Jump to content

16 வது அகவை காணும் யாழ்.. 26 இல் எப்படி..இருக்கும்.?!


Recommended Posts

யாழ் களமும், ஒரு விதத்தில, தமிழ்க் கலியாணம் மாதிரித் தான்!

ஒரு அவசரத்துக்கு, விட்டிட்டு ஓடேலாது!

இது தான் புங்கையூரன் அண்ணா சொன்ன பதில் தமிழ்சூரியன்,

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

யாழ் களமும், ஒரு விதத்தில, தமிழ்க் கலியாணம் மாதிரித் தான்!

ஒரு அவசரத்துக்கு, விட்டிட்டு ஓடேலாது!

இது தான் புங்கையூரன் அண்ணா சொன்ன பதில் தமிழ்சூரியன்,

உண்மை நவீனன் .............யாழில் இணைந்த தமிழ் உணர்வுள்ள எந்த தமிழனாலும் யாழை விட்டு வெளியே போக முடியாது . அரசியல் கருத்துக்களால் வேறு வேறு கோணத்தில் இருந்தாலும் ..அந்த தமிழ் உணர்வு ஒன்றாக இணைத்துவிடும் .அதுதான் யாழ் ........நான் கண்ட அனுபவம் 

Link to comment
Share on other sites

கம்பியூட்டரில்  தமிழ் என்று அதிசயத்துடன் பார்த்து பிரமித்தும் கொண்டு  பார்த்து கொண்டும் இருக்கும் பொழுது இந்த யாழ் இணையம் எனக்கு கண்ணில பட்டது . இதில் பங்கு பெறுபவர்கள்  கல்வியாளர்களாக இருக்க கூடும்  மேதாவிகளாக இருக்க கூடும் நினைத்தேன் ,. நமக்கு இங்கு என்ன வேலை? அதுவும் அழகு தமிழில் எழுதி விவாதிக்கும் பொழுது பிரமிப்பு இருக்காதா என்ன?..

 

 

அத்துடன்  எனது வாழ்வுயிலில் கம்பியூட்டருக்கும் எனக்கு தொடர்பே இல்லாத நிலையில் இருந்தும் கூட இவர்கள் மாதிரி  தமிழ் எழுத மாட்டனா என்ற நப்பாசை ஏனோ எழுந்தது...

 

அதிர்சட வசமாக யாழ் இணையம் இலகுவாக அறிமுகபடுத்தி வைத்திருந்த பாமினி  உரு  தட்டச்சு முறை  தமிழில் எழுத பழக்கியது .அதன் மூலம் யாழில் எழுதி பார்த்தேன்  .ஆமா நானும் தமிழில் எழுதுகிறேன் என்று சந்தோசம் பொங்க  பிறவி பயன் பெற்ற இன்பத்தை அடைந்தேன்.

 

அந்த எழுத்தின் சில வரவேற்பு ஊக்கத்தின் மூலம்  வலைபதிவை உருவாக்கி   எழுத தொடங்கினேன் . இந்த சிறியோனை தமிழில் எழுத வைத்த யாழ் இணயத்துக்கு  எனது வாழ்த்துக்கள் . யாழ் இணையத்தின்  பொது கருத்தோடு சில  வேளை  ஒத்து போக முடியாமால் சந்தர்ப்பம் ஏற்பட்ட பொழுதும் வலிந்து ஒரு சமரச போக்கை என்னுள் உருவாக்கி  யாழ் இணையத்தில் இருந்து தூர போகாமால்  அதனுடன் பயணித்திருக்கிறேன் என்று நம்புகிறேன் .

 

மீண்டும் வாழ்த்துக்கள் யாழ் இணையத்துக்கு

Link to comment
Share on other sites

நான் எவ்வளவு தூரம் பயணித்தாலும் யாழ் இணைம்  என்றென்றும் ஆழமாய் அடி மனதில்  புதைந்திருக்கும்.யாழிற்காக எழுதிய கதைகள்  கவிதைகள்  எனக்கே இப்போ நினைவில்  இல்லை.முக்கியமாக  என்னை அடையாளப் படுத்தியது ஜரோப்பிய  அவலம் என்கிற கட்டுரைகளும்  அதன் பின்னரான  நாடகங்களும். அதற்கடுத்ததாக  டண்னால் தொடங்கப் பட்ட  நேசக்கரம்  அமைப்பில்  நானும் இணைந்து பணியாற்றியது  அதன் பல அகவைகளிலும்  ஏதாவது ஒரு நிகழ்வினையும் நான்செய்திருக்கிறேன்.  குறிப்பாக பட்டி மன்றம் அதைப்போல தொடர்ந்தும் யாராவது ஏதாவது நிகழ்ச்சிகளை  செய்து சிறப்பிக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாழ்ந்த போது நான் மிகவும் நேசித்த சஞ்சிகை, டொமினிக் ஜீவா அவர்களால் நடத்தப்பட்ட 'மல்லிகை' ஆகும்!

