Jump to content

16 வது அகவை காணும் யாழ்.. 26 இல் எப்படி..இருக்கும்.?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10007463_10151981058472944_146810450_n.j

 

பேப்பர் கணணியில்.. ஒற்றைப் பக்கத்தில்.. கண் இமை அசைவால்.. முக அசைவால்.. நோண்ட நோண்ட வந்து போகும்.. ஓர் அற்புதமாகக் கூட எதிர்கால யாழ் இணையம்.. இருக்கலாம்.

 

யாழ் இணையம்.. இணைய உலகில்.. தமிழ் இணைய போறம்.. (இதற்கு தமிழ்சொல் என்னென்று தெரியவில்லை. கருத்துக்களம் என்றே சொல்வோமே) வகையில்.. ஒரு முன்னோடி என்றால் அது மிகையல்ல. மேலும்.. இணையத் தமிழ் வரவின் பெருக்கத்தின் ஒரு ஆரம்ப அத்தியாமுமாக அது இருந்து வருகிறது. தமிழ் மொழி 21ம் நூற்றாண்டுச் சவால்களை சந்தித்து மெருகு பெற்று முன்னேறி நிற்க.. ஒரு சிறப்பான பங்களிப்பையும் யாழ் தான் சார்ந்த மொழிக்கு செய்துள்ளது... செய்தும் வருகிறது.

 

யாழ் கருத்துக்கள இணையத் தளமாக தோற்றம் பெற்ற 1998/99 காலப்பகுதிகளிலும் சரி.. பின்னரும் சரி.. இணைய உலகில் பல்வேறு வளர்ச்சிக்கட்டங்கள்.. மாற்றங்கள்..ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி கணணி தொழில்நுட்ப உலகிலும் பெருமளவு வளர்ச்சிகள் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்பட்டும் வருகின்றன. உலகில் அதிகம் விரைந்து கூர்ப்படையும் துறையாக இத்துறையே அமைந்துள்ளது.

 

மேலும் வலுவான.. சமூக வலைகளின் பெருக்கமும்.. இதர பொழுதுபோக்கு கணணி சார் சாதனங்களின் ஆதிக்கமும்.. இதே காலப் பகுதியில் இருந்துள்ளது. இந்தச் சவால்களை எல்லாம்.. பெரும்பாலும்.. ஒரு தனிமனிதனாக நின்று சமாளித்து.. ஒரு தமிழ் தேசிய உணர்வேந்தலுடன் கூடிய.. ஒரு இணையத்தை அதுவும் தமிழ் மொழியில்.. கொண்டு நடத்துவதென்பது.. ஒன்றும் இலகுவான விடயமல்ல. மேற்படி.. தொழில்நுட்ப காரணிகளுக்கு அப்பால்.. பல்வேறு அரசியல்.. சமூக.. பொருண்மிய காரணிகளின் தாக்கங்கள் மத்தியிலும் 16 ஆண்டுகளுக்கு.. வெற்றிகரமாக.. இதனை நகர்த்தி வருவதென்பது ஒரு மகத்தான சாதனையே. காலத்துக்கு காலம்.. தன்னையும் சூழலையும் அதில் நிகழும் மாற்றங்களையும்.. உணர்ந்து கொள்ளும் ஒரு உன்னிப்பான நுண்ணிய அவதானியால் தான்.. இதனை சாத்தியமாக்க முடியும்.

 

காலத்துக்கு காலம்.. மாறும்.. தொழில்நுட்ப விருத்தி.. மென்பொருள் விருத்தி.. வீக்கமடையும் செலவீனங்கள்.. நேரச் சுருக்கம்.. போட்டிகள்.. அழுத்தங்கள்.. இணைய ஆபத்துக்கள்.. அச்சுறுத்தல்கள் என்று எத்தனையோ சவால்களை வெளியில் இருந்தும்.. சொந்த வீட்டில் இருந்தான..நாம் அறிய முடியாத பல்வேறு அழுத்தங்கள் மத்தியிலும்.. ஒரு தனிமனிதனாக திருவாளர் மோகன் அவர்கள்.. இதனை முன்னெடுத்து வருவது இந்த முயற்சியை.. உண்மையில் வெறும் வார்த்தையில் போற்றுதல் என்பதன் ஊடாக வாழ்த்தி அமைய முடியாது. அது அதற்கும் அப்பாற்பட்டு.. ஒரு தேசிய இனத்தின் பெருமைக்குரிய அடையாளமாக அவரை முன்னிறுத்தி நிற்கிறது என்றால் மிகையல்ல.

 

இன்று வரை மோகன் அண்ணாவுக்கு தமிழ் கூறும் நல்லுலகம்.. ஒரு பாராட்டுதலை நல்கி இருக்கோ என்றும் தெரியவில்லை. தமிழ் இனத்தில்.. பல விடயங்களில் முன்னோடியாக இருக்கும் அவருக்கு.. ஒரு சரியான கெளரவிப்பு இதுவரை வழங்கப்பட்டிருக்கோ என்றும் தெரியவில்லை. அவர் அவற்றை எதிர்பார்ப்பவராகவும் என்றும் இருந்ததில்லை..! ஆனாலும்.. இதே இன்னொரு இன மக்களாக இருந்தால்.. நிச்சயம் அவரின் இந்த பங்களிப்பை மனதார வாழ்த்தி அவரை கெளரவித்தும் இருப்பர்.

