பார்ப்பது சற்று சிரமம் என்றாலும் எனக்கு அந்தப் படம் பிடித்திருந்தது.

 

அடுத்ததாக ஒரு நகைச்சுவைப் படத்தைப் போட்டேன். அதில் சில பலான காட்சிகள் தெரிய ஆரம்பிக்கவே நிறுத்திவிட்டேன்.. :D அருகில் இருந்த பெண்மணி கண்டுவிட்டால் பேஜாராகிவிடுமே என்கிற முன் ஜாக்கிரதை உணர்வுதான் காரணம்.  :wub:

 

இவ்வாறாக, பலமணிநேரப் பயணத்தின்பின் ஒருவழியாக ஃபிராங்க்ஃபர்ட் விமானநிலையத்தை வந்தடைந்தோம், வரப்போகும் சத்தியசோதனையை அறியாமல். :blink:

 

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பதிந்து ஊக்கம் கொடுத்த விசுகு அண்ணா, புத்தன், நந்தன், மற்றும் மனதுக்குள் கருத்துக்களைப் பதிந்த எண்ணற்ற அன்பர்களுக்கும் நன்றிகள்..!  :D  :lol:

 

அந்த... அன்பர்களில், நானும் ஒருவன்.

 

பாகம் 15:

------

முன்னதாக சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில் ஏறியபோது ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டிருந்தது. எனது முகச்சவரம் செய்யும் உபகரணங்கள், களிம்புகள், மீசை வெட்டும் கத்தரிக்கோல் என்பவற்றை தவறுதலாக கைப்பையினுள் (Hand luggage) வைத்துவிட்டேன்.

------

*******************************************

------

இவ்வாறாக, பலமணிநேரப் பயணத்தின்பின் ஒருவழியாக ஃபிராங்க்ஃபர்ட் விமானநிலையத்தை வந்தடைந்தோம், வரப்போகும் சத்தியசோதனையை அறியாமல். :blink:

(தொடரும்.)

 

"நோட் த பாயின்ட்", உறவுகளே.....

இசைக்கலைஞன்.... மீசை வளர்ப்பவர் என்று, கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. :D

 

##########

 

ப்ளீஸ்... இசை, அடுத்த பகுதியை... இன்று வாசிக்காமல் நித்திரைக்குப் போக மாட்டேன்.

கூடிய வரையில்... இன்றே பதிய, முயற்சி எடுங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ! அது தானாகவே வளர்கிறது , இசை அதை பாகிஸ் கத்தரியால் கத்தரித்து கட்டுப் படுத்துபவர்...! :)

Link to comment
Share on other sites

பாகம் 16:

 

ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையம் ஏற்கனவே பார்த்ததுதான் என்றாலும் இந்தமுறை சற்று கூடுதலாக அவதானிக்க முடிந்தது. குறிப்பாக வட அமெரிக்காவின் ஆண்களுக்கான ஒண்டுக்கூடமும், :D ஜேர்மனியில் அதன் வடிவமைப்பும் வித்தியாசமாக இருந்தது. என்னைக் கேட்டால் ஜேர்மன்வாலாக்கள் ஒவ்வொரு சிறு விடயத்திலும் நன்றாக அலசி ஆராய்ந்து வடிவமைப்பார்கள்போல் தெரிகிறது. ஆண்களுக்கான ஒண்டுக்குப் போற சட்டியை அவர்கள் வடிவமைத்திருந்த விதம் 'கீழே சிந்தவேமாட்டாய் கண்மணியே' என்று சொல்வதுபோல் இருந்தது..  :wub:

 

ஆனால் விமான நிலையத்தில் இருந்த ஊழியர்கள் அவ்வளவு மனிதம் கொண்டவர்கள்போல் தெரியவில்லை. குடியேற்றவாசிகள் போல் இருந்த அவர்களில் சிலர் விறைச்ச கட்டைகள்போல் இருந்தார்கள். உதவி என்று கேட்டாலும் விறைச்சகட்டைகள்போல் பதில் தந்தார்கள்.  :huh:

