Jump to content

16 வது அகவை காணும் யாழ்.. 26 இல் எப்படி..இருக்கும்.?!


Recommended Posts

யாழ் களமும், ஒரு விதத்தில, தமிழ்க் கலியாணம் மாதிரித் தான்!

ஒரு அவசரத்துக்கு, விட்டிட்டு ஓடேலாது!

இது தான் புங்கையூரன் அண்ணா சொன்ன பதில் தமிழ்சூரியன்,

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

யாழ் களமும், ஒரு விதத்தில, தமிழ்க் கலியாணம் மாதிரித் தான்!

ஒரு அவசரத்துக்கு, விட்டிட்டு ஓடேலாது!

இது தான் புங்கையூரன் அண்ணா சொன்ன பதில் தமிழ்சூரியன்,

உண்மை நவீனன் .............யாழில் இணைந்த தமிழ் உணர்வுள்ள எந்த தமிழனாலும் யாழை விட்டு வெளியே போக முடியாது . அரசியல் கருத்துக்களால் வேறு வேறு கோணத்தில் இருந்தாலும் ..அந்த தமிழ் உணர்வு ஒன்றாக இணைத்துவிடும் .அதுதான் யாழ் ........நான் கண்ட அனுபவம் 

Link to comment
Share on other sites

கம்பியூட்டரில்  தமிழ் என்று அதிசயத்துடன் பார்த்து பிரமித்தும் கொண்டு  பார்த்து கொண்டும் இருக்கும் பொழுது இந்த யாழ் இணையம் எனக்கு கண்ணில பட்டது . இதில் பங்கு பெறுபவர்கள்  கல்வியாளர்களாக இருக்க கூடும்  மேதாவிகளாக இருக்க கூடும் நினைத்தேன் ,. நமக்கு இங்கு என்ன வேலை? அதுவும் அழகு தமிழில் எழுதி விவாதிக்கும் பொழுது பிரமிப்பு இருக்காதா என்ன?..

 

 

அத்துடன்  எனது வாழ்வுயிலில் கம்பியூட்டருக்கும் எனக்கு தொடர்பே இல்லாத நிலையில் இருந்தும் கூட இவர்கள் மாதிரி  தமிழ் எழுத மாட்டனா என்ற நப்பாசை ஏனோ எழுந்தது...

 

அதிர்சட வசமாக யாழ் இணையம் இலகுவாக அறிமுகபடுத்தி வைத்திருந்த பாமினி  உரு  தட்டச்சு முறை  தமிழில் எழுத பழக்கியது .அதன் மூலம் யாழில் எழுதி பார்த்தேன்  .ஆமா நானும் தமிழில் எழுதுகிறேன் என்று சந்தோசம் பொங்க  பிறவி பயன் பெற்ற இன்பத்தை அடைந்தேன்.

 

அந்த எழுத்தின் சில வரவேற்பு ஊக்கத்தின் மூலம்  வலைபதிவை உருவாக்கி   எழுத தொடங்கினேன் . இந்த சிறியோனை தமிழில் எழுத வைத்த யாழ் இணயத்துக்கு  எனது வாழ்த்துக்கள் . யாழ் இணையத்தின்  பொது கருத்தோடு சில  வேளை  ஒத்து போக முடியாமால் சந்தர்ப்பம் ஏற்பட்ட பொழுதும் வலிந்து ஒரு சமரச போக்கை என்னுள் உருவாக்கி  யாழ் இணையத்தில் இருந்து தூர போகாமால்  அதனுடன் பயணித்திருக்கிறேன் என்று நம்புகிறேன் .

 

மீண்டும் வாழ்த்துக்கள் யாழ் இணையத்துக்கு

Link to comment
Share on other sites

நான் எவ்வளவு தூரம் பயணித்தாலும் யாழ் இணைம்  என்றென்றும் ஆழமாய் அடி மனதில்  புதைந்திருக்கும்.யாழிற்காக எழுதிய கதைகள்  கவிதைகள்  எனக்கே இப்போ நினைவில்  இல்லை.முக்கியமாக  என்னை அடையாளப் படுத்தியது ஜரோப்பிய  அவலம் என்கிற கட்டுரைகளும்  அதன் பின்னரான  நாடகங்களும். அதற்கடுத்ததாக  டண்னால் தொடங்கப் பட்ட  நேசக்கரம்  அமைப்பில்  நானும் இணைந்து பணியாற்றியது  அதன் பல அகவைகளிலும்  ஏதாவது ஒரு நிகழ்வினையும் நான்செய்திருக்கிறேன்.  குறிப்பாக பட்டி மன்றம் அதைப்போல தொடர்ந்தும் யாராவது ஏதாவது நிகழ்ச்சிகளை  செய்து சிறப்பிக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாழ்ந்த போது நான் மிகவும் நேசித்த சஞ்சிகை, டொமினிக் ஜீவா அவர்களால் நடத்தப்பட்ட 'மல்லிகை' ஆகும்!