 

இருந்தாலும்.. இந்த வார்த்தை ஜாலங்கள் மட்டும் அவர் தொடர்ந்து யாழை இயக்கப் போதுமானவை அல்ல. நிகழ்கால.. எதிர்கால.. சவால்களை அவர் எப்படி எதிர்கொள்ளலாம்.. (யாழுக்கு வயது கூடக் கூட மோகன் அண்ணாக்கும் கூடுது என்பதையும் கருத்தில் கொள்ளனும். இங்குள்ள கருத்தாளர்களுக்கும் கூடுது என்பதையும்.. கருத்தில் கொள்ளனும்...).. வருங்கால.. நிகழ்கால..புதிய தலைமுறை ஏற்ப தொழில்நுட்ப.. பொருண்மிய.. சமூக தேவைகளுக்கு ஏற்ப இதனை.. இன்னும் இன்னும் வெற்றிகரமாக எப்படிக் கொண்டு செல்ல உதவ முடியும்.. என்பதை ஒரு பொழுதுபோக்கும்.. சுவாரசியமும்.. கற்பனையும் அதே நேரம் எதிர்வுகூறல்களை.. எதிர்காலத்தில் நிகழ வாய்ப்பை காட்டக் கூடியதுமான.. ஒரு விபரணக் கருத்தாடலூடாக இங்கு இனங்காட்டின் அது நன்மை பயக்கும். அதற்கு உதவியாக.. உங்கள் சொந்த கருத்துக்களோடு.. படங்கள்.. காணொளிகளை.. கட்டுரைகளை.. இணைக்கலாம்.

 

இதோ.. உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அது யாழ்..அதன் எதிர்காலத்தை எதிர்கால சவால்களை சந்தித்து மிளரச் செய்ய உதவினால்.. அது நாமும் இங்கு இருந்தோம் அதனை வளர்த்தோம் என்பதற்கு ஒரு அடையாளமாகவும் இருக்கும். ஒரு காலத்தில்.. தன் மூதாதையோரை யாழ் நினைவு கூறும் போது நாமும் அதில் ஒரு சிறுபுள்ளியாக அடங்கி இருக்கலாம்.

 

எல்லோரும் ஒற்றுமையாக கூட்டாக.. முயற்சிப்போமே...!

 

இந்த இடத்தில்.. யாழ் மோகன் அண்ணாவிற்கு.. எனது சிறப்பான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு.. எதிர்காலத்தில்.. கலாநிதிப் பட்டம் ஒன்றைச் செய்யும் எண்ணம் உள்ளது. அந்தப் பட்ட ஆய்வு வெற்றியாக அமைந்தால்... அதனை மோகன் அண்ணாவுக்கு சமர்ப்பித்து.. வெளியிடுவேன் என்று உறுதி சொல்லியும் கொள்கிறேன். இது ஒரு கருத்தாளனாக நான் அவருக்கு அளிக்க விரும்பும் ஒரு கெளரவம் ஆகும். காலம் கூடி வந்தால்.. நிச்சயம்.. அதனை யாழ் உங்களுக்கு ஓர் நாள் தாங்கி வரும்.

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

உலகத்தமிழரை (அவுஸ்ரேலியா தொடக்கம் கனடா வரை) 24 மணி நேரமும் செய்திகளாலும் கருத்துக்குளாலும் இணையவைக்கும் யாழ் இணையம் பல நூற்றாண்டு வாழ்க வளர்க .. அதனை தொடங்கிய மோகன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து சேவைகளை அளிப்பவர்களுக்கும் நன்றிகள், பாராட்டுகள், வாழ்த்துகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் காலவோடை.. Yarl Timeline

யாழில் நீங்கள் ஒவ்வொருவரும்.. இணைந்த காலப்பகுதியில் இருந்து இன்று வரையான காலம் வரை உணர்ந்த மாற்றங்கள்.. ஏற்பட்ட முன்னேற்றங்கள்.. அவதானித்த பின்னடைவுகள்.. இவற்றைப் பகிர்ந்து கொள்வதோடு.. எதிர்காலத்தில்.. 2014 தொடக்கம் 2024 வரை எப்படி யாழ் உருமாறும் உருமாற்றப்படனும்.. என்ற உங்கள் எண்ணங்களையும் வெளியிடுங்கள். குறைகளை மட்டும் முன்னிறுத்தாமல்.. நிறைகளையும்.. எதிர்கால அடையக்கூடிய.. சாத்தியமான.. மிகையற்ற.. நல் இலக்குகளையும் சுட்டிக்காட்டுங்கள். அது யாழை நடத்திறவர்களுக்கும்.. நிர்வகிப்பவர்களுக்கும் உற்சாகமாக இருக்கும்.

மேலும் இவ்வாண்டில்.. யாழின் ஸ்தாபகர் மோகன் அண்ணாவிற்கு ஒரு விருதை அளித்து விரும்பியவர்களின் பங்களிப்போடு அந்த விருதுக்கு ஒரு பணப் பெறுமதியையும் நன்கொடையாக அளிக்கலாம் என்றும் பரிந்துரைக்கிறோம். எத்தனையோ மணித்துளிகளை தமிழுக்காகவும் தமிழ் தேசிய உணர்வுக்காகவும் மக்களுக்காகவும் செல்வழித்துள்ள அவருக்கு இது ஒரு ஊக்குவிப்பாக மட்டுமன்றி.. பாராட்டுதலாகவும் அமையும். உற்சாகத்தையும் அளிக்கும்.