 

ஒருவழியாக, எனது அடுத்த விமானம் புறப்படும் இடத்தை அடைந்தேன். விமானம் புறப்படும் நேரம் நெருங்குகிறது. ஆனால் எவரையும் கூப்பிடுவதுபோல் தெரியவில்லை. பெண்மணிக்கு அவதியாகிவிட்டது. 'கூப்பிடுவாங்களோ?', அங்கை போய் கேட்டுப் பார்க்கலாமோ..', 'இங்கை ஏறுகினம்போல இருக்கு..' என்று இருக்கிற குழப்பத்தை அதிகரித்துக்கொண்டிருந்தார். :huh:

 

மக்கள் அவதிப்படுவதை உணர்ந்துகொண்டு விமான நிறுவன ஊழியர்கள் ஜேர்மன் மொழியில் ஒரு அறிவித்தல் செய்தார்கள்.. 'உத்திஷ்ட ஹைமன்' என்று ஏதோ கேட்டதுமாதிரி ஞாபகம் இருக்கு...  :lol:

 

ஒருவழியாக ஆங்கிலத்திலும் அறிவித்தார்கள். அவர்களது விமானிகள் வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டார்களாம். அதனால் தாமதமாகும் என்று பொறுமை காக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள். இதைக்கேட்டு நான் என்னையறியாமலே முழியை வம்புக்கு உருட்டினேன். அதைக் கண்டுவிட்டு ஒரு ஜேர்மன்காரரும் முழியை உருட்டி சிரித்தார்.  :D

 

திடீரென்று இன்னொரு அறிவிப்பை வெளியிட்டார்கள். எல்லோரும் தங்கள் கடவுச்சீட்டையும், விமானச் சீட்டையும் கொண்டுவந்து பரிசோதனைக்கு உள்ளாக்கும்படி. நானும் போய் கொடுத்தேன். என்னுடையது எல்லாமே சரி. பெண்மணியின் கடவுச்சீட்டைப் பார்த்தாள் அந்த ஊழியம் செய்யும் பெண்.

 

"இதனுடன் ஒரு கடிதமும் வந்திருக்க வேண்டுமே..?"

 

எனக்கு குழப்பமாகிவிட்டது. இவள் என்னத்தைக் கேட்கிறாள்? கைப்பையைத் திறந்து அதில் இருந்த கோப்பு ஒன்றை எடுத்துக் கொடுக்கிறேன். அதில் பல முக்கிய கடிதங்களும், ஆவணங்களும் இருந்தன. அவற்றை எல்லாம் புரட்டிப் பார்த்தவள்..

 

"இவற்றுள் அந்தக் கடிதம் இல்லையே.." என்றாள்.

 

"இதுக்கு மேல் வேறு எதுவும் இல்லை..."

 

"இல்லை. கண்டிப்பாக வந்திருக்கும். படமும் ஒட்டியிருக்கும்.."

 

"இல்லை. இவ்வளவுதான் வந்தது என எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.."

 

அருகில் இருந்த ஆடவனிடம் பேசினாள். அந்த ஆடவனும் அந்த அத்தாட்சி உங்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்க வேண்டும் என்றான்.

 

ஆகா.. என்னமோ சிக்கிக்கிச்சே என்று யோசனை வந்தது. அடுத்த கிழமை வாக்கெடுப்புக்கு வரப்போகும் அமெரிக்க தீர்மானமும் கண்முன் நிழலாடியது.

 

சற்றுநேரம் எல்லாவற்றையும் பரிசோதித்த மங்கை, போனால்போகுது என்று ஓகே செய்துவிட்டாள். அப்பாடா என்று இருந்தது. ஆனாலும், இது முதல்கட்ட சோதனைதான் என்று தோன்றியது.

 

நேரடியாக பெண்மணியிடம் சென்றேன்.

 

"இதைவிட வேறு ஏதாவது ஆவணம் அனுப்பி வைத்திருந்தார்களா?"