 

எனது தந்தையார், ஒவ்வொரு இதழையும் தவறாமல் வாங்கி வருவார். ஆனால், அதை அவர் பெரிதாக வாசித்ததில்லை. அவரிடம், இதுபற்றிக் கேள்வி எழுப்பிய போது, அவர் அளித்த பதில், இன்றைய சூழ்நிலையிலும் மிகவும் பொருத்தமானது.

 

வாசிக்க வேண்டும் என்பது முக்கியமானதல்ல, வாங்க வேண்டும் என்பதே முக்கியமானது. அதாவது, உள்ளூர் பத்திரிகையான 'மல்லிகை' ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதே அதன் பொருளாக இருந்தது! அதன் பின்னர், மல்லிகை, சிரித்திரன் போன்ற பத்திரிகைகளை எப்போதும் பணம் கொடுத்து வாங்கும் பழக்கம் என்னிடமும் தொற்றிக்கொண்டது.

 

விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகள் என்னை அவ்வளவுக்குக் கவரவில்லை. ஆனால், கலைமகள், மஞ்சரி, கல்கி போன்றவைகள் ஓரளவுக்கு, என்னைக் கவர்ந்தன என்றே சொல்லவேண்டும்!

 

யாழை, மஞ்சரியுடன் ஒப்பிடலாம் என நினைக்கிறேன்!

 

செய்திகள், சிறுகதைகள், கவிதைகள், சினிமா விமரிசனங்கள், அரசியல் விமரிசனங்கள் என்ற அனைத்தையும் ஓரிடத்தில் தருவது தான் யாழின் சிறப்பாகும் எனக் கருதுகின்றேன்!

 

யாழுக்கும், அதனைக் கொண்டு நடத்தும் நிர்வாகக் குழுவுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு சிறிய அங்கத்துவ சந்தா முறையை, வருங்காலத்தில் 'யாழ்' அறிமுகப்படுத்துமெனின், நாம் பெரிதும் மகிழ்ச்சியடைவேன்!

 

ஒரு உயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடமொன்றுக்குள், உள்ளிடும் போது ஏற்படும் ஒரு விதமான தயக்க உணர்வு, யாழில் உள்ளிடும் போது எனக்கு ஏற்பட்டதில்லை. அதுவே 'யாழின்' சிறப்பும், தனித்துவமும் என்பேன்.

 

வெறும் பார்வையாளர்களாக இல்லாது, அனைவரும் பங்காளிகளாகிப் பயணிப்பதிலேயே, யாழின் வெற்றி தங்கியுள்ளதென நினைக்கிறேன்!

 

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காமல், கொஞ்சநேரம் சிரிப்பம் வாங்கோ, சிந்தனைக்குச் சில படங்கள், இன்றைய பாடல், போன்றவையும் கோமகன் போன்றவர்கள் நடத்தும், மரங்கள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றை அடையாளம் காணும் திரிகளும், அண்மையில் செங்கொடி ஆரம்பித்த 'விடுகதைகள்' திரியும், அனைவருமே யாழில் பங்காளிகளாகலாம் என உணர்த்தி நிற்கும் திரிகளாக மிளிர்கின்றன!

 

சுமேரியர் தொடங்கிய, 'யாழின் காதல் கதை', எத்தனையோ எழுத்தாளர்களை அடையாளம் காட்டியுள்ளது. இது போன்ற திரிகள், 'உள்ளுக்குப் போவமா அல்லது வெளியே போவமா என்று 'வாசல் படிகளில்' நிற்கும் உறவுகளை, 'பயப்பிடாமல் வாங்கோ' என்று உள்ளே அழைத்துச் செல்லும்!

 

ஒருவரது பதிவொன்றுக்கு, ஊக்கமளித்து நிற்கும் கருத்தாளர்களே, யாழ் களத்தின் தூண்கள் என்பதில் சந்தேகம் இல்லை!

 

ஈழத்தமிழனின் 'துயர் நிறைந்த வாழ்வு'  நீடிக்கும் வரையுமாவது, யாழ் களம் வாழவேண்டும்!

 

அவளை வாழவைக்க வேண்டிய தார்மீகக் கடமை, ' புலம் பெயர் தமிழர்', ''நிலம் வாழ் தமிழர்', 'தொப்புள் கொடித் தமிழர்'. ',மலையகத் தமிழர்' என்ற எல்லாவிதமான தமிழர்களின் பொறுப்பாகும் என்றே கருதுகின்றேன்!