இங்குள்ள மூத்த உறவுகள் உட்பட எல்லோரினதும் பங்களிப்பை இதில் எதிர்பார்க்கிறோம். நன்றி.

yarl timeline... யாழ் காலவோடை. (மாதிரி)

1999 - யாழ் மோகன் அண்ணாவால் யாழ் இணையம் ஸ்தாபிக்கப்படுகிறது. திண்ணையோடு யாழ் கருத்துக்களமும் உருவாகிறது. ஆரம்பத்தில்.. அனுபவம் மிக்க பலர் இணைந்திருந்தார்கள். யாழ் இணைய இதழில் தங்கள் ஆக்கங்களை பிரசுரிப்பதில் நல்ல ஆர்வம் காட்டினார்கள். மூத்த எழுத்தாளர்களும் இதில் அடங்குவர்.

yarl1999fo5.jpg

2000-

2001-

2002- யாழோடு முதல் பரீட்சையம் ஏற்படுகிறது. php போறமாக அன்று தனித்தமிழில்.. பாமினி எழுத்துருவோடு இயங்கிக் கொண்டிருந்தது. யுனிக்கோட்டு மாற்றும் முக்கிய நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ் தனக்கென வடிவமைத்த வாழ்த்து மடல்களும் பிற அம்சங்களும் இருந்தன. சுய ஆக்கங்களை யாழினூடு பிரதான இணைய முன்பகுதியில் வெளியிடும் வசதியும் இருந்தது.

yarl2002wp4.jpg

96872029bs6.png

உதவி இணைப்புக்கள்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=35396

http://www.yarl.com/kalam/

2003- யாழில் மோகன் அண்ணாவோடு.. யாழ் வாணன்.. யாழ் அண்ணாவோடு மற்றும்.. சோழியன் அண்ணா.. நாச்சிமார் கோவிலடி இராஜன் அண்ணா.. சந்திரவதனா அக்கா.. நளாயினி அக்கா.. சாந்தி அக்கா என்று எண்ணற்ற உறவுகளோடு பரீட்சையம் ஏற்படுகிறது. யாழின் முற்பகுதியில் குருவிகளுக்கு விஞ்ஞானச் செய்திகளை இணைக்கும் வசதி மோகன் அண்ணாவால் செய்யப்படுகிறது. அப்போது அவரோடு இணைந்து செயற்பட வாய்ப்பு கிடைக்கிறது. யாழ் முதல் php போறத்தில் இருந்து அடுத்த நிலைக்கு உருமாறுகிறது.மீண்டும் கள உறவுகள் யாழில் மீள் உறுப்புரிமை பெற கோரப்படுகின்றனர்.

2004- தாயகத்தில்.. கருணா என்ற காட்டிக்கொடுப்பாளனின் பிளவு யாழிலும் சிறு சச்சரவுகளுக்கு இடமளிக்கிறது. குறிப்பாக சேது இயக்கிய நிதர்சனம்.நெட் போன்ற இணையங்கள்.. திசை மாறுகின்றன. யாழின் நிர்வாகப் பொறுப்புக்களில் இளையோர் உள்ளெடுக்கப்படுகின்றனர். யாழ் அண்ணாவின் முயற்சியில்.. யாழிற்கு என்று குடில்கள்.. யாழ்.நெட் மூலம் உறவுகளுக்கு தரப்படுகிறது. அன்றைய காலத்தில்.. புளாக்கரை விட யாழ் குடில்.. கள உறவுகள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தது.

2005- ஜெயசிக்குறு புகழ்.. செம்மணிப்புதைகுழி புகழ்... யாழ்ப்பாண ஆக்கிரமிப்பு சிங்கள பேரினவாத அரசி.. சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலம் முடிவடைகிறது. யாழ் இணைய உள்ளக குடில்கள் பிரபல்யம் அடைகின்றன. உறவுகள் அங்கும் சொந்த ஆக்கங்களை பிரசுரிக்கிறார்கள். நிறைய அன்றைய இளையோர் களத்தோடு ஐக்கியமாகி இருந்தனர்.

2006 - நெடுக்காலபோவனாகி கருத்துக் களத்தில் இணைகிறோம். அடிபிடிகளோடு.. ஆரம்பமான அன்றைய நாட்கள் காரசாரமான விவாதங்களில் தொடர்ந்து. அன்றைய நாட்களில் நாங்கள் முன்வைத்த கருத்துக்களில்.. திராவிடம் என்பது போலியானது. அதன் வீழ்ச்சியில்.. தமிழ் தேசிய எழுச்சியில் தான் தமிழகத்தில் ஈழத்தமிழர் உரிமை பற்றிய உணர்வை மீள ஊட்ட முடியும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பல எதிர்ப்புக்கள் அன்று. இருந்தாலும் கொள்கை அளவில். அன்று பெரியாரையும்.. திராவிடத்தையும் புகழ்ந்து திரிந்த சீமானையும் நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால்... பின்னர் நிலமைகள் மாற்றமடைகின்றன.

