Jump to content

யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழிளையா….!

கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா!

 

526095549_1583474.gif?4

 

 

நெடிதுயர்தல், நீள் வளர்தல்

அனைத்துமாய் நின் மாற்றம்

 

குரலொலியில் தெரிகிறது

ஆண்மையின் ஏற்றம்

 

செறிந்த பலம் குவிந்து

நிமிர்கிறது நின் மார்பு

 

அகண்ட பெரு வெளியில்

விரிகின்றன  உன் தோள்கள்

 

யாழிளையா….!

கம்பீரம்

மொட்டவிழ்க்கும் கட்டழகா

 

தமிழேந்தி

வலையுலவும் மெட்டழகா

 

பதினாறின் விடலையே

பயமேது உனக்கு

 

பால் வடியும் முகத்தில்

அரும்புதடா மீசை

 

பக்கவாட்டு கன்னங்களில்

படருதடா புற்கள்

 

இலக்கியத்தில்

உனைச் சொன்னால்

 

இரும்பூக்கும்

என் சொல்

 

இன்றுனக்கு

பதினாறாம்

 

இளையவனே!

 

தவழ்பருவம்

முடித்துவிட்டாய்..

 

தமிழேந்தித் திரிந்து

தரணியை வரி

 

அமிழ்ததொன்றே

அவனிக்கு உரை.

 

வீராப்புக் கொள்ளும்

வேழமாய் வளர்

 

வேதனைகள் தீர்க்கும்

ஞாயிராய் ஒளிர்

 

கனிவுன் உடனிருத்தி

காதல் நெய்

 

கடிதகற்றும் போதெல்லாம்

மோதல் செய்

 

இனியேதும் உன்போல்

இருக்காதென்பேன்

 

இணையவெளி உன்னிருக்கை

உடையாதென்பேன்

 

தனிமையிலே நின்றாலும்

தமிழால் போற்றி

 

அமிழ்தினிய பாட்டால்

வாழ்த்துச் சொல்வேன்

 

இனியனே இளையனே

இசைதரும் யாழனே – நான்

பாயிரம் பாடுவேன்

வாழ்க நீ பல்லாண்டு.

Link to comment
Share on other sites

அது..! :D

Link to comment
Share on other sites

அதே அது .பச்சை போட முடியல ////////// :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதுதுதுதுதுதுதுதுது :icon_idea:

அது..! :D

 

ஒரு முடிவோட   தான் இருக்கிறார்கள்

ஆண்களுக்குத்தான் பங்குனியில் 

பச்சையாக வருகுது என்ற  எனது  அபிப்பிராயம்  இத்துடன் காலி.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பதினாறு கண்டு ...இனிக்கும் இளையனே ...இசை தரும் யாளனே.. வாழ்க பல்லாண்டு.

 

பாராட்டுக்கள் சகாரா :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பதினாறு கண்டு ...இனிக்கும் இளையனே ...இசை தரும் யாளனே.. வாழ்க பல்லாண்டு.

 

பாராட்டுக்கள் சகாரா :D 

 

 

பாட்டியுமா???

பதினாறு

ஆணழகன் என்றவுடன் நீலம் தீட்டுவது சரியா பாட்டி??? :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையவனே!

தவழ்பருவம்

முடித்துவிட்டாய்..

தமிழேந்தித் திரிந்து

தரணியை வரி

அமிழ்ததொன்றே

அவனிக்கு உரை.

 

 

அருமையாய் எழுதியுள்ளீர்கள் சகோதரி...! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமைக்கவி வடித்துள்ளீர்கள் ஆண்மைசொல்லி. வாழ்த்துக்கள் சகாரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவி. திருக்குறள் போல் ரெட்டை வரிகளில் வடித்துள்ளீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடிதுயர்தல், நீள் வளர்தல்

அனைத்துமாய் நின் மாற்றம்

 

குரலொலியில் தெரிகிறது

ஆண்மையின் ஏற்றம்

 

செறிந்த பலம் குவிந்து

நிமிர்கிறது நின் மார்பு

 

அகண்ட பெரு வெளியில்

விரிகின்றன  உன் தோள்கள்

 

 

புற நானூற்றின் போர் வரிகள், நினைவில் மீண்டும் வந்து போகின்றன, வல்வை! :D

 

ஒளிறு வாள் அருஞ்சமர் உருக்கிக்,

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே! 