 

எனது தந்தையார், ஒவ்வொரு இதழையும் தவறாமல் வாங்கி வருவார். ஆனால், அதை அவர் பெரிதாக வாசித்ததில்லை. அவரிடம், இதுபற்றிக் கேள்வி எழுப்பிய போது, அவர் அளித்த பதில், இன்றைய சூழ்நிலையிலும் மிகவும் பொருத்தமானது.

 

வாசிக்க வேண்டும் என்பது முக்கியமானதல்ல, வாங்க வேண்டும் என்பதே முக்கியமானது. அதாவது, உள்ளூர் பத்திரிகையான 'மல்லிகை' ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதே அதன் பொருளாக இருந்தது! அதன் பின்னர், மல்லிகை, சிரித்திரன் போன்ற பத்திரிகைகளை எப்போதும் பணம் கொடுத்து வாங்கும் பழக்கம் என்னிடமும் தொற்றிக்கொண்டது.

 

விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகள் என்னை அவ்வளவுக்குக் கவரவில்லை. ஆனால், கலைமகள், மஞ்சரி, கல்கி போன்றவைகள் ஓரளவுக்கு, என்னைக் கவர்ந்தன என்றே சொல்லவேண்டும்!

 

யாழை, மஞ்சரியுடன் ஒப்பிடலாம் என நினைக்கிறேன்!

 

செய்திகள், சிறுகதைகள், கவிதைகள், சினிமா விமரிசனங்கள், அரசியல் விமரிசனங்கள் என்ற அனைத்தையும் ஓரிடத்தில் தருவது தான் யாழின் சிறப்பாகும் எனக் கருதுகின்றேன்!

 

யாழுக்கும், அதனைக் கொண்டு நடத்தும் நிர்வாகக் குழுவுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு சிறிய அங்கத்துவ சந்தா முறையை, வருங்காலத்தில் 'யாழ்' அறிமுகப்படுத்துமெனின், நாம் பெரிதும் மகிழ்ச்சியடைவேன்!

 

ஒரு உயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடமொன்றுக்குள், உள்ளிடும் போது ஏற்படும் ஒரு விதமான தயக்க உணர்வு, யாழில் உள்ளிடும் போது எனக்கு ஏற்பட்டதில்லை. அதுவே 'யாழின்' சிறப்பும், தனித்துவமும் என்பேன்.

 

வெறும் பார்வையாளர்களாக இல்லாது, அனைவரும் பங்காளிகளாகிப் பயணிப்பதிலேயே, யாழின் வெற்றி தங்கியுள்ளதென நினைக்கிறேன்!

 

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காமல், கொஞ்சநேரம் சிரிப்பம் வாங்கோ, சிந்தனைக்குச் சில படங்கள், இன்றைய பாடல், போன்றவையும் கோமகன் போன்றவர்கள் நடத்தும், மரங்கள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றை அடையாளம் காணும் திரிகளும், அண்மையில் செங்கொடி ஆரம்பித்த 'விடுகதைகள்' திரியும், அனைவருமே யாழில் பங்காளிகளாகலாம் என உணர்த்தி நிற்கும் திரிகளாக மிளிர்கின்றன!

 

சுமேரியர் தொடங்கிய, 'யாழின் காதல் கதை', எத்தனையோ எழுத்தாளர்களை அடையாளம் காட்டியுள்ளது. இது போன்ற திரிகள், 'உள்ளுக்குப் போவமா அல்லது வெளியே போவமா என்று 'வாசல் படிகளில்' நிற்கும் உறவுகளை, 'பயப்பிடாமல் வாங்கோ' என்று உள்ளே அழைத்துச் செல்லும்!

 

ஒருவரது பதிவொன்றுக்கு, ஊக்கமளித்து நிற்கும் கருத்தாளர்களே, யாழ் களத்தின் தூண்கள் என்பதில் சந்தேகம் இல்லை!

 

ஈழத்தமிழனின் 'துயர் நிறைந்த வாழ்வு'  நீடிக்கும் வரையுமாவது, யாழ் களம் வாழவேண்டும்!

 

அவளை வாழவைக்க வேண்டிய தார்மீகக் கடமை, ' புலம் பெயர் தமிழர்', ''நிலம் வாழ் தமிழர்', 'தொப்புள் கொடித் தமிழர்'. ',மலையகத் தமிழர்' என்ற எல்லாவிதமான தமிழர்களின் பொறுப்பாகும் என்றே கருதுகின்றேன்!

