Jump to content

'தூர் வாரப் படாத கிணறு'


Recommended Posts

'வேப்பம் பூ மிதக்கும்

எங்கள் வீட்டு கிணற்றில்

தூர் வாரும் உற்சவம்

வருடத்துக்கு ஒருமுறை

விசேஷமாக நடக்கும்

ஆழ நீரினுள்

அப்பா மூழ்க மூழ்க

அதிசியங்கள் மேலே வரும்

கொட்டாங்குச்சி,கோலி, கரண்டி

துருபிடித்த கட்டையோடு உள்விழுந்த

ராட்டினம்,

வேலைக்காரி திருடியதாய்

சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்'

சேற்றுக்குள் கிளறி

எடுப்போம் நிறையவே,

'சேறுடா சேறுடா' வென

அம்மா அதட்டுவாள்

என்றாலும்

சந்தோசம் கலைக்க

யாருக்கு மனம் வரும்?

"படை வென்ற வீரனாய்

தலைநீர் சொட்டச் சொட்ட

அப்பா மேலே வருவார்.

இன்று வரை அம்மாவும்

கதவுக்கு பின்னாலிருந்துதான்

அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்

மறந்தேபோனார்

மனசுக்குள் தூர் எடுக்க"...

#விகடனில் பிரசுரமான கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான கருவை கவிதையில் கோர்த்திருக்கிறீர்கள்...எல்லோராலும் இப்படி சிந்திக்க முடியாது. விகடனில் பிரசுரமான கவிதை என்று போட்டுள்ளீர்கள் எழுதியது நீங்களா? பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையா கிணறு கலக்கி இறைக்கிறது என்று சொல்லுறது. தூர் வாருதல், நல்ல கரு. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதைத் தொட்டுச் செல்கிறது, உங்கள் கவிதையின் கரு!

 

இணைப்புக்கு நன்றிகள், ராஜன் விஷ்வா!

Link to comment
Share on other sites

அற்புதமான கருவை கவிதையில் கோர்த்திருக்கிறீர்கள்...எல்லோராலும் இப்படி சிந்திக்க முடியாது. விகடனில் பிரசுரமான கவிதை என்று போட்டுள்ளீர்கள் எழுதியது நீங்களா? பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

வாழ்த்துக்கள் கவிதையை எழுதியவர்க்கு உரித்தாகட்டும், நான் இணைத்தவன் மட்டுமேயக்கோ... கருத்திற்க்கு நன்றிகள்...

என்ட கவிதையென்றால் யாழில் தானே முந்திக்கொண்டு வந்து போடுவேன்... :)

Link to comment
Share on other sites

இதையா கிணறு கலக்கி இறைக்கிறது என்று சொல்லுறது. தூர் வாருதல், நல்ல கரு. வாழ்த்துக்கள்

ஆம், கிணறு இறைத்தல் இது தான், கிணற்றை துப்புரவு செய்வார்கள் முன்பு இப்படித்தான். தொழில் முறையாக கிணறு, கன்மாய், குளம் என்று இறைப்பவர்கள் இருப்பார்கள். ஆபத்தான வேலை, கிணற்றில் தவறி விழுபவர்கள், தற்கொலை செய்து கொள்பவர்களின் உடலை எடுத்துவருவதும் இவர்கள் தான்.

இந்த கவிதை விகடனில் வெளிவந்தது, எழுத்தாளர் சுஜாதா ஒரு கல்லூரி விழாவில் வாசிப்பதாக இருந்தது. இந்த கவிதையை எழுதியவரும் அதே இடத்தில் தான் இருந்திருக்கிறார். மேடைக்கு அழைத்து சுஜாதா அவரைப் பாராட்டியுள்ளார். கவிதையை பிரசுரித்த இலக்கிய இதழின் பெயர் கணையாழி.

மனதைத் தொட்டுச் செல்கிறது, உங்கள் கவிதையின் கரு!

இணைப்புக்கு நன்றிகள், ராஜன் விஷ்வா!

தலைப்பு மட்டுந்தான் தம்பியோடது,

மத்ததெல்லாம் சுட்டது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட பாவி மக்கா .. :o பயபுள்ளை எம்புட்டு கருத்தா எழுதியிருக்கு என்று பாஞ்சு விழுத்து கருத்தெழுதலாம் என்று வந்தால் சுட்டது னு போட்டிட்டானே :wub:  எது எப்படியோ இணைப்புக்கு நன்றிப்பா.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், கிணறு இறைத்தல் இது தான், கிணற்றை துப்புரவு செய்வார்கள் முன்பு இப்படித்தான். தொழில் முறையாக கிணறு, கன்மாய், குளம் என்று இறைப்பவர்கள் இருப்பார்கள். ஆபத்தான வேலை, கிணற்றில் தவறி விழுபவர்கள், தற்கொலை செய்து கொள்பவர்களின் உடலை எடுத்துவருவதும் இவர்கள் தான்.

என் கிராமத்தில் உள்ள எங்க வீட்டின் கிணத்தின் ஆழம் 32 அடி. ஊரில் நின்ற காலத்தில் நான்தான் கலக்கி இறைப்பேன். அப்போ இளம் வயது பயம் அறியாதது. இப்ப எட்டியும் பார்க்க மாட்டேன்.

Link to comment
Share on other sites

என் கிராமத்தில் உள்ள எங்க வீட்டின் கிணத்தின் ஆழம் 32 அடி. ஊரில் நின்ற காலத்தில் நான்தான் கலக்கி இறைப்பேன். அப்போ இளம் வயது பயம் அறியாதது. இப்ப எட்டியும் பார்க்க மாட்டேன்.

ஆமாம், ஆரம்பத்தில் இருந்து அப்போ அப்போ என்று சொல்கிறீர்களே..,! இப்ப என்ன ஒரு அறுபது வயது இருக்குமா அண்ணனுக்கு :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பானத்தில்  கிணறு  தூர்வாருதல் என்றால் பொடியள் எல்லாம் கப்பியிலும் கைவாளியிலும் இழுத்தே இறைத்து விடுவோம். சில பெரிய கிணறுகளுக்கு மட்டும் மிசின் பிடித்து இறைப்போம். கன கிணறுகள் அயல் லட்டை சேர்ந்து  முழுகினாலே நீர் வற்றிவிடும்...!

 

இணைப்புக்கு நண்றி ராஜன் விஷ்வா...! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.