 

"ஓம்.. இப்பதான் ஞாபகம் வருது. ஒரு எட்டு மாசத்துக்கு முன்னம் வந்தது. மறந்துபோய் வேறு இடத்தில் வைத்துவிட்டேன். அதனால் கொண்டுவர மறந்துவிட்டேன். அதாலை ஏதும் பிரச்சினையே..?" பெண்மணி கலவரமானார்.

 

"என்னது.. பிரச்சினையாவா?"

 

எனக்கு தலை சுற்றியதில் விமான நிலையத்தின் எல்லாப் பக்கமும் தெரிந்ததுபோல் இருந்தது. :huh: இதென்னப்பா சோதனை என்று தோன்றியது. பெண்மணிக்கும் இரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது போல் இருந்தது. தலையை ஆட்டி உச்சுக்கொட்டி தன்னைத்தானே நொந்தபடி இருந்தார். என்னுடைய உற்சாகம் எல்லாம் காற்றுப்போன பலூன்போல் ஆகிவிட்டிருந்தது. :blink:

 

(தொடரும்.)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நோட் த பாயின்ட்", உறவுகளே.....

இசைக்கலைஞன்.... மீசை வளர்ப்பவர் என்று, கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

மீசை இல்லாமலும் தமிழ் ஆண்கள் இருக்கிறார்களா? மீசைதானப்பு தமிழனுக்கு அழகு..! :)

அது இல்லையெனில் வடக்கத்தியான் மாதிரி ஆணா, பெண்ணா என இனம் காண்பது அரிதாகிவிடுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீசை இல்லாமலும் தமிழ் ஆண்கள் இருக்கிறார்களா? மீசைதானப்பு தமிழனுக்கு அழகு..! :)

அது இல்லையெனில் வடக்கத்தியான் மாதிரி ஆணா, பெண்ணா என இனம் காண்பது அரிதாகிவிடுமே?

 

நாமெல்லாம்... மீசை வளர்ப்பதில்லை. வன்னியன்.

எம்மைப் பார்த்தால், உங்களுக்கு... ஆணாக தெரியவில்லையா?

வேணுமென்றால்.... திறந்து, காட்டவும்.... ரெடி. :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமெல்லாம்... மீசை வளர்ப்பதில்லை. வன்னியன்.

எம்மைப் பார்த்தால், உங்களுக்கு... ஆணாக தெரியவில்லையா?

வேணுமென்றால்.... திறந்து, காட்டவும்.... ரெடி. :D  :lol:  :icon_idea:

 

ஓ..இன்றைக்கு வெள்ளிக்கிழமை என்பதை ஞாபகப்படுத்துகிறீர்கள்!  :D

'பாலினம்' காண அது உதவும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்..

நீங்கள் கூறுவது, கலவரம் ஏற்பட்டால் அறிய உதவும் யுக்தி. :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் கவனம் இன்றைக்கு வெள்ளிக்கிழமை

 

தகவலுக்கு... நன்றி நந்தன்.smiley_gentleman.gif

நான்.. இதை, மறந்தே போனன்.smiley_fish.gif

Link to comment
Share on other sites

பாகம் 17:

 

ஃபிராங்க்ஃபர்ட்டில் இருந்து எயர் கனடா விமானம். 777 விமானம் சும்மா கும்மென்று இருந்தது. கால நீட்ட நல்ல வசதி., இருக்கையும் அகலம். போதாக்குறைக்கு மூன்றுபேர் அமரும் ஒரு வரிசையில் நானும், பெண்மணியும் மட்டுமே. ஆயிரம் இருந்தும் என்ன.. முக்கியமான ஆவணத்தை விட்டுவிட்டு வந்த விடயம் வாட்டி எடுத்தது.