 

நவீன தொழில் நுட்பங்களோடு, யாழ் மகள் வளர வேண்டும், தமிழிருக்கும் வரை அவள் வாழவேண்டும், என்பது தான் எனது ஆசை!

 

வாழ்க தமிழ்...... வாழ்க யாழ் களம்!  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

யாழுக்கும், அதனைக் கொண்டு நடத்தும் நிர்வாகக் குழுவுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு சிறிய அங்கத்துவ சந்தா முறையை, வருங்காலத்தில் 'யாழ்' அறிமுகப்படுத்துமெனின், நாம் பெரிதும் மகிழ்ச்சியடைவேன்!

------

 

தினமும்... சும்மா வந்து எழுதிவிட்டுப் போகின்றோமே.. என்ற கூச்ச உணர்வு, என‌க்கும் ஏற்படுவதுண்டு.

புங்கை குறிப்பிட்ட... சிறிய சந்தா தொகையை, யாழ். எதிர்காலத்தில் அறிமுகப் படுத்தினால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
Mar 28 at 10:57 AM
எனக்கு யாழ் களத்துடனான அறிமுகம் ஒன்றரை ஆண்டுகளே ஆயினும் எனக்குக் கிடைத்த அனுபவங்களும், அறிவும், மனித மங்களைத் தெரிந்துகொள்ளக்கூடிய அனுபவங்களும் வாழ்வில் மறக்க முடியாதவை. யாழ் இணையம் என்றாலே கவிதை நினைவில் வருவதும் தவிர்க்க முடியாததாகி விட்டது. பலவிதமான செய்திகளை அறிந்து கொள்வது மட்டுமல்லாது திண்ணை என்னும் தளம் பலரை மனம் விட்டுப் பேசச் சிரிக்க நட்புக்கொள்ள வைத்ததை மறக்கவோ மறுக்கவோ முடியாது.
 
எமக்குள் ஒளிந்திருந்த திறமைக்களை எல்லாம் இலகுவாக வெளிக்கொணர உந்து சக்தியாக விளங்கியது யாழ்களமும் அங்கு கருத்தெழுதும் உறவுகளும் தான். இதில் எள்ளளவும் ஐயமில்லை. என் திறமையை எனக்குணர்த்திய யாழ்களத்தை வாழ்வின் கடைசிவரை மறக்க முடியாது என்பதும் உண்மை.
 
பலர் வருகின்றனர். போகின்றனர். தொடர்ந்து தம் சொந்த வீடுபோல் ஒருநாள் வராவிடில் தூக்கம் தொலைப்பவர்களும் கூட இங்குள்ளனர். அத்தனை சிறப்புடன் மற்றவரைக் கட்டிப்ப் போட்டு வைக்கும் திறமை கொண்ட யாழ் களம் தொடர்ந்தும் எத்தனை காலத்துக்கு இப்படியே இருக்க முடியும் என்று நெடுக்ஸ் எண்ணியது போன்றே நானும் எண்ணியிருக்கிறேன். தமிழை எம் சந்ததி மறந்துகொண்டு வரும் நிலையில் இளைய சந்ததியை ஈர்க்காவிட்டால் எம்முடன் யாழும் போகவேண்டிய நிலையை தவிர்க்க முடியாது. 
 
என்னதான் யாழ் இணையம் எம்மை அரவணைத்தாலும், கதைகள் என்ற பதுதியில் நாம் எழுதும் கதைகள் எவையும் உள்ளடக்காப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. பொதுவாக யாழ்களத்தைப் பார்ப்பவர்களுக்கும் யாழில் எழுதும் அனைவரின் எழுத்தும் போய் சேர வேண்டியது. அதை பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். எல்லோரையும் பராபட்சம் இல்லது அரவணைத்துச் செல்வதும் மிக முக்கியமான ஒன்று. மனித மனங்கள் விசித்திரமானவை. சிலர் வெளியே கூறலாம். சிலர் கூறமுடியாது சொல்லாமற் கொள்ளாமல் வெளியேறுவதர்க்கும் இதுவே காரணமாக அமைந்திருக்கலாம்.
 
இதில் கருத்துக்களை எழுதும் உறவுகளுக்கும் ஒன்று கூற வேண்டும். எதையும் துணிவாக எழுதுங்கள். மற்றவரை நோகடிக்கவேண்டும், இவரை எழுதவே இனி விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு குழுநிலை சார்ந்த எழுத்தாக உங்கள் எழுத்துக்கள் இருப்பது அனைவருக்கும், ஏன் யாழ் களத்துக்கும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் நான் உட்பட.
 
கருத்துக்கள் எழுதி என்னை ஊக்கப்படுத்திய உறவுகளுக்கும் யாழ் இணையத்துக்கும் என்றும் நான் கடமைப்பட்டவள்.

