Jump to content

டாக்டரின் படுக்கையறை அவஸ்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று எனக்கு நன்கு அறிமுமான ஒரு நண்பரை சந்திப்பதாய் ஒப்பந்தம் இருந்ததை கைத்தொலைபேசி சிணுங்கியபடியே அறிவித்தது. மனதில் அதைக் குறித்துக்கொண்டேன். அவருக்கு பின் மதியவேளை அவரை சந்திப்பதாகவும், நாம் ஒஸ்லோவின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர் ஒன்றில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் சந்திப்போம் என்றும் குறும்செய்தி அனுப்பினேன். ”சரி” என்று பதில் குறுஞ்செய்தி வந்தது.

கோப்பிக்கடைக்கு வெளியே நண்பர் உட்கார்ந்திருந்தார். அவரருகே உட்கார்ந்துகொண்டேன். பரிமாறும் அற்புத அழகியொருத்தி என்ன வேண்டும் என்றாள். ஒரு தேத்தண்ணி என்றேன். என்ன தேத்தண்ணி என்றுவிட்டு மாம்பழம், தோடம்பழம், இன்னும் பல பெயா்களைக் கூறி இதில் எது வேண்டும் என்றபடியே புருவத்தை உயர்த்தினாள், மாம்பழம் எனக்குப் பிடிக்கும் என்பதால் மாம்பழம் என்றேன். சற்றுநேரத்தில் மாம்பழத்தின் சுவையுடைய தேனீர் வந்து. நண்பர் ஆப்பிள் கேக், கோப்பி வாங்கினார்.

நண்பருக்கு 65 வயதிருக்கும். அவர் ஒரு முன்னைநாள் வைத்தியர். ஐ.நா வின் வைத்தியப்பிரிவினூடாக பல நாடுகளுக்குச் சென்று தொழில் புரிந்தவர். ஒஸ்லோவின் பிரபல வைத்தியராக இருந்வர். விவாகரத்தின் பின் உக்ரைன் நாட்டு அழகியெருத்தியில் ஆசைப்பட்டு அண்மையில் அவளை திருமணம் செய்தவர்.

எனது நண்பர் பெண்கள் என்றால் அற்புதமாய் ரசிக்கும் கலைப்பண்புடையவர். இவரது புதிய மனவிக்கும் இவருக்கும் 20 வயதிலும் அதிக வயது வேறுபாடு உண்டு. வைத்தியரின் புதிய மனைவி உண்மையிலேயே அழகானவர். நான் அவரைக் கண்டிருக்கிறேன். அவருக்குப் பின்னே நாம் நடந்தாலோ அல்லது அவரை நோக்கி நாம் நடந்தாலோ எமக்கு இதயநோய் வருமளவுக்கு அவர் அழகானவர். அவரும் ஒரு வைத்தியர்.

நாம் இருவரும் சூரினை முகத்தில் விழுத்தியபடியே அதன் இளம்சூட்டினை அனுவித்துக்கொண்டே உரையாடிக்கொண்டிருந்தோம். இருவரின் வாழ்க்கையும் இருவருக்கும் தெரியும். நாம் எதையும் வெளிப்படையாகப் பேசிக்கொள்பவர்கள். வாழ்க்கைபற்றி பேச்சுத்திரும்பியது.

தற்போது தனக்கும் புதிய மனைவிக்கும் இடையில் ஒரு பிரச்சனை வந்திருக்கிறது என்றார் நண்பர். அவரே தொடர்ந்தார். நான் அவளைவிட சற்று வயதானவன் என்ற போது நான் வேண்டுமென்றே செருமியபடியே ஆம்.. ஆம் நீங்கள் சற்று வயதானவர்தான் அவருடன் ஒப்பிடும்போது என்றேன். எனது கிண்டலை புரிந்துகொண்டு சிரித்தார். நானும் சிரித்தேன். நான் முன்பைப்போல் உசாராக இல்லை என்று கூறிவிட்டு ஆப்பிள் கேக்ஐ ஒரு கடி கடித்தார். பின்பு கோப்பியை வாயில்வைத்து உறுஞ்சினார். அவர் ஏதோ வில்லங்கமான விடயத்தை கதைகத்தொடங்குகிறார் என்று நினைத்த எனக்கு அவரின் ஆறுதலான நடவடிக்கைகள் பலத்த எரிச்சலைத் தந்தன.

காய்ந்திருந்த தனது உதட்டை நாக்கால் நனைத்தபடியே தொடர்ந்தார். நாம் ஒன்றாக படுக்கையறையில் இருக்கும்போதுதான் பிரச்சனைவருகிறது என்றார். ஆஹா விடயம் சுடுபிடிக்கிறதே என்று நினைத்தபடியே முகத்தை படு சீரியசாக வைத்திருந்தபடியே ”ம்.. ம்” என்றேன்.

மனிதர் மீண்டும் அப்பிள் கேக்ஐ உண்பதில் தீவிரமாகிவிட்டார். கண்ணை மூடி ம்.. ம்.. ம் என்று ஆப்பிள் கேக்கினை ரசித்து ருசித்தார். எனக்கு இருப்புக்கொள்ள முடியாதிருந்தது. நானும் தேனீரை ரசித்து குடிப்பது போல் பாவ்லா காட்டினேன். அவராகவே தொடரட்டும் என்றே நினைத்தேன். மனிதர் இப்போது கோப்பியை கண்ணை முடி ரசித்துக்கொண்டிருந்தார். மெதுவாய் செருமினேன். நண்பர் அதைக் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. மீண்டும் ஆப்பிள் கேக், கோப்பி என்று நிமிடங்கள் யுகங்களாய் கடந்துகொண்டிருந்தது. இப்போது ஆப்பிள் கேக் முடிந்திருக்கிறது.