2007- யாழில் காலக்கண்ணாடி என்ற பெயரில்... யாழில் பிரசுரமாகும் முக்கிய ஆக்கங்கள்.. செய்திகள் வாரா வாரம் கள உறவு ஒருவரால் தொகுத்து வழங்கப்படும் பாரம்பரியம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இளைஞன் மற்றும் கலைஞனின் பங்களிப்புக்களும் பல இளையோரின் பங்களிப்புக்களும் அன்று அதில் மிகுந்த சிரத்தை எடுத்திருந்தன.

yarl1blackwf6.jpg

http://youtu.be/acXgRg8a1zo

http://www.yarl.com/forum3/index.php?showtopic=25558

 

யாழ் நேசக்கரம்.. தாயக மக்களுக்கான மனிதாபிமான உதவி அமைப்பு.. கள உறவுகளின் பங்களிப்போடு.. நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டது.

 

yaalneesakkarammf1.jpg

 

2008 - 2009 - போர்வடுக்களை அதிகம் சுமக்கும் காலமாக இருந்தது. அது யாழிற்கும் என்று அமைந்திருந்தது. 2008 பொங்குதமிழின் பின்.. புலம்பெயர் மண்ணில் நிகழ்த்தப்பட்ட போர்க்கால..சாத்வீகப் போராட்டங்களுக்கான தயாரிப்புக்கள் சிலவற்றில் கள உறவுகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். பதாதைகள் (பானர்கள்) தயாரிப்பு உள்ளிட்ட முக்கிய பணிகள் ஆற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அதுமட்டுமன்றி "வணங்காமண்"  போரால் அவதிப்பட்ட மக்களுக்கான நிவாரணக் கப்பலை தாயகம் நோக்கி.. அனுப்புகையில் யாழ் உறவுகள் மும்மரமாக தமது பங்களிப்பைச் செய்து கொண்டிருந்த காலமும் அதுவாக இருந்தது.

 

IMG4930-1213468844.jpg

 

vanangamann-150x100.jpg

 

maalaimalarsiddb1540b6-40a8-4908-98fd-57

 

clip_image017.gif

 

nouvelle-image2.jpg

 

மேலும்.. இக்காலத்திலேயே.. புறக்கணி சிறீலங்கா நிகழ்ச்சித் திட்டத்துக்கு.. யாழின் பங்களிப்பையும் கள உறவுகள் யாழின் ஊடாகவும் வழங்கிக் கொண்டிருந்தனர்..

 

BoycottSriLanka004.jpg

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=53416

 

2010 முதல் - 2024 வரை..... நீங்களும்.. எழுதுங்கள்......

 

இது ஒரு முன்மாதிரிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதை விட உங்கள் யாழ் காலவோடையை இன்னும் சிறப்புற செய்து சமர்ப்பிக்கலாம்)

 

(நன்றி உறவுகளே. மீண்டும் காலச்சக்கரத்தை பின்னோக்கிச் சுழற்றச் செய்ததற்கு.)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யப்பா

என்ன  திறமை

ஞாபக  சக்தி

நன்றிக்கடன்.............. :icon_idea:

 

தொடருங்கள் ராசாக்கள்

நானும் வந்து நிச்சயம் கயிறு பிடிப்பன்............ :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபாரம் நெடுக்ஸ் !  காலக் கண்ணாடியில் இருமுறை அடியேனும் பங்குபற்றியிருந்தேன். நீங்கள் சிற்பம்போல் அழகாய் சொல்லிக் கொண்டு போறீங்கள். எனக்கும் ஏதாவது  தோன்றினால் சொல்கின்றேன்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கிட்டீங்க.... நெடுக்ஸ். thumbs_up_smiley.gif

மெய் மறந்து ரசித்தேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ் இது போன்ற ஒரு காலப் பதிவு மிகவும் அவசியம்.

பாராட்டுக்கள் ... என்னுடைய எண்ணப் பகிர்வுகளை பிறிதொரு நாளில் எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

https://www.facebook.com/photo.php?fbid=236406659894909&set=a.118896518312591.1073741828.100005767295561&type=1&theater

 

 

நான் பார்த்த சிறிய இணைய அனுபவத்திலே எத்தனை ஊடகங்களை கருத்துக்களங்களை தரிசித்தாலும் என் மனதிற்கு திருப்தியாக ,நினைத்தது இந்த யாழ் இணையமே .......மனித இனத்திற்கு தேவையான .உண்மை ,நீதி ,சமத்துவம் ,கட்டுக்கோப்பு ,கலை கலாச்சாரம் ,தாயகம் ,பண்பாடு ,...............இவை அனைத்தையும் முற்று முழுதாக கொண்டுள்ள ஓர் இணையம் என்று சொன்னால் அது மிகையாகாது ..........இந்தக்களத்தில் நானும் ஓர் உறுப்பினராக இருப்பதை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...........இது ஒரு விளம்பரம் அல்ல ...உண்மையான விடயம் ..........நம்பவில்லை என்றால் நீங்களும் ஒரு தடவை தரிசியுங்கள் இந்த யாழ் களத்தை .............அந்த வகையில் 16 ஆவது அகவையை எட்டப்போகும் இந்த யாழ்மகளுக்கு என் வாழ்த்துக்கள் ..........தொடர்ந்து எம் விழுமியங்களை காப்போம் இந்த இனிய களத்தினூடாக ..........வாழிய வாழிய வாழிய யாழ்களம் வாழிய வாழியவே 

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாழ்த்துக்கள் ....... நான் வளர்ந்த, என்னை என் கவியாற்றலை வளர்த்த yarl.com க்கு....