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் யாழ் இணயத்துக்கு ...ஜெயகாந்தனின் சினிமாவுக்கு போன சித்தாளு ...மற்றும் மதறாஸ் பாசையில் வந்த கதைகள்  திரைபடங்களில்  நாடகங்கள்  போன்ற தாக்கத்தினால்  இந்த கள பெயரை மதராசி என்று வைத்து கொண்டு  முடிந்தளவு   அந்த மொழியிலே எழுதி யாழ் களத்தில் விவாதித்தேன் .. இன்று நினைத்தாலும் அது போல எழுத முடியவில்லை ....

 

ஒரு விவாத்த்தின் பொழுது கிருபன் . குருவி பங்குற்று இருந்தார்கள் . அதில் நண்பர் நாரதரும் மதராசு மொழியில் என்னோடு பதிலுக்கு பதிலுக்கு மிக கச்சிதமாக  எழுதி இருந்தார் . அப்பொழுது யாழ் களத்தில் மட்டுறத்தினராக இருந்து  இளைஞன் அந்த மொழி விளங்காமால் நாரதரும் மதராசியும் தமிழில் எழுதி விவாதியுங்கள்  ஒரு வேண்டுகோளை கூட விட்டார் . அது அந்த மொழிநடையில் ஓரளவுக்கு எழுதி இருக்கிறேன் .சந்தோசத்தை தந்தது. ஏன் சொல்லுகிறேன் என்றால் யாழ் களம் எங்களின் பல பரீட்சத்தா முயற்சிகளை   விதைத்து பார்ப்பதற்கு நல்ல நிலமாக கூட இருந்திருக்கிறது ,,மீண்டும் நன்றிகள்

 

 

ஆரம்பத்தில் எழுதிய மதராஸி நடை மொழி போல் தொடர்ந்து எழுத முடியாமால் போய் விட்டது .இடையில் விட்டமையால் .....நாரதரும் மதராசியும் பேசும் பொழுது இளைஞன் குறுக்கீடு செய்த பதிவுகள் போன்ற பதிவுகளை தேடி பார்க்கிறன்  கண்டு பிடிக்க முடியவில்லை ..தேடி பதிவுகளை கண்டு பிடிக்க கூடிய அனுபவம் பெற்றவர்கள் யாரும் அதை பெற்ற தந்தால் நன்றி கள்

Link to comment
Share on other sites

நாகேஷின்  வாழ்த்துக்கள்....சிறுகதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்த்து ..எனக்கு என்னவோ நான் சிறுகதை வடிவத்தில் எழுதவில்லையோ மற்றவர்கள் அங்கீரிப்பார்களோ என்ற தயக்கமும் கூட இருந்த்து .அந்த தயக்த்தை உடைத்து  தொடர்ந்து சிறுகதை எழுதுவதற்கு  ஒரு ஊக்கத்தை முதலில் தந்த்து யாழ் இணையமே ,,நன்றிகள் பல கோடி

 

http://mithuvin.blogspot.co.uk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
722151490_1925412.gif?4


 

ஆறு வருடங்களுக்கு... முன்பு, ஈழப் போர் மும்முரமாக நடந்த வேளை... அங்கிருந்து வரும் செய்திகளை அறிய... புதினம், பதிவு, தமிழ்நாதம் போன்ற இணையச் செய்திகள் மூலம் அறிந்து கொண்டு அதனைப் பற்றிய கருத்துக்களை... நண்பர்களுடன் விவாதிப்பது வழக்கம்.
 

அப்போது ஒரு நண்பர், யாழ்களத்தின் இணைய முகவரியை... தந்துதவினார்.
முதலாக‌ அந்த முகவரிக்குச் சென்று பார்த்த போது... நான் தேடிய ஆள் இவர் தான்.. அடைந்த, மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
 

ஆனாலும்... அங்கு பலர் அழகிய தமிழில், கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து... என்னால் தமிழில்... எழுத முடியாதே என்ற தயக்கத்துடன், சிறிது நாட்கள் வாசகனாகவே... இருந்தேன்.
 

அப்படி என்னால்... தொடர்ந்து இருக்க முடியாததால், ஒரு நாள் தட்டுத்தடுமாறி... பல பிழைகளுடன் என்னை... அரிச்சுவடிப் பகுதியில் அறிமுகம் செய்து..... http://www.yarl.com/forum3/index.php?showtopic=35074&page=1 இன்று வரை அதனைப் பிரிய மனமில்லாது... தினமும் என்னை வர வைக்கும் இணையமாக யாழ் களம் இருக்கின்றது.

 

மனிதனானவன்... பலரும் போற்றும் வகையில்,  வாழ்க்கையில்... ஒரு சாதனையாவது செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில்... தனது இளமைக் காலத்தில்... யாழ்களத்தை ஆரம்பித்து, இன்று... அதனை 16 வயது கொண்டாடும் வயது வரை... வளர்த்தெடுத்த மோகன் அண்ணாவும் ஒரு சாதனையாளனே...