 

நவீன தொழில் நுட்பங்களோடு, யாழ் மகள் வளர வேண்டும், தமிழிருக்கும் வரை அவள் வாழவேண்டும், என்பது தான் எனது ஆசை!

 

வாழ்க தமிழ்...... வாழ்க யாழ் களம்!  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

யாழுக்கும், அதனைக் கொண்டு நடத்தும் நிர்வாகக் குழுவுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு சிறிய அங்கத்துவ சந்தா முறையை, வருங்காலத்தில் 'யாழ்' அறிமுகப்படுத்துமெனின், நாம் பெரிதும் மகிழ்ச்சியடைவேன்!

------

 

தினமும்... சும்மா வந்து எழுதிவிட்டுப் போகின்றோமே.. என்ற கூச்ச உணர்வு, என‌க்கும் ஏற்படுவதுண்டு.

புங்கை குறிப்பிட்ட... சிறிய சந்தா தொகையை, யாழ். எதிர்காலத்தில் அறிமுகப் படுத்தினால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
Mar 28 at 10:57 AM
எனக்கு யாழ் களத்துடனான அறிமுகம் ஒன்றரை ஆண்டுகளே ஆயினும் எனக்குக் கிடைத்த அனுபவங்களும், அறிவும், மனித மங்களைத் தெரிந்துகொள்ளக்கூடிய அனுபவங்களும் வாழ்வில் மறக்க முடியாதவை. யாழ் இணையம் என்றாலே கவிதை நினைவில் வருவதும் தவிர்க்க முடியாததாகி விட்டது. பலவிதமான செய்திகளை அறிந்து கொள்வது மட்டுமல்லாது திண்ணை என்னும் தளம் பலரை மனம் விட்டுப் பேசச் சிரிக்க நட்புக்கொள்ள வைத்ததை மறக்கவோ மறுக்கவோ முடியாது.
 
எமக்குள் ஒளிந்திருந்த திறமைக்களை எல்லாம் இலகுவாக வெளிக்கொணர உந்து சக்தியாக விளங்கியது யாழ்களமும் அங்கு கருத்தெழுதும் உறவுகளும் தான். இதில் எள்ளளவும் ஐயமில்லை. என் திறமையை எனக்குணர்த்திய யாழ்களத்தை வாழ்வின் கடைசிவரை மறக்க முடியாது என்பதும் உண்மை.
 
பலர் வருகின்றனர். போகின்றனர். தொடர்ந்து தம் சொந்த வீடுபோல் ஒருநாள் வராவிடில் தூக்கம் தொலைப்பவர்களும் கூட இங்குள்ளனர். அத்தனை சிறப்புடன் மற்றவரைக் கட்டிப்ப் போட்டு வைக்கும் திறமை கொண்ட யாழ் களம் தொடர்ந்தும் எத்தனை காலத்துக்கு இப்படியே இருக்க முடியும் என்று நெடுக்ஸ் எண்ணியது போன்றே நானும் எண்ணியிருக்கிறேன். தமிழை எம் சந்ததி மறந்துகொண்டு வரும் நிலையில் இளைய சந்ததியை ஈர்க்காவிட்டால் எம்முடன் யாழும் போகவேண்டிய நிலையை தவிர்க்க முடியாது. 
 
என்னதான் யாழ் இணையம் எம்மை அரவணைத்தாலும், கதைகள் என்ற பதுதியில் நாம் எழுதும் கதைகள் எவையும் உள்ளடக்காப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. பொதுவாக யாழ்களத்தைப் பார்ப்பவர்களுக்கும் யாழில் எழுதும் அனைவரின் எழுத்தும் போய் சேர வேண்டியது. அதை பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். எல்லோரையும் பராபட்சம் இல்லது அரவணைத்துச் செல்வதும் மிக முக்கியமான ஒன்று. மனித மனங்கள் விசித்திரமானவை. சிலர் வெளியே கூறலாம். சிலர் கூறமுடியாது சொல்லாமற் கொள்ளாமல் வெளியேறுவதர்க்கும் இதுவே காரணமாக அமைந்திருக்கலாம்.
 
இதில் கருத்துக்களை எழுதும் உறவுகளுக்கும் ஒன்று கூற வேண்டும். எதையும் துணிவாக எழுதுங்கள். மற்றவரை நோகடிக்கவேண்டும், இவரை எழுதவே இனி விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு குழுநிலை சார்ந்த எழுத்தாக உங்கள் எழுத்துக்கள் இருப்பது அனைவருக்கும், ஏன் யாழ் களத்துக்கும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் நான் உட்பட.
 
கருத்துக்கள் எழுதி என்னை ஊக்கப்படுத்திய உறவுகளுக்கும் யாழ் இணையத்துக்கும் என்றும் நான் கடமைப்பட்டவள்.