சன்சயாஆன் என்றார். எனது பெயரை அவர் இப்படித்தான் இரண்டு வருடங்களாக அழைக்கிறார். என் பெயர் சன்சயாஆன் இல்லை, சஞ்சயன் என்றேன். நீயும் இரண்டு ஆண்டுகளாக திருத்துகிறாய் நானும் முயற்சிக்கிறேன், ஆனாலும் உனது பெயரை சரியாக உச்சரிக்கமுடியவில்லை என்றார்.

எனது பொறுமை காற்றில் ஆடிக்கொண்டிக்க இருப்புக்கொள்ளாமல் அது சரி மனைவிக்கும் உனக்கும் படுக்கையறையில் என்ன பிரச்சனை என்றேன். ”பொறு” என்று கூறியப‌டியே கதிரையை எனக்கு அருகே இழுத்துப்போட்டுக்கொண்டார். என்னை நோக்கிக் குனிந்து மெதுவான குரலில், அவளுக்கு இப்போதெல்லாம் படுக்கையறையில் கோபம் வருகிறது என்றார். எனக்கு இரத்தம் சற்று சூடாக ஆரம்பித்தது.

பெண்கள் என்றால் அவர்களை பூப்போன்று கையாளவேண்டும் என்றேன் நான்.  அவரோ அதைக் கவனிக்காது கோப்பியை வாயில் வைத்து உறுஞ்சிக்கொண்டிருந்தார். இப்போது கோப்பிக் கோப்பை காலியாகி இருந்தது. அவரே தொடர்ந்தார். வயதாகிவிட்டதால் நான் மிக விரைவில் தூங்கிவிடுகிறேன் என்று அவர் கூறியபோது எனக்கு கொடுப்புக்குள் சிரிப்பு வந்தது. அவரைப்பார்த்து கண்ணடித்தடிபடியே ”அப்படியென்றால் தவறு உன்னுடையது தான். உன் மனைவிக்கு கோபம்வராவிட்டால் தான் தவறு” என்றேன்.

மனிதர் கடுப்பாகிவிட்டார். ”நீ அவளுக்கு சார்பாகப் பேசுகிறாய் என்றார்”. ”ஆம், நான் மனைவி கோபப்படுவது நியாயம் தானே” என்றேன்.

அதற்கு அவர் ” நான் தூங்கியதும் எனது குறட்டைச் சத்தம் தாங்கமுடியாததாய் இருப்பதாகவும், அவளுக்கு நித்திரை கொள்ளவதற்கு முடியாதிருப்பதால், அவளுக்கு பெரும் கோபம் வருகிறது என்றும் சென்னார்.

எனது காதுக்குள் ”சப்பாஆஆ” என்று ஒரு சத்தம் கேட்டது.

உங்களுக்கும் கேட்டிருக்குமே அந்த சத்தம். :)
 

Link to comment
Share on other sites

ஹ்ம்ம்ம்.. நானும் என்னவோ ஏதோ என்று நாக்கை இலேசாக தொங்க விட்டன்...சப்பா,,,

Link to comment
Share on other sites

சத்தம் கேட்கவில்லை.. கண்ணைக் கட்டிவிட்டது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பன் சில வேளை கண்ணை கசக்கிக் கொண்டு சொல்லுவான் " நான் நேற்று இரவு தூங்கவில்லை என்பான், ஏன் என்றேன் என் மனைவி நன்றாக தூங்கினாள் என்றான்" :D :D

Link to comment
Share on other sites

 அண்ணை இந்த பதிவை பார்க்கும் பொழுது அந்த காலத்தில் சிரித்திரன் போல கலகலப்பு என்ற நகைச்சுவை பத்திரிகை வந்தது அதில் ஒரு கார்ட்டூன் வந்தது அது தான் இதை வாசிக்கும் பொழுது ஞாபக்த்துக்கு வருகுது ..அதை பகிர்ந்து விடுறனே...மதிலுக்கு அங்கால் பக்கத்திலை சத்தம் மட்டும் கேட்கிது ...இங்கால் பக்கத்தில உள்ள இரண்டு பேருக்கு என்ன விசயம் தெரியவில்லை .என்ற அங்கலாய்ப்பு

..சத்தம் 1; இன்னும் கொஞ்சம் தான் ,

சத்தம் 2; சரியாக நோகுது என்னாலை இயலாமால் கிடக்கு அளவில்லை விடுங்கோ

சத்தம் 3; வந்து விட்டது இன்னும் கொஞ்சம் தான் 

சத்தம் நாலு;அப்பாடா என்ற சத்தத்துடன் பெரிய மூச்சுக்கள் 

இங்கால் பக்கத்தாக்கள் அங்காலை தவிச்சு ஓடிப்போய் பார்த்தால் பொம்பிளைப்பிள்ளயின்ரை கைக்கு காப்பு போடுறார் ஒரு பெரியவர்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை, சஞ்சயன்! எழுதிய விதமும் அருமை !

 

கடைசி வரைக்கும், 'சஸ்பென்ஸ்'! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.