 

விமானப் பணிப்பெண்கள் கொண்டு வந்த உணவு எதையும் இருவருமே எடுத்துக்கொள்ளவில்லை. இடையிடையே தோடம்பழச்சாறு, தேனீர், தண்ணீர் என்று குடித்ததோடு சரி. படங்கள் பார்க்கும் மனநிலையும் இல்லை. பெண்மணி அந்தப்பக்கம் இருந்து உச்சுக்கொட்டியபடியே இருந்தார். என்னால் ஆனமட்டும் ஆறுதல் சொல்லிக்கொண்டு வந்தேன்.

 

*********************************

 

ஒருவழியாக, பலமணிநேரப் பயணத்தின் பின்னர் ரொராண்டோ விமானநிலையத்தை அடைந்தோம். இதயத்துடிப்பு இன்னும் அதிகமாகி விட்டிருந்தது. குடிவரவாளர்களை மூன்றாகப் பிரித்து விட்டுக் கொண்டிருந்தார்கள். தொடர்ச்சியாக அமெரிக்கா பயணிப்பவர்களுக்கு ஒரு வரிசை. கனேடியப் பிரசைகள் தானியங்கி முறையில் வெளியேற இன்னொரு வரிசை. ஏனையவர்களுக்கு இன்னொரு பெரிய வரிசை.

 

ஏனையவர்களுக்கான வரிசையில் போய் நின்றுகொண்டோம். எமது முறையும் வந்தது. குடிவரவு அதிகாரியிடம் சென்று கடவுசீட்டையும் ஆவணங்களையும் கொடுக்கிறோம். அவற்றைப் பரிசோதித்தவர், இன்னொரு பகுதிக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

 

அங்கு சென்று குடிவரவு அதிகாரிகளை சந்தித்தேன். ஆவணங்களை வாங்கியவர் தொடர்ந்தார்.

 

"இத்துடன் ஒரு கடிதம் வந்திருக்க வேண்டுமே.."

 

"அதை பிழையாக விட்டுவிட்டு வந்துவிட்டோம்.." :( என்றேன்.

 

"அடடா.. அது முக்கியமான கடிதமாயிற்றே.. எங்கே உள்ளது அது? அதை எடுக்க முடியுமா?"

 

"முடியும்"

 

"அப்படியானால், ஒரு மாதம் இந்தப் பெண்மணியை இங்கே தங்குமாறு செய்து தருகிறேன். நீங்கள் அதை எடுப்பித்துவிட்டு, நாட்டை விட்டு வெலீயேறி, மீண்டும் வாருங்கள்.." என்றார். ஏற்கனவே 22 மணித்தியாலம் பயணித்ததுக்கு இதுவா மிச்சம் என்பதுபோல் இருந்தது.

 

"எந்த நாட்டுக்குப் போய் வரலாம் இந்தப் பெண்மணி?" கேட்டு வைத்தேன்.

 

"அருகில் உள்ள அமெரிக்காவுக்குச் சென்று வரலாம்." சொன்னவர் சற்று யோசித்தார்.

 

"சில நிமிடங்கள் பொறுத்திருங்கள். இதோ வருகிறேன்.." என்றவர் தன்னுடைய மேலதிகாரியிடம் சென்று விசாரித்தார். திரும்பி வந்தவர் தொடர்ந்தார்.

 

"அந்த ஆவணங்களை இணையத்தின் மூலம் பெறமுடியுமா எனப் பார்க்கிறேன்.."

 

அப்பாடா.. புண்ணியவான் இப்பிடி ஏதாவது செய்து தந்தால் பரவாயில்லை என்று சற்று ஆறுதலாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணிநேர காத்திருப்பின்பின், பெண்மணியை அழைத்துச் சென்றார். உள்ளே சென்று புகைப்படம் எடுத்துவிட்டு சில ஆவணங்களையும் கையில் தந்து அனுப்பி வைத்தார்கள் பெண்மணியை.. நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

 

என்ன இருந்தாலும், இந்த அதிகாரிகளின் நடத்தை மிகவும் மெச்சத்தக்கது. மிகவும் புரிந்துணர்வுடனும், உதவிகரமாகவும் இருக்கக்கூடியவர்கள். மற்ற நாடுகளின் அதிகாரிகளுடன் எனக்கு இவ்வாறான அனுபவங்கள் ஏற்பட்டதில்லை. 