 

உண்மையில்... நான் யாழ்களத்தில் இணைந்திராவிட்டால்.... தமிழில் எனக்குரிய பரிச்சயம் வெகு தொலைவிற்கு போயிருக்கும் என்பதில் ஐயமில்லை. யாழில்... இணைந்தன் மூலம் ஒரு நெருங்கிய, நட்பு வட்டத்துக்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதால்... பல கவலைகளை... மறக்கக் கூடியதாக உள்ளது.

 

யாழ்களம் தொடர்ந்தும்... பல ஆண்டுகளை கடக்க எனது வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

நான் முதல் முதல் யாழில் இணைந்து ஆங்கிலத்தில் எழுதி தமிழில் எப்பிடி எழுதுவது என்று    ஏங்கி நின்ற வேளையில்  தமிழ் சிறி அண்ணாவே எனக்கு தமிழில் எப்பிடி எழுதி அதை ஓட்டுவது என்று அரிச்சுவடியில் எனக்கு கூற .அவர் கூறிய படி நான் செய்து அதை தமிழில் பார்க்க .அன்று மனம் பட்ட ஆனந்தம் ..................இன்றும் அதை மறக்க முடியவில்லை ..நன்றிகள் யாழ் இணையம் ...... :) 

Link to comment
Share on other sites

யாழ் நிர்வாகத்திடம் இந்த 16 ஆவது அகவையை ஒட்டி திண்ணையில் தடை செய்த உறவுகளுக்கு பொது மன்னிப்பு அழிக்க அன்பு வேண்டுகோள் ஒன்று விடுத்தால் என்ன ??

Link to comment
Share on other sites

பொது மன்னிப்பு வழங்கலாம் நல்ல முடிவு. மகிழ்வான நாளில் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்துதல் நல்லதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் யாழுக்குமான உறவு என்பது 2005 காலப்பகுதியில் ஆரம்பித்தது அந்நேரம் இந்தக்களத்திற்குள் உள்பட்டு எழுதத் தெரியாத ஒரு நிலை இருந்தது. என்னுடைய சில கவிதைகளை யாழ் மோகனுக்கு அனுப்பி வைப்பேன் அப்போது அவை எதுவும் தவறாமல் யாழின் முகப்பில் இணைக்கப்பட்டது எல்லா இடங்களிலும் எங்கள் படைப்புகளை உடனடியாக ஏற்றும் கொள்ளும் தன்மைகள் இருக்கவில்லை. ஏன் எத்தனையோ தடவைகள் கனடா உலகத்தமிழர் பத்திரிகைக்கு அனுப்பிய என்னுடைய ஆக்கங்கள் பிரசுரமாகமலே குப்பைத்தொட்டிகளுக்குள் போன சம்பவங்களும் உண்டு. அத்தகைய ஒரு காலகட்டத்தில்தான் எனக்கு தமிழ்நாதம், யாழ் இணையம் என்பன அறிமுகமாயின. அப்போது தமிழ்நாதத்திலும் யாழ் இணையத்திலும் என்னுடைய ஆக்கங்களை உடனடியாக ஏற்று பிரசுரிக்கும் தன்மைகளே இவ்விரு இணையங்களுடனான என்னுடைய தொடர்பை வளர்த்தன. 2005 பகுதியில் முதன் முதலாக வேறு சில புனை பெயர்களுடன் யாழில் நுழைந்தேன். அப்போது பெரிதாக எதையும் எழுதவில்லை சில மாதங்களுக்குள்ளாகவே கடவுச் சொற்கள் மறந்து விட்டன.. தொடர்ந்து 2006 காலப்பகுதியில் நான் ஏற்கனவே உள்ள எனது புனைபெயருடன் இந்தக்களத்தில் பதிவிட ஆரம்பித்தேன் சிறிது காலம் கவிதைப்பகுதியிலேயே எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது இளையவர்கள் அதிகமாக எழுதிக் கொண்டிருந்தார்கள். அத்தோடு புதிதாக வந்தவர்களிடம் இலகுவாக சினேகம் பாராட்டும் தன்மை குறைவாக இருந்ததும் பெண்களோடு உரையாட இங்குள்ளவர்களுக்கு சிறிது தயக்கமும் இருந்ததால் என்னுடைய ஆரம்ப நாட்கள் இங்கு தனிமைப்பட்ட உணர்வை எனக்குள் விதைத்திருந்தன. இங்கு இலகுவாக உரையாட முடியாமல் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத இடைவெளி ஒன்றும் இருந்தது. அப்போதெல்லாம் என்னுடைய எழுத்துக்கள் மிக சீரியசானதான இருந்ததும் அதற்கு காரணம் எனலாம். இலகுவாக நட்பு பாராட்டாத்தன்மையும் இருந்தது அந்த பிம்பத்தை மாற்றவேண்டும். இலகுவாக மற்றவர்களுடன் கலகலப்பாக உரையாட எனக்கு இன்னொரு முகத்தின் தேவை அந்நாட்களில் ஏற்பட்டது. அதுவும் எனக்கு இலகுவாக அமைந்தது. அந்தப்புதிய முகத்தின் பயணத்தில் எனக்கு எண்ணற்ற நண்பர்கள் உருவாகினர் அப்போது நாங்கள் இங்கு அடித்த லூட்டி இருக்கிறதே.. எத்தனை காலம் சென்றாலும் மாறாத புன்னகையை மட்டுமே வழக்கக்கூடியதாக இன்றும் இருக்கிறது. 