இன்றுடன் நான் இணையத்தில் தமிழ் எழுத தொடங்கி 12 வருடங்கள் ஓடி விட்டது. ஆம் முதன் முதலாக இணையத்தில் எழுதியது இங்குதான்..கரவை பரணி என்ற பெயரில் எழுதினேன்...

Link to comment
Share on other sites

16 ஆண்டுகால வாசகனாகவும் 12 ஆண்டுகாலமாக கருத்துக்கள உறவாகவும் இருப்பதில் மகிழ்வும் பெருமையும் அடைகின்றேன். உலகளாவியரீதியில் பல உறவுகளை இணைத்துத்தந்த எங்கள் யாழ் இணையம் வாழிய பல்லாண்டு.

இந்தவேளை மோகன் அண்ணா எங்களால் நினைக்கப்ட வேண்டியவர் ஆரம்பகாலம் எதுவுமே புரியால் விழித்த என்போன்ற பலருக்கு கரம் பிடித்து வழி நடத்தியவர். எங்கள் எழுத்துக்களை யாழ்களத்தில் படைப்புக்களுக்கான சிறப்பகுதிகளை திறந்து களம் அமைத்தவர். இந்த வேளையில் நன்றி மோகன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில வருடங்களில் வெப் மொழிபெயர்ப்புகள் நவீனத்துவமடைந்துவிடும் அவரவர் தமது மொழிகளிலேயே உலக செய்தி நிலவரங்களை அறிந்து கொள்ளும் வசதி உருவாகியிருக்கும் எனவே 2026 ல் யாழ் உலகத்தமிழர்களுக்கு முகவரியாகவும் அடையாளமுமாகவும் இருக்கும் என நம்பலாம்.

Link to comment
Share on other sites

அருமையான நினைவூட்டல் நெடுக் அண்ணே அபாரம் வாழ்த்துக்கள் தொடருங்கள் ..

 

உங்களின் கருத்தாடல் ...எழுத்து ஈர்ப்பு ..ஆகியவையே என்னையும் யாழுக்கு இழுத்துவந்தது என்பதை சொல்வதில் பெருமை அடைகிறேன் அடியேன் ...

 

இன்னும் பலர் இருக்கிறார்கள் யாழின் கதாநயகர்கள் அவர்களுக்கும் நன்றிகள் ...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் கடந்துவந்த பாதையினை  நினைக்கத்தூண்டியதாக அமைந்திருந்தது.

வாழ்த்துகள் நெடுக்கு.

 

நிறைய எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு. இடைவெளிகள் அதனை நிரப்பிக்கொண்டே இருக்குறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை நெடுக்ஸ் அண்ணா, உங்களின் யாழுடனான நெருக்கம் வியக்க வைக்கிறது.

வார்த்தைகளில் சொல்லிவிட முடியவில்லை நெடுக்ஸ் அண்ணா, யாழுடன் இணைந்திருக்கிறோம் என்ற வகையில் நமக்கும் பெருமை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் பதினாறாவது அகவையில் காலடி பதிக்கும் இவ்வேளையின் யாழ் தமிழர்கள் உலகில் இருக்கும்வரை தொடர்ந்தும் பயணிக்க மனமுவந்த வாழ்த்துக்கள் :)

யாழுடனான தனது பரிச்சயத்தையும் அதனோடு கூடவே சேர்ந்து வளர்ந்த அனுபவத்தையும் நெடுக்காலபோவான் அழகாகத் தந்துள்ளார். எனக்கும் இது பல பழைய விடயங்களை நினைவுகூர உதவியது.

யாழ் இணையம் பதினாறு வயது வாலைக்குமரியாக இருந்தாலும் எனக்கு அது மழலையாக இருக்கும்போது அறிமுகமாகவில்லை. இணையம் அதிகம் பிரபல்யம் அடையாத அக்காலத்தில் இணையத்தில் IRC (Internet Relay Chat) மூலம் கடலை போடுவதில் அதிக நேரத்தை வீணாக்கிக்கொண்டிருந்த எனக்கு ஏனோ யாழ் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. 2002 இல் யாழ் இணையம் நான் சுவிஸ் நாட்டுக்கு விடுமுறையில் சென்றபோது என் ஒன்றுவிட்ட அண்ணா ஒருவரால் அறிமுகப் படுத்தப்பட்டது. ஆனாலும் பாமினி எழுத்துருவில் தட்டச்சுச் செய்யப்பழகி வெறுத்துப்போய் இருந்ததால் 2004 மார்ச் வரை யாழில் இணையவில்லை. 2004 இல் கருணா அம்மான் புலிகள் இயக்கத்தில் பிளவை உருவாக்கியபோது அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் யாழில் இணைந்து யுனிகோட்டில் எழுதப் பழகினேன். இன்றுவரை தமிழை ஆங்கில உச்சரிப்பினாலேயே எழுதிவருகின்றேன்.

கேள்வி கேட்டே பழகிவிட்டதால் என்னுடைய முதலாவது கருத்தும் கேள்வியிலேயே முடிந்திருந்தது.