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் யாழ் இணயத்துக்கு ...ஜெயகாந்தனின் சினிமாவுக்கு போன சித்தாளு ...மற்றும் மதறாஸ் பாசையில் வந்த கதைகள்  திரைபடங்களில்  நாடகங்கள்  போன்ற தாக்கத்தினால்  இந்த கள பெயரை மதராசி என்று வைத்து கொண்டு  முடிந்தளவு   அந்த மொழியிலே எழுதி யாழ் களத்தில் விவாதித்தேன் .. இன்று நினைத்தாலும் அது போல எழுத முடியவில்லை ....

 

ஒரு விவாத்த்தின் பொழுது கிருபன் . குருவி பங்குற்று இருந்தார்கள் . அதில் நண்பர் நாரதரும் மதராசு மொழியில் என்னோடு பதிலுக்கு பதிலுக்கு மிக கச்சிதமாக  எழுதி இருந்தார் . அப்பொழுது யாழ் களத்தில் மட்டுறத்தினராக இருந்து  இளைஞன் அந்த மொழி விளங்காமால் நாரதரும் மதராசியும் தமிழில் எழுதி விவாதியுங்கள்  ஒரு வேண்டுகோளை கூட விட்டார் . அது அந்த மொழிநடையில் ஓரளவுக்கு எழுதி இருக்கிறேன் .சந்தோசத்தை தந்தது. ஏன் சொல்லுகிறேன் என்றால் யாழ் களம் எங்களின் பல பரீட்சத்தா முயற்சிகளை   விதைத்து பார்ப்பதற்கு நல்ல நிலமாக கூட இருந்திருக்கிறது ,,மீண்டும் நன்றிகள்

 

 

ஆரம்பத்தில் எழுதிய மதராஸி நடை மொழி போல் தொடர்ந்து எழுத முடியாமால் போய் விட்டது .இடையில் விட்டமையால் .....நாரதரும் மதராசியும் பேசும் பொழுது இளைஞன் குறுக்கீடு செய்த பதிவுகள் போன்ற பதிவுகளை தேடி பார்க்கிறன்  கண்டு பிடிக்க முடியவில்லை ..தேடி பதிவுகளை கண்டு பிடிக்க கூடிய அனுபவம் பெற்றவர்கள் யாரும் அதை பெற்ற தந்தால் நன்றி கள்

Link to comment
Share on other sites

நாகேஷின்  வாழ்த்துக்கள்....சிறுகதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்த்து ..எனக்கு என்னவோ நான் சிறுகதை வடிவத்தில் எழுதவில்லையோ மற்றவர்கள் அங்கீரிப்பார்களோ என்ற தயக்கமும் கூட இருந்த்து .அந்த தயக்த்தை உடைத்து  தொடர்ந்து சிறுகதை எழுதுவதற்கு  ஒரு ஊக்கத்தை முதலில் தந்த்து யாழ் இணையமே ,,நன்றிகள் பல கோடி

 

http://mithuvin.blogspot.co.uk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
722151490_1925412.gif?4


 

ஆறு வருடங்களுக்கு... முன்பு, ஈழப் போர் மும்முரமாக நடந்த வேளை... அங்கிருந்து வரும் செய்திகளை அறிய... புதினம், பதிவு, தமிழ்நாதம் போன்ற இணையச் செய்திகள் மூலம் அறிந்து கொண்டு அதனைப் பற்றிய கருத்துக்களை... நண்பர்களுடன் விவாதிப்பது வழக்கம்.
 

அப்போது ஒரு நண்பர், யாழ்களத்தின் இணைய முகவரியை... தந்துதவினார்.
முதலாக‌ அந்த முகவரிக்குச் சென்று பார்த்த போது... நான் தேடிய ஆள் இவர் தான்.. அடைந்த, மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
 

ஆனாலும்... அங்கு பலர் அழகிய தமிழில், கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து... என்னால் தமிழில்... எழுத முடியாதே என்ற தயக்கத்துடன், சிறிது நாட்கள் வாசகனாகவே... இருந்தேன்.
 

அப்படி என்னால்... தொடர்ந்து இருக்க முடியாததால், ஒரு நாள் தட்டுத்தடுமாறி... பல பிழைகளுடன் என்னை... அரிச்சுவடிப் பகுதியில் அறிமுகம் செய்து..... http://www.yarl.com/forum3/index.php?showtopic=35074&page=1 இன்று வரை அதனைப் பிரிய மனமில்லாது... தினமும் என்னை வர வைக்கும் இணையமாக யாழ் களம் இருக்கின்றது.

 

மனிதனானவன்... பலரும் போற்றும் வகையில்,  வாழ்க்கையில்... ஒரு சாதனையாவது செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில்... தனது இளமைக் காலத்தில்... யாழ்களத்தை ஆரம்பித்து, இன்று... அதனை 16 வயது கொண்டாடும் வயது வரை... வளர்த்தெடுத்த மோகன் அண்ணாவும் ஒரு சாதனையாளனே...