 

பயணப்பொதியை எடுத்துக்கொண்டு வெளியேற முற்படும்போது, சுங்கத் தீர்வையாளர் பக்கம் திருப்பிவிட்டார்கள். அடக் கண்றாவியே.. இவங்கள் வேறை போட்டு உருட்டப்போகிறார்களா என்று ஆயாசமாக இருந்தது. வரிசையில் எனது முறைக்காகக் காத்திருந்தேன். பயணப் பொதியை பூட்டிவிட்டு சாவி தொலைந்துவிட்டது என ஒரு பெண் சொல்லிக் கோடிருந்தாள். தயவு தாட்சண்யமே இல்லாமல் பெரிய அளவு குறடு ஒன்றை வைத்து பூட்டை வெட்டி எடுத்தார்கள்.

 

எனது முறையும் வந்தது.

 

"ஆயிரம் டொலர்கள் பெறுமதிக்கு என்ன எடுத்து வருகிறீர்கள்..?" கேள்வியைத் தொடுத்தாள் சுங்கப் பாவை. :D

 

"சில துணிமணிகள் வாங்கி வந்துள்ளேன். ஆனால் அவ்வளவு பெறுமதி வராது."

 

"நீங்கள்தான் இந்தப் படிவத்தில் ஆயிரம் என நிரப்பியுள்ளீர்களே.."

 

"மெல்லிய காற்றில் இருந்து அந்த எண்ணைப் பிடுங்கிப் போட்டிருந்தேன்.. (plucked out of thin air.) " என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். :blink:

 

இரண்டு வாரத்துக்குள் திரும்பி வந்தால் $800 ஐ தாண்டக்கூடாது என்றவள் எதையோ எழுதி வைத்துவிட்டு போய் வாருங்கள் என வழியனுப்பி வைத்தாள். :huh:

 

ஒரு வழியாக எல்லாத் தடைகளையும் தாண்டி வெளியே வந்தபோது மனைவியும், பிள்ளையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.. பெண்மணியைக் கண்ட அம்மணி கட்டியணைத்தார்.

 

"அம்மா..!" :(  :D

 

வீட்டுக்குச் சென்று பல கதைகள் பேசி உறக்கத்துக்குச் செல்ல வெகுநாழிகை ஆகிவிட்டிருந்தது. அடுத்த நாள் அதிகாலையில் கெல்லி, பில்லி, மாயா என்று கனவு வருமோ என்கிற சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.  :rolleyes:

 

*****************************************

 

அடுத்த சில நாட்களில் அமெரிக்க தீர்மானம் நிறைவேறிய செய்தி வெளிவந்தது. சர்வதேச விசாரணையை உள்ளடக்கியதால் எதிர்ப்பு நிலை எடுப்பார்களோ என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முடிவு நடுநிலைமை வகிப்பது என மாற்றப்பட்டிருந்தது. :huh: 25 வருடங்களாக இந்தியாவின் சுமையாக இருந்த பெண்மணியை அகற்றியதற்கான பிரதியுபகாரமே அதுவல்லாது வேறென்ன?  :lol:

 

(முற்றும்.)

 

*****************************************

 

இத்தனை நாட்களாக இந்த அறுவையைப் பொறுத்துக்கொண்டு, வாசித்தும், கருத்துக்களைப் பதிந்தும், பச்சைகளைக் குத்தியும் ஊக்கம் கொடுத்த அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி சாதித்து விட்டீர்கள். :D