"கருத்துக்களத்துக்கு நான் புதிய அங்கத்துவன். ஒரு மாதிரி தமிழில் எழுத பழகி விட்டேன். விரைவில் உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள என்ன வழி?"

http://www.yarl.com/forum/index.php?showtopic=1531

என்னை முதன் முதலில் "வாருங்கள் கிரிபன்ஸ்... இக்களத்தோடு கள உறவுகளோடும் கலந்திருக்க எம் வாழ்த்துக்களும் வரவேற்பும்....!" என்று சொல்லி வரவேற்றவர் இப்போதைய நெடுக்காலபோவான். அப்போது மாந்தோப்பில் ஒளிந்திருந்தார் :D நெடுக்காலபோவானுக்கும் எனக்கும் மதம், பெண்ணியம் போன்ற பல விடயங்களில் கருத்துமோதல்கள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் மிகவும் அவதானமாகவும் இரகசியமாகவும் இருக்கும் அவரை இரு தடவைகள் காணும் சந்தர்ப்பத்தையும் யாழ் களம் உருவாக்கித் தந்திருந்தது. யாழ்களப் பொறுப்பாளர் மோகன் மீதான நம்பிக்கை காரணமாகவே நெடுக்ஸ் யாழ் கள உறவுகள் சிலரை தெற்கு இலண்டன் பகுதியில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வில் சந்தித்திருந்தார் என்று நம்புகின்றேன்.

ஆரம்பத்தில் அதிகம் மூளைக்கு வேலை, குறுக்கெழுத்துப் போட்டி என்று பொழுதுபோக்கு அம்சங்களிலும் செய்திகள், அரசியல் போன்றவற்றிலும் பங்குபற்றியிருந்தேன். அன்றைய நாட்களில் இருந்த சக கள உறவுகள் வெண்ணிலா, தமிழினி (பெண்கள்தான் நினைவுக்கு வந்தார்கள், ஆண்கள் மன்னிக்க!) போன்றோரெல்லாம் களத்தில் இருந்து காணாமல் போய்விட்டார்கள்! அரசியலில் மதித்தாத்தாவுடன் நிறைய விவாதங்கள் புரிந்த நினைவு. அவர் யாழ் களத்தில் இருந்த தடை செய்யப்பட்டபோது சந்தோசமாகத்தான் இருந்தது. ஆனாலும் அவர் பல்வேறு கேள்விகளைக் கேட்கும்போது அதற்குப் பதில் அளிப்பதன்மூலம் தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை பலரும் தெளிந்துகொள்ள அவருடனான கருத்தாடல்கள் உதவியிருந்தன. நேர்மையான விமர்சனம் இன்றி வெறும் விதண்டவாதமான, குதர்க்கம் மட்டுமே பேசும் கருத்தாளர்களுடன் நேரத்தை விரயம் செய்வது சரியல்ல என்பதுதான் அவரைப்போன்றவர்களின் மீதான எதிர்ப்புக்குக் காரணம்.

அதுபோன்றே பல்வேறு முகமூடிகளுடனும் வந்து குழப்பம் செய்பவர்களையும் பிடிக்காது. இதனால் புதிதாக வரும் ஒருவரை வரவேற்றுக் கருத்து வைப்பது குறைவு. பழையவர்களே புதிய அவதாரம் எடுத்து வரும்போது உண்மையான புதியவர்கள் யார் என்பதை எப்படி நம்மால் தெரிந்துகொள்ளமுடியும்? ஆனால் வரவேற்காமால் விடுவதும் பிழையானது என்பதை ஒத்துக்கொள்கின்றேன். உண்மையிலேயே புதிதாக வருபவர்களுக்கு பழையவர்கள் வரவேற்புக் கொடுக்காவிட்டால், அவர்கள் யாழில் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பமாட்டார்கள். எனவே இவ்விடயத்தில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் புதியவர்களை வரவேற்று அவர்கள் புதியவர்கள்தான் என்று மற்றையவர்களுக்கு உணர்த்த முயலவேண்டும்.

2009 இன் ஆரம்ப மாதங்களில் யாழ் இணையம் பல்வேறு கவனயீர்ப்பு செயற்பாடுகளை முன்னின்று செய்தது. இதன்மூலம் ஒரு பேரலவத்தைத் தடுக்க உலகத் தமிழர்களுடன் சேர்ந்து முயற்சித்தது. ஆனாலும் நான் அக்காலத்தில் இப்படியான முயற்சிகளில் அதிகம் பங்கெடுக்கவில்லை. 2009 தையில் இருந்தே மனம் சலித்துப் போயிருந்தது. எதிலும் நாட்டம் இருந்திருக்கவில்லை. நம்பிக்கை என்பதே இல்லாமல் போயிருந்தது. 2009 மேயில் போர் உச்சக்கட்டத்தை அடைந்து முடிவுக்கு வந்தபோது தமிழன் என்று பெருமைப்பட்டிருந்த உணர்வும் முற்றாக இல்லாமல் போயிருந்தது. ஆனாலும் யாழ்களம் தமிழர்களை தொடர்ந்தும் ஒன்றிணைப்பதில் முயற்சி செய்யும் ஒரு தளமாகவே செயற்பட்டுக்கொண்டிருந்தது. பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தமிழர்கள் ஒற்றுமையின்றி இருந்தபோதும் யாழ்களம் எவருக்கும் அடிபணியவில்லை. "நாமார்க்கும் குடியல்லோம்" என்று ஓங்கி உரத்துச் சொல்லும் யாழ் களம் தளம்பவில்லை.