 

உண்மையில்... நான் யாழ்களத்தில் இணைந்திராவிட்டால்.... தமிழில் எனக்குரிய பரிச்சயம் வெகு தொலைவிற்கு போயிருக்கும் என்பதில் ஐயமில்லை. யாழில்... இணைந்தன் மூலம் ஒரு நெருங்கிய, நட்பு வட்டத்துக்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதால்... பல கவலைகளை... மறக்கக் கூடியதாக உள்ளது.

 

யாழ்களம் தொடர்ந்தும்... பல ஆண்டுகளை கடக்க எனது வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

நான் முதல் முதல் யாழில் இணைந்து ஆங்கிலத்தில் எழுதி தமிழில் எப்பிடி எழுதுவது என்று    ஏங்கி நின்ற வேளையில்  தமிழ் சிறி அண்ணாவே எனக்கு தமிழில் எப்பிடி எழுதி அதை ஓட்டுவது என்று அரிச்சுவடியில் எனக்கு கூற .அவர் கூறிய படி நான் செய்து அதை தமிழில் பார்க்க .அன்று மனம் பட்ட ஆனந்தம் ..................இன்றும் அதை மறக்க முடியவில்லை ..நன்றிகள் யாழ் இணையம் ...... :) 

Link to comment
Share on other sites

யாழ் நிர்வாகத்திடம் இந்த 16 ஆவது அகவையை ஒட்டி திண்ணையில் தடை செய்த உறவுகளுக்கு பொது மன்னிப்பு அழிக்க அன்பு வேண்டுகோள் ஒன்று விடுத்தால் என்ன ??

Link to comment
Share on other sites

பொது மன்னிப்பு வழங்கலாம் நல்ல முடிவு. மகிழ்வான நாளில் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்துதல் நல்லதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் யாழுக்குமான உறவு என்பது 2005 காலப்பகுதியில் ஆரம்பித்தது அந்நேரம் இந்தக்களத்திற்குள் உள்பட்டு எழுதத் தெரியாத ஒரு நிலை இருந்தது. என்னுடைய சில கவிதைகளை யாழ் மோகனுக்கு அனுப்பி வைப்பேன் அப்போது அவை எதுவும் தவறாமல் யாழின் முகப்பில் இணைக்கப்பட்டது எல்லா இடங்களிலும் எங்கள் படைப்புகளை உடனடியாக ஏற்றும் கொள்ளும் தன்மைகள் இருக்கவில்லை. ஏன் எத்தனையோ தடவைகள் கனடா உலகத்தமிழர் பத்திரிகைக்கு அனுப்பிய என்னுடைய ஆக்கங்கள் பிரசுரமாகமலே குப்பைத்தொட்டிகளுக்குள் போன சம்பவங்களும் உண்டு. அத்தகைய ஒரு காலகட்டத்தில்தான் எனக்கு தமிழ்நாதம், யாழ் இணையம் என்பன அறிமுகமாயின. அப்போது தமிழ்நாதத்திலும் யாழ் இணையத்திலும் என்னுடைய ஆக்கங்களை உடனடியாக ஏற்று பிரசுரிக்கும் தன்மைகளே இவ்விரு இணையங்களுடனான என்னுடைய தொடர்பை வளர்த்தன. 2005 பகுதியில் முதன் முதலாக வேறு சில புனை பெயர்களுடன் யாழில் நுழைந்தேன். அப்போது பெரிதாக எதையும் எழுதவில்லை சில மாதங்களுக்குள்ளாகவே கடவுச் சொற்கள் மறந்து விட்டன.. தொடர்ந்து 2006 காலப்பகுதியில் நான் ஏற்கனவே உள்ள எனது புனைபெயருடன் இந்தக்களத்தில் பதிவிட ஆரம்பித்தேன் சிறிது காலம் கவிதைப்பகுதியிலேயே எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது இளையவர்கள் அதிகமாக எழுதிக் கொண்டிருந்தார்கள். அத்தோடு புதிதாக வந்தவர்களிடம் இலகுவாக சினேகம் பாராட்டும் தன்மை குறைவாக இருந்ததும் பெண்களோடு உரையாட இங்குள்ளவர்களுக்கு சிறிது தயக்கமும் இருந்ததால் என்னுடைய ஆரம்ப நாட்கள் இங்கு தனிமைப்பட்ட உணர்வை எனக்குள் விதைத்திருந்தன. இங்கு இலகுவாக உரையாட முடியாமல் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத இடைவெளி ஒன்றும் இருந்தது. அப்போதெல்லாம் என்னுடைய எழுத்துக்கள் மிக சீரியசானதான இருந்ததும் அதற்கு காரணம் எனலாம். இலகுவாக நட்பு பாராட்டாத்தன்மையும் இருந்தது அந்த பிம்பத்தை மாற்றவேண்டும். இலகுவாக மற்றவர்களுடன் கலகலப்பாக உரையாட எனக்கு இன்னொரு முகத்தின் தேவை அந்நாட்களில் ஏற்பட்டது. அதுவும் எனக்கு இலகுவாக அமைந்தது. அந்தப்புதிய முகத்தின் பயணத்தில் எனக்கு எண்ணற்ற நண்பர்கள் உருவாகினர் அப்போது நாங்கள் இங்கு அடித்த லூட்டி இருக்கிறதே.. எத்தனை காலம் சென்றாலும் மாறாத புன்னகையை மட்டுமே வழக்கக்கூடியதாக இன்றும் இருக்கிறது. 