 

யாழின் தொடர் பயணத்தில் நிறையவே தாயகம் சார்ந்த விடயங்களில் ஈடுபட்டு பலரும் இணைந்து பெருவிடயங்களை நடைமுறைப்படுத்தினோம்... குறிப்பாக 2008 - 2009 காலப்பகுதியில் இங்கு இணைந்திருந்தவர்கள் செய்த இணையவள உதவிகள் மற்றும் தகவல் பதாகைகள் தயாரிப்பு என்று தமிழினத்தின் இன்னல் களைய உழைத்தவர்கள் ஏராளம். இந்தக்காலத்திலேயே நேசக்கரம் அமைப்பின் தோற்றமும் உருவானது இந்தக் காலம் என்பது மிகவும் பொற்காலம் ஒரு விடயத்தை முன்னெடுத்துச் செய்வது என்பது இலேசானது அல்ல அதுவும் உலகம் முழுவதும் பரவி இருக்கக்கூடிய உறவுகள் ஒரு தளத்தில் ஒரே எண்ணோட்டத்தில் இணைந்து செயல்படுவது என்பது சாத்தியமற்றது ஆனால் அந்த ஒற்றைத்தளம் இந்த இடத்தில் பரிபூரணப்பட்டிருந்தது. யாழ் என்பது காலம் எமக்களித்த பெரும் புதையல் அதனை உருவாக்கிய மோகனுக்கும் அவருக்கு உதவியாக முன்னின்று உழைத்த அவருடைய நண்பர்களுக்கும் தமிழினம் சார்ந்து பெரு நன்றியை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2014 - 2024

 

1003579_10151988431047944_504674900_n.jp

 

இது போன்ற செய்திகள்.. யாழ் போன்ற இணையப் பையன்களின் எதிர்காலத்தில் நிச்சயம் செல்வாக்குச் செய்யும். மக்கள் அதிக நேரம்.. சிமாட்போன்களில் செலவு செய்வதைக் குறைத்து.. எல்லா தகவல்களையும் ஓரிடத்தில்.. சுருங்க.. இரத்தினச் சுருக்கமாக அறியவும்.. தமக்கிடையே அங்கிருது..தொடர்வுகளை கொள்ளவும்.. விருப்பங்களை எண்ணங்களை சுருக்கமாகவும் குறுகிய நேரத்திலும்.. பதிவிடவுமே விரும்புவார்கள். அதை இட்டு யாழ் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை நம்பலாம். யாழ் 2024 இலும் மிளிர்வான்..! நிச்சயம் மாற்றங்கள் அங்கும் இருக்கும். ஆனால்.. உறவாடல் என்பது தொடர்ந்திருக்கும்.

 

வாழ்க யாழ் பையா. நீ... நீடித்து நிலைக்க வாழ்த்துக்களும் ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு. :icon_idea::)


படச் செய்தி: பிபிசி.

Link to comment
Share on other sites

பதினாறு....
 
பதினாறு 
அகவை..
என்பது..
..
அது ஒரு 
காலப்பதிவின்
ஆரம்பமல்ல..
 
கன்னி
பருவத்தின் 
முழுமை!
 
ஊரெல்லாம்
விழுந்த
இடியை
 
ஓசையில்லாமல்..
 
உனக்குள்
அழுதுகொண்டே
மெல்லமாய்
 
கர்ப்ப பையில்
யுத்த
கரு இறங்க
 
இரவல் 
களம்
தந்தவளே
தாயே..
 
 
குரல் வளை..
அறும் நிலை 
வந்தும்
 
எத்தனை ஆறும்
ஏழ் கடலும்
எங்களை
 
மூழ்கடிக்க வந்தும்..
பொத்தி 
வைத்திருந்தாயே..
வாழிய நீ!
 
வரலாறு..
என்பது
வேறொன்றும்
இல்லை..
 