தினமும் மாறிவரும் நவீன தொழில்நுட்ப உலகில் யாழ்களம் தன்னை முன்னகர்த்தவும், தமிழர்களிடையே தொடர்ந்தும் பிரபல்யமாகவும் அதிகம் விரும்பப்படுவதுமாகவும் தொடர்ந்திருக்க பல சவால்களைத் தொடர்ந்தும் எதிர்கொண்டு தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது. தமிழர்களை தமிழால் இணைக்கும் பாலமாகச் தொடர்ந்தும் செயற்பட பின்வரும் அடிப்படை விடயங்களில் அதிக கவனம் எடுக்கவேண்டும்.

  • விளம்பரம் பெருகவேண்டும்: இதனை நிர்வாகத்தில் உள்ளவர்களால் மட்டும் செய்யமுடியும் என்று தோன்றவில்லை. எனவே கள உறவுகள் விளம்பரங்களை எடுத்துக் கொடுத்து உதவவேண்டும். விளம்பரம் எடுத்துக்கொடுப்பவர்களுக்கு நிர்வாகத்தினர் ஒரு குறித்த வீதத்தைத் "தரகு"க் கட்டணமாகக் கொடுத்தால் பலர் முன்வந்து விளம்பரம் எடுத்துக் கொடுப்பார்கள் என்று நம்புகின்றேன்.
  • உறுப்பினர்கள் தொகை: அதிகம் பேர் யாழ் களத்தில் இணைந்தாலும் கருத்தாடல்களில் பங்குபற்றுவோர் தொகை குறைந்துகொண்டே போவதைத் தடுக்கவேண்டும்.
  • புதியவர்களுக்கான உதவிக்குறிப்புக்கள்: புதிதாக இணைபவர்கள் கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டவர்களாக உணர்கின்றார்கள் போலுள்ளது. இதனைச் சீர் செய்ய இலகுவான குறிப்புக்கள் கொடுக்கப்படல் வேண்டும்.
  • தமிழில் எழுதுவது: தமிழில் எழுதுவது பலருக்கு இப்போதும் கடினமான ஒன்றாக உள்ளது. எளிய தமிழில் சரியான விளக்கம் வேண்டும்.
  • இளையோரை உள்வாங்குதல்: யாழ்கள உறுப்பினர்களில் இளையோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். எனவே இளையோரைக் கவரும் ஆக்கங்கள் அதிகம் வரவேண்டும். பல்வேறு மொழிகளையும் அனுமதிக்கலாம். ஆனால் அது இலகுவாக இருக்குமா தெரியவில்லை.
  • குழுவாதம்: கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் அவற்றினை நாகரிகமாக வெளிப்படுத்தும் பண்பினை வளர்க்கவேண்டும். குழுவாதத்தை அடியோடு ஒழிக்கவேண்டும்.
  • சுயமான ஆக்கங்கள்: சுயமான ஆக்கங்கள் தொடர்ந்தும் வரவேற்கப்படவேண்டும். எழுதுபவர்கள் இன்னும் அதிகரிக்கப்படவேண்டும். கதை, கவிதையோடு, அரசியல், சமூகம், பொருளாதாரம் என்று பல்வேறு விடயங்களையும் கள உறுப்பினர்கள் படைக்கவேண்டும்.
  • யாழ் இணைய முகப்பு: யாழ் இணைய முகப்பு தொடர்ந்தும் மெருகூட்டப்பட்டுக் கொண்டு வந்தாலும் பலர் இன்னமும் கருத்துக்களத்தைக் காணாமல் இருக்கின்றார்கள். எனவே கள உறுப்பினர்கள் யாழ் இணையத்தின் வடிவமைப்பு பற்றிய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கொடுக்கவேண்டும்.
  • உள்ளடக்கம்: கருத்துக்கள உள்ளடக்கம் பல வருடங்களாக மாறாமல் உள்ளது. BBC போன்ற பிரபல்யமான தளங்களே அதிகம் மாறும்போது யாழ்களம் தொடர்ந்தும் ஒரே உள்ளடக்கத்தோடு இருப்பது நல்லதல்ல. இவை பற்றியும் கள உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கோரலாம்.
  • apps: யாழ் களம் iOS, Android, Windows என்று சகல செயலிகளிலும் apps ஆக வரவேண்டும்.
  • Multimedia content: படங்கள், காணொளிகள் போன்றவை வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் வசதிகள் இருந்தாலும், கள உறுப்பினர்கள் தம்மவற்றை இலகுவாக தரவேற்றம் செய்யும் வசதி இருக்கவேண்டும்.
என்னதான் இயந்திரமான வாழ்வாக இருந்தாலும் யாழ் களம் எப்போதும் தமிழர்களுடனேயே இருப்பதுபோன்ற உணர்வைத் தருவதால் யாழை விட்டு இலகுவாக விலகமுடியாது என்பது புரிந்து பல காலமாகிவிட்டது!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஒரு கிறுக்கல் பித்தனாக்கிய யாழ்களத்திற்கு கோடானுகோடி நன்றிகள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

என்னதான் இயந்திரமான வாழ்வாக இருந்தாலும் யாழ் களம் எப்போதும் தமிழர்களுடனேயே இருப்பதுபோன்ற உணர்வைத் தருவதால் யாழை விட்டு இலகுவாக விலகமுடியாது என்பது புரிந்து பல காலமாகிவிட்டது!