 

யாழின் தொடர் பயணத்தில் நிறையவே தாயகம் சார்ந்த விடயங்களில் ஈடுபட்டு பலரும் இணைந்து பெருவிடயங்களை நடைமுறைப்படுத்தினோம்... குறிப்பாக 2008 - 2009 காலப்பகுதியில் இங்கு இணைந்திருந்தவர்கள் செய்த இணையவள உதவிகள் மற்றும் தகவல் பதாகைகள் தயாரிப்பு என்று தமிழினத்தின் இன்னல் களைய உழைத்தவர்கள் ஏராளம். இந்தக்காலத்திலேயே நேசக்கரம் அமைப்பின் தோற்றமும் உருவானது இந்தக் காலம் என்பது மிகவும் பொற்காலம் ஒரு விடயத்தை முன்னெடுத்துச் செய்வது என்பது இலேசானது அல்ல அதுவும் உலகம் முழுவதும் பரவி இருக்கக்கூடிய உறவுகள் ஒரு தளத்தில் ஒரே எண்ணோட்டத்தில் இணைந்து செயல்படுவது என்பது சாத்தியமற்றது ஆனால் அந்த ஒற்றைத்தளம் இந்த இடத்தில் பரிபூரணப்பட்டிருந்தது. யாழ் என்பது காலம் எமக்களித்த பெரும் புதையல் அதனை உருவாக்கிய மோகனுக்கும் அவருக்கு உதவியாக முன்னின்று உழைத்த அவருடைய நண்பர்களுக்கும் தமிழினம் சார்ந்து பெரு நன்றியை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2014 - 2024

 

1003579_10151988431047944_504674900_n.jp

 

இது போன்ற செய்திகள்.. யாழ் போன்ற இணையப் பையன்களின் எதிர்காலத்தில் நிச்சயம் செல்வாக்குச் செய்யும். மக்கள் அதிக நேரம்.. சிமாட்போன்களில் செலவு செய்வதைக் குறைத்து.. எல்லா தகவல்களையும் ஓரிடத்தில்.. சுருங்க.. இரத்தினச் சுருக்கமாக அறியவும்.. தமக்கிடையே அங்கிருது..தொடர்வுகளை கொள்ளவும்.. விருப்பங்களை எண்ணங்களை சுருக்கமாகவும் குறுகிய நேரத்திலும்.. பதிவிடவுமே விரும்புவார்கள். அதை இட்டு யாழ் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை நம்பலாம். யாழ் 2024 இலும் மிளிர்வான்..! நிச்சயம் மாற்றங்கள் அங்கும் இருக்கும். ஆனால்.. உறவாடல் என்பது தொடர்ந்திருக்கும்.

 

வாழ்க யாழ் பையா. நீ... நீடித்து நிலைக்க வாழ்த்துக்களும் ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு. :icon_idea::)


படச் செய்தி: பிபிசி.

Link to comment
Share on other sites

பதினாறு....
 
பதினாறு 
அகவை..
என்பது..
..
அது ஒரு 
காலப்பதிவின்
ஆரம்பமல்ல..
 
கன்னி
பருவத்தின் 
முழுமை!
 
ஊரெல்லாம்
விழுந்த
இடியை
 
ஓசையில்லாமல்..
 
உனக்குள்
அழுதுகொண்டே
மெல்லமாய்
 
கர்ப்ப பையில்
யுத்த
கரு இறங்க
 
இரவல் 
களம்
தந்தவளே
தாயே..
 
 
குரல் வளை..
அறும் நிலை 
வந்தும்
 
எத்தனை ஆறும்
ஏழ் கடலும்
எங்களை
 
மூழ்கடிக்க வந்தும்..
பொத்தி 
வைத்திருந்தாயே..
வாழிய நீ!
 
வரலாறு..
என்பது
வேறொன்றும்
இல்லை..
 