வாழ
தெரிந்த
காலத்தை...
 
எப்படி
வாழ தெரியாமல்
வீணடித்தோம்
என்பதே!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில நின்டு நான் என்ன செய்ய?????

 

தாவலாம்.. குதிக்கலாம்.. கும்மாளம் அடிக்கலாம்.. காகம் பற பற.. காகக் குஞ்சே பற பற.. காகத்தின் முட்டையே பற பறன்னு.. பர பரப்பா பேசலாம்.. எத்தினை செய்யலாம்.

 

1966958_10151988783437944_694120374_n.jp

 

1947623_10151988788852944_1176517771_n.j

 

இப்படிக் கனக்கச் செய்யலாமே.. ஆதியானவர். :):lol:

 

இப்ப எல்லாம்.. மனுசனட்ட மனிதாபிமானமும் அருகிட்டு.. ஜீவகாருணியமும் அருகிட்டு.. ஒரே பொய்யும் புரளியும் வெட்டும் குத்தும் போட்டியும் பொறாமையும்..ஆனால் மற்ற உயிரினங்களிடத்தில் மனிதனிடம் இல்லாத மனிதாபிமானம்.. ஜீவகாருணியம் கூடிக்கிட்டே வருகுது. !!! :)

Link to comment
Share on other sites

16 ஆவது அகவை காணும் யாழுக்கு எனது வாழ்த்துக்கள்.
நாம பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது  போரடிக்கும் சமயங்களில் சும்மா இணைய உலா
செய்யும் போது நமது கண்ணில் பட்டதுதான் இந்த யாழ் இணையம். அப்போ நமக்கு ஒழுங்காக
தமிழில் தட்டச்சு செய்ய முடியாத காரணத்தால் உடனே இணைய முடியவில்லை பின்பு 2005 இல்
தான் இணையும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பவுமே தமிழ் ஒழுங்காக தட்டச்சு செய்ய தெரியா
ஒரு மாதிரி தட்டித் தடுமாறி தட்டச்சு செய்யப் பழகி பேந்து 24 மணித்தியாலமும் யாழ் தான் கவிதை
கதை கட்டுரை அரட்டை என மிக இனிமையான காலங்கள் மறக்கவே முடியாது. தற்பொழுது
நேரமின்மையால் யாழில் எழுத முடியவில்லையே ஒழிய யாழுக்கு வராமல் இருப்பதில்லை.
ஸ்ஸ்ஸ்ஸ் ..........யப்பா கொஞ்ச நாள் தமிழிலில் தட்டச்சு செய்யாதது கண்ணைக்கட்டுதப்பா தட்டச்சு செய்ய முடியலை
Link to comment
Share on other sites

அலை பொழுது போக்க, சண்டை பிடிச்சுப் பழக  வரும் இடம் யாழ். யாழ் இல்லாட்டி யாரோடை தான் சண்டையைப் பிடிக்கிறதுபா??? 

வாழ்க யாழ்! வளர்க உன் புகழ்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எல்லாரும் எழுதேக்கை நானும் எழுதோணும் போலை இருக்கு ......என்னத்தை பெரிசாய் சொல்ல இருக்கு........idea6ws_zpsa34812e4.gif
இவ்வளவுகாலமும் யாழ்களத்திலை கதை,கவிதை,கட்டுரை,நாடகம் ஒண்டுமே எழுதாமல் பத்தோடை பதிணொண்டாய் இழுபறிப்பட்டுக்கொண்டு வாற  ஒரேயொரு சீவன் ஆரெண்டால்?  
 
வேறை ஆர் நான் தான்! icon6m_zps6069767e.gif
 
funnyz_zps262977cc.gif வாற வரிசம் பாப்பம்....கிட்டத்தட்ட கம்பராமாயணம் ரேஞ்சிலை ஒரு கதை எழுதத்தான் இருக்கு cool2_zps0675623f.gif  funny-gifs-very-excitedaa_zps0e214d18.gi
 
 
Link to comment
Share on other sites

2007 என்று நினைக்கின்றன் ஆஜீவன் சுவிஸில் இருந்து வந்து எனது வீட்டில் தங்கியிருந்தார் .தினமும் காலை எழும்பி லப் -டாப்பை திறந்து வைத்து என்னாவோ வாசிப்பார் எழுதுவார் .அவர் தான் யாழ் என்று ஒரு களம் இருக்கு என்று எனக்கு சொன்னவர் .அத்துடன் யாழ் கள அங்கத்தவர்கள் ஒரு சந்திப்பையும் அஜீவனுடன் நடாத்தினார்கள் அதற்கு நானும் போயிருந்தேன் அங்கு அவர்கள் கதைப்பதை பார்க்க ஒருவித ஆச்சர்யமாக இருந்தது .ஆளை ஆள் தெரியாமல் அவர்கள் எழுதுவதை வைத்து தங்களுக்குள் பரீட்சையம் ஆகி ஏதோ எல்லாம் கதைத்தார்கள் .எனக்கு தலை சுற்ற தொடங்கிவிட்டது ஆனால் ஒரு வித சுவாரஸ்யமாகவும் இருந்தது .