 

யாழ்களத்தினூடாக... உங்களது பரிச்சயத்தை அழகாகக் கூறியுள்ளீர்கள் கிருபன்.

மேலே... நீங்கள், கூறியது... நூற்றுக்கு நூறு உண்மை. :)

Link to comment
Share on other sites

16 ஆம் ஆண்டில் யாழ் கருத்து களம்

எனக்கும் யாழை அறிமுகபடுத்தி வைத்த பெருமை தமிழ் நாதம் இணையத்துக்கே சேரும்.....சுனாமி பேரலை அனர்த்தத்தின் போது நாம் இரவிரவாக இன்பதமிழ் ஒலி வானொலி ஊடாக மக்களிடம் நிதி சேகரித்து கொண்டு இருந்த பொழுது சுனாமியை பற்றிய கவிதைகள் பல யாழில் வந்தது அதை எமது நேயர்களுடனும் பகிர்ந்து கொண்டு நிதி சேகரிக்கும் இடைவெளிகளை நிரப்ப்பிகொண்டு இருந்தேன்......2004 இல் இருந்து யாழில் ஆரம்பித்த எனது பயணம் 2014 வரை தொடர்கின்றது.....எனக்கு ஓரளவு எழுத கற்றுக்கொடுத்ததே இந்த யாழ் களம் ...தான்...உலகெங்கும் எனக்கு பல உறவுகளை தந்ததும் இந்த யாழ் களம் தான்....வாழிய நீ பல்லாண்டு

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் வணக்கம் , தமிழ் நாதம் இணையத்தின் ஊடாக யாழ் எனக்கு 2006 ஆம் ஆண்டளவில் அறிமுகமானாள் . அப்பொழுது எனக்கு தமிழ் எழுத தெரியாது . KOOMAGAN என்ற பெயரில் பதிந்து விட்டு வாசகனாக மட்டுமே இருந்தேன் . பின்பு 2011ல் யாழுடன் எனது தொடுகை ஆரம்பித்து இன்று வரை தொடர்கின்றது . இதை ஆரம்பித்த மோகன் அண்ணையும் , அவருடன் தோள் நின்று தமிழில் யூனிகோர்ட்டை ஆரம்பித்து பெரும்பங்காற்றிய யாழ் சுரதா வாணனும் மறக்கப்படமுடியாதவர்கள் . அத்துடன் எப்பொழுதும் ஒரு மரத்துக்கு வேர்கள் வெளியே தெரிவதில்லை .அந்தவகையில் பல வேர்கள் யாழுக்கு இருக்கின்றன . அந்த வேர்களும் மறக்கப்பட முடியாதவையே!! யாழ் என்றுமே வாலைக்குமரியாக  வலம் வரவேண்டும் . உண்மை ஓங்குக!! வாழ்க தமிழ்!! வாழிய யாழ் இணையம்!!

Link to comment
Share on other sites

யாழ் இணையம் பதினாறாவது அகவையில் காலடி பதிக்கும் இவ்வேளையில் யாழ் இணையம் உலகம் பூராவும் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து தொடர்ந்து மென்மேலும் பல ஆண்டுகள் தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். :)

 

1999ம் வருட இறுதியில் ஏதோ ஒரு தேடுபொறியில் yarlpanam  என்று தேடிய போது தான் எனக்கு யாழ் இணையம் அறிமுகமாகியது. அன்று தொடக்கம் நான் யாழ் இணைய வாசகனாக உள்ளேன். பலவருடங்களாக யாழில் இணைந்து எழுத ஆர்வம் இருந்த போதும், தமிழில் எழுதும் கஸ்டத்தால் யாழில் இணைய விரும்பவில்லை. பின்பு 2011 வருட இறுதியில் யாழில் இணைந்த போதும் 2012 ஜூலையில் தான் நான் ஒரு மாதிரி தமிழில் எழுத தொடங்கியது. :D

 

நான் யாழில் இணைந்து சிறிது காலம்தான் என்றாலும் யாழுக்கு வெளியாலும் சமூகவலைதளங்களில் பல யாழ் உறவுகள் நட்பாக இருக்கிறார்கள். எனவே உலகெங்கும் எனக்கு பல உறவுகளை தந்ததும் இந்த யாழ் களம் தான்..வாழிய நீ பல்லாண்டு.....

 

என்னதான் நடந்தாலும், யாழை விட்டு விலகுவது என்பது இலகுவான காரியம் இல்லை.

 

ஒரு திரியில் கள உறவு ஒருவர் எப்படி யாழை விட்டு விலகுவது என்று கேட்ட கேள்விகக்கு புங்கையூரன் அண்ணா எழுதிஇருந்தார். யாழ் என்பது தமிழ் கல்யாணம் மாதிரி என்று. :o   அதுதான் நிதர்சனமான உண்மை.

நாம் எல்லாம் இங்கு ஒன்று சேர வழி ஏற்படுத்தி தந்த மோகன் அண்ணாவுக்கும் நன்றிகள்......

 

Link to comment
Share on other sites

யாழ் என்பது தமிழ் கல்யாணம் மாதிரி என்று. :o   அதுதான் நிதர்சனமான உண்மை.

நாம் எல்லாம் இங்கு ஒன்று சேர வழி ஏற்படுத்தி தந்த மோகன் அண்ணாவுக்கும் நன்றிகள்......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.