வாழ
தெரிந்த
காலத்தை...
 
எப்படி
வாழ தெரியாமல்
வீணடித்தோம்
என்பதே!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில நின்டு நான் என்ன செய்ய?????

 

தாவலாம்.. குதிக்கலாம்.. கும்மாளம் அடிக்கலாம்.. காகம் பற பற.. காகக் குஞ்சே பற பற.. காகத்தின் முட்டையே பற பறன்னு.. பர பரப்பா பேசலாம்.. எத்தினை செய்யலாம்.

 

1966958_10151988783437944_694120374_n.jp

 

1947623_10151988788852944_1176517771_n.j

 

இப்படிக் கனக்கச் செய்யலாமே.. ஆதியானவர். :):lol:

 

இப்ப எல்லாம்.. மனுசனட்ட மனிதாபிமானமும் அருகிட்டு.. ஜீவகாருணியமும் அருகிட்டு.. ஒரே பொய்யும் புரளியும் வெட்டும் குத்தும் போட்டியும் பொறாமையும்..ஆனால் மற்ற உயிரினங்களிடத்தில் மனிதனிடம் இல்லாத மனிதாபிமானம்.. ஜீவகாருணியம் கூடிக்கிட்டே வருகுது. !!! :)

Link to comment
Share on other sites

16 ஆவது அகவை காணும் யாழுக்கு எனது வாழ்த்துக்கள்.
நாம பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது  போரடிக்கும் சமயங்களில் சும்மா இணைய உலா
செய்யும் போது நமது கண்ணில் பட்டதுதான் இந்த யாழ் இணையம். அப்போ நமக்கு ஒழுங்காக
தமிழில் தட்டச்சு செய்ய முடியாத காரணத்தால் உடனே இணைய முடியவில்லை பின்பு 2005 இல்
தான் இணையும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பவுமே தமிழ் ஒழுங்காக தட்டச்சு செய்ய தெரியா
ஒரு மாதிரி தட்டித் தடுமாறி தட்டச்சு செய்யப் பழகி பேந்து 24 மணித்தியாலமும் யாழ் தான் கவிதை
கதை கட்டுரை அரட்டை என மிக இனிமையான காலங்கள் மறக்கவே முடியாது. தற்பொழுது
நேரமின்மையால் யாழில் எழுத முடியவில்லையே ஒழிய யாழுக்கு வராமல் இருப்பதில்லை.
ஸ்ஸ்ஸ்ஸ் ..........யப்பா கொஞ்ச நாள் தமிழிலில் தட்டச்சு செய்யாதது கண்ணைக்கட்டுதப்பா தட்டச்சு செய்ய முடியலை
Link to comment
Share on other sites

அலை பொழுது போக்க, சண்டை பிடிச்சுப் பழக  வரும் இடம் யாழ். யாழ் இல்லாட்டி யாரோடை தான் சண்டையைப் பிடிக்கிறதுபா??? 

வாழ்க யாழ்! வளர்க உன் புகழ்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எல்லாரும் எழுதேக்கை நானும் எழுதோணும் போலை இருக்கு ......என்னத்தை பெரிசாய் சொல்ல இருக்கு........idea6ws_zpsa34812e4.gif
இவ்வளவுகாலமும் யாழ்களத்திலை கதை,கவிதை,கட்டுரை,நாடகம் ஒண்டுமே எழுதாமல் பத்தோடை பதிணொண்டாய் இழுபறிப்பட்டுக்கொண்டு வாற  ஒரேயொரு சீவன் ஆரெண்டால்?  
 
வேறை ஆர் நான் தான்! icon6m_zps6069767e.gif
 
funnyz_zps262977cc.gif வாற வரிசம் பாப்பம்....கிட்டத்தட்ட கம்பராமாயணம் ரேஞ்சிலை ஒரு கதை எழுதத்தான் இருக்கு cool2_zps0675623f.gif  funny-gifs-very-excitedaa_zps0e214d18.gi
 
 
Link to comment
Share on other sites

2007 என்று நினைக்கின்றன் ஆஜீவன் சுவிஸில் இருந்து வந்து எனது வீட்டில் தங்கியிருந்தார் .தினமும் காலை எழும்பி லப் -டாப்பை திறந்து வைத்து என்னாவோ வாசிப்பார் எழுதுவார் .அவர் தான் யாழ் என்று ஒரு களம் இருக்கு என்று எனக்கு சொன்னவர் .அத்துடன் யாழ் கள அங்கத்தவர்கள் ஒரு சந்திப்பையும் அஜீவனுடன் நடாத்தினார்கள் அதற்கு நானும் போயிருந்தேன் அங்கு அவர்கள் கதைப்பதை பார்க்க ஒருவித ஆச்சர்யமாக இருந்தது .ஆளை ஆள் தெரியாமல் அவர்கள் எழுதுவதை வைத்து தங்களுக்குள் பரீட்சையம் ஆகி ஏதோ எல்லாம் கதைத்தார்கள் .எனக்கு தலை சுற்ற தொடங்கிவிட்டது ஆனால் ஒரு வித சுவாரஸ்யமாகவும் இருந்தது .