அடுத்தடுத்த வாரங்களில் நானும் யாழை வாசிக்க தொடங்கினேன் . பெரிதாக ஆர்வம் வரவில்லை காரணம் அந்த நேரத்தில் அனைத்து புலம் பெயர் ஊடகங்களும்  கையாண்ட புல்லரிப்பு  விடயங்கள் தான் அதிகமாக இருந்தது . இருந்தும் சிலவிடயங்களுக்கு பதில் எழுதவேண்டும் என்று தோன்றியதால் அங்கத்தவரானேன் ஆனால் எதுவும் எழுதவில்லை .ஆனால்தொடர்ந்து வாசிக்க தொடங்கியிருந்தேன் .அரசியலை தவிர்த்து மிக நல்லொதொரு இணையமாக கவிதை ,கதை என்று பல விடயங்கள் மிக ஆக்கபூர்வமாக இருந்தது .

2009 இற்கு பின்னர்தான் காலடி எடுத்துவைத்தேன் .அதுவும் எடுத்தவுடன் அரசியல் பெரிதாக எழுதவில்லை என நினைக்கின்றேன் .அப்படியே மெல்ல மெல்ல உள்ளே புகுந்து யாழை தினமும் மீட்டாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன் .

எழுதுவதில் மிகவும் சோம்பேறியான என்னை தட்டசில் தமிழை எழுத வைத்ததும் பின்னர் கதை எழுத வைத்ததும் யாழ் தான் .

யாழை நடத்த நிர்வாகம் படும் கஷ்டம் பற்றி (நிதி உட்பட ) சொல்ல தேவையில்லை . எனக்கும் ஏதாவது பங்களிப்பு செய்யவேண்டும் போல இருக்கும் .திட்டம் எதுவும் இருந்தால் சொல்லுங்கள் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தேவி, காங்கேசு வரை ஊர்ந்து செல்லும்
பலாலி விமான தளம் கட்டாந்தரையாக அப்படியே இருக்கும்
ஆஸ்பத்திரி வீதி நடுவிலுள்ள மரங்கள் நீங்கி இருக்கும்
'செல்லா சினிமா' ஓட திணறிக்கொண்டிருக்கும்
சாலை சந்திப்பில் தானியங்கி விளக்குகள் முளைத்திருக்கும்
வெள்ளை வேன் பழுப்பு வேனாகி இருக்கும்
பூபாலசிங்கம் ஆன் லைனில் புத்தகம் விற்றுகொண்டிருப்பார்
இளசுகள் பிட்சா பர்கர் மட்டுமே சாப்பிடும்
'அண்ணே றைட்' என்பதற்கு பதில் 'அம்மே றைட்' என சிங்களத்தில் பலரும் கூவலாம்
இ.போ.ச வாகனம் சிவப்பிலிருந்து வெள்ளையாகியிருக்கும்
வேலணை சந்திப்பு புழுதியோடியேயிருக்கும்
கீரிமலையில் குளித்த யாழ் இனம், புலம் பெயர்ந்துகொண்டே இருக்கும்

ஆனால் நம் யாழில் மட்டும் தமிழ்மண் மனம் சுகந்தம் வீசிக்கொண்டே இருக்கும்!

 

 

மன்னிக்கவும்!

 

"26ல் யாழ்" என்றதும், "26ல் யாழ்ப்பாணம்" என்றே நினைத்துவிட்டேன்! :icon_idea:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வேலணை சந்திப்பு புழுதியோடியேயிருக்கும்

 

 

வங்களாவடிச் சந்தி, புழுதியோடியிருக்கும்!

 

இவ்வளவு விடயங்கள் மதுரைக்குத் தெரிஞ்சிருக்குது எண்டால்.......... :o

 

இந்தச் சின்ன வீடு, சின்ன வீடு எண்டு சொல்லுறாங்களே, அப்படி ஏதாவது..... :D

 

ம்ம்ம்.... மதுரையாரா.. ஒருக்காலும் இருக்காது! :icon_idea:

 

யாழ் தேவி, காங்கேசு வரை ஊர்ந்து செல்லும்

 

காங்கேசன்துறை வரை....!

 

பலாலி விமான தளம் கட்டாந்தரையாக அப்படியே இருக்கும்

 

சீனாவின் இராணுவ விமானங்கள், தரித்து நிற்கும் இடமாக மாறியிருக்கும்! :o

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.