Link to comment
Share on other sites

தொடரின்  நடுப்பகுதியிலேயே  அந்தப் பெண்மணி " அம்மா " என்று என்னால் ஊகிக்க முடிந்தது :D . உங்களை குழப்பாது விட்டு விட்டேன். கதைக்கு வாழ்த்துக்கள் டங்கு :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரடா அந்தப் பெண்மணி எண்டு மண்டையை உடைக்க வைத்துவிட்டேர்கள் வாசிக்கும் போது. இதே வேகத்தோட எங்கடை கதையையும் எழுதலாம் மனம் இருந்தால் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் கதைகள் கட்டுரைகள் கவிதைகள் விரும்பி படிப்பவனல்ல....ஏனோ தெரியவில்லை நாட்டமுமில்லை. அப்படியிருந்தும் இசைக்கலைஞனின் எழுத்துநடை என்னை கவர்ந்துள்ளது.
தம்பட்டமில்லாத அப்பட்டமான எழுத்துநடை.thumbup1_zps850b96f6.gif
அம்மா என்று கதையை முடித்ததும் என் நெஞ்சு ஈரமாகியது.
இன்னும் எழுதுங்கள். :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணக்கதையை முடித்த விதம், அருமை! :D

 

எழுதிய விதம்.... இசையின் பிரத்தியேக 'கங்னம்' ஸ்டையில்!

 

நாற்காலியின் ஓரத்திலிருந்து வாசித்து முடித்த தொடர்!

 

நன்றிகள், இசை!

Link to comment
Share on other sites

அப்பாடா ஒரு மாதிரி சாதித்து விட்டீர்கள். :D

அன்றொருநாள் பெண்மணியின் மகளை கட்டும்போதே சாதிச்சிட்டமில்ல...!? :icon_idea:

மிகவும் சுவாரிசமான பதிவு...பாராட்டுக்கள் இசையண்ணா. பயணம் வெற்றியில் முடிந்தது மகிழ்ச்சி :)

நன்றி தமிழினி.. மூன்று கிழமை விடுமுறை அலைச்சலில் கழிந்ததுதான் ஒரே சோகம்.. :(:D

சுபம்...! :)

அது போகப்போகத்தான் தெரியும்.. :huh::D

Link to comment
Share on other sites

தொடரின் நடுப்பகுதியிலேயே அந்தப் பெண்மணி " அம்மா " என்று என்னால் ஊகிக்க முடிந்தது :D . உங்களை குழப்பாது விட்டு விட்டேன். கதைக்கு வாழ்த்துக்கள் டங்கு :) .

நன்றி.. :D சிஐடிக்களை சுழிக்கிறது கஷ்டம்தானே.. :o:icon_idea:

Link to comment
Share on other sites

யாரடா அந்தப் பெண்மணி எண்டு மண்டையை உடைக்க வைத்துவிட்டேர்கள் வாசிக்கும் போது. இதே வேகத்தோட எங்கடை கதையையும் எழுதலாம் மனம் இருந்தால் :D

அந்தக் கதை கனதூரம் போய்விட்டுது.. :( இப்பத்தான் விட்டுக் கலைக்கிறன்.. :huh:

நான் கதைகள் கட்டுரைகள் கவிதைகள் விரும்பி படிப்பவனல்ல....ஏனோ தெரியவில்லை நாட்டமுமில்லை. அப்படியிருந்தும் இசைக்கலைஞனின் எழுத்துநடை என்னை கவர்ந்துள்ளது.

தம்பட்டமில்லாத அப்பட்டமான எழுத்துநடை.thumbup1_zps850b96f6.gif

அம்மா என்று கதையை முடித்ததும் என் நெஞ்சு ஈரமாகியது.

இன்னும் எழுதுங்கள். :)

நன்றி குமாரசாமி அண்ணை.. இதை வாசிக்க இன்னும் எழுதலாம்போலை இருக்கு.. :D

பயணக்கதையை முடித்த விதம், அருமை! :D

எழுதிய விதம்.... இசையின் பிரத்தியேக 'கங்னம்' ஸ்டையில்!

நாற்காலியின் ஓரத்திலிருந்து வாசித்து முடித்த தொடர்!

நன்றிகள், இசை!

நன்றி புங்கைசாமி.. :wub: இதை மினக்கட்டு நீங்கள் எல்லாரும் வாசித்தது மகிழ்ச்சியா இருக்குது.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.