அடுத்தடுத்த வாரங்களில் நானும் யாழை வாசிக்க தொடங்கினேன் . பெரிதாக ஆர்வம் வரவில்லை காரணம் அந்த நேரத்தில் அனைத்து புலம் பெயர் ஊடகங்களும்  கையாண்ட புல்லரிப்பு  விடயங்கள் தான் அதிகமாக இருந்தது . இருந்தும் சிலவிடயங்களுக்கு பதில் எழுதவேண்டும் என்று தோன்றியதால் அங்கத்தவரானேன் ஆனால் எதுவும் எழுதவில்லை .ஆனால்தொடர்ந்து வாசிக்க தொடங்கியிருந்தேன் .அரசியலை தவிர்த்து மிக நல்லொதொரு இணையமாக கவிதை ,கதை என்று பல விடயங்கள் மிக ஆக்கபூர்வமாக இருந்தது .

2009 இற்கு பின்னர்தான் காலடி எடுத்துவைத்தேன் .அதுவும் எடுத்தவுடன் அரசியல் பெரிதாக எழுதவில்லை என நினைக்கின்றேன் .அப்படியே மெல்ல மெல்ல உள்ளே புகுந்து யாழை தினமும் மீட்டாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன் .

எழுதுவதில் மிகவும் சோம்பேறியான என்னை தட்டசில் தமிழை எழுத வைத்ததும் பின்னர் கதை எழுத வைத்ததும் யாழ் தான் .

யாழை நடத்த நிர்வாகம் படும் கஷ்டம் பற்றி (நிதி உட்பட ) சொல்ல தேவையில்லை . எனக்கும் ஏதாவது பங்களிப்பு செய்யவேண்டும் போல இருக்கும் .திட்டம் எதுவும் இருந்தால் சொல்லுங்கள் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தேவி, காங்கேசு வரை ஊர்ந்து செல்லும்
பலாலி விமான தளம் கட்டாந்தரையாக அப்படியே இருக்கும்
ஆஸ்பத்திரி வீதி நடுவிலுள்ள மரங்கள் நீங்கி இருக்கும்
'செல்லா சினிமா' ஓட திணறிக்கொண்டிருக்கும்
சாலை சந்திப்பில் தானியங்கி விளக்குகள் முளைத்திருக்கும்
வெள்ளை வேன் பழுப்பு வேனாகி இருக்கும்
பூபாலசிங்கம் ஆன் லைனில் புத்தகம் விற்றுகொண்டிருப்பார்
இளசுகள் பிட்சா பர்கர் மட்டுமே சாப்பிடும்
'அண்ணே றைட்' என்பதற்கு பதில் 'அம்மே றைட்' என சிங்களத்தில் பலரும் கூவலாம்
இ.போ.ச வாகனம் சிவப்பிலிருந்து வெள்ளையாகியிருக்கும்
வேலணை சந்திப்பு புழுதியோடியேயிருக்கும்
கீரிமலையில் குளித்த யாழ் இனம், புலம் பெயர்ந்துகொண்டே இருக்கும்

ஆனால் நம் யாழில் மட்டும் தமிழ்மண் மனம் சுகந்தம் வீசிக்கொண்டே இருக்கும்!

 

 

மன்னிக்கவும்!

 

"26ல் யாழ்" என்றதும், "26ல் யாழ்ப்பாணம்" என்றே நினைத்துவிட்டேன்! :icon_idea:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வேலணை சந்திப்பு புழுதியோடியேயிருக்கும்

 

 

வங்களாவடிச் சந்தி, புழுதியோடியிருக்கும்!

 

இவ்வளவு விடயங்கள் மதுரைக்குத் தெரிஞ்சிருக்குது எண்டால்.......... :o

 

இந்தச் சின்ன வீடு, சின்ன வீடு எண்டு சொல்லுறாங்களே, அப்படி ஏதாவது..... :D

 

ம்ம்ம்.... மதுரையாரா.. ஒருக்காலும் இருக்காது! :icon_idea:

 

யாழ் தேவி, காங்கேசு வரை ஊர்ந்து செல்லும்

 

காங்கேசன்துறை வரை....!

 

பலாலி விமான தளம் கட்டாந்தரையாக அப்படியே இருக்கும்

 

சீனாவின் இராணுவ விமானங்கள், தரித்து நிற்கும் இடமாக மாறியிருக்கும்! :o

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.