 

கவிதாயினியிடம், வார்த்தைகள் வரிசை கட்டி வருகின்றன!

 

இருந்தாலும் ஒரு கேள்வி....!

 

யாழென்னும் அந்த இளவலை, மீட்டும் 'பாக்கியம்' பெற்ற அந்த 'மங்கை' யார்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழை ஆணாக வர்ணித்தாலும் அதனை மீட்டுவது பெண்தான்   :D ....வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

நெடிதுயர்தல், நீள் வளர்தல்

அனைத்துமாய் நின் மாற்றம்

 

குரலொலியில் தெரிகிறது

ஆண்மையின் ஏற்றம்

 

செறிந்த பலம் குவிந்து

நிமிர்கிறது நின் மார்பு

 

அகண்ட பெரு வெளியில்

விரிகின்றன  உன் தோள்கள்

 

யாழிளையா….!

கம்பீரம்

மொட்டவிழ்க்கும் கட்டழகா

 

தமிழேந்தி

வலையுலவும் மெட்டழகா

 

பதினாறின் விடலையே

பயமேது உனக்கு

 

பால் வடியும் முகத்தில்

அரும்புதடா மீசை

-------

 

பெரிய ஒரு குறையை போக்கி விட்டீர்கள் வல்வை.

அருமையான... கவிதை. கைவசம் பச்சை இல்லை. மீண்டும் வருவேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திற்கு

 

பயனுள்ள

 

வகையில்

 

உதவிட

 

யாழ் களம்

 

பல ஆண்டு

 

காலம்

 

கடந்து

 

வாழ

 

வாழ்த்துகிறேன்.

 

 

 

.


இதுதான் வாழ்க்கையில் நான் எழுதும் முதல் "கவிதை"! :o

 


ஏம்ப்பா... 'ஆ.. ஊ'ன்னா ஒரு கவிதையை தூக்கிக் கொண்டு வாரீங்களே..! :lol::)

Link to comment
Share on other sites

தவழ்பருவம்

முடித்துவிட்டாய்..

 

தமிழேந்தித் திரிந்து

தரணியை வரி

 

அமிழ்ததொன்றே

அவனிக்கு உரை.

 

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிக்கு நன்றிகள் வல்வை

Link to comment
Share on other sites

வயது 16 என்பதால் போட்டி பலமாத்தான் இருக்கும் போல கவிகள் விளையாடுது யாழில் அருமை வாழ்த்துக்கள் அக்கா .!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா ! அருமை !! அற்புதம் !!!

 

எதை சொல்ல? சிந்திவிட்ட முத்துமணிகள் போல தமிழ் துள்ளி விளையாடுகிறது.

சொல்ல வார்த்தையில்லை வாழ்த்துக்கள் சஹாரா அக்கா. :)

 

பி.கு: கட்டழகனுக்கு கடிவாளம் போடுங்கக்கா, இல்லைனா காவாலியாகிடப்போறான். :rolleyes::lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை, விசுகு, நிலாமதி,சுவி, சுமே அகஸ்தியன், ரோமியோ, கு.சா, இலையான் கில்லர், ராசவன்னியன், சோழியன், புத்தன், அஞ்சரன் ,ஜீவா எல'லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்...

 

என்னதான் இருந்தாலும் யாழைப் பெடிப்பிள்ளையாக நினைத்து எழுதிய கவிதைக்கு எந்தப்பெண்களும் பச்சைப்புள்ளிகளை வழங்கவில்லை...நிலாமதியும், சுமேயும் கவிதையைப்பாராட்யுள்ளார்களே தவிர அவர்களும் பையனாக யாழை ஏற்க விரும்பவில்லை.....இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் யாழை பெடியனாக நினைக்க எந்தப் பெண்களும் தயாராக இல்லை....ஆண்களே உங்கள் பக்கத்தை பெண்கள் விரும்புகிறார்களே இல்லையே....ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெடிபிள்ளையோ  பெட்டைச்சியோ முக்கியமில்லை
ஆளாளுக்குப் பிடித்தமாக வைச்சிருக்கட்டும்

 

உங்கள் கவிதை வரிகள் அருமை
என்னால் பச்சை போட முடியவில்லை
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.